Jump to content

தேங்காய் உடைப்பதன் தத்துவம்


Recommended Posts

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

நன்றி: புதுமை

Link to comment
Share on other sites

எமது கோயில்களில் தரப்படும் பிரசாதமாக தேங்காய், வாழைப்பழம், மற்றும் சுண்டல் தரப்படுவதற்கும் ஒரு காரணம் உள்ளதாம். இவை மூன்றிலுமே நாம் உயிர் வாழத் தேவையான அனைத்து சக்திகளும் உள்ளதாகச் சித்த வைத்தியர் ஒருவரின் பேட்டியின் போது அறிந்து கொண்டேன். நாம் உயிர் வாழ இவை மூன்றுமே போதும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இன்று கோயில்களாக இருக்கும் பல இடங்கள் சித்தர்களின் சமாதி என்றும், ஒரு உடலின் அமைப்பாகவே கோயில்கள் அமைந்திருக்கின்றன என்பதையும் அறிந்தேன்.

Link to comment
Share on other sites

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

நன்றி: புதுமை

அட...பிரபஞ்சமானது விரிந்து கொண்டு போகுதுன்னு விஞ்சானிகள் சொல்லினம். நீங்க அதை தேங்காய்க்குள் அடக்கிட்டிங்கே..? <_<

Link to comment
Share on other sites

எமது கோயில்களில் தரப்படும் பிரசாதமாக தேங்காய், வாழைப்பழம், மற்றும் சுண்டல் தரப்படுவதற்கும் ஒரு காரணம் உள்ளதாம். இவை மூன்றிலுமே நாம் உயிர் வாழத் தேவையான அனைத்து சக்திகளும் உள்ளதாகச் சித்த வைத்தியர் ஒருவரின் பேட்டியின் போது அறிந்து கொண்டேன். நாம் உயிர் வாழ இவை மூன்றுமே போதும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இன்று கோயில்களாக இருக்கும் பல இடங்கள் சித்தர்களின் சமாதி என்றும், ஒரு உடலின் அமைப்பாகவே கோயில்கள் அமைந்திருக்கின்றன என்பதையும் அறிந்தேன்.

ம்ம்ம்...தமிழச்சி அக்கா நன்னா கோயிலில சுண்டல் வாங்கிறா என்று விளங்குது...(கீயூவில இருந்து தான் வாங்கிறனியளோ :o )..தமிழச்சி அக்கா உந்த சித்த வைத்தியரின்ட பேட்டியை எல்லாம் கேட்டு இப்படி ஆகிட்டா...(அச்சோ :D )...வேண்டாமக்கா அது ரொம்ப கொடுமையாக்கும்..இப்ப தான் விளங்கினது தேங்காய் யாரும் போய் கோயிலில அடித்தா சுண்டல் அண்ணா மாதிரி ஆட்கள் பாய்ந்தடித்து தேங்காய் பொறுக்கி சாப்பிடுறவை என்று.. :) (நான் சும்மா பகிடிக்கு தகவலிற்கு தாங்ஸ் :D )...அதற்காகா தேங்காய்,வாழைபழம்,சுண்டலை சாப்பிட்டு கொண்டு இருந்திடாதையுங்கோ என்ன தமிழச்சி அக்கா... :(

அது சரி சித்தர் என்றா என்ன எனக்கு ஒருக்கா எஸ்பிளைன் பண்ண முடியுமா ஜம்மு பேபியும் சித்தர் ஆகலாமோ... <_< (கோவிக்காம என்ட டவுட்டை கிளியர் பண்ணிவிடுங்கோ என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பிரபஞ்சம் கோள வடிவமா? இது என்ன புதுக் கதை?

இந்த மதத்தில் நடக்கிற அர்த்தமற்ற கூத்துக்களுக்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முற்பட்டால் இப்படித்தான் வரும்.

இப்படி ஏதாவது "வெங்காய" விளக்கம் கொடுத்து, கடைசியில் தேங்காய் உள்ளே அழுகி இருக்க, அதற்கு இன்னும் ஒரு விளக்கம் கொடுத்து பரிகாரத்திற்கு காசு பறிக்கலாம். அதுதானே நடக்கிறது.

Link to comment
Share on other sites

சபேசன் பிரபஞ்சத்துக்குள்ளை தேங்காயும் அடங்குந்தானே? அதாலை தான் பிரபஞ்சத்திற்கு குறியீடாக தேங்காயை உடைக்கிறார்கள் தேங்காய் வடிவில் பிரபஞ்சம் என்று மந்திரம் ஓதிய படி.

செவ்வகத்தினுள் சதுரம் அடங்கும் எண்டாலும் சதுரத்தை செவ்வகம் என்று சொல்ல முடியாது என்றமாதிரி நுணுக்கமான விவகாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருங்கச் சொன்னா.. தேங்காய்க்குள் பிரபஞ்சம் என்பது.. காட்டூண் கிறுக்கலுக்கால ஓர்மமா வார சிங்களவனை வென்று தமிழீழம் பெறுவது மாதிரி..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தின் தோற்றமும் அழிவும் தேங்காய் வடிவத்தினால் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அறிய..

http://www.pbs.org/wgbh/nova/elegant/media2/3012_q_01.html

Link to comment
Share on other sites

  • 3 years later...

சின்ன வயதில் கலட்டி அம்மன் கோயில் தேரின்போது நடந்த தேங்காய் அடியின் பின்னர் பவுன் மோதிரம் ஒண்டு கண்னெடுத்தனான்..

அதை.. பொன்னையாவின் வளர்ப்பு மீன்கடையில் ஆறு கொலம்பியன் பூனை மீன்களுக்கு பண்டமாற்றம் செய்தேன்.... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.