Jump to content

விடை பெற்றுக் கொள்கிறேன் உறவுகளே


Recommended Posts

அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன்.

***

Link to comment
Share on other sites

சரி வன்னியன்... அத விடுங்கோ..

இப்ப நீங்களும் என்னை மாதிரி புள்ளி நிறுவனம் ஒண்ட துவங்கிபோட்டு அதில எழுதி பிறகு இணைப்பு குடுக்கலாம் தானே விருப்பம் இல்லை எண்டால்?

உங்கள் விருப்பம்... ஆனால்.. இங்கு மனஸ்தாபப்பட்டுவிட்டு உங்கள் ஆற்றல்களை சிதைத்துச் கொள்ளாதிங்கோ. நீங்கள் எழுதுறது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிதோ இல்லையோ ஆனால்.. நீங்கள் எழுதும்போது உங்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கிது என்பதை நினைவில வச்சு இருங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் வன்னியன். யாழ். களம் ஒரு குடும்பம் போன்றது, அதில் ஒருவர் விலத்திச்சென்றாலும் மனதிற்கு சங்கடமாக உள்ளது.

Link to comment
Share on other sites

கருத்து வேறுபாடுகள் இருக்காலம்..! அனுசரித்துப்போவது தானே வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை பெற்றுக் கொள்கிறேன் உறவுகளே

தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

வன்னியன் ஆரம்பித்த தலைப்பு மீண்டும் வந்ததையிட்டு மகிழ்ச்சி.

வன்னியன் கருத்து வேறுபாடுகளை மன்னித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தொடர வேண்டும்.

ஒரு துணிச்சல் மிக்க கருத்தாளன் இக்களத்தை விட்டு அகல்வதில் எமக்கு மன வருத்தமே..! :rolleyes:

Link to comment
Share on other sites

வன்னியன் நீங்கள் போவது எண்ற்று முடிவெடுப்பதை விட இருந்து என்ன செய்யலாம் எண்று யோசிப்பது நலம்...!!

உங்களுக்கு உரிய மரியாதை உங்களுக்கு கிட்ட வில்லையா... கவலையை விடுங்கள்... அப்படி தராதவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் விட்டால் போச்சுது...!!

இது ஒருவகை தற்கொலை முயற்ச்சி... வன்னியன் எனும் பெயரை சாகடிக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் உண்மை...!

Link to comment
Share on other sites

வன்னியன்

பக்கச் சார்பில்லாமல் கருத்தாடும் உறவு நீங்கள்் இப்படியொரு முடிவிற்கு ஏன் வந்தீீர்கள். உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு களத்தில் மீண்டும் களமாடுங்கள். யார் தவறு செய்்தாலும் சுட்டிக்காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் நீங்கள் போவது எண்ற்று முடிவெடுப்பதை விட இருந்து என்ன செய்யலாம் எண்று யோசிப்பது நலம்...!!

உங்களுக்கு உரிய மரியாதை உங்களுக்கு கிட்ட வில்லையா... கவலையை விடுங்கள்... அப்படி தராதவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் விட்டால் போச்சுது...!!

இது ஒருவகை தற்கொலை முயற்ச்சி... வன்னியன் எனும் பெயரை சாகடிக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் உண்மை...!

வன்னியன் எனது கருத்தும் இதுவே.

Link to comment
Share on other sites

நீங்களுமா? என்னாச்சு உங்கள் எல்லோருக்கும்?

சரி சந்தோஷமாக போய் வாருங்கள்!

Link to comment
Share on other sites

என்னாச்சு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாதக்களங்கள் பெயரில் தான் வேறுபாடே தவிர மற்றபடி இயங்குவதும், இயக்குவதும் ஒரே மாதிரி தான். மட்டுறுத்துனர் பதிவாளர் பிரச்சனை மாமியார் மருமகள் பிரச்சனையை விட பெரிய பிரச்சனையாக இருக்கிறது எல்லா இடங்களிலும். :lol:

கட்சியில் பிரச்சனை என்றால் அரசியல்வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவுவது போல வெட்டுபடும் பதிவுகள் பிரச்சனையால் பதிவாளர்கள் களம் விட்டு களம் தாவிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. :lol:

கருத்து சுதந்திரம் என பேசி விட்டு இப்படி எல்லா களங்களிலும் வெட்டிக்கொண்டிருந்தால் கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் பேச்சு தான் போலிருக்குது. இதைவிட கனியம்மா நடத்தும் களத்திலே கருத்தை எழுதிவிட்டு வருமா வராதா என ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும். என்ன கருத்தோ என்ன சுதந்திரமோ. இங்கே வந்து யாராவது நிர்வாணப்படமோ அல்லது மஞ்சள் கதைகளையோ பதிக்கப்போவதில்லை. அதனால் மட்டுறுத்துனர்களே கொஞ்சம் விட்டுபிடிங்க.

Link to comment
Share on other sites

வன்னியா நீயுமா ??? என்னது யாழுக்கு இலையுதிர் காலமோ :lol::lol:

Link to comment
Share on other sites

இப்போது தான் தூயவனின் தலைப்பில் பதில் எழுதிவிட்டு பார்த்தால் அடுத்த தலைப்பில் நீங்கள்? என்னாச்சு? தூயவனுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கின்றேன். அனைத்தையும் மறந்து யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

மதன்

முதலில் நீங்கள் திரும்பவும் மட்டுறுத்தினராக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியிலாவது தூயவனும் வன்னியனும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்களென நம்புகின்றேன். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில புதிய சூழல்களுக்கு இசைவாக்கம் அடையப் பழகவேண்டும்.. இல்லாவிட்டால் தப்பிப் பிழைக்க முடியாது!

Link to comment
Share on other sites

வன்னியன் அண்ணா அண்ணா அண்ணா ணா ணா ணா ணா :D ....என்ன விட்டிட்டு போக போறியளே ஏனண்ணாணாணா..(கொஞ்சம் "ஓவரா" போயிட்டோ)..சரி அத விடுவோம். :wub: .

ம்ம்..அண்ணா போட்டியில இறங்கிட்டோம் என்றா முடியமட்டும் ஓடனும் யாருக்காகவும் போட்டி நடுவில போக கூடாது அல்லோ.. :) (உங்களுக்கு நான் சொல்லுறதோ)..ஆனபடியா இப்ப என்ன சொல்ல வாறேன் என்டா மறுபடி நீங்க போட்டியில கலந்து கொள்ள வேண்டும் ஓட வேண்டும்.. :lol:

தொடர்ந்தும் யாழ்கள மைதானத்தில் உங்களின் ஓட்டதிற்கு என் கைதட்டல்கள் இருந்து கொண்டே இருக்கும் நீங்க பேஷா ஓடி கொண்ணே இருங்கோ அண்ணா.. :D

மன்னிகமாட்டாயா உன்

மனமி(இ)றங்கி

நீ ஓரு மேதை

நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை

நான் படும் வேதனை

போதும்..போதும்... :)

கடசியா நான் இப்ப என்ன சொல்ல வாறேன் என்டா...விடை பெறுவது முக்கியமல்ல எல்லாத்திற்கு விடை கொடுக்கிறது தான் முக்கியம் :D ஆனபடியா உங்கள் விடையை வாசிக்கும் ஆவலுடன் விடை பெறுவது உங்கள் ஜம்மு பேபி.. :lol: (அட நான் சொன்ன விடைபெறுவது இந்த பக்கத்தில இருந்து)..பிறகு யாரும் தப்பா நினைத்து போடாதையுங்கோ.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா நாய் குரைத்தா நாம ஓட கூடாது திரும்பி பார்கனும்" :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கை? :wub:

எல்லொரும் ஒவ்வொரு பக்கமா விலத்துறியள் ஒதுங்குறியள். :lol:

ஏனுங்கோ இந்த இடப்பெயர்வு? யாழில் ஷெல் அடிக்கிறார்களா? :lol:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கை? :wub:

எல்லொரும் ஒவ்வொரு பக்கமா விலத்துறியள் ஒதுங்குறியள். :lol:

ஏனுங்கோ இந்த இடப்பெயர்வு? யாழில் ஷெல் அடிக்கிறார்களா? :lol:

செல் அல்ல அது சுனாமி, நிலா.

Link to comment
Share on other sites

செல் அல்ல அது சுனாமி, நிலா.

:wub: சுனாமி என்றால் எல்லா பக்கமும் குழன்று வரும் எல்லோ.

உது என்னமோ ஷெல் தான் போலிருக்கு. குறிப்பிட்ட பக்கம் தான் அடி விழுது போல. :)

எல்லோரும் விளையாட்டுக்களம் வாங்கோ மனசை சந்தோசப்படுத்திக்கலாம் :lol: Relax :lol: பண்ணிக்கலாம்

Link to comment
Share on other sites

ஒரு புதிய உறுப்பினர் அறிமுகமாகின்றபோது எவ்வளவு அன்பாக வரவேற்கின்றமோ, அதேபோல் வெளியில் போக விரும்புகின்றவர்களையும் அன்பாகத்தானே அனுப்பி வைக்கவேண்டும்.அதுதானே நியாயம்.

Link to comment
Share on other sites

ஒரு புதிய உறுப்பினர் அறிமுகமாகின்றபோது எவ்வளவு அன்பாக வரவேற்கின்றமோ, அதேபோல் வெளியில் போக விரும்புகின்றவர்களையும் அன்பாகத்தானே அனுப்பி வைக்கவேண்டும்.அதுதானே நியாயம்.

உங்கள் பாசம் புல்லரிக்க வைக்கின்றது. ஆனால் காற்று எப்போதும் ஒரே மாதிரி வீசுவதில்லை. காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறும்.

Link to comment
Share on other sites

வன்னியன்... வெண்ணிலா அக்கா சொன்ன மாதிரி பலத்த எறிகணை எண்டு குழிக்க போனா... அது பட்டாசு கண்க்கா ஆயிடக்கூடாது... முடிவை மாற்றுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.