Jump to content

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???


Recommended Posts

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

தொடர்ந்து படிக்க..........

http://isoorya.blogspot.com/

Link to comment
Share on other sites

பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

http://isoorya.blogspot.com/

இல்லை! இல்லை! பகலிலும் எங்கள் பல்கலைகழகத்தில் நிறைய பேய்கள் நடமாடுகிறது. சிலவேளைகளில் காரில் லிப்டும் கேட்கிறது.

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பேய் என்டாலே ஒரேபயம். இரவில் நிழல்கள் அசைவதையே பேய் எண்டுதான் நினைக்கத்தோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

உங்களை யாரும் பேய்னு நினைச்சுடுவாங்களோ எண்ட பயம் உங்களுக்குள் இருந்திருக்குமோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் கறுப்பி மாதிரிச் சிந்திக்கின்ற பெண்பிள்ளைகள் என்று யாருமில்லாததால் அப்படி எனக்கு நேரும் எனச் சிந்தித்ததில்லை.

பேய் வந்து வெள்ளை நிறம் என்று தானே சொல்வார்கள். நாம் அதற்கு நேர் எதிரான நிறம் என்பதால் அந்தப் பிரச்சனை எழ வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

பேய் இரவில வெள்ளை..

பகல்ல கறுப்பு...

யாராவது பார்த்தவங்க..அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க உங்கள் அனுபவத்தை..

நம்பவும் முடியலை....நம்பாம இருக்கவும் விடுறீங்களான்னா இல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னும் லண்டன் பக்கம் வரவில்லையே விகடகவி.

Link to comment
Share on other sites

:) நம்ம ஜம்முபேபிக்கு நிறைய அனுபவம் இருக்குது. :lol:

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் இரவில் மட்டுமில்ல.. இருண்ட... பாழடைந்த இடங்களிலும் இருக்கும் என்பார்கள்.

ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. அதேன் பேய் பெண்களோடுதான் அநேகம் கூட்டுச் சேருது. இரண்டும் ஒரே ரகமா..??! பேய் ஓட்டிறம் என்று பெண்களைப் கட்டி வைச்சு வேப்பிலையால அடிக்கிறதை ஒரு தடவை பார்த்திருக்கிறேன்... அல்லது இரண்டும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றா..??!

அப்புறம் தமிழீழக் காவல்துறை அதை தடுத்து நிறுத்திட்டாங்க. இப்ப சிறீலங்கா இராணுவப் பேய் பிடிச்சிருக்கிறதால என்ன நடக்கோ தெரியல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் மட்டுமல்லாமல் பேய்களிடம் கூடப் பெண்கள் இலகுவாக ஏமாந்து போகின்றார் போலும்.

ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று அணுகாது என்று படிக்கவில்லையா நெடுக்ஸ். அது தான் ஆண்களிடம்.....

(என்ன ஆண்வர்க்கத்தில் இருந்து கொண்டு இப்படிக் கதைப்பதாக நினைக்கவேண்டாம். நெடுங்காலபோவனுக்காக 4 பக்கம் வர வைப்பதற்கான என் தனிப்பட்ட முயற்சி)

Link to comment
Share on other sites

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :huh::lol:

:D வசியண்ணா உதையேன் கேட்கிறியள். இப்போ எல்லாம் நான் எடுக்கிற போட்டோக்கள் எல்லாத்திலும் யாராச்சும் தெரியுறாங்களாஅ னு பேர்கிறேன் ல. அட கொஞ்சநாள் நான்பட்ட அவஸ்தை இருக்குதே சொல்ல முடியலையுங்கோ. :lol::lol: ரொம்ப ரொம்ப பயப்படுத்திட்டாங்க.

அடுத்தநாள் நீ நான் நிலா" இப்படம் நல்லா இருக்குமே னு நினைச்சு பார்த்தேன். அட பாவமே அதுவும் அதே நிலைதான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ண பேய் ஆவி பிசாசு பூதம் னு சொல்லி வெருட்டிவிடுறாங்க. தாங்க முடியலை

Link to comment
Share on other sites

தூயவன் நல்லா இருக்கு... :lol: இணைப்புக்கு நன்றி...

கண்ணாடி போட்டவர் நல்லா பயந்திட்டார்.. :lol:

இப்படி ஆக்களை வெருட்டிறது சரி.. ஆனா யாரிடமாவது

ஒருநாள் முறையா வாங்கிகட்டுவினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

நோவ் இதை ஏற்க முடியாது. மனிதரில ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க. அதாலதான் கொள்ளி வால் பிசாசுகள் அதிகம். மோகினிப் பிசாசுகள் குறைவு. முனி என்றும் ஒன்று சொல்வார்கள்...

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...! :lol::lol:

Link to comment
Share on other sites

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...!

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

Link to comment
Share on other sites

நான் இந்தக்கதைய முந்தியும் யாழில எழுதி இருக்கிறனோ தெரியாது. ஆனா சின்னனில நடந்த உண்மைச் சம்பவம். சொல்லிறன் கேளுங்கோ.

அப்ப நாங்கள் திருகோணமலை கோட்டையில கோணேசுவரர் கோயிலுக்கு பக்கத்தில இருந்தம். அப்ப எனக்கு வயசு அஞ்சு எண்டு நினைக்கிறன்.

ஒருநாள் விடியக்காலம்பற கீழ இருக்கிற என்னோட படிக்கிற பெடியன் வீட்டார் ஏதோ அல்லோல கல்லோலப்பட்டு சனம் எல்லாம் அந்தப் பக்கம் போச்சிதுகள்.

உங்களுக்கு தெரியும் தானே கோணேசுவரர் கோயிலுக்கு போகேக்க மேல மலை மாதிரி வருது. நாங்கள் அந்த மலையிண்ட இடையில இருந்தம்.

சத்தம் கேட்ட உடன நாங்களும் அப்பா, அண்ணா, அக்கா எல்லாரும் என்ன நடக்கிது எண்டு கீழ பாக்கப் போனம். அது சரியான லொக்கேசன் எங்க எண்டால் பிறகு அதில ஒரு புத்தர் கோயில் கட்டினவங்கள் தானே கோட்டையுக்க? அந்த புத்தர் கோயில் அடிவாரத்தில அவேண்ட வீடு.

அப்ப போய் அங்க பார்த்தா. எல்லாரும் சொல்லிச்சீனம் முனி அடிச்சதாம் எண்டு. அது என்ன முனி?

அது என்ன எண்டாலாம் ஒரு மரத்துக்க முனி இருந்ததாம். அந்த முனி மரத்த உடைச்சுக்கொண்டு வெளியில போனதாம் யாரோ கண்டவேளாம் எண்டு எல்லாம் கதை விட்டுக்கொண்டு இருந்திச்சீனம்.

அவேள் சொன்ன அந்த இடத்தில ஒரு பெரிய மரம் விழுந்து இருந்திச்சிது. மரம் எண்டால் மிகப்பெரிய மரம். சுமார் அம்பது அடி உயரம் கொண்ட பெரிய இராட்சத மரம் எண்டு சொல்ல வேணும்.

அதுல என்ன புதினம் எண்டால் உண்மையில மரத்துக்க பார்க்கேக்க ஒரு ஆளிண்ட உருவத்தில அதில உள்ளுக்க கோரையா - ஓட்டையா இருந்திச்சிது.

நாங்கள் தாவரவியல் படிக்கேக்க இப்பிடி மரத்துக்க துவாரம் - காற்று இடைவெளிகள் வாறது பற்றி படிச்சு இருக்கிறம் ஏ.எல் இல. ஆனாலும்..

அத இப்ப நினைச்சு பார்க்க எனக்கு என்ன ஆச்சரியமா இருக்கிது எண்டால் அந்த காற்று இடைவெளி எப்பிடி சரியாக கிட்டத்தட்ட இயற்கையாகவே ஒரு மனித உருவில் உருவாக்கப்பட்டு இருந்திச்சிது எண்டுறதுதான்.

அந்த மரம் பிளந்து போய் இருந்சிச்சிது. நான் நினைக்கிறன் என்ன எண்டால் பெரிய பழைய மரமா இருந்தபடியால் நல்லா காற்று அடிக்கேக்க விழுந்திடிச்சுது போல இருக்கிது. பக்கத்தில கடல் தானே. அப்ப அங்க ஒரே நல்லா காற்று வீசும்.

அவேள் அதுதான் அதுக்க முனி இருந்தது எண்டு சொல்லி இருக்கிறீனம்.

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

எனக்கு இந்த முனி, முனியாண்டி, பேய்களில நம்பிக்கை இல்லை. மனுசராகிய நாங்கள் தான் பேய்கள்! எண்டாலும் சின்னனில நடந்த இந்த சம்பவதை என்னால மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

நமக்கு நம்ம அம்மம்மா சொல்லி தத்திருக்காங்க. அவங்க படிக்கிற காலத்தில பிள்ளைகள் பள்ளிக்கு வரல்லைன்னா சொல்லுற காரணங்களே இதுதானாம். அந்த மரத்தடில மோகினி நிற்குது.. ரீச்சர் அதுதான் அம்மா ஸ்கூலுக்கு விடல்லை என்று. ரீச்சர் பயந்தில மோகினி எந்த மரத்தில, எங்க என்று ஆரம்பிக்க.. அதுவே அன்று ஸ்கூல் பூரா கதையா இருக்குமாம். அப்புறம்.. அந்த ஸ்கூலுக்கு வாற ஒற்றையடிப் பாதையில நின்ற புளிய மரம் தறிக்கப்பட்டு விடுமாம்.

அப்புறம் இன்னொரு நாள்.. ஏன் பிள்ளை நேற்று வரல்ல. ரீச்சர் வயலுக்கு போன இடத்தில கொள்ளி வால் பிசாசு சுட்டுடிச்சு என்றா போதுமாம்.. அடுத்த நாள் அந்த வயல்வெளிக்கால வாற ரீச்சர் வரமாட்டாவாம்.

இப்படி நிறைய இருக்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா நன்றாகத்தான் பேய்களைத்தேடுறீங்க. ஹீஹீ நல்லாக இருக்கு. :lol::lol:

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம் நிச்சயமாக இதை நான் ஆமோதிக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.