Jump to content

குறும்படப்போட்டி - லெப். கேணல் தவம் விருது


Recommended Posts

26.04.2008

பாரிஸ்

பிரான்சில் குறும்படப்போட்டி அறிவிப்பும் தொடக்க விழாவும்

2008ம் ஆண்டுக்கான குறும்படப்போட்டி நிகழ்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பவுள்ளது. லெப். கேணல் தவம் நினைவு விருது குறும்படப்போட்டிக்கான தொடக்க விழா 26.04.08 அன்று பாரிசில் நடைபெற்றது. இவ்விழாவில் லெப். கேணல் தவம் அவர்களின் உருவப்படத்திற்கு ஈகச்சுடரினை மாவீரர் அகமகன் அவர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.

பாரிசின் முன்னணிக் கலைஞர்கள் கலந்துகொண்ட இச்சிறப்பு ஒன்றுகூடலின்போது, தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் இப்போட்டி தொடர்பான ஊடகங்களுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டது. இப்போட்டி தொடர்பான அறிமுக உரையினை 1995ம் ஆண்டுக்காலகட்டத்தில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த திரு.மாணி நாகேஸ் அவர்கள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்புரைகளை திரு. சுபாஸ், திரு. கிபி. அரவிந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் லெப். கேணல் தவம் அவர்கள் பற்றிய ஒளித்தூரிகை எனும் காணொளி விவரணம் காண்பிக்கப்பட்டது.

நீண்டகால இடைவெளியின் பின், தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால், மீளவும், இக்குறும்படப்போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறும்படக் கலைஞர்களை உற்சாகத்தில் ஆழ்தியுள்ளது. வருடாவருடம் தொடரவுள்ள இப்போட்டியில், வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு லெப். கேணல் தவம் நினைவு விருதுடன், பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதா பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

தொடக்கவிழாவில் வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கான அறிவித்தலாவது:

இந்த ஆண்டுக்கான குறும்படப்போட்டி நிகழ்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட உள்ளது. லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருதுக்கான இந்தக் குறும்படப்போட்டிக்கான அழைப்பு, பாரிசில், இதுதொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு ஒன்றுகூடலின்போது, விடுக்கப்பட்டது.

நீண்டகாலத்தின்பின், தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால், மீளவும், இக்குறும்படப்போட்டி நடைபெறவுள்ளதுடன், வருடாவருடம் தொடரவுள்ள இப்போட்டியில், வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருது வழக்கப்படுவதுடன், பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

சொந்த மண்ணிலும், புலம்பெயர்ந்த மண்ணிலும், எம்மவர் சுமந்துநிற்கும், அவலங்கள், துன்பதுயரங்கள், சாதனை வேதனைகளை, ஒரு காலப்பதிவாக்குகின்ற முயற்சி இது.

எம்மவர் மத்தியில், மனங்களில் மௌனமாய் பாதுகாக்கப்படும் அனுபவப் பதிவுகள்தான் எத்தனை ஆயிரம்.. ஆயிரம்..

அத்துடன், எம்மவர் மத்தியில், இத்துறை சார்ந்த வளர்ச்சியை அவாவும் எண்ணங்களும் இப்போட்டிக்கான உந்துதலாகும்.

இந்தியா, இலங்கை தவிர்ந்த, எம்மவர்கள், புலம்பெயர்ந்து வாழும் அனைந்து நாடுகளில் இருந்தும் படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

குறும்படம் அனுப்ப வேண்டிய முகவரியில் இலக்கம் ஒன்று விடுபட்டுள்ளதால் திருத்தம் செய்யப்பட்ட அறிவித்தலை இணைக்கிறேன். ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்களே நீங்களும் குறும்படங்களை உருவாக்கி போட்டிக்கு அனுப்பி வையுங்கள்.

SF_01.jpg

SF_02.jpg

Link to comment
Share on other sites

குறும்படம் அனுப்ப வேண்டிய முகவரியில் இலக்கம் ஒன்று விடுபட்டுள்ளதால் திருத்தம் செய்யப்பட்ட அறிவித்தலை இணைக்கிறேன். ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்களே நீங்களும் குறும்படங்களை உருவாக்கி போட்டிக்கு அனுப்பி வையுங்கள்.

போட்டி எண்டு இல்ல. எனக்கும் சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பத்து பதினைஞ்சு நிமிசம் வாறமாதிரி ஒரு குறும்படம் செய்து பார்க்கலாம் எண்டு ஆர்வம் இருக்கிது. ஸ்கூலில கமரா மிச்சம் எல்லாம் பிரீயா (தமிழில இலவசம்) கடன் எடுக்கலாம். பாப்பம் முடியுமானால் நானும் ஒண்டு செய்து அனுப்புறன்.

விண்ணப்ப கட்டணமா 100 யூரோவோ? நாங்கள் சும்மா ஏதாவது எடுக்கிறது எண்டாவே எங்கட மடியத்தான் தட்டவேணும். இதுக்க 100 யூரோ வேறயோ?

Link to comment
Share on other sites

இன்றைய தமிழ்ச் சூழலில் விண்ணப்பக் கட்டணமும் அவசியமாகவே உள்ளது முரளி. தவிர்க்க முடியாதது.

வென்றால் 2000யூரோக்கள் கிடைக்கும் தானே. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடியுங்கள் :D

அப்ப முரளி உங்கள் குறும்படம் ஒன்றும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என்கிறீர்கள்? கட்டாயமாக

செய்யுங்கள். என் தரப்பில் ஏதும் ஒத்துழைப்புகள் தேவைப்பட்டால் சொல்லுங்கள். :lol:

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன், எனக்கு என்னமோ பெரிய மீனப்போட்டு மீனே கிடைக்ககமல் போகப்போறமாதிரி இருக்கிது.

நான் யாராவது ஸ்பொன்சர் செவீனமோ எண்டு இஞ்ச மடியுக்க காசு வச்சு இருக்கிற தெரிஞ்ச ஆக்கள் யாரிட்டையும் கேட்டுப்பார்த்து உபயம் கிடைச்சால் செய்து அனுப்பிறன். ஓம் பிறகு சேர்ந்தும் செய்யலாம். குறும்படம் என்ன சினிமாப்படமே எடுப்பம் எங்கள நம்பி யாராவது காசு முதல் போட்டால்..

யாருக்காவது ஸ்பொன்சர்சிப் செய்ய விருப்பம் எண்டால் msivagur@gmail.com எண்டுற முகவரியில தொடர்பு கொள்ளுங்கோ. கல்லு எறி விழாத வகையில குறும்படம் ஒண்டை உங்கள் பெயரில் நாங்கள் செய்து பார்க்கின்றோம். விருப்பம் எண்டால் உங்களையே கதாநாயகனானக அல்லது கதாநாயகியாக போட்டு நடிக்க வைக்கின்றோம்.

நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.