Jump to content

நேருவின் பேரனிடம் நீதி கேட்டவள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

annaipoopathi001if2.jpg

தெந்தமிழீழத் தாயவள்

செருக்களம் போயினள்

உடலினில் குண்டு சுமந்தல்ல..

வயிற்றினில் பசி சுமந்து..

நெஞ்சினில்

புதல்வர் தம் உணர்வோடு..!

தமிழீழ விடுதலைக்காய்

மாமாங்கம் தனில்

மங்கை அவள்

தனித்து நின்று

துணிந்து திறந்தாள்

சாத்வீகப் போர்க்களம்.

காந்திய தேசத்தின்

ஆக்கிரமிப்பு இராணுவம்

தமிழீழ மகளிர் தம்

மானம் குதறுகையில்

பொங்கினள் பூபதி அம்மா

நேருவின் பேரனிடம்

நீதி கேட்டு..!

தாயவள் பசியினில் துடிக்கையில்

நேருவின் பேரன்

நெஞ்சினில் களிப்புடன்

தமிழின அழிப்பினில்

கழித்தனன் காலத்தை டில்லியில்..!

நாட்கள் கழிகையில்

பொங்கிய பூவவள்

பூகம்பமாய் சிதறினள்

சாவினில் சரித்திரம் படைத்திட்ட

தமிழீழத் தாயவளாய்

மின்னினள் தமிழீழ வானில்.

அன்னையவள் இட்ட

சுதந்திரத் தீயினில்

பூவையர் திரண்டனர்

புலிகளாய்..!

தமிழீழ தேசத்தின்

ஒளி விளக்குளாய்..!

விடுதலைப் பயணம்

இன்னும் முடியவில்லை...

தொடரும் ஆதிக்கக் கரங்களின்

அடங்காத வெறிக்கு

முடிவு வரும்..!

முடித்து வைப்போம்

அன்னையவள் கனவினை..!

சத்தியம் செய்வோம்

அம்மா பூபதி

நினைவினை மனதினில்

சுமந்துமே..!

அன்னை பூபதியின் 20ம் ஆண்டு நினைவுகள் சுமந்து நெஞ்சினில் அன்னையவள் ஊட்டிய தமிழீழத் தாயக விடுதலை உணர்வு சுமந்து வந்த நினைவஞ்சலி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பூபதி உங்கள் இலட்சியம் விரைவில் ஈடேறும்.

Link to comment
Share on other sites

அன்னை பூபதிக்கு நினைவஞ்சலியை நினைவில் நிறுத்தி வடித்த கவிதை அன்னையின் நீங்காத நினைவுகளை நிலை நிறுத்தி செல்கிறது... :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பொருத்தமான காலத்தில் அன்னை பூபதி தாயின் நினைவுகளை சுமந்து நிற்கும் நல்லதொரு கவிதை. இலட்சியத் தாய்க்கு எனது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதித் தாயை நினைந்த உறவுகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

பூபதித் தாயை நினைவு கூர்ந்து கவிதை வடித்த நெடுக் தாத்தாக்கு நன்றி சொல்லணும்.

பூபதித் தாய் செய்த தியாகமே தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்து வந்த கவிதையை வடித்த நெடுக்கு தாத்தாவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

புலத்தில் 'ஆயிரம்' வேலைகளுக்கிடையில் இது போன்ற தியாகிகளைக் கூட பலராலும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்பது வேதனை.

தியாகத்திருவுருவை நினைவில் கொண்டு வந்த அழகான கவிதை.

Link to comment
Share on other sites

பூபதி தாயவள்

புகழது பாடிய

கவியிது அழகாம்- நெடுக்ஸ்

கவியிது அழகாம்...

நெடு நாளாய் காணலை

உன் கவி என் விழி

கண்டதும் இன்றது

கண்ணதில் பரவசம்...பரவசம்...

பூபதி தாயவள்

தியாகம் பாடிய

உன் கவி

அழகு..அழகு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் 'ஆயிரம்' வேலைகளுக்கிடையில் இது போன்ற தியாகிகளைக் கூட பலராலும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்பது வேதனை.

தியாகத்திருவுருவை நினைவில் கொண்டு வந்த அழகான கவிதை.

அப்படிச் சொல்லாதேங்க ஒரு நிகழ்வை நினைக்கிறதுக்கு ஒரு நொடி போதும். நாட்கள்.. மாதங்கள்.. வருடங்கள் தேவையில்லையே..! :D

Link to comment
Share on other sites

அவரின் நினைவு நாள் அடுத்த மாதம் (ஏப்ரல்) வருகிறது. புலம்பெயர் தேசங்களில் அவரின் நினைவு நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவார்கள். நீங்கள் வைத்த கருத்துக்களைப் பார்க்கும் போது, நீங்கள் யாரும் அந்த நிகழ்வுகளுக்குப் போவதில்லைப் போல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ், அன்னை பூபதியை நினவூட்டிய கவிதை அருமை. அதிலும் இவ்வரிகள்,

அன்னையவள் இட்ட

சுதந்திரத் தீயினில்

பூவையர் திரண்டனர்

புலிகளாய்..!

தமிழீழ தேசத்தின்

ஒளி விளக்குளாய்..!

உண்மை. உண்மை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இன்றைய நாள் அன்னை பூபதிதாய் மடிந்த தினம்.

ஒருமாதமாக அன்னமின்றி நீரருந்தி தியாகித்த தாயிவள் :lol:

பூபதித்தாயின் பாடல் ஒன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தாயின் கனவுகள் நினைவாக வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தாயே நீங்கள் மீண்டும் என் மனதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகச் சுடராய் ஒளிவீசும் பூபதி அம்மாவின் 20ம் ஆண்டு நினைவுகளோடு.. இவ் நினைவு வரிகளைப் பதிகின்றேன்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.