Jump to content

உங்களுக்கு இப்படி வாழ விருப்பமா.. அப்போ வாசியுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_42968321_marry203_kiss_bigger.jpg

100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர்.

இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்று அவர்களே கூறியுள்ளனர்.

இவர்களே பிரிட்டனில் திருமணம் செய்து அதிக காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளாக கருதப்படுகின்றனர். அதுமட்டுமன்றி Anita அவர்கள் 100 வயதை எட்டியதும் இவர்களே நூறு வயதை எட்டிய பிரிட்டனின் முதல் தம்பதியராகவும் அமைவர் என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு 73 வயதில் ஒரு மகன் உட்பட இரண்டு பிள்ளைகளும் நாங்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வெடிப்புகளில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர்களாம்.

மிகவும் எளிமையான முறையில் தங்கள் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தம்பதியரை நாமும் எமது வலைப்பூ சார்பாக வாழ்த்துகின்றோம்.

இன்றைய இளம் தம்பதியர் ஓரிரண்டு ஆண்டுகள் கூடி வாழ்வதே அருமையான நிகழ்வாகிவிட்ட இந்த நாகரிக உலகில் இவ்வாறான நிகழ்வுகளும் செய்திகளும் உதாரணங்களும் நிச்சயம் சமூகத்துக்கு நல்ல எடுத்துக் காட்டுகளாக அமையும் இளம் சந்ததியினருக்கு நல்ல முன்மாதிரிகளைக் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

source: http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்று அவர்களே கூறியுள்ளனர்.

இது எங்களுக்கு கொஞ்சம் கடினம் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

உண்மையிலே இவர்களை வாழ்த்தான் வேண்டும்.:lol:

இருந்தாலும் எங்களின் திருமண நாள் மே 25, அதனால் நாங்கள் அவர்களை விட ஒரு நாள் கூடவாக்கும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்களுக்கு கொஞ்சம் கடினம் நெடுக்ஸ்.

நீங்கள் சொல்வதை நானும் அவதானித்திருக்கிறேன்.

எமது தமிழர்களில் தம்பதியர்.. கணவன் - மனைவி.. கொஞ்சுவது கட்டியணைப்பது என்றால் ஏதோ தங்களை தங்கள் கணவன் கெடுத்திடுறான் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.. அந்தளவுக்கு அதில் அந்நியப்பட்டு நிற்பது போல ஒரு வெளித் தோற்றம் இருக்கிறது... ஆனால்.. சரியா காலாகாலத்துக்கு குட்டிகளை போட்டுத் தள்ளுகிறார்களே.. அதுதான் புரியவில்லை..!

அதுமட்டுமன்றி.. எமது பெண்கள்.. தங்களின் அடுத்த திட்டங்களை.. ஒன்றில் சாப்பாட்டு வேளையில் சொல்வார்கள்.. அல்லது மனிசங்காரன் நிம்மதியா தூங்குவம் என்று படுக்கையில விழுற நேரம் சொல்வார்கள்.. அத்தோடு... சாப்பாடும் போச்சு.. நித்திரையும் போச்சு.. வாழ்க்கையில பிடிப்பும் போயிடும்..!

இன்னும் சில பெண்களுக்கு அன்பா கதைப்பது.. பழகுவது என்றாலே என்னென்று தெரியாது. இப்படியான.. ஜென்மங்களை எல்லாம் கட்டிட்டு.. பாவம் எங்கள் தமிழ் பொடியள்.

எவ்வளவோ கடின உழைப்பாளிகளாக இருந்தும்.. எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை என்பது அவ்வளவு சுவாரசியமாக ஆக்கப்படுவதில்லை. காரணம்.. அவர்களுக்கு அமைந்துள்ள பெண்கள் எல்லாருமே கிட்டத்தட்ட ஒரு வகை தான்.. என்பதால்..! இப்ப பத்தாக்குறைக்கு பெண் விடுதலை என்று கொஞ்சம் ஏற்கனவே அதிகாரம்.. இது இப்ப தான்தோன்றித்தனம்.. கொண்டும் அலையுதுகள்..!

சொந்த துணையின் உணர்வுகளை புரிஞ்சுக்க.. இந்தப் பெண்கள் ஏன் தான் முனையுறாங்க இல்ல. நகைக்கும்.. உடுப்புக்கும்.. ஊருக்கு காட்டிறதிற்கும்.. கொடுக்கிற முக்கியத்துவத்தை.. ஏன்.. இவங்க.. தங்க துணைவனின் உணர்வுகளைப் புரிஞ்சுக்க கொடுக்கிறதில்ல.

நான் பார்த்திருக்கேன்.. அங்க ஓர் இடத்தில.. அந்தாள் மக்டொனால்டில வேலை. வேலை முடிஞ்சு களைச்சுப் போய்.. எதிரில வாறவனைப் பார்த்து சிரிக்கக் கூட மனசில்லாம வீட்டுக்கு வரும். அந்த மனிசன் கிட்ட மனிசி சொல்லுவா.. பிள்ளைகளைப் பார்த்துக்கோங்க.. நான் உதில மாதர் சங்கம் மீற்றிங் போயிட்டு வாறன் என்று. இப்படி இருக்குது பெண்கள் உலகம்..!

அதால கட்டிறது என்றால்.. தமிழ் பெண்களில தேர்வு செய்து கட்டுங்க. பிளீஸ்..! பல குப்பை கூழங்கள்.. உங்க புகலிடத்தில இருக்குங்கள்.. கவனம்..! :D

Link to comment
Share on other sites

மேற்குலகில் இப்படியும் ஒரு சோடியா? இவர்கள் பல சோடிகளுக்கு உதாரணமாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

அதிசயம் தான்...:D

Link to comment
Share on other sites

அட..80 வது திருமண ஆண்டை கொண்டாடீனமோ..(நிசமா என்னால முடியல்ல :lol: )..எப்படி தான் ஒரே முகத்தை பார்த்து கொண்டு 80 வருசம் இருக்கிறது என்டு சொல்ல வந்தனான் பாருங்கோ :) ..சரி..சரி கோவித்து போடாதையுங்கோ அந்த வயதான இளம் ஜோடிகளிற்கு என்னுடைய பிந்திய வாழ்த்துக்கள் உரிதாகட்டும்.. :lol:

ஓ..உவையின்ட நீண்ட கால திருமண வாழ்விற்கு இரகசியம் "ஒருவரை ஒருவர் பாசத்துடம் கட்டி கொஞ்சுவதோ"..அட இது நன்னா இருக்கே :lol: ...ஒன்டு கேட்டா கோவிக்க மாட்டியளோ உங்கன்ட மனிசிமார் எல்லாரும் உங்களை கட்டி கொஞ்சி போட்டு தான் படுபினமோ இல்லாட்டி திட்டு படுடுனமோ இல்ல கேட்டானான் பாருங்கோ... :D

அது சரி இவையின்ட கல்யாணம் வந்து காதல் திருமணமா இல்லாட்டி அத வேற நான் சொல்லனுமா என்ன :D ...ஏனேன்டா காதலிக்கிறவையாள தான் இவ்வளவு நாளைக்கு சகித்து கொள்ள முடியும் அது தான் சொன்னான் பாருங்கோ.. ^_^

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உண்மையிலே இவர்களை வாழ்த்தான் வேண்டும்.:lol:

இருந்தாலும் எங்களின் திருமண நாள் மே 25, அதனால் நாங்கள் அவர்களை விட ஒரு நாள் கூடவாக்கும். :D^_^

ஓ...மாமாவின் திருமண நாள் மே 25..(சொல்லவே இல்ல மாமா :) )...ம்ம் வாழ்த்துக்கள் மாமா பிந்தி போச்சு கோவித்து போடாதையுங்கோ என்ன :lol: ..நீங்களும் இப்படி 80 வது திருமண தினத்தை கொண்டாட வேண்டும் அத நம்மன்ட்ட நெடுக்ஸ் தாத்தா யாழில போடனும் :lol: அத பார்த்து நான் கருத்து எழுதனும் என்டு வாழ்த்துறன்..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..எல்லாம் மாமா மேல இருக்கிற பாசம் தான்... :D

அது சரி மாமா..கிரிகேட்டில 100 ரன் அடிக்கிறது ரொம்ப கஷ்டம் இல்ல ஆனா மனிசி கூட வாழுற ஒவ்வொரு நாளும் சரியான கஷ்டமாம் உண்மையே... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...மாமாவின் திருமண நாள் மே 25..(சொல்லவே இல்ல மாமா :wub: )...ம்ம் வாழ்த்துக்கள் மாமா பிந்தி போச்சு கோவித்து போடாதையுங்கோ என்ன :) ..நீங்களும் இப்படி 80 வது திருமண தினத்தை கொண்டாட வேண்டும் அத நம்மன்ட்ட நெடுக்ஸ் தாத்தா யாழில போடனும் :wub: அத பார்த்து நான் கருத்து எழுதனும் என்டு வாழ்த்துறன்..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..எல்லாம் மாமா மேல இருக்கிற பாசம் தான்... :lol:

அது சரி மாமா..கிரிகேட்டில 100 ரன் அடிக்கிறது ரொம்ப கஷ்டம் இல்ல ஆனா மனிசி கூட வாழுற ஒவ்வொரு நாளும் சரியான கஷ்டமாம் உண்மையே... :wub:

அப்ப நான் வரட்டா!!

மனுசிகூட வாழறது கஸ்டமில்லை என்பதை நிருபித்து விட்டாங்கள்

Link to comment
Share on other sites

மனுசிகூட வாழறது கஸ்டமில்லை என்பதை நிருபித்து விட்டாங்கள்

அட....நம்ம கறுப்பி அக்கா..(கண்டு கனகாலம்)..எப்படி சுகங்கள்?? :wub: ...அட அவருக்கு உலக அதிசயமா ஒரு மனிசி கிடைத்து போச்சு..(எல்லாம் மனிசிகளும் அப்படி தானா என்ன??)... :wub:

இப்ப பாருங்கோ கறுப்பி அக்கா..(நாய் குரைத்தா பிஸ்க்ட்டை போட்டா கம்மென்று இருக்கும் :wub: )...ஆனா அங்கால நான் சொல்ல மாட்டன்..பிறகு யாழ்கள அக்காமார்,தங்கச்சிமார்,ஆண்டி

மார் எல்லாரும் என்ன ஏசுவீனம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கும் உவையைப் போல வாழத்தான் விருப்பம். ஆனா, எனக்கு வாறவருக்கும் அந்த விருப்பம் இருக்கவேணுமே???? :icon_mrgreen::wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்:

அதுமட்டுமன்றி.. எமது பெண்கள்.. தங்களின் அடுத்த திட்டங்களை.. ஒன்றில் சாப்பாட்டு வேளையில் சொல்வார்கள்.. அல்லது மனிசங்காரன் நிம்மதியா தூங்குவம் என்று படுக்கையில விழுற நேரம் சொல்வார்கள்.. அத்தோடு... சாப்பாடும் போச்சு.. நித்திரையும் போச்சு.. வாழ்க்கையில பிடிப்பும் போயிடும்..!

இன்னும் சில பெண்களுக்கு அன்பா கதைப்பது.. பழகுவது என்றாலே என்னென்று தெரியாது. இப்படியான.. ஜென்மங்களை எல்லாம் கட்டிட்டு.. பாவம் எங்கள் தமிழ் பொடியள்.

உந்த வசனத்துக்கு உங்கடை பேரை கல்வெட்டிலை தான் பதிக்கோணும் நெடுக்ஸ் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.