Jump to content

லிங்காஷ்டகம்


Recommended Posts

பிரம்மமுராரி சுரார்சித லிங்கம் ... என்னும் லிங்காஷ்டகம் யாரிடமாவது ஒலிவடிவில் இருகிறதா???

யாருக்கும் அந்த சுலோகங்களின் பொருள் தெரியுமா?? தெரிந்தவர்கள் கூறுவீர்களா?

நன்றி ...

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

கவரிமான், கீழுள்ள தளத்தில் பாருங்கள்.

தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்

சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்

பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்

காமனை எரித்த கருனா லிங்கம்

ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்

வளர் அறிவாகிய காரண லிங்கம்

சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்

தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்

தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்

பங்கஜ மாலையை சூடிய லிங்கம்

முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்

தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்

சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்

எல்லாம் ஆகிய காரண லிங்கம்

எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்

தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்

பரமண அதணாய் பரவிடும் லிங்கம்

நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்

சிவ சந்நிதியில் சொல்வார்

சிவலோக காட்சியுடன்

சிவன் அருளும் கொள்வார்கள்.

http://spbdevo.blogspot.com/2007/07/blog-post_12.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு.

கேட்ட கவரிமானுக்கும், போட்ட நுனாவிலானுக்கும் நன்றி.

5ம் பந்தி -- 3வது வரி : முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்.

8ம் பந்தி -- 3வது வரி : பரமண அதணாய் பரவிடும் லிங்கம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் அருமையானவோர் முயற்சியாகும். சமஸ்கிருத சுலோகங்கள் தமிழில் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளமை பாராட்டத் தக்கது.

இதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது.

பொதுவாக கிறிஸ்தவப் பிரார்த்தனைகளின் போது அன்றைக்குப் பாடப்படப்போகும் பாடல்கள் வாசிக்கப்படப்போகும் பைபிள் வசனங்கள் போன்றவற்றை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு அனைவரிடமும் கொடுக்கும் வழக்கமுண்டு.

அவ்வாறே இந்துக் கோயில்களிலும் சொல்லப்படவுள்ள சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயநிர்வாகம் அச்சிட்டு வழங்கினால் பூஜையின்போது பக்தர்கள் சொல்லப்படும் மந்திரங்களில் முழுமையாக ஒன்றித்து வணங்க ஏதுவாக இருக்கும்.

இந்த நடைமுறையைப் பரவலாக்கி கோயில்களெங்கும் செய்யும்போது தற்போது புரியாத மொழியில் அர்ச்சனை செய்கிறார்களென்ற பிரச்சனை அடியோடு மறைந்து போவதோடு எதிர்காலத்தில் தமிழ்மக்கள் வடமொழியிலும் நன்கு பரிச்சயமடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இது பெரிய கடினமான வேலைபோல் தோன்றவில்லை. ஆலயநிர்வாகிகள் மனது வைத்தால் இலகுவில் நடைமுறைப்படுத்தலாம்.

இருமொழியிலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வழிபாடுகள் நடைபெறும்போது பக்தியுணர்வும் உச்சமடையும் வாய்ப்புக்களுள்ளன.

யாராவது செய்யத் தொடங்குவார்களா? இது எனது ஐடியா.

Link to comment
Share on other sites

இது மிகவும் அருமையானவோர் முயற்சியாகும். சமஸ்கிருத சுலோகங்கள் தமிழில் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளமை பாராட்டத் தக்கது.

இந்துக் கோயில்களிலும் சொல்லப்படவுள்ள சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயநிர்வாகம் அச்சிட்டு வழங்கினால் பூஜையின்போது பக்தர்கள் சொல்லப்படும் மந்திரங்களில் முழுமையாக ஒன்றித்து வணங்க ஏதுவாக இருக்கும்.

இந்த நடைமுறையைப் பரவலாக்கி கோயில்களெங்கும் செய்யும்போது தற்போது புரியாத மொழியில் அர்ச்சனை செய்கிறார்களென்ற பிரச்சனை அடியோடு மறைந்து போவதோடு எதிர்காலத்தில் தமிழ்மக்கள் வடமொழியிலும் நன்கு பரிச்சயமடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இது நல்ல யோசனை! அப்படி செய்தால் கோவில்களில் தப்பு தப்பாக மந்திரம் சொல்லி ஏமாற்றும் சில பிறவிகளும் திருந்த வாய்ப்பு வரும்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம்.

மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.

இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் *** இந்துக்கள்.

கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

Link to comment
Share on other sites

அண்ணை பகுத்தறிவு,

எனக்கு ஒரு கயானீஸ் நண்பன் ஒருத்தன் லிங்கம் என்ன எண்டு நீங்கள் சொன்ன அர்த்தத்தில் முன்பு ஒருக்கால் சொன்னான். அவன் கூட பகிடிக்குத்தான் அப்படி சொன்னான் எண்டு நான் நினைச்சன். ஆனால்.. நீங்கள் இவ்வளவு தூரம் ஆராய்ஞ்சு சொல்லி இருக்கிறீங்கள். இது உண்மையோ பொய்யோ எண்டு யாராவது விசயம் தெரிஞ்ச ஆக்கள் தான் சொல்லவேணும்.

இந்து மதம் எண்டுறது வெறும் சிவலிங்கம் மட்டும் இல்ல. நீங்கள் சொன்னமாதிரி ஆயிரம் அர்த்தத்தில பலர் இந்து மதத்தை மாத்திரம் இல்ல எல்லா மதங்களையும் கிண்டல் அடிப்பீனம்.

நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு கூடாத விசயங்களை கழித்துவிடுதலே போதுமானது. ***

Link to comment
Share on other sites

லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் ???!!! :mellow::(:D

பகுத்தறிவாளரே இதுவா நம் கேள்விக்கு பதில் என்று கேட்டு விடாதீர்கள்! வெட்டிய இடத்தில் தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிங்காஷ்டகம் ஒளி வடிவிலும் ,பாலசுப்பிரமணியத்தின் குரலிலும் கேட்கும் போது மனதில் இனம் புரியாத புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிங்கம் பற்றி புராணத்தில் இருப்பதை எழுதியிருக்கிறார்கள். :mellow: இன்னும் பல கடவுள்கள் செய்தவற்றைப் பற்றி புராணங்கள் சொல்வதை பார்க்கத்தானே போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொல்லாத ஒன்றை இவர் புதுசாகச் சொல்லப் போகின்றாராம். புராணக்கதைகள் பக்தியின் வெளிப்பாடு அல்ல என்பது பற்றிப் பல விவாதங்கள் நடந்தாகி விட்டது.

Link to comment
Share on other sites

லிங்கம்

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம்.

மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.

இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் *** இந்துக்கள்.

கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

அருமையான தகவல் தோழர். பதிவுக்கு நன்றி! :D

பெண்கள் எல்லாம் சிவலிங்கத்தை இனி வழிபடும் முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதம் செய்வதும்.. உட்பொருளை அறியும் ஞானமின்மையுமே.. இங்கு சமயம் சார்ந்த பகுத்தறிவாகி நிற்கிறது. இவை பகுத்தறிவல்ல.. படிக்காதறிவு..!

சிவலிங்கம் என்பதன் உண்மைப் பொருள்..

மூலவர் :

கருவறையில் உள்ள சிவலிங்கமே மூலவர்.லிங்கம் என்பது ஓர் அடையாளமே.லிங்கம் என்பதை லிம் + கம் எனப் பிரிப்பர். லிம் என்றால் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்றும் கம் என்றால் ஒடுங்கிய பொருள் மீண்டும் தோன்றுமிடம் என்றும் பொருள்.காண முடியாத இறைவனைக் காணும் ஒரு அடையாளமே சிவலிங்கம்.

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம் என்றும், ஆவுடையார் (நடுப்பாகம்) விஷ்ணுபாகம் என்றும், பானம் (மேல் குவளை) ருத்ரபாகம் என்றும் அழைப்பர். சிவலிங்கம் பல வகைப்படும்.தானே தோன்றியது சுயம்புலிங்கம். விநாயகர், ராமன், முருகன் போன்ற கணங்களால் ஸ்தாபிக்கப்பட்டது கணலிங்கம். இருடிகள் ஸ்தாபித்தது தைவீக லிங்கம், மனிதர்கள் செய்து வைத்தது மானுடலிங்கம் எனப்படும்.

சிவலிங்கத்தை வழிபட்டால் யாவற்றையும் வழிபட்டதாகப் பொருள் கொள்ளப்படும். நினைத்தாலும், தரிசித்தாலும் அப்படியே.சிவலிங்க வழிபாட்டுப் பெருமையை 28 ஆகமங்கள் விரிவாகப் பேசுகின்றன. இக் கலியுகத்தில் சிவனுடைய சக்தியை அறியப் பாரெங்கும் பல "லட்சக்கணக்கான சிவத்தலங்கள் உள்ளன. ஒரே தலத்தில் பல விதமான லிங்கங்கள் உள்ளன.கலியுகத்திற்கு சிவஞானமே சிறந்த ஞானம்.

ஆலய வழிபாட்டின் நோக்கம் மிருகத்தன்மை ஒழிய வேண்டும். மனிதத் தன்மையும் அடங்க வேண்டும். தெய்வத் தன்மையை ஒளி வீசச் செய்ய வேண்டும் என்பதே.

http://www.aaraamthinai.com/aanmeegam/2003...23aanmeegam.asp

Link to comment
Share on other sites

உட்பொருளை அறியும் ஞானமின்மையுமே..

உட்பொருளை அறிந்ததால் தான் பகுத்தறிவு பிறக்கிறது. லிங்கத்தின் மூலம் எது என்பதை அறிந்ததால் தான் நகைப்பு மலர்கிறது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உட்பொருளை அறிந்ததால் தான் பகுத்தறிவு பிறக்கிறது. லிங்கத்தின் மூலம் எது என்பதை அறிந்ததால் தான் நகைப்பு மலர்கிறது :D

இப்படி நீங்களாகவே சொல்லிக் கொள்கிறீர்களே தவிர.. உட்பொருளை அறிந்த அறிவு வெளிப்படவில்லையே...! நீங்கள் பேசிக் கொள்வதெல்லாம்.. அறியாமைகளின் பிரதிபலிப்புக்கள். அவைதான் இங்கு பகுத்தறிவாகக் காட்டப்படுகின்றன. அவ்வளவும் தான். :(

லிங்கம் என்ற சொல்லுக்கே பல பொருள் உண்டு. ஆனால் நீங்கள் ஆண்குறி என்பதை இலக்கு வைத்து ஆன்மீகப் பொருளை மறைக்கச் செய்கிறீர்கள். இது பகுத்தறிவல்ல. படிப்பறிவற்ற நிலை..!

-இறைவனின் வடிவம்

-நோய்க்கான அறிகுறி

-ஒரு புள்ளி அல்லது மறு

-சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை

-விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.

-பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.

-ஆண்குறி.

என்பனவும் அடங்கும்.

http://ta.wikipedia.org/wiki/

Link to comment
Share on other sites

லிங்கம் என்பது ஆண்குறி. ஆண்குறி என்பது பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு. இந்த ஆண்குறித் தத்துவம் விளைவு அல்லது முதற்காரணம் பற்றி சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். பிறப்பின் சான்று அல்லது சான்றுக்கான வழிமுறையும் இந்த ஆண்குறிதான். மனித உருவாக்கத்தின் ஒரு புள்ளி பற்றி சிந்தித்தால் அங்கும் ஆண்குறி வருகிறது.

புராணங்களில் வருவது போன்று சிவன் ஆண்குறியை பல இடங்களில் பயன்படுத்தினால், அங்கு நோயின் அறிகுறி தோன்றும்.

இந்த ஆண்குறியை இந்துக்கள் இறைவனின் வடிவம் என்று வணங்குவார்கள்.

சரி, இப்பொழுது சீரியசான ஒரு கேள்வி!

ஆண்குறியை குறிக்கின்ற லிங்கத்தை பெண்கள் தொட்டு வணங்குவதைப் பற்றி 21ஆம் நூற்றாண்டில் வாழும் யாழ் கள உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கம் என்பது சிவனுடைய லிங்கம் என்பதல்ல பொருள். சிவன் மனித வடிவினன்.. மனிதன் போன்ற ஆணுறுப்பைக் கொண்டவன் என்பது சைவத்தின் உட்பொருள் அல்ல. இவை சைவ சமயத்தை தவறாக இனங்காட்ட என்று சிலர் தமக்குள் வரையறுத்துக் கொண்ட திரிபுகள்.

சிவலிங்கம் என்பது அகிலமும் ஒருங்கிய ஒரு அடையாளக் குறியீடு. அது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை பதி பசு பாசம் எனும் நிலைகளை உணர்த்துகின்றன.

பதி - அகிலத்தின் இயக்கத்துக்கான சக்தியின் நிலை. (இதையே இறைவன் என்று வரையறுக்கின்றனர்)

பசு - தனி உயிர்களின் இயக்கத்துக்கான சக்தியின் நிலை (இதையே உயிர் என்று வரையறுக்கின்றனர்.)

பாசம் - உயிர்களிடையே உணர்வுகளை ஊட்டு அவ்வற்றை பகிர்வித்து உயிர்கள் வாழ ஆசையை அளிக்கும் சக்தியின் நிலை.

இதை எளிமையான உருவவடிவில் அடையாளப்படுத்துவதுதான் சிவலிங்கம்.

அதை தொட்டு வணங்குதலோ.. அல்லது அதைப் பற்றி அறிவதோ எதுவும் கேடானது அல்ல. அது அகிலமும் உயிரும் என்பது பற்றிய ஒரு ஆன்மீகக் குறியீடு என்பதால் மக்கள் தாராளமாக தொட்டு வழிபடலாம்.

ஆண் பெண் என்ற பிரிவினைக்கு அப்பால் எல்லோரும் உயிர்கள். உயிரின் அடிப்படையில் எவரும் சிவலிங்கம் என்ற அந்த அகிலத்தின் இருப்பு இயக்கம் அங்கு உயிரின் இருப்பு இயக்கம் பற்றிய குறியீட்டை வழங்கும் சிவலிங்கத்தை அடையாளப்படுத்தி கெளரவிப்பதில் பிரச்சனைப் படத் தேவையில்லை..!

ஒரு பெரிய அறிவியல் உண்மையின் சிறிய வடிவமோ சிவலிங்கம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகக்கலைஞர் சுவாமி தர்மானந்தா அவர்களின் கூற்றுப்படி சிவலிங்கம் என்பது மனதை ஒருநிலைக்கு கொண்டு வரக்கூடிய ஒரு அமைப்பு என்று கூறுகின்றார்...

According to Swami Dharmananda[11] who is a master of Yoga there is a mysterious power in the Linga, its shape has been designed to induce concentration of the mind. Just as the mind is focused easily in crystal-gazing, so also the mind attains one-pointedness, when it looks at the Linga. That is the reason why the ancient Rishis and the seers of India have prescribed Linga for being installed in the temples of Lord Shiva.[12]

- விகிபிடீயா..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.