Jump to content

Recommended Posts

அனைத்துலக பெண்கள் நாள் பங்குனி 8. மகளிர்தினத்தை முன்னிட்டு நான் ரசித்த இந்த கவிதை இதோ.

'பெண்'

பெண்ணே உலகின் ஆதாரம்

அவளற்ற ஆண் வெறும்

தளமற்ற கட்டிடம்

உள்ளத் தவிப்புக்கு மருந்தும்

உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்

பெண்ணே இன்றி

பெறுவதுதான் எப்படி

கலையா கணினியா

இலக்கியமா இராணுவமா

நாட்டுத் தலைமையா

விண்வெளிப் புரட்சியா

எங்கே இல்லை அவள்

சொல்லுங்களேன்

உயிரைச் சுமக்கும் ஒரே உயிர்

உலகில் பெண்தானே?

துவண்ட மனதுக்கு

மடிதந்து தலைகோத

ஒரு பெண்ணற்றுப் போயின்

மனித இனம் மொத்தமும்

சுடுகாட்டுப் பிணங்கள்தானே

எல்லாச் சுகங்களும்

எங்கும் கிடந்தாலும்

ஒரு பெண்ணில்லா பூமியில்

சிறு பொழுதேனும் நகருமா

அந்தப் பூமியும் கூட

ஓர் அழகுப் பெண்ணல்லவா

நிலவா மலரா கடலா காற்றா

காண்பதெல்லாம் பெண்ணல்லவா

சுகங்களின் இருப்பிடம் அவள்

சொர்க்கத்தின் பொருளும்

அவளேதான்

ஓராயிரம் ஓட்டைகளும்

உருப்படாத துடுப்புமாய்

நடுக்கடலில் விடப்பட்ட

ஆசை ஓடங்கள்தானே

மனித மனங்கள்

ஒரு பெண்ணின் துணையின்றி

வாழ்வெனும் கரைசேர

வாய்க்குமோ கனவிலும்

அவளின் அன்பின்றி

ஆயுள் ரேகைக்கு

ஆயுள்தான் ஏது

அழப்பிறவா மனிதருண்டோ

ஓரெட்டில் அம்மா

ஈரெட்டில் தங்கை

மூவெட்டில் காதலி

நாலெட்டில் தாரம்

ஐயெட்டில் மகளென்று

சாவெட்டு வரும்வரை

நம் கண்ணீர் நிறுத்தி

அமைதியின் மடிகிடத்த

தம் கண்ணீர் பொழியும்

கருணை மேகங்களல்லவா

பெண்கள்

அறிவுரைக்கோ

ஆயிரம் நாவுகளுண்டு

ஆறுதலுக்கு

அவளன்றி வேறு வழியுண்டோ

பெரும்பாலும் பெண்கள்

உயிர்களைப் பிரசவிக்கும்போது

ஆண்கள்

அணுகுண்டுகளைத்தானே

பிரசவிக்கிறார்கள்

உயிர்களின் ஆக்கமெல்லாம்

பெண்ணே என்பதால்

அந்தத்

தெய்வமும் பெண்தானோ!

*

அன்புடன் புகாரி

நன்றி: புதுமை

Link to comment
Share on other sites

ஓரெட்டில் அம்மா

ஈரெட்டில் தங்கை

மூவெட்டில் காதலி

நாலெட்டில் தாரம்

ஐயெட்டில் மகளென்று

சாவெட்டு வரும்வரை

நம் கண்ணீர் நிறுத்தி

அமைதியின் மடிகிடத்த

தம் கண்ணீர் பொழியும்

கருணை மேகங்களல்லவா

பெண்கள்

அழகாக எழுதப்பட்ட மறுக்கமுடியாத உண்மை..இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது.இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவண்ட மனதுக்கு

மடிதந்து தலைகோத

ஒரு பெண்ணற்றுப் போயின்

மனித இனம் மொத்தமும்

சுடுகாட்டுப் பிணங்கள்தானே

கவிதை வரிகள் உள்ளத்தை தொட்டன நன்றி நுணவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மிக நல்லாயிருக்கு!! :rolleyes::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.