Jump to content

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???


Recommended Posts

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

தொடர்ந்து படிக்க..........

http://isoorya.blogspot.com/

Link to comment
Share on other sites

பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

http://isoorya.blogspot.com/

இல்லை! இல்லை! பகலிலும் எங்கள் பல்கலைகழகத்தில் நிறைய பேய்கள் நடமாடுகிறது. சிலவேளைகளில் காரில் லிப்டும் கேட்கிறது.

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பேய் என்டாலே ஒரேபயம். இரவில் நிழல்கள் அசைவதையே பேய் எண்டுதான் நினைக்கத்தோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

உங்களை யாரும் பேய்னு நினைச்சுடுவாங்களோ எண்ட பயம் உங்களுக்குள் இருந்திருக்குமோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் கறுப்பி மாதிரிச் சிந்திக்கின்ற பெண்பிள்ளைகள் என்று யாருமில்லாததால் அப்படி எனக்கு நேரும் எனச் சிந்தித்ததில்லை.

பேய் வந்து வெள்ளை நிறம் என்று தானே சொல்வார்கள். நாம் அதற்கு நேர் எதிரான நிறம் என்பதால் அந்தப் பிரச்சனை எழ வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

பேய் இரவில வெள்ளை..

பகல்ல கறுப்பு...

யாராவது பார்த்தவங்க..அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க உங்கள் அனுபவத்தை..

நம்பவும் முடியலை....நம்பாம இருக்கவும் விடுறீங்களான்னா இல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னும் லண்டன் பக்கம் வரவில்லையே விகடகவி.

Link to comment
Share on other sites

:) நம்ம ஜம்முபேபிக்கு நிறைய அனுபவம் இருக்குது. :lol:

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் இரவில் மட்டுமில்ல.. இருண்ட... பாழடைந்த இடங்களிலும் இருக்கும் என்பார்கள்.

ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. அதேன் பேய் பெண்களோடுதான் அநேகம் கூட்டுச் சேருது. இரண்டும் ஒரே ரகமா..??! பேய் ஓட்டிறம் என்று பெண்களைப் கட்டி வைச்சு வேப்பிலையால அடிக்கிறதை ஒரு தடவை பார்த்திருக்கிறேன்... அல்லது இரண்டும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றா..??!

அப்புறம் தமிழீழக் காவல்துறை அதை தடுத்து நிறுத்திட்டாங்க. இப்ப சிறீலங்கா இராணுவப் பேய் பிடிச்சிருக்கிறதால என்ன நடக்கோ தெரியல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் மட்டுமல்லாமல் பேய்களிடம் கூடப் பெண்கள் இலகுவாக ஏமாந்து போகின்றார் போலும்.

ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று அணுகாது என்று படிக்கவில்லையா நெடுக்ஸ். அது தான் ஆண்களிடம்.....

(என்ன ஆண்வர்க்கத்தில் இருந்து கொண்டு இப்படிக் கதைப்பதாக நினைக்கவேண்டாம். நெடுங்காலபோவனுக்காக 4 பக்கம் வர வைப்பதற்கான என் தனிப்பட்ட முயற்சி)

Link to comment
Share on other sites

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :huh::lol:

:D வசியண்ணா உதையேன் கேட்கிறியள். இப்போ எல்லாம் நான் எடுக்கிற போட்டோக்கள் எல்லாத்திலும் யாராச்சும் தெரியுறாங்களாஅ னு பேர்கிறேன் ல. அட கொஞ்சநாள் நான்பட்ட அவஸ்தை இருக்குதே சொல்ல முடியலையுங்கோ. :lol::lol: ரொம்ப ரொம்ப பயப்படுத்திட்டாங்க.

அடுத்தநாள் நீ நான் நிலா" இப்படம் நல்லா இருக்குமே னு நினைச்சு பார்த்தேன். அட பாவமே அதுவும் அதே நிலைதான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ண பேய் ஆவி பிசாசு பூதம் னு சொல்லி வெருட்டிவிடுறாங்க. தாங்க முடியலை

Link to comment
Share on other sites

தூயவன் நல்லா இருக்கு... :lol: இணைப்புக்கு நன்றி...

கண்ணாடி போட்டவர் நல்லா பயந்திட்டார்.. :lol:

இப்படி ஆக்களை வெருட்டிறது சரி.. ஆனா யாரிடமாவது

ஒருநாள் முறையா வாங்கிகட்டுவினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

நோவ் இதை ஏற்க முடியாது. மனிதரில ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க. அதாலதான் கொள்ளி வால் பிசாசுகள் அதிகம். மோகினிப் பிசாசுகள் குறைவு. முனி என்றும் ஒன்று சொல்வார்கள்...

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...! :lol::lol:

Link to comment
Share on other sites

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...!

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

Link to comment
Share on other sites

நான் இந்தக்கதைய முந்தியும் யாழில எழுதி இருக்கிறனோ தெரியாது. ஆனா சின்னனில நடந்த உண்மைச் சம்பவம். சொல்லிறன் கேளுங்கோ.

அப்ப நாங்கள் திருகோணமலை கோட்டையில கோணேசுவரர் கோயிலுக்கு பக்கத்தில இருந்தம். அப்ப எனக்கு வயசு அஞ்சு எண்டு நினைக்கிறன்.

ஒருநாள் விடியக்காலம்பற கீழ இருக்கிற என்னோட படிக்கிற பெடியன் வீட்டார் ஏதோ அல்லோல கல்லோலப்பட்டு சனம் எல்லாம் அந்தப் பக்கம் போச்சிதுகள்.

உங்களுக்கு தெரியும் தானே கோணேசுவரர் கோயிலுக்கு போகேக்க மேல மலை மாதிரி வருது. நாங்கள் அந்த மலையிண்ட இடையில இருந்தம்.

சத்தம் கேட்ட உடன நாங்களும் அப்பா, அண்ணா, அக்கா எல்லாரும் என்ன நடக்கிது எண்டு கீழ பாக்கப் போனம். அது சரியான லொக்கேசன் எங்க எண்டால் பிறகு அதில ஒரு புத்தர் கோயில் கட்டினவங்கள் தானே கோட்டையுக்க? அந்த புத்தர் கோயில் அடிவாரத்தில அவேண்ட வீடு.

அப்ப போய் அங்க பார்த்தா. எல்லாரும் சொல்லிச்சீனம் முனி அடிச்சதாம் எண்டு. அது என்ன முனி?

அது என்ன எண்டாலாம் ஒரு மரத்துக்க முனி இருந்ததாம். அந்த முனி மரத்த உடைச்சுக்கொண்டு வெளியில போனதாம் யாரோ கண்டவேளாம் எண்டு எல்லாம் கதை விட்டுக்கொண்டு இருந்திச்சீனம்.

அவேள் சொன்ன அந்த இடத்தில ஒரு பெரிய மரம் விழுந்து இருந்திச்சிது. மரம் எண்டால் மிகப்பெரிய மரம். சுமார் அம்பது அடி உயரம் கொண்ட பெரிய இராட்சத மரம் எண்டு சொல்ல வேணும்.

அதுல என்ன புதினம் எண்டால் உண்மையில மரத்துக்க பார்க்கேக்க ஒரு ஆளிண்ட உருவத்தில அதில உள்ளுக்க கோரையா - ஓட்டையா இருந்திச்சிது.

நாங்கள் தாவரவியல் படிக்கேக்க இப்பிடி மரத்துக்க துவாரம் - காற்று இடைவெளிகள் வாறது பற்றி படிச்சு இருக்கிறம் ஏ.எல் இல. ஆனாலும்..

அத இப்ப நினைச்சு பார்க்க எனக்கு என்ன ஆச்சரியமா இருக்கிது எண்டால் அந்த காற்று இடைவெளி எப்பிடி சரியாக கிட்டத்தட்ட இயற்கையாகவே ஒரு மனித உருவில் உருவாக்கப்பட்டு இருந்திச்சிது எண்டுறதுதான்.

அந்த மரம் பிளந்து போய் இருந்சிச்சிது. நான் நினைக்கிறன் என்ன எண்டால் பெரிய பழைய மரமா இருந்தபடியால் நல்லா காற்று அடிக்கேக்க விழுந்திடிச்சுது போல இருக்கிது. பக்கத்தில கடல் தானே. அப்ப அங்க ஒரே நல்லா காற்று வீசும்.

அவேள் அதுதான் அதுக்க முனி இருந்தது எண்டு சொல்லி இருக்கிறீனம்.

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

எனக்கு இந்த முனி, முனியாண்டி, பேய்களில நம்பிக்கை இல்லை. மனுசராகிய நாங்கள் தான் பேய்கள்! எண்டாலும் சின்னனில நடந்த இந்த சம்பவதை என்னால மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

நமக்கு நம்ம அம்மம்மா சொல்லி தத்திருக்காங்க. அவங்க படிக்கிற காலத்தில பிள்ளைகள் பள்ளிக்கு வரல்லைன்னா சொல்லுற காரணங்களே இதுதானாம். அந்த மரத்தடில மோகினி நிற்குது.. ரீச்சர் அதுதான் அம்மா ஸ்கூலுக்கு விடல்லை என்று. ரீச்சர் பயந்தில மோகினி எந்த மரத்தில, எங்க என்று ஆரம்பிக்க.. அதுவே அன்று ஸ்கூல் பூரா கதையா இருக்குமாம். அப்புறம்.. அந்த ஸ்கூலுக்கு வாற ஒற்றையடிப் பாதையில நின்ற புளிய மரம் தறிக்கப்பட்டு விடுமாம்.

அப்புறம் இன்னொரு நாள்.. ஏன் பிள்ளை நேற்று வரல்ல. ரீச்சர் வயலுக்கு போன இடத்தில கொள்ளி வால் பிசாசு சுட்டுடிச்சு என்றா போதுமாம்.. அடுத்த நாள் அந்த வயல்வெளிக்கால வாற ரீச்சர் வரமாட்டாவாம்.

இப்படி நிறைய இருக்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா நன்றாகத்தான் பேய்களைத்தேடுறீங்க. ஹீஹீ நல்லாக இருக்கு. :lol::lol:

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம் நிச்சயமாக இதை நான் ஆமோதிக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.