Jump to content

வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா

சென்னை & டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார்.

கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர்.

வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவிடத்திலும் பிரியங்கா அஞ்சலி செலுத்ததினார். இந்தச் செய்திகள் அடுத்த நாள் தான் பத்திரிக்கைகளில் கசிந்தன.

இந் நிலையில் அவரது வேலூர் வருகை கோவிலுக்கு செல்வதற்காக அல்ல, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவே அவர் வந்தார் என்ற விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி வெளியில் வர காரணமாக இருந்தது சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான ராஜ்குமார். இவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், பிரியங்காவை நளினி சந்தித்துள்ளார். எந்த சட்ட விதியின் கீழ் அவரை சந்தி்க்க அனுமதி தரப்பட்டது?, அப்போது யாரு உடன் இருந்தனர்?, இந்த சந்திப்பு எவ்வளவு நேரம் நீடித்தது?, இருவரும் என்ன பேசினர்? ஆகிய தகவல்களை தருமாறு ராஜ்குமார் கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கான பதில் ராஜ்குமாருக்கு சிறைத்துறையிடமிருந்து கிடைத்ததா என்று தெரியவில்லை.

இருப்பினும் இந்த சந்திப்பு குறித்த தகவல் அவர் மூலமாக வெளி வந்துவிட்டது.

இந் நிலையில் இந்தச் சந்திப்பை நளினியின் தாயார் உறுதி செய்துள்ளார். கோவையில் உள்ள அவர் இச் சந்திப்பை ஒரு பத்திரிக்கையிடம் உறுதி செய்துள்ளார்.

அதே போல நளினியின் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோரும் இச் சந்திப்பை உறுதி செய்துள்ளனர். தன்னை பிரியங்கா சந்தித்ததாக நளினி தங்களிடம் கூறியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா உறுதி:

இந் நிலையில் இதுவரை அமைதி காத்து வந்த பிரியங்காவும் சந்திப்பை உறுதி செய்துவிட்டார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

நான் வேலூர் போனதும், நளினியை சந்தித்தும் உண்மை. அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம். என் வாழ்வில் நடந்த அந்த பயங்கரம் (ராஜிவ் கொலை) குறித்த தகவல் பெறவும், அமைதி வேண்டியும் அவரை சந்தித்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா.

ராஜிவ் கொலையில் நேரடியாக ஈடுபட்ட 5 பேர் கொண்ட குழுவில் இப்போது உயிருடன் இருப்பது நளினி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த ராஜிவ் கொலையில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நளினிக்கு வயது 26. ஆனால், அவரது குழந்தை மேகரா அனாதையாகிவிடும் என்று சோனியா காந்தி கருணை காட்டியதால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இப்போது நளினிக்கு வயது 43.

ராஜிவ் காந்தி கொலையி்ன் வலியில் இருந்து இன்னும் அவரது குடும்பம் மீளவில்லை என்பதையே இந்தச் சந்திப்பு காட்டுகிறது.

பேசியது என்ன?:

இந்தச் சந்திப்பு குறித்து தனது வழக்கறிஞர்களிடம் நளினி நிறையவே பேசியிருக்கிறார். அதன் விவரம்:

நளினியை சந்தித்தபோது மிக அமைதியாக, அன்பாகப் பேசினாராம் பிரியங்கா.

என் அப்பா மிக நல்ல மனிதர், அவரைப் போய் எதற்காகக் கொன்றீர்கள் என்று பிரியங்கா கேட்க, அதற்கு தன்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை என தனது வழக்கறிஞர்களிடம் நளினி தெரிவி்த்துள்ளார்.

கிட்டத்தட்ட 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பு நடக்க மத்திய உளவுப் பிரியான ஐ.பி. உதவியுள்ளது. மார்ச் 11ம் தேதி ஐ.பியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்துள்ளார். அப்போது பிரியங்காவின் படத்தைக் காட்டி இவர் உங்களை சந்தி்க்க விரும்புகிறார். நீங்கள் தயாரா என்று கேட்க, நளினி உடனே சந்திக்க ஒப்புக் கொண்டாராம்.

இதையடுத்து மார்ச் 18ம் தேதி பங்கஜ் குமார் என்ற இன்னொரு ஐ.பி. அதிகாரி நளினியை சந்தித்து, நாளை உங்களை பிரியங்கா சந்திப்பார் என்று தெரிவித்துவிட்டுப் போனார்.

இதையடுத்து இனிப்புகளுடன் பிரியங்காவை சந்திக்க மறுநாள் நளினி காத்திருக்க, இனிப்புகளை வழங்க ஐ.பி. தடை போட்டுவிட்டது. சிறையில் ஒரு அறைக்குள் நளினி அழைத்துச் செல்லப்பட அங்கு பிரியங்கா ஏற்கனவே வந்து காத்திருந்திருக்கிறார்.

பின்னர் இருவரும் தனியே சந்தித்துப் பேசியுள்ளனர்.

மிக உணர்ச்சிமயமாகக் காணப்பட்ட பிரியங்கா, நளினிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து மிக அன்பாகப் பேசியுள்ளார். எதற்காக என் தந்தை கொல்லப்பட்டார்?, இதனால் யாருக்கு என்ன லாபம்?, கொலையில் உங்களது பங்கு என்ன? என்று பிரியங்கா கேள்விகள் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நளினி, கடைசி வரை எனக்கு அந்தக் கொலை பற்றி ஏதும் தெரியாது. நான் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், எதற்காக போகிறோம் என்று அப்போது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

என் தந்தை நல்ல மனிதர், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டீர்கள் என்று பிரியங்கா சொல்ல பதிலே அதும் சொல்லாமல் அமர்ந்திருக்கிறார் நளினி.

இந்தக் கொலையை திட்டமிட்டது யார்? என்று பிரியங்கா கேட்டுள்ளார். இதற்கு தனக்கு பதில் தெரியவில்லை என்று நளினி கூறியுள்ளார்.

அதே போல கொலையை நடத்தியது யார்? என்று பிரியங்கா கேட்க, தனு தான் குண்டை வெடிக்கச் செய்தார், அவருக்கு மட்டும் தான் இந்தக் கொலைக்கான பின்னணி, காரணம் யார் போன்ற முழு விவரங்களும் தெரியும் என்று கூறியுள்ளார் நளினி.

எல்டிடிஈக்கு தொடர்பு உண்டா?:

இந்தக் கொலையில் எல்டிடிஈக்கு தொடர்பு உண்டா? என்றும் பிரியங்கா கேட்டுள்ளார். இதற்கு நளினி, எனக்கு அது குறித்து சரியாகத் தெரியவில்லை. ராஜிவைக் கொல்ல தனுவுக்கு யார் உத்தரவு போட்டது என்றும் எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் நளினி.

மேலும் இந்தக் கொலையாளிகளிடம் போய் நீங்கள் எப்படி சேர்ந்தீர்கள் என்று பிரியங்கா கேட்டுள்ளார். அதற்கு பதில் தந்த நளினி, நான் சிறு வயதில் இருந்தே அன்புக்காக ஏங்கினேன். என்னிடம் யார் அன்பாக இருந்தாலும் அவர்களுடன் ஒன்றி விடுவேன், உதவுவேன். அந்த வகையில் தான் சிவராசன் (ஒற்றைக் கண் சிவராசன்), முருகன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது என்று கூறியுள்ளார் நளினி.

முருகன் எல்டிடிஈ உறுப்பினரா என்று பிரியங்கா கேட்க, முருகனுக்கும் கூட இந்தக் கொலை குறித்த விவரங்கள் தெரியாது. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ராஜிவை கொல்லப் போகிறார்கள் என்ற விவரமே முருகனுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் நளினி. என்னைப் போலவே அவருக்கும் கடைசியில் தான் எல்லாம் தெரிந்தது என்று கூறியுள்ளார்.

சந்திப்பு ஏன்?:

இந்தச் சந்திப்பு குறித்து நளினியிடம் பிரியங்கா கூறுகையில், நான் யார் அனுப்பியும் உங்களை சந்திக்க வரவில்லை. நான் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் வாழ்வில் நடந்த அந்த துயரத்துக்கான காரணம் தேடித்தான் இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது குழந்தைகள், படிப்பு குறித்தெல்லாம் பேசிய பிரியங்கா, நளினியின் மகள், அவரது கல்வி, தாயார், அவர்களது நிலைமை குறி்த்தும் விசாரித்துள்ளார்.

பச்சை நிறப் புடவையில் மிக எளிமையாக வந்த பிரியங்கா, என்னிடம் மிக அன்பாகப் பேசினார் என்று கூறியுள்ளார் நளினி.

http://thatstamil.oneindia.in/news/2008/04...llore-jail.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிரசுரிக்கப்பட்ட விடயங்கள் உண்மை என்றால்..

இன்று வரை.. ராஜீவ்காந்தியின் கொலைக்கு யார் காரணம் என்பதை இந்தியா இன்னும் முற்றாக அறியவில்லை.. அல்லது நிரூபிக்க முடியவில்லை அல்லது உண்மையை வெளியிடவில்லை என்பது புலனாகிறது. காரணம்.. பிரியங்காவின் ஒரு கேள்வி.. இதை எல் ரி ரி ஈ யா செய்தது என்பது..?! ஆக எல் ரி ரி ஈ செய்தது என்பது இன்றுவரை இந்திய அதிகாரிகளால் சோடிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. எல் ரி ரி ஈ செய்தது என்று நிரூபிக்கப்பட்ட சான்றுகள் இருப்பின் பிரியங்காவுக்கு இப்படி ஒரு சந்தேகம் எழ வேண்டிய அவசியம் வந்திருக்காது..!

ஏலவே தொல் திருமாவளவன் சுட்டிக்காட்டியது போல.. இக்கொலைக்குப் பின்னால் சர்வதேச சதி பின்னிப்பிணைந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் அதை கண்டறியும் திறன் இந்தியாவுக்கு இல்லாமல் இருக்கிறது.. அல்லது தெரிந்தும் மறைக்கிறது..! ஆனால் இதில் பலிக்கடாவானது.. ஈழத்தமிழர்களின் நலன் தான்..!

விடுதலைப்புலிகள் கூட ஈழத்துக்கு ராஜீவ் செய்த துரோகத்தால் அவரின் இழப்பின் போது வருத்தம் தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த சமாதான காலத்தில் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்றனரே தவிர.. தாம் தான் அதற்குப் பொறுப்பு என்று சொன்னதாக இல்லை..! :rolleyes:

ஆனால்.. ஒரு குடும்பத்துக்காக அதன் சொந்த நலனுக்காக இந்திய தேசத்தின் நலனை பொருட்படுத்தாமல்.. செயற்படும் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு.. மோசமான இந்திய தேச விரோதச் செயல் என்பது மறுக்க முடியாத உண்மை..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இந்தக் கொலையை திட்டமிட்டது யார்? என்று பிரியங்கா கேட்டுள்ளார். இதற்கு தனக்கு பதில் தெரியவில்லை என்று நளினி கூறியுள்ளார்.

அதே போல கொலையை நடத்தியது யார்? என்று பிரியங்கா கேட்க, தனு தான் குண்டை வெடிக்கச் செய்தார், அவருக்கு மட்டும் தான் இந்தக் கொலைக்கான பின்னணி, காரணம் யார் போன்ற முழு விவரங்களும் தெரியும் என்று கூறியுள்ளார் நளினி.

எல்டிடிஈக்கு தொடர்பு உண்டா?:

இந்தக் கொலையில் எல்டிடிஈக்கு தொடர்பு உண்டா? என்றும் பிரியங்கா கேட்டுள்ளார்.

முருகன் எல்டிடிஈ உறுப்பினரா என்று பிரியங்கா கேட்க,

http://thatstamil.oneindia.in/news/2008/04...llore-jail.html

அப்படிப்போடு!! சோழியன் குடும்பி சும்மா ஆடாதாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியங்காவை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்தால் நளினியின் சிறைத்தண்டனையை குறைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்ட விடயம் பற்றி ஒண்டும் இதில் இல்லையே !!

இதையடுத்து இனிப்புகளுடன் பிரியங்காவை சந்திக்க மறுநாள் நளினி காத்திருக்க, இனிப்புகளை வழங்க ஐ.பி. தடை போட்டுவிட்டது.

உவனுக யாருக்கு உல்டா விடுறானுகள் ஓய்.!

Link to comment
Share on other sites

என் தந்தை நல்ல மனிதர், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டீர்கள் என்று பிரியங்கா சொல்ல பதிலே அதும் சொல்லாமல் அமர்ந்திருக்கிறார் நளினி.

இந்திய இராணுவத்தால் பாதிக்கபட்ட மக்களிடம் இந்த கேள்வியை கேட்கவேண்டும். அல்லது இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்கள் வந்து உண்மையை சொல்ல வேண்டும். நயவஞ்சகமாக கொல்லப்பட்ட கிட்டு உட்பட அனைத்து போராளிகளின் இறப்புக்கும் யார் காரணம்? இந்த ராஜீவ் காந்தி தான் பொறுப்பு. பிரியங்காவிடம் நல்ல அப்பாவாக ஒரு வேளை இருந்திருக்கலாம். ஆனால் ஈழதமிழர்களுக்கு அல்ல.அல்லவே அல்ல.

Link to comment
Share on other sites

சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஏப்ரல் 2008

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை, பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு வந்து ரகசியமாக வந்து சந்தித்துப் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 19 ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார்.இது குறித்த தகவல் மறுநாள்தான் பத்திரிகைகளில் வெளியானது.வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு தரிசனம் செய்யவே அவர் அப்போது வந்ததாகக் கூறப்பட்டது.சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர்.

மேலும் வேலூர் செல்லும் வழியில் திரும்பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திலும் பிரியங்கா அஞ்சலி செலுத்தியதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரியங்கா வேலூர் வந்தது தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அல்ல என்றும், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்திக்கவே அவர் வந்தார் என்றும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான ராஜ்குமார் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், பிரியங்காவை நளினி சந்தித்துப்பேசியதற்கு எந்த சட்ட விதியின் கீழ் அனுமதி தரப்பட்டது? சந்திப்பு எவ்வளவு நேரம் நடந்தது என்பது உள்ளிட்ட தகவல்களை தருமாறு ராஜ்குமார் கேட்டுள்ளார்.அது குறித்த தகவல்கள் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல் இல்லை என்றபோதிலும், மேற்கூறிய சந்திப்பு நடந்ததை பிரியங்காவே உறுதிபடுத்தியுள்ளார்.

இதும் குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'நான் வேலூர் சிறையில் நளினியை சந்தித்து உண்மை. அது முற்றிலும் என் தனிப்பட்ட பயணம். என் வாழ்வில் நடந்த அந்த பயங்கரம் (ராஜீவ் காந்தி கொலை) குறித்த தகவலை பெறவும், அமைதி வேண்டியும் நளினியை சந்தித்தேன் " என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே நளினியின் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர், பிரியங்கா சந்தித்ததை நளினி தங்களிடம் கூறியதாக தெரிவித்துள்ளனர். மேலும் பிரியங்காவுடன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு குறித்த விவரங்களையும் நளினி தனது வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளார்.

நளினியை சந்தித்தபோது பிரியங்கா மிக அமைதியாக, அன்பாகப் பேசியுள்ளார்.

"என் அப்பா மிக நல்ல மனிதர், அவரைப் போய் எதற்காகக் கொன்றீர்கள் ?" என்று பிரியங்கா கேட்க, அதற்கு தன்னால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை என தனது வழக்கறிஞர்களிடம் நளினி தெரிவி்த்துள்ளார்.

மிக உணர்ச்சிமயமாகக் காணப்பட்ட பிரியங்கா, நளினிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து மிக அன்பாகப் பேசியுள்ளார். எதற்காக என் தந்தை கொல்லப்பட்டார்? இதனால் யாருக்கு என்ன லாபம்? கொலையில் உங்களது பங்கு என்ன? என்று பிரியங்கா கேள்விகள் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நளினி, கடைசி வரை எனக்கு அந்தக் கொலை பற்றி ஏதும் தெரியாது. நான் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், எதற்காக போகிறோம் என்று அப்போது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

என் தந்தை நல்ல மனிதர், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டீர்கள் என்று பிரியங்கா சொல்ல பதிலே அதும் சொல்லாமல் அமர்ந்திருக்கிறார் நளினி.

இந்தக் கொலையை திட்டமிட்டது யார்? என்று பிரியங்கா கேட்டுள்ளார். இதற்கு தனக்கு பதில் தெரியவில்லை என்று நளினி கூறியுள்ளார்.

அதே போல கொலையை நடத்தியது யார்? என்று பிரியங்கா கேட்க, தனு தான் குண்டை வெடிக்கச் செய்தார், அவருக்கு மட்டும் தான் இந்தக் கொலைக்கான பின்னணி, காரணம் யார் போன்ற முழு விவரங்களும் தெரியும் என்று கூறியுள்ளார் நளினி.

இந்தக் கொலையில் புலிகளுக்கு தொடர்பு உண்டா? என்றும் பிரியங்கா கேட்க, அது குறித்து தனக்கு சரியாகத் தெரியவில்லை என்றும், ராஜீவைக் கொல்ல தனுவுக்கு உத்தரவு போட்டது யார் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் நளினி.

இந்தச் சந்திப்பு குறித்து நளினியிடம் பிரியங்கா கூறுகையில், நான் யார் அனுப்பியும் உங்களை சந்திக்க வரவில்லை. நான் தான் உங்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் வாழ்வில் நடந்த அந்த துயரத்துக்கான காரணம் தேடித்தான் இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது குழந்தைகள், படிப்பு குறித்தெல்லாம் பேசிய பிரியங்கா, நளினியின் மகள், அவரது கல்வி, தாயார், அவர்களது நிலைமை குறி்த்தும் விசாரித்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தன்னை வந்து சந்தித்ததன் மூலம், தனது பாவங்கள் கழுவப்பட்டு விட்டதாக கூறியுள்ளார் நளினி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பிரியங்கா சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பு குறித்த விவரங்களை நளினியின் வழக்கறிஞர் துரைசாமியின் ஜூனியரான வக்கீல் ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிக் கொணர்ந்துள்ளார்.

சிறையில், நளினியும், பிரியங்காவும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையின் உடன் யாரும் இருக்கவில்லை. மிகவும் உருக்கமாக இருந்துள்ளது அந்த சந்திப்பு.

இந்த சந்திப்பின்போது ராஜீவைக் கொல்ல உத்தரவிட்டது யார், விடுதலைப் புலிகள் அமைப்பினரா அல்லது வேறு யாருமா, ஏன் கொன்றீர்கள், கொல்லப்பட்டபோது நீங்கள் நேரில் பார்த்தீர்களா என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நளினியிடம் கேட்டுள்ளார் பிரியங்கா.

கதறி அழுத பிரியங்கா:

ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளாராம் பிரியங்கா. பிரியங்காவின் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மெளனத்தையும், கண் கலங்கலையும் பதிலாகத் தந்துள்ளார் நளினி.

தனது சந்திப்பு குறித்து சகோதரர் பாக்யநாதனிடம் உருக்கமாக கூறியுள்ளார் நளினி. இதுகுறித்து பாக்யநாதன் கூறுகையில், எனது பாவங்கள் கழுவப்பட்டதாக நளினி கூறியுள்ளார். என்னை பிரியங்கா மன்னித்து விட்டதாக உணர்கிறேன். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்த சந்திப்பின் மூலம் ராஜீவ் காந்தி குடும்பத்தின் மீது நான் வைத்திருந்த மரியாதை, இப்போது மேலும் அதிகரித்து இருப்பதாகவும் நளினி கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் காரணமல்ல?:

பிரியங்காவின் சந்திப்பு குறித்து வக்கீல் துரைசாமி கூறுகையில், பிரியங்காவின் சந்திப்பு, அவர் கேட்ட கேள்விகளைப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகள் இதைச் செய்திருப்பார்களா என்ற சந்தேகத்தில் அவர் இருப்பதாக தெரிகிறது.

வேறு சில சக்திகள் விடுதலைப் புலிகளின் பெயரில் இதைச் செய்திருக்கலாமோ என்று பிரியங்கா சந்தேகப்படுவதாக தெரிகிறது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் ஆன நிலையில், நளினி உள்ளிட்டோருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், யார் கொலை செய்யச் சொன்னது, ஏன் கொலை செய்யப்பட்டார் என்று பிரியங்கா கேட்பது மிகுந்த கவனத்துக்குரியது. இந்தக் கேள்விகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வழக்கமான பார்வையாளர் அறையில் நடக்கவில்லை. சிறைக் கண்காணிப்பாளரின் அறையில் சந்திப்பு நடந்துள்ளது.

கைதி ஒருவரை பார்வையாளர்கள் சந்திக்கும்போது சிறை அதிகாரிகள் யாரேனும் உடன் இருக்க வேண்டும். ஆனால் யாரும் பிரியங்கா, நளினி சந்திப்பின்போது உடன் இல்லை. தனியாக இருந்துள்ளனர். இதனால் இருவரின் உயிருக்குமே ஆபத்து இருந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்றார் துரைசாமி.

http://thatstamil.oneindia.in/news/2008/04...g-priyanka.html

Link to comment
Share on other sites

ராஜீவின் கொலைவழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டால் அந்த கொலையின் பின்னணியில் விடுதலைபுலிகள் இல்லை என்பது நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்

Link to comment
Share on other sites

வேலூர் சிறையில் நளினியை சந்தித்த பிரியங்காவிடம் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை மே 21-க்குள் எடுக்கவில்லை எனில்,...................

தொடர்ந்து வாசிக்க........................................

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3552.html

Link to comment
Share on other sites

சந்திப்பு மர்மம் என்ன?

.

Wednesday, 16 April, 2008 02:52 PM

.

சென்னை, ஏப்.16: வேலூர் சிறையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை, பிரியங்கா வதேதரா சந்தித்ததின் மர்மம் என்ன? என்று பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனிடையே இந்த சந்திப்பில் சிறை விதிகள் மீறப்பட்டிருப்ப தாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, ஏப்.16: வேலூர் சிறையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை, பிரியங்கா வதேதரா சந்தித்ததின் மர்மம் என்ன? என்று பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனிடையே இந்த சந்திப்பில் சிறை விதிகள் மீறப்பட்டிருப்ப தாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக

Link to comment
Share on other sites

ராஜீவின் கொலைவழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட்டால் அந்த கொலையின் பின்னணியில் விடுதலைபுலிகள் இல்லை என்பது நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்

:D:D:lol:

Link to comment
Share on other sites

எல்லா வழியிலும் புலிக்கு புல்லு குடுக்க நிதை;து தோத்து போன றோ இப்பிடி ஒரு பாச நாடகத்தையும் ஆடி நளினி வாயால் எதையாவது எதிர் பார்த்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

பிரியங்காவை சந்தித்ததால் எனது பாவங்கள் கழுவப்பட்டு விட்டன நளினி தெரிவிப்பு - வேறு சில சக்திகள் விடுதலைப் புலிகளின் பெயரில் இதைச் செய்திருக்கலாமோ என்று பிரியங்கா சந்தேகப்படுவதாக தெரிகிறது.

[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008, 04:50.44 PM GMT +05:30 ]

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா தன்னை வந்து சந்தித்ததன் மூலம், தனது பாவங்கள் கழுவப்பட்டு விட்டதாக கூறியுள்ளார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பிரியங்கா வேலூர் சிறையில் சென்று சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளாராம் பிரியங்கா. பிரியங்காவின் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மௌனத்தையும், கண்கலங்கலையும் பதிலாகத் தந்துள்ளார் நளினி. தனது சந்திப்பு குறித்து சகோதரர் பாக்யநாதனிடம் உருக்கமாக கூறியுள்ளார் நளினி.

இது குறித்து பாக்யநாதன் கூறுகையில், தனது பாவங்கள் கழுவப்பட்டதாக கூறியுள்ளார். என்னை பிரியங்கா மன்னித்து விட்டதாக உணர்கிறேன். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த சந்திப்பின் மூலம் ராஜீவ்காந்தி குடும்பத்தின் மீது நான் வைத்திருந்த மரியாதை, இப்போது மேலும் அதிகரித்துள்ளது என்றும் நளினி கூறியுள்ளார்.

இதேவேளை, வேலூர் சிறையில் நளினியை சந்தித்தபோது, பிரியங்கா கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்டபோது, சற்று தள்ளி அமர்ந்து இருந்த நளினியை பிரியங்கா அன்புடன் அழைத்து தனது அருகில் உட்கார வைத்துக் கொண்டார். அந்த நேரத்தில் தனது தந்தையின் நினைவு வந்ததால் துக்கத்தை அடக்க முடியாத பிரியங்கா கண்ணீர் விட்டு அழுதார். உடனே அருகில் இருந்த நளினியும், அழுதுவிட்டார்.

பின்னர் பிரியங்கா தன்னை தேற்றிக்கொண்டு நளினியின் கையை ஆறுதலாக பற்றியபடி பேசத் தொடங்கினார். நீண்ட காலம் பிரிந்து இருந்தவர்கள் சந்தித்துக் கொண்டது போல் உணர்வுபூர்வமாக அவர்களுடைய சந்திப்பு அமைந்து இருந்தது.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நளினியின் சட்டத்தரணி துரைசாமி இந்த தகவலை தெரிவித்தார். சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது:

நளினி எம்.ஏ.பட்டம் பெற்றவர். சரளமாக ஆங்கிலம் பேசுவார். அதனால் அவரும், பிரியங்காவும் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாடியுள்ளனர். அப்போது சிறையில் இருந்து விடுதலையாக உதவி செய்யும்படி பிரியங்காவிடம் நளினி கேட்கவில்லை. அப்படி ஏன் கேட்கவில்லை. என்று நளினியிடம் கேட்டதற்கு மிகப் பெரியவங்க என்னை சந்திக்க வருகிறார்கள். அவர்களிடம் எந்த உதவியும் கேட்க மனம் இல்லை என்று அவர் கூறினார். அதுபோல ஜெயிலில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவேன் என்று பிரியங்காவும் நளினியிடம் கூறவில்லை.

தண்ணீர் மட்டும் குடித்தனர் தனது தாயார் சோனியாகாந்திக்கு நளினி அனுப்பிய கடிதங்களையும் தந்தியையும் பிரியங்கா நினைவுகூர்ந்தார். உன்னை பார்க்கச் சொல்லி யாரும் என்னை அனுப்பவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலே உன்னை பார்க்க வந்தேன் என்று நளினியிடம் பிரியங்கா கூறியுள்ளார். பாதுகாப்பு கருதி இருவரும் எந்தப் பொருட்களையும், கொடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. பிரியங்கா எடுத்து வந்த தண்ணீரை மட்டும் இருவரும் குடித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் காரணமல்ல பிரியங்காவின் சந்திப்பு குறித்து சட்டத்தரணி துரைசாமி கூறுகையில், பிரியங்காவின் சந்திப்பு அவர் கேட்ட கேள்விகளைப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகள் இதைச் செய்திருப்பார்களா என்ற சந்தேகத்தில் அவர் இருப்பதாக தெரிகிறது. வேறு சில சக்திகள் விடுதலைப் புலிகளின் பெயரில் இதைச் செய்திருக்கலாமோ என்று பிரியங்கா சந்தேகப்படுவதாக தெரிகிறது.

tamilwin.com

Link to comment
Share on other sites

பிரியங்காவுக்கு தன் தந்தை மரணத்தில் புலிகள் உண்மையாகவே சம்பந்தப்பட்டுள்ளார்களா இல்லை வேறு உளவு அமைப்பு காரணமா என்று சந்தேகம் வந்து விட்டது...

சு.சாமி என்ற அமெரிக்க ஏஜன்ட் கட்டாயம் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.... அது தான் அவனுக்கு பயம் வந்து விட்டது.

மேலும் சிறிய தலைவர்கள் வந்தால் கூடி அவர்களை வட்டமிட்டபடி அகலாமல் இருக்கும் வட்டம்.மாவாட்டம் எனும் லோக்கல் தலைகளும் மானில தலைகளும் அன்று மட்டும் ராஜீவை விட்டு வெகு தூரத்தில் இருந்ததன் மர்மம் என்று பாமரனுக்கும் சந்தேகம் வருகிறது.... ஆனால் ஏனோ ஒரு தரப்பினர் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டு விட்டது

Link to comment
Share on other sites

நானும் இப்ப ஜெயா ரீவி நியூசில பார்த்தன். சூப்பிரமணியம் சாமி துள்ளிக்குதிச்சுகொண்டு நிக்கிறார். தனக்கு தலைவர் பிரபாகரனும் சோனியா காந்தியும் வயர்லஸ் மூலம் கதைச்ச விசயம் எல்லாம் தெரியுமாம்... ஏதோ என்னமோ எல்லாம் நிரம்ப சொன்னாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலூர்:

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா, வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்தது, அவரது கணவர் முருகனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக நளினியுடன் அவர் பேச மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நளினி சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முருகனும் தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியும், முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்துச் சென்றார். இதனால் முருகன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். நளினியை பிரியங்கா சந்தித்து (மார்ச் 19ம் தேதி) விட்டுச் சென்ற பின்னர், மார்ச் 22ம் தேதி முருகனை சந்தித்தார் நளினி.

அப்போது பிரியங்காவை சந்திக்க அனுமதி கொடுத்தது ஏன் என்று கோபமாக கேட்டாராம் முருகன். இதுதொடர்பாக இருவருக்கும் இடைேய கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. பின்னர் நேரம் முடிந்து விடவே இருவரும் பிரிந்துள்ளனர்.

ஏப்ரல் 5ம் தேதி இருவரும் மீண்டும் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் முருகன், நளினியை சந்திக்க மறுத்து விட்டாராம். இதனால் முருகனை நளினியால் சந்தித்துப் பேச முடியவில்லை.

முருகன் தன்னை சந்திக்க மறுத்ததால் பெரும் மன வேதனை அடைந்துள்ளாராம் நளினி. இந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிைலயில் முருகனின் தாயார், தம்பி, தங்கை ஆகியோர் கடந்த 15ம் தேதி முருகனைப் பார்க்க வந்தனர். பின்னர் நளினியையும் பார்க்கச் சென்றனர். ஆனால் வயிற்று வலி காரணமாக அவர்களை பார்க்க இயலாது என்று கூறி விட்டாராம் நளினி.

இந்த நிலையில் நேற்று முருகன் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் சிறைக்கு நிருபர்கள் விரைந்தனர். ஆனால் முருகன் தற்கொலை முயற்சியை சிறைக் கண்காணிப்பாளர் நாராயணமூர்த்தி மறுத்தார். முருகன் நல்ல நலமுடன் இருக்கிறார். அவர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுவது வெறும் வதந்தி. யார் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

நாளை சந்திப்பார்களா?:

இதற்கிடையே, 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ளும் முருகனும், நளினியும் நாளை சந்திக்க வேண்டிய நாளாகும். கடந்த முறை நளினியை சந்திக்க மறுத்தது போல இந்த முறையும் மறுப்பாரா அல்லது இம்முறை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருவேளை நளினியை முருகன் சந்திக்க சம்மதித்தால், அந்த சந்திப்பின்போது கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

thatstamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்மலாட்டம் நடக்குது மீண்டுமொரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் பழைமையாக இருக்குது....

இவர்களை விடுவிக்கவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இவர்களை விடுவிக்க முடியாதென இறுமாப்புடன் இருக்கும் இந்திய மேற்தட்டுக் கொள்கை வகுப்பினரின் வெளியிடும் கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் தள்ளி மரண தண்டனையும் பெற்றுக் கொடுத்த பின்னர் அது நிறைவேற்றப் படாததால் எப்படியாவது அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி விசயத்தை முடித்துவிடப் பார்க்கின்றனர்.

Link to comment
Share on other sites

இந்திய அரசியலில் தற்போது விலைவாசி உயர்வு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் அதனை விடவும் பெரிதாக, ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினியை வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி சந்தித்து பேசிய விடயம் பூதாகரமாக வெடித்துள்ளதுடன், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களுடன் இச்சந்திப்பின் சாதக, பாதக தன்மைகளும் அலசி ஆராயப்படத் தொடங்கியுள்ளன.

நளினியை பிரியங்கா காந்தி சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் அரசியல்சார் நலன்களா அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்களா மையப்படுத்தப்பட்டன என்ற ரீதியிலேயே தற்போது விமர்சனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

மேலும் வாசிக்க : www.thinakkural.com/news

Link to comment
Share on other sites

திருச்சி: பிரியங்கா, நளினி சந்திப்புக்கு நான்தான் மூல காரணம் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

திருச்சி வந்த ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி பிரச்சினை நாட்டை உலுக்கி வருகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள எதிர்க்கட்சிகள் உறுதியாக குரல் கொடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.

இடதுசாரிக் கட்சி எம்.பிக்கள் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்வதோடு நினறு விடுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தில் பெருத்த மெளனம் சாதிப்பது ஆச்சரியமகா உள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதன் பின்விளைவுகள் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து லட்சிய திமுகதான் முதன் முதலில் குரல் கொடுத்தது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள்தான் முதலில் குரல் கொடுத்தோம்.

வேலூர் மத்திய சிறையில் பிரியங்கா, நளினி இடையே நடந்த சந்திப்புக்கு நான் தான் மூல காரணம். விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எனது கட்சி சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், தமிழக அரசு அதற்கு அனுமதி தராமல் மறுத்து வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் தங்கு தடையின்றி விற்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்காமல் அரசு அமைதியாக இருக்கிறது. அதேபோல பான்பராக் விற்பனையும் மாநிலம் முழுவதும் அமோகமாக விற்பனையாகி வருகிறது என்றார் ராஜேந்தர்.

http://thatstamil.oneindia.in/news/2008/04...ni-meeting.html

Link to comment
Share on other sites

பிரியங்கா, நளினி சந்திப்புக்கு நான்தான் மூல காரணம் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் பிரியங்கா, நளினி இடையே நடந்த சந்திப்புக்கு நான் தான் மூல காரணம். விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எனது கட்சி சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், தமிழக அரசு அதற்கு அனுமதி தராமல் மறுத்து வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

நளினி விடுதலை ஆவாரா?

இந்த நிலையில் நளினியை விடுதலை செய்வது தொடர்பாக அவரது தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் நளினி தொடர்பான கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://isoorya.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.