Jump to content

ஒரு கேள்வி


Recommended Posts

இம்முயற்சி வரவேற்கத்தக்கதே. ஆயினும் தவிர்க்கவியலா இடங்களுக்கு மட்டுமாவது கருணை காட்டவும் :mellow:

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :wub:

ஆர்வமும் அக்கறையும் இருக்கிற கருத்துக்கள உறுப்பினர்கள் யாராவது யாழ் கருத்துக்களத்தில் பயன்படுத்தப்படுகிற இந்தவகை ஆங்கிலச் சொற்களை (பிளீஸ், ஹாய் போன்ற) பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் பக்கத்தில் எழுதிவிடுங்கள். தமிழ் தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழ் பகுதியில் கருத்துத் திணிப்பு அடிப்படையில் பல தலைப்புக்கள் ஈ வெ ராமசாமி என்பவரை மையப்படுத்தி திணிக்கப்படுகின்றன. சுமார் 10 தலைப்புக்கள் வரை கடந்த இரண்டு தினங்களுக்குள் திறக்கப்பட்டு ஒரே விடயம்.. பல வடிவங்களில் திணிக்கப்படுகிறது.

ஆறுமுகநாவலர் என்ற கள உறவு இந்து மதம் சார்ந்து இப்படி செய்த போது.. கருத்துத் திணிப்பு பிரச்சாரம் என்று அவற்றை தூக்கியவர்கள்.. இவற்றை அனுமதிப்பது ஏன்..???!

ஈ வெ ராமசாமி சாற்றிய கருத்துக்களின் அடிப்படையில் அவரின் பொய்த்தோற்றங்களை இனங்காட்டிய போது அவற்றை கருத்துத்திணிப்பாகக் கருதி நீக்கியவர்கள்.. பொங்கு தமிழுல் ஈ வெ ராமசாமி பற்றிய புகழ்பாடல்களை அனுமதிப்பதன் பின்னணி என்ன..???! அவற்றை அவர்கள் திணிப்பாகக் கருதாததற்கு காரணங்கள் என்ன... என்பதைச் சொல்வார்களா..???! :D:mellow::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்வது கேள்விப்படவில்லையோ. தமிழனுக்குப் புத்தி சொல்ல கன்னடன் வரவேணும், ஆரியன் வரவேணும் என்று எதிர்பார்ப்பார்கள்.

நாளைக்கு கன்னடனுக்கும் இதே ஆரியன் கதை தான் நடக்கும்.

Link to comment
Share on other sites

நிர்வாகதினருக்கு,

ஆங்கில சொற்களை சேர்க்க கூடாது என்ற

சர்ச்சை சம்பந்தமாக சில கருத்துகளை

முன் வைக்க விரும்புகிறேன்.

தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்த

வார்த்தைகளோடு எழுதுவது

தவறு என்று எடுத்து கொண்டாலும்

அடுத்த கட்டமாக சில யதார்த்த உண்மைகளை

நோக்க வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் சில ஆங்கில சொற்களுக்கு

தமிழை பிரயோகிக்கும் போது நிச்சயமாக பொருள்

விளங்காமல் தடுமாறுபவர்கள் பலர்,

இந்த சர்ச்சை காலம் காலமாக இருந்து வருகிறது

அதற்கு முடிவு என்று வரும் பொழுது எப்போழுதும்

சில ஆங்கில வார்த்தைகளை பிரயோகிப்பதில்

தவறு இல்லை என்பது ஏகமானதான முடிவு.

(சில தமிழ் பண்டிதர்களால் அவுஸ்ரெலியாவிலும்

இது ஏற்று கொள்ளபட்டது).

உதாரணமாக சில ஆங்கில சொற்களை பார்த்தால்

ஹல்லோ,கவ் ஆர் யூ இந்த வார்த்தைகள் அல்லது

வசனங்கள் இது பாமர மக்களிற்கும் எளிதாக விளங்கும்

இப்படி எழுதுவதால் தமிழ் அழியும் என்பது கோமாளிதனம். :mellow:

எதை சொல்பதிலும் ஒரு நாகரிகம் இருக்கிறது

"ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்.

என்பதிற்கு பதிலாக ஒரு நாகரிகதோடு கூறினால்

ஏற்று கொள்ள முடியாத கருத்துகளையும் மக்கள்

ஒரு முறை சிந்திப்பார்கள்.

நீங்கள் கூறி இருப்பதை பார்த்தால் சிந்திபதிற்கு பதிலாக

யாழை விட்டு சிதறி ஓடி விடுவார்கள் போல இருக்கிறதே

உதாரணம்.

பழம் இருக்க காயை பறித்து உண்ணுவது போல்

உங்கள் நிபந்தனை இருக்கிறது. :wub:

நன்றி.

Link to comment
Share on other sites

கனிஷ்டா நீங்கள் சொல்வது வரவேற்கத்தகக்து.

ம்ம் நிர்வாகத்தினரின் சொற்பிரயோகம் ""ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்." என்பது பயங்கரமாக கட்டளை இடுவது போல தான் இருக்கின்றது.

கொம்ப்யூட்டர் என்றால் தான் பலருக்கு தெரியும். அதையே கணணி என்றால் பலருக்கு புரியாது. இபப்டி நிறைய இருக்கின்றது என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருசில சட்டதிட்டங்கள் ஒருசிலருக்காகவே இயற்றப்படுகின்றது. :)

Link to comment
Share on other sites

தமிழில் புதுப்புதுச் சொற்கள் இலகுவானதாக உருவாக்கப்படாமை தான் இப்பிரைச்சினைக்கு முக்கிய காரணம். ஆனால் சிலரோ இது தான் தூய தமிழ் என்று சில சொற்களைத் திணிக்கின்றார்கள் அவற்றைப் பார்த்தால் எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை. உதாரணமாக cafe என்பதை காப்பி அல்லது கோப்பி என்கின்றோம். ஆனால் cafe க்கு தமிழ் கொட்டைவடிநீராம். நான் காலையில் கொட்டைவடிநீர் அருந்தினேன் என்று கதைக்கும் போது சொன்னால் கேட்பவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார். இதையெல்லாம் நினைக்க என்னாலும் இப்போ முடியலை. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் வசம்பு அவர்களே! நீங்கள் கொட்டைவடிநீரை எப்படி தயாரிப்பீர்கள்?

கொட்டைவடிநீரை எந்த பாத்திரத்தில் வடித்து அருந்தி மகிழ்வீர்கள்?

Link to comment
Share on other sites

இப்படியே போனால், சில காலத்தில் ஹாய், ஹலோ எல்லாம் தமிழ் சொற்களாகவே மாறிவிடும். கட்டுமரம் போன்ற தமிழ் சொற்கள் ஆங்கிலமானது இப்படித்தானோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்ப்யூட்டர் என்றால் தான் பலருக்கு தெரியும். அதையே கணணி என்றால் பலருக்கு புரியாது. இபப்டி நிறைய இருக்கின்றது என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

இப்பதில்கள் வெண்ணிலாவிற்காக அல்ல. பொதுவாகவே எழுதுகின்றேன். :)

கொம்பியூட்டர் என்ற சொல்லை நீங்கள் பிறக்கும்போதே பழகிக் கொண்டு வந்தீர்களா? பிறகு தானே தெரிந்து கொண்டீர்கள். அவ்வாறு கணனி என்பதையும் அறிந்து கொள்வது தானே? தமிழில் போதுமான தமிழ் சொற்கள் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று தான். ஆனால் இருப்பதைப் பாவிக்கமட்டும் ஏன் முடியாமல் போகின்றது.

ஹாய், ஹவ்வாயு போன்றவற்றை அனுமதித்த தமிழ்ப் பண்டிதர்கள் என்போர் யார் என கனிஸ்டாவிடம் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.

நிர்வாகத்தினர் மன்னிப்பு, சலுகை, இட ஒதுக்கீடு என ஆங்கிலச் சொற்களைப் பாவிக்க விட்டீர்கள் என்றால் பழைய குருடி, கதவைத் திறவடியாகத் தான் போய், வழமை மாதிரிக் கொஞ்சலும், கூத்துமாகத் தான் யாழ்களம் மாறும்.

இங்கே ஹலோ, ஹவ்வாயு என்ற சொற்கள் எல்லாம் தேவைப்படுகின்றவையா? விவாதக்களம் ஒன்றில் அச்சொற்களுக்கான தேவை என்ன? மற்றவர்களை விளிக்க வணக்கம் என்ற சொல்லைப் போட்டுக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

தமிழில் புதுப்புதுச் சொற்கள் இலகுவானதாக உருவாக்கப்படாமை தான் இப்பிரைச்சினைக்கு முக்கிய காரணம். ஆனால் சிலரோ இது தான் தூய தமிழ் என்று சில சொற்களைத் திணிக்கின்றார்கள் அவற்றைப் பார்த்தால் எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை. உதாரணமாக cafe என்பதை காப்பி அல்லது கோப்பி என்கின்றோம். ஆனால் cafe க்கு தமிழ் கொட்டைவடிநீராம். நான் காலையில் கொட்டைவடிநீர் அருந்தினேன் என்று கதைக்கும் போது சொன்னால் கேட்பவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார். இதையெல்லாம் நினைக்க என்னாலும் இப்போ முடியலை. :):D

திருவாளர் வசம்பு அவர்களே! நீங்கள் கொட்டைவடிநீரை எப்படி தயாரிப்பீர்கள்?

கொட்டைவடிநீரை எந்த பாத்திரத்தில் வடித்து அருந்தி மகிழ்வீர்கள்?

நான் எழுதியதை வாசிச்ச கு.சாவிற்கே இந்தக்கதியென்றால் :wub: கதைக்கும் போது பாவித்தால் கேட்பவரின் நிலை என்னவாக இருக்கும்??? :):rolleyes:

Link to comment
Share on other sites

இப்படியே போனால், சில காலத்தில் ஹாய், ஹலோ எல்லாம் தமிழ் சொற்களாகவே மாறிவிடும். கட்டுமரம் போன்ற தமிழ் சொற்கள் தமிழானது இப்படித்தானோ!

தூயா

நீங்கள் குறிப்பிடுவது தவறு. உண்மையில் ஆங்கிலேயர் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் கட்டுமரா என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்கள்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :D

அட மட்டுறுத்துனர் கூட சிரிக்கிறாருப்பா? :)

என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. கோமாளித்தனம் எனக்கும் எரிச்சலையே தருகிறது. என் பதிவுகளில் ஏதாவது கோமாளித்தனமாக பட்டாலும் கூட தயவுதாட்சணியமின்றி வெட்டலாம். ஆனாலும் இங்கே நேரம் செலவழித்து பதிவெழுதும் உறுப்பினர்களின் ஆர்வத்தையும், உழைப்பையும் நீங்கள் மதிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இங்கே வைக்கிறேன்.

***

நான் எழுதியதை வாசிச்ச கு.சாவிற்கே இந்தக்கதியென்றால் :rolleyes: கதைக்கும் போது பாவித்தால் கேட்பவரின் நிலை என்னவாக இருக்கும்???

கொட்டைவடிநீர் என்ற சொல்லை கேட்டதுமே எனக்கும் தாவூ தீர்ந்துவிட்டது.... :)

'தாவூ' என்பதும் தமிழ் சொல் தான். அண்மையில் தமிழில் சேர்த்தோம்.... :wub:

Link to comment
Share on other sites

தூயா

நீங்கள் குறிப்பிடுவது தவறு. உண்மையில் ஆங்கிலேயர் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் கட்டுமரா என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்கள்.

இதை தான் சொல்லவந்தேன்

தவறா எழுதிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மல்லிகை 43 ஆண்டு மலர் வாசிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது அதன் ஆசிரியர் இப்படி கூறி இருக்கின்றார்.

"உயர் சாதி வெறி திமிர் தலைகேறிய பண்டித பண்டாரங்கள் இழிசனர் வழக்கு என எனது இலக்கிய படைப்புகளை இழித்தும் பழித்தும் பேசிய சம்பவம் வட பிரதேச மண்ணில் இருந்து தான் முதலில் முகிழ்ந்தெழுந்து வந்தது."

இந்த ஆசிரியருக்கு இத்தகைய சம்பவம் 30 வருடங்களிற்கு முன் நடந்தது என்று நினைக்கிறேன் இன்று அது யாழில் நடைபெறுவது போல் தெரிகிறது.அது போக ஆனாளபட்ட தமிழ் சினிமா,சன் தொலை காட்சி எல்லாம் யாழை விட பிரபலயமான ஊடகம் பலராலும் கருத்துகளை உள்வாங்க கூடிய ஊடகம் அதுவே தமிழ் வளர்க்காமல் ஆங்கிலம் வளர்க்க போட்டிக்கு நிற்குது.

நாங்க மிஞ்சி போனா ஒரு நாலு பேர் கோமணத்தை கட்டி கொண்டு தமிழ் வளர்க்க தமிழில் எழுத சொன்னா சரி வருமா? :)

(சில தமிழ் பண்டிதர்களால் அவுஸ்ரெலியாவிலும்

இது ஏற்று கொள்ளபட்டது).

அந்த பண்டிதர்களின் கூட்டதிற்கு பண்டிதராகிய நான் சமூகமளிக்கவில்லை அதானால் தான் அவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள் போல் நினைக்கிறேன். :):D

Link to comment
Share on other sites

அந்த பண்டிதர்களின் கூட்டதிற்கு பண்டிதராகிய நான் சமூகமளிக்கவில்லை அதானால் தான் அவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள் போல் நினைக்கிறேன். :):rolleyes:

ம்ம்..மாமா நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான்..(அது ஒன்னும் பன்னிகள் கூட்டமில்ல) :) ..பண்டிதர் கூட்டமாக்கும் நீங்க அங்க போய் என்ன செய்ய போறியள்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :)

ஆர்வமும் அக்கறையும் இருக்கிற கருத்துக்கள உறுப்பினர்கள் யாராவது யாழ் கருத்துக்களத்தில் பயன்படுத்தப்படுகிற இந்தவகை ஆங்கிலச் சொற்களை (பிளீஸ், ஹாய் போன்ற) பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் பக்கத்தில் எழுதிவிடுங்கள். தமிழ் தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

நன்றி

நீ உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானக திருந்திவிடும். இது ஒரு அறிஞரின் வாக்கு

களத்தில் Reply என்பதற்கு பதிலாக பதிலளி. Quote என்பதற்கு பதிலாக மேற்கோள் என்றும் இன்னும் பல ஆங்கில சொற்கள் உள்ளதே அவற்றையும் தமிழ் சொற்களால் பாவித்து முன்மாதிரியாக நிர்வாகம் நடந்து கொள்ளலாமே? :):D:rolleyes::wub::lol:

New topic ...... புதிய பகுதி

Fast Reply ......விரைவாக பதிலளி

Edit ................திருத்தம்

Preview .........பார்வையிடு அல்லது காண்பி

Memmber ....உறுப்பினர்.

Joind..............இணைந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவ் ஆர் யூ இதை தமிழில வாசிக்கத்தான் எனக்கு வாந்தி வர்ற மாதிரி கிடக்கு - how are you என்று எழுதினால் பரவாயில்லை -

தவிர எப்பிடி சுகம்? நலமாயிருக்கிறீரா என்று கேட்டால் புரியாதாம். கவ்வு ஆர் சூ என்றால் விளங்குமாம் என்றால் விளங்குமா இது :)

எனக்கு வீ கேத் எஸ் என்டால்தான் விளங்கும்.

Link to comment
Share on other sites

கவ் ஆர் யூ இதை தமிழில வாசிக்கத்தான் எனக்கு வாந்தி வர்ற மாதிரி கிடக்கு - how are you என்று எழுதினால் பரவாயில்லை -

தவிர எப்பிடி சுகம்? நலமாயிருக்கிறீரா என்று கேட்டால் புரியாதாம். கவ்வு ஆர் சூ என்றால் விளங்குமாம் என்றால் விளங்குமா இது :)

எனக்கு வீ கேத் எஸ் என்டால்தான் விளங்கும்.

தனித்தமிழிலையே பலர் வாந்தி வாறமாதிரி எழுதிறீனமே இது பற்றி என்ன நினைக்கிறீங்கள் காவடி ஐயா?

மேலும்...

நாங்கள் எழுதுவதே கீமானை பாவிச்சு ஆங்கில கீபோர்டில்... ஆங்கில உச்சரிப்பில தமிழை எழுதுகின்றோம். ammaa என்று ஆங்கிலத்தில எழுதினால் தான் அம்மா என்று தமிழில வரும்.

முதலில எல்லாரும் ஆகாயத்தப் பார்த்து துள்ளிக்குதிக்கும் முன்னம் அடிப்படையில் நீங்கள் காலை எங்கு ஊன்றி வச்சு இருக்கிறீங்கள் என்று ஒருக்கால் தலையைக் குனிஞ்சு பாருங்கோ.

சிரிப்பது தவிர வேறு என்ன கூறுவது என்று அடியேனுக்கு தெரியவில்லை.

ஒரு மொழியை ஒருவன் விரும்பி எழுதமுடியுமே, படிக்க முடியுமே தவிர... பலாத்காரமாக ஒன்றை ஒருவரிடம் திணிக்க முடியாது. திணிப்புக்கள் மூலம் மொழி வளரப்போவாதில்லை. மாறாக அது அழிவையே நாடிச்செல்லும்..

ஹாய், பாய் எண்டு சொல்லிறது கோமாளித்தனமாக உங்களுக்கு தெரிகின்றது என்றால் உங்களைத் தவிர இந்தப் பூவுலகத்தில் வேறு அறிவாளிகள் இருக்க முடியாது.

வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

என்ன முரளி உங்களை போல எல்லாரையும் நினைக்கிறியள் போலை

நாங்கள் அம்மா என்று எழுதுவதற்கு mk;kh

பாமுனி எழுத்து மூலம் எழுதுகிறறோம்.

யாழ்களம் நல்ல ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நாம் தனித்துவமாக இருக்க ஆசைப்படுவது தவறில்லை. மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அப்படி பல இணையங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க விழைவதில் தவறில்லை. ஆனால் அவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்

உங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்துவதே சிறந்தவழி ......

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் திருந்தாமல் மற்றவர்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம்.

Link to comment
Share on other sites

முரளி நீங்கள் சொல்வது போல் ஆங்கில தமிழ் தட்டச்சு முறைக்கப்பால் பாமுனி, இன்னும் பல தமிழ் எழுதிகள் உள்ளன. அவற்றில் நீங்கள் சொல்வது போல் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சுவதன் மூலம் தமிழ் எழுத்துருவை பெற முடியாது. அவற்றைத்தான் பலரும் பயன் படுத்துகிறனர். உதாரணம் தமிழ்நெட் 99

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

Link to comment
Share on other sites

என்ன முரளி உங்களை போல எல்லாரையும் நினைக்கிறியள் போலை

நாங்கள் அம்மா என்று எழுதுவதற்கு mk;kh

பாமுனி எழுத்து மூலம் எழுதுகிறறோம்.

யாழ்களம் நல்ல ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நாம் தனித்துவமாக இருக்க ஆசைப்படுவது தவறில்லை. மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அப்படி பல இணையங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க விழைவதில் தவறில்லை. ஆனால் அவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்

உங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்துவதே சிறந்தவழி ......

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் திருந்தாமல் மற்றவர்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம்.

நல்ல ஒரு செயற்பாடு என்று நீங்கள் சொல்லுறீங்கள். இது நல்லதா அல்லது கெட்டதா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் தனித்துவமாக இருக்க ஆசைப்பட்டால் நீங்கள் தாராளமாக தூய செந்தமிழில் எழுதலாம். அதற்காக மற்றவர்களும் அப்படி எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு, அதிகாரம் போடுவன் மூலம் தமிழ் வளரும், மற்றும் நீங்கள் தனித்தன்மையுடன் இருக்க முடியும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

முரளி நீங்கள் சொல்வது போல் ஆங்கில தமிழ் தட்டச்சு முறைக்கப்பால் பாமுனி, இன்னும் பல தமிழ் எழுதிகள் உள்ளன. அவற்றில் நீங்கள் சொல்வது போல் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சுவதன் மூலம் தமிழ் எழுத்துருவை பெற முடியாது. அவற்றைத்தான் பலரும் பயன் படுத்துகிறனர். உதாரணம் தமிழ்நெட் 99

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

யாழில் எழுதும் எத்தனைபேர் ஆங்கிலம் மூலம் எழுதாது தமிழ் தட்டச்சு பலகையை மாத்திரம் பாவிச்சு எழுதுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா குளக்காட்டான்?

தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ பல வழிகள் இருக்கின்றன. இப்படி அதிகாரம் போடுவதன் மூலமும் பூச்சாண்டி காட்டுவதன் மூலமும் தமிழை வளர்க்க முடியுமென்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

திரு முரளி அவர்களே நான் தமிழ் தட்டச்சு பலகையைதான் உபயோகிக்கிறேன்.

என் கருத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வில்லை என நம்புகின்றேன். களம் தங்களையும் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அவர்கள் யாழில் பல ஆங்கில சொற்களை பாவிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் திருந்தமாட்டம் நீங்கள் திருந்துங்கள் என்று ஹிட்லர்தனமாக சொன்னால் அது அடக்குமுறை. இங்கு அதுதான் நடக்கின்றது. பல உறுப்பினர்கள் யாழில் கருத்துக்களை எழுதுவதில்லை. போயேவிட்டார்கள். பல உறுப்பினர்களை அதிகார துஸ்பிரயோகமூலம் மட்டுறுத்துனர்கள் பழிவாங்கியபோது மௌனமாக இருந்துவிட்டீர்கள். இனியும் அப்படியே இருக்க பழகிக்கொள்ளுங்கள் :):):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

காலக்கண்ணாடி செய்தால் தான் யாழின் மரியாதையே காப்பாற்றப்படும் எனக் கருதுகின்றபோது நிர்வாகம் இப்படி ஒரு செயலை எடுத்ததில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

திரு முரளி அவர்களே நான் தமிழ் தட்டச்சு பலகையைதான் உபயோகிக்கிறேன்.

என் கருத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வில்லை என நம்புகின்றேன். களம் தங்களையும் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அவர்கள் யாழில் பல ஆங்கில சொற்களை பாவிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் திருந்தமாட்டம் நீங்கள் திருந்துங்கள் என்று ஹிட்லர்தனமாக சொன்னால் அது அடக்குமுறை. இங்கு அதுதான் நடக்கின்றது. பல உறுப்பினர்கள் யாழில் கருத்துக்களை எழுதுவதில்லை. போயேவிட்டார்கள். பல உறுப்பினர்களை அதிகார துஸ்பிரயோகமூலம் மட்டுறுத்துனர்கள் பழிவாங்கியபோது மௌனமாக இருந்துவிட்டீர்கள். இனியும் அப்படியே இருக்க பழகிக்கொள்ளுங்கள் :wub::lol::lol:

:) அது :)நாலு வரி எழுதினாலும் நச்சென்று எழுதியிருக்கீங்க. :D:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.