Jump to content

ஒருவருட காதல்


Recommended Posts

ஒருவருட காதல்

nilaql0.jpg

வருடப்பிறப்பு அன்று கோயிலில்

திருவிழாக் கால மக்கள் திரளுள்

கருவிழியாள் உன் பார்வையால்

அரும்பியது என்னுள் காதல்

தைப்பொங்கல் வரும்வரையில்

தையலுன் பின்னால் தினமும்

அலைந்த என் காதலுள்

தொலைத்தாய் உன் இதயத்தை

மாசி வந்ததும் நாமிருவரும்

பேசி பேசி காதல் செய்தோம்

பங்குனி மாதத்தில் உன்

சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்

சித்திரை மாதம் வந்ததும்

நித்திரையின்றி புரண்டேன்

வைகாசி பூத்ததும் நாமிருவரும்

கைராசி பார்த்து சந்தோசப்பட்டு

ஆனி வந்ததும் உல்லாசமாக

தேனீக்கள்போல பறந்து திரிந்து

ஆடி வந்ததும் இருவரும்

பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்

ஆவணி உதித்ததும் உனக்கு நான்

தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்

புரட்டாதியும் வந்தது நமக்குள்

புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்

ஐப்பசி வெகுவிரைவில் வந்தது

பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு

கார்த்திகை பூக்க தொடங்கையில்

பூர்த்தியானது நம் தொடர்பு

மார்கழி முடியும் வேளையில் எனக்கு

மூர்க்கம் வந்தது காதல் மேல்..

சந்தோசமாக மலர்ந்த காதல்

சந்தேகத்தால் உதிர்ந்தது.

மீண்டும் வருடம் பிறந்தது

கண்டேன் பல பெண்களை ஆனாலும்

வேண்டாம் எனக்குள்

இன்னொரு காதல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :D

கவிதை உண்மையாயிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிச்சதுக்குள்ள சற்று வித்தியாசமான சிந்தனையில் அமைந்த கவிதை. பாராட்டுக்கள். :lol:

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :D

கவிதை உண்மையாயிருக்கு

பிள்ள.... காதல் உண்மையானதா இருந்தா சுடாது. சுட்டிச்சின்னா.. அது காதலில்ல. அதற்காக கவலைப்படவோ வருந்தவோ.. ஏமாந்ததாவோ கருதக் கூடாது. ஏமாத்திற கூட்டம் காதலென்ற வேசம் போட்டும் அலையும்.. என்றதை மனசில இருந்திக்கனும் எப்பவும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ள.... காதல் உண்மையானதா இருந்தா சுடாது. சுட்டிச்சின்னா.. அது காதலில்ல. அதற்காக கவலைப்படவோ வருந்தவோ.. ஏமாந்ததாவோ கருதக் கூடாது. ஏமாத்திற கூட்டம் காதலென்ற வேசம் போட்டும் அலையும்.. என்றதை மனசில இருந்திக்கனும் எப்பவும்..! :lol:

சரியா சொன்னியள் தாத்தா. இப்ப காதலென்ற போர்வையில் கனக்க விசயங்கள் நடக்குது ஆனா உண்மை தெரிய வரேக்கை பாதிக்கபட்டவர்களின் நிலைமை தான் பாவம். :lol:

ஆனா இதிலிருந்து தப்பிக்க காதலிக்காம இருக்கிறது தான் வழியா தாத்தா :D ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ள வரிகள், இதுவரை நான்படித்த உங்கள் கவிதைகளில் இந்த கவிஞருக்கு காதல் பிடித்திருக்கிறது,, ஆனால் தோல்வி இவரை துரத்துகிறது. கவிதைகளில் மட்டும் தோல்விகள் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே என்ன கொடுமையிது! மாதங்களைப் பண்ணிரண்டாக மட்டும் வைத்தது யார்? இன்னும் இரண்டு மாதத்தைக் கூட்டிவைத்தால் குறைந்தா போய் விடுவார்கள்! அப்போதாவது அந்தக் காதல் இணைந்திருக்குமே!!! :D:)

Link to comment
Share on other sites

ம்ம்..ஒரு வருட காதலில் இவ்வளவு வலிகளா??..(நிசமா முடியல்ல :( )..ஒரு வருட காதலையும் ஒரு கவிகுள் அடக்கி சென்றது நிலா அக்காவின் தனித்துவம் வாழ்த்துக்கள் அக்கா.. :lol:

ம்ம்...நிலா அக்கா காதலர்கள் வேண்டும் என்றா பிரிந்து போகலாம் அதற்காக காதல் தோற்குது என்று எல்லாம் சொல்லபடாது என்ன.. :lol: (எப்பவுமே நாம ஒன்னை காதலிக்கிற படியா தான் இன்னுமெ சந்தோசமாக இருக்க முடியுது).. அக்சுவலா நான் முதலாவதா காதலிக்கிறது மம்மியை அடுத்து வேற யாரையும் இல்லை என்னை தான்.. (என்ன பார்க்கிறியள் :D )..எப்பவுமே நம்மளே நாம காதலித்தா தான் மற்றவையள் நம்மளை காதலிப்பீனம் பாருங்கோ..(இது எப்படிக்கா இருக்கு :( )..

ம்ம்..இறுதி வரியை வாசிக்கும் போது அந்த ஆள் ரொம்பவே நொந்து போயிட்டார் போல இருக்கு..(இதுக்கே இப்படி என்றா)...வாழ்க்கையில எத்தனை குரோசிங் லைனை கடக்க வேண்டும் அச்சோ அச்சோ :D ...ம்ம் காதல் எங்களை எக் காரணம் கொண்டு வெறுபதில்ல நாம ஏன் வெறுக்க வேண்டும் காதலை :) ..இப்ப பாருங்கோ பூங்காவனத்தில சில ரோஜாக்கள் அழகாக இருக்கும் ஆனா நறுமணம் குன்றி இருக்கும்..(ஏன் அழகில் மயங்கி நறுமணம் இல்லாத ரோஜாவை நோக்கி பயணிப்பான்)..இப்படி நான் சொன்னேன் என்று அவருக்கு சொல்லுங்கோ என்ன நிலா அக்கா.. :D

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

மீண்டும் வருடம் பிறந்தது

மீண்டும் இதயம் என்னிடம் வந்தது

மீளவும் இன்னொருத்தி அருகில் வர

மீண்டும் இதயம் படபடத்தது..!! :wub:

சிட்டுவேசன் சோங் -

கேட்கலையோ கண்ணது கானம்

பூக்களையோ பூக்களையோ பூக்கள் நெஞ்சில் நாணம்

என்னை விட்டு எங்கே போனாலும்

என் உள்ளம் மட்டும் உன்னை விட்டு

எங்கையும் போகாது!! :lol:

அப்படியே சிட்டுவேசன் சோங் கஸ்தூரிமான் படத்தில இருந்து இந்த பாட்டு நன்னா இருக்கும்..(யாருக்கும் அந்த பாட்டு கிடைத்தா இணைப்பை தாங்கோ)..நேக்கு அந்த பாட்டு என்றா நன்னா விருப்பம் ஏன் என்று எனக்கே தெரியாது..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :wub:

கவிதை உண்மையாயிருக்கு

:D வெண்ணிலா சூடா இருக்கவில்லையுங்கோ. ஹீஹீ காதல் இருந்தால் தானே சுடுறதுக்கு :lol:

கவிதை சாதாரணமாக இருக்குது. நீங்கள் வாசிக்கையில் உண்மையென நினைச்சு வாசிக்கிறீங்க. :(

நான் படிச்சதுக்குள்ள சற்று வித்தியாசமான சிந்தனையில் அமைந்த கவிதை. பாராட்டுக்கள். :lol:

நன்றிகள் நெடுக் தாத்தா.

உணர்வுள்ள வரிகள், இதுவரை நான்படித்த உங்கள் கவிதைகளில் இந்த கவிஞருக்கு காதல் பிடித்திருக்கிறது,, ஆனால் தோல்வி இவரை துரத்துகிறது. கவிதைகளில் மட்டும் தோல்விகள் தொடர வாழ்த்துக்கள்.

:) இதுவரையில் காதல் பிடித்திருந்தாலும் காதலில் தோல்வி வந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைச்சு பதிச்ச கவி இது.

வாழ்க்கையில் தோல்வியும் வெற்றியும் இன்பமும் துன்பமும் காலையும் மாலையும் போல தானே சித்தனே.

வாழ்த்துக்கு நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

சே என்ன கொடுமையிது! மாதங்களைப் பண்ணிரண்டாக மட்டும் வைத்தது யார்? இன்னும் இரண்டு மாதத்தைக் கூட்டிவைத்தால் குறைந்தா போய் விடுவார்கள்! அப்போதாவது அந்தக் காதல் இணைந்திருக்குமே!!! :wub::lol:

:D மாதம் கூடினால் என்ன மனம் எல்லோ கூடணும் ஒன்றோடு ஒன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையில் தைத்து,

மாசியில் பேசி,

பங்குனியில் சங்கமித்து,

சித்திரையில் புரண்டு,

ஆனியில் அலைந்து,

ஆடியில் பாடி,

ஆவணியில் அணி தந்து,

புரட்டாசி வரட்சியுற்று,

ஐப்பசியில் கசந்து,

கார்த்திகையில் தொடர்பறுந்து,

மார்கழியில் முடிந்ததா காதல்?

தொடர்ந்து தை வருமே.... வெண்ணிலா :D:):wub:

Link to comment
Share on other sites

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

Link to comment
Share on other sites

ம்ம்..ஒரு வருட காதலில் இவ்வளவு வலிகளா??..(நிசமா முடியல்ல :( )..ஒரு வருட காதலையும் ஒரு கவிகுள் அடக்கி சென்றது நிலா அக்காவின் தனித்துவம் வாழ்த்துக்கள் அக்கா.. :lol:

ம்ம்...நிலா அக்கா காதலர்கள் வேண்டும் என்றா பிரிந்து போகலாம் அதற்காக காதல் தோற்குது என்று எல்லாம் சொல்லபடாது என்ன.. :huh: (எப்பவுமே நாம ஒன்னை காதலிக்கிற படியா தான் இன்னுமெ சந்தோசமாக இருக்க முடியுது).. அக்சுவலா நான் முதலாவதா காதலிக்கிறது மம்மியை அடுத்து வேற யாரையும் இல்லை என்னை தான்.. (என்ன பார்க்கிறியள் :rolleyes: )..எப்பவுமே நம்மளே நாம காதலித்தா தான் மற்றவையள் நம்மளை காதலிப்பீனம் பாருங்கோ..(இது எப்படிக்கா இருக்கு :) )..

ம்ம்..இறுதி வரியை வாசிக்கும் போது அந்த ஆள் ரொம்பவே நொந்து போயிட்டார் போல இருக்கு..(இதுக்கே இப்படி என்றா)...வாழ்க்கையில எத்தனை குரோசிங் லைனை கடக்க வேண்டும் அச்சோ அச்சோ ...ம்ம் காதல் எங்களை எக் காரணம் கொண்டு வெறுபதில்ல நாம ஏன் வெறுக்க வேண்டும் காதலை : ..இப்ப பாருங்கோ பூங்காவனத்தில சில ரோஜாக்கள் அழகாக இருக்கும் ஆனா நறுமணம் குன்றி இருக்கும்..(ஏன் அழகில் மயங்கி நறுமணம் இல்லாத ரோஜாவை நோக்கி பயணிப்பான்)..இப்படி நான் சொன்னேன் என்று அவருக்கு சொல்லுங்கோ என்ன நிலா அக்கா.. :

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

மீண்டும் வருடம் பிறந்தது

மீண்டும் இதயம் என்னிடம் வந்தது

மீளவும் இன்னொருத்தி அருகில் வர

மீண்டும் இதயம் படபடத்தது..!! :unsure:

சிட்டுவேசன் சோங் -

கேட்கலையோ கண்ணது கானம்

பூக்களையோ பூக்களையோ பூக்கள் நெஞ்சில் நாணம்

என்னை விட்டு எங்கே போனாலும்

என் உள்ளம் மட்டும் உன்னை விட்டு

எங்கையும் போகாது!!

அப்படியே சிட்டுவேசன் சோங் கஸ்தூரிமான் படத்தில இருந்து இந்த பாட்டு நன்னா இருக்கும்..(யாருக்கும் அந்த பாட்டு கிடைத்தா இணைப்பை தாங்கோ)..நேக்கு அந்த பாட்டு என்றா நன்னா விருப்பம் ஏன் என்று எனக்கே தெரியாது..

அப்ப நான் வரட்டா!!

ஹாஹா ஒருவருடத்தில் இத்தனை வலிகளா என கேட்டு முடியலை என்கிறியளே. அனுபவிச்சால் எப்படி இருக்கும். ஹீஹீ எனக்கும் அனுபவிக்கணும் போல இருக்கு ஜம்மு என்ன பார்க்கிறியள் நான் சொன்னது காதலை அனுபவிக்கணும் னு.

ஜம்மு அம்மாவையும் உங்களையும் காதலிக்கிறியளா. கிரேட் ஜம்மு. :wub: நிசமா நன்னா இருக்குங்கோ உங்களாஇ நீங்க காதலிச்சால் உங்களை யாராவது காதலிப்பினம் என்ற நம்பிக்கை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனாலும் பேபிக்கு இது கொஞ்சம் ஓவராக இல்லையோ.

பூங்காவனத்து ரோசாவின் நறுமணம் பற்றி நல்லா சொல்லி இருக்கிறீங்க. இதை ஜம்மு சொன்னது என எபப்டி சொல்லலாம்? அந்தாள் தான் உயிரோடை இல்லையே. உது எப்படி இருக்கு ஜம்மு.

ஆகா ஆஹா சிட்டுவேசன் கவிதை சூப்பர் ஜம்மு. எப்படி ஜம்மு உங்களால் இப்படி எல்லாம்.

ஆஹா சிட்டுவேசன் சோங் ............. ஜம்ஸ்

http://www.isaithenral.com/Songs/free/inde...shthoori%20Maan இந்த லிங்க் இல் உங்கள் பாட்டை தரவிறக்கலாம்

ஏன் இந்த பாட்டு பிடிச்சிருக்கு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

அவசர காதல் தான் அவலத்திற்கு காரணமோ?

Link to comment
Share on other sites

தையில் தைத்து,

மாசியில் பேசி,

பங்குனியில் சங்கமித்து,

சித்திரையில் புரண்டு,

ஆனியில் அலைந்து,

ஆடியில் பாடி,

ஆவணியில் அணி தந்து,

புரட்டாசி வரட்சியுற்று,

ஐப்பசியில் கசந்து,

கார்த்திகையில் தொடர்பறுந்து,

மார்கழியில் முடிந்ததா காதல்?

தொடர்ந்து தை வருமே.... வெண்ணிலா :rolleyes::unsure:

:huh::wub: : அட இப்படி சிம்பிளாக சொல்லிட்டியளே. 12 வரியில் முடிச்சிட்டியள். ரொம்ப நன்னா இருக்குங்கோ. ஐயோ எனக்கு எப்பவும் வசந்தகாலம் தான். எத்தனை தை வந்தாலும் நான் நானாக தான் இருக்கிறேனுங்கோ. :lol: இக்கவி எழுதினது வெண்ணிலாவாக இருக்கலாம். ஆனால் உணர்வுகள் என்னது இல்லை :)

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

:( விருந்துக்கு வாறியளோ.............. ஜம்மு எங்கை தாமரை இலை பந்திக்கு போடுங்கோ.

எனக்கு கவலை எதுவும் இல்லை விகடகவி :lol: நன்றிகள் நன்றாக கவிதையில் விருந்துக்கு வருவதை சொல்லி இருக்கிறியள். அது சரி ஏன் வெண்ணிலா வெட்கம் பாரன்! அபப்டின்னா என்னங்க? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

அவசர காதல் தான் அவலத்திற்கு காரணமோ?

:icon_mrgreen: நீண்டகாலத்தின் பின் உங்கள் வாழ்த்து கேட்டதில் மகிழ்ச்சி. நன்றிகள்.

ம்ம் இருக்கலாம் அவசரம் தான் அவலத்திற்கு காரணம்.

"பதறாத காரியம் சிதறாது" :rolleyes:

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா,

வருட முடிவில் காதலையும் முடித்து

விட்டீர்களே.

சோகமாக இருக்கிறது

கவிதையால் காதல் வரையவில்லை

காதலால் கவிதை வரைந்திருக்கிறீர்கள். :D

Link to comment
Share on other sites

நல்ல ரசனையான வரிகள்,

கவிதை கவிதையாகவே ஆகட்டும்.

நிஷம் நிஷமாகவே இருக்கட்டும்.

பாராட்டுக்கள் நிலா!

Link to comment
Share on other sites

நீண்ட நாட்க்களின் பின் உங்கள் கவிதையை ரசிப்பதில் மகிழ்ச்சி!!

அசத்தல் வெண்ணிலா.......

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்னொரு காதலில் விழ வாழ்த்துக்கள் நிலா :D

:lol::) விழுறதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லுறீங்க இது நன்னாவா இருக்கு? :D:lol:

உண்மையை கவிதையாக வடித்திருக்கிறீங்கள்... கவிதை நன்றாக உள்ளது... :D

நன்றிகள் கவரிமான்.

ஓ சிலரது வாழ்க்கை இபப்டித்தான் அமைந்திருக்கு போல. நான் என்னமோ சும்மா எழுதினேன் பா. நீங்கள் உண்மை உண்மை என சொலுறீங்க. அப்படின்னா.............. :D:lol:

கவிதை ரொம்பவே நல்லா இருக்கு வெண்ணிலா

ரொம்ப நன்றிகள் செவ்வந்தி :)

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா,

வருட முடிவில் காதலையும் முடித்து

விட்டீர்களே.

சோகமாக இருக்கிறது

கவிதையால் காதல் வரையவில்லை

காதலால் கவிதை வரைந்திருக்கிறீர்கள். :D

:lol: கனிஷ் வாங்கோ. கவிதையில் தான் வருடமும் காதலும் முடிந்தது :)

நல்ல ரசனையான வரிகள்,

கவிதை கவிதையாகவே ஆகட்டும்.

நிஷம் நிஷமாகவே இருக்கட்டும்.

பாராட்டுக்கள் நிலா!

:D நன்றிகள் வல்வை அண்ணா.

நிஜங்கள் எப்போதும் நிஜங்கள் தானே. நிஜம் எப்போதும் நிழலாகாது தானே :D

நீண்ட நாட்க்களின் பின் உங்கள் கவிதையை ரசிப்பதில் மகிழ்ச்சி!!

அசத்தல் வெண்ணிலா.......

வாழ்த்துக்கள்

நீண்ட நாட்களாக உங்களையும் கவிதையும் காணவில்லையே இனி.

உங்கள் கவிதையையும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு நிலா.சோகம் தான் முடியல :D

கவிதைக்கு வந்த பதில்கள் பலே..

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு நிலா.சோகம் தான் முடியல :(

கவிதைக்கு வந்த பதில்கள் பலே..

:( சோகம் சோகம் என்கிறீங்க. எனக்கென்றால் அக்கவியில் சோகமே தெரியவில்லை. ஏன்னா உதைவிட எவ்வளவோ சோகங்கள் இருக்கும் போது இது ஜஸ்ட் ஒரு வருட காதல் தானே :lol::(

நன்றிகள் தூயா பபா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.