Jump to content

கொலை செய்யப்பட்ட நந்தனின் சிலை எங்கே?


Recommended Posts

கீர்த்தனைகளை இயற்றிய தியாகையரின் சமகாலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியார் பற்றி மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யரவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன்:

'சிதம்பரத்தில் இருக்குங்கால் கோபால கிருஷ்ண பாரதியார் நடராஜர் ஆலயம் சென்று, பொன்னம்பலத்துக்குத் தெற்கேயுள்ளதும், கிழக்கு நோக்கி ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தருளியிருப்பதுமாகிய நிருத்த சபையின் வெளி மண்டபத்தில் ஜபம் செய்வார்.

சில சமயங்களில் அதன் தெற்குச் சுவர் ஓரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக்கொண்டிருப்பார்.

நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியைத் தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோளில் மண் வெட்டியும் உள்ளன. பாரதியார் நந்தனாருடைய சிறந்த பக்தியை நினைந்து நினைந்து உருகுவதற்கு அந்த உருவம் (நந்தனாரின் சிலை) ஒரு தூண்டுகோலாக இருந்தது. '

(பக்கம் 23)

கோபால கிருஷ்ண பாரதியாருக்கு நந்தனார் சரிதத்தைப் பன்ணமைத்துப் பாடத்தக்க பாடல்களாக இயற்றும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்பதை அய்யரவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

' சிதம்பரம் சென்ற காலங்களில் ஆலயத்தில் நந்தனார் பிம்பத்துக்கு அருகில் இருந்து சிவத்தியானாதிகள் செய்து வந்த பழக்கத்தால் இவருக்கு நந்தனாருடைய நினைவு வந்தது. '

(பக்கம் 33)

அய்யரவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள்:

' இவருக்கு (கோபால கிருஷ்ண பாரதியாருக்கு) நந்தனார் சரித்திரத்திலே மனம் சென்றதற்கு முக்கிய காரணம் சிதம்பர ஆலயத்தி லுள்ள நந்தனாருடைய பிம்பமென்று முன்பு தெரிவித்தேன். ' (பக்கம் 74)

சாமிநாத அய்யரவர்கள் குறிப்பிடும் நந்தனார் உருவத்தைக் காண ஆவலுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயம் செல்பவர்களுக்கு ஆலயத்தில் எங்கு தேடினாலும் அதனைக் காண இயலாது என்பதுதான் இன்றுள்ள நிலைமை. நந்தனாரின் திருவுருவம் இன்றல்ல, என்றோ அப்புறப்படுத்தப்பட்டு விட்டிருக்கிறது.

இதுபற்றி தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த பேராசிரியர் சு. மகாதேவன் ஒரு தகவலைத் தந்துள்ளார்.

'1935ல் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது உறவினருடன் தில்லைப் பெருங் கோயிலுள் சென்று கல்லுருவில் நடமிடும் நடனசபை நடராஜரைக் காணும் நல்வாய்ப்பினை முதன் முதலாகப் பெற்றதாக 'க் குறிப்பிடும் மகாதேவன், அங்கு சற்றுத் தென்புறம் உள்ள தூணை அடுத்து, திரு நாளைப்போவாரும் கும்பிடும் கோலத்தில் ஆளுயரக் கற்சிலையாக நின்று கொண்டிருந்தார் ' என்று தெரிவிக்கிறார். 'அனைத்துச் சிவன் கோயில்களிலும் அறுபத்து மூவர் வரிசையில் நந்தனார் இடம் பெற்றிருப்பினும், திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு உள்ளது போன்ற சிறப்பிடம் தில்லையரங்கத்தில் நந்தனாருக்கு இருப்பது தெளிவாகத் தெரிந்தது ' என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார், மகாதேவன்.

மகாதேவன் மீண்டும் 1943ல் சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்கிறார். இப்பொழுது அங்கு நந்தனாரைக் காணவில்லை! இதுபற்றி மகாதேவன் மனம் நொந்து எழுதுகிறார்:

'1943ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பட்டப் படிப்பு மாணவனாகத் திருக்கோயிலுள் திரும்பவும் நுழைந்தபோது அடியார் இல்லாத நிலையில் ஆடாது அசையாது நின்றுகொண்டிருந்த அருள்மிகு அம்பலவாணனைக் கண்டு அதிர்ச்சியுற நேர்ந்தது! ஆம், நந்தனார் இருந்த புனித இடம் போவாரும் வருவாரும்

அடிவைத்து நடக்கும் பொது இடமாக, வெறும் வெளியாக இருந்தது! '

நந்தனார் சிலையுருவில் நின்றிருந்த இடம் கால்களால் மிதிபடும் இடமாகிவிட்டிருந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

எவ்வித ஆதாரங்களுமில்லாமல் வழமை போல நந்தனார் கொல்லப்பட்டார் என்ற மார்வாடிகளின் சமண வஞ்சத்தைத் தமிழருக்குள் புகுத்த முற்படுகின்றீர்கள். நியாயமாகவும், நீதியாகவும் முதலில் தலைப்பிடப் பழகுங்கள். ஏன் இப்படி அயோக்கித்தனம் செய்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

சரி! நந்தனுக்கு என்ன நடந்தது என்பதை நீங்களாவது சொல்லுங்களேன்.

நந்தனுடைய வரலாற்றை மறைக்காமல் அப்படியே இங்கே தர முடியுமா?

Link to comment
Share on other sites

நந்தன் கதையை இங்கே தருகிறேன். இதிலே என்னுடைய ஆய்வு ஒன்றும் இல்லை. சைவர்கள் எப்படிச் சொல்வார்களோ அப்படியே தருகிறேன். அதுவும் சைவநாயன்மார்கள் பற்றி போற்றிப் பேசுகின்ற ஒரு இணையத்தளத்தில்இருந்து அப்படியே எடுத்துத் தருகிறேன்.

இந்தக் கதை சொல்கின்ற விடயம் என்ன என்பதை உங்களுடைய அறிவு கொண்டு சிந்திக்கும் வண்ணம் வேண்டுகிறேன். ஒவ்வொரு விடயத்தையும் "ஏன்" என்ற கேள்விகளோடு சிந்திக்கும்படி கேட்கிறேன்

இனி நந்தன் கதை:

திருநாளைப்போவார் என்ற நந்தனார், குலத்தால் தாழ்ந்தவர். ஆனால் இறைவன் மீதுள்ள அன்பால் மலை போன்று உயர்ந்தவர். ஆதனூரில் பிறந்து, அங்கிருந்த சேரியில் வாழ்ந்து வந்தார். கோயில்களில் ஒலிக்கும் மேளங்களுக்குத் தோலும், வாத்தியங்களுக்கு நரம்பும் கொடுத்து தொண்டு செய்தார்.

கோயிலுக்கு உள்ளே போக முடியாததால், வெளியே நின்று ஆடியும், பாடியும், இறைவனை வழிபட்டார். ஒருநாள், திருப்புன்கூர் என்ற ஊருக்குச் சென்று கோயில் வாசல் முன் சென்று, இறைவனை வழிபட வேண்டி மனமுருகி வேண்டினார். பெருமானை நோக்கி அமர்ந்திருந்த நந்தி, மறைத்தது. கருணைக்கடலான கடவுள், நந்தனாருக்கு தரிசனம் கொடுக்க விரும்பியவராக, நந்தியை சற்று விலகி இருக்குமாறு அருள் புரிந்தான். நந்தியும் விலகியது. அருளாளருக்கு பெருமானின் தரிசனம் நேராகக் கிடைத்தது.

சிதம்பரத்திற்குச் சென்று கூத்தபிரானைக் கண்டு களிக்க வேண்டும் என்கிற பெரும் விருப்பம் நந்தனாருடைய உள்ளத்தில் தீ போல் பரவியது. இரவு முழுவதும் இதைப் பற்றி நினைப்பார். ஆனால், காலையில், தனது குலத்திற்கு இது பொருந்தாது என்று எண்ணி சும்மா இருந்து விடுவார். போக வேண்டும் என்ற ஆவல் தோன்றும் போதெல்லாம் ‘‘நாளை போவேன்’’ என்று சொல்லிக் கொள்வார். காலம் கழிந்தது. ஒருநாள் நந்தனார், தனது ஊரை விட்டுக் கிளம்பி, தில்லை வருகிறார். உள்ளத்திலே ஆராத அன்பு ஆனால் எல்லையைக் கடந்து உள்ளே செல்ல அச்சம். இறைவனின் திருக்கூத்தைக் காண, தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்ற ஆழ்ந்த துயரம் அவரை வாட்டுகிறது. இறைவன் அவர் கனவில் தோன்றி, ‘‘நெருப்பில் இறங்கி என்னை வந்தடைவாய்’’ என்கிறார். அந்தக் கோயிலின் நிர்வாகத்தைத் தாங்குகின்ற தில்லை வாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி, ‘‘நந்தனார்க்கு நெருப்பு அமைத்துக் கொடுக்கவும்’’ என்று பணிக்கின்றான்.

அவர்கள் தீக்குண்டம் அமைத்துக் கொடுத்தார்கள். நந்தனார் தீயை வலம் வந்து, கைகளைக் கூப்பித் தொழுது, நடராஜப்பெருமான் திருவடிகளை நினைந்தவராக, நெருப்பினில் புகுந்தார். சாதி, குலம் போன்ற மாயையால் ஆன உடம்பு மறைந்தது. ஒரு பெரும் முனிவரின் வடிவத்துடன் நந்தனார் தீயிலிருந்து வெளி வந்தார்.

எல்லோரும் அவரை வழிபட்டார்கள். நந்தனார் எனும் தவ முனிவர் கோயிலில் நுழைந்தார். திருக்கோபுரத்தை வணங்கினார். கூத்தப்பெருமான் நடமாடும் எல்லைக்குள் சென்றார். அதற்கு மேல் அவரை ஒருவரும் காணவில்லை. இறைவனுடைய திருவடிகளை என்றும் தொழுது இருக்க அருள் பெற்றார்.

Link to comment
Share on other sites

உங்கள் யாருக்கும் கேள்விகள் கேட்கத் தெரியவில்லை போல் இருக்கிறது.

நான் கேட்கிறேன்.

1. நந்தியை விலகி இருக்கச் செய்து நந்தனுக்கு சிவபெருமான் தரிசனம் கொடுத்தார் என்ற செய்தி தருகின்ற பொருள் என்ன?

Link to comment
Share on other sites

சிவனை நந்தன் தரிசிப்பதை நந்தி விரும்பவில்லையா...? :wub:

Link to comment
Share on other sites

நந்தியை விலகி இருக்கச் செய்து நந்தனுக்கு சிவபெருமான் தரிசனம் கொடுத்தார் என்ற செய்தி எமக்கு தருகின்ற பொருள் என்ன?

எல்லோருக்கும் தெரிந்த சிவபெருமான் நந்தனக்கு மட்டும் தெரியவில்லை. காரணம் நந்தன் கோயிலுக்கு வெளியே நின்றான். மற்றவர்கள் கோயிலுக்கு உள்ளே நின்றார்கள். உள்ளே நின்றாதால் நந்தி மறைக்காமலே அவர்களால் இறைவனை தரிசிக்க முடிந்தது.

நந்தனுக்கு இறைவனுடைய தரிசனம் கிடைக்காமல் போனதற்கு காரணம் நந்தி அல்ல. நந்தன் வெளியே நின்றதுதான் காரணம். வெளியே நின்றதால்தான் நந்தி மறைத்தது. நந்தனால் இறைவனை தரிசிக்க முடியாமல் இருந்ததற்கு நந்தனை தாழ்ந்தவன் என்று சொல்லி, அவனை வெளியே நிற்க வைத்தவர்கள்தான் காரணம்.

இப்பொழுது சிவபெருமான் என்ன செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

நந்தன் கம் இன் ...! என்று சொல்லியிருக்காலாம். ஆனால் உள்ள இருந்தது சிலை ஆயிச்செ.....சரி இத வச்சு நீங்க சண்டய ஆரம்பிக்காதேங்கோ..! :mellow:

Link to comment
Share on other sites

கொலை செய்யப்பட்ட நந்தனின் சிலை எங்கே?

எங்களை கேட்டால். நாங்கள் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறம். :mellow::mellow:

Link to comment
Share on other sites

இந்த கட்டுரைக்கான மூலத்தை சபேசன் திண்ணையில் எடுத்துள்ளார்... ஏன் இந்த திருகுதாளம் சபேசன்...??

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Link to comment
Share on other sites

இந்த கட்டுரைக்கான மூலத்தை சபேசன் திண்ணையில் எடுத்துள்ளார்... ஏன் இந்த திருகுதாளம் சபேசன்...??

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

கொலை செய்ய பட்ட நந்தனின் சிலை எங்கே???என்று சபேசன் அங்கிள் தேடி கொண்டிருக்க நம்ம தயா அண்ணா.. :mellow: (இக் கட்டுரைக்கான மூலத்தை கண்டு பிடித்திருக்கிறார்)..முடியல என்னால..எப்படின்னா இப்படி எல்லாம்.. :mellow: (அது சரி யார் அந்த நந்தனார் நம்ம சபேசன் மாமாவின் ரிலேசனோ :mellow: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தயா,

மூலத்தை எங்கே இருந்து எடுத்தால் என்ன? நான் இதை googleஇல் உள்ள ஒரு விவாதத் தளத்தில் எடுத்தேன். அதிலே எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அதில் உள்ள எழுத்து நடையே அது என்னுடையது இல்லை என்பதை கூறும்

அத்துடன் அக் கட்டுரையை நான் முழுமையாக இணைக்காத காரணத்தினால் மூலத்தை குறிப்பிட வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆதாரங்களாக தரப்பட்டிருப்பவைகளின் மூலங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறன. அது போதும் என்று நினைக்கிறேன்.

ஆயினும் மேலே உள்ளதை நான்தான் எழுதினேன் என்ற தோற்றம் உருவாகி இருந்தால், அதற்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

மூலத்தை எங்கே இருந்து எடுத்தால் என்ன? நான் இதை இல் உள்ள ஒரு விவாதத் தளத்தில் எடுத்தேன். அதிலே எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அதில் உள்ள எழுத்து நடையே அது என்னுடையது இல்லை என்பதை கூறும்

இக்கூற்று தனது தவறை நியாயப்படுத்த வைக்கப்படும் வழமையான திரிபின் விளைவு. கள விதிக்கமைய தகவல் எங்கிருந்து பெறப்பட்டது என்ற விபரம் இங்கு அளிக்கப்பட வேண்டும். அதை விடுத்து அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதல்ல இங்கு கள விதி..! இது குறித்து நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்..! இது ஒரு தவறான செயலுக்கான ஆரம்பமாக அமையலாம்..! :mellow::mellow:

Link to comment
Share on other sites

கோபால கிருஷ்ண பாரதியார் பற்றி மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யரவர்கள் எழுதிய நூல்தான் இதனுடைய மூலம். இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான மூலத்தை தந்ததன் பின்பு வேறு என்ன வேண்டும்?

அத்துடன் இதை நான் எழுதியது போன்ற தோற்றம்ஏற்பட்டிருந்தால், அதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறேன்.

இதை நீங்கள் பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டு விவாதத்திற்குள் செல்வதற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

அது ஒரு பிரச்சினை இல்லை சபேசன். நீங்க தொடருங்கோ

Link to comment
Share on other sites

நல்லது, இப்பொழுது விவாதத்திறகுள் வருவோம்.

நந்தனால் சிவபெருமானை காண முடியாது இருந்ததற்கு காரணம் நந்தி அல்ல. அவரை வெளியில் நிற்க வைத்தவர்கள்தான் காரணம்.

எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமான் இப்பொழுது என்ன செய்திருக்க வேண்டும். நந்தனை கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் சிவபெருமான் அப்படிச் செய்யவில்லை.

நந்தனை வெளியிலேயே நிற்க வைத்து நந்தியை விலகச் செய்து தரிசனம் கொடுக்கிறார்.

இதனுடைய அர்த்தம் என்ன?

நீ கீழ்சாதி, நீ கோயிலக்குள் வருவதற்கு தகுதி அற்றவன், நீ என்னுடைய பக்தன் என்பதால் நந்தியை விலக்கித் தரிசனம் தருகிறேன், ஆனால் கோயிலுக்குள் வந்து விடாதே"

இதுதானே அர்த்தம்.

சிவபெருமான் நந்தியை விலக்கியதன் மூலம் நந்தனை தொடர்ந்தும் கோயிலுக்கு வெளியிலேயே நிற்க வைக்கிறார். சாதிய அடக்குமுறை தொடர்ந்தும் தக்க வைக்கப்படுகிறது.

நந்தி விலகியது என்று பூரிப்படைவதில் அர்த்தம் இல்லை. நந்தன் தொடர்ந்தும் கோயிலுக்குள் நுழைய முடியாமல் நிற்கிறான் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

அவனால் சிதம்பரத்திற்குள்ளும் நுழைய முடியவில்லை. நுழைந்தவனை கடவுளின் பெயரில் உயிரோடு எரித்து விட்டார்கள்.

இங்கே ஒரு சந்தேகம் வரலாம். தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த கண்ணப்ப நாயனாரால் கடவுளுக்கு பூசை எல்லாம் செய்ய முடிந்ததே, அது எப்படி என்று?

இப்பொழுது என்னுடைய கேள்வி:

கண்ணப்பநாயனாரை பூசை செய்ய அனுமதிக்கின்ற இந்து மதம், நந்தனாரை கோயிலுக்குள் செல்வதற்கு கூட அனுமதி மறுத்தது ஏன்?

இதற்கு உங்களுடைய கருத்தை கூறுங்கள்!

Link to comment
Share on other sites

கோவிலுக்குள் இருந்த சிலை அப்படி கூறியிருக்குமா..? இதையும் பேசாமல் அந்த தில்லை அந்தணர் மீது பழியைப் போடுங்கள்....!

நீங்கள் கூறும் தீண்டாமை இன்னமும் மற்ற மதங்களிலும் உள்ளது. அண்மையில் நடந்த ஒரு சம்பவம்..!

http://thatstamil.oneindia.in/news/2008/03...n-vanniars.html

Link to comment
Share on other sites

லீ,

சாதி என்பது மதங்களில் இருப்பது வேறு, மதத்தவர்களில் இருப்பது வேறு. இந்துக்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் சாதியையும் அங்கே கொண்டு போய் விட்டார்கள்.

ஐரோப்பா, அமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சாதி இல்லை. காரணம் சாதி என்பது கிறிஸ்தவத்திலோ, இஸ்லாமிலோ, பௌத்தத்திலோ இல்லை. சாதியை இந்த மதங்கள் ஆதரிக்கின்றன என்பதற்கு மதரீதியான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

ஆனால் இந்துக்களாக இருந்து குறிப்பிட்ட மதங்களுக்கு மாறிய பலரிடம் இன்றும் சாதி இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக சாதியை இவர்களுடைய ரத்தத்தில் ஊறும்படி இந்து மதம் செய்து விட்டது.

நாம் மதத்தவர்கள் செய்கின்ற தவறிற்கும் மதம் செய்கின்ற தவறிற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பைபிளில் கொள்ளை அடிப்பதற்கு ஆதரவாக இருந்து, ஒரு கிறிஸ்தவன் கொள்ளை அடித்தால், அது கிறிஸ்தவ மதத்தின் தவறு. ஆனால் பைபிளில் கொள்ளை அடிக்கக் கூடாது என்று எழுதியிருக்க, கிறிஸ்தவன் கொள்ளை அடித்தால் அது அந்த மனிதனின் தவறு.

ஆனால் சாதி பற்றி இந்த மத வேதங்கள், புராணங்கள், நடைமுறைகள் என்ன சொல்கின்றன என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. சாதி என்பது இந்து மதத்தின் தவறுதான். அதனால்தான் நான் மதம் பற்றி பேசுகிறேன்.

நந்தன் கதையே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

Link to comment
Share on other sites

சபேசன்.. அதேபோல் தான் இந்து மதமும் அப்படிப்பட்ட தவறானவர்களால் வழிநடத்தப்படுகின்றது..! தவறான கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. சீர்திருத்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. இதற்கு ஒரே வழி மதங்களை மறந்து மனிதத்துவத்தை மேம்படுத்துவது தான்..!

பழைய புராணங்களை கிண்டி என்ன பிரயோசனம்..?

Link to comment
Share on other sites

மதங்களை மறந்து மனிதத்திற்குள் வாருங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கையும்.

ஆனால் மதங்களை பிடித்திருப்பவர்களால் அது முடியவில்லை. அவர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இந்து மதத்தில் சாதி இல்லை என்பதற்கு நாயன்மார்களுடைய கதைகளை சிலர் முன்வைப்பதை கண்டிருக்கிறேன். இது மிகத் தவறான ஒன்று. இது கூட சாதியை கட்டிக்காக்கும் ஒரு சூழ்ச்சிதான். இதை அம்பலப்படுத்தவே இவைகளை எழுதுகிறேன்.

இவைகனை புராணங்கள் என்று ஒதுக்கி விட முடியாது. நந்தனார்கள் இன்றும் இருக்கிறார்கள். நந்தனார், கண்ணப்பனார் நடைமுறை இன்றும் இருக்கிறது. ஆகவே இவைகளை எழுத வேண்டிய தேவையும் வருகிறது.

சரி, நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்.

கண்ணப்பரை கண்ணப்பராகவே பூசை செய்ய அனுமதித்த சிவபெருமான் நந்தனை நந்தனாக கோயிலுக்குள் நுழைய ஏன் அனுமதிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓட்டு மொத்தமாக சொன்னால் இங்க கனபேருக்கு வேற வேலை இல்லை. பொழு போகவுமில்லை. மென்று விழுங்க அவலாக இந்து மதம், சாதி, சண்டை, ஞாயன்மார், கீதை என்று கண்டதை எல்லாம் ஆராய்ச்சி செய்யிறம்.

ஆனால், இவங்க ஒரு பக்கத்தால் மதத்தை திட்டுறானுக, மறுபக்கத்தால மதத்தை வைத்து மில்லியன் கணக்கில தாயகத்தின் தேவைகளுக்கு கூட பணம் சேர்க்கிறாங்க..! 1606 ல ஒருவன் நடந்து போனால் இப்பவும் அவன் நடந்து தான் போவான் என்பது உங்கள் வாதம் இல்லை அதற்க்கு பின்னர், மாட்டுவண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், பஸ், ரெயின் விமானம் என்று கணக்க வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லுறீங்க...

ஆ ஊ என்றதுக்குள்ள அது தான் பௌத்தறிவு என்பீங்க.. இதற்கு இங்க சிலது ஏமோதன் ஆகி பதிலளிக்கும் அதுக்கு நீங்க கொஞ்ச விளக்கம் கொடுப்பீங்க...

முதல் சொன்னது போல நேர விரையமாகு.. அதை கொஞ்சம் கவனியுங்கோ... இதில இப்பிடி தேவையற்றத எழுதுற நேரம் கொஞ்ச நேரம் ஓவர் ரைம் செய்து, தாயகத்தின் தேவைகளை நிறைவேற்ற உதவலாம் பாருங்க...

கொஞ்சம் சிந்திப்பம்... கோவில்கள் இப்ப இருக்கட்டும்.. ஏன் என்றா ஓடுற சனம் அதுகு;குள்ளயாவது தஞ்சமடையலாம்...

அது மட்டுமில்ல புலத்தை பொறுத்த வரை சனம் அதிகமாக வரும் இடம் கோவில் தான் பாருங்கோ.. அதையும் கெடுத்து தமிழன் தமிழன்ர மூச்சைய பார்க்காமல் பண்ணிறதிலையே நிக்கிறீங்க...

பிறகு யாழ் தான் தஞ்சம் ஆகி, எல்லாரும் ஆய்வு, ஆராட்சி, பௌத்தறிவு பேச வெளிக்கிட்டிடுவினம். அட அது வேற எங்க வயது போன சனத்துக்கு கீபோட்டும் தெரியா மவுசும் தெரியா அதுகள் எங்காவது மோலுக்க நித்திரை கொள்ள செக்யூரிட்டி பிடிச்சு வெளிய விட இதெல்லாம் பெரிய சமூக பிரச்சினையாகிடும்...!

" உங்கள் கருத்தை சொல்லும் உரிமையை ஏற்க்கும் அதே நேரம், நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்றால் உங்கள் கருத்து சொல்லும் உரிமையை தருவது முட்டாள் தனம்" அது தான் மேழைத்தேச ஜனநாயகம்...!

Link to comment
Share on other sites

.....

ஐரோப்பா, அமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சாதி இல்லை. காரணம் சாதி என்பது கிறிஸ்தவத்திலோ, இஸ்லாமிலோ, பௌத்தத்திலோ இல்லை. சாதியை இந்த மதங்கள் ஆதரிக்கின்றன என்பதற்கு மதரீதியான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

....

ைபபிள் படிக்காது அதில் சாதி இருக்கா இல்லையா என்று என்னால் கூற முடியவில்லை.. ஆயினும் ஐரோப்பிய அமெரிக்க மக்கள் மத்தியிலும் சாதி உண்டு. அது சமூகக் காரணிகளால் வெளித் தெரியவில்லை.

இங்கு சிறிய வித்தியாசம் இருக்கிறது. இந்து சமயம் சாதிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது என இந்து சமயத்தின் பிரிவாகிய சைவ சமயத்தைச் ( :P ) சார்ந்தவன் என்னும் வகையில் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆயினும் அமெரிக்கர்கள் ஐரோப்பியர்களிடம் சாதியே இல்லை என்ற வகையில் அமைந்த உங்கள் கருத்துடன் ஒத்திட முடியவில்லை. நீங்கள் பைபிள் படித்து அதில் சாதியைப்பற்றி எதுவும் குறிப்புக்கள் இல்லையேயானால் பொதுவாக கத்தோலிக்க மதத்தில் சாதி இல்லை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து ஐரோப்பா அமெரிக்கா என்று கூறி அங்கு சாதியே இல்லையென்பது ஏற்புடையதன்று...

Link to comment
Share on other sites

பறவைகள்,

நீங்கள் என்னுடைய கருத்தை சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. அல்லது படித்தும் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ தெரியவில்லை.

1606ஆம் ஆண்டில் நடந்தவர்கள் இன்றைக்கும் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்களே என்பதுதான் எம்முடைய பிரச்சனை. பேருந்து, தொடருந்து, வானூர்த்தி எல்லாம் வந்த பிறகு நடப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த முட்டாள்களை பார்த்துத்தான் நாம் பேசுகிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மதங்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகளை கைவிட்டு முன்னேறுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

நாம் இவ்வளவு காலமாக எழுதியும் இந்த அடிப்படை விடயமே உங்களுக்குப் புரியவில்லை என்றால் உங்களுக்கு எதைச் சொல்லிப் புரிய வைப்பது.

சிந்தித்துப் பாருங்கள்! நந்தன் ஏறக்குறைய 1000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனாம். அவனை அன்றைக்கு கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. 1000 ஆண்டுகள் கழிந்து இன்றைக்கு என்ன நிலைமை? இன்றைக்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருப்பவர்கள் எத்தனை கோடி என்று உங்களுக்குத் தெரியுமா?

1600இல் நடந்தவனை இன்றும் நடக்கும்படி வற்புறுத்துவது யார்? 1000 ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்கு வெளியே நின்றவனை இன்றும் நிற்கச் சொல்பவன் யார்?

இவைகளை சிந்தியுங்கள்! நாம் பழைய காலத்தை விட்டு புதிய காலத்திற்கு வரச் சொல்கிறோம்.

வர மறுக்கிறான். வர விரும்புபவனும் தடுக்கப்படுகிறான். இதற்கு காரணமாக மதத்தை காட்டுகிறான்.

காரணம் எதுவோ அதைப் பற்றிப் பேசாமல் எப்படி இருக்க முடியும்? வெளியே வந்து உலகத்தைப் பாருங்கள். உலகம் வேண்டாம்! ஆகக் குறைந்தது தமிழினத்தைப் பாருங்கள்!

தமிழினம் பிளவு பட்டுப் போயிருப்பதைப் பாருங்கள்! இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பாருங்கள்! உண்மை தெரியும்

கோயில்கள்இருக்கட்டும், தமிழர்கள் எல்லோரும் கோயில்களுக்குச் செல்லட்டும். ஆனால் கோயில்களில் தமிழ் ஒலிக்கட்டும். அனைத்து மக்களும் எந்த வேறுபாடும் இன்றிக் கோயில்களில் அனுமதிக்கப்படட்டும். கோயில்களின் குருக்களாக எல்லோரும் வரட்டும். ஆனால் அப்படியா நடக்கிறது?

தன்னுடைய தாய் மொழியை இன்று வரை அனுமதிக்காத கோயிலுக்கு வெட்கம் கெட்ட தமிழன்தான் போய் வழிபடுவான்.

இது போன்று இன உணர்வு இல்லாதவன்தான் கோயிலுக்கும் போகிறான். சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு கொடியும் பிடிக்கிறான்.

இன விடுதலைக்கு போராடுகின்ற ஒரு இனத்தின் இன உணர்வை மதம் மழுங்கடிக்கின்ற போது, அது குறித்து நாம் பேசியே ஆக வேண்டும். பேசுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிங்களா நந்தனையும் கொன்னுட்டாங்களா-

Link to comment
Share on other sites

சுடர்,

நீங்கள் சொல்வது ஒரளவு சரி. மனிதர்களுக்குள் வேறுபாடுகள் உலகம் முழுவதும் இருக்கிறது. வர்க்க, வகுப்பு வேறுபாடுகள் நிறைய உண்டு. ஐரோப்பாவிலும் மன்னர் பரம்பரை, மத குருக்கள், விவசாயிகள் என்று பிரமிட் வடிவில் பெரும் வேறுபாடு இருந்தது. ஐரோப்பாவில் பிரமிட் வடிவில் இருந்து வேறு பாடுகள் இன்று வேறுவிதமான பெயர்களைக் கொண்ட வர்க்கங்களோடு ஒரு வெங்காய வடிவில் பரிணமித்திருக்கிறது.

ஆனால் இதை இந்து மதத்தில் இருக்கும் சாதியோடு ஒப்பிட முடியாது. ஐரோப்பாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ளவனால் உயர்ந்த வகுப்பிற்கு வர முடியும்.

ஆனால் எம்மிடம் உள்ள சாதி மாறாது. காரணம் இங்கே சாதி என்பது பிறப்பால் வருவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தின் மனு தர்மமும், பகவத் கீதையும், புராணங்களும், வேதங்களும், இதிகாசங்களும் மற்றும் நடைமுறைகளும் "சாதி பிறப்பால் வருவது, அதை மாற்ற முடியாது" என்று சொல்கின்றன.

இதுதான் இங்கு பிரச்சனை. சாதியை தான் நினைத்தாலும் மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் கிருஸ்ணர் சொல்கிறார். நந்தனை நந்தனாக கோயிலுக்குள் வருவதற்கு சிவபெருமான் அனுமதிக்கவில்லை.

இவ்வாறான சாதியைப் பற்றித்தான் நாம் இங்கே பேசுகிறோம்.

சரி, இதுவரை நான் கேட்ட கேள்விக்கு யாரும் ஏன் பதில் சொல்லவில்லை.

கண்ணப்பனை பூசை செய்த அனுமதித்த சிவபெருமான் நந்தனை கோயிலுக்கு உள்ளே வர ஏன் அனுமதிக்கவில்லை.

இதனுடைய பதில் வெகு இலகுவானது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.