Jump to content

ஒரு கேள்வி


Recommended Posts

இம்முயற்சி வரவேற்கத்தக்கதே. ஆயினும் தவிர்க்கவியலா இடங்களுக்கு மட்டுமாவது கருணை காட்டவும் :mellow:

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :wub:

ஆர்வமும் அக்கறையும் இருக்கிற கருத்துக்கள உறுப்பினர்கள் யாராவது யாழ் கருத்துக்களத்தில் பயன்படுத்தப்படுகிற இந்தவகை ஆங்கிலச் சொற்களை (பிளீஸ், ஹாய் போன்ற) பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் பக்கத்தில் எழுதிவிடுங்கள். தமிழ் தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழ் பகுதியில் கருத்துத் திணிப்பு அடிப்படையில் பல தலைப்புக்கள் ஈ வெ ராமசாமி என்பவரை மையப்படுத்தி திணிக்கப்படுகின்றன. சுமார் 10 தலைப்புக்கள் வரை கடந்த இரண்டு தினங்களுக்குள் திறக்கப்பட்டு ஒரே விடயம்.. பல வடிவங்களில் திணிக்கப்படுகிறது.

ஆறுமுகநாவலர் என்ற கள உறவு இந்து மதம் சார்ந்து இப்படி செய்த போது.. கருத்துத் திணிப்பு பிரச்சாரம் என்று அவற்றை தூக்கியவர்கள்.. இவற்றை அனுமதிப்பது ஏன்..???!

ஈ வெ ராமசாமி சாற்றிய கருத்துக்களின் அடிப்படையில் அவரின் பொய்த்தோற்றங்களை இனங்காட்டிய போது அவற்றை கருத்துத்திணிப்பாகக் கருதி நீக்கியவர்கள்.. பொங்கு தமிழுல் ஈ வெ ராமசாமி பற்றிய புகழ்பாடல்களை அனுமதிப்பதன் பின்னணி என்ன..???! அவற்றை அவர்கள் திணிப்பாகக் கருதாததற்கு காரணங்கள் என்ன... என்பதைச் சொல்வார்களா..???! :D:mellow::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்வது கேள்விப்படவில்லையோ. தமிழனுக்குப் புத்தி சொல்ல கன்னடன் வரவேணும், ஆரியன் வரவேணும் என்று எதிர்பார்ப்பார்கள்.

நாளைக்கு கன்னடனுக்கும் இதே ஆரியன் கதை தான் நடக்கும்.

Link to comment
Share on other sites

நிர்வாகதினருக்கு,

ஆங்கில சொற்களை சேர்க்க கூடாது என்ற

சர்ச்சை சம்பந்தமாக சில கருத்துகளை

முன் வைக்க விரும்புகிறேன்.

தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்த

வார்த்தைகளோடு எழுதுவது

தவறு என்று எடுத்து கொண்டாலும்

அடுத்த கட்டமாக சில யதார்த்த உண்மைகளை

நோக்க வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் சில ஆங்கில சொற்களுக்கு

தமிழை பிரயோகிக்கும் போது நிச்சயமாக பொருள்

விளங்காமல் தடுமாறுபவர்கள் பலர்,

இந்த சர்ச்சை காலம் காலமாக இருந்து வருகிறது

அதற்கு முடிவு என்று வரும் பொழுது எப்போழுதும்

சில ஆங்கில வார்த்தைகளை பிரயோகிப்பதில்

தவறு இல்லை என்பது ஏகமானதான முடிவு.

(சில தமிழ் பண்டிதர்களால் அவுஸ்ரெலியாவிலும்

இது ஏற்று கொள்ளபட்டது).

உதாரணமாக சில ஆங்கில சொற்களை பார்த்தால்

ஹல்லோ,கவ் ஆர் யூ இந்த வார்த்தைகள் அல்லது

வசனங்கள் இது பாமர மக்களிற்கும் எளிதாக விளங்கும்

இப்படி எழுதுவதால் தமிழ் அழியும் என்பது கோமாளிதனம். :mellow:

எதை சொல்பதிலும் ஒரு நாகரிகம் இருக்கிறது

"ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்.

என்பதிற்கு பதிலாக ஒரு நாகரிகதோடு கூறினால்

ஏற்று கொள்ள முடியாத கருத்துகளையும் மக்கள்

ஒரு முறை சிந்திப்பார்கள்.

நீங்கள் கூறி இருப்பதை பார்த்தால் சிந்திபதிற்கு பதிலாக

யாழை விட்டு சிதறி ஓடி விடுவார்கள் போல இருக்கிறதே

உதாரணம்.

பழம் இருக்க காயை பறித்து உண்ணுவது போல்

உங்கள் நிபந்தனை இருக்கிறது. :wub:

நன்றி.

Link to comment
Share on other sites

கனிஷ்டா நீங்கள் சொல்வது வரவேற்கத்தகக்து.

ம்ம் நிர்வாகத்தினரின் சொற்பிரயோகம் ""ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்." என்பது பயங்கரமாக கட்டளை இடுவது போல தான் இருக்கின்றது.

கொம்ப்யூட்டர் என்றால் தான் பலருக்கு தெரியும். அதையே கணணி என்றால் பலருக்கு புரியாது. இபப்டி நிறைய இருக்கின்றது என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருசில சட்டதிட்டங்கள் ஒருசிலருக்காகவே இயற்றப்படுகின்றது. :)

Link to comment
Share on other sites

தமிழில் புதுப்புதுச் சொற்கள் இலகுவானதாக உருவாக்கப்படாமை தான் இப்பிரைச்சினைக்கு முக்கிய காரணம். ஆனால் சிலரோ இது தான் தூய தமிழ் என்று சில சொற்களைத் திணிக்கின்றார்கள் அவற்றைப் பார்த்தால் எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை. உதாரணமாக cafe என்பதை காப்பி அல்லது கோப்பி என்கின்றோம். ஆனால் cafe க்கு தமிழ் கொட்டைவடிநீராம். நான் காலையில் கொட்டைவடிநீர் அருந்தினேன் என்று கதைக்கும் போது சொன்னால் கேட்பவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார். இதையெல்லாம் நினைக்க என்னாலும் இப்போ முடியலை. :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் வசம்பு அவர்களே! நீங்கள் கொட்டைவடிநீரை எப்படி தயாரிப்பீர்கள்?

கொட்டைவடிநீரை எந்த பாத்திரத்தில் வடித்து அருந்தி மகிழ்வீர்கள்?

Link to comment
Share on other sites

இப்படியே போனால், சில காலத்தில் ஹாய், ஹலோ எல்லாம் தமிழ் சொற்களாகவே மாறிவிடும். கட்டுமரம் போன்ற தமிழ் சொற்கள் ஆங்கிலமானது இப்படித்தானோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்ப்யூட்டர் என்றால் தான் பலருக்கு தெரியும். அதையே கணணி என்றால் பலருக்கு புரியாது. இபப்டி நிறைய இருக்கின்றது என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

இப்பதில்கள் வெண்ணிலாவிற்காக அல்ல. பொதுவாகவே எழுதுகின்றேன். :)

கொம்பியூட்டர் என்ற சொல்லை நீங்கள் பிறக்கும்போதே பழகிக் கொண்டு வந்தீர்களா? பிறகு தானே தெரிந்து கொண்டீர்கள். அவ்வாறு கணனி என்பதையும் அறிந்து கொள்வது தானே? தமிழில் போதுமான தமிழ் சொற்கள் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று தான். ஆனால் இருப்பதைப் பாவிக்கமட்டும் ஏன் முடியாமல் போகின்றது.

ஹாய், ஹவ்வாயு போன்றவற்றை அனுமதித்த தமிழ்ப் பண்டிதர்கள் என்போர் யார் என கனிஸ்டாவிடம் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.

நிர்வாகத்தினர் மன்னிப்பு, சலுகை, இட ஒதுக்கீடு என ஆங்கிலச் சொற்களைப் பாவிக்க விட்டீர்கள் என்றால் பழைய குருடி, கதவைத் திறவடியாகத் தான் போய், வழமை மாதிரிக் கொஞ்சலும், கூத்துமாகத் தான் யாழ்களம் மாறும்.

இங்கே ஹலோ, ஹவ்வாயு என்ற சொற்கள் எல்லாம் தேவைப்படுகின்றவையா? விவாதக்களம் ஒன்றில் அச்சொற்களுக்கான தேவை என்ன? மற்றவர்களை விளிக்க வணக்கம் என்ற சொல்லைப் போட்டுக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

தமிழில் புதுப்புதுச் சொற்கள் இலகுவானதாக உருவாக்கப்படாமை தான் இப்பிரைச்சினைக்கு முக்கிய காரணம். ஆனால் சிலரோ இது தான் தூய தமிழ் என்று சில சொற்களைத் திணிக்கின்றார்கள் அவற்றைப் பார்த்தால் எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை. உதாரணமாக cafe என்பதை காப்பி அல்லது கோப்பி என்கின்றோம். ஆனால் cafe க்கு தமிழ் கொட்டைவடிநீராம். நான் காலையில் கொட்டைவடிநீர் அருந்தினேன் என்று கதைக்கும் போது சொன்னால் கேட்பவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார். இதையெல்லாம் நினைக்க என்னாலும் இப்போ முடியலை. :):D

திருவாளர் வசம்பு அவர்களே! நீங்கள் கொட்டைவடிநீரை எப்படி தயாரிப்பீர்கள்?

கொட்டைவடிநீரை எந்த பாத்திரத்தில் வடித்து அருந்தி மகிழ்வீர்கள்?

நான் எழுதியதை வாசிச்ச கு.சாவிற்கே இந்தக்கதியென்றால் :wub: கதைக்கும் போது பாவித்தால் கேட்பவரின் நிலை என்னவாக இருக்கும்??? :):rolleyes:

Link to comment
Share on other sites

இப்படியே போனால், சில காலத்தில் ஹாய், ஹலோ எல்லாம் தமிழ் சொற்களாகவே மாறிவிடும். கட்டுமரம் போன்ற தமிழ் சொற்கள் தமிழானது இப்படித்தானோ!

தூயா

நீங்கள் குறிப்பிடுவது தவறு. உண்மையில் ஆங்கிலேயர் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் கட்டுமரா என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்கள்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :D

அட மட்டுறுத்துனர் கூட சிரிக்கிறாருப்பா? :)

என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. கோமாளித்தனம் எனக்கும் எரிச்சலையே தருகிறது. என் பதிவுகளில் ஏதாவது கோமாளித்தனமாக பட்டாலும் கூட தயவுதாட்சணியமின்றி வெட்டலாம். ஆனாலும் இங்கே நேரம் செலவழித்து பதிவெழுதும் உறுப்பினர்களின் ஆர்வத்தையும், உழைப்பையும் நீங்கள் மதிக்கவேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இங்கே வைக்கிறேன்.

***

நான் எழுதியதை வாசிச்ச கு.சாவிற்கே இந்தக்கதியென்றால் :rolleyes: கதைக்கும் போது பாவித்தால் கேட்பவரின் நிலை என்னவாக இருக்கும்???

கொட்டைவடிநீர் என்ற சொல்லை கேட்டதுமே எனக்கும் தாவூ தீர்ந்துவிட்டது.... :)

'தாவூ' என்பதும் தமிழ் சொல் தான். அண்மையில் தமிழில் சேர்த்தோம்.... :wub:

Link to comment
Share on other sites

தூயா

நீங்கள் குறிப்பிடுவது தவறு. உண்மையில் ஆங்கிலேயர் கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் கட்டுமரா என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்கள்.

இதை தான் சொல்லவந்தேன்

தவறா எழுதிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மல்லிகை 43 ஆண்டு மலர் வாசிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது அதன் ஆசிரியர் இப்படி கூறி இருக்கின்றார்.

"உயர் சாதி வெறி திமிர் தலைகேறிய பண்டித பண்டாரங்கள் இழிசனர் வழக்கு என எனது இலக்கிய படைப்புகளை இழித்தும் பழித்தும் பேசிய சம்பவம் வட பிரதேச மண்ணில் இருந்து தான் முதலில் முகிழ்ந்தெழுந்து வந்தது."

இந்த ஆசிரியருக்கு இத்தகைய சம்பவம் 30 வருடங்களிற்கு முன் நடந்தது என்று நினைக்கிறேன் இன்று அது யாழில் நடைபெறுவது போல் தெரிகிறது.அது போக ஆனாளபட்ட தமிழ் சினிமா,சன் தொலை காட்சி எல்லாம் யாழை விட பிரபலயமான ஊடகம் பலராலும் கருத்துகளை உள்வாங்க கூடிய ஊடகம் அதுவே தமிழ் வளர்க்காமல் ஆங்கிலம் வளர்க்க போட்டிக்கு நிற்குது.

நாங்க மிஞ்சி போனா ஒரு நாலு பேர் கோமணத்தை கட்டி கொண்டு தமிழ் வளர்க்க தமிழில் எழுத சொன்னா சரி வருமா? :)

(சில தமிழ் பண்டிதர்களால் அவுஸ்ரெலியாவிலும்

இது ஏற்று கொள்ளபட்டது).

அந்த பண்டிதர்களின் கூட்டதிற்கு பண்டிதராகிய நான் சமூகமளிக்கவில்லை அதானால் தான் அவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள் போல் நினைக்கிறேன். :):D

Link to comment
Share on other sites

அந்த பண்டிதர்களின் கூட்டதிற்கு பண்டிதராகிய நான் சமூகமளிக்கவில்லை அதானால் தான் அவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள் போல் நினைக்கிறேன். :):rolleyes:

ம்ம்..மாமா நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான்..(அது ஒன்னும் பன்னிகள் கூட்டமில்ல) :) ..பண்டிதர் கூட்டமாக்கும் நீங்க அங்க போய் என்ன செய்ய போறியள்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் தெரியவில்லையென்றால் அவற்றை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அல்லது படைப்புக்கு அவசியமான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கவில்லை. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தும் கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதுவது அல்லது திணிப்பது மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. :)

ஆர்வமும் அக்கறையும் இருக்கிற கருத்துக்கள உறுப்பினர்கள் யாராவது யாழ் கருத்துக்களத்தில் பயன்படுத்தப்படுகிற இந்தவகை ஆங்கிலச் சொற்களை (பிளீஸ், ஹாய் போன்ற) பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் பக்கத்தில் எழுதிவிடுங்கள். தமிழ் தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

நன்றி

நீ உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானக திருந்திவிடும். இது ஒரு அறிஞரின் வாக்கு

களத்தில் Reply என்பதற்கு பதிலாக பதிலளி. Quote என்பதற்கு பதிலாக மேற்கோள் என்றும் இன்னும் பல ஆங்கில சொற்கள் உள்ளதே அவற்றையும் தமிழ் சொற்களால் பாவித்து முன்மாதிரியாக நிர்வாகம் நடந்து கொள்ளலாமே? :):D:rolleyes::wub::lol:

New topic ...... புதிய பகுதி

Fast Reply ......விரைவாக பதிலளி

Edit ................திருத்தம்

Preview .........பார்வையிடு அல்லது காண்பி

Memmber ....உறுப்பினர்.

Joind..............இணைந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவ் ஆர் யூ இதை தமிழில வாசிக்கத்தான் எனக்கு வாந்தி வர்ற மாதிரி கிடக்கு - how are you என்று எழுதினால் பரவாயில்லை -

தவிர எப்பிடி சுகம்? நலமாயிருக்கிறீரா என்று கேட்டால் புரியாதாம். கவ்வு ஆர் சூ என்றால் விளங்குமாம் என்றால் விளங்குமா இது :)

எனக்கு வீ கேத் எஸ் என்டால்தான் விளங்கும்.

Link to comment
Share on other sites

கவ் ஆர் யூ இதை தமிழில வாசிக்கத்தான் எனக்கு வாந்தி வர்ற மாதிரி கிடக்கு - how are you என்று எழுதினால் பரவாயில்லை -

தவிர எப்பிடி சுகம்? நலமாயிருக்கிறீரா என்று கேட்டால் புரியாதாம். கவ்வு ஆர் சூ என்றால் விளங்குமாம் என்றால் விளங்குமா இது :)

எனக்கு வீ கேத் எஸ் என்டால்தான் விளங்கும்.

தனித்தமிழிலையே பலர் வாந்தி வாறமாதிரி எழுதிறீனமே இது பற்றி என்ன நினைக்கிறீங்கள் காவடி ஐயா?

மேலும்...

நாங்கள் எழுதுவதே கீமானை பாவிச்சு ஆங்கில கீபோர்டில்... ஆங்கில உச்சரிப்பில தமிழை எழுதுகின்றோம். ammaa என்று ஆங்கிலத்தில எழுதினால் தான் அம்மா என்று தமிழில வரும்.

முதலில எல்லாரும் ஆகாயத்தப் பார்த்து துள்ளிக்குதிக்கும் முன்னம் அடிப்படையில் நீங்கள் காலை எங்கு ஊன்றி வச்சு இருக்கிறீங்கள் என்று ஒருக்கால் தலையைக் குனிஞ்சு பாருங்கோ.

சிரிப்பது தவிர வேறு என்ன கூறுவது என்று அடியேனுக்கு தெரியவில்லை.

ஒரு மொழியை ஒருவன் விரும்பி எழுதமுடியுமே, படிக்க முடியுமே தவிர... பலாத்காரமாக ஒன்றை ஒருவரிடம் திணிக்க முடியாது. திணிப்புக்கள் மூலம் மொழி வளரப்போவாதில்லை. மாறாக அது அழிவையே நாடிச்செல்லும்..

ஹாய், பாய் எண்டு சொல்லிறது கோமாளித்தனமாக உங்களுக்கு தெரிகின்றது என்றால் உங்களைத் தவிர இந்தப் பூவுலகத்தில் வேறு அறிவாளிகள் இருக்க முடியாது.

வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

என்ன முரளி உங்களை போல எல்லாரையும் நினைக்கிறியள் போலை

நாங்கள் அம்மா என்று எழுதுவதற்கு mk;kh

பாமுனி எழுத்து மூலம் எழுதுகிறறோம்.

யாழ்களம் நல்ல ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நாம் தனித்துவமாக இருக்க ஆசைப்படுவது தவறில்லை. மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அப்படி பல இணையங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க விழைவதில் தவறில்லை. ஆனால் அவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்

உங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்துவதே சிறந்தவழி ......

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் திருந்தாமல் மற்றவர்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம்.

Link to comment
Share on other sites

முரளி நீங்கள் சொல்வது போல் ஆங்கில தமிழ் தட்டச்சு முறைக்கப்பால் பாமுனி, இன்னும் பல தமிழ் எழுதிகள் உள்ளன. அவற்றில் நீங்கள் சொல்வது போல் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சுவதன் மூலம் தமிழ் எழுத்துருவை பெற முடியாது. அவற்றைத்தான் பலரும் பயன் படுத்துகிறனர். உதாரணம் தமிழ்நெட் 99

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

Link to comment
Share on other sites

என்ன முரளி உங்களை போல எல்லாரையும் நினைக்கிறியள் போலை

நாங்கள் அம்மா என்று எழுதுவதற்கு mk;kh

பாமுனி எழுத்து மூலம் எழுதுகிறறோம்.

யாழ்களம் நல்ல ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களைப்பற்றி கவலையில்லை. நாம் தனித்துவமாக இருக்க ஆசைப்படுவது தவறில்லை. மற்றவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அப்படி பல இணையங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க விழைவதில் தவறில்லை. ஆனால் அவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்

உங்களை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்துவதே சிறந்தவழி ......

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் திருந்தாமல் மற்றவர்களை திருத்த நினைப்பது முட்டாள் தனம்.

நல்ல ஒரு செயற்பாடு என்று நீங்கள் சொல்லுறீங்கள். இது நல்லதா அல்லது கெட்டதா என்று காலம்தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் தனித்துவமாக இருக்க ஆசைப்பட்டால் நீங்கள் தாராளமாக தூய செந்தமிழில் எழுதலாம். அதற்காக மற்றவர்களும் அப்படி எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு, அதிகாரம் போடுவன் மூலம் தமிழ் வளரும், மற்றும் நீங்கள் தனித்தன்மையுடன் இருக்க முடியும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

முரளி நீங்கள் சொல்வது போல் ஆங்கில தமிழ் தட்டச்சு முறைக்கப்பால் பாமுனி, இன்னும் பல தமிழ் எழுதிகள் உள்ளன. அவற்றில் நீங்கள் சொல்வது போல் தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சுவதன் மூலம் தமிழ் எழுத்துருவை பெற முடியாது. அவற்றைத்தான் பலரும் பயன் படுத்துகிறனர். உதாரணம் தமிழ்நெட் 99

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

யாழில் எழுதும் எத்தனைபேர் ஆங்கிலம் மூலம் எழுதாது தமிழ் தட்டச்சு பலகையை மாத்திரம் பாவிச்சு எழுதுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா குளக்காட்டான்?

தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ பல வழிகள் இருக்கின்றன. இப்படி அதிகாரம் போடுவதன் மூலமும் பூச்சாண்டி காட்டுவதன் மூலமும் தமிழை வளர்க்க முடியுமென்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

திரு முரளி அவர்களே நான் தமிழ் தட்டச்சு பலகையைதான் உபயோகிக்கிறேன்.

என் கருத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வில்லை என நம்புகின்றேன். களம் தங்களையும் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அவர்கள் யாழில் பல ஆங்கில சொற்களை பாவிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் திருந்தமாட்டம் நீங்கள் திருந்துங்கள் என்று ஹிட்லர்தனமாக சொன்னால் அது அடக்குமுறை. இங்கு அதுதான் நடக்கின்றது. பல உறுப்பினர்கள் யாழில் கருத்துக்களை எழுதுவதில்லை. போயேவிட்டார்கள். பல உறுப்பினர்களை அதிகார துஸ்பிரயோகமூலம் மட்டுறுத்துனர்கள் பழிவாங்கியபோது மௌனமாக இருந்துவிட்டீர்கள். இனியும் அப்படியே இருக்க பழகிக்கொள்ளுங்கள் :):):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

காலக்கண்ணாடி செய்தால் தான் யாழின் மரியாதையே காப்பாற்றப்படும் எனக் கருதுகின்றபோது நிர்வாகம் இப்படி ஒரு செயலை எடுத்ததில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

திரு முரளி அவர்களே நான் தமிழ் தட்டச்சு பலகையைதான் உபயோகிக்கிறேன்.

என் கருத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வில்லை என நம்புகின்றேன். களம் தங்களையும் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அவர்கள் யாழில் பல ஆங்கில சொற்களை பாவிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் திருந்தமாட்டம் நீங்கள் திருந்துங்கள் என்று ஹிட்லர்தனமாக சொன்னால் அது அடக்குமுறை. இங்கு அதுதான் நடக்கின்றது. பல உறுப்பினர்கள் யாழில் கருத்துக்களை எழுதுவதில்லை. போயேவிட்டார்கள். பல உறுப்பினர்களை அதிகார துஸ்பிரயோகமூலம் மட்டுறுத்துனர்கள் பழிவாங்கியபோது மௌனமாக இருந்துவிட்டீர்கள். இனியும் அப்படியே இருக்க பழகிக்கொள்ளுங்கள் :wub::lol::lol:

:) அது :)நாலு வரி எழுதினாலும் நச்சென்று எழுதியிருக்கீங்க. :D:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.