Jump to content

உலகப் பகுத்தறிவாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகப் பகுத்தறிவாளர்கள் (சார்லஸ் பிராட்லா)

-சு.அறிவுக்கரசு

Page_09.jpg

உலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அமைந்திருந்தார் என்பதே தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில்தான் பிராட்லாவும் பிறந்தார். ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார். 1833 செப்டம்பர் 26இல் சார்லஸ் பிராட்லா லண்டனுக்குப் பக்கத்தில் ஹாக்ஸ்டன் எனுமிடத்தில் பிறந்தார். அவரின் தந்தை ஓர் ஏழை வக்கீல் குமாஸ்தா.

ஏழ்மையின் காரணமாக அதிகம் படிக்க வாய்ப்பில்லாததால் அவருடைய பள்ளிப் படிப்பு 11ஆம் வயதுடன் முடிந்து விட்டது. தன் தந்தை பணிபுரிந்த இடத்திலேயே இவரும் எடுபிடி வேலைகள் செய்யும் ஆபீஸ் பாய் ஆகப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து ஒரு நிலக்கரி நிறுவனத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். ஞாயிற்றுக்கிழமைப் பள்ளி என்பது, கிறித்துவ மதத்தைப்பற்றி சொல்லிக் கொடுக்கும் பள்ளி. பைபிளின் அடிப்படையில், பாடங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றைச் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சொல்லித் தரும் பணி. உலகத்தில் கிறித்தவர்கள் திங்கள் முதல் சனிவரை கர்த்தரையோ கிறிஸ்துவையோ பற்றி நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஞாயிற்றுக் கிழமை காலையில் பைபிளைக் கையில் தூக்கிக் கொண்டு ஆலயத்துக்குப் போய் இருவரையும் நினைத்து முணுமுணுப்பர். அதுபோலவே ஆறு நாள்கள் அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயன்படும் படிப்பை படிப்பவர்கள் ஏழாம் நாள் கடளுக்குப் பயப்படும் படிப்பைக் கற்க வேண்டும் என்பதற்காக இந்தப் பள்ளிகள்.

பாதிரியார் ஜான் கிரகாம் பாக்கர் என்பவர் 39 பாடங்களைக் கொடுத்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படி இளைஞரான பிராட்லாவுக்கு அறிவுரை கூறினார். பிராட்லாவும் பாடங்களை நடத்தினார். பைபிளில் இருந்தவற்றிற்கும் ஆங்கிலிகன் சர்ச் எழுதித் தந்துள்ள பாடங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன; சிலவற்றில் முரண்பாடுகளும் இருந்தன என்பதை அவர் உணர்ந்தார். தாம் உணர்ந்தவற்றைப் பற்றிப் பாதிரியாரிடம் விளக்கம் கேட்டார். வந்தது வினை!

மத நூல்களில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டும், நம்ப வேண்டும், கடை பிடிக்கவேண்டும். சந்தேகம் எழுந்தாலும் விளக்கம் கேட்டாலும் நாத்திகன், நிரீசுரவாதி என்றெல்லாம் பட்டம் (பழிச்சொல்) சூட்டப்படும். இதுதானே மதவாதிகள் இன்னும்கூட கைக் கொள்ளும் நடைமுறை? அந்த அடிப்படையில் பாதிரியார் பிராட்லாவைப் பழி சுமத்தினார். (உண்மையும் அதுதான்). ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

வேலையும் போய், மதத்திற்கு எதிரானவன் என்ற பட்டத்தையும் பெற்று வீட்டுக்கு வந்த மகனை தந்தை திட்டினார். மகன், தாம் தவறே செய்யவில்லை என்று வாதிட்டார். பைபிளின் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார். தந்தையின் காதுகளில் அது ஏறவில்லை.

பக்தி வந்தால்தான் புத்தி போய்விடும்! மகனின் நியாய வாதங்களை எதிர்கொள்ள மனமும், அறிவும் அற்ற அவரால் செய்ய முடிந்தது ஒன்றுதான்! தன் வீட்டிலிருந்து தம் மகனை வெளியேற்றிவிட்டார். வீட்டைவிட்டும் குடும்பத்தைவிட்டும் துரத்தப்பட்ட அவரை அரவணைத்துக் கொண்டவர் எலிசபெத் ஷார்ப்ள்ஸ் கார்லைல் எனும் அம்மையார். இவரின் கணவர் ரிச்சர்டு கார்லைல். அவர் புகழ்பெற்ற பகுத்தறிவாளரான தாமஸ் பெய்னின் ஏஜ் ஆஃப் ரீசன் (Age of Reason) எனும் வெளியீட்டை அச்சிட்டு வழங்கியவர். அதனால் மத நிந்தனைக் குற்றமும் அரசுத் துரோகக் குற்றமும் சுமத்தப்பட்டு 1819ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். ரிச்சர்டு கார்லைல் இறந்த பிறகும்கூட அவரது துணைவியார் எலிசபெத் அதே பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர். அவர் கண்களிலும் காதுகளிலும் சார்லஸ் பிராட்லா எனும் இளைஞனின் செயல்கள் தென்படவே இயல்பான கொள்கைப்பற்றால் ஆதரித்தார். அப்போது அவரின் வயது 16 தான்.

1840களில் ஜி.ஜே. ஹோலியோக் (Holy Oake) என்னும் பெயர் கொண்ட பகுத்தறிவாளர் இருந்தார். அவர் சவுத் வெல் (South Well) எனும் பகுத்தறிவுச் சிந்தனையாளர் எழுதிய (Oracle of Reason) (காரணியின் குரல்) என்ற ஏட்டின் கருத்துகளால் கவரப்பட்டவர். அந்த ஏடு மதத்தைப் பின்னியெடுத்த ஏடு. பைபிளைக் கடுமையாகக் கண்டனம் செய்த ஏடு. வெறுக்கத்தக்க வகையில் யூதர்களால் உருவாக்கப்பட்டது பைபிள் என்று பிரகடனப்படுத்திய ஏடு. எல்லா வகையிலும் மடத்தனமும் நிறைந்த ஒழுக்கங்கெட்டவர்களை உயர்த்திப்பிடிப்பதால் அறிவுள்ளவர்களால் வெறுக்கத்தக்கதுமானது பைபிள் என்று அறைந்து கூறிய ஏடு. காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு. சும்மா இருக்குமா மதம், மதம் கொண்ட அரசு? சவுத்வெல் கைது செய்யப்பட்டார். மத நிந்தனைக் குற்றம் புரிந்தார் என வழக்கு போடப்பட்டு, ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆனாலும் ஏடு தொடர்ந்து வெளி வந்தது. சிறை தண்டனை அளிக்கப்பட்ட பிறகு இரண்டு, மூன்று இதழ்கள் வெளிவந்தன. அதன்பின் ஹோலியோக் இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். காரணியின் குரலில் கடுமை சற்று குறைந்து வெளிவந்தது.

1842ல் சிறைப்பட்டிருக்கும் சவுத்வெல் வைக்கப்பட்டிருக்கும் பிரிஸ்டல் நகருக்கு நடைப்பயணம் புறப்பட்டார். வழியெங்கும் பிரச்சாரம். செல்டன்ஹாம் எனும் ஊரில் மதத்தைப்பற்றியும் கடவுளைப்பற்றியும் உரை நிகழ்த்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாளிதழ் ஒன்று எழுதும் அளவுக்கு அவரது பேச்சு அமைந்திருந்தது.

ஹோலியோக் கைது செய்யப்பட்டு குளூசெஸ்டர் நகரின் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டப்படி அவர் சிறைப்படுத்தப்படவில்லை என்று போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர்தான் எதிர் வழக்காடுவதற்காக அவரை விடுவித்தனர். லண்டனுக்குச் சென்று ரிச்சர்டு, கார்லைலைச் சந்தித்தார். அவர்மூலம் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டார். அவரது வழக்கு விசாரணையின்போது வாக்குமூலம் எனும் வகையில் தன் தரப்பு வாதங்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார். ஒன்பது மணிநேரம் பேசினார். அந்தப் பேச்சு அவரை விடுதலை செய்வதற்குப் பயன்படவில்லை; அவரது வாதத்திலிருந்த காரண காரியங்கள் நீதிபதியை எரிச்சல் அடையச் செய்துவிட்டது. அவரும் மதம், கடவுள் நம்பிக்கை கொண்டவர்தானே! ஹோலி யோக்குக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.

சிறை வாழ்க்கையின்போது அவரின் சின்னஞ்சிறு மகள் இறந்துவிட்ட சோகமும் அவரது குடும்பத்தின் வறுமை வாழ்வும் அவரை வாட்டின. என்றாலும் கடவுள் நம்பிக்கையற்றவராக அவரை முழுமைப்படுத்தியது. 1848 இல் மதத்தின் விளைவான பரந்துபட்ட கொடுமைகளை எடுத்துரைக்கும் சங்கம் ஒன்றைத் தொடங்கினார். லண்டனில் உள்ள அறிவியல் மன்றத்தில் அவருடைய உரையைக் கேட்க 1851இல் முந்நூறுக்கம் மேற்பட்ட சுதந்திரச் சிந்தனையாளர்கள் கூடினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதச்சார்பற்ற சங்கம் (செக்யுலர் சொசைட்டி) தொடங்கினார். மான்செஸ்டர் நகரில் மாநாடு நடத்தினார். 1853இல் லண்டன் நகர்ச் சங்கம் நடத்திய மாநாட்டில் அவருக்கு 250 பவுண்டு நிதி அளிக்கப்பட்டது. அந்த தொகையில் ப்ளீட் தெருவில் (Fleet Street) கட்டடம் ஒன்று வாங்கிப் பிரசுர நிலையம் அமைத்தார். லண்டன் நகரத்தின் அனைத்துப் பத்திரிகை அலுவலங்களும் அமைந்துள்ள தெருதான் இது. அங்கேயே இவருக்கும் இடம் கிடைத்தது.

பிராட்லாவை ஹோலியோக்கிடம் அறிமுகம் செய்து வைத்தார். எலிசபெத் கார்லைல் பிராட்லா பொதுக்கூட்டத்தில் பேசும் நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார். அப்போது பிராட்லாவுக்கு வயது 17. முழுமையான நாத்திக உரையை அவர் நிகழ்த்தினார். அதன்பிறகு பிராட்லா ஒரு சிறிய வெளியீட்டை எழுதி வெளியிட்டார். கிறித்துவர்களைப்பற்றி சில சொற்கள் (A few words on the Christian Creed) என்ற வெளியீடு அது. என்ன பேசி, என்ன எழுதி என்ன பலன்? வாழ்க்கைக்குப் பணம் இல்லை. அதன் விளைவு?

பிராட்லா போர்ப்படையில் சேர்ந்து விட்டார், சிப்பாயாக! இந்தியாவுக்கு வர வேண்டும், செல்வம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சேர்ந்தார். ஆனால் அவர் டப்ளின் நகருக்கு அனுப்பப்பட்டார். 1853இல் போர்ப்படையிலிருந்து விலகி விட்டார். லண்டன் நகருக்கு வந்தார். மீண்டும் எழுதத் தொடங்கினார். சிலை உடைப்பாளன் எனும் பொருள் தரக்கூடிய (Iconoclast) என்ற புனை பெயரில் ஏடுகளுக்குக் கட்டுரைகள் எழுதினார். லண்டன் மதச் சார்பற்றோர் சங்கத்தின் தலைவராக 1858ல் வந்தார். அப்போது அவருக்கு வயது 25 தான்.

பிரிட்டனை உலுக்கிய பிராட்லா

தம் 25ஆம் வயதிலேயே லண்டன் (நாத்திக) மதச் சார்ப்பற்றோர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சார்லஸ் பிராட்லா, தேசியச் சீர்திருத்தவாதி எனும் பொருள் கொண்ட நேஷனல் ரிஃபார்மர் ஏட்டுக்கு ஆசிரியரானார். நீதிக்கட்சி நம் நாட்டில் துவக்கப்பட்டதே நீதி (ஜஸ்டிஸ்) எனும் ஏடு துவக்கப்பட்டு நடத்தப்படுவதற்காகவே எனும் வரலாறை நாம் அறிவோம். அதுபோலவே தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைக் கொள்கையைப் பரப்புவதற்காக, குடிஅரசு ஏட்டைத் தாம் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தொடங்கி விட்டார். அந்தக் காலத்தில் இயக்கம் தொடங்குவதும் நடத்துவதும் இன்றைக்கு இருப்பது போலப் பிற ஏடுகளின் தயவில் நடந்தது அல்ல. சொந்த ஏட்டின் வாயிலாகக் கொள்கைகளைப் பரப்பினார்கள். அந்த வகையில்தான் பிராட்லாவும் ஏட்டின் ஆசிரியரானார்.

லண்டன் பெருநகர அளவில் இயங்கிய மதச் சார்பற்றோர் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு நாடு முழுவதும் நல்ல ஆதரவும் வரவேற்பும் பெருகியது. அறிவார்ந்த கருத்துக்களை அறிவுள்ளவர்களும் அறிவைப் பயன்படுத்துவோர்களும் வரவேற்கத்தானே செய்வார்கள்? அந்த வகையில் நாளும் ஆதரவு பெருகிடவே, நம்மளவிலான நாத்திகர் அமைப்பை 1866இல் பிராட்லா தொடங்கினார். இந்தப் பணியில் அவருடன் தோளோடு தோள் இணைந்து பணி புரிந்தவர் அன்னி பெசன்ட். ஆம், நீதிக் கட்சித் தலைவர்களாலே அய்ரிஷ் பார்ப்பனத்தி என்று அழைக்கப்பட்ட அதே அம்மையார்தான்!

1868இல் சீர்திருத்தவாதி ஏடு மீது பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை எடுத்தது. தந்தை பெரியாரின் குடிஅரசு ஏட்டின் மீதும் விடுதலை ஏட்டின் மீதும் பலமுறை நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு எடுத்துள்ளதை நாம் அறிவோம். அரசின் கடும் அடக்கு முறைகளின் காரணமாகத் தம் ஏடுகளை நிறுத்தி விட்டு, வேறு பெயரில் ஏடுகளை நடத்தத் தொடங்கினார் என்பதும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அரசு ரிஃபார்மர் ஏட்டின்மீது மத நிந்தனைக் குற்றத்தையும் அரசுத் துரோகக் குற்றத்தையும் சாற்றியது, கிறித்துவப் பாதிரியார்களின் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைகைளை அம்பலப்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தி எழுதியமைக்காகப் பெரியார் அவர்களும் இம்மாதிரி வழக்குகளைச் சந்தித்தார்.

பிராட்லா மீது தொடரப்பட்ட வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. என்றாலும் ஏடுகளிலும் வழக்கு மன்றங்களிலும் அவருடைய கருத்துகள் பெருத்த சர்ச்சைகளுக்கும் கருத்து மோதல்களுக்கும் வழி வைத்துக் கொண்டே இருந்தன. எதிர்ப்புக் குரல் கேட்டு ஒடுங்கி விடாமல் தந்தை பெரியாரும் தம் போரைத் தொடர்ந்து நடத்தினார் என்பதை இங்கே நினைவு கூரலாம்.

பத்து ஆண்டுகளுக்குப்பிறகு பிராட்லா ஒன்றைச் செய்தார். அன்னி பெசண்ட்டுடன் சேர்ந்து அமெரிக்காவின் சார்லஸ் க்ளோல்டன் என்பார் எழுதிய நூலை வெளியிட்டார். கருத்தடையின் அவசியம் பற்றி எழுதப்பட்ட நூல் இது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மக்கள் தொகை குறைவான நாடுகளிலேயே கருத்தடை பற்றிய கருத்து தோன்றிப் பரவியது என்றால் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அவதிப்படும் இந்தியாவுக்கு அக்கொள்கையின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதனால் தானே தந்தை பெரியார் கர்ப்ப ஆட்சி ஒழிக என்றார் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தத்துவத்தின் விளைவுகள் அல்லது திருமணமான இளையோரின் அந்தரங்க நண்பன் எனும் பொருள் தரக்கூடிய The Fruits of Philosophy or the Private Companion of Young Married Couple என்ற தலைப்பில் அமெரிக்கர் எழுதிய நூலினை பிராட்லாவுக்கு முன்னர் பிரிட்டனில் வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு மத நிந்தனை செய்தார் என்று அவர் தண்டிக்கப்பட்டார். அது தெரிந்திருந்தும் சார்லஸ் பிராட்லாவும் அன்னி பெசன்ட்டும் நூலை வெளியிட்டனர்.

மதத்தைத் தூக்கிப் பிடித்து நிலை நிறுத்துவதற்காக என்றே இருக்கும் இங்கிலாந்து அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, இந்த வழக்கில் அவர்கள் சார்பாக சாட்சி கூற சார்லஸ் டார்வின் மறுத்துவிட்டார். மனிதன் படைக்கப்படவில்லை; உருமலர்ச்சியால் உருவானவன் என்பதை உலகுக்கு ஆதாரங்களுடன் உணர்த்தியவர் சார்லஸ் டார்வின். ஆனாலும் அவர் கடவுள் நம்பிக்கையாளர். ஆகையால் நாத்திகருக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல, வரவில்லை போலும்! வழக்கின் முடிவு மதவாதிகளுக்குச் சாதகமாக அமைந்தது. ஆறு மாதச் சிறைத் தண்டனையும் பெரும் தொகை அபராதமும் விதிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும், பிராட்லாவின் மேல் முறையீட்டின் பேரில் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். குற்றத்தின் தன்மையால் விடுதலை செய்யப்படவில்லை; வழக்கு நடத்தப்பட்டதில் ஏற்பட்ட சட்டக் கோளாறுகளால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நூலை வெளியிட்டதன் மூலம் இளைய உள்ளங்களை ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்யத் தூண்டும் குற்றத்தைச் செய்து விட்டார் எனக் குற்றம் சாற்றப் பெற்றது. நீதி மன்றத்தில் வாதாடும் போது பிராட்லா கூறினார்: பிறந்து வாழும்போது உணவு, உடை கிடைக்காமல் குழந்தைகள் கொல்லப்படும் நிலையை உருவாக்குவதைவிடக் குழந்தைப் பிறப்பையே தடுப்பது நல்லது என்பதுதான் ஒழுக்கமான செயலாகும் என்றே நாங்கள் கருதுகிறோம் என்று கூறினார். ஆனாலும் கூட பிராட்லாவும் அன்னி பெசன்ட்டும், ஆபாசமான களங்கம் ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை வெளியிட்டார்கள் என்றே அன்றைய நீதிமன்றம் கருதி, முடிவு செய்து தண்டித்தது.

அரசுக்காக, ஆண்டவனுக்காக, மதத்திற்காக வாதிட்ட வழக்குரைஞர் அந்த நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு கூறினார்:

அது ஒரு மாசு படிந்த நூல். அசிங்கமான நூல். எந்த மனிதனும் அந்த நூலைத்தன் மேசையில் வைத்திருக்க விரும்பமாட்டான். நாகரிகமான, படித்த எந்த இங்கிலாந்துக்காரனும் தன் மனைவி அந்த நூலை வைத்துக் கொள்வதை விரும்ப மாட்டான். அந்த நூலில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் உடல் உறவு கொள்வதை ஒருவனுக்கு உரிமை தந்து விட்டு அந்த உடலுறவின் பயனைப் பெறுவதற்குத் தடையை விதிக்கிறது. அதுதான் நூலின் மையக் கருத்து, ஏனைய எழுத்துகளெல்லாம் அக்கருத்தை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.

காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த கதவொன்று கண்டறிவோம், அதில் என்ன குற்றம்? என்று தெளிவாகவே தந்தை பெரியாரின் கருத்தடைக் கொள்கைகளைக் கவிதை வடிவில் தந்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்! இதே கருத்தை வெளியிட்டபோது இங்கிலாந்து அரசு ஏற்க மறுத்துவிட்டது. சிறைத் தண்டனையும் 200 பவுண்டு அபராதமும் விதித்தது.

ஆனாலும் பின்னாள்களில் அன்னி பெசன்ட் இதே கருத்தைத் தெளிவாக வலியுறுத்தி ஒரு நுலை எழுதினார். ஏன் இதை எழுதினார் என்பதைத் தம் சுய வரலாறு நூலில் விளக்கி எழுதினார். அந்தக் கொள்கையில் அவர்க்கிருந்து உறுதிப்பாட்டை இச்செயல்கள் நிரூபிக்கின்றன. ஏதோ ஆர்வக் கோளாறில் இவை செய்யப்பட்டன என நினைக்கக் கூட வழியில்லாம் தம் கொள்கை உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகமான பேர்கள் இருக்கும் குடும்பத்தில் வாழ்க்கைக்குத் தேவையானவை கிடைக்கப்பெறாத நிலையால் ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் விபச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்கிற கருத்தும், பொருளாதாரக் குறைபாட்டால் குடும்பம் தவிப்பதைத் தடுக்க வேண்டுமானால் கட்டுப்பாடு தேவை என்கிற நிலைக்கு இட்டுச் சென்றன. அதனால் இது குறித்த எங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்வதற்காக நூல் வெளியிடப்பட்டது எனத் தெளிவாகக் கூறினார்.

அமெரிக்காவின் நூலை வழக்கு முடிந்த பிறகும் கூட அவர் விற்பனை செய்து வந்தார். வழக்கோ, தீர்ப்போ அவரை ஒன்றும் பாதிக்கவில்லை. தந்தை பெரியாரைப் போலவே துணிவுடன் தொடர்ந்து போரிட்டார். மீண்டும் அவர் மீது வழக்கு தொடரும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிந்தபிறகு அதே கருத்தில் அன்னிபெசன்ட் எழுதிய மக்கள் தொகை பற்றிய கருத்துகள் எனும் நூலை வெளியிட்டார்.

அரசும் அதிகாரிகளும் தம் போக்கைக் கைவிடவில்லை. பிராட்லாவின் செயல்பாடுகளையும் சுதந்திரச் சிந்தனையாளர்களின் நடவடிக்கைகளையும் தடுக்க முயன்றனர். அஞ்சல் அலுவலகத்திற்கே சென்று மதம் பற்றிய வெளியீடுகளைக் கைப்பற்றி விட்டனர். மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்து விட்டனர். பல சட்டங்களைக் கூட்டம் நடத்துவதற்குத் தர மறுத்தனர். சுதந்திரச் சிந்தனையாளன் (Free Thinker) எனும் இதழை நடத்தியவர்கள் மீது மத நிந்தனை வழக்குகளைப் போட்டனர். இரண்டு பேர்களைத் தண்டித்து சிறையில் அடைத்தனர். இதனாலெல்லாம் சுதந்திரச் சிந்தனையைத் தடுக்க முடிந்ததா? மத ஆபாசங்களை வெளிப்படுத்துவதை நிறுத்த முடிந்ததா? கிடையாது. அடக்கு முறை அறிவின் ஆற்றலை அழிக்க முயன்றதே தவிர இறுதி வெற்றியை அறிவுலகம்தான் அனுபவித்துக் கொண்டு வருகிறது.

சார்லஸ் பிராட்லாவும் அன்னி பெசன்ட்டும் இந்த நடவடிக்கைகளால் புகழின் உச்சிக்கே சென்றனர். அவர்களின் உரையைக் கேட்க ஏராளமான மக்கள் திரண்டனர். தீர்ப்பு கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற கூட்டத்தில் சிங்கம் போலக் கர்ச்சித்தார் பிராட்லா. அவரின் நெடிய நிமிர்ந்த தோற்றம் மக்களை வெகுவாக ஈர்த்த அவரின் பேச்சைக் கேட்க வைத்தது. தந்தை பெரியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு அதுவும் ஒத்துப் போவதை உணரலாம்.

தந்தை பெரியாரைப் போலல்லாது, பிராட்லா ஒரு வழக்கறிஞர். தொழிற்சங்கவாதி. பெரியாரைப் போலவே, பெண் உரிமைக்காகப் போராடியவர். ஆனால் அவரைப்போல சமதர்மக் கொள்கையை ஆதரித்தவர் அல்லர். சமதர்மத்திற்கு எதிரான அவருடைய கொள்கைகளால், சமதர்மிகளான பல நாத்திகர்கள் அவரை விட்டுப் பிரிந்து சென்றனர். பிராட்லா இந்திய நாட்டின் மீதும் இந்தியர்கள் மீதும் பெருத்த அக்கறையைக் காட்டினார்.

லண்டனின் நார்த்தாம்டன் பகுதியின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக விரும்பினார். 1880இல் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால் பதவியை ஏற்க முடியவில்லை. மதம் குறுக்கிட்டது. சார்லஸ் பிராட்லா மதத்தை ஏற்பவரல்ல. கிறித்துவரல்ல. மத நம்பிக்கையற்ற தன்மை அவரது பதவிக்குத் தடையானது. அவர் இதனால் சோர்வடையவில்லை.

-தொடரும்

Link to comment
Share on other sites

"விவாதம் செய்பவர்களிடையே நானே விவாதமாக இருக்கிறேன்" ( கீதை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல தொடர் பகுத்தறிவு

தொடந்து பல பகுத்தறிவாளர்களைத் தாருங்கள். ஆதிக்க இருளை அகற்றிய அந்த பகலவன்களை பலர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகப் பகுத்தறிவாளர் - சார்லஸ் பிராட்லா (3)

நாடாளுமன்றத்தில் நாத்திகர் உரிமைக்குப் போராடி வென்ற பிராட்லா

- சு.அறிவுக்கரசு

பிராட்லா நாடாளுமன்ற உறுப்பினராக விரும்-பினார். 1880இல் இங்கிலாந்தின் நார்த்ஹாம்டன் தொகுதியில் நின்றார்; வெற்றி பெற்றார். பிராட்லாவின் கொள்கைகள் தொகுதி மக்களுக்குத் தெரிந்திருந்தும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு தொழிற்-சங்கவாதி. குடியரசு வேண்டும் என்பவர். இங்கிலாந்தில் குடியரசும் உண்டு. மன்னரும் உண்டு. குடிக் கோனாட்சி என்பார் அறிஞர் அண்ணா. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்றார். 19ஆம் நூற்றாண்டு வரை பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 35 வயதான பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை எனத் தொடங்கிப் படிப்படியாக வயது குறைந்தது. இவ்வளவு முற்போக்காளராக இருந்தும் சமதர்மத்திற்கு விரோதி. இதனாலேயே பலமதச் சார்பற்ற மானுடப் பற்றாளர்கள் இவரது அமைப்பை விட்டு விலகிவிட்டனர்.

வெற்றி பெற்ற பின்னர்தான் பிராட்லாவுக்குப் பிரச்சினைகள் வந்தன. அவர் பகுத்தறிவாளர்; மத எதிர்ப்பாளர்; மதமற்றவர். கிறித்துவரல்லர். எனவே, பதவி ஏற்பு உறுதி மொழியின் படி உறுதி கூறிப் பதவி ஏற்க முடியாது எனக் கூறி விட்டார். கடவுளின் பேரால் உறுதி கூறி என்கிற வாசகங்களை உச்சரிக்க முடியாது என்றார். அந்தப்படி அமைந்துள்ள வாசகங்களை ஏற்றுக் கையெழுத்திட்டுப் பதவி ஏற்க மாட்டேன் என்று உறுதிபடக் கூறிவிட்டார். பின் எப்படி உறுதி கூறுவது?

மனச்சான்றின்படி உறுதி கூறுகிறேன் என உறுதிச் சான்று திருத்தப்பட வேண்டும் எனக் கோரினார். இங்கிலாந்து நாடு சம்பிரதாயங்களைக் கடைப்-பிடிப்பதிலும், பேணிக் காப்பதிலும் பிடிவாதம் காட்டும் நாடு - அரசு. மக்கள் மாற்றத்தை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டனர்.

இங்கிலாந்துப் பிரதமராக இருந்த வில்லியம் கிளாட்ஸ்டோன், பிராட்லாவின் வாதத்தை ஆதரித்தார். மனச்சான்றின்பேரில் உறுதி மொழி கூறலாம் என வாதிட்டார். ஆனால், கிறித்துவ மதப் பித்துப் பிடித்த பல உறுப்பினர்கள் இதை எதிர்த்தனர். மதப் பற்று மிக்க இங்கிலாந்து நாட்டு மக்களும் எதிர்த்தனர். பிராட்லாவின் கிறித்துவ மதம் சம்பந்தப்பட்ட கருத்துகள், மன்னர் ஆட்சி மாறிக் குடியாட்சி மலர-வேண்டும் என்கிற கருத்துகள், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய கருத்துகள் எல்லாமே பெரும்பாலான மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுத்தன. அந்த நிலையில் பிரதமரின் கருத்தை எம்.பி.க்கள் ஏற்கவில்லை.

வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுதி மொழி வாசகங்களை மாற்றி அமைக்கலாம் என்கிற பிரதமரின் கருத்து ஏற்கப்படாமல் சபாநாயகர் கூறியவாறு, கடவுளின் பெயரால்தான் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்கிற தீர்மானம் நாடாளுமன்றத்தின் முடிவாகி விட்டது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

நாடு முழுக்க தனது கருத்துகளுக்கு ஆதரவு தேடிப் பிரச்சாரம் செய்தார் பிராட்லா. தனது சொந்தத் தொகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த நிலையில் கன்சர்-வேடிவ் (பழைமை வாதக்கட்சி) கட்சியும், புரொடஸ்டன்ட் கத்தோலிக்கப் பிரிவு கிறித்துவர்களும் இவரை எதிர்த்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதிரடியாக நுழைந்து இடத்தில் உட்கார பிராட்லா முயன்றார். கொடுக்கவில்லை என்றால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிற கருத்து அவருக்கு.

ஆனால், ஆதிக்க வர்க்கம் விட்டு விடுமா? நாடாளுமன்றக் காவல் அதிகாரி பிராட்லா-வைக் கைது செய்துவிட்டார். லண்டன் டவரில் உள்ள சிறைச்சாலையில் சிறை வைத்தார். தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும் அதில் எழுப்பப்பட்டுள்ள அழகான கோபுரமும் லண்டன் மாநகரின் குறிப்-பிடத்தக்க (Land Mark) சின்னம். லண்டன் டவரில் உள்ள சிறையைத் தவிர கண்காட்சிக் கூடமும் சிறப்பு வாய்ந்தது. இதன் காவலர்கள் பணிமுடிந்து செல்வதும், புதிய காவல்கள் பொறுப்பு ஏற்க சாவியைப் பெறுவதும் வண்ண மயமான கண்கவர் காட்சியாகும். இங்கிலாந்து ராணியின் அரண்மனைக் காவலர்களின் பணி முடிந்து புதிய அணி பொறுப்பு ஏற்பதைப் போலவே அழகிய காட்சி. இதனைக் காண மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அரண்மனைக்கு முன்னால் காத்திருப்பதைப் போலவே லண்டன் டவருக்கு அருகிலும் பாலத்தின் மேல் காத்துக் கொண்டிருப்-பார்கள். இந்தப் பாலத்தின் கீழே கப்பல்கள் தாராளமாகச் செல்லும் அளவிற்கு உயரமான பாலம் இது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பெஞ்சுமின் டிஸ்ரேலி என்பார் இந்தக் கூட்டத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்தார். பிராட்லாவைச் சிறையில் அடைத்தால் அவர் தியாகப் பட்டம் பெற்று விடுவார்; ஆகவே, அவரை விடுதலை செய்து விடுங்கள் என்றார். சபாநாயகர் அவரை விடுதலை செய்துவிட்டார்.

மீண்டும் தேர்தல். பிராட்லா மீண்டும் போட்டி. பிராட்லா மீண்டும் வெற்றி. 26.4.1881இல் பிராட்லா உறுதி மொழி ஏற்க வந்தார். மனச்சான்றின்படி எடுப்பேன் என்றார். சபாநாயகர் மீண்டும் மறுத்தார். பிராட்லா பதவி ஏற்றிடும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வருவேன் என்றார். பிரதமர் வில்லியம் கிளாட்ஸ்டோன். ஆனால் நீண்ட காலம் பிடிக்குமே! அதுவரை நான் காத்திருக்க முடியாது என்றார் பிராட்லா. 2.8.1881 நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தன் இருக்கையில் உட்கார மீண்டும் முயன்றார். மீண்டும் அவரை வலுக்கட்டாயமாக வெளி-யேற்றினார்கள்.

அடிபட்ட வேங்கையானார் பிராட்லா. தன் தோழர்களுடன் சேர்ந்து கையெழுத்து இயக்கம் தொடங்கினார். தன் விருப்பப்படி, தன் மனச் சான்றின்படி, பதவி ஏற்பு உறுதி மொழி கூற அனுமதிக்கும்படிக் கையொப்ப இயக்கம் நடத்தினார். 2 லட்சத்து 41 ஆயிரம் 990 கையொப்பங்களைப் பெற்றார். 7.2.1882இல் இந்தக் கையொப்பங்களை ஒப்படைத்துத் தாம் பதவி ஏற்க அனுமதிக்குமாறு சபாநாயகரைக் கேட்டார்.

வழக்கம் போலவே அனுமதி மறுப்பு. வழக்கம் போலவே நாடாளுமன்றத்திற்குள் பிராட்லா நுழைய முயற்சி. வழக்கம் போலவே அவர் வெறியேற்றப்படல். நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து பிராட்லா நீக்கப்பட்டார்.

பிரதமர் வில்லியம் கிளாட்ஸ்டோன் உறுதி கூறியபடி பதவி ஏற்பு வாசகச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். 1883இல் உகந்த காலத்தில் வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற விவாதத்தில், புரொடஸ்-டன்ட் கிறித்துவப் பிரிவைச் சேர்ந்த மதத் தலைவர் கான்டர்பரி ஆர்ச் பிஷப்பும், கத்தோலிக்க மதப் பிரிவின் தலைவர் கார்டினல் மான்னிங்கும் இந்தப் புதியச் சட்டத்தை எதிர்த்தனர். நாத்திகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்-களாக இருக்கவே உரிமையில்லை எனக் கூறினர். நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தின் மீது 1883 மே மாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டம் தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் கொண்டு வந்த சட்டமே தோற்கடிக்-கப்-பட்டது. அவ்வளவு சுதந்திரமான ஜனநாயக நாடு.

1884இல் நார்த் ஹாம்டன் தொகுதிக்கு மூன்றாம் முறையாகத் தேர்தல். மீண்டும் பிராட்லா போட்டியிட்டார். இந்த முறையும் நார்த்ஹாம்டன் தொகுதி மக்கள் அந்த நாத்திகரையே தேர்ந்தெடுத்தனர். பிராட்லா நாடாளுமன்றம் சென்றார். உள்ளே நுழைந்தார். தனக்குரிய இடத்தில் அமர்ந்தார். நாடாளு-மன்றத்தில் அப்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கு பெற்றார். மூன்று தீர்மானங்களின் மீது வாக்கெடுப்புகள் நடந்தன. மூன்றிலும் இவர் தம் வாக்கைப் பதிவு செய்தார்.

எப்படி? அப்படித்தான். ஆம், சட்ட-முறைக்குப் புறம்பாகத்தான். வாக்கைப் பதிவு செய்யும் போது கவனிக்காதவர்கள் பின்னர் கவனித்து விட்டனர். சபாநாயகர் அவர்மீது நடவடிக்கை எடுத்தார். சட்டமுறைக்குப் புறம்பாக வாக்களித்த குற்றத்திற்காக பிராட்லாவுக்கு 1500 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.1886 ஜனவரி 13ஆம் நாள் மீண்டும் பதவி ஏற்பு நிகழ்த்திட பிராட்லா அவைக்கு வந்தார். அப்போது புதிய சபாநாயகர். சர் ஆர்தர் வெல்லெஸ்வி பீல் என்பார். பிராட்லா பதவி ஏற்பதைத் தடுக்கவில்லை. அதைத் தடுக்கும் அதிகாரம் தமக்குக் கிடையாது எனத் திட்டவட்டமாகச் சபாநாயகர் அறிவித்து அவரை அனுமதித்தார்.

ஆறு ஆண்டுக்காலப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒரு சபாநாயகர் எதிர்த்தார். அடுத்த சபாநாயகர் அனுமதித்து விட்டார். சட்டமோ சம்பிரதாயமோ எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கவேண்டும். எப்படி இருக்கிறதோ அப்படியே நீடிக்கக் கூடாது. இப்போது பிராட்லா நாடாளுமன்றத்தில் வாதமிடவும் வாக்களிக்கவும் முழு உரிமை பெற்றவராகி விட்டார். தன் நோக்கங்களைப் பிரதிபலித்துப் பேசினார். அயர்லாந்து நாட்டுக்குச் சுயாட்சி தரவேண்டும் என்று பேசினார். குடியாட்சியின் சிறப்புகள் பற்றிப் பேசினார். மன்னர் பரம்பரைக்குப் பென்சன் தரக்கூடாது என்று பேசினார். மார்ல்பாரோ இளவரசருக்கு 4 ஆயிரம் பவுண்ட் பென்சன் ஏன் தரவேண்டும் என்ற கேள்வியை எழுப்பிப் பேசினார்.

மாட்சிமை தங்கிய மன்னர் குடும்பத்திற்கு எதிராக எவரும் வாய் திறக்கத் துணியாத காலத்தில் அவர்களின் சுகபோகங்களுக்கு அரசுப் பணம் செலவழிக்கப்படுவதைக் கண்டித்துப் பேசினார். இங்கிலாந்து நாட்டின் நாடு பிடிக்கும் ஆசையைக் கண்டித்துப் பேசினார். காலனி (குடியேற்ற) நாடுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அந்நாடுகளை அடிமைப்படுத்துவதற்காகவும் தென் ஆப்ரிகா, சூடான், ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தால் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினார்.

ஒரு பகுத்தறிவுவாதி, சிறந்த மனிதாபிமானி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தம் பேச்சாலும், செய்கையாலும் நிரூபித்துக் காட்டிய, எடுத்துக்காட்டான பகுத்தறிவாளர். காசநோயால் பாதிக்கப்பட்ட அவரை பம்பாய் நகரத்தில் கொஞ்ச காலம் தங்கி இருந்தால், உடல் நலம் சீராகும் என மருத்துவர்கள் கூறியதால் லண்டனில் இருந்து கப்பலில் பம்பாய் வந்து தங்கியிருந்தார். அந்தக் காலத்திலும் கூட பம்பாயில் தொழிலாளர் நலன்களில் பங்கெடுத்து, அறிவுரைகள் கூறி வழிநடத்தும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார். அப்பொழுதுதான் தொடங்கப்-பட்டிருந்த காங்கிரசுக் கட்சிக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். பின்னர் தம் தாய் நாட்டுக்குச் சென்று வாழ்ந்தபின் 1891 ஜனவரி மாதம் 30ஆம் நாள் இயற்கை எய்தினார்.

பின்னாளில் அதே நாளில் 1948 ஜனவரி 30இல் கொல்லப்பட்டு இறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அப்போது லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்தார். இவரின் மறைவின்போது, உடல் அடக்கத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். மிகச் சிறந்த நாத்திகரான சார்லஸ் பிராட்லாவின் உடல் அடக்கத்திற்கு அந்தக் காலத்திலேயே 3 ஆயிரம் பேர்கள் (அந்த நாட்டில் அது மிகப் பெரும் மக்கள் தொகை) வந்திருந்தனர் என்றால் அந்தப் பகுத்தறி-வாளர்க்குக் கிடைத்த புகழைப் புரிந்து கொள்ளலாம். அவரது உடல் எந்தப் புனிதமாகக்-கப்பட்ட புதை இடத்திலும் புதைக்கப்படாமல், சாதாரண இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சாகும்வரை மட்டுமல்லாமல், இறந்த பின்னரும் தம் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பங்கம் வராதவாறு பார்த்துக் கொண்ட பகுத்தறிவாளர் பட்டாளத்தை அவர் பெற்றிருந்தார் என்பது அவர் புகழுக்குப் புகழ் சேர்க்கும் மணி மகுடமாகும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகப் பகுத்தறிவாளர் - இங்கர்சால்

- சு.அறிவுக்கரசு

Page_26.jpg

சர்வசக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்குமேயானால் அதற்கு நம் உதவி தேவையில்லை; அதைக் காப்பாற்ற மனிதர்கள் முயலத் தேவையில்லை - என்றார் ஓர் அமெரிக்கர்.

ஒரு சக்கரம் சுழலவில்லையானால், மெகானிக் உடனே முழந்தாளிட்டு, கர்த்தரை நோக்கி ஜெபம் செய்யமாட்டான்; என்ன கோளாறு என்று பார்த்து தன் கருவிகளைக் கொண்டு சரி செய்வான் - என்றவரும் அதே அமெரிக்கர்தான்.

அமெரிக்கர்களைத் தம் அறிவார்ந்த பேச்சின் வாயிலாகக் கட்டிப் போட்ட கருத்தாளர் அவர்! எடுத்துக்காட்டுக்கு ஒரு வரி: (The clergy know that I know that they know that they do not know) அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது அவர்களுக்கே தெரியும் என்பது எனக்குத் தெரியும் என்பது பாதிரிகளுக்குத் தெரியும்.

அவர் - ராபர்ட் கிரீன் இங்கர்சால். உலகப் பெரும் புகழ்பெற்ற நாத்திகர். 1833ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11இல் பிறந்து 1899 ஜூலை 21இல் மறைந்தவர். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட போர் வீரர். கர்னல் பதவியில் இருந்தவர். அமெரிக்க அரசியல் தலைவர். தலைசிறந்த பேச்சாளர். சுதந்திரச் சிந்தனை சுடர் விடத் தொடங்கிக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய காலத்தின் முன்னணிக் கருத்தாளர், கொள்கை விளக்கப் பேச்சாளர்.

நியுயார்க் பகுதியில் டிரெஸ்டன் எனும் இடத்தில் இங்கர்சால் பிறந்தார். அவரின் தந்தை ஜான் இங்கர்சால் ஒரு பாதிரியார். இருப்பினும் சற்றுத் தீவிரவாதக் கொள்கைக்காரர். அதனாலேயே ஊருக்கு மாற்றப்பட்டுத் திண்டாடும் நிலைக்கு ஆளானவர்.

தாம் பிறந்த நாளைப் பற்றி இங்கர்சால் பின்னாட்களில் எழுதினார்; எல்லாரையும் போலவே நானும் பிறந்தேன். ஒரு பைபிளில் பதிவு செய்தவாறு நான் 1833ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12இல் பிறந்தேன். மற்றொரு பைபிளில் பதிவு செய்த குறிப்பின்படி நான் 1833ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 11இல் பிறந்தேன். ஆக பைபிளில் நான் கண்ட முதல் எதிர்மாறான எழுத்துகள் அவையே! அதன்பிறகு தொடர்ந்து பல முரண்பாடுகளை அந்தப் புனித நூலில் நான் காண நேர்ந்தது? பைபிளின் தாக்கம் அதைப் படிப்பவனின் மடத்தனத்தைப் பொறுத்தது என்று தனது 48ஆம் வயதில் அவர் குறிப்பிட்டார். கிண்டலான மேற்கோள்கள் எனும் நூலில் இடம் பெற்றுள்ளது இது.

மதப் பள்ளியில் படித்த இங்கர்சாலின் தந்தை மதபோதகருக்கான சான்றிதழை 1823இல் பெற்றார். அதாவது, இங்கர்சால் பிறப்பதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டார். சான்றிதழை வாங்கிய என் தந்தை மதத்தின் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு, சர்வ சக்தியுள்ள கடவுளை நம்புவதென்பது ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்திற்கும் மீளாத் துன்பம் என்பதையும் புரிந்து கொண்டு, அதைப் பரப்புவதற்கு வேலை தேடினார் என்று எழுதித் தன் தந்தையைப் போன்ற பாதிரியார்களைக் கிண்டல் செய்தார்.

அமெரிக்கத் தேவாலயங்கள் எல்லாம் நீக்ரோக்களின் அடிமைத்தனத்தை ஆதரித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதனை ஒழிக்க வேண்டும் என்கிற கொள்கையை இவர் கொண்டிருந்தார். இதனால் நடந்தது என்ன தெரியுமா? வெர்மான்ட், நியூயார்க், ஒஹியோ, விஸ்கான்சின், மிக்சிகன், இன்டியானா, கென்டக்கி, டென்னசி, இல்லினாய்ஸ் என்று ஒவ்வொரு ஊராகத் தூக்கிப் பந்தாடப்பட்டார். குடும்பத்திற்காக எதையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருந்த அவர் 1821இல் திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மையார் ஒரு நாத்திகர்; பாதிரியாரிடம் மாட்டிக் கொண்ட கடவுள் மறுப்பாளர்.

1935இல் இந்த அம்மையார் இறந்து விட்டார். ஆனாலும் 14 ஆண்டுக்கால மண வாழ்க்கைக்கு அடையாளமாக அய்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகும் இங்கர்சாலின் தந்தை இரண்டு முறை மணம் செய்து கொண்டார். சிறிய மளிகைக் கடை வைத்து வணிகம் செய்தார். இவ்வளவையும் தம் குடும்பச் செலவுகளுக்காகச் செய்தார். ஏன் என்றால் அவரைத் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றிக் கொண்டே இருந்தார்களே!

கடைக்குட்டியான ராபர்ட் கிரீன் இங்கர்சால் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்படவே இல்லை. படிக்கவே இல்லை. அவருடைய 18ஆம் வயதில் அவரை மாதாகோயில் பள்ளிக் கூடம் ஒன்றில் சேர்த்துவிட்டார். அங்கே அவர் படித்தது ஓராண்டு தான் இருக்கும்.

தந்தை பெரியார் பரவாயில்லை, மூன்று ஆண்டுக்காலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பள்ளிக் கூடம் போய் வந்தார். இங்கர்சாலோ ஒரே ஒரு ஆண்டுதான் பள்ளிக்கூடம் போயிருக்கிறார். பெரிய படிப்பு படித்துவிட்ட இங்கர்சால் வேலைக்குப் போனார். கிராம நீதிமன்றத்தில் வேலைபார்த்த எழுத்தர் (கிளார்க்) ஒருவருக்கு உதவியாளர் வேலை. கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, பணி மாறிவிட்டது. ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியர் வேலை பார்த்தார்.

கடைசியாக, இல்லினாய்ஸில் மரியோன் எனும் ஊரில் அவரும் அவரின் அண்ணன் கிளார்க் இங்கர்சாலும் சட்டம் படித்தனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சட்ட அலுவலகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றனர். இந்தப் படிப்பு ஒரு மாதம் மட்டுமே படித்தனர். அதை வைத்துக்கொண்டே வழக்குரைஞராகப்பதிவு செய்யக் கோரினர். சலுகை நியமனமாகப் (Ex-Gratia Admission) பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டனர். அது கிடைத்தது. 1854 டிசம்பர் 20இல் அவர்கள் இருவரும் வழக்குரைஞராகப் பதிவு செய்யப்பட்டனர். 21 வயதில் இங்கர்சால் வழக்குரைஞரானார்.

ஏதாவது ஒரு துறைமுக நகரத்திற்குப் போவது என முடிவு செய்து இருவரும் பியோரியா நகருக்குப் போயினர். நில அலுவலகத்திலும் கிராம நீதிமன்றக் கிளார்க்கின் அலுவலகத்தில் இங்கர்சால் வேலைத் தேடிக் கொண்டார். அப்பொழுது ஒரு வழக்குரைஞர், ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஆகியோரின் அலுவலகங்களில் பெரும்பகுதி நேரத்தைச் செலவழித்தார். தம் சட்ட அறிவையும் சட்டமன்ற நடைமுறைகளையும் பற்றித் தெரிந்து கொண்டார். சட்ட மன்ற உறுப்பினர் ஒரு பகுத்தறிவாளர். பின்னாள்களில் இல்லினாய்ஸ் மாநில சட்ட அமைப்புக் குழுவில் இடம் பெற்றவர். அவருடைய இல்லத்தில் மிகப் பெரிய நூல் நிலையம் வைத்திருந்தார். கிளார்க் இங்கர்சால் இங்கு படித்ததையும், இவரிடம் பெற்ற பட்டறிவையும் துணைக்கொண்டு இல்லினாய்ஸ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வழக்குரைஞர் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. அந்தக் காலத்தில் பீஸ் 250 டாலர் கிடைத்தது. சகோதரர்கள் இருவரும் 1858இல் தனியாக வழக்குரைஞர் அலுவலகம் தொடங்கிவிட்டனர். திருமணம் ஆகிவிட்ட கிளார்க் இங்கர்சால் ஒரு வீடு வாங்கிக் கொண்டு தன் மனைவியுடன் வசித்தார். திருமணம் ஆகாத ராபர்ட் இங்கர்சால் அலுவலகத்திலேயே தூங்கிக் கொள்வார்.

பியோனியா நகரில் நீர்வழிப் போக்குவரத்து தான் உண்டு. சாலை வசதிகள் செய்யத் தொடங்கப் பட்ட காலம். இதுபற்றிச் சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்கிற நிலை. இதற்காக ராபர்ட் இங்கர்சாலை வழக்குரைஞர் என்கிற முறையில் பலரும் அணுகினர். அப்போது நிறவெறி, நிறவேற்றுமை கருப்பு இனத்தவரான ஆப்ரிக்க நீக்ரோக்களுக்கு எதிராகத் தாண்டவமாடியது. நிறவெறியை நீக்கவேண்டும் என்று அபிரகாம் லிங்கனும் - அவருக்கு எதிராக டக்ளஸ் என்பவரும் வாதப்போரில் ஈடுபட்டிருந்த நேரம். ராபர்ட் கிரீன் இங்கர்சால் நிறவெறிக்கு ஆதரவாக, ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக, டக்ளசுக்கு ஆதரவாக வாதம் செய்தார். அத்துடன் நிற்கவில்லை. நிறவெறியை ஒழிப்பதற்காக ஆபிரகாம் லிங்கன் வெளியிட்ட முன்னேற்றத்திற்கான பிரகடனம் என்பதை எதிர்த்துப் பேசினார். அதற்குப் பரிசாகச் சட்டமன்றத்திற்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக 1862இல் நிறுத்தப்பட்டார். நிறவெறிக்கு ஆதரவான அவருடைய நடவடிக்கைகள் இத்துடன் நின்றுவிடவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.