Jump to content

காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும்


Recommended Posts

காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும்

[14 - February - 2008]

சபேசன் (அவுஸ்திரேலியா)

Valantine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற `காதலர் தினம்' இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப்படுத்தப்பட்ட பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த 2008 ஆம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்!.

Valantine தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால் பலவிதமான தகவல்களை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவற்றில் பல உறுதிப்படுத்தப்படாமல் செவி வழித் தகவல்களாகவும் இருக்கின்றன. சில உறுதிப்படுத்தப்பட்டு ஆவணங்களாகவும் உள்ளன. இவை குறித்துச் சுருக்கமாக ஆய்வதோடு, உலகின் பல இனங்களையும் நமது தமிழினம் உட்பட இக்காதலர் தினம் அல்லது இந்தக் காதல் எவ்வளவு பாதித்துள்ளது அல்லது பாடுபடுத்தியுள்ளது என்பதையும் நாம் குறிப்பிட விழைகின்றோம்.

ரோம் நகரத்தில் கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டளவில் மத நம்பிக்கையற்ற சடங்காகக் காதலர் தினம் உருவாகியது என்று பலர் கருதுகின்றார்கள். ஆட்டு மந்தைகளையும் அவைகளின் இடையர்களையும் தொடர்ந்து ஓநாய்கள் தாக்கி வந்தமையால் இந்த இடையர்களின் நல்வாழ்வு கருதி ஒரு சடங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மணமாகாத இளம் பெண்களின் பெயர்களைத் தனித்தனியே சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியில் இட்டு ஒவ்வொரு இளைஞனும் தனக்கென ஒரு சீட்டை எடுப்பான். தேர்ந்தெடுக்கப்படுகின்ற இளம் பெண்கள் தம்மைத் தேர்ந்தெடுத்த இளைஞர்களுடன் ஓர் ஆண்டு காலம் சேர்ந்து வாழ்வார்கள். இந்தச் சடங்கு பெப்ரவரி மாத மத்தியில் நடைபெற்று வந்தது.

இந்த நடைமுறையைப் பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மாற்றியமைத்து சீட்டுகளில் இளம் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாகப் புனிதர்களின் பெயர்களை இட்டு இப்புனிதர்களின் பெயர்களைத் தெரிவு செய்யும் இளைஞர்கள் இப் புனிதர்களைப் போலவே வாழ வேண்டும் என்று விதிமுறையைக் கொண்டு வந்தன .இந்தப் புதுமுறை வெற்றியளிக்கவில்லை.

Valantine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன. பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக உள்வாங்கப்பட்டிருக்கலாம் . புனித வலன்டைன் என்கின்ற கிறிஸ்தவப் பாதிரியார் செய்து வந்த பிரசாரம் காரணமாக மக்கள் இராணுவத்தில் சேரவேயில்லை என்றும் இதனால் ,கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ் என்பவர் வலன்டைன் பாதிரியாரைச் சிறையில் அடைத்ததன் விளைவாகச் சிறையில் வலன்டைன் பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது. பாதிரியார் இறந்த விதம் குறித்தும் பல உப கதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்குத் துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி வைத்தபடியால் அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக அறியப்பட்டார். பின்னாளில் `புனித வலன்டைன் தினம்', `காதலர் தினமாக' அறியப்பட்டது.

இதேவேளை, பெப்ரவரி 14 ஆம் திகதியில் தான் பறவைகள் இன விருத்தியில் ஈடுபட ஆரம்பிக்கின்றன என்று பொதுவாக ஐரோப்பியர்கள் நம்புவதுண்டு. இது குறித்துக் கவிதைகள் பலவும் உண்டு. தவிரவும் Saint Valantine's தினம் குறித்துச் சேக்ஸ்பியரும் குறிப்பிடுகின்றார்.

சீனர்களின் பண்பாட்டில் கூட காதலர்தினம் முக்கிய இடம் வகிக்கின்றது. The Night of Seven என்று அழைக்கப்படும் இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் மாதம் ஏழாம் திகதியன்று கொண்டாடப்படுகின்றது. ஜப்பானியர்களின் பண்பாட்டில் சூரியக் காலக் கணக்கின்படி ஜூலை ஏழாம் திகதியன்று காதலர் தினம் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பிரேஸில் நாட்டில் ஆண் நண்பர் பெண் நண்பர் என்ற பெயரில் ஜூன் 12 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொலம்பியா நாட்டில் செப்டெம்பர் மாதத்து மூன்றாவது வெள்ளிக்கிழமையிலும் நட்பு மற்றும் காதலர் தினம் என்ற பெயரில் காதல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இத்தகவல்கள் எடுத்துக் காட்டாகத் தரப்படுகின்றன.

இவையெல்லாம் இருக்கட்டும். தமிழர் வாழ்வில் `காதலர் தினம்' என்ற ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் `காதல்' என்ற ஒன்று இல்லையா? என்று விதவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் காதலர் தினத்தைப் பழித்தும் இகழ்ந்தும் பேசி வருவதோடு, அது வெள்ளைக்காரனின் பண்பாடு என்று ஒதுக்கித் தள்ளுவதையும் இன்று நாம் பார்க்கின்றோம். காதலர் தினம் உண்மையில் மேல்நாட்டுப் பண்பாடா? தமிழன் எப்போதும் பேசித்தான் திருமணம் செய்தானா? தமிழனுக்கும் காதலுக்கும் காத தூரமா? என்றெல்லாம் கேள்விகள் எம்மவர் மனதில் எழுந்து கொண்டுதான் உள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில் காதலர் தின விடயத்தில் மேல்நாட்டவனுக்குத் தமிழன் அப்பனல்ல, பாட்டனுமாவான்! அந்த அளவிற்குக் காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன்தான் தொல்தமிழன்! சங்ககால இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும் காதலும் காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப் பார்ப்போம்!

தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான பொருள் இலக்கியம், அகம் -புறம் என்கின்ற இரண்டு தனிக் கூறுகளைக் கொண்டது. இந்த இரண்டு திணைகளைப் பற்றிக் கூறுகின்ற பொருள் இலக்கண- இலக்கிய நூல்கள் தமிழ்மொழி தவிர, உலகின் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. இந்தப் பொருள் இலக்கண - இலக்கிய நூல்கள் தமிழரின் சமுதாய வாழ்வை அணுகி, நுணுகி ஆய்ந்து எழுதப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், அகம் - புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது `ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்து பிறந்த பேரின்பம்...' என்று தான் அவர் ஆரம்பிக்கின்றார். சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் - கணவன் - மனைவி- உறவு என்பன அகம் எனப்படும். குடும்பத்தின் புறம் சார்ந்த கடமைகளான கொடை, வீரம், போர், ஆட்சி என்பன புறம் எனப்படும். அகப் பொருளின் பாடு பொருள், ஆண், பெண் என்னும் இருபாலரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. உடைமையது இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானர்ந்து வரு உம் மேவற்றாகும்

-தொல்காப்பியம் பொருளதிகாரம்-நூற்பா 27

உலக மக்களின் இனப்பெருக்கத்திற்கும் உலக வாழ்வின் பண்பு மேம்பாட்டிற்கும் வழி வகுக்கின்ற அகப்பொருள் சங்க இலக்கியப் பாடல்களில் சிறப்பிடம் பெறுகிறது. 2,381 சங்க இலக்கியப் பாடல்களில், 1,862 பாடல்கள் அகத்தினைப் பற்றிக் கூறுகின்றன. சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் 378 புலவர்கள் அகப்பொருளைப் பாடியவர்கள் ஆவார்கள். இதன் மூலம் சங்கக் காலத்துச் சான்றோர் அகப்பொருள் இலக்கியத்திற்குத் தந்த சிறப்பையும் முதன்மையையும் நாம் அறியக்கூடியதாகவுள்ளது. மகன் - தாய் - அண்ணன்- தம்பி ஆகியோரிடத்து ஒவ்வொரு நிலையிலும் அன்பு என்னும் காதல் காட்டப்படுகின்றது. குறுந்தொகையில் இக்காதல் தலைவன் தலைவியிடத்தும், தலைவி தோழியிடத்தும், செவிலி நற்றாயிடத்தும், தலைவன் பாங்கனிடத்தும், ஒருவர் மற்றொருவரிடத்தும் காட்டுகின்ற அன்பின் விளக்கமாக அமைந்துள்ளது.

தொல்காப்பியத்தில் வருகின்ற கற்பு என்கின்ற இடங்களை ஆராய்ந்தால் அது இல்லறம் என்கின்ற பொருளையே குறிக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவார்கள். பத்துவிதமன திருமணங்கள் சங்க காலத்தில் நடந்ததாக நாம் அறியக்கூடியதாகவுள்ளது.

1. களவு மணம்

2. தொன்றியல் மரபின் மன்றல்

3. பரிசல் கொடுத்து மணத்தல்

4.சேவை மணம்

5. திணைக் கலப்பு மணம்

6. ஏறு தழுவி மணமுடித்தல்

7. மடலேறி மணமுடித்தல்

8. போர் நிகழ்த்தி மணமுடித்தல்

9. துணங்கையாடி மணத்தல்

10. பலதார மணம்

இதில் களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.

களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை , ஒரு நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில் மேற்கொண்டுள்ளார். முதலாவது முன்னோர் கருத்தை ஏற்று மொழிவது. இரண்டாவது தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்த வரையில் அதன் பொருள் விளக்கத்தைத் தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார். ஆகவே, தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள் விளக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.

களவுக் காதல் வாழ்வைப் பல துறைகளாக அமைத்துச் சுவைபடச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமர்ப் பருவமடைந்த எங்கோ பிறந்த தலைவனும், தலைவியும் எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது. இவ்வாறு சந்தித்து மனமொன்றிய காதலர்கள் மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு முன்பு சந்தித்த இடத்தில் சந்தித்து மகிழ்ச்சி கொள்வது `இடந்தலைப்பாடு' என்று அழைக்கப்பட்டது. அந்தக் களவுக் கூடல் தலைவனின் தோழனின் உதவியால் நடைபெறும் என்றால், அது `பாங்கற்கூட்டம்' என்றும் தலைவியின் தோழி வாயிலாக நிகழுமென்றால் அது `பாங்கியற் கூட்டம்' என்றும் வழங்கப்பட்டது .

வேட்கை மிகுதியால் களவுக் காதலர்கள் இரவிலும், பகலிலும் தோழியின் துணையால் சந்தித்து அளவளாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும் காதலர் கூடல் பகற்குறி என்றும் இரவில் நடைபெறும் களவுக் கூடல் இரவுக்குறி என்றும் வழங்கப்பட்டது.

இங்கே ஒரு விடயத்தை வாசகர்கள் கவனிக்க வேண்டும். சங்க காலத்துக் களவுக் காதல் கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. கற்பு என்பதற்கு இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே, அக்களவுக் காதல் புனிதமானது. சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது. போற்றியது. கற்பு வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது. சங்க காலக் களவுக் காதலின் நெறியைக் குறித்து:

`களவொழுக்கம் தூயது, களவுக் காதலர் மன மாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர். களவுக் காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்' என்று ஆய்வாளர் , முனைவர் வ.சு.ப. மாணிக்கம் கூறியதை இங்கே நினைவு கூறுகின்றோம் .

களவுக் காதலர் மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்துதலைப் பற்றிக் கூறுவது கற்பொழுக்கம் ஆகும். அகத்தினைக் கூறும் தூய்மையான அறங்களுள் தலையானது களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையாகும்.

காதல் என்பது இன்பத்துள் பேரின்பம். உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலாரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள் ' என்றும் ஆய்வாளர் முனைவர். வ.சு.ப.மாணிக்கம் குறிப்பிடுகின்றார்.

காதலால் ஒருமித்துச் சேர்ந்து வாழ்ந்தவர்களில் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டுப் பிரிவு ஏற்பட்டபோது, அதனைத் தடுப்பதற்காகப் பின்னாளில் திருமணம் என்ற சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

அய்யர் யாத்தனர் கரணம் என்ப"

இங்கே `அய்யர்' என்று சொல்லப்படுபவர்கள் நீங்கள் நினைப்பது போல் பிராமணர் அல்லர்! சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக, பெரியவர்களாக, சான்றோர்களாக அறியப்பட்டவர்களை, ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை `அய்யன்' என்று தொல்காப்பியர் காலச் சமுதாயம் அழைத்தது. அதேபோல `கரணம்' என்பதற்கு அர்த்தம் திருமணச் சடங்காகும்.

அதாவது காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தவர்களது வாழ்வில் பிரிவு வரக்கூடாது என்பதற்காகப் பின்னாளில் ஊர்கூடித் திருமணச் சடங்கை நடாத்தியது. அதன் காரணமாக இல் வாழ்க்கையில் இணைந்தவர்கள் சமுதாயத்திற்கும் பொறுப்பாகவும், அச்சமுதாயம் அவர்களுக்குப் பொறுப்பாகவும் இருக்கின்ற சூழ்நிலை உருவாகியது. எனவே களவு முறையில் தோன்றும் பொய்யையும், வழுவையும் `கரணம்' தடுக்கும் என்றும், தடுப்பதற்காவே கரணத்தை அமைத்தனர் என்னும் கட்டுப்பாட்டுத்தன்மை, தமிழ் சமுதாயத்தில் பின்னர் உருவாயிற்று.

தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்குக் காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார். அறத்துப்பாலையும் பொருட்பாலையும் விட காமத்துப்பாலில் நளினமும், இனிமையும் கூட இருப்பதை வாசகர்கள் அறிவீர்கள்.

(தொடரும்)

thinakural.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையரினின் நிகழ்வை வெக்கமில்லாமல் பின்பற்ற வேண்டும் என்பதை அவுஸ்ரேலிய சபேசன் எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றனர். அவுஸ்ரேலியாவின் காலநிலையை வைத்து தையைப் புத்தாண்டாகக்க கொண்டாட வேண்டும் என்று கட்டுரை எழுதி தைப்பொங்கலின் பெருமையைச் சிதைக்க முனைவதோடு, காதலர் தினம் என்ற மேலைத்தேயரின் நிகழ்வுக்கு வக்காளத்து வாங்கும் விதம்... அருமை... அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. காதலர் தினமும் தமிழரின்ர என்று எழுத ஆரம்பிச்சிட்டேளா...!

ஓஓ.. இந்தியாவில் இந்து முன்னணி எதிர்க்குதெல்லோ.. சோ.. உங்களுக்கு இப்படி எழுத வரும் தானே. :lol:

அண்ணாச்சி சபேசு.. தமிழன் மட்டுமில்ல.. உலகத்தில உள்ள அல்லாத்துக்கும் லவுசு என்ற இனக்கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். அது இல்லாட்டி எப்படி இனத்தைப் பெருக்கிறது..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D:lol: அதுசரி, இனி ஒவ்வொரு காதலர் தினத்திலும் சனத்தொகை கூடப்பொகுதெண்டு சொல்லுறியள். சனத்தொகைப் பெருக்கத்தைப் பாத்துவிட்டு அரசாங்கங்களே இனிக் காதலர் தினத்துக்கு தடை விதித்தாலும் விதிக்கும்.
Link to comment
Share on other sites

30 வருடங்களாக இன அழிப்பை சந்தித்துவரும் தமிழ் இனத்திற்கு ஆரோக்கியமான முறையில் இனப்பெருக்கம் என்ற ஒரு தேவையிருக்கிறது.

உண்மை நிகழ்வுகளை தழுவி எடுக்கப்பட்ட Exodus என்ற படத்தை நம்மவர்கள் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களாக இன அழிப்பை சந்தித்துவரும் தமிழ் இனத்திற்கு ஆரோக்கியமான முறையில் இனப்பெருக்கம் என்ற ஒரு தேவையிருக்கிறது.

உண்மை நிகழ்வுகளை தழுவி எடுக்கப்பட்ட Exodus என்ற படத்தை நம்மவர்கள் பார்க்க வேண்டும்.

30 வருடப் போராட்டத்தில் தமிழர்கள் இழந்தது 80 ஆயிரம் பேரை என்றால் மிகுதி 2920000 இலட்சம் தமிழரும் 80 ஆயிரம் பேருக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு காதலர் தினம் கொண்டாடிக் கொண்டு.. குட்டி போட்டிட்டே இருக்கனும்.. என்றியளோ..!

இதால தாயகத்தில தமிழரின் சனத்தொகையில எப்படி உயர்ச்சி வரும்..???! எப்படி சிங்கள பேரினவாத அழிப்பு தடுத்து நிறுத்தப்படும்..???!

தமிழர்கள் சனத்தொகையில குறைவில்லாத வகைக்கு.. அண்டைய இந்தியாவில் தாராளமாகப் பெருகுகிறார்கள். ஆனால் அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் இப்படிப் பெருகிறவைக்கு குந்த ஒரு இடமில்லை என்றதுதான்...!

காதலர் தினம் கொண்டாட முதல் விடுதலை தினத்தைக் கொண்டாட பாடுபடுங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

என்ற திரைப்படம் பற்றி சில விபரங்கள்:

http://en.wikipedia.org/wiki/Exodus_(film)

http://www.imdb.com/title/tt0053804/

இப்படி ஒரு நிலமை தேவை நோக்கித்தான் எமது போராட்டம் நகர்கிறது.

அனேகமாக நாம் வைக்கோ கருணாநிதி நெடுமாறன் போன்றவர்கள் ஏன் இன்னமும் போகாமல் இருக்கிறார்கள் நாங்கள் உங்கள் தொப்புள் கொடி உறவுகள் எல்லோ எண்டு கேட்பமாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயலும் ஒரு சில புத்திமான்கள் வாழ்க.தைப்பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகைகளை அழித்து விட்டு காதலர்தினம் போன்ற புராதனகாலத்து சிலுமிசங்களை முன்னெடுத்து செல்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காதலர்தினம் உண்மையான காதலுக்குரிய கொண்டாட்டமாகாமல் கள்ளக்காதலுக்குரிய கொண்டாட்டமாவதே உண்மையானதும், வருத்தத்துக்குரியதுமாகின்ற

Link to comment
Share on other sites

ஏற்கனவே இன்னொரு தலைப்பில் எழுதிய அதே கருத்துத்தான். அதாவது காதலர் தினம், அதன் நோக்கம், அதன் பின்னணி, அதன் வியாபாரமயமாக்கல் (கட்டுரையாளரே சொல்லியிருக்கிறார், காதலர் தினம் என்பது வியாபாரப் பின்னணி கொண்ட ஒரு தினமென்று), சரி பிழை என்பதற்கு அப்பால் இன்றைய தினத்தில் தமிழரின் காதல் வாழ்வு பற்றி மீட்டுப் பார்த்திருக்கிறார் கட்டுரையாளர். கட்டுரை தொடரும் என்பதால் வாசிக்க ஆவலாக இருக்கிறேன். தமிழரின் பண்பாடு, வாழ்வியல், அரசியல் என்பவை பல்வேறு ஆதிக்க சக்திகளால் சிதைக்கப்பட்டிருப்பது வரலாறு. அவர்களாலும், அவர்களின் போலித்தனமான கயமைத்தனமான கதைகட்டல்களாலும் சிதைக்கப்பட்ட தமிழரின் வாழ்வியற் பண்பாடு மீட்டெடுக்கப்பட வேண்டும் தமிழை நேசிக்கும், தன்மானமுள்ள, சுயமரியாதையுள்ள தமிழரின் அவாவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்

கட்டுரையாளர் பெப்ரவரி 14ம் திகதி மீட்டுப்பார்க்கின்ற அழகைப் பார்க்கின்றவிதம் தான், அவரின் போலித்தனமான தமிழனப் பற்றைக் காட்டுகின்றது. இந்த இலட்சணத்தில் தமிழன பண்பாட்டு, வாழ்வியல் மீட்பாம். கிழமைக்கு ஒரு கட்டுரை எழுத வேண்டிய விதிக்கு, தமிழனப்பற்றுத் தான் பலபேருக்குக் கிடைத்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக மயமாக்கம்.. உலக வர்த்தக மயமாக்கம்.. இணையத்தொழில்நுட்ப ஆதிக்கம் என்பன பரிசளித்த கீழத்தேசத்துக்கான காதலர் தினம்.. வரும் வரை தமிழர்கள் என்ன புல்லுப் பிடிங்கிக் கொண்டே இருந்தனீங்கள். அப்ப எங்க போனது உங்கட சுயமரியாதை.

ஒருவேளை St. Valentine தாத்தா தொல்காப்பியற்ற கொள்ளுப் பேரனா இருந்திருப்பார். எதுக்கும் சுயமரியாதையோட ஆராய்ச்சி செய்து பார்த்துச் சொல்லுங்கோ..??! :):D

மேற்குலகில் கூட Anti- Valentines day அல்லது single awareness day (http://en.wikipedia.org/wiki/Singles_Awareness_Day) என்பது இந்த காதலர் தினத்தை புறக்கணிக்கிற மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதையும் ஆராய்ஞ்சி... அதையும் தமிழற்ற என்று காட்டுங்கோ. நாலு கட்டுரைகளில வசனங்களைக் கோர்த்துப் போட்டு.. தொல்காப்பியத்தையும்.. புறநானூறையும் அகநானூறையும் அரைகுறையா படிச்சிட்டு அதில இரண்டு வரிகளை அடுத்தவைக்கு விளங்காத்தனமா புகுத்திட்டா சும்மா கட்டுரையை ஆராய்ச்சிக் கட்டுரையா ஓசி இணையங்களில தள்ளி விட்டலாம் தானே. அது சுயமரியாதை.. பகுத்தறிவு.. என்றாகாதோ என்னோ..! :D:)

இப்ப எல்லாம் இணையத்தில ஓசிப் பேப்பர்களில பெரியாள் ஆகனும் என்றால் நல்ல விளம்பரம் கிடைக்கனும் என்றால் புரட்சிவாதியா சமூகத்துக்கு அடையாளம் காட்டனும் என்றால் எடுத்துவிட வேண்டியதுதான் சுயமரியாதை.. பகுத்தறிவு என்று. அங்கினை ஒரு சொட்டுக்கும் அறிவு அறிவியல் என்பது இருக்காது..! :D:D

Link to comment
Share on other sites

காதல்தினமா தமிழருக்கா முன்னைக்காலத்திலயா??????வெட்டுக்கொத்திலையெல்லோ முடிஞ்சிருக்கும்.

Link to comment
Share on other sites

இக் கட்டுரை காதலர் தினத்தை முன்வைத்து தமிழர்களின் காதல் வாழ்க்கையை பேசுகின்ற ஒரு கட்டுரை.

பெரும்பாலான பண்டிகைகள் போன்று காதலர் தினமும் வியாபார நோக்கோடுதான் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இந்து வெறியர்களும், இந்து வெறி அமைப்புக்களும் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு அது காரணம் இல்லை.

காதல் திருமணங்கள் சாதி மாறி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. காதல் திருமணங்கள் அதிகரித்து சாதி ஒழிந்து விடுமோ என்று இந்த மத வெறி அமைப்புக்கள் அஞ்சுகின்றன. அதனால்தான் காதலர் தினத்தை எதிர்க்கின்றன.

குலக் கலப்பு ஏற்படக் கூடாது என்று பகவத்கீதையும் சொல்கிறது.

சாதியை கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் இந்து வெறியர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள். தெரியாத பல தகவல்களை அறியக்கூடியவாறு உள்ளது. பண்டைய தமிழரின் வாழ்வைப்பற்றி ஆராயும் போது எதிர்ப்புகள் கட்டுரைக்கு சம்மந்தமில்லாமல் வரத்தான் செய்யும். அதையும் தாண்டி தமிழில் பற்றுள்ளவர்கள் இந்த தலைமுறைக்கு தமிழரின் அடயாளங்களை எடுத்துக்கூறுவது பாராட்டத்தக்கது. காதலர் தினம் என்றதை சாட்டாகவைத்து தமிழரின் காதல் வாழ்வை ஆராய்வது என்னும் சிறப்பானதாக உள்ளது.

Link to comment
Share on other sites

போற போக்கைப் பார்த்தால், அடுத்ததாக ஓரினச் சேர்க்கை உறவுகளும் எமது பண்டைய நூல்களான அகநானுறு, புறநானூறு போன்றவற்றில் இருந்தன என அடுத்த கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கலாம் போல இருக்கே!!! :o:wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ ஓரினச் சேர்க்கய பத்தி அகநானுறிலயும் புறநானுறிலயும் தேடுறீங்க............................ போய் இந்து மதத்தில தேடுங்கோ எல்லா அயோக்கியத்தனங்களும் காவாலித்தனங்களும் களுசறைத்தனங்களும் இருக்கு................................. ஓரினச் சேர்க்கைய அறிமுகப்படுத்தி வைச்சதே இந்து மதந்தானாமே...................

ஏதோ டமிலாக்கள் மட்டும் புனிதமானாக்கள் மாதிரி கதைக்கக்கூடாது................ சொன்னா ஏத்துக்கொள்ள உங்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாத்தான் ்ருக்கும்.......... பறவால்ல........... சொல்லுறன்-.................. வெளிநாட்டுக்கு ஓடிவந்து தொடக்கத்தில வெள்ளையனின்ர ****** ****** காசு சம்பாதிச்சாக்கள் உங்க ஐரோப்பா வழிய இருக்கினம்................................... கனடாவ பற்றி தெரியலிங்கோ...................... உண்மையா இல்லையா எண்டு விசாரிச்சு பாருங்கோ தெரியும்...................... :o:wub::lol:

சரி சரி உதுக்கும் காதலுக்கும் என்னங்கோ சம்மந்தம்???????????????????????? காதலும் வீரமும் கொண்டதுதானாமே தமிழற்ற வாழ்வாம்................ பிறகேனுங்கோ நீங்கள் இருந்து உருண்டு பிறளுறீங்க............ இந்து மதத்திலதான் கேவலமான உறவுகள் கொண்ட கடவுள் மார் நிறைய பேர் இருக்கினம்............................ அத ஏன் இந்த தலைப்புக்குள்ளயும் வந்து சொருவுறீங்க................ பொழுதுபோகல போல :(

Link to comment
Share on other sites

தலைப்புக்கு ஏற்ற மாதிரித்தான் நான் கருத்தெழுதியிருக்கிறேன். நீங்கள்தான் முழுமையாகப் படிக்காமல் கருத்தெழுதியிருக்கிறீர்கள். பொழுதுபோக்கிற்காகக் கொண்டாடும் ஒரு நிகழ்வைக்கூட, எங்கட பாரம்பரியத்தோடை முடிச்சுப் போட்டதற்குத்தான் நான் எழுதினேன். திரும்ப ஒருக்கா வடிவா எல்லாத்தையும் வாசிச்சுப் போட்டுக் கருத்தை எழுதுங்கோ. <_<<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்புக்கு ஏற்ற மாதிரித்தான் நான் கருத்தெழுதியிருக்கிறேன். நீங்கள்தான் முழுமையாகப் படிக்காமல் கருத்தெழுதியிருக்கிறீர்கள். பொழுதுபோக்கிற்காகக் கொண்டாடும் ஒரு நிகழ்வைக்கூட, எங்கட பாரம்பரியத்தோடை முடிச்சுப் போட்டதற்குத்தான் நான் எழுதினேன். திரும்ப ஒருக்கா வடிவா எல்லாத்தையும் வாசிச்சுப் போட்டுக் கருத்தை எழுதுங்கோ. <_<<_<

:huh: நீங்க முழுசா வாசிச்ச திறம் தான் தெரியுதே...................

காதலர் தினத்தையும் உங்கட பாரம்பரியத்தையும் முடிச்சுப்போட்டு எழுதியிருக்ற ஒரு இடத்த சொல்லுங்கோவன்............... நானும் தெரிஞ்சுகொள்ளுறன்............. :wub::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் என்றால் என்னங்கோ?ஒரு குறிப்பிட்ட நாளை காதலர் தினமாக தமிழர் கொண்டாடுவதை எற்றுக்கொள்ளமுடியாது பாருங்கோ....ஏன் என்றால் ஒவ்வொரு நாளயும் காதலர் தினமாக கொண்டாடுபவன் தமிழன் அப்படி வாழ்ந்த தமிழனை ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் கொண்டாடு என்று சொல்வது வன்மையாக கண்டிக்கபடவேண்டியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரை காதலர் தினத்தை முன்வைத்து தமிழர்களின் காதல் வாழ்க்கையை பேசுகின்ற ஒரு கட்டுரை.

பெரும்பாலான பண்டிகைகள் போன்று காதலர் தினமும் வியாபார நோக்கோடுதான் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இந்து வெறியர்களும், இந்து வெறி அமைப்புக்களும் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு அது காரணம் இல்லை.

காதல் திருமணங்கள் சாதி மாறி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. காதல் திருமணங்கள் அதிகரித்து சாதி ஒழிந்து விடுமோ என்று இந்த மத வெறி அமைப்புக்கள் அஞ்சுகின்றன. அதனால்தான் காதலர் தினத்தை எதிர்க்கின்றன.

குலக் கலப்பு ஏற்படக் கூடாது என்று பகவத்கீதையும் சொல்கிறது.

சாதியை கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் இந்து வெறியர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்.

தமிழ் உணர்வு என்றும், சித்திரை, தீபாவளி தமிழரில்லை என்றும் அதைக் கொண்டாடக் கூடாது என ஒப்பாரி வைத்த இந்த சபேசனும் அதை ஆதரிப்பார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

சாதியத்தை வைத்துப் பிழைப்பு ஓட்டுகின்றவர்கள் யார் என்பதை, பிரான்ஸ், பிரித்தானியா போன்றவற்றில் நடந்த திராவிடப்பற்றாளர்களின் கூத்துக்கள் பதில் சொல்லும்.

இந்து மதத்தவர்கள் நடக்கின்றதற்கு எதிராக நடக்க வேண்டும் என நடக்கின்ற இவர்களுக்கு என்றைக்குமே தமிழர்வுணர்வோ, மொழிப்பற்றோ இருந்ததில்லை. அது சுத்த ஏமாற்றுத்தனமே.

இந்துக்களுக்கு எதிராகக் கத்தல் போடுவதே இவர்களின் பிழைப்பு.

----------------------

காதலர் தினம் கொண்டாடுவது பெற்றமகளை விபச்சாரத்திற்கு அனுப்புவது என இதிலும் ஒரு அரிய வாக்கியத்தைப் பூனைக்குட்டியக்கா எழுதுவார் என எதிர்பார்த்தேன். காணக்கிடைக்கவில்லை. அவர் படிக்கின்ற மனவியலில் இது இல்லை போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்துக்கள் தான் கள்ளக் காதல அறிமுகப்படுத்தினம்................ இந்துக்கள் தான் ஓரினச் சேர்க்கைய அறிமுகப்படுத்தினதும்................. இந்துக்கள் தான் 5 ஆண்களோட ஒரு பெண் குடும்பம் நடத்துற அறிமுகப்படுத்தினதும்......... இந்துக்கள் தான் இதுமாதிரியான சில்மிச வேலையளின்ர முன்னோடியள்.............................

இதுகளுக்கும் தமிழங்கள் தான் முன்னோடியள் எண்டால் ................... பிறகு இந்துக்களுக்கு கோவம் வந்திடும்............................. ஏற்கனவே சாமத்திய சடங்கு எண்ட விபச்சார கொண்டாட்டத்த நடத்துறத இந்து மதச் சடங்கெண்டுகினம்................ தமிழற்ற காதல் வாழ்வையும் அப்பிடியான ஒண்டாத்தான் பிறகு புரிஞ்சுகொள்ளுவினம்............. பாவம் பேசாம விடுங்கோ :D

இது புதுவகையான உளவியல் பிரச்சனையா இருக்குது............. சமஸ்கிருதத்தில ஏதாவது நல்ல விளக்கம் இருக்கும்........................... ஏனெண்டால் சமஸ்கிருடம் ஆதி மொழி.................. தமிழ விட நிறைய நல்ல அறிவியல் விசயங்கள் இருக்கிற மொழி.................... கடவுளின்ர மொழி.................... தேடிப்பாத்தா ஏதாவது வழி கிடைக்கும்.................. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் புலம்பலுக்கு குறைச்சலில்லை பூனைக்குட்டியக்கா.

இதைப் பற்றிப் பல தடவை தளத்தில் விவாதித்தாகி விட்டது. விபச்சாரம், பலதாரத்திருமணம் அறிமுகப்படுத்தினது இந்து மதம் என்றால் அதை எதிர்க்கின்றதாகக் காட்டிக் கொண்ட திராவிடக்காரர்கள் ஒன்றுக்கு 4, 5 மனுசி மார், ஊர் முழுக்க வைப்பாட்டிகள், கிழட்டுவயத்தில் இளம் பெண்ணைக் கட்டி வெறியைப் போக்கியது எல்லாம் இதுக்குள்ள அடங்கவில்லையா? இந்து மதத்தை எதிர்க்கின்றவர்கள் எனச் சொல்பவர்கள் , பார்ப்பானி வேட்டிகட்டினால் கோவணத்தைக் கூட கட்டாதே என்று புலம்பினவர்கள் இதுகளை வைத்துக் கொண்டதைப் பார்க்க, சடைக்கண்ணால் இந்து மதத்தில் பற்றுக் கொண்டிருந்ததை என்றல்லோ தோணுது.

சில குறுக்காலபோனதுகள் பெயரைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக வேற பெயரைப் பாவிக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D பாவப்பட்ட இந்துதுதுதுதுதுதுதுதுதுதூ மதத்த பத்தி சொன்னால்................... உடன திராவிடத்த தூக்கிற என்னெண்டு சொல்லுறது.................................. எல்லாம் ஒருவகையான :D சரி பறவால்ல............... பாத்து பத்திரமா :o
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.