Jump to content

இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை?


Recommended Posts

நிசமா நான் யாரையுமே கடிக்கல்ல :wub: ..(அப்படி கடிப்பேனா நிலா அக்கா :) )...நிசத்தை சொன்னேன்..!! :wub:

ஜம்மு பேபி பஞ் -

கண்ணா நாங்க மாமியையும் கடிப்போம் முடிந்தா அந்த சாமியை கடிபோம்.. :)

அப்ப நான் வரட்டா!!

பார்த்து கடியுங்கோ சாமி கல்லாக இருக்க போகுது.

அதுசரி ஜம்மு உங்களுக்கு ந்த்தனை பெண் நண்பிகள் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

பார்த்து கடியுங்கோ சாமி கல்லாக இருக்க போகுது.

அதுசரி ஜம்மு உங்களுக்கு ந்த்தனை பெண் நண்பிகள் இருக்கிறார்கள்

ம்ம்ம்...சாமி வேண்டும் என்றா கல்லா இருக்கலாம் ஆனா மாமி அப்படியா.. :) (இது எப்படி இருக்கு நிலா அக்கா :wub: )..எனக்கு எத்தனை பெண் நண்பிகளா..(அச்சோ அது நேக்கே தெரியாது :) )..ஆனா சில பேரை மட்டும் தான் மிக நெருக்கமா வைத்திருப்பேன்..(நண்பிகளாக).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்கள் எல்லோருடைய கருத்துகளுக்கும் நன்றி

மருதங்கேணி நீங்கள் சொல்லுறீங்கள் எதிர்ப்பாலீரிப்பு இருக்கும் வரை ஆண் பெண் நட்பு என்பது சந்தேகத்துகுரியது என்று. ?? ஏன் நீங்கள் அங்கு ஆண் பெண் என்று பிரித்துப் பார்க்கிறீர்கள்?? எப்போது நீ ஆண், நான் பெண் என்றும் பாகுபாடு தோன்றி ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் ரசிக்கத் தூண்டுகிறதோ, அதன்பின் எப்படி நட்பாகப் பயணிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோருடைய கருத்துகளுக்கும் நன்றி

மருதங்கேணி நீங்கள் சொல்லுறீங்கள் எதிர்ப்பாலீரிப்பு இருக்கும் வரை ஆண் பெண் நட்பு என்பது சந்தேகத்துகுரியது என்று. ?? ஏன் நீங்கள் அங்கு ஆண் பெண் என்று பிரித்துப் பார்க்கிறீர்கள்?? எப்போது நீ ஆண், நான் பெண் என்றும் பாகுபாடு தோன்றி ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் ரசிக்கத் தூண்டுகிறதோ, அதன்பின் எப்படி நட்பாகப் பயணிக்கமுடியும்?

ரசிகை அக்கா நீங்கள் கேள்வியையும் கேட்டு பதிலையும் தந்துள்ளீர்களே?

ஒரு பெண் தான் பெண் என்பதை நட்பின் பிரகாரம் எவ்வாறு மறக்க முடியும்? இக்கருத்தை நான் எம்மவரை மட்டும் பார்த்து முன்வைக்கவில்லை..... நல்லாகவே முன்னேறிவிட்ட மேலைநாட்டு கலாச்சாரத்திலும் கூட இதுவே முடிவாக உள்ளது. அவர்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி பழகினாலும் அங்கே எதிர்பால் ஈர்ப்பென்பது தலைகாட்டத்தான் செய்கின்றது. ஏதுவரையில் நட்பை தொடர முடிகின்றது? இங்கே ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் ஒருவரை ஒருவர் பயன்யடுத்திகொள்ளுமட்டும் நட்பென்று பெயர் சூட்டி வைத்திருக்கின்றார்கள் தவிர நட்பென்பது கேள்வியாகத்தான் எஞ்சுகிறது. எனது கருத்து மேலோட்டமானது.......... மனதோடு சம்மந்தபட்டது. இங்கே உடலை நான் சம்மந்த படத்தவில்லை.............. அந்த வழியில் தவறிழைக்காமல் எத்தனையோ நட்புகள் தொடருகின்றன அதை நானே பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் நிலை தடுமாறும்போது.... இல்லை இது தவறானது என சுட்டிகாட்டி அதேநேரம் தமது நடபையும் முறிக்காது தனது நண்பனை ஒரு நிலைபடுத்தி நட்பை தொடரும் எத்தனையோ பெண்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை புனிதமான நட்பென்ற போர்வைக்குள் அடக்கலாமா என்பதே என் கேள்வி? இங்கு நான் முன்பே சொல்லியதுபோல ஒரு பக்க நியாயம் தானே இருக்கிறது. ஒருவரை மற்றையவர் ஆதாரம் காட்ட முடிகிறதா?????

"அவனுடடான எனது நடப்பு புனிதமமானது என்று ஒரு பெண்ணாலோ அன்றி ஆணாலோ கூறமுடியும். எமது நடப்பு புனிதமானது என்று இருவராலும் கூறமுடியாது."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.