Jump to content

குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!


Recommended Posts

ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது.

வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் சேலையை மறைத்து அவர்களை ஆடையில்லாமல் அலையவிட்ட கிருஷ்ணனை ஈவ்டீஸிங் கேஸில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமா? ஆற்றுக்குள் அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்த பாம்பை கொன்ற கிருஷ்ணன் மிருகவதை சட்டத்தின் படி குற்றவாளிதானே?

போர் செய்துகொண்டிருந்தபோது வாலியை மறைந்திருந்து பேடித்தனமாக கொலைசெய்த ராமனை தூக்கில் போட்டிருக்க வேண்டாமா? இராவணனிடமிருந்து மீண்டு வந்த சீதையை சிதையிறங்க சொன்ன ராமனை பெண்கள் சிறப்பு காவல்நிலையத்தில் புகார் செய்து முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேண்டாமா?

உலகை சுற்றிவரும் போட்டியென்று அறிவித்துவிட்டு உலகை சுற்றிவந்த முருகனுக்கு பரிசு தராமல், சிவன் பார்வதியை சுற்றிவந்து குறுக்குவழியில் விநாயகன் பரிசினை தட்டிச் சென்றது ஊழலல்லவா? அந்த ஊழலுக்கு துணைபோன நீதிபதியல்லவா சிவன்?

அகலிகை மீது மோகம் கொண்டு அவரது கணவர் போல வேடம்புரிந்து அகலிகையை கற்பழித்த தேவேந்திரனை பாலியல் வல்லுறவு குற்றத்தில் உள்ளே தள்ளி காயடித்திருக்க வேண்டாம்? ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சூப்பர் பிகர்களை தன் அவையில் வைத்திருந்த இந்திரன் கன்னட பிரசாத்துக்கு ஒப்பானவனா இல்லையா?

திருவிளையாடல் என்று கூறி பலவேடங்கள் போட்டு பூமிக்கு வந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த சிவனை மோசடி வழக்கில் கைது செய்திருக்க வேண்டாம்? பொருட்குற்றம் கண்டறிந்த நக்கீரனை கொலைசெய்த கொலைகாரனல்லவா சிவன்?

தவம் கிடந்த விசுவாமித்திரனை உறவுக்கு அழைத்த மேனகை மீது விபச்சார வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறாக இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் குற்றங்களும், ஊழலும், விபச்சாரமும், பாலியல் வல்லுறவும், கொலையும், கொள்ளையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்தும், கேட்டும் வளரும் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்? கடவுளர்களே செய்திருக்கிறார்கள், நாங்கள் செய்வதற்கு என்ன? என்ற மனோபாவம் தானே மக்கள் மத்தியில் இருக்கும்? புராணங்களிலும், இதிகாசங்களிலும் இவ்வாறெல்லாம் இருப்பதால் அவை பெரிய குற்றமல்ல என்று அம்மதம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இயல்பிலேயே ஊறிவிடுகிறது.

தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரே, கடவுளர்களின் திருவிளையாடல்கள் அடிப்படையில் தான் நம் இந்து மதக்காவலர் காம்கேடியான் பள்ளியறை யாகம் நடத்தினாரா?

பார்ப்பனர்கள் கொலை செய்தால் மொட்டை அடித்தால் போதும் என்ற மனுசாஸ்திரபடி கொலை செய்துவிட்டு ஒய்யாரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறாரா?

ஒன்றும் புரியவில்லை மகாபிரபு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரே, கடவுளர்களின் திருவிளையாடல்கள் அடிப்படையில் தான் நம் இந்து மதக்காவலர் காம்கேடியான் பள்ளியறை யாகம் நடத்தினாரா?

பார்ப்பனர்கள் கொலை செய்தால் மொட்டை அடித்தால் போதும் என்ற மனுசாஸ்திரபடி கொலை செய்துவிட்டு ஒய்யாரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறாரா?

ஒன்றும் புரியவில்லை மகாபிரபு :D

ஆஹா கூட்டம் சேர்ந்துட்டாங்கப்பா.......

ஆனாலும் இலக்கி உலுக்குவின் எழுத்துக்கள் ரசிக்க வைக்கின்றன......நல்லதொரு நகைச்சுவை கதை.

மிகவும் ரசித்தது.....

அவரின் கிளிஞ்சிது போ என்னை கவர்ந்த மற்றுமொரு கதை.....

http://madippakkam.blogspot.com/2008/05/blog-post_07.html

Link to comment
Share on other sites

கடவுள்்களை அப்புறம் பார்ப்போம்்.. ஆளாளுக்குகு தத்துவம் என்றும் அறிவுரை என்றும் சொல்கிற மனுசங்கள பாருங்க.. கண்ணதாசன்ல இருந்து நம்ப கலைஞர் வரை பாருங்க.. ஆளாளுக்கு எத்தனை மனைவியரை வைச்சுக் கொண்டு.. தமிழ் பண்பாட்டைப்்பற்றி பேசுறாங்க.. மனுனுசனே இப்்படீன்னா கடவுள் எம்மாத்திரம்..?!! :lol::wub:

Link to comment
Share on other sites

மனுனுசனே இப்்படீன்னா கடவுள் எம்மாத்திரம்..?!! :):lol:

சோழியன் அவர்களே!

உங்கள் கருத்து கோக்குமாக்காக இருக்கிறதே?

கடவுளே இப்படியென்றால் மனிதன் எம்மாத்திரம் என்று சொல்லுவது தான் உலக வழக்கு. நீங்கள் மாற்றி சிந்திக்கிறீர்களே? :lol::):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புராணக்கதை என்றாலே அது ஓர் கட்டுக்கதை என்றுதான் கூறுவார்கள். அவையெல்லாம் மக்களை நல்வழிப்படுத்தவே எழுதப்பட்டன. சில மிகைப்படுத்தியும், நம்பமுடியாத முறையிலும் எழுதப்பட்டுவிட்டன. இந்துமதத்தில் இருக்கும் குறைகளை நீங்கள் நகைச்சுவையாகவோ, மற்றவர் ரசிக்கும்படியாகவோ எப்படியும் எழுதலாம். ஆனால் மற்றைய மதங்களில் இருக்கும் சில குறைகளைக் எடுத்துக்கூறினால் கொலை விழுந்தாலும் விழும்.

ஒரு வித்தியாசம்: அப்போது இந்துமதத்தில் கடவுள் கொலை செய்தார், கொள்ளையடித்தார், ஏமாற்றினார் என்று கூறினார்கள். இவை புராணக்கதைகள். ஆனால் தற்போது மதங்களின் பெயரால் மனிதரே இவையெல்லவற்றையும் செய்கிறார்கள். எடுத்துக் கூறினால் தண்டனையும் கிடைக்கும். கவனம்!!!

Link to comment
Share on other sites

செல்வமுத்து அவர்களே!

இந்துமதத்தின் இதிகாசங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று பொட்டென்று உண்மையை போட்டு உடைத்ததற்கு நன்றி. இந்துமதம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் இந்துமதத்தை தான் நாத்திகர்கள் எதிர்த்து கருத்து சொல்லமுடியும். கிறிஸ்தவம் மதம், முஸ்லிம் மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் வசிக்கும் நாத்திகர்கள் அந்தந்த மதங்களைப் பற்றி பேசுவார்கள்.

Link to comment
Share on other sites

quote name='லக்கிலுக்' date='May 15 2008, 08:28 AM' post='410326']

செல்வமுத்து அவர்களே!

இந்துமதத்தின் இதிகாசங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று பொட்டென்று உண்மையை போட்டு உடைத்ததற்கு நன்றி. இந்துமதம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் இந்துமதத்தை தான் நாத்திகர்கள் எதிர்த்து கருத்து சொல்லமுடியும். கிறிஸ்தவம் மதம், முஸ்லிம் மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் வசிக்கும் நாத்திகர்கள் அந்தந்த மதங்களைப் பற்றி பேசுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.