Jump to content

செல்வி சிவராமலிங்கம் யாமினி


Recommended Posts

பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர பரிதாபப்பட வேண்டியவர்களல்ல

yaminiwv5.jpg

(`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி சிவராமலிங்கம் யாமினி கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை `தினக்குரல்'க்காக நேர்கண்டபோது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.-கனகரவி- )

கேள்வி: நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்?

பதில்: இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள், பெண்கள் மனதளவில் சோர்ந்துபோய் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தைக் கூடப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி விடுவார்கள் என்பதால் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

கேள்வி: வவுனியா மாவட்டத்தில் முதல் நாவல் ஒன்றை வெளியிட்ட உங்களுக்கு எப்படி வரவேற்பிருந்தது?

பதில்: நாவலை வெளியிட்ட பின் என் உறவினர்கள், நண்பர்கள் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். எனது சிறிய தந்தையார் எனக்கு ஆயிரம் ரூபா பரிசளித்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆனால், எனது வீட்டில் நிலைமை வேறு மாதிரியிருந்தது. படிக்கிற காலத்தில் நான் கதையெழுதியதால் நான் பேனா, பேப்பர் எடுக்கிற நேரமெல்லாம் என்ற பெற்றோர் முறைத்துக் கொண்டேயிருந்தார்கள். பின் என் தாயார் எழுத்துத்துறையில் எனக்கிருந்த நாட்டத்தை புரிந்துகொண்டும் `இப்போது படி. உயர்தரப் பரீட்சை எடுத்த பின் எழுது' என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்தார். மீரா வெளியீட்டகத்தினரோடு தொடர்பு கொண்டு எனது நாவலை பிரசுரிப்பதற்காக அனுப்பியபோதும் எனது தந்தையார் சற்றும் இறுக்கம் குறையாமல் `சரி, இந்த ஒன்று போதும். இனிமேல் படி' என்று சொல்லிவிட்டார். எழுத்துத் துறையில் நாட்டமுள்ள எனது அம்மாவுக்கு உள்ளூர கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சற்று இறுக்கமாகவே இருந்தார். பெற்றோருக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தைச் செய்கிறேனே என்ற தயக்கமும் சங்கடமும் எனக்குள் நிறையவே இருந்தது. இருந்தாலும், புத்தகமாக வெளியான என் நாவலை மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் காட்டியபோது அவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெருமிதமும் எனக்குத் தந்த பூரிப்போடு புத்தகத்தை அப்பாவிடம் கொடுக்க, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அதை வாங்கி மேசையில் வைத்துவிட்டு `பி.பி.சி.' கேட்பதற்கு ஆயத்தமானார். நான் வந்த சுவடு தெரியாமல் மெதுவாக அறைக்குள் மறைந்து கொண்டேன். சற்று நேரம் கழித்து மெதுவாக எட்டிப்பார்த்தபோது, வானொலி தன்பாட்டில் செய்தி சொல்லிக் கொண்டிருக்க கதை, கவிதை எதிலும் நாட்டமேயில்லாத அப்பா என் புத்தகத்தில் மூழ்கிப்போயிருந்தார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதைக் கருதுகிறேன். இதைவிட, வேறென்ன பாராட்டு வேண்டும் எனக்கு!

கேள்வி: பக்தி இலக்கியங்கள் படைப்பதில் ஆர்வம் காட்டுவதனை அறிய முடிகின்றது. எவ்வகையான வெளியீடுகளைச் செய்துள்ளீர்கள்?

பதில்: `சக்திப்ரதாயினி', 'யாதுமாகி நின்றாய்' ஆகிய இரு பக்திக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். இரண்டிலும் உள்ள கவிதைகள் அம்பாளுக்காகவும் விநாயகருக்காகவும் எழுதப்பட்டவை. இக்கவிதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் நான் மனதால் உணர்ந்து உருகி எழுதியவை.

கேள்வி: ஆன்மீகம் மீது ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?

பதில்: என் பெற்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அத்துடன், எமது வீடு ஆலயங்களின் அயலில் இருப்பதால் அடிக்கடி ஆலயத்திற்குச் செல்லவும் வழிபடவும் பூசை, புனஸ்காரம் என்றிருக்கிற ஆலயச் சூழலில் இருக்கவும் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் ஆன்மீகத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாகின.

கேள்வி: எழுத்துத் துறையில் ஈடுபாடுடைய நீங்கள், சமூகம் சார்ந்த விடயங்களை எவ்வளவு வெளிக்கொணர்ந்தீர்கள்?

பதில்: எனது முதல் நாவலிலேய சமூகம் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறேன். பெண்களைப் போகப்பொருளாக நினைத்து அவர்களின் சந்தோஷத்தை, நிம்மதியை வாழ்க்கையைச் சின்னாபின்னப்படுத்தும் ஆண்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். வவுனியா இலக்கிய மலரான "கலைமருதத்தில்" பிரசுரமாகிய "தாலி" என்ற சிறுகதையில் விதவைப் பெண்களை ஒதுக்கி வைக்கின்ற இந்தச் சமூகத்தின் மீது கோபப்பட்டிருக்கின்றேன். `துவாரகா' என்கிற சிறுகதையில் மதவெறியைச் சாடியிருக்கிறேன்.

கேள்வி: குறிப்பாக, பெண் என்ற வகையில் பெண்களுடைய தேவைகள், பாதிப்புகள் போன்றவற்றை படைப்பிலக்கியங்களூடாக வெளியிட்டுள்ளீர்களா?

பதில்: ஆம், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல `நிலவே நீ மயங்காதே'யில் தனது கண்ணியத்தைப் பற்றியோ, பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை பற்றியோ கொஞ்சம்கூடக் கவலைப்படாது பெண்களைப் போகப்பொருளாக நினைத்துக் கொள்ளும் ஆண்களினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கூறியிருக்கிறேன்.

தொடர்ந்தும் எனது எழுத்துகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் தேவைகள் பற்றி மட்டுமன்றி, சமூகத்தின் சகல வர்க்கத்தினரினதும் தேவைகள், பாதிப்புகள் பற்றியும் எழுதுவேன் என்பதை இங்கே குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி: அரச திணைக்களத்தில் எத்தனை ஆண்டு காலம் கடமையாற்றினீர்கள். குறுகிய காலத்துக்குள் ஓய்வு பெற்றமைக்குக் காரணம் எதுவும் உள்ளதா?

பதில்: 13 வருட காலம் அரச திணைக்களத்தில் கடமையாற்றிவிட்டேன். இத்தனை காலமும் கோவைகளுடனும் பதிவேடுகளுடனும் கடமையாற்றிய எனக்கு உளவளத்துணையாளரானதும் உணர்வுக் குவியல்களாகவுள்ள மனிதர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பம் அமைந்தபோது அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

கேள்வி: பழைமைகள் பேணப்பட வேண்டும் என்று பெண்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள். குறிப்பிட்டுக் கேட்பதாக இருந்தால், விதவை என்று பெண்களை அடையாளப்படுத்துவது போல் ஆண்களுக்கு இல்லையல்லவா. எனவே, இவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பழைமைகள் பேணப்பட வேண்டுமென்பதற்காக எந்தவொரு நல்ல விடயத்துக்கும் முட்டுக்கட்டை போடுவது சரியல்ல. விதவைப் பெண் என்று பொட்டில்லாது, பூவில்லாது ஏன் மேல் சட்டை (Blouse) கூட இல்லாது வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்றிருந்த காலமும் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அவ்வளவுக்கு மோசமாக இல்லை. குங்குமமும் பூவும் வைப்பதில்லையே தவிர, கலர்ப்புடவையுடன் எங்கு வேண்டுமானாலும் போய் வருகிறார்கள். சில பெண்கள் தைரியமாக குங்குமம், பூக் கூட வைத்துக் கொள்கிறார்கள். விதவைகள் மறுமணம் கூட நடைபெற்று வருகின்றன. அந்தளவுக்கு சமூகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது சந்தோஷப்படக் கூடிய, வரவேற்கத்தக்க விடயம். ஆனாலும், அன்றும் சரி இன்றும் சரி, சமூகம் கணவனை இழந்த பெண்கள் மீது செலுத்தும் அளவுக்கு மனைவியை இழந்த ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. தபுதாரர்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோ அவர்கள் மீது நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றோ, சொல்லவில்லை. விதவைகளை ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்காதீர்கள் என்றே சொல்கிறேன்.

கேள்வி: சீதனம் வாங்குவது, கொடுப்பது பற்றி எழுத்தாளர் என்ற வகையில் உங்கள் கருத்து?

பதில்: சீ- தனம் என்று சொல்லும் போதே இது விரும்பப்படாத தனம் என்பது தெளிவாகிறது. பிறகெதற்கு அதைக்கேட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்? பெற்றவர்கள் தங்களிடம் பணம், பொருள் இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்குக் கொடுக்கத்தானே போகிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டதை, அவர்களால் முடிந்ததை அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கட்டும் என்று ஒதுங்கி விடுவது நாகரிகம். இதை விடுத்து, இவ்வளவு தர வேண்டும், தந்தால் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லி பெண்ணின் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஓட ஓட விரட்டி அலைக்கழித்து, சீதனம் வாங்கி கல்யாணம் செய்தால் அந்தப் பெண்ணின் மனதில் இதெல்லாம் வேதனையாக, சங்கடமாக இருக்குமல்லவா. பிறகெப்படி அங்கே அந்நியோன்யமான குடும்ப வாழ்க்கை அமையும்? ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இது வெடிக்கத்தானே செய்யும். இருக்கின்ற ஒரேயொரு மகனுக்குக் கூட 15 இலட்சம், 20 இலட்சம் என்று சீதனம் வாங்கி தங்களது பெயரில் வங்கியில் போட்டுவிட்டு இருக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள்தானே. பெற்றவர்கள், இதைச் செய்யாதே. இதைச் செய் என்றால் கேட்டு நடக்காத ஆண்கள், இந்த ஒரு விடயத்தில் மட்டும் பெற்றோரின் சொல் மீற மாட்டேன் என்பது மிகவும் வேடிக்கையானதொரு செயலாக இருக்கின்றது.

ஆனால், இவ்வாறெல்லாம் சீதனம் வாங்கும்போது தமது நிலைமை தான் படுமோசமாகப் போய்விடுகிறது என்று எந்த ஆணும் புரிந்து கொள்வதில்லை. இதை நினைக்கும்போது ஆண்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன்.

என் பிள்ளை டொக்டர். எனவே, இவ்வளவு தர வேண்டும். என் பிள்ளை இஞ்ஜினியர் எனவே இவ்வளவு தர வேண்டும் என்று தங்களது பிள்ளையைப் படிக்க வைத்ததற்கும் வளர்த்ததற்கும் இதர செலவுகளுக்குமாகவென்று பெற்றோர் பேரம் பேசி விற்றுவிடுகிறார்கள். இது ஒரு ஆட்டையோ, மாட்டையோ வளர்த்து விற்பதைப் போன்றதுதானே. அதுவரை காலமும் என் அப்பா, என் அம்மா, என் சகோதரம் என்றிருந்த அத்தனை சொந்தமும் அவனை ஒரு விற்பனைப் பொருளாக்கும் அந்த நிமிடத்தில் உணர்வு ரீதியாக இல்லாமல் போகின்றது. அவன் அங்கே ஒரு பொருளாக நிற்கிறானேயன்றி, உறவாக இல்லை. இந்த நிலையில் அந்த ஆண்மகனை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன். அவனது நிலைமையை நினைத்த அவன் மீது பரிதாபப்படுகின்றேன்.

இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுக்கொள்ள பிரிப்படுகின்றேன். என் சகோதரனை எந்தவொரு நிமிடத்திலும் நான் பேரம் பேசவில்லை. விற்பனை செய்ய முயலவில்லை. எப்போதும் நான் அவருக்கு சகோதரியாகவே இருக்கிறேன்.

கேள்வி: சமூகத்தில் ஆண்-பெண் சமமாக வாழ வேண்டுமெனின்; ஆண்களும் பெண்களும் என்ன செய்ய வேண்டும்?

பதில்: முதலில் பெண்களும் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், திறமைகள் உள்ள மனிதர்கள் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிப்பதுவும் அவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுவும் நாகரிகமான செயலென்றும் அது ஒன்றும் தரக்குறைவான செயலல்ல என்பதையும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தமக்குச் சமமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஆண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாம் ஆண்களுக்கு அடுத்த இடத்தில் (இரண்டாம் பட்சத்தில்) உள்ளவர்கள், ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அடியோடு உதறி தங்களால் எதுவும் முடியும் என்பதையும் தாங்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதையும் சகல பெண்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் பல துறைகளிலும் மேலும் முன்னேற வேண்டும்.

கேள்வி: பெண் செல்வியாக இருக்கும்வரை தந்தையின் பெயர் முதலெழுத்தாக இருக்கும். திருமணம் செய்து விட்டால் கணவனின் பெயர் தான் முதலெழுத்தாக இருக்கிறது. இதுபோன்றதல்ல ஆண்களுக்கு. இது பற்றி சமூகத்தில் தர்க்கம் உள்ளது. இது விடயத்தில் தங்களின் கருத்தென்ன.

பதில்: இது நல்லதொரு கேள்வி. ஆனால், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முன் செல்வி, திருமதி என்பதனால் குறிப்பிடப்படுவது என்ன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வி, திருமதி என்பவை ஒருவருடைய வாழ்வியல் நிலை மாத்திரமேயன்றி, இன்னாருடைய மகள் அல்லது இன்னாருடைய மனைவி என்பதைக் குறிப்பிடுவதல்ல. அத்துடன், ஒரு நபருக்கு எப்போதும் முதலெழுத்து என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். எனவே, பெண்கள் எப்போதும் தந்தையின் பெயரை முதலெழுத்தாகக் கொள்வது சரியென்றே நான் கருதுகிறேன். சிங்களப் பெண்கள் பலரும் திருமணத்தின் பின்பும் தந்தையின் பெயரையே முதலெழுத்தாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.

தவிர, குழந்தையின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் தாயின் கன்னிப் பெயரே கேட்கப்படுகிறது. ஆனால், தற்போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாத சிலர், கன்னிப் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கணவனின் பெயரைச் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி: ஆன்மீகத்திலும் ஈடுபாடு இருப்பதனால் இந்தக் கேள்வியைக் கேட்கலாமென்று எண்ணுகின்றேன். பசு வதை பற்றிப் பேசுகின்றவர்கள் பாலைக் கறந்தெடுத்துவிட்டு பசு பால் தருகிறது என்று சொல்வது பற்றி?

பதில்: பசு வதை என்பது பசுவை வதைப்பது. பசுவை அடித்தோ, பிறவழிகளில் வதைத்தோ அதன் கன்றுக்குப் போதிய பாலை வழங்காமல் முழுப்பாலையும் கறந்தெடுப்பதுதான் பசு வதை. பசுவையும் கன்றையும் நல்ல முறையில் பராமரித்து அவற்றுக்குப் போதிய ஆகாரத்தையும் வழங்கி கன்றுக்குப் போதிய பாலை வழங்கி மீதமுள்ள பாலைக் கறந்தெடுப்பது பசு வதையல்ல என்றே நான் கருதுகிறேன். இது வதையென்றால் மரங்கள், செடிகளிலிருந்து காய்களையும் கனிகளையும் இலைகளையும் பறித்தெடுப்பதை என்னவென்பது?

(ஆனாலும் பசு பால் தருகிறது என்பதை பசுவிடமிருந்து பாலைப் பெறுகிறோம் என்று திருத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், பசு பாலைத் தராது ஒளித்து விட்டால், எம்மால் பெற்றுக் கொள்ள முடியாதே.)

கேள்வி: பெண்களின் கண்ணீர் ஓர் ஆயுதம் என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. பெண்கள் அழுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஒரு காரியம் நிறைவேறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களின் பக்கமிருக்கிற நியாயத்தால் அவர்களின் திறமையால் ஒரு காரியம் நிறைவேறுவதே மரியாதையான விடயம். பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர; பரிதாபப்பட வேண்டியவர்களல்ல.

கேள்வி: உளவளத்துணை கற்றவர் நீங்கள். தொலைக்காட்சித் தொடரில் கண்ணீர்க் காவியங்கள் பெரும்பாலும் அநேகரின் பொழுதுபோக்காக இன்றுள்ளது. இது சமூகத்தில் முன்னேற்றத்தையா, பின்னடைவையா ஏற்படுத்தும்?

பதில்: முன்னேற்றம், பின்னடைவு என்று ஒட்டுமொத்தமாக அத்தனை தொடர்களுக்கும் சொல்லிவிட முடியாது. தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கக் கூடியவை, சகிக்கக் கூடியவை, சகிக்க முடியாதவை என்று மூன்றாக வகைப்படுத்தலாம். இவற்றுள் முதலாவது பிரிவை எடுத்துக்கொண்டால் இவற்றுள் சமூகம் சார்ந்த விடயங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் என்பதோடு தைரியம், தன்னம்பிக்கை, பாசம், பொறுப்புணர்ச்சி போன்ற நல்ல விடயங்களையும் இவை எடுத்துச் சொல்கின்றன. அத்துடன், மதிக்கப்படக் கூடிய இயல்பான பாத்திரப் படைப்புகள் பார்ப்பவரின் ஆளுமையில் ஒரு நேர்க்கணிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நீண்ட காலத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலை இருந்தாலும் இவ்வகைத் தொடர்கள் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.

இரண்டாம் வகையைப் பற்றிச் சொல்லவதானால் இவை தைரியம், தன்னம்பிக்கை, விடா முயற்சி, நட்பு என்று நல்ல விடயங்கள் சிலவற்றை எடுத்துச் சொன்னாலும் தொட்டதற்கெல்லாம் கண்ணைக் கசக்குவதும் படு மட்டமான சிந்தனைகள், செயல்கள் கொண்ட கதாபாத்திரங்களும் அவற்றின் பக்குவப்படாத முடிவுகளும் என்று பார்ப்பவர்களுக்குச் சற்று எரிச்சல் மூட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றினால் சமூகத்திற்குச் குறிப்பிட்டுச் சொல்கின்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.

சகிக்க முடியாதவை பற்றிச் சொல்வதென்றால் முட்டாள் தனமாக யோசித்துச் செயற்படும் கதாபாத்திரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் என்று பார்ப்பவர்களை முட்டாள்களாக்குவதோடு எரிச்சல் மூட்டுபவனவாகவும் உள்ளன. இவற்றினால் சமூகத்தில் முன்னேற்றம் என்று எதுவும் இல்லை.

ஆனால், தொடர்களுக்காகத் தினமும் நீண்ட நேரம் செலவிடப்படுவதால் இவை சமூகப் பின்னடைவுக்கு வழிகோலுகின்றன.

கேள்வி: தங்களின் வழிகாட்டியாக யாராவது உள்ளனரா?

பதில்: எனது தாயார் இருந்தவரை சிறந்த வழிகாட்டியாவும் நண்பியாகவும் இருந்தார். 1997 இல் அவர் இறைவனடி சேர்ந்ததும் எனக்கு வழிகாட்டியென்று யாரும் இல்லை.

கேள்வி: எழுத்துலகில் இன்னும் எந்த மாதிரியான வெளியீடுகளை செய்யவுள்ளீர்கள்?

பதில்: கவிதைத் தொகுப்பு ஒன்று, சிறுகதைத் தொகுப்பு ஒன்று மற்றும் சில நாவல்களை வெளியிடுவதாக இருக்கிறேன்.

கேள்வி: எழுத்து சோறு போடுமா என்று கேட்பார்கள். உங்களுடைய படைப்புகளைப் படிப்பாளிகளிடம் முழுமையாக விநியோகிக்க முடிந்ததா?

பதில்: `நிலவே நீ மயங்காதே' நாவல் மீரா வெளியீடாக வெளிவந்ததால் அதன் விநியோகப் பொறுப்பு என்னைச் சார்ந்திருக்கவில்லை. `சக்திப்ரதாயினி', `யாதுமாதிரி' நின்றாய் என்பவை பக்திக் கவிகைதள் என்பதாலோ என்னவோ 95 சதவீதமானவை படிப்பாளிகளிடம் போய்ச் சேர்ந்துவிட்டன. ஆனால், இதை எல்லா வெளியீடுகளிலும் எதிர்பார்க்க முடியாது. ஒரு படைப்பை வெளியிடுவதென்பது இலகுவானதல்ல. இதில் பணம் என்பது ஒரு பெரிய பிரச்சினை. ஒரு படைப்பை வெளியிடுவதற்கே பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. இத்தனையையும் கடந்து புத்தகங்களை வெளியிட்டால் இவற்றை விநியோகிப்பது பெரும்பாடாக இருக்கிறது. இது சகல எழுத்தாளர்களுக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இதனாலேயே பல எழுத்தாளர்களின் பல படைப்புகள் நூலுருப் பெறாமலேயே இருந்து விடுகின்றன. இது புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கும் உருவாகியவர்கள் வளர்வதற்கும் பெரிய தடையாக இருக்கின்றது.

கேள்வி: இலக்கிய உலகில் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது தான். ஆனாலும், பெண்களின் வரவு குறைவு. வந்தவர்களும் சிலர் ஒதுங்கி விடுவதனையும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, புதியவர்களின் வரவு தேவை என்ற வகையில் இலக்கிய உலகிற்குள் பெண்களை உள்வரவழைக்க எப்படியான கருத்தைச் சொல்லலாம்?

பதில்: எழுத்துத்துறையில் நாட்டமுள்ளவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். சமூகத்திற்குத் தாங்கள் சொல்ல விரும்புவனவற்றைத் தங்கள் எழுத்துகளின் மூலம் சொல்லிக் கொள்ளலாம். தங்கள் குடும்பச் சுமைகள், அலுவலகச் சுமைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடந்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு தைரியமாக எழுத்துலகில் பிரவேசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.