Jump to content

செருப்புப் பூசை


Recommended Posts

செருப்புப் பூசை

இந்தவார ஒரு பேப்பரில்

apirami.jpg

அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்னை பழிவாங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து அவரது ஒரு பக்கதர் கடைசி எச்சரிக்கையும் தந்து .இரண்டாண்டுகள் ஓடி ஓய்ந்து போன நிலைமையில்.இந்த விளம்பரத்தில் இருந்த ஒரு வசனம் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. அதாவது அபிராமி என்கிற லலிதாவின் பிறந்தநாளன்று (29.03.2008)அவரின் திருப்பாதுகைகளிற்கு விசேட அபிசேகமும் ஆராதனையும்.அவர் சாமியாடினாரா அவதாரமெடுத்தாரா.என்பதெல்லாம?? வேறு பிரச்சனை அனால் அவரின் செருப்பிற்கு அபிசேகம் செய்து பூசை செய்கிற அளவிற்கு எம்மவர் நிலைமை வந்து விட்டதா என்று நினைத்த பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து.இந்தச் சம்பவம் நடந்தது அதீத மத நம்பிக்கையே மூட நம்பிக்கையாகி அறிவியல் வளர்ச்சியோ கல்லியறிவோ அற்று ஏதோ முலையில் இருக்கின்ற ஒரு இந்தியக் குக்கிராமத்தில் அல்ல.

கனடாவில் மொன்றியலில் days inn hotal( விளம்பரத்தில் பார்க்கவும்) என்கிற ஒரு விடுதியில் நடந்ததுள்ளது அதற்கு அங்:குள்ள ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலேபோய் கனடாவில் உள்ள ஒரு வானொலியில் அந்நத நிகழ்வு நேரடிஒலிபரப்பு வேறை நடந்தது.விளம்பரத்தினைப்பார்??்ததும் நான் அதில் உள்ள ஒரு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பூசை பற்றிய விபரங்கள் பற்றிக் கேட்டேன். அன்று அபிராமி அன்னையின் படத்திற்கு பூசையும் பஜனையும் இடம்பெறும் என்றார்கள். சரி ஏதோ திருப்பாதுகைகளிற்கு ஏதோ அபிசேகமும் பூசையும் என்று விளம்பரத்திலை இருக்கே அது புரியவில்லை அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு.

அவை அம்மா அணிந்த பாதுகைகள் டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத்தான் பூசை என்றார்.திருப்பாதுகை என்றால் அது செருப்பா?? அல்லது சப்பாத்தா??என்கிற எனது அடுத்த கேள்வியை கேட்டதும் பதில் தந்தவர் பதறியவராய் அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.திருப்பாதுகை எண்றுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளை பரதன் அரியணையில் வைத்து பூசை செய்து ஆட்சி செய்தது போல தாங்களும் கனடாவில் அம்மனின் பாதுகைகளை வைத்து பூசை செய்கிறோம் என்று பரதன் பூசை செய்ததை பக்கத்தில் நின்று பார்த்தவரைப்போல எனக்கு ஒரு உதாரணமும் தந்து மேலதிகமாக டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் பஞ்சாமிர்தமும் தேசிக்காயும் கொடுக்கப்படும் என்று சொல்லி தொடர்பினை துண்டித்து விட்டார். சரி டென்மார்க் குளிருக்கு லலிதாவால் செருப்பு போட இயலாது எனவே அந்த திருப்பாதுகை சப்பாத்தாகத்தான் இருக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்தாலும் எனக்கு இன்னொரு சந்தேகம். அந்தச் சப்பாத்து NIKE காய் இருக்குமா அல்லது ADIDAS சா?? இல்லாட்டி ஊர்ப்பழக்கத்திலை இன்னமும் BATA தானா??? பஞ்சாமிர்தத்தை டென்மார்க்கில் இருந்தா கொண்டுவரவேண்டும் கனடாவில் பழங்கள் கிடையாதா?? அதுதான் போகட்டும் தேசிக்காய் என்னத்திற்கு என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றினாலும்.

அதில் இருந்த மற்றைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அந்த பூசை பற்றிய ஏதாவது படங்கள் கிடைக்குமா என்று விசாரித்தேன். படங்கள் அந்த நிகழ்வினை ஒழங்கு பண்ணியவர்களின் அனுமதி தந்தால் தரமுடியும் என்றார்கள் அந்த நிகழ்வினை ஒழுங்கு பண்ணியவர் யாரென்று விசாரித்தப் பார்த்தால் அவர் எனக்கு எற்கனவே இந்த டென்மார்க் லலிதா பற்றிய கட்டுரை சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டவர்தான். இவர் சுவிஸ் நாட்டில் இருக்கின்ற லலிதாவின் ஏழாலை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை இவர் எற்கனவே சுவிசில் லலிதாவிற்கு கிளைகளை ஆரம்பித்தள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த கனடாவில் செருப்புப் பூசை என்று தெரியவந்தது. எங்கள் ஊரில் சைவத்திற்கும் தமிழிற்கும் மிகப்பெரிய தொண்டு செய்த விபுலானந்த அடிகள் யோகர் சுவாமிகள் ஆறுமுக நாவலர் போன்றவர்களே தாங்கள் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஒரு போதும் ஏமாற்றிது இல்லை பாதணிகளையோ ஏன் பாதடிகளையோ கூட யாரும் பூசை செய்தது கிடையாது.

ஆனால் சிலர் தாங்கள் அவதாரம் என்றும் அற்புதம் செய்கிறோம் என்று ஊரில் வித்தை காட்டிய அனைவரும் கம்பங்களில் கட்டிவைத்து அடித்த அடியில் அவர்களது அற்புதங்களும் மறைந்து அந்த அவதாரங்களும் காணமல்போனதை நானறிவேன். தான் பராசக்தியின் அவதாரம் என்று கதைவிடும் லலிதாவிற்கு உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் என்னவென்று உண்மையான அர்த்தம் தெரியுமா என்று சந்தேகமே. புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் கடவுளின் அவதாரம் என்பது பூவுலகில் அனியாயமும் அக்கரமமும் அதிகரிக்கும் பொழுது நியாயத்தை நிலைநாட்டவும் எவ்வித பாவமும் செய்யாது துன்பப்படும் மக்களை காப்பாற்றவே கடவுளின் அவதாரங்கள் சித்திகரிக்கப் பட்டுள்ளது.

lalitha3.jpg

புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக??கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை. லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.

lalitha4.jpg

அதுமட்டுமா பெண்தெய்வங்களின் உருவப்படங்களில் தன்னுடையை படத்தை ஒட்டி கிராபிக் விழையாட்டுகள் செய்தும் (வெளிநாடு வருவதற்காக கள்ள பாஸ்போட்டில் தலை மாத்தின பழக்கதோசமாய் இருக்கலாம்) அரை மி.மீ அளவு மாணிக்கக்கல்லை வாயாலை எடுத்து அற்புதம் செய்கிராராம். மனிதன் மனிதனின் காலில் விழுவதையே மிகப்பெரும் கேவலமாக நினைக்கின்ற ஈழத்தவர்கள் இன்று புலம்பெயர்ந்து வந்த தேசத்தில் அறிவியல் உலகில் நின்று கொண்டு கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மூட நம்பிக்கைக்குள் வீழ்ந்து ஒரு போலி பெண்சாமியாரின் பாதடிகளை வணங்குவதை நினைத்தும் மக்களிற்கு வழிகாட்டியாய் இருந்து வழிநடாத்தவேண்டிய ஊடகங்களான் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளும் லலிதான் ஏமாற்றிற்கு துணைபோய் மக்களையும் மூட நம்பிக்கைக்கு துணைபோகத்தூண்டுவதை நினைத்தும் என்னுடய திருப்பாதுகையை கழற்றி( சப்பாத்தைத்தான்) எனக்கு நானே அடித்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை அது அவரவர் விருப்பம், கடவுள் நம்பிக்கை..

நானும் இந்தக் கோயிலுக்கு போய் இருக்கிறன் ஆக்களோட சும்மா பார்க்கிறதுக்கு. நான் அவவ பார்க்க போக இல்ல. நான் போனநேரம் கோயில்கட்டுப்பட்டுக்கொண்டு இருந்திது.

வெளியில சின்னச் சின்னக் கடைகளில வியாபாரமும் நடந்திது. நாங்கள் ஒரு மாம்பழப் பெட்டி மாத்திரம் வாங்கினனாங்கள். மரக்கறி அது இது எண்டு வேறு சில சாமான்களும் கோயில் வாசல் கடைகளில வில்பட்டிது.

நிறையப்பேர் அங்க போறீனம் எண்டுறதோட நம்பிக்கையுடனும் இருக்கிறீனம்.

எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கிண்டலடிக்கவும் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை அது அவரவர் விருப்பம், கடவுள் நம்பிக்கை..

நானும் இந்தக் கோயிலுக்கு போய் இருக்கிறன் ஆக்களோட சும்மா பார்க்கிறதுக்கு. நான் அவவ பார்க்க போக இல்ல. நான் போனநேரம் கோயில்கட்டுப்பட்டுக்கொண்டு இருந்திது.

வெளியில சின்னச் சின்னக் கடைகளில வியாபாரமும் நடந்திது. நாங்கள் ஒரு மாம்பழப் பெட்டி மாத்திரம் வாங்கினனாங்கள். மரக்கறி அது இது எண்டு வேறு சில சாமான்களும் கோயில் வாசல் கடைகளில வில்பட்டிது.

நிறையப்பேர் அங்க போறீனம் எண்டுறதோட நம்பிக்கையுடனும் இருக்கிறீனம்.

எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கிண்டலடிக்கவும் விரும்பவில்லை.

முரளி இங்கு நான் எழுதிய விடயம்கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல மூட நம்பிக்கை பற்றியது கடவுளை கும்பிடுங்கள் அது உங்கள் நம்பிக்கை கடவுள் பெயரால் ஏமாற்றும் மனிதரை கும்பிடாதீர்கள் அது உங்கள் முட்டாள்த்தனம்

Link to comment
Share on other sites

கடவுள் பெயரை சொல்லி காசு பறிக்கும் இப்படியான

கும்பலுகளை என்ன பண்ண முடியம்...

ஒருவேளை உண்மையான அம்மனே வந்து சொன்னாலும்

சனம் நம்பாது..

இதெல்லாம் ஒருவித மூளைச்சலவை.. வாய்மொழி பரப்புரைகள் மூலம் கடவுள் நம்பிக்கையுள்ள

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.. கோவிலில் இதுக்கென்றே சிலரை செட்டப்

செய்து வைத்திருப்பார்கள்.. புதிய அப்பாவி பக்தர்கள் காதில் விழும்படியாக அற்புதங்கள் பற்றி

அளந்துவிட சம்பளத்துடன் ஆட்கள் இருக்கு..

டென்மார்க்கில மட்டுமல்ல ஒவ்வொரு நாடுகளிலும் இப்படியான முகவர்கள் இருக்கிறார்களாம்..

அவர்கள் அம்மன் அற்புதங்கள் பற்றி அளந்துவிட: வாய் திறந்து கேட்கும் எமது அப்பாவி மக்கள்

தங்கள் துன்பங்கள் தீர ஒரு வடிகாலாக எண்ணி பணத்தை கொட்டி பரிகாரம் தேடப்பார்க்கிறார்கள்..

இது இயல்பு.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழி முள்ளை முள்ளால தான் எடுக்க வேண்டும்... :lol:

lalitha4.jpg

என்னால முடியல... :D

எங்க ஜம்மு?

ஒரு பஞ்ச் ப்ளீஸ்.......... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சயில் அஸிட் அடிக்க வேணும்.

Link to comment
Share on other sites

முரளி இங்கு நான் எழுதிய விடயம்கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல மூட நம்பிக்கை பற்றியது கடவுளை கும்பிடுங்கள் அது உங்கள் நம்பிக்கை கடவுள் பெயரால் ஏமாற்றும் மனிதரை கும்பிடாதீர்கள் அது உங்கள் முட்டாள்த்தனம்

சாத்திரி அண்ணை, முக்கியமா என்ன பிரச்சனை எண்டால் நான் அறிஞ்சவரையில ஆக்கள் இவவ தரிசனம் செய்யபோறதா தெரிய இல்ல. டென்மார்க்கில கோயில் எண்டால் இது ஒண்டுதான் இருக்கிது போல. இந்தக்கோயில் பிரபலமா வந்திட்டிது. கொஞ்சம் காலம் முன்னம் இது பன்றி வளர்க்கிற பண்ணையுக்க இருந்திச்சாம் இந்தக்கோயில். பிறகு இப்ப வேற ஒரு இடத்தில கோயில் மாதிரி கட்டப்பட்டு இருக்கிது.

டென்மார்க் தமிழ்ச் சனமும் கோயில் எண்டு ஒரு இடமும் இல்லை எண்டால் எங்கையாவது போகத்தானே வேணும்?

இப்ப கோயிலுக்கு போறது சாமி கும்பிட எண்டு இல்லை தானே? நிறைய சொந்தக்காரர், ஊர் ஆக்கள், உறவுகளை கோயிலுக்கு போனால் தான் காணலாம், இதவிட இப்ப மரக்கறி, பழம் எண்டு சாமாங்களும் வாங்கக்கூடியதா இருக்கிது.

அப்ப இப்பிடி மற்றப்பக்கமா கிடைக்கிற பலாபலன்கள பார்க்கேக்க... இவ செய்யுற சேட்டைகள் பெரிசா தெரிய இல்ல சாத்திரி அண்ணை.

வேணுமெண்டால் நீங்கள் ஒரு கோயில டென்மார்க்கில திறந்து பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சொல்வது போல இறைவழிபாட்டைக் கொச்சைப்படுத்துகின்ற கும்பல்கள் இவர்கள். அது சாய்பாபா ஆக இருக்கட்டும். இந்த டென்மார்க் பித்தலாட்டமாக இருக்கட்டும். இவர்களை அகற்றுவதே பக்தியின் உண்மைத் தன்மை நிலைக்க உதவும்.

சுவடி பார்ப்பது என்று ஒன்று இரு;ககின்றது தொடர்பாக அனைவரும் அறிவீர்கள். என் நண்பன் ஒருவனுக்கு அப்படி பார்க்க நேர்ந்தது. இது தான் உன் சுவடி ஒன்று குறித்தவர் படித்துக் காட்டியப்புறம் நண்பன் கேட்டான். என் சுவடி என்று சொல்கின்றீர்கள். என்னை அடையாளம் கண்டு விட்டீர்கள். பிறகேன் அந்தச் சுவடியை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். என்னிடம் தரலாமே என்று.

குறித்தவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செருப்புப் பூசை

புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக??கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை. லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.

.

என்ன சாத்திரி லொள்ளா அவ என்ன வைச்சுக்கொண்டா வஞ்சனை பண்ணுறா சட்டியிலை இருந்தால்தானே அகப்பையிலை வரும்

ஐயோ சாமி குற்றம் வரப்போகுது இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் யாராவது சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப் போன்றவர்களை சுட்டுக்கொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

சாத்திரி நான் அறிஞ்ச விசயங்கள் கொஞ்சம் தாறன்:

1. டென்மார்க்கில இருக்கிற ஆக்கள விட கூடுதலாக சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் ஆக்கள் தான் இந்தக்கோயிலுக்கு போறவர்களாம்.

2. இவவுக்கு இப்படியான அருள் கிடைத்தது 40வது வயதிலாம்.

3. அதற்கு முன் கோழி இறைச்சி எல்லாம் தங்கட வீட்டுக்கு வந்து சாப்பிட்டு இருக்கிறா என்று ஆக்கள் சொல்லுறீனம்.

4. அவவுக்கு ஒரு மகன் இருக்கிறாராம். இப்பிடி அருள் வந்ததும் தான் இனி இல்லற வாழ்க்கையில ஈடுபடமாட்டன் என்று சொல்லி புருசனை வேறு ஒரு கலியாணம் செய்யச் சொன்னதா கேள்வி. உண்மை பொய் தெரியாது.

5. தேரில இவவ ஏத்தித்தான் இழுக்கிறதாம். உண்மைபொய் தெரியாது.

6. இவவுக்குத்தான் சாமிக்கு செய்யுறது மாதிரி அளங்காரம் செய்து பூசை செய்யுறதாம்.

7. மொத்தத்தில இது நடமாடும் உண்மையான அம்மனாக கருதப்படுகிதாம்.

இவ்வளவு தகவல் தான் இப்போதைக்கு சேகரிக்க முடிஞ்சிது.

Link to comment
Share on other sites

முரளி நீங்கள்சொல்லியதில் பலது உண்மை இவரை ஓரளவு எனக்கு ஊரிலேயெ தெரியும் ஊரில்தனக்கு 6வயதில் சாமி வந்தது என்று சொல்லித் திரிந்தவர் ஆனால் ஊரில் பெரியளவு எடுபடவில்லை அதற்கு காரணம் இயக்கத்தின்கட்டுப்பாட்டில் அவரது ஊரும் இருந்தது அந்த நேரம்.கடவுளை காட்டு எண்டு இயக்கம் கட்டி வைச்சு அடிச்சிருந்தால் இவரால் காட்ட முடியாமல் போய்இருக்கும். அதனால் அவர் அளவுடன் நிறுத்திவிட்டார். பின்னர் டென்மார்க் வந்தபின்னர் அதே விழையாட்டு ஆனால் ஆரம்பத்தில் அவரது வீட்டு நிலவறையில் ஒரு அம்மன் படத்தை வைத்துதத்தான் கோயிலை தொடங்கினார்.இவரது வேறு நடவடிக்கைகள் காரமாக அவரது கணவன் பாலன் என்பவர் பிரிந்து போனதும் எனக்குத் தெரியும்.ஆனால் இவரிற்கு புகளும் பணமும் வந்து சேரத் தொடங்கியதும் அவர் வந்து ஒட்டிக் கொண்டார் அவர் தான் இன்று பூசாரி. அவர்களிற்கு ஒரு மகன் உண்டு அவரும் இப்ப முருகக் கடவுள்.ஆனால் டென்மார்க்கில் யாரும் இவரை மதிப்பதில்லை அவரிட்டை போறது எல்லாம் யெர்மன் சுவிஸ் கொலண் காரர் தான் அதுவும் இப்ப குறைஞ்சதாலை கனடாப் பக்கம் தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்கிஇருக்கிறார்.இதிலை கொடுமை என்னவெண்டால் அவா தான் தான் சாமி எண்டு அவாவை புருசன் பூசை செய்வார் தேரிலை வைச்சு இழுப்பினம் ஆராத்தி காட்டுவினம்.காலிலை விழுந்து கும்பிடுவினம்.இதுவரைக்கும் அவா ஒரு அற்புதமும் செய்து கிடையாது முளியை பிரட்டுறதும்.வாயாலை வீணீர் வடிக்கிறதும் தான் அவாவின்ரை அவதாரம்.இவங்களை மாதிரி ஆக்களாலைதான் சைவ சமயத்திற்கே அவமானம்

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் வேணுமென்டா என்ட சப்பாத்தை தரட்டோ :lol: அது தான் நீங்களே உங்களை அடிக்கிறியள் அது தான் கேட்டனா பாருங்கோ..ம்ம் நான் தான் அனுமானின் மறு அவதாரம் என்னை கும்பிடமாட்டியளே :lol: ..(எல்லாரையுஊ??் கும்பிடுறியள் என்ன கும்பிட்டா என்ன வந்திட்டு)..சோ நாளையில் இருந்து என்னையும் கும்பிடுங்கோ வசி அண்ணா எனக்கு ஒரு கெல்ப் அதாவது அனுமானின்ட படத்தில என்ட முகத்தை கிராபிக்சில செய்து தருவியள் தானே :lol: ..(எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் பாருங்கோ)..

சோ..எனக்கு வடை மாலை போட வேண்டியவர்கள் மற்றும் என் பொற் பாதங்களை விழுந்து கும்பிட்டு..(நாசமாக போக வேண்டியவர்கள் :( )...எல்லாரும் சாத்திரி அங்கிளை உடனடியாக தொடர்பு கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. :lol:

(ராம ஜெயம்..ராம ஜெயம்)..ம்ம் எல்லாம் கரக்டா சொல்லுறன் தானே அது சரி முக்கிய குறிப்பு நேக்கு கல்யாணம் ஆகின லேடிஸ் பிடிகாது..(நான் பிரமச்சாரி எனக்கு பக்கத்தில வர கூடாது சொல்லிட்டன் :D )..கல்யாணம் கட்டாத இளம் பெண்கள் மட்டும் தான் எனகருகில் வரவேண்டும் என்பதனையும் அறிய தருகிறேன்..அதை மிஞ்சி வந்தா தெய்வ குற்றம் ஆகிடும் பிறகு சிட்னியில யாரின்ட வீட்டு கூரைக்கு மேலையும் போய் இருந்திடுவன் :lol: கீழே வராம சொல்லிட்டன்...(பிறகு சிட்னியில மழை பெய்யாது சொல்லிட்டன் :( )...

எல்லாம் அவன் செயல்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..(ராம ஜெயம்..ராம ஜெயம் :lol: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி ஆசாமி ஆகவும் முடியாது ஆசாமி சாமி ஆகவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹாஹா ஜம்முபேபி அனுமானின் அவதாரமா? ஐயோ இதை நான் நம்பவே மாட்டேன். ஜம்மு இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா? அதுதான் பிரமச்சாரி என சொல்லிட்டு கல்யாணம் ஆகாத பெண்கள் உங்களருகில் வரலாம் என்பதை சொன்னேன்

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கடை வால் அளவை சே கால் அளவை அனுப்பி விடுங்கோ நானே அந்த அளவிற்கு ஒரு செருப்பை வாங்கி பூசையிலை வைக்கிறன்.உங்களுக்கு செருப்பு அனுப்பிற செலவு மிச்சம். ஆனால் வருகிற வருமானம் எனக்குத்தான் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lalitha3.jpg

ஆத்தாவிற்குப் படைக்கின்ற புரியாணி, சிக்கின் கொத்தில் அடுத்த முறை உறைப்பைக் குறைச்சுப் போடுங்கோ! மிளகாய் கடிச்சு, உறைப்புத் தாங்க இயலாமல் நாக்கை நீட்டுகின்றார். உங்களுக்கு எல்லாம் நக்கலாகப் போச்சு என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலையும் இலலிதாச் சாமியார் வந்தால் நல்லாய் உழைக்கலாம். இங்குள்ளவர்கள் செருப்பு, என்ன சப்பாத்தையும் கொடுப்பார்கள். தாயகத்துக்கு உதவுவது என்றால் ஒன்றுமில்லை என்பினம். இப்படிச் சாமியார் வந்தால் கடன் வாங்கியாவது சாமியாருக்கு உதவி செய்வினம்.

Link to comment
Share on other sites

ஹாஹா ஜம்முபேபி அனுமானின் அவதாரமா? ஐயோ இதை நான் நம்பவே மாட்டேன். ஜம்மு இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா? அதுதான் பிரமச்சாரி என சொல்லிட்டு கல்யாணம் ஆகாத பெண்கள் உங்களருகில் வரலாம் என்பதை சொன்னேன்

ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபி அனுமானின் மறு அவதாரம்..(பார்க்க தெரியலையோ :D )..நிசமா முடியல என்னால..ராம ஜெயம்..அச்சோ கன்னத்தில போடுங்கோ கன்னதில போடுங்கோ தெய்வ குற்றம் ஆக போது..(பின்ன ஜம்மு பேபியை பார்த்து உது ஓவரா தெரியல என்று கேட்டா :D )..

ம்ம்..கல்யாண பெண்கள் வரவே கூடாது ஒன்லி கல்யாணம் கட்டாத பெண்கள் மட்டும் தான் வரமுடியும் அவைக்கு தான் என்னுடைய ஆசிர்வாதம் இருக்கும் சொல்லிட்டன் :D ..(அதுக்காக நீங்க எல்லாம் வரபடாது சொல்லிட்டன் :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கடை வால் அளவை சே கால் அளவை அனுப்பி விடுங்கோ நானே அந்த அளவிற்கு ஒரு செருப்பை வாங்கி பூசையிலை வைக்கிறன்.உங்களுக்கு செருப்பு அனுப்பிற செலவு மிச்சம். ஆனால் வருகிற வருமானம் எனக்குத்தான் :D:lol:

ஓமோம் நீங்க சொன்னா பிறகு தான் நேக்கு வால் வேற இருக்கு என்ன..(உந்த பக்தர்களை நம்ம ஏலாது :( )..வாலை கேர்ட் பண்ணிட்டாலும்..(அதுக்கு என்ன செய்யலாம் சாத்திரி அங்கிள் :D )..ம்ம் செருப்பின்ட சைஸ் தானே..(அனுமான் செருப்பு போடுறவறோ)..யார் கண்டது சரி அத விடுவோம் என்ன.. :D

ம்ம்..ஒகே சாத்திரி அங்கிள் தான் பிரான்ஸ் நாட்டிற்கு பொறுப்பு :D ..(ஆனா கிடைக்கிற அமோண்டில கொஞ்சம் உங்கால வெட்ட வேண்டும் என்ன :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நான் தான் அனுமானின் மறு அவதாரம் 245']

சாத்திரி அங்கிள் வேணுமென்டா என்ட சப்பாத்தை தரட்டோ :lol: அது தான் நீங்களே உங்களை அடிக்கிறியள் அது தான் கேட்டனா பாருங்கோ..என்னை கும்பிடமாட்டியளே :lol: ..(எல்லாரையுஊ??் கும்பிடுறியள் என்ன கும்பிட்டா என்ன வந்திட்டு)..சோ நாளையில் இருந்து என்னையும் கும்பிடுங்கோ வசி அண்ணா எனக்கு ஒரு கெல்ப் அதாவது அனுமானின்ட படத்தில என்ட முகத்தை கிராபிக்சில செய்து தருவியள் தானே :o ..(எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் பாருங்கோ)..

சோ..எனக்கு வடை மாலை போட வேண்டியவர்கள் மற்றும் என் பொற் பாதங்களை விழுந்து கும்பிட்டு..(நாசமாக போக வேண்டியவர்கள் :lol: )...எல்லாரும் சாத்திரி அங்கிளை உடனடியாக தொடர்பு கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. :D

(ராம ஜெயம்..ராம ஜெயம்)..ம்ம் எல்லாம் கரக்டா சொல்லுறன் தானே அது சரி முக்கிய குறிப்பு நேக்கு கல்யாணம் ஆகின லேடிஸ் பிடிகாது..(நான் பிரமச்சாரி எனக்கு பக்கத்தில வர கூடாது சொல்லிட்டன் :lol: )..கல்யாணம் கட்டாத இளம் பெண்கள் மட்டும் தான் எனகருகில் வரவேண்டும் என்பதனையும் அறிய தருகிறேன்..அதை மிஞ்சி வந்தா தெய்வ குற்றம் ஆகிடும் பிறகு சிட்னியில யாரின்ட வீட்டு கூரைக்கு மேலையும் போய் இருந்திடுவன் :wub: கீழே வராம சொல்லிட்டன்...(பிறகு சிட்னியில மழை பெய்யாது சொல்லிட்டன் :lol: )...

எல்லாம் அவன் செயல்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..(ராம ஜெயம்..ராம ஜெயம் :wub: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி ஆசாமி ஆகவும் முடியாது ஆசாமி சாமி ஆகவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுடைய போட்டோவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு என்னட இந்த பிள்ளை குரங்கு குட்டிபோல் உள்ளதே என்று. அட நிங்கள் அனுமானின் அவதாரமா? சாயல் அப்படியே உள்ளது.

இந்த அம்மனுடைய இரவு பூஜை வீடியோ போடடோக்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவவும். நெட்டில போட்டு நாங்களும் ஒரு வியாபாரத்தை தொடங்கலாமெண்டுதான்...........

Link to comment
Share on other sites

ஜம்மு உங்களுடைய போட்டோவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு என்னட இந்த பிள்ளை குரங்கு குட்டிபோல் உள்ளதே என்று. அட நிங்கள் அனுமானின் அவதாரமா? சாயல் அப்படியே உள்ளது.

இந்த அம்மனுடைய இரவு பூஜை வீடியோ போடடோக்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவவும். நெட்டில போட்டு நாங்களும் ஒரு வியாபாரத்தை தொடங்கலாமெண்டுதான்...........

அட பாவிகளா..நினைத்தனான் இப்படி எல்லாம் நினைப்பாங்க என்று..(அப்படியே நினைத்திட்டீனம் :wub: )...என்றாலும் உப்படி சொல்லி இருக்க கூடாது ஜம்மு பேபியை பார்த்து :lol: ..(ஆனா உதுக்கு எல்லாம் ஜம்மு பேபி பீல் பண்ணாது :lol: ) பிகோஸ் மம்மியிட்ட அடிகொருக்கா மங்கி ஏச்சு வாங்கிறனான் அல்லோ சரி அதை எல்லாம் கண்டுகாதையுங்கோ என்ன..(இஸ்ட பார்ட் ஒவ் ட கேம் :lol: )..

ம்ம்..நான் தான் அனுமானின் மறு அவதாரம்..(உந்த லோகத்தில பாவம் கூடி போச்சு உதை குறைக்க தான் நான் வந்திருக்கிறன் :lol: )..படத்தில கப்டன் விஜகாந் வாற மாதிரி..முடியல என்னால.. :o

சா.சா ஏன் அவாவின்ட படம் எல்லாம் அண்ணா நானிருக்கிறன் அல்லோ..(நீங்க இருக்கும் நாட்டில நேக்கு ஏஜென்ட் நீங்க தான்)..குழந்தை பிரச்சினையா??குழந்தை இல்லையா...நாடுங்கள் ஜம்மு அனுமான் சாமியார் என்று போர்ட் போடுங்கோ என்ன :lol: ..(பேஷா எல்லாருக்கு குழந்தை பாக்கியம் கொடுத்திடுவோம் என்ன)..எல்லாம் அவன் செயல்..நல்லதே நடகட்டும்... :D

"சாய் ராம்..சாய் ராம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ........யம்மு அனுமானின் மறுஅவதாரமா, அப்பவே நினைச்சன். டக் டக் எண்டு எல்லாம் மனசுல்ல பட்டதை எல்லாம் பக் பக் எண்டு பக்கம் பக்கமா எழுதக்கே நினைச்சன் இந்த யமுனாவுக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்து ஆட்டிப்படைக்குது எண்டு. :lol::D

Link to comment
Share on other sites

ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபி அனுமானின் மறு அவதாரம்..(பார்க்க தெரியலையோ :wub: )..நிசமா முடியல என்னால..ராம ஜெயம்..அச்சோ கன்னத்தில போடுங்கோ கன்னதில போடுங்கோ தெய்வ குற்றம் ஆக போது..(பின்ன ஜம்மு பேபியை பார்த்து உது ஓவரா தெரியல என்று கேட்டா :wub: )..

ம்ம்..கல்யாண பெண்கள் வரவே கூடாது ஒன்லி கல்யாணம் கட்டாத பெண்கள் மட்டும் தான் வரமுடியும் அவைக்கு தான் என்னுடைய ஆசிர்வாதம் இருக்கும் சொல்லிட்டன் :wub: ..(அதுக்காக நீங்க எல்லாம் வரபடாது சொல்லிட்டன் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

பேபி உங்கட கன்னத்தை காட்டுங்கோ 2 பளார் பளார் னு தாறன் :lol::D

தம்பி இது நன்னாவே இல்லை. கல்யாணம் கட்டாத பொண்ணுகளுக்கு ஆசீர்வாதம் வழங்குங்கோ அதுக்காக ஒரு அக்காவை பார்த்து இபப்டி சொல்லி இருக்க கூடாது :(

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆ........யம்மு அனுமானின் மறுஅவதாரமா, அப்பவே நினைச்சன். டக் டக் எண்டு எல்லாம் மனசுல்ல பட்டதை எல்லாம் பக் பக் எண்டு பக்கம் பக்கமா எழுதக்கே நினைச்சன் இந்த யமுனாவுக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்து ஆட்டிப்படைக்குது எண்டு.

ம்ம்..கறுப்பி அக்கா நான் அனுமானின் மறு அவதாரமே தான் :lol: ..(பார்க்க தெரியுது தானே :D )..ம்ம்ம்..கறுப்பி அக்கா இருந்தா போல என்னை அறியாமலே எனக்குள்ள ஒரு சத்தி சா சக்தி வந்திட்டு பிறகு பார்த்தா :) ...

ஆ..ஊஊஊ...ஆ..ஊஊ....அ..ஊஊஊஊஊஊஊஊஉ....ஆஆஅ...

(நான் அனுமான் வந்திருக்கிறன்)..ஊஊஊஊஊ யாருங்க வலைஞன் எங்கிருந்தாலும் இங்க வா..ங்..கோ...எனக்கு பிடிகல...பிடிகல.. :lol:

இப்ப என்ன நடந்தது நான் எங்க இருக்கிறன் :) ..(கறுப்பி அக்கா உங்களோட தானே கதைத்து கொண்டிருந்தனான் அதுகுள்ள என்ன ஆச்சு எனக்கு :wub: )...எதில விட்டனான் ஒரே கன்வீயூசனா இருக்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.