Jump to content

முட்டை பீட்ஸா


Recommended Posts

egg%20copy.jpg

பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.

தேவையானது:

3 முட்டை

1 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 தே.க மிளகுத்தூள்

1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது

உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை]

செய்ய வேண்டியது:

1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே சேர்த்திடுங்க.

2. இப்போ அதில உள்ளி+இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க. ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும்.

3. ஒரு நிமிடத்தின் பின்னர் வதக்கி வந்த கலவையை சட்டியில் சமபரப்பாக பரவி விடுங்க. அதுக்கு மேலெ முட்டையை ஊற்றுங்க. இந்த நேரத்தில அடுப்பின் சூட்டை முடிந்த அளவு குறைக்க வேணும். அதோட மறக்காம மூடியால மூடுங்க.

4. அரிந்த கறிவேப்பிலையையோ அல்லது கொத்தமல்லி இலையையோ கொஞ்சமா மேலே தூவிடுங்க. மேலே தூவ பிடிக்காட்டி, முட்டையோட முதலே சேர்க்கலாம். அது உங்க இஸ்டம்.

5. இரண்டிலிருந்து நான்கு நிமிடத்தில் முட்டை நன்றாக வெந்திடும். பக்கம் திருப்ப வேண்டிய அவசியமே இல்லை. அடுப்பை அணைத்த பின்னர் pizza wedges போல வெட்டி எடுத்துக்குங்க.

என்னோட அண்ணாக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றதால மேலேயும் தூவியிருக்கேன். அப்படி தூவாமல் இருக்கும் போது பார்ப்பதற்கு இன்னும் அழகாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே போல முட்டை பொரியல் செய்யாமல், இப்படி வித்தியாசமாகவும் செய்து பார்க்கலாமே. சுவையும் வித்தியாசமாக இருக்கும். சாப்பிட்டவர்கள் நன்றாகவே இருப்பதால் நம்பி செய்யலாம் என "நினைக்கிறேன்" கிகிகிகி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

தொடுப்புகள்:

1. சுவையருவி

2. சமையல்கட்டு

Link to comment
Share on other sites

வணக்கம் தூய்ஸ்..

சமையலறை கமகமக்கிறது...சிட்டினியில...

நீங்கள் சிங்கப்பூர் மலேசியா போனா சமையல் குறிப்பு வாங்கி வாறாத எங்கேயோ எழுதி படிச்ச நினைவு...

நான் ஒரு தடவை மலேசியா போய் இருந்தப்ப..தெரிஞ்ச ஒரு வீட்ட சாப்பிட போயிருந்தன்..

அந்த வீட்டு அம்மா..முருங்கைக்காயோட...(சுத்

Link to comment
Share on other sites

வணக்கம் தூய்ஸ்..

சமையலறை கமகமக்கிறது...சிட்டினியில...

நீங்கள் சிங்கப்பூர் மலேசியா போனா சமையல் குறிப்பு வாங்கி வாறாத எங்கேயோ எழுதி படிச்ச நினைவு...

நான் ஒரு தடவை மலேசியா போய் இருந்தப்ப..தெரிஞ்ச ஒரு வீட்ட சாப்பிட போயிருந்தன்..

அந்த வீட்டு அம்மா..முருங்கைக்காயோட...(சுத்

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னமாதிரியே செய்துபோட்டு அடுப்பில வச்சபடியே மெல்லிய சூட்டில பிறகு ரெண்டு தகட்டால சடக்கு பிடக்கு எண்டு அடிச்சு அந்த பதார்த்தத்தை கண்டபடி துண்டம் துண்டாமாக (தூள் தூளாக) வெட்டிப்போட்டு சாப்பிட்டால் அதை முட்டைக் கொத்து ரொட்டி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன் தூயா.

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னமாதிரியே செய்துபோட்டு அடுப்பில வச்சபடியே மெல்லிய சூட்டில பிறகு ரெண்டு தகட்டால சடக்கு பிடக்கு எண்டு அடிச்சு அந்த பதார்த்தத்தை கண்டபடி துண்டம் துண்டாமாக (தூள் தூளாக) வெட்டிப்போட்டு சாப்பிட்டால் அதை முட்டைக் கொத்து ரொட்டி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன் தூயா.

ஏன் இந்த கொலைவெறி? ;)

அப்படி செய்தால் அதுக்கு பேர் முட்டை கொத்து...முட்டை கொத்து ரொட்டி என்றால் அதில ரொட்டி இருக்கணுமே ;) :wub:

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா.. செய்யிறதுக்கு தான் நேரமில்லை. குறிப்பெடுத்திருக்கிறன் பார்ப்பம்.....தூயா இணைப்புக்கு நன்றி :):):D

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா.. செய்யிறதுக்கு தான் நேரமில்லை. குறிப்பெடுத்திருக்கிறன் பார்ப்பம்.....தூயா இணைப்புக்கு நன்றி :):D:D

நேரம் தான் எம்மில் பலருக்கு பிரச்சனையே..

ஆனால் இது அத்தனை நேரம் எடுக்காது. :)

Link to comment
Share on other sites

egg%20copy.jpg

பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.

தேவையானது:

3 முட்டை

1 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 தே.க மிளகுத்தூள்

1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது

உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை]

செய்ய வேண்டியது:

1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே சேர்த்திடுங்க.

2. இப்போ அதில உள்ளி+இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க. ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும்.

3. ஒரு நிமிடத்தின் பின்னர் வதக்கி வந்த கலவையை சட்டியில் சமபரப்பாக பரவி விடுங்க. அதுக்கு மேலெ முட்டையை ஊற்றுங்க. இந்த நேரத்தில அடுப்பின் சூட்டை முடிந்த அளவு குறைக்க வேணும். அதோட மறக்காம மூடியால மூடுங்க.

4. அரிந்த கறிவேப்பிலையையோ அல்லது கொத்தமல்லி இலையையோ கொஞ்சமா மேலே தூவிடுங்க. மேலே தூவ பிடிக்காட்டி, முட்டையோட முதலே சேர்க்கலாம். அது உங்க இஸ்டம்.

5. இரண்டிலிருந்து நான்கு நிமிடத்தில் முட்டை நன்றாக வெந்திடும். பக்கம் திருப்ப வேண்டிய அவசியமே இல்லை. அடுப்பை அணைத்த பின்னர் pizza wedges போல வெட்டி எடுத்துக்குங்க.

என்னோட அண்ணாக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றதால மேலேயும் தூவியிருக்கேன். அப்படி தூவாமல் இருக்கும் போது பார்ப்பதற்கு இன்னும் அழகாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே போல முட்டை பொரியல் செய்யாமல், இப்படி வித்தியாசமாகவும் செய்து பார்க்கலாமே. சுவையும் வித்தியாசமாக இருக்கும். சாப்பிட்டவர்கள் நன்றாகவே இருப்பதால் நம்பி செய்யலாம் என "நினைக்கிறேன்" கிகிகிகி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

தொடுப்புகள்:

1. சுவையருவி

2. சமையல்கட்டு

ஜயோ தூயாக்கா இதை அம்மாவிக்கு வாசித்தன் அம்மா சமையல்கட்டுக்குள் போனவா பின் வாசம் மட்டும்தான் வீடுமுழுக்கா நல்லா இருக்கு உங்களை கட்டுறவர் குடுத்து வைத்தவர்...கீ கீ :)

மோகன்னா அனுமதி தந்திட்டார் களத்தில் இறங்க..

Link to comment
Share on other sites

ஜயோ தூயாக்கா இதை அம்மாவிக்கு வாசித்தன் அம்மா சமையல்கட்டுக்குள் போனவா பின் வாசம் மட்டும்தான் வீடுமுழுக்கா நல்லா இருக்கு உங்களை கட்டுறவர் குடுத்து வைத்தவர்...கீ கீ :)

மோகன்னா அனுமதி தந்திட்டார் களத்தில் இறங்க..

இங்கு வர சொன்ன எனக்கு ஒரு நன்றி சொன்னிங்களா.. ;)

அப்படியே சமைத்ததை உண்டபின்னும் எப்படி என சொல்லுங்க

Link to comment
Share on other sites

இங்கு வர சொன்ன எனக்கு ஒரு நன்றி சொன்னிங்களா.. ;)

அப்படியே சமைத்ததை உண்டபின்னும் எப்படி என சொல்லுங்க

நன்றி சொன்னேனே கவனிக்கவில்லையா நம்க்குள்ள என்ன நன்றி மன்னிப்பு எல்லாம் பேரன் பிழைவிட்டால் அப்பம்மா திருத்திறதவிட்டு விட்டு இதில் கனினி சம்பந்தமாக ஒன்று கேட்டிருக்கன் தெரிந்தால் சொல்லுங்கோ உதவியாஇருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894

சாப்பாடு நல்லா இருக்கு வேற இருக்கா .....?

Link to comment
Share on other sites

நன்றி சொன்னேனே கவனிக்கவில்லையா நம்க்குள்ள என்ன நன்றி மன்னிப்பு எல்லாம் பேரன் பிழைவிட்டால் அப்பம்மா திருத்திறதவிட்டு விட்டு இதில் கனினி சம்பந்தமாக ஒன்று கேட்டிருக்கன் தெரிந்தால் சொல்லுங்கோ உதவியாஇருக்கும். சாப்பாடு நல்லா இருக்கு வேற இருக்கா .....?

கணனி உதவிக்கு இங்கு தேர்ச்சி பெற்றபவர்கள் உள்ளனர். அவங்க சொல்லாட்டி நான் அண்ணாக்கள கேட்டாச்சும் எழுதுறேன். :)

சாப்பாடு இங்கு பல இருக்கே..பார்க்கலையா?

என்னோட சமையல்கட்டு இது; http://thooyaskitchen.blogspot.com/

Link to comment
Share on other sites

கணனி உதவிக்கு இங்கு தேர்ச்சி பெற்றபவர்கள் உள்ளனர். அவங்க சொல்லாட்டி நான் அண்ணாக்கள கேட்டாச்சும் எழுதுறேன். :D

சாப்பாடு இங்கு பல இருக்கே..பார்க்கலையா?

என்னோட சமையல்கட்டு இது; http://thooyaskitchen.blogspot.com/

நல்லா இருக்கே எப்படி முடியுது உங்களால ரொம்ப பயனா இருக்கு இது முழுக்க பிரதிபண்ணி திருமணம் முடிந்தபின் படிக்க கொடுக்கனும் அப்பதான் நல்லா சாப்பிடலாம் .......எப்படி நம்மா திட்டம். :):)

Link to comment
Share on other sites

நல்லா இருக்கே எப்படி முடியுது உங்களால ரொம்ப பயனா இருக்கு இது முழுக்க பிரதிபண்ணி திருமணம் முடிந்தபின் படிக்க கொடுக்கனும் அப்பதான் நல்லா சாப்பிடலாம் .......எப்படி நம்மா திட்டம். :):)

ரொம்ப விவரம் தான்.

அதிலும் கதையோட கதையா நீங்க திருமணம் ஆகாதவர்னு சொன்னிங்களே..அங்க தான் நிற்கிறிங்க கிருபாண்ணா :D க்கிகிகிகி

உங்களுக்கு தெரிந்த செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

ரொம்ப விவரம் தான்.

உங்களுக்கு தெரிந்த செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கு அப்பளம் சுடத்தெரியும் சொல்லித்தரவா? வேற சுடுதண்ணி காச்ச [கொதிக்க வைக்க] தெரியும் என்ன சொல்ல?

Link to comment
Share on other sites

எனக்கு அப்பளம் சுடத்தெரியும் சொல்லித்தரவா? வேற சுடுதண்ணி காச்ச [கொதிக்க வைக்க] தெரியும் என்ன சொல்ல?

இதெல்லாம் முதலே யாழ்கள அண்ணாக்கள் எழுதிட்டினம்,

இருந்தாலும்

இதிலயே ஏதும் புது முறை தெரிந்தால் எழுதுங்க ;)

Link to comment
Share on other sites

இதெல்லாம் முதலே யாழ்கள அண்ணாக்கள் எழுதிட்டினம்,

இருந்தாலும்

இதிலயே ஏதும் புது முறை தெரிந்தால் எழுதுங்க ;)

புதுமுறை ஒன்று கண்டு பிடித்துள்ளேன் அது கிண்ணஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன் பத்திரிகையில் வரும் பின்பு அதை எழுதுறன் மற்றும்படி நல்லா சாப்பிடுவன்.......தூயா சாப்பாடு இருந்தால் பொதிகட்டி அனுப்புங்கள் உண்டியலில் காசு அனுப்புறன் ....கடையில வேண்ட சொல்லக்கூடாது ஏன் என்றால் உங்கள் கைப்பக்குவம் இருக்காது அதுதான்.....எப்படி தயாரா?

Link to comment
Share on other sites

புதுமுறை ஒன்று கண்டு பிடித்துள்ளேன் அது கிண்ணஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன் பத்திரிகையில் வரும் பின்பு அதை எழுதுறன் மற்றும்படி நல்லா சாப்பிடுவன்.......தூயா சாப்பாடு இருந்தால் பொதிகட்டி அனுப்புங்கள் உண்டியலில் காசு அனுப்புறன் ....கடையில வேண்ட சொல்லக்கூடாது ஏன் என்றால் உங்கள் கைப்பக்குவம் இருக்காது அதுதான்.....எப்படி தயாரா?

என்னை ரொம்ப தான் கலாய்க்கிறிங்க..

சகோதரனிடம் காசா...!!!!

சும்மாவே தாறேன் [பரிசோதனைக்கு ஒரு எலி கிடைச்சிடிச்சு] :) :)

Link to comment
Share on other sites

சகோதரனிடம் காசா...!!!!

சும்மாவே தாறேன் [பரிசோதனைக்கு ஒரு எலி கிடைச்சிடிச்சு] :) :)

நல்லா இருக்கு நான் கிண்னெஸ் சாதனைக்கு போராடுகிறன் தூயா என்னென்றால் எலியாக்கி பரிசோதனை செய்கிறா இதை யாரும் கேளுங்கோ தூயவின் துரோகத்தை சாப்பாடுதான் கேட்டேன் வேற ஒன்றும் கேட்கவில்லை ..............................தூயா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவரை பயன்படுத்தும் எங்கள் பாடசாலை ஆசிரியர் நான் பிடித்து தரலாம் ......பிரச்சனையில்லை..சரியா?

Link to comment
Share on other sites

:)சபாஷ்.... சரியான போட்டி.... இப்படி யாரும் பதில் எழூதி நான் பார்த்ததில்லை..... பாட்டியும் பேரனும் விட்டுக்கொடுக்கிறதா தெரியல.....

Link to comment
Share on other sites

:Dசபாஷ்.... சரியான போட்டி.... இப்படி யாரும் பதில் எழூதி நான் பார்த்ததில்லை..... பாட்டியும் பேரனும் விட்டுக்கொடுக்கிறதா தெரியல.....

உங்களைத்தான் நான் இராசாவீதியில் கண்டனான் அப்ப சின்னதுப்பாக்கியுடன் நின்றனியல் அதைவைத்து என்ன செய்தனியல் :D:D

[தண்ணித்துப்பாக்கி] :):)

Link to comment
Share on other sites

அப்பப்பா.....துவக்கோ.... பயந்திட்டன்.....( திருவிழாவில கூட வேண்டினதில்ல.....) :):D:)

Link to comment
Share on other sites

அப்பப்பா.....துவக்கோ.... பயந்திட்டன்.....( திருவிழாவில கூட வேண்டினதில்ல.....) :):D:)

பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் நான் கண்டனான் நீங்கள்தான்.....

எனது கனினி கொஞ்சம் பிரச்சனை தீர்த்துவிடுவீர்களா....http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894 இதில் உள்ளது

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு நான் கிண்னெஸ் சாதனைக்கு போராடுகிறன் தூயா என்னென்றால் எலியாக்கி பரிசோதனை செய்கிறா இதை யாரும் கேளுங்கோ தூயவின் துரோகத்தை சாப்பாடுதான் கேட்டேன் வேற ஒன்றும் கேட்கவில்லை ..............................தூயா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவரை பயன்படுத்தும் எங்கள் பாடசாலை ஆசிரியர் நான் பிடித்து தரலாம் ......பிரச்சனையில்லை..சரியா?

எனக்கு வேண்டியது ஒரு எலி...ச்சே ஒரு ஆள்..சாப்பிட்டு பார்த்து உயிரோட இருக்காங்களான்னு பார்க்க..

அது அண்ணன்கள் என்றால் வசதி [பின்னாடி வழக்கு வக்கில் என ஆகிடக்கூடதில்ல] ;)

Link to comment
Share on other sites

அட.."முட்டை பீஸாவோ" பார்க்க நன்னா தான் இருக்கு :D ..(சாப்பிடா பிறகு தங்கச்சி)...அட வழமையா நம்மளிற்கு "பீஸா" சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சு :D ..ஒன்னு செய்வோமோ நீங்க செய்து தாங்கோநான் சாப்பிடுறன் என்னால உப்படி எல்லாம் செய்ய ஏலாது என்னு தெரியும் தானே.. :D

ம்ம்..செய்முறைக்கு நன்றி தூயிஸ்..(எப்ப நேக்கு செய்து தருவியள் என்று சொல்லவில்லை :D )...அட நேக்கு முட்டை விருப்பமில்லை அல்லோ உது எப்படி இருக்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏன் இந்த கொலைவெறி? ;)

அப்படி செய்தால் அதுக்கு பேர் முட்டை கொத்து...முட்டை கொத்து ரொட்டி என்றால் அதில ரொட்டி இருக்கணுமே ;) :D

இல்ல தூயா ஒரு சின்ன மாற்றம் - முட்டைக் கொத்து ரொட்டி அல்ல - அதிண்ட பெயர் முட்டைக் கொத்து!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.