Jump to content

அம்பலத்தார் பக்கம்


Recommended Posts

நானும் வைத்தியர் மூர்த்தியிண்ட நிகழ்ச்சிகள் பார்க்கிறனான் அம்பளம் அங்கிள். இஞ்ச ரீவிஐ தொலைக்காட்சியில போறது. நிறைய விசயங்கள் பற்றி கதைக்கப்படும். கேள்வி கேட்கிற அந்த அக்காவும் அந்தமாதிரி கேள்விகள் கேட்டு கருத்துக்கள் சொல்லுவா. நல்ல ஒரு நிகழ்ச்சி. இதமாதிரி நோர்வேயில இருந்தும் ஒரு வைத்தியர் கதைக்கிறவர். பார்க்கிறனீங்களோ? அதுவும் நல்ல ஒரு நிகழ்ச்சி.

Link to comment
Share on other sites

அம்பலத்தார் யேர்மனியை விட்டு எங்கேன் ஆங்கில நாட்டுக்குப் போட்டாரோண்டு யோசிச்சன். மீண்டும் வந்துள்ளீர்கள். பழையபடி அம்பலத்தாரின் அனுபவங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம்.

பிற்குறிப்பு - செல்லம்மாக்காவை குறை சொல்லாமல் அம்பலம் கதை அரங்கு காணாதோ ? பாவம் செல்லம்மக்கா.

Link to comment
Share on other sites

அட எங்கட சாந்தியே! எங்கையடா பழைய சனங்கள் ஒண்டையூம் காணன் எண்டு பார்தனான்.

அன்போட சாந்தி ஓடிவந்து வரவேற்ற குரல் கேட்டது மிக்க மகிழ்ச்சியா இருக்குதம்மா.

இந்த வயதான காலத்தில நான் இனியெங்கை இன்னொரு நாட்டுக்குப் போகப்போறன்.

எல்லாம் நேரப்பற்றாக்குiறாதானம்மா காரணம்

" எத்தனை காலத்துக்குத்தான் இப்பிடியே அந்த அலுவல் இந்த அலுவல் எண்டு ஊராவீட்டுத்தொளவாரங்களையெல்

Link to comment
Share on other sites

வணக்(கம்) அம்பலத்தார் அங்கிள் :lol: ..என்ட பாட்டி கதை சொல்லுற மாதிரி நன்னா சொல்லுறியள் பாருங்கோ கேட்க ஆசையா இருக்கு :D ..ஆனா என்ன பாருங்கோ டீவியில போற சீரியல் மாதிரி கொஞ்சத்தோட நிற்பாட்டுறது தான் நன்னாவே இல்ல பாருங்கோ.. :D

அட கோழியில கையை வைக்கிறதோட கதையை நிற்பாட்டி போட்டியள்..கையை வைத்தனியளோ இல்ல அருமை செல்லமக்கா வந்து கையை தட்டி போட்டாவோ??... :)

சரி அங்கிள் நீங்க சொல்லுங்கோ கதையை நான் அப்பப்ப வாரேன் என்ன ^_^ இங்கால பக்கம் மற்றது அங்கிள் "அம்பலத்தார்" என்டா ஏதாச்சும் பொருள்படுமே இல்ல கேட்டனான் இருந்தா அதையும் ஒருக்கா சொல்லுங்கோ என்ன கோவிக்காம... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முக்குட்டி அங்கிளப் பார்க்கக் குட்டிக்காலாலை ஓடிவந்தனிங்களோடா செல்லம்.

மாமாக்கு வயசுபோட்டுதல்லோ

அதுதான் ஒரு இடத்தில கனநேரத்துக்கு இருக்கஏலாது அதுதான் கொஞ்சம் கொஞ்சமாச் சொல்லுறன்

அங்கையிங்கை ஓடி விளையாடிப்போட்டு அடிக்கடி சமத்தா இங்க வந்து கதையளைக் கேளுங்கோ என்ன?

ஜம்முக்குட்டி அம்பலத்தார் எண்டால் எல்லாத்தையூம் வெளியூலகத்துக்கு அம்பலமாக்கிறவர் எண்டு ஒரு கருத்து இருக்காம் என்ரை செல்லம்மா " உங்களால ஒரு விசயத்தையூம் மறைச்சு வச்சிருக்க ஏலாது பேருக்கு ஏத்தாப்போல எதை எவருக்குச் சொல்லுறதெண்டு தெரியாமல் எல்லா விசயத்தையூம் நாலுபேருக்குமுன்னாலை போட்டு உடைச்சுப்போட்டுத்தான் நிப்பியள்" எண்டு அடிக்கடி திட்டிறவ.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வாட்டின கோழியைக் கடிப்பமென்று கையில எடுக்கேக்கைதான் ஞாபகத்துக்கு வந்தது நான் சந்திச்ச மனிசரைப் பற்றிச் சொல்லுறதுக்கு கதைகதையா விசயம் இருக்கென்று....

எனது அப்பா தன்ரை இருபதாவது வயசில வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து அறுபத்தேழு வயசில் ஓய்வூ பெறுகிறவரை கொழும்பில ஒரு அரசாங்கக் கந்தோரிலதான் வேலை பார்த்தவர். அதனால என்ரை தாயக வாழ்வின் பெரும்பகுதி தமிழருக்கு இணையாக சிங்களவருடனும் பிணைந்திருந்தது. அதிலிருந்து எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிற எண்ணப்பதிவூகளை சந்தித்த பழகிய தமிழ் மற்றும் சிங்கள மக்களை அவர்களின் குறை நிறைகளுடன் அந்தந்தக் காலகட்டத்தில் நான் பார்த்த ரசித்தமாதிரியே சிறு சிறு சம்பவங்களாகவே பகிர்ந்துகொள்கிறன். ஆனாலும் ஒவ்வொரு எண்ணப் பொறிக்கும் நிறையக் கற்பனைமெருகேற்றிக் கதை மாந்தர் வேறுபட்ட கதைப்புலங்களில் புனைபெயர்களிலேயே உலாவருவார்கள்.

இனி விடயத்துக்கு வருவம்...............

ஒவ்வொருவரரும் ஒவ்வொரு காலகட்டத்தில அவரைப்போல வரவேணும் இவரைப்போல இருக்கவேணும் என்று ஆசைப்பட்டிருப்பம்.

அப்படி நானும் முதன்முதலா இவரைப்போல ஆகவேணும் இவராகவே வாழவேண்டும் என்று விரும்பியவர்..............

ஐயா!!

அட போயூம் போயூம் சினிமாக்கார சரத்குமாராகவோ? என்று முணுமுணுக்கிறது கேட்டது.

ஆனால் இது வேற ஐயா சொல்லுறன் கேளுங்கோ

இவர்..... சத்தியமா என்ரை அப்பாவூமில்லை!

அடடா இவர் எங்கட தோட்டத்தில வேலை செய்த ஐயாத்துரையைத்தான் சொல்லவாறாரெண்டு..... குசா குசுகுசுக்கிறதும் காதில விழுந்தது.

ஆனால் அவரும் இல்லை இவர்......

பொறுங்கோ பொறுங்கோ கோழி ஆறப்போகுது அதை ஒரு வழி பண்ணிப்போட்டுவாறன் கோவியாதையூங்கோ என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலத்தார்! உண்மையைச் சொல்லுங்கோ, நிசமாகவே கோழி பொரிச்சனீங்களோ அல்லது சும்மா எங்களுக்கு பந்தா காட்டுறீங்களோ? நாறல் மீனைப் பூனை பாத்த மாதிரி நானும் அப்போதிலிருந்து ....... !!!

நல்ல நடையில் எழுதுகிறீங்கள். வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.