Jump to content

நார்நியா ரிட்டர்ன்ஸ் - திரைவிமர்சனம்!


Recommended Posts

narnia-02.jpg

கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது.

பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார்நியா மூன்றாண்டுகளுக்கு முன்பாக Chronicles of Narnia என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து வசூலில் சக்கைபோடு போட்டது. இப்போது வெளிவந்திருப்பது இரண்டாம் பாகம் Narnia - Prince Caspian.

தமிழில் மொழிமாற்றி சென்னையில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலேயே இத்திரைப்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆங்கிலப் படத்தை காண்கிறோம் என்ற உணர்வு வராத அளவுக்கு மிகத்தரமான மொழிமாற்றம். முதல் பாகம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் இருந்தது. மாறாக இரண்டாம் பாகம் அட்வெஞ்சர் படமாக எல்லாத்தரப்பையும் ஈர்க்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது.

narnia-01.jpg

கொடுமைக்கார சித்தப்பாவான மிஸ்ரா எதிர்காலத்தில் நாட்டுக்கு அரசனாக வேண்டிய இளவரசன் கேஸ்பியனை கொல்ல முயல்கிறார். ஒரு புரொபசர் மூலமாக தப்பிக்கும் கேஸ்பியன் நார்நியன்களின் துணையோடு தன் சித்தப்பாவை வெல்கிறார் என்ற கொய்யாமர இலையில் எழுதிவிடக்கூடிய சிறிய கதை. இதற்கு பரபரப்பான திரைக்கதை, வசனம் மற்றும் நிஜமா கனவா என்று அறிய இயலா கிராபிக்ஸ் உத்தியின் துணைகொண்டு சுவாரஸ்யமான இரண்டேகால் மணிநேர திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சங்கு ஊதியதுமே நிகழ்காலத்தில் லண்டன் ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் லூசி குழுவினர் நார்நியாவுக்குள் புகுவது பக்காவான காதுல பூ ரக காட்சி என்றாலும் அக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் அபாரம்.

பிரின்ஸ் கேஸ்பியன் அழகாக இருக்கிறார், அவர் அழகுக்கு அவர் ஒரு சப்பை ஃபிகரை ஜூட் விடுவது கடுப்பு. நார்நியாவின் அரசனான சிங்கம் அஸ்லான் தோன்றும் ஓபனிங் காட்சிகளில் தியேட்டரில் விஜய் படம் லெவலுக்கு விசில் பறக்கிறது. விசில் அடிக்கும் இளசுகள் பலரும் முதல் பாகம் வந்தபோது குழந்தைப் பருவத்தில் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. இன்னமும் அவர்களால் அஸ்லானையும், அவரது சாகசங்களையும் மறக்கமுடியவில்லை. எலிப்படை செய்யும் அட்டகாசங்களும் எலித்தளபதியின் வீரவசனங்களும் கலக்கல். பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமேக்ஸ் போர்க்காட்சிக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம்.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்தி வியக்க வைக்கிறது. இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு முன்பாக நார்நியாவின் முதல் பாகத்தை பத்துநாட்களுக்கு முன்புதான் சன் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பியிருக்கிறார்கள். உலகளவில் பிரபலமான எல்லாத் தொலைக்காட்சிகளிலும் முதல் பாகம் இப்போது அடிக்கடி ஒளிபரப்பபட்டு வருகிறது. இரண்டுநாட்களுக்கு முன்பாக கூட செட்மேக்ஸில் நார்நியா ஒளிப்பரப்பானது. முதல்பாகத்தை தொலைக்காட்சியில் பார்த்த எல்லா குழந்தைகளுமே இரண்டாம் பாகத்தை தியேட்டரில் காண பெற்றோரிடம் அடம் பிடிக்கப் போகிறார்கள்.

நீங்கள் தமிழராக இருந்தால் இப்படத்தை தமிழில் திரையிட்ட திரையரங்குகளில் காணுங்கள். ஒரிஜினல் தமிழ்ப்படங்களுக்கு கூட இவ்வளவு அழகுத்தமிழில் வசனங்கள் எழுதுவதில்லை. இதுபோன்ற படங்களுக்கான மொழிமாற்றத்துக்கு உழைக்கும் கலைஞர்களின் பெயர்களை டைட்டிலில் போடுவதில்லை. இதுபோல ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிடும்போது டப்பிங் கலைஞர்களின் பெயரையும், வசனகர்த்தா பெயரையும் தனியாக டைட்டிலில் போடுவது தான் அக்கலைஞர்களுக்கு செய்யக்கூடிய நியாயமும் கூட.

குழந்தைகளோடு பெற்றோர் கட்டாயம் காணவேண்டிய படமிது! குருவி பார்த்து வெறுப்பானவர்கள் கூல் ஆகவும் இப்படத்தைப் பார்க்கலாம்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.