Jump to content

சீனிச்சம்பல்


Recommended Posts

seenisambal.jpg

வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன்.

சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க வேண்டியிருக்கு. சீனிசம்பல் என பெயர் இருந்தாலும் இதில் வெங்காயம் தான் முதன்மை வகிக்கின்றது.

உச்சரிக்கும் போது “சீனிச்சம்பல்” என சொல்லலாம்.

பொதுவா எந்த வித வெங்காயத்திலும் சீனிசம்பல் செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் செய்வது போல சுவை வேறெதெற்கும் கிடையாது என்றத ஒத்துக்கொண்டே ஆகணும்.

எங்க அண்டை நாட்டுக்காரங்கள் செய்யும் சீனிசம்பல் இன்னும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். உண்மைய சொல்லணும் என்றால் நாங்க செய்ற சீனிசம்பலின் சுவையை விட, இலங்கையில் செய்யும் சீனிசம்பலுக்கு ருசி அதிகம் போலவே எனக்கு தோன்றும். அதிலும் அவங்கட அப்பமும், சீனிசம்பலும் சாப்பிட்டவங்க அந்த சுவைக்கு அடிமையாகாம இருக்கவே முடியாது.

சீனிசம்பல் செய்யும் முறை பொதுவாக ஒன்று தான் ஆனால் ஒவ்வொரு பிரதேசக்காரரும் கொஞ்சம் வித்தியாசமா செய்வாங்க. அதில சுவை சிலவேளை முற்றும் மாறிப்போகும். பொதுவான செய்முறையை எழுதிவிட்டு, பின்னால் சுவையை சற்றே மாற்ற கூடிய சின்ன சின்ன மாற்றங்களையும் எழுதிகின்றேன்.

தேவையானவை:

வெங்காயம் – 5

மாலைதீவு மீன் – 1 மே.க

மிளகாய்தூள் – 1 மே.க

ஏலக்காய் – 5

கறுவா பட்டை – 1

புளிகரைசல் – ¾ மே.க

தேங்காய் எண்ணெய் – 3 மே.க

சீனி – 1 மே.க

கறிவேப்பிலை கொஞ்சமா போடலாம். போடாட்டியும் குற்றமில்லை.

உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக்குங்க

எப்படி செய்யணும்னு பார்ப்பம்:

1. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி எடுத்துக்குங்க.

2. ஒரு சட்டியில் 1 மே.க தேங்காய் எண்ணெயை சற்று கொதிக்க வையுங்க.

அதில கறுவா+ஏலக்காய்+கறிவேப்பிலை+ம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த சம்பல் இது. இன்று மாலையே இதனை செய்ய உத்தேசம். குறிப்புக்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

எனக்கு மிகவும் பிடித்த சம்பல் இது. இன்று மாலையே இதனை செய்ய உத்தேசம். குறிப்புக்கு நன்றி தூயா.

:lol: செய்துபார்த்துசொல்லுங்க சிறி :(

Link to comment
Share on other sites

பாடசாலையில படிக்கேக்க இடைவேளை நேரத்தில அடிபட்டு நெரிபட்டு சிற்றூண்டிச்சாலையில சீனிச்சம்பல் பாண் வேண்டுறனாங்கள். இப்ப பழைய நினைவு தான் வருது இதைப் பார்க்கேக்க. தூயா....... நன்றி இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

பாடசாலையில படிக்கேக்க இடைவேளை நேரத்தில அடிபட்டு நெரிபட்டு சிற்றூண்டிச்சாலையில சீனிச்சம்பல் பாண் வேண்டுறனாங்கள். இப்ப பழைய நினைவு தான் வருது இதைப் பார்க்கேக்க. தூயா....... நன்றி இணைப்புக்கு.

மாலுபாண் போல சைவமாக செய்வது தானே சீனிசம்பல் பாண்??

Link to comment
Share on other sites

மாலுபாண் போல சைவமாக செய்வது தானே சீனிசம்பல் பாண்??

இதில மாசி போடுவினம்....

Link to comment
Share on other sites

இதில மாசி போடுவினம்....

போடாமலும் செய்வாங்க தானே

Link to comment
Share on other sites

பாப்ஸ் இது என்ன பட்த்தில இருக்கிறது சீனிச்சம்பல் தானோ? பாக்க பீட்ருட் மாதிரி இருக்கே? :D:D

நன்றிகள் செய்முறைக்கு இங்கால பக்கத்தில மசாலா இன்னில போடுறாங்கள் சீனிச்சம்பல் பன் aந்த மாதிரி இருக்கும்... :D

Link to comment
Share on other sites

பாப்ஸ் இது என்ன பட்த்தில இருக்கிறது சீனிச்சம்பல் தானோ? பாக்க பீட்ருட் மாதிரி இருக்கே? :D:D

நன்றிகள் செய்முறைக்கு இங்கால பக்கத்தில மசாலா இன்னில போடுறாங்கள் சீனிச்சம்பல் பன் aந்த மாதிரி இருக்கும்... :D

பெரிய வெங்காயத்தில் செய்தால் இப்படித்தான் இருக்கும் சுந்து.. ;)

மசாலா இன்னில் தானே ஆடுகறியெல்லாம் சாப்பிட்டிங்க/

Link to comment
Share on other sites

நாங்க புளி சேர்ப்பதில்லை. இது வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பொதுவா எந்த வித வெங்காயத்திலும் சீனிசம்பல் செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் செய்வது போல சுவை வேறெதெற்கும் கிடையாது என்றத ஒத்துக்கொண்டே ஆகணும்.

உண்மை தூயா. உங்கள் இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில மாசி போடுவினம்....

அப்போ, தூயா மாலைதீவு மீன் என எழுதியது மாசிக்கருவாடு இல்லையோ?

தூயா, என்ன புளி விடுறது? தேசிக்காயோ இல்லாட்டி பழப்புளியோ?

Link to comment
Share on other sites

இஞ்ச கனடாவில தமிழ் கடைகளில நல்ல சீனிச்சம்பல் போத்தலில வாங்கலாம். கடையில அப்பம் வாங்கேக்கையும் சீனிச்சம்பல் தருவாங்கள் எண்டு நினைக்கிறன்.

வீட்டில அம்மா, அக்கா இடைக்கிடை செய்வீனம். நல்லா இருக்கும். அப்பம், சப்பாத்தி, ரொட்டி, பாண், இடியப்பம் எண்டு எல்லாத்தோடையும் சீனிச்சம்பல கலந்து அடிக்கலாம்.

சீனிச்சம்பல் எக்கச்சக்கமா சாப்பிட்டால் நம்பர் ரெண்டு அந்தமாதிரி இழுத்து அடிக்கும் எண்டு நினைக்கிறன். எண்டபடியால் கவனம். தூயா சம்பல் எண்டு சொன்னாலே இப்ப கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிது எண்டு நான் சொல்ல இல்ல.

சுண்டு சொன்னமாதிரி தூயா உங்கட சம்பல் பீற்றூட் போட்டு செய்தமாதிரி இருக்கிது. எப்பிடி அப்பிடி நீளமா இருக்கிது? அவுஸ்திரேலியாவில வெங்காயம் இப்பிடியோ இருக்கும்?

Link to comment
Share on other sites

அப்போ, தூயா மாலைதீவு மீன் என எழுதியது மாசிக்கருவாடு இல்லையோ?

தூயா, என்ன புளி விடுறது? தேசிக்காயோ இல்லாட்டி பழப்புளியோ?

மாசிக்கருவாடு = மாலை தீவு மீன்.

புளிக்கரைசல் என்றால் பழப்புளி தான் :D

சீனிச்சம்பல் எக்கச்சக்கமா சாப்பிட்டால் நம்பர் ரெண்டு அந்தமாதிரி இழுத்து அடிக்கும் எண்டு நினைக்கிறன். எண்டபடியால் கவனம். தூயா சம்பல் எண்டு சொன்னாலே இப்ப கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிது எண்டு நான் சொல்ல இல்ல.

சுண்டு சொன்னமாதிரி தூயா உங்கட சம்பல் பீற்றூட் போட்டு செய்தமாதிரி இருக்கிது. எப்பிடி அப்பிடி நீளமா இருக்கிது? அவுஸ்திரேலியாவில வெங்காயம் இப்பிடியோ இருக்கும்?

இது பெரிய சிவப்பு வெங்காயம்.

ஒஸ்திரேலியாவில் இருக்கும் பல வகை வெங்காயத்தில் இதுவும் ஒன்று..:wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.