Jump to content

ஒருவருட காதல்


Recommended Posts

ஒருவருட காதல்

nilaql0.jpg

வருடப்பிறப்பு அன்று கோயிலில்

திருவிழாக் கால மக்கள் திரளுள்

கருவிழியாள் உன் பார்வையால்

அரும்பியது என்னுள் காதல்

தைப்பொங்கல் வரும்வரையில்

தையலுன் பின்னால் தினமும்

அலைந்த என் காதலுள்

தொலைத்தாய் உன் இதயத்தை

மாசி வந்ததும் நாமிருவரும்

பேசி பேசி காதல் செய்தோம்

பங்குனி மாதத்தில் உன்

சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்

சித்திரை மாதம் வந்ததும்

நித்திரையின்றி புரண்டேன்

வைகாசி பூத்ததும் நாமிருவரும்

கைராசி பார்த்து சந்தோசப்பட்டு

ஆனி வந்ததும் உல்லாசமாக

தேனீக்கள்போல பறந்து திரிந்து

ஆடி வந்ததும் இருவரும்

பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்

ஆவணி உதித்ததும் உனக்கு நான்

தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்

புரட்டாதியும் வந்தது நமக்குள்

புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்

ஐப்பசி வெகுவிரைவில் வந்தது

பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு

கார்த்திகை பூக்க தொடங்கையில்

பூர்த்தியானது நம் தொடர்பு

மார்கழி முடியும் வேளையில் எனக்கு

மூர்க்கம் வந்தது காதல் மேல்..

சந்தோசமாக மலர்ந்த காதல்

சந்தேகத்தால் உதிர்ந்தது.

மீண்டும் வருடம் பிறந்தது

கண்டேன் பல பெண்களை ஆனாலும்

வேண்டாம் எனக்குள்

இன்னொரு காதல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :D

கவிதை உண்மையாயிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிச்சதுக்குள்ள சற்று வித்தியாசமான சிந்தனையில் அமைந்த கவிதை. பாராட்டுக்கள். :lol:

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :D

கவிதை உண்மையாயிருக்கு

பிள்ள.... காதல் உண்மையானதா இருந்தா சுடாது. சுட்டிச்சின்னா.. அது காதலில்ல. அதற்காக கவலைப்படவோ வருந்தவோ.. ஏமாந்ததாவோ கருதக் கூடாது. ஏமாத்திற கூட்டம் காதலென்ற வேசம் போட்டும் அலையும்.. என்றதை மனசில இருந்திக்கனும் எப்பவும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ள.... காதல் உண்மையானதா இருந்தா சுடாது. சுட்டிச்சின்னா.. அது காதலில்ல. அதற்காக கவலைப்படவோ வருந்தவோ.. ஏமாந்ததாவோ கருதக் கூடாது. ஏமாத்திற கூட்டம் காதலென்ற வேசம் போட்டும் அலையும்.. என்றதை மனசில இருந்திக்கனும் எப்பவும்..! :lol:

சரியா சொன்னியள் தாத்தா. இப்ப காதலென்ற போர்வையில் கனக்க விசயங்கள் நடக்குது ஆனா உண்மை தெரிய வரேக்கை பாதிக்கபட்டவர்களின் நிலைமை தான் பாவம். :lol:

ஆனா இதிலிருந்து தப்பிக்க காதலிக்காம இருக்கிறது தான் வழியா தாத்தா :D ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ள வரிகள், இதுவரை நான்படித்த உங்கள் கவிதைகளில் இந்த கவிஞருக்கு காதல் பிடித்திருக்கிறது,, ஆனால் தோல்வி இவரை துரத்துகிறது. கவிதைகளில் மட்டும் தோல்விகள் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே என்ன கொடுமையிது! மாதங்களைப் பண்ணிரண்டாக மட்டும் வைத்தது யார்? இன்னும் இரண்டு மாதத்தைக் கூட்டிவைத்தால் குறைந்தா போய் விடுவார்கள்! அப்போதாவது அந்தக் காதல் இணைந்திருக்குமே!!! :D:)

Link to comment
Share on other sites

ம்ம்..ஒரு வருட காதலில் இவ்வளவு வலிகளா??..(நிசமா முடியல்ல :( )..ஒரு வருட காதலையும் ஒரு கவிகுள் அடக்கி சென்றது நிலா அக்காவின் தனித்துவம் வாழ்த்துக்கள் அக்கா.. :lol:

ம்ம்...நிலா அக்கா காதலர்கள் வேண்டும் என்றா பிரிந்து போகலாம் அதற்காக காதல் தோற்குது என்று எல்லாம் சொல்லபடாது என்ன.. :lol: (எப்பவுமே நாம ஒன்னை காதலிக்கிற படியா தான் இன்னுமெ சந்தோசமாக இருக்க முடியுது).. அக்சுவலா நான் முதலாவதா காதலிக்கிறது மம்மியை அடுத்து வேற யாரையும் இல்லை என்னை தான்.. (என்ன பார்க்கிறியள் :D )..எப்பவுமே நம்மளே நாம காதலித்தா தான் மற்றவையள் நம்மளை காதலிப்பீனம் பாருங்கோ..(இது எப்படிக்கா இருக்கு :( )..

ம்ம்..இறுதி வரியை வாசிக்கும் போது அந்த ஆள் ரொம்பவே நொந்து போயிட்டார் போல இருக்கு..(இதுக்கே இப்படி என்றா)...வாழ்க்கையில எத்தனை குரோசிங் லைனை கடக்க வேண்டும் அச்சோ அச்சோ :D ...ம்ம் காதல் எங்களை எக் காரணம் கொண்டு வெறுபதில்ல நாம ஏன் வெறுக்க வேண்டும் காதலை :) ..இப்ப பாருங்கோ பூங்காவனத்தில சில ரோஜாக்கள் அழகாக இருக்கும் ஆனா நறுமணம் குன்றி இருக்கும்..(ஏன் அழகில் மயங்கி நறுமணம் இல்லாத ரோஜாவை நோக்கி பயணிப்பான்)..இப்படி நான் சொன்னேன் என்று அவருக்கு சொல்லுங்கோ என்ன நிலா அக்கா.. :D

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

மீண்டும் வருடம் பிறந்தது

மீண்டும் இதயம் என்னிடம் வந்தது

மீளவும் இன்னொருத்தி அருகில் வர

மீண்டும் இதயம் படபடத்தது..!! :wub:

சிட்டுவேசன் சோங் -

கேட்கலையோ கண்ணது கானம்

பூக்களையோ பூக்களையோ பூக்கள் நெஞ்சில் நாணம்

என்னை விட்டு எங்கே போனாலும்

என் உள்ளம் மட்டும் உன்னை விட்டு

எங்கையும் போகாது!! :lol:

அப்படியே சிட்டுவேசன் சோங் கஸ்தூரிமான் படத்தில இருந்து இந்த பாட்டு நன்னா இருக்கும்..(யாருக்கும் அந்த பாட்டு கிடைத்தா இணைப்பை தாங்கோ)..நேக்கு அந்த பாட்டு என்றா நன்னா விருப்பம் ஏன் என்று எனக்கே தெரியாது..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :wub:

கவிதை உண்மையாயிருக்கு

:D வெண்ணிலா சூடா இருக்கவில்லையுங்கோ. ஹீஹீ காதல் இருந்தால் தானே சுடுறதுக்கு :lol:

கவிதை சாதாரணமாக இருக்குது. நீங்கள் வாசிக்கையில் உண்மையென நினைச்சு வாசிக்கிறீங்க. :(

நான் படிச்சதுக்குள்ள சற்று வித்தியாசமான சிந்தனையில் அமைந்த கவிதை. பாராட்டுக்கள். :lol:

நன்றிகள் நெடுக் தாத்தா.

உணர்வுள்ள வரிகள், இதுவரை நான்படித்த உங்கள் கவிதைகளில் இந்த கவிஞருக்கு காதல் பிடித்திருக்கிறது,, ஆனால் தோல்வி இவரை துரத்துகிறது. கவிதைகளில் மட்டும் தோல்விகள் தொடர வாழ்த்துக்கள்.

:) இதுவரையில் காதல் பிடித்திருந்தாலும் காதலில் தோல்வி வந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைச்சு பதிச்ச கவி இது.

வாழ்க்கையில் தோல்வியும் வெற்றியும் இன்பமும் துன்பமும் காலையும் மாலையும் போல தானே சித்தனே.

வாழ்த்துக்கு நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

சே என்ன கொடுமையிது! மாதங்களைப் பண்ணிரண்டாக மட்டும் வைத்தது யார்? இன்னும் இரண்டு மாதத்தைக் கூட்டிவைத்தால் குறைந்தா போய் விடுவார்கள்! அப்போதாவது அந்தக் காதல் இணைந்திருக்குமே!!! :wub::lol:

:D மாதம் கூடினால் என்ன மனம் எல்லோ கூடணும் ஒன்றோடு ஒன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையில் தைத்து,

மாசியில் பேசி,

பங்குனியில் சங்கமித்து,

சித்திரையில் புரண்டு,

ஆனியில் அலைந்து,

ஆடியில் பாடி,

ஆவணியில் அணி தந்து,

புரட்டாசி வரட்சியுற்று,

ஐப்பசியில் கசந்து,

கார்த்திகையில் தொடர்பறுந்து,

மார்கழியில் முடிந்ததா காதல்?

தொடர்ந்து தை வருமே.... வெண்ணிலா :D:):wub:

Link to comment
Share on other sites

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

Link to comment
Share on other sites

ம்ம்..ஒரு வருட காதலில் இவ்வளவு வலிகளா??..(நிசமா முடியல்ல :( )..ஒரு வருட காதலையும் ஒரு கவிகுள் அடக்கி சென்றது நிலா அக்காவின் தனித்துவம் வாழ்த்துக்கள் அக்கா.. :lol:

ம்ம்...நிலா அக்கா காதலர்கள் வேண்டும் என்றா பிரிந்து போகலாம் அதற்காக காதல் தோற்குது என்று எல்லாம் சொல்லபடாது என்ன.. :huh: (எப்பவுமே நாம ஒன்னை காதலிக்கிற படியா தான் இன்னுமெ சந்தோசமாக இருக்க முடியுது).. அக்சுவலா நான் முதலாவதா காதலிக்கிறது மம்மியை அடுத்து வேற யாரையும் இல்லை என்னை தான்.. (என்ன பார்க்கிறியள் :rolleyes: )..எப்பவுமே நம்மளே நாம காதலித்தா தான் மற்றவையள் நம்மளை காதலிப்பீனம் பாருங்கோ..(இது எப்படிக்கா இருக்கு :) )..

ம்ம்..இறுதி வரியை வாசிக்கும் போது அந்த ஆள் ரொம்பவே நொந்து போயிட்டார் போல இருக்கு..(இதுக்கே இப்படி என்றா)...வாழ்க்கையில எத்தனை குரோசிங் லைனை கடக்க வேண்டும் அச்சோ அச்சோ ...ம்ம் காதல் எங்களை எக் காரணம் கொண்டு வெறுபதில்ல நாம ஏன் வெறுக்க வேண்டும் காதலை : ..இப்ப பாருங்கோ பூங்காவனத்தில சில ரோஜாக்கள் அழகாக இருக்கும் ஆனா நறுமணம் குன்றி இருக்கும்..(ஏன் அழகில் மயங்கி நறுமணம் இல்லாத ரோஜாவை நோக்கி பயணிப்பான்)..இப்படி நான் சொன்னேன் என்று அவருக்கு சொல்லுங்கோ என்ன நிலா அக்கா.. :

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

மீண்டும் வருடம் பிறந்தது

மீண்டும் இதயம் என்னிடம் வந்தது

மீளவும் இன்னொருத்தி அருகில் வர

மீண்டும் இதயம் படபடத்தது..!! :unsure:

சிட்டுவேசன் சோங் -

கேட்கலையோ கண்ணது கானம்

பூக்களையோ பூக்களையோ பூக்கள் நெஞ்சில் நாணம்

என்னை விட்டு எங்கே போனாலும்

என் உள்ளம் மட்டும் உன்னை விட்டு

எங்கையும் போகாது!!

அப்படியே சிட்டுவேசன் சோங் கஸ்தூரிமான் படத்தில இருந்து இந்த பாட்டு நன்னா இருக்கும்..(யாருக்கும் அந்த பாட்டு கிடைத்தா இணைப்பை தாங்கோ)..நேக்கு அந்த பாட்டு என்றா நன்னா விருப்பம் ஏன் என்று எனக்கே தெரியாது..

அப்ப நான் வரட்டா!!

ஹாஹா ஒருவருடத்தில் இத்தனை வலிகளா என கேட்டு முடியலை என்கிறியளே. அனுபவிச்சால் எப்படி இருக்கும். ஹீஹீ எனக்கும் அனுபவிக்கணும் போல இருக்கு ஜம்மு என்ன பார்க்கிறியள் நான் சொன்னது காதலை அனுபவிக்கணும் னு.

ஜம்மு அம்மாவையும் உங்களையும் காதலிக்கிறியளா. கிரேட் ஜம்மு. :wub: நிசமா நன்னா இருக்குங்கோ உங்களாஇ நீங்க காதலிச்சால் உங்களை யாராவது காதலிப்பினம் என்ற நம்பிக்கை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனாலும் பேபிக்கு இது கொஞ்சம் ஓவராக இல்லையோ.

பூங்காவனத்து ரோசாவின் நறுமணம் பற்றி நல்லா சொல்லி இருக்கிறீங்க. இதை ஜம்மு சொன்னது என எபப்டி சொல்லலாம்? அந்தாள் தான் உயிரோடை இல்லையே. உது எப்படி இருக்கு ஜம்மு.

ஆகா ஆஹா சிட்டுவேசன் கவிதை சூப்பர் ஜம்மு. எப்படி ஜம்மு உங்களால் இப்படி எல்லாம்.

ஆஹா சிட்டுவேசன் சோங் ............. ஜம்ஸ்

http://www.isaithenral.com/Songs/free/inde...shthoori%20Maan இந்த லிங்க் இல் உங்கள் பாட்டை தரவிறக்கலாம்

ஏன் இந்த பாட்டு பிடிச்சிருக்கு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

அவசர காதல் தான் அவலத்திற்கு காரணமோ?

Link to comment
Share on other sites

தையில் தைத்து,

மாசியில் பேசி,

பங்குனியில் சங்கமித்து,

சித்திரையில் புரண்டு,

ஆனியில் அலைந்து,

ஆடியில் பாடி,

ஆவணியில் அணி தந்து,

புரட்டாசி வரட்சியுற்று,

ஐப்பசியில் கசந்து,

கார்த்திகையில் தொடர்பறுந்து,

மார்கழியில் முடிந்ததா காதல்?

தொடர்ந்து தை வருமே.... வெண்ணிலா :rolleyes::unsure:

:huh::wub: : அட இப்படி சிம்பிளாக சொல்லிட்டியளே. 12 வரியில் முடிச்சிட்டியள். ரொம்ப நன்னா இருக்குங்கோ. ஐயோ எனக்கு எப்பவும் வசந்தகாலம் தான். எத்தனை தை வந்தாலும் நான் நானாக தான் இருக்கிறேனுங்கோ. :lol: இக்கவி எழுதினது வெண்ணிலாவாக இருக்கலாம். ஆனால் உணர்வுகள் என்னது இல்லை :)

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

:( விருந்துக்கு வாறியளோ.............. ஜம்மு எங்கை தாமரை இலை பந்திக்கு போடுங்கோ.

எனக்கு கவலை எதுவும் இல்லை விகடகவி :lol: நன்றிகள் நன்றாக கவிதையில் விருந்துக்கு வருவதை சொல்லி இருக்கிறியள். அது சரி ஏன் வெண்ணிலா வெட்கம் பாரன்! அபப்டின்னா என்னங்க? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

அவசர காதல் தான் அவலத்திற்கு காரணமோ?

:icon_mrgreen: நீண்டகாலத்தின் பின் உங்கள் வாழ்த்து கேட்டதில் மகிழ்ச்சி. நன்றிகள்.

ம்ம் இருக்கலாம் அவசரம் தான் அவலத்திற்கு காரணம்.

"பதறாத காரியம் சிதறாது" :rolleyes:

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா,

வருட முடிவில் காதலையும் முடித்து

விட்டீர்களே.

சோகமாக இருக்கிறது

கவிதையால் காதல் வரையவில்லை

காதலால் கவிதை வரைந்திருக்கிறீர்கள். :D

Link to comment
Share on other sites

நல்ல ரசனையான வரிகள்,

கவிதை கவிதையாகவே ஆகட்டும்.

நிஷம் நிஷமாகவே இருக்கட்டும்.

பாராட்டுக்கள் நிலா!

Link to comment
Share on other sites

நீண்ட நாட்க்களின் பின் உங்கள் கவிதையை ரசிப்பதில் மகிழ்ச்சி!!

அசத்தல் வெண்ணிலா.......

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்னொரு காதலில் விழ வாழ்த்துக்கள் நிலா :D

:lol::) விழுறதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லுறீங்க இது நன்னாவா இருக்கு? :D:lol:

உண்மையை கவிதையாக வடித்திருக்கிறீங்கள்... கவிதை நன்றாக உள்ளது... :D

நன்றிகள் கவரிமான்.

ஓ சிலரது வாழ்க்கை இபப்டித்தான் அமைந்திருக்கு போல. நான் என்னமோ சும்மா எழுதினேன் பா. நீங்கள் உண்மை உண்மை என சொலுறீங்க. அப்படின்னா.............. :D:lol:

கவிதை ரொம்பவே நல்லா இருக்கு வெண்ணிலா

ரொம்ப நன்றிகள் செவ்வந்தி :)

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா,

வருட முடிவில் காதலையும் முடித்து

விட்டீர்களே.

சோகமாக இருக்கிறது

கவிதையால் காதல் வரையவில்லை

காதலால் கவிதை வரைந்திருக்கிறீர்கள். :D

:lol: கனிஷ் வாங்கோ. கவிதையில் தான் வருடமும் காதலும் முடிந்தது :)

நல்ல ரசனையான வரிகள்,

கவிதை கவிதையாகவே ஆகட்டும்.

நிஷம் நிஷமாகவே இருக்கட்டும்.

பாராட்டுக்கள் நிலா!

:D நன்றிகள் வல்வை அண்ணா.

நிஜங்கள் எப்போதும் நிஜங்கள் தானே. நிஜம் எப்போதும் நிழலாகாது தானே :D

நீண்ட நாட்க்களின் பின் உங்கள் கவிதையை ரசிப்பதில் மகிழ்ச்சி!!

அசத்தல் வெண்ணிலா.......

வாழ்த்துக்கள்

நீண்ட நாட்களாக உங்களையும் கவிதையும் காணவில்லையே இனி.

உங்கள் கவிதையையும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு நிலா.சோகம் தான் முடியல :D

கவிதைக்கு வந்த பதில்கள் பலே..

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு நிலா.சோகம் தான் முடியல :(

கவிதைக்கு வந்த பதில்கள் பலே..

:( சோகம் சோகம் என்கிறீங்க. எனக்கென்றால் அக்கவியில் சோகமே தெரியவில்லை. ஏன்னா உதைவிட எவ்வளவோ சோகங்கள் இருக்கும் போது இது ஜஸ்ட் ஒரு வருட காதல் தானே :lol::(

நன்றிகள் தூயா பபா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.