Jump to content

சுவாரசியமான ஒரு தொலைக்காட்சி விவாதம்


Recommended Posts

ஒரு சுவாரசியமான தொலைக்காட்சி விவாதம் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

ஆறு புத்திசீவிகள், அவர்களுள் மூவர் நாத்திகர் மற்றையோர் ஆத்திகர். விவாதத் தலைப்பு "கடவுள் நம்பிக்கை நமக்கு நல்லதா அல்லது கெட்டதா" என்பதாகும்.

நாத்திகர் பிரிவினரின் தராதரம்: ஓருவர் நாடறிந்த ஓய்வுபெற்ற ஒன்கோலஜிஸ்ற் மற்றும் சிந்தனையாளர் இன்னொருவர் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஓய்வு பெற்ற தத்துவவியல் பேராசிரியர். இன்னொருவர் அயல் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், சிந்தனையாளர்.

ஆத்திகர் பிரிவினரின் தராதரம்: ஒருவர் நரம்பியல் விஞ்ஞானம் மற்றும் உளவியல் பேராசிரியர் (அடியேன் இவரது தீவிர இரசிகன்), இன்னொருவர் ஒரு பல்கலைக்கழத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிந்தனையாளர் மற்யைவர் எழுத்தாளர், ஆய்வாளர் என்பதோடு ஆன்மீகம்சார் சமூகவியற் செயற்பாட்டாளர்.

வாதப் பிரதிவாதங்கள் (எனது நினைவில் இருந்து...)

நாத்திகர்: அண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தில், கடவுள் நம்பிக்கை உடையோராகத் தம்மை அடையாளப் படுத்திய மாணவர் மத்தியில், "கடவுள் உங்களிடம் யாரையேனும் கொல்லச் சொன்னால் கொல்வீர்களா?" என்று ஒரு கருத்துக்கணிப்பினை நடாத்தியபோது, பதிலளித்தவர்களில் ஏழு விழுக்காடானோர் "ஆம"; என்று பதிலளித்திருந்தனர். என்னை யாரேனும் இப்படிக் கேட்டிருப்பின் நான் கூறியிருக்கக் கூறிய பதில், கடவுள் என்னிடம் யாரையேனும் கொல்லச் சொல்வதாக நான் உணர்ந்தால் நான் எனது மருந்துகளின் அளவினைத் தான் கூட்டுவேனே தவிர கொல்ல மாட்டேன் என்பதாயே இருந்திருக்கும். ஆக, கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மனிதனின் சிந்தனையை மழுங்கடித்துப் பேராபத்து விளைவிக்கின்றது (தனக்கு நிகழ்வது கடவுளுடனான சம்பாசனை அல்ல கலூசினேசன் என்ற வருத்தம் என்று கூட அவன் உணராது செய்வது). இதனால் தான் இன்று நம் உலகில் மதங்களின் பெயரில் ஒருவரை ஒருவர் கொன்று திரிகிறார்கள்.

ஆத்திகர்: "கடவுள் உங்களிடம் வந்து ஆரையேனும் கொல்லச் சொன்னால் கொல்வீர்களா?" என்ற கேள்வியைக் கேட்டதும் தயங்காது "எனது மருந்தின் அளவைத் தான் கூட்டுவேன்" என்கின்ற நீங்கள், கேள்வி ஒருவேளை இவ்வாறு இருந்திருந்தால், அதாவது "ஒரு பில்லியன் டொலர்களிற்காகக் கொல்வீர்களா?" என்றோ அல்லது "உங்கள் குழந்தையின் உயிர் பிழைக்கவேண்டும் என்றால் இன்னாரைக் கொல்லுங்கள் என்றால் கொல்வீர்களா" என்றோ அல்லது இவ்வாறு வேறொன்றாக இருந்திருந்திருந்தாலோ கொல்வீர்களா என்றால் உங்களது பதில் அத்தனை இலகுவில் வெளிவந்திருக்காது. அதாவது உலகில் எத்தனையோ காரணங்களிற்காக ஆத்திகரும் நாத்திகரும் கொலை செய்கின்றார்கள். கமியூனிசவாதிகள் செய்த மில்லியன் கணக்கான கொலைகளும் ஹிட்லரின் கொலைகளும் மதத்தால் விளைந்தன அல்ல. உலகில் நாத்திகர் நடாத்திய பெருங்கொலைகளிற்கான உதாரணம் மலிந்து கிடக்கின்றது, எனவே கொலைஞர் என்ற சமூக விரோதிகளை கடவுள் நம்பிக்கை தான் தோற்றுவிப்பதாகவும், கடவுள் நம்பிக்கை இல்லை எனின் உலகு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதும் அபத்தமான வாதம். கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை நீக்கின் தேசியவாதம் போன்ற பிறிதொரு நம்பிக்கை அவ்வெற்றிடத்தை நிரப்பும். ஏனெனில் மனிதர்களின் உயிரியல் அமைப்போடு நம்பிக்கை பின்னிப் பிணைந்தது. ஏதாவது ஒரு நம்பிக்கை நமப்கு அவசியமானது.

ஆத்திகர்: ஒரு நம்பிக்கை அழிக்கப்படின் அதனால் உருவாகும் வெற்றிடத்தை பிறிதொரு நம்பிக்கை நிரப்பும் என்பதற்கு ஒரு விஞ்ஞானபூர்வமற்ற (anecdotal) ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூற விரும்புகின்றேன். சிலகாலங்களிற்கு முன்னர் அரசியல் மற்றும் நம்பிக்கை தொடர்பான சமூகவியல் தொடர்பில் ஒரு கலந்துரையாடலிற்காக பலரதரப்பட்ட பங்காளர்களோடு ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கான தயார் படுத்தல்களில் ஒன்றாக எமது நாட்டின் பிரசித்திபெற்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் (கலப் போல்) கனடாவின் கியூபெக் மாநிலத்தில் (குறிப்பு: பிரிவினைவாதப் போக்குடைய கனடாவின் கியூபெக் மாநிலத்தின் மிகப்பெரும்பான்மையான சமயமாகக் கத்தோலிக்கம் இருக்கின்றது) ஒரு சுவாரசியமான கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டிருந்தது. அக்கருத்துக் கணிப்பு கண்டறிந்த விபரம் என்னவெனில், கத்தோலிகத்தை நிராகரித்த மிகப்பெரும்பான்மையானோர் பிரிவினைவாதிகளாக, அதாவது கியூபெக் தேசிய வாதிகளாக உள்ளார்கள். அதாவது, கடவுள் நம்பிக்கை நிராகரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தேசியவாதம் கியூபெக் மக்களில் நிரப்பியுள்ளது.

நாத்திகர்: நீங்கள் கூறுகின்ற கருத்துக்கணிப்பு கண்டறிந்த விபரத்தை இவ்வாறு கூட அர்த்தப்படுத்திக்கொள்ளலாமே: அதாவது, தேசியவாத பிரிவினைப்போக்கினைக் கொண்டிருந்த மக்களால் நெடுங்காலத்திற்கு கத்தோலிக்கம் என்ற அடாவடி மதத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை...(பலத்த சிரிப்பு).

நாத்திகர்: ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதாவது, விலங்கு இராச்சியத்தில் இன்று மனிதன் ஆதிக்கசக்தியாகப் பரிணமித்து உள்ளான் என்றால், அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மனிதனின் நம்பிக்கை என்ற விடயம் ஏற்றுக்கொண்டே ஆகப்படவேண்டியது. அதாவது, ஆதி மனிதன் மரம் ஒன்று மின்னல் தாக்கி எரிவதைக் காண்கையில் "மின்னல் கடவுள்" "மரக்கடவுளுடன்" சேர்ந்து "தீக்கடவுள்" பிறந்தாக நம்பியதும், இத்தகைய ஒரு நம்பிக்கை அந்த மனிதனின் பயம் என்ற தடையை வெற்றி கொள்வதில் அவனிற்கு உதவியதும், பயத்தை வெற்றி கொண்டமை மனிதனின் உயர்வில் மிகமுக்கிய காரணி என்பதும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே. மனிதர்களின் உயிரியல் அமைப்பானது நம்பிக்கை என்ற விடயத்தை உள்ளடக்கியதாகவே அமைகிறது. அதாவது, ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வைக்க முடிவது எமது இருப்பிற்கும் உயர்விற்கும் இன்றியமையாதது. நம்பிக்கை என்ற மகத்தான தன்மையினால் ஏற்படக்கூடிய எண்ணற்ற நன்மைகள் தொடர்பில் எவரும் எதிர்க்கருத்து வைக்கமுடியாது. கடவுள் நம்பிக்கை என்பது இத்தகைய ஒரு ஆக்கபூர்வமான வழியில் மக்களால் பாவிக்கப்படுமேயாயின் கடவுள் நம்பிக்கை பற்றி எவரும் நோண்டத் தேவையில்லை. ஆனால் பிரச்சினை என்னவெனில், எனது கடவுள் மட்டும் தான் சரி நீ எனது கடவுளை நம்பவில்லை எனவே நீ சாத்தான் என்று மக்கள் கிளம்புவது தான் பிரச்சினை. கிறீஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் அதற்குள்ளே ஏகப்பட்ட உப பிரிவுகள் என்பதோடு அந்த உப பிரிவுகள் ஒன்றோடொன்று பொருதுவது பிரச்சினையானது. ஓவ்வொருபிரிவும் தனது மார்க்கம் தான் சொர்கத்திற்கான வழி என்று மற்றையவர்களைச் சாத்தான்கள் என்பது தான் கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் பிரச்சினை.

ஆத்திகர்: கடவுள் நம்பிக்கை என்பது பல பொருதல்களிற்கு இன்றைய உலகில் காரணமாகின்றவற்றுள் ஒன்று என்பது உண்மை தானெனினும், பலரை ஒற்றுமைப்படுத்தி ஒன்றிணைக்கவும் அது பயன்படுகின்றது என்பதும் மறுக்கப்பட முடியாதது. நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இல்லை எனில் மோதி மாண்டுபோகக் கூடிய பலரை நம்பிக்கை தனக்குள் இணைத்து வைத்துள்ளதும் கண்கூடு. இந்நேரத்தில் ஒரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். அதாவது நம்பிக்கையும் அதனால் விளையும் சமூகப் பிரச்சினைகளும் என்பன கடவுள் நம்பிக்கைக்கு மட்டும் தான் பொருத்தம் என்று திரும்பத்திருப்ப நாத்திகர்கள் ஒரு அபத்தமாக வாதம் புரிகிறார்கள். ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என்பதோடு அனைத்து நம்பிக்கைகளும் இத்தன்மை உடையனவே . இப்போ நாத்திகரை எடுத்துக் கொண்டால் இன்று நாத்திகம் "Atheist Evangelist" என்று கூறப்படும் அளவிற்கு அடிப்படைவாத நாத்திகமாக மாறிப்போயுள்ளது. எவ்வாறு கிறீஸ்த்தவ இவான்ஜலிஸ்ற் குழுமத்தினர் ஓயாது மற்றையவர்களைத் தமது மார்க்கத்திற்கு மாற்றும் வித்தத்தில் செயற்படுகிறார்களோ எவ்வாறு தம்மார்க்கத்தைச் சாராத அனைவரும் பரிதாபப்படவேண்டியவர்களாகவு

Link to comment
Share on other sites

நல்லதொரு விவாதத்தினை இலகு தமிழாக்கி தந்ததற்று நன்றிகள் :(:)

அப்பிடியே யாழிலை சபேசனின்ரை மற்றும் நெடுக்கின்ரை வாதத்ததையும் ஆங்கிலமாக்கி ஏதாவது ஆங்கில கருத்து களத்திலை போட்டு விடலாமே. சரி சரி என்னை முறைக்கிறது தெரியிது :wub::(

Link to comment
Share on other sites

வாதப் பிரதிவாதங்கள் (எனது நினைவில் இருந்து...)

அதாவது ஒரு ஆத்திகரின் "நினைவில்" இருந்து

Link to comment
Share on other sites

நன்றி சாத்திரி.

அதாவது ஒரு ஆத்திகரின் "நினைவில்" இருந்து

மொழிபெயர்ப்பு என்பதே கருத்துத் தொலைவிற்கும் திரிவிற்கும் வழிவகுக்கும் ஒன்று. இந்நிலையில், வேறு ஒரு மொழியில் பார்த்து இரசித்த ஒன்றை நேர இடைவெளியின் பின்னர் நினைவில் இருந்து தமிழ் படுத்தி எழுதி விட்டு நூற்றுக்கு நூறு வீதம் இதைத் தான் அவர்கள் சொன்னார் என்று கூறுவது

சாத்தியமற்றது. எனது பதிவை வாசிப்பவர்களிற்கும் அதை கோடிட்டுக் காட்டுவதற்காகத் தான் "எனது நினைவில் இருந்து" என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

இருப்பினும், எனது நினைவில் இருந்தவற்றை எனக்கு நான் நேர்மையாக எழுதியுள்ளேன் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

வார்த்தை ஜாலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது... புரிந்து கொள்ள இரு முறை படிக்க வேண்டி இருந்தது... நண்றி...

Link to comment
Share on other sites

வார்த்தை ஜாலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது... புரிந்து கொள்ள இரு முறை படிக்க வேண்டி இருந்தது... நண்றி...

என்னால் முடிந்தவரை முயன்றுள்ளேன். வாசித்துக் கருத்துக்கூறியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.

இதற்கு வாதவிதண்டாவாதம் தேவையில்லை

Link to comment
Share on other sites

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.

இதற்கு வாதவிதண்டாவாதம் தேவையில்லை

ஒரு வகையில் நீங்கள் கூறுவது சரியாகப் படினும், இம்முனையில் விவாதங்கள்

நடக்கத் தான் செய்கின்றன. அவ்வாறு நடந்த ஒரு விவாதம் தான் இங்கு பகிரப்பட்டுள்ளது.

எதனால் இத்தகைய விவாதங்களிற்கான ஆர்வம் பலதரப்பட்டவர்களிடையேயும் உலகளாவிய அழவில்

தொடர்ந்தும் காணப்படுகின்றது என்பது சிந்தனைக்குரியதொன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.