Jump to content

தமிழர் என்பதனால் மாணவியை பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுப்பு


Recommended Posts

சிறிலங்காவில் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆவதாக உயர்புள்ளி பெற்ற மாணவிக்கு தமிழர் என்ற காரணத்தினால் பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாணவியின் பெயர் நேத்மி யோகேந்திரா! இந்த பொண்ணு உண்மையிலே தமிழர் என்றால் அவர் ஏன் தனது பெயரை யோகேந்திரா என மாற்ற வேண்டும்? யோகேந்திரன் தானே தமிழ் பெயர்? விசாகா என்பது சிங்கள மொழி மூலம் மட்டுமே கற்ப்பிக்கபடும் பாடசாலை. இலங்கையின் சுய பாஷா சட்டத்தின் படி தமிழர் தமிழில் மட்டும், சிங்களவர் சிஙளத்திலும் மட்டுமே கற்க்க முடியும். முசுலீம்கள் விரும்பிய மொழியில் கற்க்கலாம்.

நான் நினைக்கிறேன் இந்த "சிங்களவராக தன்னை காட்டி கொள்ள விரும்பிய தமிழ் பெண்" இதுவரை எப்படியோ சிங்க்களத்தில் படித்து 5ம் வகுப்புவரை வந்திருக்கவேண்டும்.

இப்போது விசாகாவுக்கு போனதும் விசயம் பிடிபட்டுள்ளது.

தமது சுயத்தை மறைத்து சிங்களராக, பெயர் மாற்றுபவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

நீங்கள் உங்களை முயற்ச்சித்து சிங்களவர் போல காட்டிக்கொண்டாலும் அவர்கள் உங்களை தமிழராகவே பார்ப்பர்.

இதுக்கு யாழும் புதினமும் வேற முக்கியதுவம் தாறதுதான் வேதனை. வன்னியிலும் திருமலையிலும் தமிழில் பெயர் வைத்த தமிழ் பிள்ளையள் எத்தனியோ வாழ வயில்லாமல் சாகுதுகள் அதப்பற்றி எழுதலாமே?

Link to comment
Share on other sites

இந்த மாணவியின் பெயர் நேத்மி யோகேந்திரா! இந்த பொண்ணு உண்மையிலே தமிழர் என்றால் அவர் ஏன் தனது பெயரை யோகேந்திரா என மாற்ற வேண்டும்? யோகேந்திரன் தானே தமிழ் பெயர்?

சர்வேந்ததிரா யோகேந்திரா ராஜேந்திரா என்றும் யாழ்ப்பாணத்தில் பெயர் வைப்பதுண்டு. தமிழ் பெயர் என்றதும் ஞாபகம் வருகிறது. ஒரு தமிழக எழுத்தாளருடன் பிராங்பேட் விமான நிலையத்தில் நின்றேன். அறிவித்தல்களில் தமிழரது பெயர்கள் வந்துகொண்டிருந்தது. சேகர், மணிவண்ணன் போன்ற ஒரு சில பெயர்களைத்தவிர ஏனைய அனைத்துப் பேர்களும் சந்தேகத்துக்கிடமில்லாமல் இலங்கைத் தமிழர்களது பெயர் என்று சொன்னார். எப்படி என்று கேட்டேன். இலங்கைத் தமிழர்கள்தான் எண் சாதிரம் பார்த்து சமஸ்கிரதம்போல திரிந்த அர்த்தமற்ற பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள் என்றார். தமிழர் விடுதலை தனித் தமிழ் பற்றி பேசும் பல ஐரோப்பிய கனடா தமிழர்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போதுதான் அவர்களது தமிழ் பற்று எவ்வளவு போலியானது என்று தெரிகிறது என்று சொன்னார். நான் அவரது கருத்தை ஏற்க்க மறுத்தாலும் வலிய பதில் ஒன்றும் என்னிடம் இருக்கவில்லை. அதுசர் மீ தமிழனது பிள்ளைகளின் பெயர் என்ன என்று கேட்கலாமா? கோபிக்கவேண்டாம் எண்சோதிடம் ஒரு மன நோய் மட்டத்துக்கு நம்மவர் மத்தில் தீவிரப்பட்டு பரவிவருகிறது. நாங்கள் இதுபற்றி சிந்திப்பது நல்லது.

Link to comment
Share on other sites

பொயற் தாயகத்திலோ புலத்திலோ பெயர்கள் வைக்கப்படும்போது எண் சோதிடம் பார்த்து ஒரு பகுதியினர் என்றால் மற்றொரு பகுதியினர் ஸ்டைலுக்காவும் அர்த்தமற்ற பெயர்கள் மாத்திரமல்ல அசிங்கமான அர்த்ததுடனான பெயர்களும் வைக்கப்படுகின்றன.

தமிழகத் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஈழத்தமிழர்கள் தமிழ் அல்லாத பெயர்களைச் சூட்டுவதில் நீண்டகாலமாக தீவிரம் காட்டுகின்றனர். தாயகத்தில் தமிழீழ நிதித்துறையின் சில முயற்சிகளின் சலுகைகளின் பின்னர் சில ஆயிரம் குழந்தைகளிற்கு தூய தமிழ்பெயர்கள் அண்மைய ஆண்டுகளில் சூட்டப்பட்டிருக்கின்றன. சூட்டப்பட்டு வருகின்றன. புலத்தில் விரவிட்டு எண்ணக்கூடியவர்களே தமிழ்பெயர்களில் நாட்டம் காட்டுகின்றனர்.

மீ தமிழன் அண்ணை அந்த மாணவியின் பெயரும் தமிழில்லை, தந்தையின் பெயர் யோகேந்திரா எண்டாலும், யோகேந்திரன் எண்டாலும் தமிழில்லை. தமிழிலில்லாத பெயரை அவர்கள் எப்படி மாற்றினாலென்ன?

Link to comment
Share on other sites

யோகேந்திரா துரைசாமி என்ற தமிழரின் பெயருள்ளது ,யோகேந்திரா என்பது தமிழ் பெயராக இல்லாத போதும்.ஆகவே மேற்கூறியாவரின் பெயரும் இருக்கலாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயர் எதுவாயினும் சிங்கள மொழிமூலம் படித்தனினால் தானே விசாகாவுக்கு போகவேண்டி வந்தது? தமிழர் சிங்களத்திலும் சிங்களவர் தமிழிலும் படிக்க கூடாது என்று சட்டம் சொல்லும் போது இவர் மட்டும் எப்படி 5ம் வகுப்புவரை சிங்களத்தில் படித்தார்? நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறுதர்க்காக இன அடையாளத்தை மாற்றிய கேஸ்தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போயற் சொல்வது போல பலபேர் பேரை சுருக்கி வெள்ளை படுத்தீனம்.

ஈஸ்வரன் Warren ஆவதும், சிவதரன் Darren ஆவதும் மார்க்கண்டு Mark ஆவதும்...சொல்லி வேலைஇல்லை.

இதுகளிட்டை ஒருக்கா கேக்கோணும்

"ஏனப்பு உனக்கு வெள்ளைகாரனே அப்பன்?" :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் 96 காலப்பகுதியில் கொழும்பிலைதான் புலமைப்பரிசில் எழுதி படித்த பாடசாலையில் 4வது இடம் வந்தனான். அப்பொழுதும் இதே மாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது.. அந்த பரிட்சையில் சித்தி பெற்றதற்கு எனக்கு உதவிப்பணம் தரவேண்டும். அதற்கு நான் இருந்த கொட்டகேன விதானையிடம் போய் கையெழுத்து வாங்கவேண்டும். அங்க அவன் சொன்னான் உங்களுக்குதானே பிரபாகரன் இருக்கிறார் அவரிட்டைபோய் கையெழுத்து வாங்கிகொண்டு வா என்று.. பிறகு என்ன.. அது அவ்வளவுதான்.. எனக்கு அந்த உதவிப்பணம் கடைசிவரை கிடைக்கவேயில்லை..

Link to comment
Share on other sites

இந்த விடயத்தை செய்தியாக்கிய புதினம் கூட அடிப்படை உண்மையை மறைத்து தமிழர்களை உருவேற்றி விட நினைக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் அப்படியொன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை புதினம் எப்போது உணரப்போகின்றதோ??

Link to comment
Share on other sites

இந்த விடயத்தை செய்தியாக்கிய புதினம் கூட அடிப்படை உண்மையை மறைத்து தமிழர்களை உருவேற்றி விட நினைக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் அப்படியொன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை புதினம் எப்போது உணரப்போகின்றதோ??

சிங் சாங் சிங் சாங் வசம்பு அண்ணா என்ன சொல்லுறிங்கள்? :o

Link to comment
Share on other sites

விசாகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் வசதி உள்ள்ளது.பம்பலப்பட்டி இந்துகல்லூரியிலும் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் வசதி உள்ளது

Link to comment
Share on other sites

உதுக்கெல்லாம் நீதி கேட்டு ஆராட்சி மணி அடிச்சா... எந்த நாழும் சாகிற எங்கடசனம் எந்தமணியை அடிக்கிறது?

தமிழ் மொழி அமுலாக்கலின் சீத்துவம் தெரியாத ஆக்களுமில்லை ஊருமில்லை... உந்த கேவலத்தில மாகளுக்கு சிங்கள பாடசாலைல இடம் தரேல்லை எண்டு தமிழ் உணர்வை சீண்டிப்பாக்கிறது... சரியாப்படேல்ல.

விசாக இல்லாட்டா இன்னமொண்டு... சிங்களத்தில படிக்கிறெண்டு முடிவெடுத்தாபிறகு பாடசாலைக்கா பஞ்சம்? விசாகா தான் வேண்டுமெறு அடம்பிடிக்க கூடாது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.