Jump to content

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

Some Interesting Facts

1. Chewing on gum while cutting onions can help a person from stop producing tears. Try it next time you chop onions!

2. Until babies are six months old, they can breathe and swallow at the same time. Indeed convenient!

3. Offered a new pen to write with, 97% of all people will write their own name.

4. Male mosquitoes are vegetarians. Only females bite.

5. The average person's field of vision encompasses a 200-degree wide angle.

6. To find out if a watermelon is ripe, knock it, and if it sounds hollow then it is ripe.

7. Canadians can send letters with personalized postage stamps showing their own photos on each stamp.

8. Babies' eyes do not produce tears until the baby is approximately six to eight weeks old.

9. It snowed in the Sahara Desert in February of 1979.

10. Plants watered with warm water grow larger and more quickly than plants watered with cold water.

11. Wearing headphones for just an hour will increase the bacteria in your ear by 700 times.

12. Grapes explode when you put them in the microwave.

13. Those stars and colours you see when you rub your eyes are called phosphenes.

14. Our eyes are always the same size from birth, but our nose and ears never stop growing.

15. Everyone tongue print is different, like fingerprints.

16. Contrary to popular belief, a swallowed chewing gum doesn't stay in the gut. It will pass through the system and be excreted.

17. At 40 Centigrade a person loses about 14.4 calories per hour by breathing.

18. There is a hotel in Sweden built entirely out of ice; it is rebuilt every year.

19. Cats, camels and giraffes are the only animals in the world that walk right foot, right foot, left foot, left foot, rather than right foot,left foot

20. Onions help reduce cholesterol if eaten after a atty meal.

21. The sound you hear when you crack your knuckles is actually the sound of nitrogen gas bubbles bursting.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 505
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

01. உலகத்தின் அதி உயரமான பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்த சன்டி அலன் அவர்களுடைய தோற்றம். 2 மீட்டர் 31.7 செ.மீ உயரம். 142 கிலே எடை, 55 சப்பாத்தின் அளவு.

ginnes001ss8.jpg

02. உலகத்திலேயே வாய்க்குள் அதிகமான குழாய்களை அடசியவர் மார்கோ கோற் சுவிசை; சேர்ந்தவர். 249 குழாய்களை பத்து விநாடிகள் வாய்க்குள் வைத்திருந்து சாதனை படைத்தார்.

ginnes004xx1.jpg

03. பிலிப்பைன்சில் கடந்த 2004ம் ஆண்டு 30.365 பேர் இணைந்து வானிவில்லின் நிறத்தில் ஆடைகளை அணிந்து வானவில் போல நின்று உலக சாதனை படைத்தார்கள்.

gunnes005su9.jpg

04 அமெரிக்காவைச் சேர்ந்த லூசியா அல்மடோவர் றிச் லங்கிலி ஆகிய இருவரும் 30 மணி 59 நிமிடங்கள் 27 செக்கன்கள் தொடர்ந்து இடைவிடாது முத்தமிட்டு உலக சாதனை படைத்தனர்.

gunnes006cl5.jpg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?

வெளவால்களின் இறக்கைகள்6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய

வலிமைக் கிடையாது. அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோநடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற

கால்களும், அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு

சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.

நன்றி : தமிழ்ப் பத்திரிக்கை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அன்புள்ள நண்பர்களுக்கு

நான் யாகூ குழுமங்களில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

சமீபத்தில் ஒரு நாள் திருவள்ளுவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது " என்ன ஐயா , இப்படிக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீரே ? "என்று கேட்டேன்.

அவர் அப்போது நூல் பஞ்சம் காரணமாக கைத்தறியைச் சும்மா போட்டுவிட்டு ,சத்தியாகிரகம் செய்யலாமா ? இல்லை மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி காட்டலாமா ? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆகையால் நான் கூறியதற்குத் தவறாகப் பொருள் செய்து கொண்டு, "சேச்சே, கல்லைத் தூக்கிப் போடுகிறதாவது , அது யார் செய்கிற வேலை ? மந்திரிகள் மீது கல்லைத் தூக்கிப் போடுவது என்றால் அப்புறம் நாட்டிலே இருக்கும் பஞ்சம் போதாதென்று , கல்லுக்கும் பஞ்சம் வந்துவிடுமே ? " என்றார்.

"ஐயையோ அப்படி ஒன்றும் சொல்லவில்லையே , என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீர்களே என்றல்லவா சொன்னேன் "

அடடா , கல்லுக்குக் காயம் பட்டுவிட்டதா ? என்றார் திருவள்ளுவர்.

இல்லை, இல்லை , உம்முடைய குறள் ஒன்றைச் சொல்லவந்தேன்.

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று "

என்பதாக ஒரு குறள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா ? அதைத் தான் குறிப்பிட்டேன்.ஒருவன் தோன்றும் போதே எப்படி ஐயா புகழோடு தோன்ற முடியும் ? சீசர் என்ன ,நெப்போலியன் என்ன, ஹிட்லர் என்ன , மக் ஆர்தர் என்ன இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட பிறந்து , பிறகு தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து , அப்புறம் தானே வேட்டை நாய்களாகியிருக்கிறார்கள் . பிறக்கும் போதே புகழோடு தோன்றிய ஒரே ஒருவரைப் பற்றித் தான் காவிய இதிகாசங்களிலே கூட கேள்விப்பட்டிருக்கிறோம் . துரியோதனன் பிறக்கும் போது பதினாறாயிரம் நரிகள் ஏக காலத்தில் சுருதி பேதம் செய்து ராகமாலிகை எல்லாம் பாடினவாம் ! துரியோதனனைப் போல் எல்லோரும் எப்படிப் பிறக்க முடியும் ? தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும் இல்லாவிட்டால் தோன்றாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம் ? தோன்றாமல் இருப்பது நம்முடைய வசத்தில் இருக்கிறதா ? " என்று என்று சராமாரியாகப் பொழிந்தேன் . வள்ளுவர் திக்குமுக்காடிப் போனார்.

தகவல்: கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்

000000000000000000000000000000000000000000000000

மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய தலைசிறந்த உணர்ச்சிகளுள் தலை சிறந்தது காதல்.வாழ்க்கையில் சிறிது காலமாவது அதை அனுபவித்தவர்கள் இனிய சுபாவமும் , தாராள மனமும் கொண்டவர்களாயிருப்பார்கள். அந்த உணர்ச்சியை அனுபவித்து அறியாதவர்களோ அசூசையும் துவேஷமும் பொங்கும் உள்ளத்தினராய் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பார்கள் .

காதலில் ஒரே ஒரு குறை உண்டு . அதில் தேக தத்துவமும் கலந்திருக்கும் காரணத்தினால் அதுநெடுங்காலம் நீடித்து நிற்பதில்லை.நாளடைவில் அதனுடைய வலிமை குன்றி விடுகிறது .அதற்குப் பிறகும் மணவாழ்க்கை சந்தோசமாய் நடக்க வேண்டுமானால் இன்னும் சில நிபந்தனைகளும் நிறைவேற வேண்டும்.

புருஷனும் மனைவியும் ஏறக்குறைய ஒத்த அறிவு நிலையில் இருக்க வேண்டும் . புருஷன் கம்பனையும் காளிதாசனையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது , மனைவி அடுத்த வீட்டுக்காரியின் காதுத் தோட்டையும் கைவளையலையும் ஆராய்ந்து கொண்டிருப்பவளாய் இருந்தால் அவர்களுடைய இல்வாழ்க்கை லட்சிய இல்வாழ்க்கையாக முடியாது .

தகவல்: கல்கி கட்டுரைகள்

0000000000000000000000000000000000000000000000000000000

ராஜாஜி அவர்கள் சேலத்தில் வக்கீலாகப் பணிபுரிந்த பொழுது ,தனது வேலைக்காரர் ஒருவரை அழைத்து , ஒரு தபால் உறையில் (Postal Cover) தபால் தலை (Stamp) ஒன்றை ஒட்டி எடுத்து வருமாறு கூறினாராம் .

சிறிது நேரத்தில் அந்த வேலைக்காரர் , தபால் தலை ஒன்றை ஒட்டி ராஜாஜியிடம் கொடுத்தாராம்.அந்த தபால் உறையை வாங்கிப் பார்த்த ராஜாஜி , வேலைக்காரரிடம் "நாங்கள் பிரிட்டிஷ் மன்னனை கவிழ்ப்பதற்காக எவ்வளவோ பாடுபடுகிறோம்.ஆனால் நீ அவரை ஒரு நிமிடத்தில் கவிழ்த்துவிட்டாயே .. ! " என்று கூறி , வாய்விட்டுச் சிரித்தாராம் .

அந்த வேலைக்காரர் பிரிட்டிஷ் மன்னனின் உருவம் பொதித்த தபால் தலையை , தலைகீழாக(Upside down) ஒட்டியிருந்தாராம் .

தகவல் : உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள் - பூவை.எஸ்.ஆறுமுகம்

000000000000000000000000000000000000000000000000000000

இலக்கிய கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் .

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து " கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை " என்று கேட்டாராம்.

உடனே கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான் ! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் .

(தகவல் : கேள்விகளும் உங்கள் பாக்யராஜின் பதில்களும் : பாகம் 2)

00000000000000000000000000000000000000000000000000000

ராயர்காபிகிளப்பில் வால்டேர் குறித்தான இழையில் நான் அனுப்பிய மடல்..

அன்புள்ள பாலாஜி மற்றும் இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு ,

வால்டேர் குறித்தான தங்களின் கடிதங்கள் பல்வேறு விடயங்களைத் தாங்கி வந்துள்ளன.

மிக்க நன்றி .

வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.- பாஸ்டன் பாலாஜி

சிந்தனைச் சிற்பி சி.பி . சிற்றரசு அவர்கள் எழுதிய உலகைத் திருத்திய உத்தமர்கள் என்ற புத்தகத்தில் வால்டேரைப் பற்றிய ஒரு சிறு கட்டுரை இருக்கிறது .நான் அந்தக் கட்டுரையிலிருந்து உள்வாங்கிய சில செய்திகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

அதற்கு முன்னால் ஒரு குட்டித் துணுக்கு சொல்லிவிடுகிறேன் .சாக்ரடீஸின் நண்பர் ஒருவர், சாக்ரடீஸிடம் " உன்னிடம் ஒரு செய்தி கூறவேண்டும் " என்றாராம் . உடனே சாக்ரடீஸ் " நீ என்னிடம் அந்த செய்தியையைக் கூறுவதற்கு முன் அதை வாய்மை ,நன்மை , இனிமை என்னும் மூன்று சல்லடைகளால் சலித்துவிட்டுப் பிறகு கூறு" என்றாராம் .உடனே அவருடைய நண்பர் " அம் மூன்று சல்லடைகளால் சலித்தால் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை " என்றாராம் . நான் கூறப் போகும் செய்திகள் சல்லடைகளில் சலித்ததோ , இல்லை சலிக்காததோ ... ஆனால் படிக்கப் போகின்றஉங்களுக்கு சலிக்காது :-) என்ற நம்பிக்கையில் தட்டிவிடுகிறேன் . கோர்வையாக இருக்கவேண்டும் என்பதற்காக, கட்டுரையின் சில வரிகளை நீக்கியும், கொஞ்சம் மாற்றியும் ,இடைச்செருகலாய் எனது வரிகள் ஒன்றிரண்டைச் சேர்த்தும் இங்கே இடுகிறேன் .

0

வால்டேர் பிறந்தவுடன்(21-11-1694) மிகவும் மெலிந்து காணப்பட்டார் ,அவர் ஒரு

நாளைக்குமேல் உயிர் வாழ மாட்டார் என்று சிலர் கூறினார்கள் .ஆனால் 84ஆண்டுகள் இந்தப் புவியில் வாழ்ந்தார் (1694 - 1778)

வால்டேரின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் .....

ஆர்மண்ட் (Armand) என்பவர் வால்டேரின் அண்ணன் ஆவார் , அவர் ஜேன்சனிசம் என்ற மதசீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து அதன் கருத்துக்களை எழுதிக்கொண்டிருந்தார்." என்ன தொழில் செய்யப் போகிறாய் ? " என்று கேட்ட தந்தையிடம் , இலக்கிய தொழில்செய்யப் போகிறேன் " என்று கூறியிருக்கிறார் வால்டேர் . வால்டேரின் தந்தைக்கு தன் மகன்களின் போக்கு பிடிக்கவில்லை , "எனக்கு இரண்டு முட்டாள்கள் பிறந்திருக்கிறார்கள், ஒருவன் வசன முட்டாள் (ஆர்மண்ட்), மற்றொருவன் கவிதை முட்டாள் (வால்டேர்) , அவர்களை எப்படியாவது திருத்துங்களேன் "என்று தன் நண்பர்களிடம் சதா புலம்பிக் கொண்டேயிருப்பாராம் . கொள்கைவாதிகளைக் காட்டிலும் காரிய வாதிகளே சிறந்தவர்கள் என்று அவர் கொண்டிருந்த கொள்கையை தன் இரு மகன்களும் சேர்ந்து தவிடுபொடியாக்குவதை இவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

நுண்கலையில் (Fine Arts) கைதேர்ந்த நினாந்தி எல்வென்கொல் என்பவர் ,வால்டேருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறதென்று உணர்ந்து , அவருக்குக் கல்வியும் போதித்து , சாகும் போது தனக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொள்வதற்காக 2000 பிராங்குகளை வால்டேருக்கு எழுதி வைத்தார் .

பாரீஸைத் தலை நகரமாகக் கொண்ட ப்ரான்ஸை ஆண்ட மன்னனை , அவனுடைய மதமும் ஆண்டு கொண்டிருந்தது . பதினான்காம் லூயி இறந்து பதினைந்தாம் லூயி பட்டத்திற்கு வந்த நேரம்.அவனுக்குத் தக்க வயது வராத காரணத்தினால் ஒரு மடையனைக் கார்டியனாக்கி இருந்தார்கள் ; ஊரெல்லாம் சிரித்தது , அவன் அரசனுக்குத் தெரியாமல் லாயத்திலிருந்த குதிரைகளை விற்றுவிட்டான்.இதையறிந்த வால்டேர் கிண்டலாக " அரச சபையிலே அன்றாடம் கூடிக் கலையும் கழுதைகளிலே பாதியை விற்றிருந்தால் கூட எவ்வளவோ கண்ணியமாகவும், மேலாகவும் இருந்திருக்கும் " என்று சொன்னார் . இதைக் கேட்ட கார்டியன் வால்டேரை பாஸ்டிலி சிறையிலடைத்தான் .

"உலகத்தில் மனிதர்கள் சிரிக்கத் தெரியாமலும் , பிறரை சிரிக்கவைக்கத் தெரியாமலும் இருந்தால் பாதிப் பேர் தூக்குப் போட்டுக் கொண்டு மாண்டு போவார்கள் "என்கிறார் வால்டேர் ஓரிடத்தில்.

வால்டேருடைய நண்பர்களின் வற்புறுத்தலாலோ,கார்டியனின் மனமாற்றத்தாலோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் வால்டேர் ,சிறையை விட்டு வெளியே வந்தவுடன் துன்ப இயல் நாடகம் ஒன்றையும் , ஒடிப்பி(oedipe) என்ற மற்றொரு நாடகத்தையும் எழுதி அரங்கேற்றினார் . அதுவரை வால்டேரை " ஒரு உதவாக் கரை " என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய தந்தையே , நாடகத்தைப்பார்த்துவிட்டு வால்டேரை வெகுவாகப் பாராட்டினார் . இவருடைய நாடகத்தை சில மதகுருமார்கள் வெறுத்தார்கள் , " ஒருவன் நாடகத் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொன்னாலன்றி அவனைப் புதைக்க , கல்லறையில் இடம் தருவதில்லை ; மதச் சடங்குகளும் இல்லை " என்று கூறினார்கள் . பிரெஞ்சு நாட்டின் புகழ் வாய்ந்த நடிகை ஏட்ரியன் லெக் ரூவியா என்பவள் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலே கிடக்கிறாள் , அருகில் வால்டேர் நின்று கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்.மத குருக்கள் வந்தார்கள் , தான் செய்த நடிப்புத்தொழிலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டாலன்றி மதச் சடங்குகளோ , கல்லறையில் இடமோ கொடுக்க முடியாது என்று பயமுறுத்தினர் . என்றாலும் அவள் " என்னை ஆளாக்கி , பேரும் புகழும் பணமும் சம்பாதித்துக் கொடுத்த அந்தத் தொழிலுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்து விட்டாள் . சிறிது நேரத்தில் இறந்தும் போய்விட்டாள் , உறவினர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த பொழுது ,போலீஸ் புகுந்து தடியாலடித்து எல்லோரையும் விரட்டிவிட்டு பிணத்தை ஒரு குப்பை மேட்டில் போட்டு சுண்ணாம்புத் தண்ணீரை கொதிக்க கொதிக்க அந்த சடலத்தின் மேல் ஊற்றி அது பஞ்சுபஞ்சாகப் போகும் வரை தடியால் அடித்துவிட்டுப் போய்விட்டார்கள் .

இதைக் கண்ட பிறகு தான் வல்டேர் , இனி மதக் கொடுமைகளை ஒழித்தாலன்றி சமுதாயம் தன்மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார் .அவர் எழுதிய நாடகங்கள் நடிக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களில் தடை போடப்படும் . காரணம் , முன்பு அந்த நடிகையின் மீது நடத்தப் பட்ட கோரக் கொடுமைக்குப் பிறகு , சமுதாய மூடவழக்கங்களைத் தாக்கி நாடகங்கள் அமைத்ததன் விளைவுதான் .

முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம்,அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைகுறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்டஉற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்டCandide-இன் விமர்சனம். - பாஸ்டன் பாலாஜி

Candide என்ற கதை எழுதுவதற்குக் காரணமாயிருந்தது லிஸ்பன் பூகம்பம் ,1756 நவம்பர் திங்களில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 30,000 பேர் உயிரிழந்தனர் ,கிருத்துவமதத்தின் முக்கியமான திருவிழாவான (All Saints Day) அன்று தான் இந்த பூகம்பம் நடந்தது . இதை ,லிஸ்பன் மக்கள் செய்த குற்றம் என்றனர் மத குருமார்கள் . அதை எதிர்த்து தீப்பொறி பறக்க ஒரு கவிதை எழுதி ,இது கடவுளின் குற்றம் என்று சுட்டிக் காட்டினார் வால்டேர் .

வால்டேர் கூர்மையான அறிவாளி. பிரபுக்களோடு அவருக்கு ஒருவிதமான love-hate relationship இருந்தது. பிரஷ்யா நாட்டுமன்னன் Federickக்குக்கும் அவருக்குமிடையே இருந்த நட்பை உதாரணமாகச் சொல்லலாம்.அதிகாரமும் செல்வாக்குமுடைய எல்லாரையும்போல பிரஷ்ய மன்னனுக்கு தான் கவிஞன் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது.தன்னுடைய கவிதைகளை விருந்தாளியாக வந்திருந்த வால்டேரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான்.அரசனிடம் அவை பற்றிப் பாராட்டிக் கூறிவிட்டு, அவர் தம் நண்பனிடம் கூறியிருக்கிறார்:' The king has sent me his dirty linen to wash' - இந்திரா பார்த்தசாரதி

நோகன் பிரபு கலந்து கொண்ட ஒரு விருந்தில் வால்டேரும் கலந்து கொண்டு தன் நண்பர்களோடு உரக்கப் பேசிக் கொண்டிருந்தாராம் . " யார் அவன் ? நான் இருக்கிறேன் என்று தெரியாமல் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறான் " என்று நோகன்பிரபு கேட்டாராம் . உடனே வால்டேர் " பிரபு அவர்களே , ஏதோ குடும்ப கவுரத்திற்காக பிரபு பட்டம் பெற்றிருக்கிற தங்களைப் போலல்லாமல் சுயமாகவே சிந்தித்துச் சம்பாதித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட ஒரு கனவான் " என்று சுடச் சுட பதிலளித்தாராம் . இதனால் ஆத்திரம் அடைந்த நோகன் பிரபு , ஆட்களை விட்டு அவரை நையப்புடைத்தாராம் . ஆனால் அப்போதும் , " வால்டேரை எங்கு வேண்டுமாலும் அடியுங்கள் , ஆனால் அவன் தலையில் மட்டும் அடிக்காதீர்கள் . ஏனென்றால் அந்தத் தலையிலிருந்து இன்னும் எவ்வளவோ வரவேண்டியிருக்கிறது "என்று நோகன் பிரபு கூறினாராம்.

0

பிரஷ்ய நாட்டு மன்னன் ஆதரவில் சிறிது காலம் வாழ்ந்தார் வால்டேர் . அது சமயம் மன்னனிடம் சிலர் வால்டேரைத் துரத்திவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள் . அதற்கு பிரெடெரிக் மன்னன் " அதிகமாகப் போனால் வால்டேர் இன்னும் ஓராண்டு காலம் இங்கே இருக்க வேண்டியதிருக்கும் . அதன் பிறகு ஆரஞ்சுப்பழத்தை பிழிந்த உடன் தோலை எறிந்து விடுவதைப் போல் எறிந்து விடலாம்" என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தி வால்டேருக்கும் எட்டியது.இருந்தாலும் இதைக் காட்டிக் கொள்ளாமல் , அறிந்து கொள்ளாதவர் போலே நடந்து கொண்டனர் .ஆனால் பகை மட்டும் வளர்ந்து கொண்டே போனது .

0

வால்டேர், என்னுடைய வணிகமெல்லாம் நான் நினைப்பதை மக்களுக்குச் சொல்வதுதான் என்று கூறினார் , (My trade is to say what I think ) . தனது தள்ளாத வயதிலும் (83) இரேனி(Irene) என்ற ஒரு நாடகத்தை எழுதி , அது நடிக்கப்படுவதைத் தானே உட்கார்ந்து பார்த்து விட்டு படுக்கையில் படுத்துவிட்டார் . மரணம் நெருங்குவதையும் அறிந்து கொண்டார்.இதையறிந்த ஒரு மத குரு வால்டேரின் அருகில் வந்து ,தங்களுக்கு ஆத்ம விடுதலை அளிக்க வந்திருக்கிறேன் எனறார் . உடனே வால்டர் அவரிடம் ," தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? " என்று கேட்டார் . அதற்கு அந்த மதகுரு நான் கடவுளிடமிருந்து நேராக வருகிறேன் என்றார் . உடனே வால்டேர் அதற்கான அத்தாட்சியைக் காட்டுங்கள் என்று கேட்டார் .மதகுரு தலை குனிந்த படியே திரும்பி விட்டார் .

0

மனித சுதந்திரத்தைப் பற்றி எழுதிய ரூஸோ, தம் வாழ்நாள் முழுவதும் ஒரு பணிப்பெண்ணுடன் இருந்தார். அவளுக்கு சிநேகிதி அல்லது மனைவி என்றஅந்தஸ்து தரவேயில்லை. அவர்காலத்திய அவர் நண்பர்கள் அவளை வேலைக்காரி என்றே நினைத்தார்கள். நம்முடைய இந்தக் காலத்திய 'புரட்சிச் சிந்தனையாளர்' களின் சொந்த வாழ்க்கையும் இப்படித்தான். - இந்திரா பார்த்தசாரதி

" மனிதர்களைப் பற்றிச் சிந்திப்பது மனிதனின் கடமை " என்று சொன்னவர் சாக்ரடீஸ் . மனிதர்கள் எங்கும் சுதந்திரமாகவே பிறக்கிறார்கள் , ஆனால் என்றும் தளைகளால் பூட்டப் பட்டிருக்கிறார்கள் " என்று சொன்னவர் ரூசோ( 1712-1778) ,மகத்தான பிரெஞ்சுப் புரட்சிக்கு எழுத்துக்கள் என்ற வல்லமை மிக்க வெடிகுண்டுகளால் சமுதாய ஒப்பந்தம் (Socail Contract - 1762- Jean Jacques Rousseau ) என்ற நூலை ஆக்கித் தந்தவர் ரூசோ . ரூசோவின் இளமை அவ்வளவு சுவையுள்ளதாகவோ , மேன்மை பொருந்தியதாகவோ , பெண்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய இங்கிதம் நிறைந்ததாகவோ ,சிறந்த படிப்பாளி என்று சொல்லத்தக்க அளவிலோ இருந்ததில்லை . எந்த சீமாட்டியாவது இவனை விருந்துக்கு அழைத்தால் , உணவை சுவைப்பதை விட உணவிட்டவளின் அங்க அசைவுகளையே பார்த்துக் கொண்டிருப்பானாம் .இதை அவரே ஒப்புக் கொள்கிறார் . " நான் பதினைந்து , பதினாறு வயதிற்குள்ளாகவே கட்டுக்கடங்காத காமந்தகாரனாய்விட்டேன் " என்கிறான் ஓரிடத்தில். தன் இளம் வயதில் ரூசோ பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால் பாரீஸ் நகரத் தெருக்களில் திரிய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார் .பிறகு சேவாய் நகரை அடைந்து பாண்ட் வீர் என்ற பாதிரியார் தயவில் அன்னெஸி நகரத்திலிருந்து , லாரண்ஸ் சீமாட்டியை அணுகி , பாதிரியார் கொடுத்த சிபாரிசு கடிதத்தைக் கொடுத்து அங்கு தங்கியிருந்தார் . அப்போது ரூஸோவுக்கு வயது 15 ,அந்த சீமாட்டிக்கு வயது 28 , தன்மேல் கருணை காட்டிய அவள் காதல் காட்டமாட்டாளா என்று ஏங்கினார் . அதை அவள் புரிந்து கொள்ளவுமில்லை . இப்படியே அலைந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது .ஒரு பிரபுவின் தயவால் ஓர் உணவு விடுதியில் தங்க வேண்டி வந்தது .அங்கே தெரஸ் என்ற வேலைக்காரி பணிபுரிந்து வந்தாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது , அழகானவள் ,அவளிடம் ரூசோ கொண்ட நட்பு, காதலாக மாறி அவள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றார் . அந்தக் குழந்தைகள் ,சட்ட ரீதியான மனைவிக்குப் பிறக்காத காரணத்தால் , ஒரு அனாதை விடுதியில் விட்டுவிட்டார் . இவர் தான் பிளேட்டோ குழந்தைகளைப் பற்றி எழுதிய நூலைத் தழுவி (Emile) என்ற நூலை எழுதினார் .அதே ஆண்டு தான் (Social contrast) என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார் . ஒரு கட்டத்தில் ரூசோவை கிருஸ்துவின் துரோகி என்று சொல்லி எங்கு சென்றாலும் கல்லால் அடித்து விரட்டினார்கள் . ஆனால் இங்கிலாந்து மட்டும் இவரை அன்போடு அழைத்துக் கொண்டது ." காலத்தின் மேல் குற்றமில்லை . மக்கள் மனோ நிலை தான் காரணம் "என்று ஷேக்ஸ்பியர் கூறியது போல் நமது நினைப்பே காலத்தின் நிலைக்களனாய் அமைந்து விடுகிறது .

ஒரு காலத்தில் பாரீஸ் நகரத்து உயர் நீதி மன்றத்தின் முன்னால் தீயிட்டுக் கொழுத்தப் பட்ட சமுதாய ஒப்பந்தம் மற்றும் எமிலி ஆகிய நூல்களை உலக மக்கள் போற்றத் துவங்கியதைக் கண்டதும் , பிரான்சு நாடு ரூசோவை அழைத்துச் சிறப்பிக்கலாமா என்றெண்ணியது .ஆனால் ரூசோவின் மனத்தில் விழுந்திருந்த பழைய வடு மறையவில்லை.ஆதலால் , அவர் பிரான்சுக்கு செல்லவுமில்லை .இப்படி அண்டத்தையே கலக்கிய பேருருவமாய்த் திகழ்ந்த ரூசோ ,கிபி 1778 ஆம் ஆண்டு முகமெல்லாம் வீங்கி , தன் அறையில் மாண்டு கிடந்தார் .அவர் மரணத்தின் உண்மையான காரணம் மறைக்கப்பட்டு மருத்துவர்களும் ஊமையாக்கப் பட்டார்கள் .

ஓஷோவின் வெற்றுப்படகு என்ற புத்தகத்திலிருந்து....

சாக்ரடீஸ் மிகவும் ஆழமாக , ஒவ்வொன்றையும் மிகவும் நுண்ணியமாகத் தெரிந்துகொள்வதற்கான கேள்விகளைக் கேட்டு வந்தார் . இதனால் ஏதென்ஸ் நகரிலுள்ள மக்கள் கோபமடைந்தார்கள் . சாக்ரடீஸ் மற்றவர்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் சாக்ரடீஸைக் கொன்றனர். சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில் சீனாவில் சுவாங்தஸ¤ வாழ்ந்து வந்தார் . சாக்ரடீஸ் , சுவாங்தஸ¤ வைச் சந்தித்திருந்தால், இந்த ரகசியத்தைச் சொல்லியிருப்பார் .

" யாரையும் முட்டாளாக்க முயற்சி செய்யாதே , ஏனெனில் முட்டாள்கள் அதை விரும்புவதில்லை ,பைத்தியக் காரனிடம் அவன் பைத்தியம் என்பதை நிரூபிக்காதே , ஏனெனில்எந்தப் பைத்தியமும் அதை விரும்புவதில்லை , கோபமடைவான் , ஆத்திரமடைந்து உன்னைக்கொல்ல வருவான் , நீ அவனை விட உயர்ந்தவன் என்பது நிரூபிக்கப்பட்டால் , அவன் உடனே பழிவாங்கி விடுவான் . நீ முட்டாளாக இருப்பது நல்லது , அப்பொழுது மற்றவர்கள் உன்னைப் பார்த்து சந்தோசம் அடைவர். இந்த நுணுக்கமான வழிமுறை மூலம் நீ மற்றவர்களை மாற்ற முடியும் , பிறகு உனக்கு எதிராக அவர்கள் இருக்க மாட்டார்கள் ."

இதனால் தான் கீழை நாடுகளில் , முக்கியமாக இந்தியா , சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளில் கிரேக்க நாட்டில் சாக்ரடீஸை விஷமிட்டுக் கொன்றது போன்ற அசிங்கமான சமபவங்கள் நிகழவில்லை , இது ஜெருசலேமில் நிகழ்ந்தது - இயேசு சிலுவையில் அறையப்பட்டார் .இது ஈரானில் , எகிப்தில் மற்ற நாடுகளில் நிகழ்ந்தது - அனேக புத்திசாலிகள் கொல்லப்பட்டார்கள். இது மாதிரியான நிகழ்ச்சிகள் இந்தியாவிலோ , சீனாவிலோ ,ஜப்பானிலோ ஏற்படவில்லை . ஏனெனில் இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மக்கள் புத்திசாலியான மனிதனைப் போல் நடந்து கொள்வது பெருந்துன்பங்களை விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள் .

முட்டாளைப் போல , பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள் . இது தான் புத்தி சாலியின் முதல் படியாகும் , அப்பொழுது தான் நீங்கள் அவனைக் கண்டு பயப்படமாட்டீர்கள் . நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பீர்கள் .

Link to comment
Share on other sites

பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம்.

- ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.

- கபில்தேவ் நடத்தும் ஓட்டலின் பெயர் ஹோட்டல் சிக்ஸர்.

- ஆப்கானியப் பெண்களுக்காக சமீபத்தில்தான் ஒரு பத்திரிக்கை துவங்கப்பட்டது அதன் பெயர்: ரோஜ் (நாள்).

- டைப்ரைட்டர் Keyboard-ல் ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய பெரிய வார்த்தை Type Writer.

- நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தூய்மைப்படுத்தப்பட்ட கெரஸின்தான்.

- டெட்-ஸீ (Dead Sea)யில் உள்ள உப்பு சதவிகிதம் மிக அதிகம். அதில் குதித்தால் முழ்க மாட்டோம்.

- மலரின் வாசனைக்குக் காரணம் அதன் இதழ்களிலுள்ள எண்ணெய்ச் சத்துக்கள் தான்.

- ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது பசி ஏற்படும்.

- லிபியா பாலைவனத்தில் நிழலிலேயே 1360 பாரன்ஹீட் வெப்பம் இருக்கும்.

- அமெரிக்க அதிபர்களில் MBA படிப்பு முடித்த முதல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்.

- ஒரு யூனிட் இரத்தம் என்பது 350 மில்லிலிட்டர்.

- கரையான்களுக்கு கண்கள் கிடையாது. அதன் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் கிடையாது.

- விஞ்ஞானி ஜன்ஸ்டீனின் மூளையை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஆராங்ச்சிக்காய பாதுகாத்து வருகிறார்கள்.

- உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School.

- நிலவில் அதிகமாக காணப்படும் பொருள் டைட்டானியம்.

- சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால்.

- இந்தியாவின் முதல் மிருகக்காட்சிசாலை 1855-ம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது.

- 90ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மிர் இங்கு 9 என்ற எண் மிகவும் புனிதமானது.

- பெங்களுர் இந்தியாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

- ஆசியாவில் மட்டுமே சந்தன மரம் பயிராகிறது.

- ரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் ரத்தமா, பெண்ணின் ரத்தமா என்று சொல்ல முடியாது.

- பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித்.

- அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் நகரம் கொச்சி.

- தேனீக்கள் ஒரு லிட்டர் தேன் உருவாக்க பத்து இலட்சம் பூக்களிலிருந்து பூந்தேன் சேகரிக்க வேண்டும்.

- உப்பு நீரைக் குடிநீராக மாற்ற உதவும் வேதிப்பொருள் செலினியம்.

- பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வாயு எத்திலீன்.

- ஜெர்மனியில் உள்ள வால்ஸ்வேகன் வெர்க் (Volkswagen work) உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்புக்கூடம். ஒரு நாளைக்கு 4600 வாகனங்களைத் தயாரிக்க முடியும்.

- அக்வா ரிஜியா என்னும் திரவத்தில் தங்கம் கரையும்.

- தொடர்ந்து பலமணி நேரம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருந்தால் கைகளுக்கும் தோள்களுக்கும் வரும் நோயின் பெயர் கார்பல் டனல் சிண்ட்ரோம்.

- விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் சாதனை புரிபவர்களுக்கு அளிக்கப்படும் விருது – பட்நாகர் விருது.

- மிகக்குறைந்த வயதில் பத்ம விருது பெற்றவர் (செஸ்) விஸ்வநாதம் ஆனந்த்

- ஐரோப்பாவைத் தவிர உலகின் எல்லாக் கண்டங்களின் பெயர்களும் Aல் ஆரம்பித்து Aல் முடியும்.

- இந்தியாவின் தலைநகரமான டில்லியின் பழைய பெயர் இந்திரப் பிரஸ்தம்

- கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.

- அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான "wrist" என்பது தமிழில் "மணிக்கட்டு" என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.

நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.

காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.

கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சின்ன சண்டையும் பெரிய சண்டையும்

சரித்திரத்தில் மிகக் குறைந்த நேரம் நடந்த போர் எது தெரியுமா? அது சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயனுக்கும் இடையே நடந்த போர்தான். அந்தப் போர் 7 மணி 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதில் சேர மன்னன் பெருவெற்றி பெற்றான். அது சரி, நீண்ட நாட்கள் நடைபெற்ற போர் எது தெரியுமா? இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடைபெற்ற போர்தான் அது. கி.பி.1337ல் தொடங்கி 1453 வரை அந்தப் போர் நடந்தது. சுமார் 116 ஆண்டுகள் நடந்தாலும் அதனை நூற்றாண்டுப் போர் என்றே வரலாறு குறிக்கிறது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை? 23

வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்

அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு? 82 வருடங்கள்

செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு? 16 வருடங்கள்

சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு? 41 வருடங்கள்

பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு? 20 வருடங்கள்

தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு? 50 வருடங்கள்

பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 30 --40 வருடங்கள்

கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 200 வருடங்கள்

சிரிக்கத் தெரிந்த விலங்கு எது? மனிதன்

மூக்கில் பல் உள்ள விலங்கு எது? முதலை

பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம்

ஈருடகவாழிகள் யாவை? ஆமை, தவளை, சலமந்தா, முதளை

பறக்க முடியாத பறவைகள் யாவை? கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் கு யி ன்

பௌத்தரின் புனித நூல் எது? திரிபீடதி

களுகங்கையின் நீளம் யாது? 120 கி.மீற்றர்

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது? தேரை

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பூமிக்கு அடியில் ஆராய்ச்சி

ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.

நன்றி கீற்று.

Link to comment
Share on other sites

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 500 வருடங்கள்

கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 200 வருடங்கள்

ஆமைக்கே அதிக ஆயுள் என்று முன்பு கேள்விப்பட்ட நினைவு... அது தவறா???

Link to comment
Share on other sites

ஆமைக்கே அதிக ஆயுள் என்று முன்பு கேள்விப்பட்ட நினைவு... அது தவறா???

turtles

Q. How many kinds of turtles are there? A. About 270 (and still counting)

You can find a big, long list of scientific names names and common names here.

Most of them have links to pictures too!

all about turtles Q. How long have turtles been on the earth? A. About 230 million years

There were turtles on earth before the dinosaurs came along! Here's a good place to start learning about the Evolution of Turtles.

questions about turtles

Q. Where do turtles live? A. Almost everywhere!

In 230 million years, they have evolved to utilize very different habitats. They live everywhere on earth except the Arctic and Antarctic. The following examples will give you an idea of the different habitats:

The Desert Tortoise lives in a hot, arid environment, eats grasses, and has stumpy feet with toes that are not webbed.

The Malayan Box Turtle lives in a hot, humid, aquatic environment, eats everything, (plants, fish, snails, worms, etc.) that it finds in the water, and has webbed feet.

The little Vietnamese Wood Turtle lives in cool, limestone mountains, eats primarily bugs, worms, snails, etc. and has partially webbed toes (although it almost never swims.)

The Diamondback Terrapin live in brackish (slightly salty) lowland coastal waters of the eastern and southern United States, has fully webbed feet and stays in the water most of the time. It eats crayfish, snails, fish, insects and worms.

There are a variety of Sea Turtles that stay in the ocean all the time, coming ashore only to lay eggs. They have flippers. They travel all over the world.

questions about turtles Q. Do all turtles have shells? A. Yes but not all the same kind.

All turtles have some type of shell, but there are big differences in the protection those shells provide. Some turtles, such as the American and Asian box turtles, have a hinge on the lower shell which allows them to go inside their shells and then close up the "doors," front and rear.

The American mud and musk turtles also have hinges, but can't completely close up. Aquatics such as the painteds, cooters, sliders and map turtles have large protective shells, but no hinges. Flesh is exposed, front and rear, even when the turtles are completely tucked in.

The Snapping Turtles are not very well protected by their shells. The lower shell in particular is tiny and doesn't begin to cover the animal. They are shy, not inclined to look for trouble, but if threatened, they will put up a fierce fight.

The Softshell Turtles have leathery shells, a type of thick skin rather than the hard scutes that other turtles have. They stay hidden in water most of the time, and use camouflage for protection. They are also quick to bite if necessary.

questions about turtles

Q. Can turtles take off their shells? A. No

The turtle's outer shell is made of a thin layer of keratin, like your fingernails. But underneath that layer, there is a layer of bony plates that give the shell its shape. The ribs and vertebrae (backbones) are part of the shell too. So removing the shell would remove part of the skeleton of the turtle. There's a drawing of what the bony part of the shell looks like here. The labels are not in English, but you can see why it's impossible for the turtle to take off it's shell.

questions about turtles

Q. Can turtles hear? Do they have ears? A. Yes, and yes.

Turtles don't have any "outer ear," the part that sticks out from your head, but they have all the "inner ear" mechanisms that other animals do. They also have the auditory nerve and brain center required for hearing. The outer ear gathers sound vibrations to make them louder. So turtles do not hear airborne sounds as loudly as you do, but they can sense and interpret vibrations in the environment. Hearing probably isn't very important to a turtle though, because their senses of vision and smell are excellent. The brain center for hearing is quite small by comparison.

questions about turtles

Q. What's the largest turtle? A. Leatherback sea turtle

95 inches

The largest tortoise is the Galapagos Tortoise. The largest freshwater turtle in the US is the Alligator Snapping Turtle.

questions about turtles

Q. What's the smallest turtle? A. Speckled Cape padloper tortoise

usually under 3 inches

The Speckled Cape Padloper is a tortoise, so I'll tell you the smallest turtle, too. The Bog Turtle or Muhlenbergs Turtle, usually stays under four inches long. It is endangered.

questions about turtles

Q. Are there any poisonous turtles? A. Not really, but...

Turtles don't have teeth or fangs the way snakes do, so they have no way to deliver poison into a victim. They don't use venom for protection or predation. But there have been many reports of people becoming ill after eating American box turtles. The poison at work is apparently from mushrooms which are harmful to humans but have no effect on the turtles that eat them.

turtle reproductive behavior Q. Do turtles take care of their babies? A. No, they lay eggs and then go away.

The females try to find a safe place that will be good for the eggs to hatch, and they dig a nest in the ground. Different kinds of turtles look for different kinds of places to nest, but they all dig with their hind legs. When they get the nest just right, they lay the eggs. Some turtles lay just one or two eggs each time, and some lay dozens of eggs at a time. Most turtles leave the nest, but some mothers have been seen guarding their nests to keep the eggs safe from snakes. North American Wood Turtles have been seen doing this in areas where egg-eating snakes are a problem. Burmese Tortoises will sometimes stand guard too. They don't take care of babies once they have hatched though. The hatchlings are on their own.

learn about turtles

Q. How long do they live? A. Some can live a very long time.

The large tortoises from the Galapagus Islands can live more than 200 years. Some American box turtle have been documented at over 100 years old. Some sea turtles probably live 75 years or more. The common pet, the red-eared slider, can live 40 years or more if they receive good care.

questions about turtles

Q. What should I feed my turtle? A. That depends on what kind of turtle you have.

Info on turtle nutrition. / And info on tortoise care.

questions about turtles

Q. What do turtles do in the winter? A. Many of them brummate.

Brummate is just another word for hibernate. Find out more here: How Turtles Hibernate Through the Winter

questions about turtles

Q. What's the difference between turtles and tortoises? A. Water!

Or where you live.

In North America, we call them "tortoises" if they live almost entirely on land and don't need constant access to water. We call them "turtles" if they do need constant access to water. This includes box turtles, basking turtles, mud turtles and sea turtles. We use the word "terrapin" only for one type of turtle that lives in brackish (slightly salty) water-- the diamondback terrapin.

In Europe, only sea turtles are called "turtles." Freshwater varieties are called "terrapins" and land based varieties are called "tortoises" including box turtles that need access to water.

In Australia, almost all kinds of turtles, except sea turtles, are likely to be called tortoises. Australia doesn't have any land turtles, just fresh water and sea turtles.

Here's a good word you can use for any of them-- chelonian (kell-OHN-ee-uhn.) That's the name for the scientific "order" that includes sea turtles, freshwater turtles, terrapins and tortoises.

questions about turtles

Q. Can I catch diseases from turtles? A. Yes, if you're not careful.

Turtles and other reptiles can carry salmonella bacteria. This doesn't bother the turtle but can make humans very sick. It shouldn't be a big problem though, if you take a few precautions.

The way to avoid getting sick is to follow a few normal rules of hygiene. Don't put reptiles in your mouth. Wash your hands carefully with soap after you handle the turtle. Very young children should just look, and not touch reptiles. Don't let reptiles walk (or slither) around in the house; keep them in their cages and tanks.

The most common source of salmonellosis is undercooked food, especially eggs and poultry, not pet turtles.

http://www.turtlepuddle.org/kidspage/questions.html

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 500 வருடங்கள்

will answer soon :)

Link to comment
Share on other sites

திமிங்கிலத்தின் சராசரி ஆயுள் காலம் 30 -- 40 வருடங்கள் தான். ஆகவே ஆமை தான் கூடுதலான காலம் உயிர்வாழும். தவறை சுட்டிக்காட்டியமைக்கு வாசனுக்கு நன்றி. மேலும் திமிங்கிலம் பற்றிய தகவலுக்கு கீழுள்ள தளத்தில் பார்க்கலாம்.

http://majictwins.tripod.com/whalefacts.html

Link to comment
Share on other sites

  • 7 months later...

உலகின் 0.2% மக்கள் தொகையைக் (13 மில்லியன்) கொண்ட யூத சமூகம், 1901 இருந்து 2008 வரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 23% (178 யூத நபர்கள்) பெற்றுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • 10 months later...

வீட்டிலேயே புற்றுநோய் கருவி(scaner)

April 17, 2010

sci06.jpg

இந்தியர் சாதனை புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை முலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (என்.இ.எச்.யு) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ருபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

`இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 7 months later...

மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.

200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.

உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும் எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள்.

நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.

ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.

மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.

நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். wow.

பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன. :rolleyes:

பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.

நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.

பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.

உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.

கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கணித மேதை ராமனுஜம் வீட்டில் இருக்கும்போது தன தாயுடன் ஆடு-புலி விளையாட்டு ஆடுவார்.

முதலைக்கு வாழ்நாளில் எத்தனை பற்கள் விழுந்தாலும் முளைத்துவிடும்.

சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் இருந்தது.

உலகில் மூன்றாவது கண் உள்ள ஒரே பிராணி "ஸ்பினோடயூன்". நியூஜிலாந்து தீவின் கரையில் உள்ளது.

1690-ஆம் ஆண்டில் இங்கிலந்துக்காரர்களால் கண்டறியப்பட்ட நகரம் இன்றைய "கொல்கொத்தா".

இதுநாள் வரை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வராத ஒரே மாநிலம் - மேகாலாயா.

வீரமாமுனிவர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொள்வார்.

பூரானுக்கு நாற்பது கால்கள்.

கீரியும் - பாம்பும் போல தேளும் - எட்டுக்கால் பூச்சியும் இயற்கையிலே பரம எதிரிகள்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குதிரைகள் காட்டுப்பூனைகள் அளவிற்கே இருந்தனவாம்.

பாம்பு நுனி நாக்கினால் வாசனையை நுகர்கிறது.

நட்சத்திர மீனை எத்தனை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டாலும், ஒவ்வொரு சிறிய துண்டும் ஒரு முழு நட்சத்திர மீனாக வளரும் சக்தி உடையதாம்.

புலிகள் கடுமையான சூரிய ஒளியை விரும்பாது.

புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் வரும்.

சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.

யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.

Tsetse fly - இந்தப் பூச்சி கடித்தால் ஏற்படும் நோய் என்ன தெரியுமா? தூக்கம்தான். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

ப்ரொடெஸ்டென்ட்" இயக்கத்தை நிறுவியவர் 'மார்டின் லூதர்'

பைபிளில் குறிப்பிடப்படும் மிக வயதான மனிதனின் பெயர் மெதுசீலா. வயது 969 ஆண்டுகள்.

நியூசிலாந்தில் உள்ள இராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.

"அமைதிக் கடல்" சந்திரனில் உள்ளது.

கங்காருவினால் தனது வாலை தரையில் படாமல் உயர்த்திக் கொண்டு தாவ முடியாது.

"கேரா" என்பதிலிருந்து 'கேரளம்' வந்தது. 'கேரா' என்றால் தேங்காய் என்று அர்த்தம்.

"சகாரா பாலைவனம்" ஆண்டுதோறும் தெற்கே 50 கி. மீ. தொலைவு வளர்வதாக கூறப்படுகிறது.

தாயின் வயிற்றில் குழந்தையொன்று கருத்தரித்த 18வது நாளிலேயே அதன் மூளை வளரத்தொடங்கி விடுகிறதாம்.

"பாம்பாய் கக்கூஸ்" என்றழைக்கப்படும் நவீன கழிவறை 11ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டு வந்தது.

பல்துலக்க பயன்படும் பிரஷ் 1780-ம் ஆண்டில் "வில்லியம் அட்டீஸ்" எனும் தோல் வியாபாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரிய சக்தி 2,10,000 டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

"கிளாஸ் ஸ்நேக்" என்பது கண்ணாடியோ, பாம்போ அல்ல. அது ஒரு வகைப் பல்லி.

"பிரெய்ரி டாக்" என்பது நாய் இனத்தைச் சேர்ந்தது அல்ல. அது கொறிக்கும் விலங்கினம்.

"லேடி பர்டு" என்பது பறவை அல்ல. அது ஒரு வண்டு.

"பிளையிங் பாக்ஸ்" என்பது நரி அல்ல. அது ஒருவகை வெளவால்.

விமானத்தைக் கண்டுபிடித்த "ரைட் சகோதரர்கள்" இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

தைவானில் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் பின் மண்டையில் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இரண்டரை சென்டிமீட்டர் மழை பெய்ய மேகத்திலுள்ள நீரின் அளவு 25,000 டன்களாகும்.

உலகளவில் மருத்துவக் கல்லூரியில் "சாரணர் இயக்கம்" உள்ளது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மட்டுமே.

உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கி.பி. 400-ம் ஆண்டு வரை சீனாவில் 'இஸ்சா' என்ற பெயரில் தேயிலையை மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர்.

சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.

மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.

வண்ணத்துப் பூச்சிகள் தன பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து 9௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும்.

பகலைவிட இரவில் கப்பலின் எடை அதிகமாக இருக்கும். நிலவொளியில் ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றம் இது.

சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கி.மீ.

மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள்.

உலகில் லண்டனில் மட்டும் தான் மனித எலும்புகளின் வங்கியுள்ளது.

தாய்லாந்து 'வெள்ளை யானைகளின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள வெளன்சியா சர்ச்சிலுள்ள ஒரு பாத்திரத்தில் தான் இயேசு கடைசியாக உணவருந்தியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ ஆய்விற்காக 'ரீசஸ்' என்ற குரங்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் காணப்படும் அதிசய மலர் 'காக்டஸ்'. இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது.

அரபி மொழி உலகில் 25 நாடுகளில் அரசு அதிகாரபூர்வ மொழியாக விளங்குகிறது.

பிரெஞ்சு மொழி 32 நாடுகளிலும், ஆங்கிலம் 58 நாடுகளிலும் அரசு அதிகார மொழிகளாய் இருக்கின்றன.

திருமணமாகாத ஸ்பானிஷ் பெண்ணிற்கு பெயர் 'ஸெனோரிட்டா' என்பது.

சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுதியால் அதிக வருவாயுள்ள அரசாங்கப் பதவியை விட்டு விலகி குறைந்த வருவாயுள்ள பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை ஏற்றுக் கொண்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டு தேசிய மொழிகள்தான்.

உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது.

Link to comment
Share on other sites

உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள 'உபர்ஸ்' மரம்தான் அதிக விஷமானது.

ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 291/2 நாட்கள்

புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.

உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.

உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ

நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.

வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்

இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் - ஹங்கேரியன் 'பாப்ரிகா'

இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.

சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்

'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு 'உலக ஐக்கிய நாடுகள் சபை' அமைக்கப்பட்டது.

பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.

இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் 'எம்பாம்'.

'இம்பாலா' என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை 'சாப்பர்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.

மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.

'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.

கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.

உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.

வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.

Link to comment
Share on other sites

நேபாள வீரர் "ஆக்ரிட்டா ஷெர்பா" என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு "பனிச் சிறுத்தை மனிதன்" என்ற சிறப்பு பட்டம் உண்டு.

தேசியக் கொடியில் "ஆலமரம்" இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.

மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு "மீத்தேன்".

முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.

முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை".

பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.

விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை "கேப்டன் ஜான் வாட்ஸ் எங்" என்ற அமெரிக்கருக்கு உண்டு.

சயாமிய மொழியில் "நான்" என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.

13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா.*&* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா.

நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.

அமெரிக்காவின் கொடி "ஓல்டு குளோரி" எனப்படுகிறது.

"அமாரிக்" எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.

மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.*&* குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.

முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் "பெர்ல் ஜூப்ளி" என்று அழைப்பார்கள்.

பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை.*&* சீக்கியர்களின் கடைசி குரு - "குரு கோவிந்த் சிங்

"சகாரா" 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.*&* சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.

பாலில் இல்லாத சத்து "இரும்புச்சத்து"

நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் "டோராடூன்" என்ற இடத்தில் உள்ளது.

இந்திய நேரம் "அலகாபாத்" என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.

Link to comment
Share on other sites

சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

'பிட்யூட்டரி' கிளாண்ட்ஸ்க்குத்தான் 'மாஸ்டர் கிளாண்ட்ஸ்' என்று பெயர்.

அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

VOTE - Voice Of Taxpayers Everywhere.

ஆப்பிரிக்காவில் "ஜெர்பா" என்னும் ஒருவகை எலிகள் தலையைத் திருப்பாமலே பின்னால் உள்ள பொருளைப் பார்க்கும். இது 10 அடி தூரம் தாவும் திறன் கொண்டது.

ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.

பறக்கும்போது ஒரு வினாடிக்கு 120 முறை சிறகுகளை அசைக்கும் ஈயைப் போன்ற ஒரு பூச்சியின் பெயர் "கிகாடாஸ்".

ஓர் ஆப்பிள் துண்டிலுள்ள சக்தி சராசரியாக ஓர் ஆண் 35 நிமிடம் ஓடவும் அல்லது ஒரு பெண் 50 நிமிடம் ஓடவும் தேவையான சக்திக்கு நிகரானது.

அசாமில் உள்ள காண்டாமிருகம் சரணாலயம் - "காசிரங்கா".

*&* இங்கிலாந்தில் உள்ள 'மான்கல்' என்ற பூனை இனத்திற்கு வாலே கிடையாது.

மாறுகுரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்து பிறகு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் "வில்லியம் டாஃபட்".

மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய பவளப்படிவுகள் ஆஸ்திரேலியாவில் உள்ள "தி கிரேட் பேரியர் ரீஃப்" ஆகும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 months later...

ஈபிள் கோபுரம்(Eiffel Tower) - சில முக்கியத் தகவல்கள்.

பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள்கள்.

கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .

இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது.

பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 months later...

1. ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் உள்ள ஒரே பழம் வாழைப்பழம்.

***

2. புல்லாங்குழலில் 7 துவாரங்கள் உள்ளன.

***

3. வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.

***

4. பென்சில் தயாரிக்க காரியம், களிமண், மரக்கூழ் ஆகிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

***

5. கோல்ஃப் பணக்காரர்களின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது.

***

6. குரங்கில் 600 வகைகள் உள்ளன.

***

7. பெண் குயில் பாடாது.

***

8. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்கள்.

***

9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.

***

10. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி.

***

11. "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தைத் தந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

***

12. இங்கிலீஷ் கால்வாய் என்பது கால்வாய் அல்ல கடல்.

***

13. உலகிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்.

***

14. * ரபீந்தரநாத் தாகூரின் சுயசரிதை நூலின் பெயர் "எனது நினைவுக் குறிப்புகள்'.

***

15. டாக்டர் அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் பெயர் "அக்கினிச் சிறகுகள்'.

***

16. திரு.வி.க.வின் சுயசரிதை நூலின் பெயர் "என் வாழ்க்கைக் குறிப்புகள்'.

***

17. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதை நூலின் பெயர் "என் சரிதம்'.

***

18. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதை நூலின் பெயர் "என் கதை'.

***

19. கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை நூலின் பெயர் "வனவாசம்'.

***

20. நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது கிவி.

***

21. வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி.

***

22. கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.

***

23. கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும்.

***

24. ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும்.

***

25. கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும்.

***

26. அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன்.

***

27. பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர்.

***

28. ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது.

***

29. பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

***

30. வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது.

***

31. பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது.

***

32. இந்திய வானொலியின் பழைய பெயர் "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது.

***

33. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

***

34. ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது.

***

35. கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது.

***

நன்றி தினமணி.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=154213&SectionID=145&MainSectionID=145&SectionName=Siruvarmani&SEO=

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.