Jump to content

காதல்!!


Jamuna

Recommended Posts

காதலர் தினத்தை முன்னிட்டு டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "இதய காவியம்" ஜம்மு பேபியின் "காதல்"...(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)....

*கதாநாயகன் -

"காதல் இளவரசன்" கலைஞன் திரைபடத்தில் மதன்

*கதாநாயகி -

"காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் லாவணியா

*இவர்களுடன்

டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் சுரேஷ்

அறிமுகம் சிரிபழகி அனுஷா (சிட்னி வருகை)

அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை)

*கெளரவ வேடத்தில்

அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்)

கலக்கல் மன்னன் சுவி..

(தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்களத்திள் காண்பிக்கபடுகிறது)...

vv001xb4.jpg

கலைஞன் அண்ணாவின் வித்தியாசமான அட்டகாசமான நடிப்பில்!!

அனாதைக் குழந்தையான

என் காதலிற்கு

அரசு தொட்டிலாம்

அவளின்

நினைவுகள்!!

காதல்!!

(love is the child of illusion and the parent of disillusion)..

இதமான அதிகாலை பொழுதினில் கதிரவன் தன் விழிகளை விழிக்க தொடங்கும் அந்த பனி துளிகள் விழும் அந்த நேரத்தில் மதன் தன் கண்களை விழித்தெழுந்தான் நேரத்தை பார்த்த போது காலை 5 மணி சட்டென்று தனது காலைகடன்களை முடித்து விட்டு அந்த அதிகாலை பொழுதினில் பக்கத்தில் இருந்த ஸ்டேசனிற்கு நடக்க ஆரம்பித்தான் அலுவலகதிற்கு செல்ல.. :wub: (மதனை பற்றி சொல்ல வேண்டும் என்றா அவனிற்கு தற்போது ஏறத்தாழ 35 வயசு ஆகிறது சிட்னியில் வாடகை வீட்டில் தனியாக தான் இருக்கிறான் வேலையும் அவன் பாடும் என்று தன் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தான் அவனின் சொந்தங்கள் எல்லாம் தாய்நாட்டில் சிட்னியில் அவனுக்கு சொந்தம் என்று சொல்லி கொள்ளும்படி யாரும் இல்லை ஆனா நல்ல நண்பர்களை பெற்றிருந்தான்)..

இவன் இருக்கும் வீட்டில் இருந்து இரு வீடுகள் தள்ளி ஒரு தமிழ் குடும்பம் தாயும்,மகளும் தான் அந்த வீட்டில் அவர்களும் ஈழத்தில் இருந்து சிட்னிக்கு வந்து இப்ப ஏறத்தாழ 4 வருசங்கள் தான் ஆகின்றன அங்கே நடந்த கொடிய யுத்தத்தால் திருமணம் ஆகி இரு மாதங்களிளே புருசனை இழந்து தவிர்க்கும் மகள் அந்த வேதனை தாங்காம சில மாதங்களில் தந்தையும் இறந்துவிட சொந்தகாரர்கள் எல்லாரும் கையை விரித்து விட பல இன்னல்களை :D எதிர் கொண்டு தற்போது சிட்னியில் சந்தோசமா இருக்கிறார்கள் தாயும்,மகளும்...மகளின் பெயர் லாவணியா தற்போது அவாவிற்கு ஏறத்தாழ 33 வயசிருக்கும் சிட்னியில் நல்ல தொழில் நல்ல சம்பாத்தியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

மதன் அலுவலகதிற்கு நடக்க ஆரம்பித்து இரு வீடு தள்ளி இருக்கும் நிலையில் லாவணியா சிரித்த முகத்துடன் அந்த பனிவிழும் பொழுதினில் மதன் அண்ணா வேலைக்கு கிளம்பிட்டீங்களா என்று கேட்க மதன் வெட்கத்துடன் ம்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டினான் இந்தாங்கோ சாப்பாடு அம்மா சமைத்தவா கொண்டு போங்கோ என்று நீட்டினாள்...மதன் உங்களுக்கு வீண் கஷ்டம் என்று பேச தொடங்குவதிற்குள் அவள் இதில என்ன கஷ்டம் நானும் வேலைக்கு போக போறேன் அப்ப சமைக்க தானே வேண்டும் அதில உங்களுக்கும் சேர்த்து சமைத்தது சாப்பிட்டு பார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கோ என்று சொல்ல...ம்ம்ம் என்று தலையாட்டினான்...உடனே லாவணியா காவ நைஸ் டே என்று சொல்ல அவனும் யூடூ என்று சிரித்து கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..

மதன் வீதியால் சென்று மறையமட்டும் கண்கள் இமை மூடாமல் பார்த்து வண்ணம் இருந்துவிட்டு வீட்டுகுள் ஓடினாள் லாவண்யா..மதன் டிரெயினில் ஏறி ஜன்னல் கரையில் தலையை வைத்தவாறு தன்னுடைய பழைய நினைவுகளிள் மூழ்கினான்..பாடாசைலையை திருகோணமலையில் முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக கொழும்பு வந்து அங்கே தன் மனதை அனுசாவிடம் பறி கொடுத்ததையும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காம உள்ளங்கள் வெவ்வேறாக இருந்தாலும் :lol: இதயம் ஒன்று என்று இவர்களின் காதல் வளர்ந்து கொண்டே சென்றது...

இவர்களின் காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாகவும் அதிகரித்து கொண்டே சென்றது யாரின்ட கண் பட்டதோ தெரியாது மதனின் குடும்பத்தாருக்கு இந்த விசயம் தெரியவர பெண் வந்து தங்களை விட சாதி குறைவு நீ அவளை விரும்ப கூடாது என்று அவனை கட்டாயபடுத்தி அப்படி நீ அவளை விரும்பினா எங்களை பார்க்கமாட்டாய் என்று கத்தினார்கள் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாம நேராக சென்று அனுஷாவிடம் நடந்தவற்றை சொல்லுகிறான் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை உங்களை தவிர என் மனதிற்குல் வேறொருவருக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகி செல்கிறாள்..அவனும் அனுஷாவை விட்டு போட்டு வேறொருவரை என் மனம் நினைக்கவும் மாட்டுது திருமணமும் செய்ய மாட்டேன் என்று தான் அவுஸ்ரெலியாவிற்கு வந்தவன் இங்கே வந்து 3 வருசங்கள் ஆகின்றன...வீட்டுகாரரோட இருந்து விட்டு தொடர்பை மேற்கொள்வான் அவைக்கு பணம் முதலியவற்றை அனுப்புவான் அவையும் எத்தனையோ தரம் திருமணம் பற்றி பேச்சு எடுத்தா தொலைபேசியை கட் பண்ணிடுவான் இப்படி இருக்கும் போது தான் நேற்று இரவு மதனின் கைதொலைபேசி ஒலித்தது எடுத்து கலோ சொல்ல மறுமுனையில் ஒரு பெண் குரல் எங்கையோ கேட்ட குரல் உடனே இவனால் அடையாளம் கண்டு கொள்ளவில்லை...அந்த குறல் எப்படி இருக்கிறீங்க என்று கேட்க நான் சுகம் நீங்க என்று இழுக்க அந்த முனையில் இருந்து அது சரி என்னை ஒரடியா மறந்துட்டீங்களா என்று சிரிபோடு கேட்க....அனுஷாவா என்று குரல் கணத்து மதன் கேட்க...

குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

அவளை மறந்து விடலாம் - அவளை

மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

குடித்து விடலாம் - ஆனால்

இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?

மறுமுனையில் ம்ம்ம் என்று அனுஷாவின் குரல் கேட்டு மதனிற்கு அழுகையே வந்துவிட்டது ஏன் இப்ப அழுறியள் முதலில அதை நிற்பாட்டுங்கோ உங்களை பற்றி எனக்கு தெரியும் தானே அவுஸ்ரெலியாவிற்கு போனா ஒரு கோல் கூட எடுக்கமாட்டியளா :huh: உங்களின்ட நம்பரை எவ்வளவு கஷ்டபட்டு எடுத்தனான்..என்று அனுஷா சொல்ல இல்லை உங்களை மனவேதனை படுத்த கூடாது என்று தான் எடுக்கவில்லை மன்னியுங்கோ என்று சொல்ல ம்ம்ம்ம் விளங்குது என்று அனுஷா கூறி எப்படி இருக்கிறியள் என்று கேட்க என்னவோ இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கிறியள் என்று மதன் கேட்க நானும் என்னவோ இருக்கிறேன் என்று கூறி ஒரு விரக்தியான சிரிப்பு...

Link to comment
Share on other sites

திரைப்படம் பார்க்க நல்லா இருந்திச்சிது.

ஆனா "காதல் இளவரசன்" எண்டு போடுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை எண்டு நினைக்கிறன். நீங்கள் தானே காதல் இளவரசன்? அந்த பட்டத்தை எனக்கு எப்பிடி தரலாம்?

வேணுமெண்டால் "காதல் ஆராய்ச்சியாளன்" இல்லாட்டி "காதல் நிபுணர்" இல்லாட்டி "காதல் விஞ்ஞானி" இல்லாட்டி "காதல் வைத்தியர்" இப்படி ஏதாவது பட்டம் தந்து இருக்கலாம்..

பெரிய கதையாக நேரம் செலவளித்து செய்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள்!

ஒரு காலத்தில கையில காசு இருந்தா உண்மையா குறும்படங்கள் செய்யலாம்.

அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை)..
அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்முவுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் ஊ.......தெடுக்குது. வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

நெடுகலும் சாப்பிடுற நினைப்பிலேயே இருங்கோ பிரிஸ்பன் நான் இருக்கிற ஊரின் பெயர் :lol:

இதே நேரம் ஜம்மு வீட்டை போய் சேர்ந்தான் என்ன கோபம் போச்சோ தங்காவிற்கு என்று கேட்க ஒன்றும் கதைக்காமலிருக்க சரிடி சாப்பாட்டை கொண்டு வந்து தாடி சாப்பிடுறேன் என்று சொல்ல வேண்டாம் எனி சாப்பிடதேவையில்லை என்று சொல்ல பரவாயில்லை சாப்பிடுறேன் தாங்கோ என்ன நக்கலாடா நான் தானே கோபம் அது தெரியுமே தாடி சாப்பாட்டை ஒரு விசயம் கதைக்க வேண்டும் சாப்பாட்டை தாடி என்று சொல்ல சரிடா வாரேன் என்று போய் சாப்பாட்டை போட்டு கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டு பார்த்தா அதில உப்பும் இல்லை,புளியும் இல்லை அக்சுவலா மனிசன் சாப்பிட ஏலாது (உதை சொன்னா கத்துவாள் என்று தெரியும் என்ன செய்யிறது என்று சாப்பிட்டது தான் நல்லா இருக்கு என்று)...

ஜம்மு கதை நல்லாயிருக்கு. ஆனா மேலே உள்ள வரி தான் நல்லாயில்லை நான் சமைத்தது சாப்பிட்டு பாக்காம எப்படி நல்லாயில்லை என்டு சொல்லலாம் :)

Link to comment
Share on other sites

திரைப்படம் பார்க்க நல்லா இருந்திச்சிது.

ஆனா "காதல் இளவரசன்" எண்டு போடுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை எண்டு நினைக்கிறன். நீங்கள் தானே காதல் இளவரசன்? அந்த பட்டத்தை எனக்கு எப்பிடி தரலாம்?

வேணுமெண்டால் "காதல் ஆராய்ச்சியாளன்" இல்லாட்டி "காதல் நிபுணர்" இல்லாட்டி "காதல் விஞ்ஞானி" இல்லாட்டி "காதல் வைத்தியர்" இப்படி ஏதாவது பட்டம் தந்து இருக்கலாம்..

பெரிய கதையாக நேரம் செலவளித்து செய்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள்!

ஒரு காலத்தில கையில காசு இருந்தா உண்மையா குறும்படங்கள் செய்யலாம்.

அட..உண்மையா நல்லா இருந்ததோ குருவே தாங்ஸ் :) ...தாங்ஸ்....எப்படி படத்தில உங்களின்ட கரக்டர் குருவே பிடித்து கொண்டதோ...(தியேட்டரில ஸ்கீரின் கிழியாம ஓடுது தானே படம் குருவே)...இல்லை கேட்டனான் பாருங்கோ.. :)

அட என்ட பட்டத்தை குருவிற்கு கொடுக்கிறதில என்ன பிரச்சினை எங்களுகுள்ள உது எல்லாம் என்னதிற்கு குருவே :o ...யார் சொன்னது தகுதி எல்லாம் இல்லை என்று அப்படி பார்க்க போனா நான் வேற சூப்பர்ஸ்டார் என்று எனக்கே பட்டம் கொடுத்திருக்கிறேன் :lol: இது எல்லாம் சகஜம் குருவே...(கண்டு கொள்ள கூடாது பாருங்கோ)... :D

நன்றி குருவே உங்கள் வாழ்த்துகளிற்கு எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்...படம் 100 நாள் ஒடும் தானே தியேட்டரில குருவே.. :)

குறும்படம் செய்யவோ நானோ உது எல்லாம் நமக்கு சரிபட்டு வராது குருவே ஏற்கனவே ஒரு சான்ஸ் கிடைத்தது கிட்டடியில நாம எஸ்கேப் ஆகிட்டோம்... :o (அப்படி எல்லாம் பொறுமை இல்லை நேக்கு குருவே அத்தோட உங்கே எழுதினா அடி எல்லாம் விழாது அல்லோ அது தான் இம்போட்டன்ட் பாருங்கோ :D )...

அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

அட குருவே பிரிஸ்பன் என்றா கனடாவில டொரண்டோ மாதிரி அவுஸ்ரெலியாவில பிரிஸ்பன் இன்டர் ஸ்டேட் குருவே விளங்கிச்சோ :) என்ட தங்கைச்சி மாதிரி நீங்களும் சாப்பாட்டு எண்ணத்தில இருக்கிற மாதிரி இருக்கு நெடுகலும்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்முவுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் ஊ.......தெடுக்குது. வாழ்த்துகள்.

ம்ம்ம்...கறுப்பி அக்கா இருந்து விட்டு அப்பப்ப ஊற்றேடுக்கிறது :) அடுத்த படத்தில கறுப்பி அக்காவையும் கீரோயின் ஆக்கிட வேண்டும் நன்றி கறுப்பி அக்கா வாழ்த்துகளிற்கு... :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு கதை நல்லாயிருக்கு. ஆனா மேலே உள்ள வரி தான் நல்லாயில்லை நான் சமைத்தது சாப்பிட்டு பாக்காம எப்படி நல்லாயில்லை என்டு சொல்லலாம் :lol:

அட உண்மையா நல்லா இருக்கோ தாங்ஸ் தங்கா :o அந்த மாதிரி நடிப்பு உங்களின்ட நான் சொன்னது படத்தில :) ..சமைத்து நான் சாப்பிட்டு வேற பார்க்க வேண்டுமோ நான் ரிஸ்க் எல்லாம் எடுக்க விரும்பவில்லை என்ட தங்கைச்சியே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! உஙகளின் இதயகாவியம் இதயஓவியமாகிவிட்டது. வெள்ளிவிழாகாண வாழ்த்துகள். :):)

குருவே! உங்களைப்போல்தான் நானும் பிரிஸ்பன்னை ஏதோ சீனிபன், சங்கிலிபன் என நினைத்து ஜொள்ளு விட்டன். பிறகு இன்னிசை, ஜம்முவின் விளக்கவுரையைக் கண்டபின்தான் தலயில குட்டிக் கொண்டேன். ஹி ஹி :D:D

Link to comment
Share on other sites

ஜம்ஸ்! உஙகளின் இதயகாவியம் இதயஓவியமாகிவிட்டது. வெள்ளிவிழாகாண வாழ்த்துகள். :):D

குருவே! உங்களைப்போல்தான் நானும் பிரிஸ்பன்னை ஏதோ சீனிபன், சங்கிலிபன் என நினைத்து ஜொள்ளு விட்டன். பிறகு இன்னிசை, ஜம்முவின் விளக்கவுரையைக் கண்டபின்தான் தலயில குட்டிக் கொண்டேன். ஹி ஹி :D:D

அட..சுவி பெரியப்பா வாழ்த்துகளிற்கு நன்றிகள் :) ...நீங்களும் படத்தில ஒரு சீனில வந்தாலும் நல்லா நடித்தீங்க :D ...அட நீங்களும் பிரிஸ்பனை சாப்பாடு சாமான் என்றோ நினைத்தனையள் என்ன கொடுமை இது :) ...அட பாவமே தலையில நீங்களே குத்தி கொண்டீங்களா சொல்லி இருந்தா நான் வந்து குத்தி இருப்பேனே சுவி பெரியப்பா.... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தயாரிப்பாளர் ஜம்முபேபி அசத்துட்டீங்க.

கதையை சொன்னப்போவே Fees கேட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு இன்னும் எனக்கான பணம் அவ்ந்து சேரவில்லையே :D

அட ஜம்முபேபியும் தங்காவும் நல்லாக சண்டைப்பிடிக்கிறார்கள். தங்காவுக்கு சமைக்க தெரியா னு :) ஒரு அண்ணாவே சொல்லலாமா? பாவம் தங்கா.

தம்பி நல்லாக இருக்குது கதை. ஆனால் பாருங்கோ லாவண்யா அண்ணா அண்ணா னு கூப்பிட்டு எப்படி அப்புறம் காதலிப்பா :) எங்கேயோ உதைக்குது.

பாடல்கள் எல்லாம் சூப்பர். அதிலும் ஜம்முபேபி ஸ்கிறீன் ல வரும்போது அடட்டா என்னமா பாட்டு போட்டிருக்காங்க ம்ம் இங்கிலீஸ் ல சொன்னா சூப்பர். தமிழ்ல சொன்னா தூள் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யம்மு பேபி.. படமும் பாடலும் நல்லாதான் இருக்கு..

ஆனால் லாவண்யா மதனை அண்ணா அண்ணா என்று சொல்லுறது நல்லா இல்லையே.. :o

Link to comment
Share on other sites

எல்லாம் அண்ணால தான் start பன்னும் இது கூட தெரியதாக்கும் ஜம்ஸ் எல்லாம கரக்ட்டாதான் இருக்கு வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

தயாரிப்பாளர் ஜம்முபேபி அசத்துட்டீங்க.

கதையை சொன்னப்போவே Fees கேட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு இன்னும் எனக்கான பணம் அவ்ந்து சேரவில்லையே

அட ஜம்முபேபியும் தங்காவும் நல்லாக சண்டைப்பிடிக்கிறார்கள். தங்காவுக்கு சமைக்க தெரியா னு ஒரு அண்ணாவே சொல்லலாமா? பாவம் தங்கா.

தம்பி நல்லாக இருக்குது கதை. ஆனால் பாருங்கோ லாவண்யா அண்ணா அண்ணா னு கூப்பிட்டு எப்படி அப்புறம் காதலிப்பா எங்கேயோ உதைக்குது.

பாடல்கள் எல்லாம் சூப்பர். அதிலும் ஜம்முபேபி ஸ்கிறீன் ல வரும்போது அடட்டா என்னமா பாட்டு போட்டிருக்காங்க ம்ம் இங்கிலீஸ் ல சொன்னா சூப்பர். தமிழ்ல சொன்னா தூள்

தாங்ஸ்..தாங்ஸ் நிலா அக்கா..நீங்க கூட படத்தில நல்லா நடித்தனியள் பாருங்கோ :D ...என்ன வீஸ் வேற வேண்டுமோ என்ன கொடுமை இது "பாவனாவை" போடுற இடத்தில உங்களை போட்டதை பெரிய விசயம் உதில வீஸ் வேற வேண்டுமாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.. :( (குருவே அது தான் நம்ம கீரோவே சும்மா தான் நடித்தவர் என்றா பாருங்கோ :lol: )...

அட நானும் தங்காவும் இதை விட நல்லா சண்டைபிடிபோமே இது தெரியாதோ... :) (தங்காட்ட கேட்டா சொல்லுவா)...அட என்ட தங்கைச்சி நல்ல சமைப்பா தானே சும்மா அவா கூட சண்டை பிடிக்க சொன்னனான் நிலா அக்கா உது தெரியாதோ.. :) (ஒரு மாதிரி சண்டையும் பிடிதாச்சு)...

கதை நல்லா இருக்கோ தாங்ஸ்...ம்ம் எப்பவும் வயசு கூடின ஆட்களை அண்ணா என்று தானே கூப்பிடவேண்டும் நிலா அக்கா அதன் பிறகு காதல் வலையில் விழுந்தால் நான் என்ன செய்ய :wub: நிலா அக்கா நீங்களே சொல்லுங்கோ பார்போம்..அதை தான் என் பட கதாநாயகி "லாவண்யாவும் செய்தா" நிஜ வாழ்க்கையிலும் கூட இப்படி தானே நிலா அக்கா ஏன் பார்க்கவில்லையா :o ...நான் பலரை பார்த்திருக்கிறேன்..

ம்ம்..பாடல் எல்லாம் நல்லா இருக்கோ நன்றி நன்றி :( ...பின்னே ஜம்முபேபி ஸ்கீர்னில வரக்க அப்படி தானே பாட்டு போட வேண்டும் (எல்லாரும் படத்தில ஜம்முபேபி எப்ப வரும் என்று தானே பார்த்து கொண்டிருந்தவை என்ன ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறியளோ :lol: )...தாங்ஸ் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்மு பேபி.. படமும் பாடலும் நல்லாதான் இருக்கு..

ஆனால் லாவண்யா மதனை அண்ணா அண்ணா என்று சொல்லுறது நல்லா இல்லையே..

ஜன்னி அக்கா எங்கே இருந்து வாறியள் காணவே கிடைக்குதில்லை எப்படி சுகம்... :( (ஜன்னி அக்கா கண்ணணோட பிசி போல :lol: )..தாங்ஸ் ஜன்னி அக்கா வாழ்த்துகளிற்கு..இது என்ன கரச்சல் "லாவண்யா" அண்ணா என்று சொன்னதிற்கு நான் என்ன செய்ய.. :) (அட நானே கதை எழுதினான் :wub: )...அக்சுவலா ஜன்னி அக்கா உங்களை விட ஒருவர் வயசு கூடினவர் முதல் தரம் அறிமுகமாகும் போது "அண்ணா" என்று தானே கூப்பிடுவியள் :) ...பிறகு அவரின் காதல் வலையில் சிக்கினால் உடனடியாக பெயரை சொல்லி கூப்பிடமுடியாது என்ன நீங்களே சொல்லுங்கோ :o அப்படி தான் என் பட கதாநாயகி "லாவண்யா" இப்ப விளங்கிச்சோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எல்லாம் அண்ணால தான் start பன்னும் இது கூட தெரியதாக்கும் ஜம்ஸ் எல்லாம கரக்ட்டாதான் இருக்கு வாழ்த்துக்கள்...

ம்ம்..உங்களுக்கு நல்ல அநுபவம் தானே அதில என்ன சுண்டல் அண்ணா :lol: ..ஜம்ஸ் எல்லாம் கரக்டா இருக்குது என்றா வாசிக்கிறவை தப்பா நினைக்க போகீனம் :wub: ...கதை கரக்டா இருக்கு என்று சொல்லுங்கோ நன்றி சுண்டல் அண்ணா.. :( .

எல்லாம் சரி சுண்டல் அண்ணா நேக்கு இந்த பாட்டும் ரொம்பவே பிடிக்குது இப்ப...என்ன பாட்டு தெரியுமோ... :o

"அஞ்சலி அஞ்சலி என் உயிர் காதலி"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் பிடிக்கிற பாட்டுகள் அடிக்கடி மாறும் பருவாயில்லையோ? ஜ மீன் பாட:டகளும் பொண்ணுங்க போல அடிக்கடி மாறிட்டு புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்னு சொன்னன்...

Link to comment
Share on other sites

ம்ம் பிடிக்கிற பாட்டுகள் அடிக்கடி மாறும் பருவாயில்லையோ? ஜ மீன் பாட:டகளும் பொண்ணுங்க போல அடிக்கடி மாறிட்டு புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்னு சொன்னன்...

ம்ம்ம்...சுண்டல் அண்ணா விளங்குது விளங்குது :o ..."ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பொருள் இருக்கு" உதுவும் நல்ல பாட்டு தானே சுண்டல் அண்ணா :( ..ம்ம் பாட்டு மாறலாம் பாருங்கோ ஆனா பொண்ணுகள் மாற்றுறதை பற்றி நேக்கு தெரியாது :) ..இப்படியான நல்ல விசயம் எல்லாம் எனி உங்களிட்ட தானே நான் படிக்க வேண்டும் பாருங்கோ... :wub:

ஜம்மு பேபி பஞ்-

"பாட்டு மாறலாம் ஆனா நெஞ்சில இருக்கிறவா மாற கூடாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுண்டலின் சுண்டல்: பொண்ணும் பாட்டும் ஒன்னு கண்ணா அப்பப்ப புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்....

Link to comment
Share on other sites

சுண்டலின் சுண்டல்: பொண்ணும் பாட்டும் ஒன்னு கண்ணா அப்பப்ப புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்....

ஜம்மு பேபி பஞ்-

கண்ணா பாட்டுக்கள் பலவரலாம் வந்து போகலாம் :o ஆனா நெஞ்சில ஒரு பாட்டு மட்டும் தான் எப்பவுமே இருக்கும் :wub: அது தான் உண்மையான பாட்டு மிச்சம் எல்லாம் காதால கேட்டு விட்டு போற பாட்டு... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இது பிடிச்சிருக்கு ஒரு பாட்டு மட்டும் தான் நெஞ்சில இருக்கனுமு; மிச்சமெல்லாம் அப்பப்ப கேட்டுட்டே ஜ மீன் கேட்டு போகணும் தாங்ஸ் நைனா...

Link to comment
Share on other sites

இது பிடிச்சிருக்கு ஒரு பாட்டு மட்டும் தான் நெஞ்சில இருக்கனுமு; மிச்சமெல்லாம் அப்பப்ப கேட்டுட்டே ஜ மீன் கேட்டு போகணும் தாங்ஸ் நைனா...

ம்ம்ம்...நெஞ்சில இருக்கிற பாட்டு தான் கடைசி வரை வரும் என்ன சுண்டல் அண்ணா விளங்கிச்சே <_< ...கேட்டு போட்டு போற பாட்டு எல்லாம் அப்படியே போயிடும்... :huh:

சிட்டுவேசன் சோங் சுண்டல் அண்ணாவிற்கு-

"நெஞ்சுகுள்ளே இன்னாரேன்று சொன்னா புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா" <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா இந்த வரிகளை கொஞ்சம் கேட்டீங்கள் :( என்றா எல்லாம் விளங்கும் நேக்கு இந்த வரிகள் நல்லா பிடிக்குமே... <_< (பிறகு கேட்கிறதில்லை யார் மனதில என்று நான் பேபியாக்கும் :D )...இதை கேட்டா உங்க டவுட் எல்லாம் கிளியர் ஆகிடும் பாருங்கோ :( ...எத்தனை பாட்டுக்கள் வந்து போனாலும் மனதில் நிற்பது ஒரே பாடல்...விளங்கிச்சே... :D

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் துங்காபி சந்தியில நின்டு கொண்டு நேற்று கேட்ட பாட்டு சந்தியில நிண்டு கேக்க நல்லா தான் இருந்தது நைனா....

Link to comment
Share on other sites

ம்ம் துங்காபி சந்தியில நின்டு கொண்டு நேற்று கேட்ட பாட்டு சந்தியில நிண்டு கேக்க நல்லா தான் இருந்தது நைனா....

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா :rolleyes: ...இப்ப தான் நம்ம வழிக்கே வந்திருக்கிறியள் பாருங்கோ...சிலதுகளை சந்தியோட விட்டிட வேண்டும்.. :lol: .இப்ப விளங்கிச்சே..(நம்மளுக்கேவா :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கண்டிப்பா அத தானே நாம செய்யிறம் சந்தியோட விட்டுவம்ல....

சந்தியோட விட்டா நல்லது தான் அது சரி அது என்ன "நாம" இதுகுள்ள எல்லாம் என்னை கூட்டு சேர்கிறதில்லை :wub: அடி வாங்கக்க தனிய தான் அடி வாங்க வேண்டும் சொல்லிட்டேன்.. :lol: (என்ன தான் கத்தினாலும் அந்த பக்கம் வரமாட்டேன் சொல்லிட்டேன் :rolleyes: )...வேண்டும் என்றா அடிவிழுறதை பார்பேன் பாருங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.