Jump to content

தமிழ் நெறித் திருமணம்


Recommended Posts

தமிழில் குறளும் பக்திப் பாசுரங்களும் சொல்லிச் செய்யப்பட்ட திருமணம் தமிழ் நெறித் திருமணம் அல்லாமல், ஆங்கில நெறித் திருமணமா?

திருமணம் செய்தவர்கள் பற்றிய விமர்சனம் ஒரு திருமணம் தமிழ் நெறித் திருமணமா இல்லையா என்பதை தீர்மானிப்பது இல்லை.

அங்கே ஓதப்பட்ட குறள்களும் பக்திப் பாசுரங்களுமே அந்தத் திருமணத்தை தமிழ் நெறித் திருமணமாக ஆக்கின.

தமிழ் நெறித் திருமணத்தில் ஓதப்படுபவை பற்றிய விமர்சனங்களை செய்து மேலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தருவதே இங்குள்ள தேவை.

இங்கே சிலர் பதறியடித்து திருமணம் செய்தவர்கள் பற்றிய விமர்சனங்களை வைத்து தங்களின் தரத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதன் மூலம் தமிழ் நெறித் திருமணத்தை களங்கப்படுத்தலாம் என்ற அவர்களின் திட்டம் வெளிப்படையானது.

மீண்டும் மீண்டும் எம்மை ஒதுங்கச் சொல்லி ஆலோசனை சொல்லப்படுகிறது. இது தொடர்ந்து செயலாற்றும் உத்வேகத்தை தருகிறது.

நான் தமிழ்நெறித் திருமணத்திற்கு ஏற்ற குறள்களையும் பாசுரங்களையும் தேடல்களின் மூலம் இங்கே தந்திருக்கிறேன். அவைகள் திருமணத்திற்கு ஏற்றவையா? இல்லையா? இவற்றை விட மேலும் புதியவற்றை இணைக்கலாமா?

இப்படியான கருத்தாடல்களே இங்கே தேவை!

ஆனால் என்னிடம்தனிப்பட்ட ரீதியானதும் என்னுடைய கொள்கை சம்பந்தமானதுமான கேள்விகளை கேட்டு பல பக்கங்கள் தாண்டச் செய்தவர்கள் "தமிழ் நெறித் திருமணத்தை" வளப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ விமர்சனங்களையோ தரவில்லை.

தமிழர்கள் தொடர்ந்து வடமொழியிலேயே தமது நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்ற வெறித்தனமான சிந்தனையே இதற்கு காரணம் என்று நான் நம்புகிறேன்.

இது என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது. மொழிப் பற்று இல்லாமல் தேசியப் பற்று எப்படி வரும் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 180
  • Created
  • Last Reply

சயந்தன்,

நீங்கள் என்னை கிண்டல் அடிப்பதாக நினைத்து எழுதியிருந்தாலும், நீங்கள் இரண்டாம் நாள் செய்தது தமிழ்த் திருமணம்தான். அவற்றை உண்மையில் கிறிஸ்தவர்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

ஜெருசலேமில் பிறந்து கிப்ரு மொழியில் பேசிய யேசுவுக்கு தமிழ் தெரிகிறது. கிறஸ்தவ தமிழர்கள் தமிழில் செய்கிற திருமணம் யேசுவுக்கு புரிகிறது. ஆனால் தென்னாட்டில் பிறந்த சிவனுக்கு தமிழ் தெரியாதாம். அவனை வடமொழியில்தான் வழிபட வேண்டுமாம். அதுதான் இனிமையான இசை என்று சிவன் சொன்னானாம்.

எம்மை தமிழில் பாடுக என்று சிவன் சொன்னான் என்று சைவம் சொல்ல, சைவர்களாகிய தமிழர்களுக்கு வடமொழிதான் இனிக்கிறதாம். சைவர்களின் திருமணமும் வடமொழியில்தான் நடக்க வேண்டுமாம்.

கிறிஸ்தவ தமிழர்கள் தமது திருமணம் முடிந்ததும் "நாம் தமிழர்கள், நாம் தமிழில் எமது திருமணத்தை செய்தோம்" என்று ஒவ்வொரு முறையும் அறிவிக்க வேண்டும். அப்பொழுதாவது தம்மை இந்து என்று சொல்கிற தமிழர்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டிப்பாக தாலி கட்ட வேண்டும் என்று கூறியவர்கள் அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியான திருமணம் நிகழ இருந்ததால் கிறிஸ்தவ முறைப்படியான திருமணத்தின் போது இந்துக் கடவுள் படம் பொறித்த தாலி மணமகளின் கழுத்தில் இருக்கக் கூடாதென்றார்கள். அந்த மூடநம்பிக்கைக்கு எதிராக நான் தாலி கட்டினேன்.

இது கிண்டல்தான் -

ஆனால் மற்றும்படி கிறிஸ்தவ திருமணமும் மதம்சார்ந்த நிகழ்வொன்றாகவே நினைத்திருந்தேன். அது தமிழ்நெறித்திருமணமும்தான் என உணரச்செய்திருக்கிறீர்கள் என்பது உண்மை. கிண்டல் அல்ல.

மற்றது கிறிஸ்தவ முறையில் மணம்புரியும் போது இந்துக்கடவுளர் படம்பொறித்த தாலி மணமகள் கழுத்தில் இருக்கக்கூடாதென்ற பிரச்சனை அப்போது எழுந்தது உண்மைதான். ஆனாலும் தாலியோடுதான் தேவாலயத்தில் அடுத்தநாள் திருமணம் நடந்தது. (மற்றும்படி அந்த மூடநம்பிக்கைக்கு எதிராக தாலி கட்டினேன் என்பது பொய் என்ற உண்மையை நான் சொல்லி விடுகிறேன் :rolleyes:

ஆக

நான் ஒரு வடமொழித்திருமணமும்

ஒரு தமிழ்நெறித்திருமணமும் செய்துள்ளேன் என இங்கு பிரகடனப்படுத்துகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன்

கிறிஸ்தவ ஆலயத்தில் அணிந்த ஆடைகள், நடந்து கொண்ட விதங்கள் தமிழர் பாண்பாடடை ஒட்டியா?

Link to comment
Share on other sites

தமிழர் பண்பாட்டு ஆடைகள் என்று எதுவும் இல்லை. ஜீன்ஸ் அணிந்தும் தமிழ்நெறித் திருமணம் செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றது சபேசன்

இங்கே நீளும் இந்த விவாதத்திற்கு முக்கியமான காரணம் எதுவென நான் நினைக்கின்றேன் என்றால்

அறிமுகமற்ற ஒருவர் தமிழ்நெறித்திருமணம் செய்திருந்தால் இத்தனை விவகாரமாயிருக்காது என நினைக்கிறேன். உண்மையில் தமிழன் தமிழில் திருமணம் செய்வதை பெரும்பாலான தமிழர்கள் எதிர்க்க எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனால்

உங்கள் விடயத்தில் என்ன நடக்கிறது என்றால் -

தாலி தேவையற்றது அது கையகலாத்தனம் - என உரைத்த நீங்கள் எழுதிய நீங்கள் - அல்லது தாலி அவசியமானது என எண்ணுவோரோடு செய்த விவாதங்கள் - காரணமாக -

இந்த விவாதம் நீளுகிறது.

தாலியோடு கூடிய தமிழ்நெறித்திருமணம் செய்யலாம் என்பது குறித்து எழுதிய பேசிய ஒருவர் இத்தகைய திருமணம் செய்வதற்கு இத்தனை கேள்விக்கணைகள் வரப்போவதில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இடையில் தாலி கட்டியதற்கான நியாயபூர்வமான காரணங்களே இருந்த போதும் தாலியே வேண்டாம் என்ற ஒருவர் எப்பிடித்தாலி கட்டலாம் என்ற ஒற்றைக்கேள்விதான் இந்த விவாதத்தின் ஒரேயொரு இழை.

அதிலும் தாலி கட்டவது எனது உரிமை - அதில் யாரும் கேள்வி கேட்க முடியாதென்பது உண்மை. ஆனால் அது தாலிக்கு மட்டுமென்றில்லாமல் அனைத்துக்கும் பொருந்தும் என்ற திசையிலான விவாதம் இனி அடுத்த பத்து பக்கத்திற்கு நீளும்.

மற்றும் படி தமிழ்மொழியிலான வழிபாட்டைப்போலவே தமிழ்மொழியிலான திருமணமும் ஊக்குவிக்கப்பட வேண்டியது. அதற்கெதிரான விவாதமாக நான் இங்கு நடக்கும் விவாத்தை கொள்ள வில்லை. இது முழுக்க முழுக்க தாலி வேண்டாம் என்ற சபேசன் எப்படித்தாலி கட்டலாம் என்ற கேள்விகள்தான். நீங்கள் சுயமரியாதைத்திருமணம் செய்திருந்தால் -

அதில் இப்படி 10 பக்கங்களைத்தாண்டகிற அளவிற்கு கேட்கிற அளவிற்கு எவரிடமும் எதுவும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.