Jump to content

முட்டை பீட்ஸா


Recommended Posts

egg%20copy.jpg

பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.

தேவையானது:

3 முட்டை

1 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 தே.க மிளகுத்தூள்

1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது

உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை]

செய்ய வேண்டியது:

1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே சேர்த்திடுங்க.

2. இப்போ அதில உள்ளி+இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க. ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும்.

3. ஒரு நிமிடத்தின் பின்னர் வதக்கி வந்த கலவையை சட்டியில் சமபரப்பாக பரவி விடுங்க. அதுக்கு மேலெ முட்டையை ஊற்றுங்க. இந்த நேரத்தில அடுப்பின் சூட்டை முடிந்த அளவு குறைக்க வேணும். அதோட மறக்காம மூடியால மூடுங்க.

4. அரிந்த கறிவேப்பிலையையோ அல்லது கொத்தமல்லி இலையையோ கொஞ்சமா மேலே தூவிடுங்க. மேலே தூவ பிடிக்காட்டி, முட்டையோட முதலே சேர்க்கலாம். அது உங்க இஸ்டம்.

5. இரண்டிலிருந்து நான்கு நிமிடத்தில் முட்டை நன்றாக வெந்திடும். பக்கம் திருப்ப வேண்டிய அவசியமே இல்லை. அடுப்பை அணைத்த பின்னர் pizza wedges போல வெட்டி எடுத்துக்குங்க.

என்னோட அண்ணாக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றதால மேலேயும் தூவியிருக்கேன். அப்படி தூவாமல் இருக்கும் போது பார்ப்பதற்கு இன்னும் அழகாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே போல முட்டை பொரியல் செய்யாமல், இப்படி வித்தியாசமாகவும் செய்து பார்க்கலாமே. சுவையும் வித்தியாசமாக இருக்கும். சாப்பிட்டவர்கள் நன்றாகவே இருப்பதால் நம்பி செய்யலாம் என "நினைக்கிறேன்" கிகிகிகி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

தொடுப்புகள்:

1. சுவையருவி

2. சமையல்கட்டு

Link to comment
Share on other sites

வணக்கம் தூய்ஸ்..

சமையலறை கமகமக்கிறது...சிட்டினியில...

நீங்கள் சிங்கப்பூர் மலேசியா போனா சமையல் குறிப்பு வாங்கி வாறாத எங்கேயோ எழுதி படிச்ச நினைவு...

நான் ஒரு தடவை மலேசியா போய் இருந்தப்ப..தெரிஞ்ச ஒரு வீட்ட சாப்பிட போயிருந்தன்..

அந்த வீட்டு அம்மா..முருங்கைக்காயோட...(சுத்

Link to comment
Share on other sites

வணக்கம் தூய்ஸ்..

சமையலறை கமகமக்கிறது...சிட்டினியில...

நீங்கள் சிங்கப்பூர் மலேசியா போனா சமையல் குறிப்பு வாங்கி வாறாத எங்கேயோ எழுதி படிச்ச நினைவு...

நான் ஒரு தடவை மலேசியா போய் இருந்தப்ப..தெரிஞ்ச ஒரு வீட்ட சாப்பிட போயிருந்தன்..

அந்த வீட்டு அம்மா..முருங்கைக்காயோட...(சுத்

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னமாதிரியே செய்துபோட்டு அடுப்பில வச்சபடியே மெல்லிய சூட்டில பிறகு ரெண்டு தகட்டால சடக்கு பிடக்கு எண்டு அடிச்சு அந்த பதார்த்தத்தை கண்டபடி துண்டம் துண்டாமாக (தூள் தூளாக) வெட்டிப்போட்டு சாப்பிட்டால் அதை முட்டைக் கொத்து ரொட்டி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன் தூயா.

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னமாதிரியே செய்துபோட்டு அடுப்பில வச்சபடியே மெல்லிய சூட்டில பிறகு ரெண்டு தகட்டால சடக்கு பிடக்கு எண்டு அடிச்சு அந்த பதார்த்தத்தை கண்டபடி துண்டம் துண்டாமாக (தூள் தூளாக) வெட்டிப்போட்டு சாப்பிட்டால் அதை முட்டைக் கொத்து ரொட்டி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன் தூயா.

ஏன் இந்த கொலைவெறி? ;)

அப்படி செய்தால் அதுக்கு பேர் முட்டை கொத்து...முட்டை கொத்து ரொட்டி என்றால் அதில ரொட்டி இருக்கணுமே ;) :wub:

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா.. செய்யிறதுக்கு தான் நேரமில்லை. குறிப்பெடுத்திருக்கிறன் பார்ப்பம்.....தூயா இணைப்புக்கு நன்றி :):):D

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா.. செய்யிறதுக்கு தான் நேரமில்லை. குறிப்பெடுத்திருக்கிறன் பார்ப்பம்.....தூயா இணைப்புக்கு நன்றி :):D:D

நேரம் தான் எம்மில் பலருக்கு பிரச்சனையே..

ஆனால் இது அத்தனை நேரம் எடுக்காது. :)

Link to comment
Share on other sites

egg%20copy.jpg

பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.

தேவையானது:

3 முட்டை

1 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 தே.க மிளகுத்தூள்

1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது

உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை]

செய்ய வேண்டியது:

1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே சேர்த்திடுங்க.

2. இப்போ அதில உள்ளி+இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க. ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும்.

3. ஒரு நிமிடத்தின் பின்னர் வதக்கி வந்த கலவையை சட்டியில் சமபரப்பாக பரவி விடுங்க. அதுக்கு மேலெ முட்டையை ஊற்றுங்க. இந்த நேரத்தில அடுப்பின் சூட்டை முடிந்த அளவு குறைக்க வேணும். அதோட மறக்காம மூடியால மூடுங்க.

4. அரிந்த கறிவேப்பிலையையோ அல்லது கொத்தமல்லி இலையையோ கொஞ்சமா மேலே தூவிடுங்க. மேலே தூவ பிடிக்காட்டி, முட்டையோட முதலே சேர்க்கலாம். அது உங்க இஸ்டம்.

5. இரண்டிலிருந்து நான்கு நிமிடத்தில் முட்டை நன்றாக வெந்திடும். பக்கம் திருப்ப வேண்டிய அவசியமே இல்லை. அடுப்பை அணைத்த பின்னர் pizza wedges போல வெட்டி எடுத்துக்குங்க.

என்னோட அண்ணாக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றதால மேலேயும் தூவியிருக்கேன். அப்படி தூவாமல் இருக்கும் போது பார்ப்பதற்கு இன்னும் அழகாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே போல முட்டை பொரியல் செய்யாமல், இப்படி வித்தியாசமாகவும் செய்து பார்க்கலாமே. சுவையும் வித்தியாசமாக இருக்கும். சாப்பிட்டவர்கள் நன்றாகவே இருப்பதால் நம்பி செய்யலாம் என "நினைக்கிறேன்" கிகிகிகி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

தொடுப்புகள்:

1. சுவையருவி

2. சமையல்கட்டு

ஜயோ தூயாக்கா இதை அம்மாவிக்கு வாசித்தன் அம்மா சமையல்கட்டுக்குள் போனவா பின் வாசம் மட்டும்தான் வீடுமுழுக்கா நல்லா இருக்கு உங்களை கட்டுறவர் குடுத்து வைத்தவர்...கீ கீ :)

மோகன்னா அனுமதி தந்திட்டார் களத்தில் இறங்க..

Link to comment
Share on other sites

ஜயோ தூயாக்கா இதை அம்மாவிக்கு வாசித்தன் அம்மா சமையல்கட்டுக்குள் போனவா பின் வாசம் மட்டும்தான் வீடுமுழுக்கா நல்லா இருக்கு உங்களை கட்டுறவர் குடுத்து வைத்தவர்...கீ கீ :)

மோகன்னா அனுமதி தந்திட்டார் களத்தில் இறங்க..

இங்கு வர சொன்ன எனக்கு ஒரு நன்றி சொன்னிங்களா.. ;)

அப்படியே சமைத்ததை உண்டபின்னும் எப்படி என சொல்லுங்க

Link to comment
Share on other sites

இங்கு வர சொன்ன எனக்கு ஒரு நன்றி சொன்னிங்களா.. ;)

அப்படியே சமைத்ததை உண்டபின்னும் எப்படி என சொல்லுங்க

நன்றி சொன்னேனே கவனிக்கவில்லையா நம்க்குள்ள என்ன நன்றி மன்னிப்பு எல்லாம் பேரன் பிழைவிட்டால் அப்பம்மா திருத்திறதவிட்டு விட்டு இதில் கனினி சம்பந்தமாக ஒன்று கேட்டிருக்கன் தெரிந்தால் சொல்லுங்கோ உதவியாஇருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894

சாப்பாடு நல்லா இருக்கு வேற இருக்கா .....?

Link to comment
Share on other sites

நன்றி சொன்னேனே கவனிக்கவில்லையா நம்க்குள்ள என்ன நன்றி மன்னிப்பு எல்லாம் பேரன் பிழைவிட்டால் அப்பம்மா திருத்திறதவிட்டு விட்டு இதில் கனினி சம்பந்தமாக ஒன்று கேட்டிருக்கன் தெரிந்தால் சொல்லுங்கோ உதவியாஇருக்கும். சாப்பாடு நல்லா இருக்கு வேற இருக்கா .....?

கணனி உதவிக்கு இங்கு தேர்ச்சி பெற்றபவர்கள் உள்ளனர். அவங்க சொல்லாட்டி நான் அண்ணாக்கள கேட்டாச்சும் எழுதுறேன். :)

சாப்பாடு இங்கு பல இருக்கே..பார்க்கலையா?

என்னோட சமையல்கட்டு இது; http://thooyaskitchen.blogspot.com/

Link to comment
Share on other sites

கணனி உதவிக்கு இங்கு தேர்ச்சி பெற்றபவர்கள் உள்ளனர். அவங்க சொல்லாட்டி நான் அண்ணாக்கள கேட்டாச்சும் எழுதுறேன். :D

சாப்பாடு இங்கு பல இருக்கே..பார்க்கலையா?

என்னோட சமையல்கட்டு இது; http://thooyaskitchen.blogspot.com/

நல்லா இருக்கே எப்படி முடியுது உங்களால ரொம்ப பயனா இருக்கு இது முழுக்க பிரதிபண்ணி திருமணம் முடிந்தபின் படிக்க கொடுக்கனும் அப்பதான் நல்லா சாப்பிடலாம் .......எப்படி நம்மா திட்டம். :):)

Link to comment
Share on other sites

நல்லா இருக்கே எப்படி முடியுது உங்களால ரொம்ப பயனா இருக்கு இது முழுக்க பிரதிபண்ணி திருமணம் முடிந்தபின் படிக்க கொடுக்கனும் அப்பதான் நல்லா சாப்பிடலாம் .......எப்படி நம்மா திட்டம். :):)

ரொம்ப விவரம் தான்.

அதிலும் கதையோட கதையா நீங்க திருமணம் ஆகாதவர்னு சொன்னிங்களே..அங்க தான் நிற்கிறிங்க கிருபாண்ணா :D க்கிகிகிகி

உங்களுக்கு தெரிந்த செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

ரொம்ப விவரம் தான்.

உங்களுக்கு தெரிந்த செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கு அப்பளம் சுடத்தெரியும் சொல்லித்தரவா? வேற சுடுதண்ணி காச்ச [கொதிக்க வைக்க] தெரியும் என்ன சொல்ல?

Link to comment
Share on other sites

எனக்கு அப்பளம் சுடத்தெரியும் சொல்லித்தரவா? வேற சுடுதண்ணி காச்ச [கொதிக்க வைக்க] தெரியும் என்ன சொல்ல?

இதெல்லாம் முதலே யாழ்கள அண்ணாக்கள் எழுதிட்டினம்,

இருந்தாலும்

இதிலயே ஏதும் புது முறை தெரிந்தால் எழுதுங்க ;)

Link to comment
Share on other sites

இதெல்லாம் முதலே யாழ்கள அண்ணாக்கள் எழுதிட்டினம்,

இருந்தாலும்

இதிலயே ஏதும் புது முறை தெரிந்தால் எழுதுங்க ;)

புதுமுறை ஒன்று கண்டு பிடித்துள்ளேன் அது கிண்ணஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன் பத்திரிகையில் வரும் பின்பு அதை எழுதுறன் மற்றும்படி நல்லா சாப்பிடுவன்.......தூயா சாப்பாடு இருந்தால் பொதிகட்டி அனுப்புங்கள் உண்டியலில் காசு அனுப்புறன் ....கடையில வேண்ட சொல்லக்கூடாது ஏன் என்றால் உங்கள் கைப்பக்குவம் இருக்காது அதுதான்.....எப்படி தயாரா?

Link to comment
Share on other sites

புதுமுறை ஒன்று கண்டு பிடித்துள்ளேன் அது கிண்ணஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன் பத்திரிகையில் வரும் பின்பு அதை எழுதுறன் மற்றும்படி நல்லா சாப்பிடுவன்.......தூயா சாப்பாடு இருந்தால் பொதிகட்டி அனுப்புங்கள் உண்டியலில் காசு அனுப்புறன் ....கடையில வேண்ட சொல்லக்கூடாது ஏன் என்றால் உங்கள் கைப்பக்குவம் இருக்காது அதுதான்.....எப்படி தயாரா?

என்னை ரொம்ப தான் கலாய்க்கிறிங்க..

சகோதரனிடம் காசா...!!!!

சும்மாவே தாறேன் [பரிசோதனைக்கு ஒரு எலி கிடைச்சிடிச்சு] :) :)

Link to comment
Share on other sites

சகோதரனிடம் காசா...!!!!

சும்மாவே தாறேன் [பரிசோதனைக்கு ஒரு எலி கிடைச்சிடிச்சு] :) :)

நல்லா இருக்கு நான் கிண்னெஸ் சாதனைக்கு போராடுகிறன் தூயா என்னென்றால் எலியாக்கி பரிசோதனை செய்கிறா இதை யாரும் கேளுங்கோ தூயவின் துரோகத்தை சாப்பாடுதான் கேட்டேன் வேற ஒன்றும் கேட்கவில்லை ..............................தூயா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவரை பயன்படுத்தும் எங்கள் பாடசாலை ஆசிரியர் நான் பிடித்து தரலாம் ......பிரச்சனையில்லை..சரியா?

Link to comment
Share on other sites

:)சபாஷ்.... சரியான போட்டி.... இப்படி யாரும் பதில் எழூதி நான் பார்த்ததில்லை..... பாட்டியும் பேரனும் விட்டுக்கொடுக்கிறதா தெரியல.....

Link to comment
Share on other sites

:Dசபாஷ்.... சரியான போட்டி.... இப்படி யாரும் பதில் எழூதி நான் பார்த்ததில்லை..... பாட்டியும் பேரனும் விட்டுக்கொடுக்கிறதா தெரியல.....

உங்களைத்தான் நான் இராசாவீதியில் கண்டனான் அப்ப சின்னதுப்பாக்கியுடன் நின்றனியல் அதைவைத்து என்ன செய்தனியல் :D:D

[தண்ணித்துப்பாக்கி] :):)

Link to comment
Share on other sites

அப்பப்பா.....துவக்கோ.... பயந்திட்டன்.....( திருவிழாவில கூட வேண்டினதில்ல.....) :):D:)

Link to comment
Share on other sites

அப்பப்பா.....துவக்கோ.... பயந்திட்டன்.....( திருவிழாவில கூட வேண்டினதில்ல.....) :):D:)

பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் நான் கண்டனான் நீங்கள்தான்.....

எனது கனினி கொஞ்சம் பிரச்சனை தீர்த்துவிடுவீர்களா....http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894 இதில் உள்ளது

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு நான் கிண்னெஸ் சாதனைக்கு போராடுகிறன் தூயா என்னென்றால் எலியாக்கி பரிசோதனை செய்கிறா இதை யாரும் கேளுங்கோ தூயவின் துரோகத்தை சாப்பாடுதான் கேட்டேன் வேற ஒன்றும் கேட்கவில்லை ..............................தூயா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவரை பயன்படுத்தும் எங்கள் பாடசாலை ஆசிரியர் நான் பிடித்து தரலாம் ......பிரச்சனையில்லை..சரியா?

எனக்கு வேண்டியது ஒரு எலி...ச்சே ஒரு ஆள்..சாப்பிட்டு பார்த்து உயிரோட இருக்காங்களான்னு பார்க்க..

அது அண்ணன்கள் என்றால் வசதி [பின்னாடி வழக்கு வக்கில் என ஆகிடக்கூடதில்ல] ;)

Link to comment
Share on other sites

அட.."முட்டை பீஸாவோ" பார்க்க நன்னா தான் இருக்கு :D ..(சாப்பிடா பிறகு தங்கச்சி)...அட வழமையா நம்மளிற்கு "பீஸா" சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சு :D ..ஒன்னு செய்வோமோ நீங்க செய்து தாங்கோநான் சாப்பிடுறன் என்னால உப்படி எல்லாம் செய்ய ஏலாது என்னு தெரியும் தானே.. :D

ம்ம்..செய்முறைக்கு நன்றி தூயிஸ்..(எப்ப நேக்கு செய்து தருவியள் என்று சொல்லவில்லை :D )...அட நேக்கு முட்டை விருப்பமில்லை அல்லோ உது எப்படி இருக்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏன் இந்த கொலைவெறி? ;)

அப்படி செய்தால் அதுக்கு பேர் முட்டை கொத்து...முட்டை கொத்து ரொட்டி என்றால் அதில ரொட்டி இருக்கணுமே ;) :D

இல்ல தூயா ஒரு சின்ன மாற்றம் - முட்டைக் கொத்து ரொட்டி அல்ல - அதிண்ட பெயர் முட்டைக் கொத்து!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.