Jump to content

செருப்புப் பூசை


Recommended Posts

செருப்புப் பூசை

இந்தவார ஒரு பேப்பரில்

apirami.jpg

அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்னை பழிவாங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து அவரது ஒரு பக்கதர் கடைசி எச்சரிக்கையும் தந்து .இரண்டாண்டுகள் ஓடி ஓய்ந்து போன நிலைமையில்.இந்த விளம்பரத்தில் இருந்த ஒரு வசனம் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. அதாவது அபிராமி என்கிற லலிதாவின் பிறந்தநாளன்று (29.03.2008)அவரின் திருப்பாதுகைகளிற்கு விசேட அபிசேகமும் ஆராதனையும்.அவர் சாமியாடினாரா அவதாரமெடுத்தாரா.என்பதெல்லாம?? வேறு பிரச்சனை அனால் அவரின் செருப்பிற்கு அபிசேகம் செய்து பூசை செய்கிற அளவிற்கு எம்மவர் நிலைமை வந்து விட்டதா என்று நினைத்த பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து.இந்தச் சம்பவம் நடந்தது அதீத மத நம்பிக்கையே மூட நம்பிக்கையாகி அறிவியல் வளர்ச்சியோ கல்லியறிவோ அற்று ஏதோ முலையில் இருக்கின்ற ஒரு இந்தியக் குக்கிராமத்தில் அல்ல.

கனடாவில் மொன்றியலில் days inn hotal( விளம்பரத்தில் பார்க்கவும்) என்கிற ஒரு விடுதியில் நடந்ததுள்ளது அதற்கு அங்:குள்ள ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலேபோய் கனடாவில் உள்ள ஒரு வானொலியில் அந்நத நிகழ்வு நேரடிஒலிபரப்பு வேறை நடந்தது.விளம்பரத்தினைப்பார்??்ததும் நான் அதில் உள்ள ஒரு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பூசை பற்றிய விபரங்கள் பற்றிக் கேட்டேன். அன்று அபிராமி அன்னையின் படத்திற்கு பூசையும் பஜனையும் இடம்பெறும் என்றார்கள். சரி ஏதோ திருப்பாதுகைகளிற்கு ஏதோ அபிசேகமும் பூசையும் என்று விளம்பரத்திலை இருக்கே அது புரியவில்லை அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு.

அவை அம்மா அணிந்த பாதுகைகள் டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத்தான் பூசை என்றார்.திருப்பாதுகை என்றால் அது செருப்பா?? அல்லது சப்பாத்தா??என்கிற எனது அடுத்த கேள்வியை கேட்டதும் பதில் தந்தவர் பதறியவராய் அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.திருப்பாதுகை எண்றுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளை பரதன் அரியணையில் வைத்து பூசை செய்து ஆட்சி செய்தது போல தாங்களும் கனடாவில் அம்மனின் பாதுகைகளை வைத்து பூசை செய்கிறோம் என்று பரதன் பூசை செய்ததை பக்கத்தில் நின்று பார்த்தவரைப்போல எனக்கு ஒரு உதாரணமும் தந்து மேலதிகமாக டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் பஞ்சாமிர்தமும் தேசிக்காயும் கொடுக்கப்படும் என்று சொல்லி தொடர்பினை துண்டித்து விட்டார். சரி டென்மார்க் குளிருக்கு லலிதாவால் செருப்பு போட இயலாது எனவே அந்த திருப்பாதுகை சப்பாத்தாகத்தான் இருக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்தாலும் எனக்கு இன்னொரு சந்தேகம். அந்தச் சப்பாத்து NIKE காய் இருக்குமா அல்லது ADIDAS சா?? இல்லாட்டி ஊர்ப்பழக்கத்திலை இன்னமும் BATA தானா??? பஞ்சாமிர்தத்தை டென்மார்க்கில் இருந்தா கொண்டுவரவேண்டும் கனடாவில் பழங்கள் கிடையாதா?? அதுதான் போகட்டும் தேசிக்காய் என்னத்திற்கு என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றினாலும்.

அதில் இருந்த மற்றைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அந்த பூசை பற்றிய ஏதாவது படங்கள் கிடைக்குமா என்று விசாரித்தேன். படங்கள் அந்த நிகழ்வினை ஒழங்கு பண்ணியவர்களின் அனுமதி தந்தால் தரமுடியும் என்றார்கள் அந்த நிகழ்வினை ஒழுங்கு பண்ணியவர் யாரென்று விசாரித்தப் பார்த்தால் அவர் எனக்கு எற்கனவே இந்த டென்மார்க் லலிதா பற்றிய கட்டுரை சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டவர்தான். இவர் சுவிஸ் நாட்டில் இருக்கின்ற லலிதாவின் ஏழாலை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை இவர் எற்கனவே சுவிசில் லலிதாவிற்கு கிளைகளை ஆரம்பித்தள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த கனடாவில் செருப்புப் பூசை என்று தெரியவந்தது. எங்கள் ஊரில் சைவத்திற்கும் தமிழிற்கும் மிகப்பெரிய தொண்டு செய்த விபுலானந்த அடிகள் யோகர் சுவாமிகள் ஆறுமுக நாவலர் போன்றவர்களே தாங்கள் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஒரு போதும் ஏமாற்றிது இல்லை பாதணிகளையோ ஏன் பாதடிகளையோ கூட யாரும் பூசை செய்தது கிடையாது.

ஆனால் சிலர் தாங்கள் அவதாரம் என்றும் அற்புதம் செய்கிறோம் என்று ஊரில் வித்தை காட்டிய அனைவரும் கம்பங்களில் கட்டிவைத்து அடித்த அடியில் அவர்களது அற்புதங்களும் மறைந்து அந்த அவதாரங்களும் காணமல்போனதை நானறிவேன். தான் பராசக்தியின் அவதாரம் என்று கதைவிடும் லலிதாவிற்கு உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் என்னவென்று உண்மையான அர்த்தம் தெரியுமா என்று சந்தேகமே. புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் கடவுளின் அவதாரம் என்பது பூவுலகில் அனியாயமும் அக்கரமமும் அதிகரிக்கும் பொழுது நியாயத்தை நிலைநாட்டவும் எவ்வித பாவமும் செய்யாது துன்பப்படும் மக்களை காப்பாற்றவே கடவுளின் அவதாரங்கள் சித்திகரிக்கப் பட்டுள்ளது.

lalitha3.jpg

புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக??கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை. லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.

lalitha4.jpg

அதுமட்டுமா பெண்தெய்வங்களின் உருவப்படங்களில் தன்னுடையை படத்தை ஒட்டி கிராபிக் விழையாட்டுகள் செய்தும் (வெளிநாடு வருவதற்காக கள்ள பாஸ்போட்டில் தலை மாத்தின பழக்கதோசமாய் இருக்கலாம்) அரை மி.மீ அளவு மாணிக்கக்கல்லை வாயாலை எடுத்து அற்புதம் செய்கிராராம். மனிதன் மனிதனின் காலில் விழுவதையே மிகப்பெரும் கேவலமாக நினைக்கின்ற ஈழத்தவர்கள் இன்று புலம்பெயர்ந்து வந்த தேசத்தில் அறிவியல் உலகில் நின்று கொண்டு கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மூட நம்பிக்கைக்குள் வீழ்ந்து ஒரு போலி பெண்சாமியாரின் பாதடிகளை வணங்குவதை நினைத்தும் மக்களிற்கு வழிகாட்டியாய் இருந்து வழிநடாத்தவேண்டிய ஊடகங்களான் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளும் லலிதான் ஏமாற்றிற்கு துணைபோய் மக்களையும் மூட நம்பிக்கைக்கு துணைபோகத்தூண்டுவதை நினைத்தும் என்னுடய திருப்பாதுகையை கழற்றி( சப்பாத்தைத்தான்) எனக்கு நானே அடித்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை அது அவரவர் விருப்பம், கடவுள் நம்பிக்கை..

நானும் இந்தக் கோயிலுக்கு போய் இருக்கிறன் ஆக்களோட சும்மா பார்க்கிறதுக்கு. நான் அவவ பார்க்க போக இல்ல. நான் போனநேரம் கோயில்கட்டுப்பட்டுக்கொண்டு இருந்திது.

வெளியில சின்னச் சின்னக் கடைகளில வியாபாரமும் நடந்திது. நாங்கள் ஒரு மாம்பழப் பெட்டி மாத்திரம் வாங்கினனாங்கள். மரக்கறி அது இது எண்டு வேறு சில சாமான்களும் கோயில் வாசல் கடைகளில வில்பட்டிது.

நிறையப்பேர் அங்க போறீனம் எண்டுறதோட நம்பிக்கையுடனும் இருக்கிறீனம்.

எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கிண்டலடிக்கவும் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை அது அவரவர் விருப்பம், கடவுள் நம்பிக்கை..

நானும் இந்தக் கோயிலுக்கு போய் இருக்கிறன் ஆக்களோட சும்மா பார்க்கிறதுக்கு. நான் அவவ பார்க்க போக இல்ல. நான் போனநேரம் கோயில்கட்டுப்பட்டுக்கொண்டு இருந்திது.

வெளியில சின்னச் சின்னக் கடைகளில வியாபாரமும் நடந்திது. நாங்கள் ஒரு மாம்பழப் பெட்டி மாத்திரம் வாங்கினனாங்கள். மரக்கறி அது இது எண்டு வேறு சில சாமான்களும் கோயில் வாசல் கடைகளில வில்பட்டிது.

நிறையப்பேர் அங்க போறீனம் எண்டுறதோட நம்பிக்கையுடனும் இருக்கிறீனம்.

எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கிண்டலடிக்கவும் விரும்பவில்லை.

முரளி இங்கு நான் எழுதிய விடயம்கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல மூட நம்பிக்கை பற்றியது கடவுளை கும்பிடுங்கள் அது உங்கள் நம்பிக்கை கடவுள் பெயரால் ஏமாற்றும் மனிதரை கும்பிடாதீர்கள் அது உங்கள் முட்டாள்த்தனம்

Link to comment
Share on other sites

கடவுள் பெயரை சொல்லி காசு பறிக்கும் இப்படியான

கும்பலுகளை என்ன பண்ண முடியம்...

ஒருவேளை உண்மையான அம்மனே வந்து சொன்னாலும்

சனம் நம்பாது..

இதெல்லாம் ஒருவித மூளைச்சலவை.. வாய்மொழி பரப்புரைகள் மூலம் கடவுள் நம்பிக்கையுள்ள

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.. கோவிலில் இதுக்கென்றே சிலரை செட்டப்

செய்து வைத்திருப்பார்கள்.. புதிய அப்பாவி பக்தர்கள் காதில் விழும்படியாக அற்புதங்கள் பற்றி

அளந்துவிட சம்பளத்துடன் ஆட்கள் இருக்கு..

டென்மார்க்கில மட்டுமல்ல ஒவ்வொரு நாடுகளிலும் இப்படியான முகவர்கள் இருக்கிறார்களாம்..

அவர்கள் அம்மன் அற்புதங்கள் பற்றி அளந்துவிட: வாய் திறந்து கேட்கும் எமது அப்பாவி மக்கள்

தங்கள் துன்பங்கள் தீர ஒரு வடிகாலாக எண்ணி பணத்தை கொட்டி பரிகாரம் தேடப்பார்க்கிறார்கள்..

இது இயல்பு.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழி முள்ளை முள்ளால தான் எடுக்க வேண்டும்... :lol:

lalitha4.jpg

என்னால முடியல... :D

எங்க ஜம்மு?

ஒரு பஞ்ச் ப்ளீஸ்.......... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சயில் அஸிட் அடிக்க வேணும்.

Link to comment
Share on other sites

முரளி இங்கு நான் எழுதிய விடயம்கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல மூட நம்பிக்கை பற்றியது கடவுளை கும்பிடுங்கள் அது உங்கள் நம்பிக்கை கடவுள் பெயரால் ஏமாற்றும் மனிதரை கும்பிடாதீர்கள் அது உங்கள் முட்டாள்த்தனம்

சாத்திரி அண்ணை, முக்கியமா என்ன பிரச்சனை எண்டால் நான் அறிஞ்சவரையில ஆக்கள் இவவ தரிசனம் செய்யபோறதா தெரிய இல்ல. டென்மார்க்கில கோயில் எண்டால் இது ஒண்டுதான் இருக்கிது போல. இந்தக்கோயில் பிரபலமா வந்திட்டிது. கொஞ்சம் காலம் முன்னம் இது பன்றி வளர்க்கிற பண்ணையுக்க இருந்திச்சாம் இந்தக்கோயில். பிறகு இப்ப வேற ஒரு இடத்தில கோயில் மாதிரி கட்டப்பட்டு இருக்கிது.

டென்மார்க் தமிழ்ச் சனமும் கோயில் எண்டு ஒரு இடமும் இல்லை எண்டால் எங்கையாவது போகத்தானே வேணும்?

இப்ப கோயிலுக்கு போறது சாமி கும்பிட எண்டு இல்லை தானே? நிறைய சொந்தக்காரர், ஊர் ஆக்கள், உறவுகளை கோயிலுக்கு போனால் தான் காணலாம், இதவிட இப்ப மரக்கறி, பழம் எண்டு சாமாங்களும் வாங்கக்கூடியதா இருக்கிது.

அப்ப இப்பிடி மற்றப்பக்கமா கிடைக்கிற பலாபலன்கள பார்க்கேக்க... இவ செய்யுற சேட்டைகள் பெரிசா தெரிய இல்ல சாத்திரி அண்ணை.

வேணுமெண்டால் நீங்கள் ஒரு கோயில டென்மார்க்கில திறந்து பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சொல்வது போல இறைவழிபாட்டைக் கொச்சைப்படுத்துகின்ற கும்பல்கள் இவர்கள். அது சாய்பாபா ஆக இருக்கட்டும். இந்த டென்மார்க் பித்தலாட்டமாக இருக்கட்டும். இவர்களை அகற்றுவதே பக்தியின் உண்மைத் தன்மை நிலைக்க உதவும்.

சுவடி பார்ப்பது என்று ஒன்று இரு;ககின்றது தொடர்பாக அனைவரும் அறிவீர்கள். என் நண்பன் ஒருவனுக்கு அப்படி பார்க்க நேர்ந்தது. இது தான் உன் சுவடி ஒன்று குறித்தவர் படித்துக் காட்டியப்புறம் நண்பன் கேட்டான். என் சுவடி என்று சொல்கின்றீர்கள். என்னை அடையாளம் கண்டு விட்டீர்கள். பிறகேன் அந்தச் சுவடியை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். என்னிடம் தரலாமே என்று.

குறித்தவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செருப்புப் பூசை

புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக??கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை. லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.

.

என்ன சாத்திரி லொள்ளா அவ என்ன வைச்சுக்கொண்டா வஞ்சனை பண்ணுறா சட்டியிலை இருந்தால்தானே அகப்பையிலை வரும்

ஐயோ சாமி குற்றம் வரப்போகுது இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் யாராவது சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப் போன்றவர்களை சுட்டுக்கொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

சாத்திரி நான் அறிஞ்ச விசயங்கள் கொஞ்சம் தாறன்:

1. டென்மார்க்கில இருக்கிற ஆக்கள விட கூடுதலாக சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் ஆக்கள் தான் இந்தக்கோயிலுக்கு போறவர்களாம்.

2. இவவுக்கு இப்படியான அருள் கிடைத்தது 40வது வயதிலாம்.

3. அதற்கு முன் கோழி இறைச்சி எல்லாம் தங்கட வீட்டுக்கு வந்து சாப்பிட்டு இருக்கிறா என்று ஆக்கள் சொல்லுறீனம்.

4. அவவுக்கு ஒரு மகன் இருக்கிறாராம். இப்பிடி அருள் வந்ததும் தான் இனி இல்லற வாழ்க்கையில ஈடுபடமாட்டன் என்று சொல்லி புருசனை வேறு ஒரு கலியாணம் செய்யச் சொன்னதா கேள்வி. உண்மை பொய் தெரியாது.

5. தேரில இவவ ஏத்தித்தான் இழுக்கிறதாம். உண்மைபொய் தெரியாது.

6. இவவுக்குத்தான் சாமிக்கு செய்யுறது மாதிரி அளங்காரம் செய்து பூசை செய்யுறதாம்.

7. மொத்தத்தில இது நடமாடும் உண்மையான அம்மனாக கருதப்படுகிதாம்.

இவ்வளவு தகவல் தான் இப்போதைக்கு சேகரிக்க முடிஞ்சிது.

Link to comment
Share on other sites

முரளி நீங்கள்சொல்லியதில் பலது உண்மை இவரை ஓரளவு எனக்கு ஊரிலேயெ தெரியும் ஊரில்தனக்கு 6வயதில் சாமி வந்தது என்று சொல்லித் திரிந்தவர் ஆனால் ஊரில் பெரியளவு எடுபடவில்லை அதற்கு காரணம் இயக்கத்தின்கட்டுப்பாட்டில் அவரது ஊரும் இருந்தது அந்த நேரம்.கடவுளை காட்டு எண்டு இயக்கம் கட்டி வைச்சு அடிச்சிருந்தால் இவரால் காட்ட முடியாமல் போய்இருக்கும். அதனால் அவர் அளவுடன் நிறுத்திவிட்டார். பின்னர் டென்மார்க் வந்தபின்னர் அதே விழையாட்டு ஆனால் ஆரம்பத்தில் அவரது வீட்டு நிலவறையில் ஒரு அம்மன் படத்தை வைத்துதத்தான் கோயிலை தொடங்கினார்.இவரது வேறு நடவடிக்கைகள் காரமாக அவரது கணவன் பாலன் என்பவர் பிரிந்து போனதும் எனக்குத் தெரியும்.ஆனால் இவரிற்கு புகளும் பணமும் வந்து சேரத் தொடங்கியதும் அவர் வந்து ஒட்டிக் கொண்டார் அவர் தான் இன்று பூசாரி. அவர்களிற்கு ஒரு மகன் உண்டு அவரும் இப்ப முருகக் கடவுள்.ஆனால் டென்மார்க்கில் யாரும் இவரை மதிப்பதில்லை அவரிட்டை போறது எல்லாம் யெர்மன் சுவிஸ் கொலண் காரர் தான் அதுவும் இப்ப குறைஞ்சதாலை கனடாப் பக்கம் தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்கிஇருக்கிறார்.இதிலை கொடுமை என்னவெண்டால் அவா தான் தான் சாமி எண்டு அவாவை புருசன் பூசை செய்வார் தேரிலை வைச்சு இழுப்பினம் ஆராத்தி காட்டுவினம்.காலிலை விழுந்து கும்பிடுவினம்.இதுவரைக்கும் அவா ஒரு அற்புதமும் செய்து கிடையாது முளியை பிரட்டுறதும்.வாயாலை வீணீர் வடிக்கிறதும் தான் அவாவின்ரை அவதாரம்.இவங்களை மாதிரி ஆக்களாலைதான் சைவ சமயத்திற்கே அவமானம்

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் வேணுமென்டா என்ட சப்பாத்தை தரட்டோ :lol: அது தான் நீங்களே உங்களை அடிக்கிறியள் அது தான் கேட்டனா பாருங்கோ..ம்ம் நான் தான் அனுமானின் மறு அவதாரம் என்னை கும்பிடமாட்டியளே :lol: ..(எல்லாரையுஊ??் கும்பிடுறியள் என்ன கும்பிட்டா என்ன வந்திட்டு)..சோ நாளையில் இருந்து என்னையும் கும்பிடுங்கோ வசி அண்ணா எனக்கு ஒரு கெல்ப் அதாவது அனுமானின்ட படத்தில என்ட முகத்தை கிராபிக்சில செய்து தருவியள் தானே :lol: ..(எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் பாருங்கோ)..

சோ..எனக்கு வடை மாலை போட வேண்டியவர்கள் மற்றும் என் பொற் பாதங்களை விழுந்து கும்பிட்டு..(நாசமாக போக வேண்டியவர்கள் :( )...எல்லாரும் சாத்திரி அங்கிளை உடனடியாக தொடர்பு கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. :lol:

(ராம ஜெயம்..ராம ஜெயம்)..ம்ம் எல்லாம் கரக்டா சொல்லுறன் தானே அது சரி முக்கிய குறிப்பு நேக்கு கல்யாணம் ஆகின லேடிஸ் பிடிகாது..(நான் பிரமச்சாரி எனக்கு பக்கத்தில வர கூடாது சொல்லிட்டன் :D )..கல்யாணம் கட்டாத இளம் பெண்கள் மட்டும் தான் எனகருகில் வரவேண்டும் என்பதனையும் அறிய தருகிறேன்..அதை மிஞ்சி வந்தா தெய்வ குற்றம் ஆகிடும் பிறகு சிட்னியில யாரின்ட வீட்டு கூரைக்கு மேலையும் போய் இருந்திடுவன் :lol: கீழே வராம சொல்லிட்டன்...(பிறகு சிட்னியில மழை பெய்யாது சொல்லிட்டன் :( )...

எல்லாம் அவன் செயல்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..(ராம ஜெயம்..ராம ஜெயம் :lol: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி ஆசாமி ஆகவும் முடியாது ஆசாமி சாமி ஆகவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹாஹா ஜம்முபேபி அனுமானின் அவதாரமா? ஐயோ இதை நான் நம்பவே மாட்டேன். ஜம்மு இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா? அதுதான் பிரமச்சாரி என சொல்லிட்டு கல்யாணம் ஆகாத பெண்கள் உங்களருகில் வரலாம் என்பதை சொன்னேன்

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கடை வால் அளவை சே கால் அளவை அனுப்பி விடுங்கோ நானே அந்த அளவிற்கு ஒரு செருப்பை வாங்கி பூசையிலை வைக்கிறன்.உங்களுக்கு செருப்பு அனுப்பிற செலவு மிச்சம். ஆனால் வருகிற வருமானம் எனக்குத்தான் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lalitha3.jpg

ஆத்தாவிற்குப் படைக்கின்ற புரியாணி, சிக்கின் கொத்தில் அடுத்த முறை உறைப்பைக் குறைச்சுப் போடுங்கோ! மிளகாய் கடிச்சு, உறைப்புத் தாங்க இயலாமல் நாக்கை நீட்டுகின்றார். உங்களுக்கு எல்லாம் நக்கலாகப் போச்சு என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலையும் இலலிதாச் சாமியார் வந்தால் நல்லாய் உழைக்கலாம். இங்குள்ளவர்கள் செருப்பு, என்ன சப்பாத்தையும் கொடுப்பார்கள். தாயகத்துக்கு உதவுவது என்றால் ஒன்றுமில்லை என்பினம். இப்படிச் சாமியார் வந்தால் கடன் வாங்கியாவது சாமியாருக்கு உதவி செய்வினம்.

Link to comment
Share on other sites

ஹாஹா ஜம்முபேபி அனுமானின் அவதாரமா? ஐயோ இதை நான் நம்பவே மாட்டேன். ஜம்மு இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா? அதுதான் பிரமச்சாரி என சொல்லிட்டு கல்யாணம் ஆகாத பெண்கள் உங்களருகில் வரலாம் என்பதை சொன்னேன்

ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபி அனுமானின் மறு அவதாரம்..(பார்க்க தெரியலையோ :D )..நிசமா முடியல என்னால..ராம ஜெயம்..அச்சோ கன்னத்தில போடுங்கோ கன்னதில போடுங்கோ தெய்வ குற்றம் ஆக போது..(பின்ன ஜம்மு பேபியை பார்த்து உது ஓவரா தெரியல என்று கேட்டா :D )..

ம்ம்..கல்யாண பெண்கள் வரவே கூடாது ஒன்லி கல்யாணம் கட்டாத பெண்கள் மட்டும் தான் வரமுடியும் அவைக்கு தான் என்னுடைய ஆசிர்வாதம் இருக்கும் சொல்லிட்டன் :D ..(அதுக்காக நீங்க எல்லாம் வரபடாது சொல்லிட்டன் :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு உங்கடை வால் அளவை சே கால் அளவை அனுப்பி விடுங்கோ நானே அந்த அளவிற்கு ஒரு செருப்பை வாங்கி பூசையிலை வைக்கிறன்.உங்களுக்கு செருப்பு அனுப்பிற செலவு மிச்சம். ஆனால் வருகிற வருமானம் எனக்குத்தான் :D:lol:

ஓமோம் நீங்க சொன்னா பிறகு தான் நேக்கு வால் வேற இருக்கு என்ன..(உந்த பக்தர்களை நம்ம ஏலாது :( )..வாலை கேர்ட் பண்ணிட்டாலும்..(அதுக்கு என்ன செய்யலாம் சாத்திரி அங்கிள் :D )..ம்ம் செருப்பின்ட சைஸ் தானே..(அனுமான் செருப்பு போடுறவறோ)..யார் கண்டது சரி அத விடுவோம் என்ன.. :D

ம்ம்..ஒகே சாத்திரி அங்கிள் தான் பிரான்ஸ் நாட்டிற்கு பொறுப்பு :D ..(ஆனா கிடைக்கிற அமோண்டில கொஞ்சம் உங்கால வெட்ட வேண்டும் என்ன :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நான் தான் அனுமானின் மறு அவதாரம் 245']

சாத்திரி அங்கிள் வேணுமென்டா என்ட சப்பாத்தை தரட்டோ :lol: அது தான் நீங்களே உங்களை அடிக்கிறியள் அது தான் கேட்டனா பாருங்கோ..என்னை கும்பிடமாட்டியளே :lol: ..(எல்லாரையுஊ??் கும்பிடுறியள் என்ன கும்பிட்டா என்ன வந்திட்டு)..சோ நாளையில் இருந்து என்னையும் கும்பிடுங்கோ வசி அண்ணா எனக்கு ஒரு கெல்ப் அதாவது அனுமானின்ட படத்தில என்ட முகத்தை கிராபிக்சில செய்து தருவியள் தானே :o ..(எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் பாருங்கோ)..

சோ..எனக்கு வடை மாலை போட வேண்டியவர்கள் மற்றும் என் பொற் பாதங்களை விழுந்து கும்பிட்டு..(நாசமாக போக வேண்டியவர்கள் :lol: )...எல்லாரும் சாத்திரி அங்கிளை உடனடியாக தொடர்பு கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. :D

(ராம ஜெயம்..ராம ஜெயம்)..ம்ம் எல்லாம் கரக்டா சொல்லுறன் தானே அது சரி முக்கிய குறிப்பு நேக்கு கல்யாணம் ஆகின லேடிஸ் பிடிகாது..(நான் பிரமச்சாரி எனக்கு பக்கத்தில வர கூடாது சொல்லிட்டன் :lol: )..கல்யாணம் கட்டாத இளம் பெண்கள் மட்டும் தான் எனகருகில் வரவேண்டும் என்பதனையும் அறிய தருகிறேன்..அதை மிஞ்சி வந்தா தெய்வ குற்றம் ஆகிடும் பிறகு சிட்னியில யாரின்ட வீட்டு கூரைக்கு மேலையும் போய் இருந்திடுவன் :wub: கீழே வராம சொல்லிட்டன்...(பிறகு சிட்னியில மழை பெய்யாது சொல்லிட்டன் :lol: )...

எல்லாம் அவன் செயல்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..(ராம ஜெயம்..ராம ஜெயம் :wub: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி ஆசாமி ஆகவும் முடியாது ஆசாமி சாமி ஆகவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுடைய போட்டோவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு என்னட இந்த பிள்ளை குரங்கு குட்டிபோல் உள்ளதே என்று. அட நிங்கள் அனுமானின் அவதாரமா? சாயல் அப்படியே உள்ளது.

இந்த அம்மனுடைய இரவு பூஜை வீடியோ போடடோக்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவவும். நெட்டில போட்டு நாங்களும் ஒரு வியாபாரத்தை தொடங்கலாமெண்டுதான்...........

Link to comment
Share on other sites

ஜம்மு உங்களுடைய போட்டோவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு என்னட இந்த பிள்ளை குரங்கு குட்டிபோல் உள்ளதே என்று. அட நிங்கள் அனுமானின் அவதாரமா? சாயல் அப்படியே உள்ளது.

இந்த அம்மனுடைய இரவு பூஜை வீடியோ போடடோக்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவவும். நெட்டில போட்டு நாங்களும் ஒரு வியாபாரத்தை தொடங்கலாமெண்டுதான்...........

அட பாவிகளா..நினைத்தனான் இப்படி எல்லாம் நினைப்பாங்க என்று..(அப்படியே நினைத்திட்டீனம் :wub: )...என்றாலும் உப்படி சொல்லி இருக்க கூடாது ஜம்மு பேபியை பார்த்து :lol: ..(ஆனா உதுக்கு எல்லாம் ஜம்மு பேபி பீல் பண்ணாது :lol: ) பிகோஸ் மம்மியிட்ட அடிகொருக்கா மங்கி ஏச்சு வாங்கிறனான் அல்லோ சரி அதை எல்லாம் கண்டுகாதையுங்கோ என்ன..(இஸ்ட பார்ட் ஒவ் ட கேம் :lol: )..

ம்ம்..நான் தான் அனுமானின் மறு அவதாரம்..(உந்த லோகத்தில பாவம் கூடி போச்சு உதை குறைக்க தான் நான் வந்திருக்கிறன் :lol: )..படத்தில கப்டன் விஜகாந் வாற மாதிரி..முடியல என்னால.. :o

சா.சா ஏன் அவாவின்ட படம் எல்லாம் அண்ணா நானிருக்கிறன் அல்லோ..(நீங்க இருக்கும் நாட்டில நேக்கு ஏஜென்ட் நீங்க தான்)..குழந்தை பிரச்சினையா??குழந்தை இல்லையா...நாடுங்கள் ஜம்மு அனுமான் சாமியார் என்று போர்ட் போடுங்கோ என்ன :lol: ..(பேஷா எல்லாருக்கு குழந்தை பாக்கியம் கொடுத்திடுவோம் என்ன)..எல்லாம் அவன் செயல்..நல்லதே நடகட்டும்... :D

"சாய் ராம்..சாய் ராம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ........யம்மு அனுமானின் மறுஅவதாரமா, அப்பவே நினைச்சன். டக் டக் எண்டு எல்லாம் மனசுல்ல பட்டதை எல்லாம் பக் பக் எண்டு பக்கம் பக்கமா எழுதக்கே நினைச்சன் இந்த யமுனாவுக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்து ஆட்டிப்படைக்குது எண்டு. :lol::D

Link to comment
Share on other sites

ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபி அனுமானின் மறு அவதாரம்..(பார்க்க தெரியலையோ :wub: )..நிசமா முடியல என்னால..ராம ஜெயம்..அச்சோ கன்னத்தில போடுங்கோ கன்னதில போடுங்கோ தெய்வ குற்றம் ஆக போது..(பின்ன ஜம்மு பேபியை பார்த்து உது ஓவரா தெரியல என்று கேட்டா :wub: )..

ம்ம்..கல்யாண பெண்கள் வரவே கூடாது ஒன்லி கல்யாணம் கட்டாத பெண்கள் மட்டும் தான் வரமுடியும் அவைக்கு தான் என்னுடைய ஆசிர்வாதம் இருக்கும் சொல்லிட்டன் :wub: ..(அதுக்காக நீங்க எல்லாம் வரபடாது சொல்லிட்டன் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

பேபி உங்கட கன்னத்தை காட்டுங்கோ 2 பளார் பளார் னு தாறன் :lol::D

தம்பி இது நன்னாவே இல்லை. கல்யாணம் கட்டாத பொண்ணுகளுக்கு ஆசீர்வாதம் வழங்குங்கோ அதுக்காக ஒரு அக்காவை பார்த்து இபப்டி சொல்லி இருக்க கூடாது :(

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆ........யம்மு அனுமானின் மறுஅவதாரமா, அப்பவே நினைச்சன். டக் டக் எண்டு எல்லாம் மனசுல்ல பட்டதை எல்லாம் பக் பக் எண்டு பக்கம் பக்கமா எழுதக்கே நினைச்சன் இந்த யமுனாவுக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்து ஆட்டிப்படைக்குது எண்டு.

ம்ம்..கறுப்பி அக்கா நான் அனுமானின் மறு அவதாரமே தான் :lol: ..(பார்க்க தெரியுது தானே :D )..ம்ம்ம்..கறுப்பி அக்கா இருந்தா போல என்னை அறியாமலே எனக்குள்ள ஒரு சத்தி சா சக்தி வந்திட்டு பிறகு பார்த்தா :) ...

ஆ..ஊஊஊ...ஆ..ஊஊ....அ..ஊஊஊஊஊஊஊஊஉ....ஆஆஅ...

(நான் அனுமான் வந்திருக்கிறன்)..ஊஊஊஊஊ யாருங்க வலைஞன் எங்கிருந்தாலும் இங்க வா..ங்..கோ...எனக்கு பிடிகல...பிடிகல.. :lol:

இப்ப என்ன நடந்தது நான் எங்க இருக்கிறன் :) ..(கறுப்பி அக்கா உங்களோட தானே கதைத்து கொண்டிருந்தனான் அதுகுள்ள என்ன ஆச்சு எனக்கு :wub: )...எதில விட்டனான் ஒரே கன்வீயூசனா இருக்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.