Jump to content

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???


Recommended Posts

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

தொடர்ந்து படிக்க..........

http://isoorya.blogspot.com/

Link to comment
Share on other sites

பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

http://isoorya.blogspot.com/

இல்லை! இல்லை! பகலிலும் எங்கள் பல்கலைகழகத்தில் நிறைய பேய்கள் நடமாடுகிறது. சிலவேளைகளில் காரில் லிப்டும் கேட்கிறது.

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பேய் என்டாலே ஒரேபயம். இரவில் நிழல்கள் அசைவதையே பேய் எண்டுதான் நினைக்கத்தோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

உங்களை யாரும் பேய்னு நினைச்சுடுவாங்களோ எண்ட பயம் உங்களுக்குள் இருந்திருக்குமோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் கறுப்பி மாதிரிச் சிந்திக்கின்ற பெண்பிள்ளைகள் என்று யாருமில்லாததால் அப்படி எனக்கு நேரும் எனச் சிந்தித்ததில்லை.

பேய் வந்து வெள்ளை நிறம் என்று தானே சொல்வார்கள். நாம் அதற்கு நேர் எதிரான நிறம் என்பதால் அந்தப் பிரச்சனை எழ வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

பேய் இரவில வெள்ளை..

பகல்ல கறுப்பு...

யாராவது பார்த்தவங்க..அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க உங்கள் அனுபவத்தை..

நம்பவும் முடியலை....நம்பாம இருக்கவும் விடுறீங்களான்னா இல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னும் லண்டன் பக்கம் வரவில்லையே விகடகவி.

Link to comment
Share on other sites

:) நம்ம ஜம்முபேபிக்கு நிறைய அனுபவம் இருக்குது. :lol:

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் இரவில் மட்டுமில்ல.. இருண்ட... பாழடைந்த இடங்களிலும் இருக்கும் என்பார்கள்.

ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. அதேன் பேய் பெண்களோடுதான் அநேகம் கூட்டுச் சேருது. இரண்டும் ஒரே ரகமா..??! பேய் ஓட்டிறம் என்று பெண்களைப் கட்டி வைச்சு வேப்பிலையால அடிக்கிறதை ஒரு தடவை பார்த்திருக்கிறேன்... அல்லது இரண்டும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றா..??!

அப்புறம் தமிழீழக் காவல்துறை அதை தடுத்து நிறுத்திட்டாங்க. இப்ப சிறீலங்கா இராணுவப் பேய் பிடிச்சிருக்கிறதால என்ன நடக்கோ தெரியல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் மட்டுமல்லாமல் பேய்களிடம் கூடப் பெண்கள் இலகுவாக ஏமாந்து போகின்றார் போலும்.

ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று அணுகாது என்று படிக்கவில்லையா நெடுக்ஸ். அது தான் ஆண்களிடம்.....

(என்ன ஆண்வர்க்கத்தில் இருந்து கொண்டு இப்படிக் கதைப்பதாக நினைக்கவேண்டாம். நெடுங்காலபோவனுக்காக 4 பக்கம் வர வைப்பதற்கான என் தனிப்பட்ட முயற்சி)

Link to comment
Share on other sites

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :huh::lol:

:D வசியண்ணா உதையேன் கேட்கிறியள். இப்போ எல்லாம் நான் எடுக்கிற போட்டோக்கள் எல்லாத்திலும் யாராச்சும் தெரியுறாங்களாஅ னு பேர்கிறேன் ல. அட கொஞ்சநாள் நான்பட்ட அவஸ்தை இருக்குதே சொல்ல முடியலையுங்கோ. :lol::lol: ரொம்ப ரொம்ப பயப்படுத்திட்டாங்க.

அடுத்தநாள் நீ நான் நிலா" இப்படம் நல்லா இருக்குமே னு நினைச்சு பார்த்தேன். அட பாவமே அதுவும் அதே நிலைதான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ண பேய் ஆவி பிசாசு பூதம் னு சொல்லி வெருட்டிவிடுறாங்க. தாங்க முடியலை

Link to comment
Share on other sites

தூயவன் நல்லா இருக்கு... :lol: இணைப்புக்கு நன்றி...

கண்ணாடி போட்டவர் நல்லா பயந்திட்டார்.. :lol:

இப்படி ஆக்களை வெருட்டிறது சரி.. ஆனா யாரிடமாவது

ஒருநாள் முறையா வாங்கிகட்டுவினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

நோவ் இதை ஏற்க முடியாது. மனிதரில ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க. அதாலதான் கொள்ளி வால் பிசாசுகள் அதிகம். மோகினிப் பிசாசுகள் குறைவு. முனி என்றும் ஒன்று சொல்வார்கள்...

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...! :lol::lol:

Link to comment
Share on other sites

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...!

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

Link to comment
Share on other sites

நான் இந்தக்கதைய முந்தியும் யாழில எழுதி இருக்கிறனோ தெரியாது. ஆனா சின்னனில நடந்த உண்மைச் சம்பவம். சொல்லிறன் கேளுங்கோ.

அப்ப நாங்கள் திருகோணமலை கோட்டையில கோணேசுவரர் கோயிலுக்கு பக்கத்தில இருந்தம். அப்ப எனக்கு வயசு அஞ்சு எண்டு நினைக்கிறன்.

ஒருநாள் விடியக்காலம்பற கீழ இருக்கிற என்னோட படிக்கிற பெடியன் வீட்டார் ஏதோ அல்லோல கல்லோலப்பட்டு சனம் எல்லாம் அந்தப் பக்கம் போச்சிதுகள்.

உங்களுக்கு தெரியும் தானே கோணேசுவரர் கோயிலுக்கு போகேக்க மேல மலை மாதிரி வருது. நாங்கள் அந்த மலையிண்ட இடையில இருந்தம்.

சத்தம் கேட்ட உடன நாங்களும் அப்பா, அண்ணா, அக்கா எல்லாரும் என்ன நடக்கிது எண்டு கீழ பாக்கப் போனம். அது சரியான லொக்கேசன் எங்க எண்டால் பிறகு அதில ஒரு புத்தர் கோயில் கட்டினவங்கள் தானே கோட்டையுக்க? அந்த புத்தர் கோயில் அடிவாரத்தில அவேண்ட வீடு.

அப்ப போய் அங்க பார்த்தா. எல்லாரும் சொல்லிச்சீனம் முனி அடிச்சதாம் எண்டு. அது என்ன முனி?

அது என்ன எண்டாலாம் ஒரு மரத்துக்க முனி இருந்ததாம். அந்த முனி மரத்த உடைச்சுக்கொண்டு வெளியில போனதாம் யாரோ கண்டவேளாம் எண்டு எல்லாம் கதை விட்டுக்கொண்டு இருந்திச்சீனம்.

அவேள் சொன்ன அந்த இடத்தில ஒரு பெரிய மரம் விழுந்து இருந்திச்சிது. மரம் எண்டால் மிகப்பெரிய மரம். சுமார் அம்பது அடி உயரம் கொண்ட பெரிய இராட்சத மரம் எண்டு சொல்ல வேணும்.

அதுல என்ன புதினம் எண்டால் உண்மையில மரத்துக்க பார்க்கேக்க ஒரு ஆளிண்ட உருவத்தில அதில உள்ளுக்க கோரையா - ஓட்டையா இருந்திச்சிது.

நாங்கள் தாவரவியல் படிக்கேக்க இப்பிடி மரத்துக்க துவாரம் - காற்று இடைவெளிகள் வாறது பற்றி படிச்சு இருக்கிறம் ஏ.எல் இல. ஆனாலும்..

அத இப்ப நினைச்சு பார்க்க எனக்கு என்ன ஆச்சரியமா இருக்கிது எண்டால் அந்த காற்று இடைவெளி எப்பிடி சரியாக கிட்டத்தட்ட இயற்கையாகவே ஒரு மனித உருவில் உருவாக்கப்பட்டு இருந்திச்சிது எண்டுறதுதான்.

அந்த மரம் பிளந்து போய் இருந்சிச்சிது. நான் நினைக்கிறன் என்ன எண்டால் பெரிய பழைய மரமா இருந்தபடியால் நல்லா காற்று அடிக்கேக்க விழுந்திடிச்சுது போல இருக்கிது. பக்கத்தில கடல் தானே. அப்ப அங்க ஒரே நல்லா காற்று வீசும்.

அவேள் அதுதான் அதுக்க முனி இருந்தது எண்டு சொல்லி இருக்கிறீனம்.

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

எனக்கு இந்த முனி, முனியாண்டி, பேய்களில நம்பிக்கை இல்லை. மனுசராகிய நாங்கள் தான் பேய்கள்! எண்டாலும் சின்னனில நடந்த இந்த சம்பவதை என்னால மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

நமக்கு நம்ம அம்மம்மா சொல்லி தத்திருக்காங்க. அவங்க படிக்கிற காலத்தில பிள்ளைகள் பள்ளிக்கு வரல்லைன்னா சொல்லுற காரணங்களே இதுதானாம். அந்த மரத்தடில மோகினி நிற்குது.. ரீச்சர் அதுதான் அம்மா ஸ்கூலுக்கு விடல்லை என்று. ரீச்சர் பயந்தில மோகினி எந்த மரத்தில, எங்க என்று ஆரம்பிக்க.. அதுவே அன்று ஸ்கூல் பூரா கதையா இருக்குமாம். அப்புறம்.. அந்த ஸ்கூலுக்கு வாற ஒற்றையடிப் பாதையில நின்ற புளிய மரம் தறிக்கப்பட்டு விடுமாம்.

அப்புறம் இன்னொரு நாள்.. ஏன் பிள்ளை நேற்று வரல்ல. ரீச்சர் வயலுக்கு போன இடத்தில கொள்ளி வால் பிசாசு சுட்டுடிச்சு என்றா போதுமாம்.. அடுத்த நாள் அந்த வயல்வெளிக்கால வாற ரீச்சர் வரமாட்டாவாம்.

இப்படி நிறைய இருக்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா நன்றாகத்தான் பேய்களைத்தேடுறீங்க. ஹீஹீ நல்லாக இருக்கு. :lol::lol:

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம் நிச்சயமாக இதை நான் ஆமோதிக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.