Jump to content

மலர் கொண்டு வருவன் மண் மீது தூவ .................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலர் கொண்டு வருவன் ..........

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு

பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன்

பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான்

,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன்

பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும்

படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும்

சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத

கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால்

விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்

பல்கலைக்கு காலடி நான் வைத்த போது

கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு

பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன்

பேறு எடுத்த கடைக்குட்டிபெட்டை நான்

பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன்

பாங்கை அணைத்து வளர்த்திட்டாள் பள்ளி சென்று நானும்

படிக்கையிலே பக்குவமாய் பாடங்கள் பலதும்

சொல்லிதந்தவழிகாட்டி கடை குட்டி என் மீதே

கூடிய கரிசனம் கண்ணின் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால்

விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்

பல்கலை கழகத்துக்கு காலடி நான் வைத்த போது

கண் காணா தேசம் கவனமடி கண்மணியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................

கவிதை நல்லாக இருக்கிறதே.. ஆனால் நிறைவுற இன்னும் வரிகள் இருக்கின்றனபோல தெரிகிறதே! தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை ......

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்து

இரகமில்ல வான் குண்டு என் தாய் சிதைத்து என்று

விம்மி வேடிதேன் விழுந்து புரண்டேன்

காலனே உனக்கு கண் இல்லையா

அயல் உறவு உஉரோடு புலம் பெயர

என் தாய் ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

Link to comment
Share on other sites

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்து

இரகமில்லா வான் குண்டு என் தாயை சிதைத்தது என்று

விம்மி வெடித்தேன் விழுந்து புரண்டேன்

காலனே உனக்கு கண் இல்லையா

அயல் உறவு ஊரோடு புலம் பெயர

என் தாயை ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

உங்களுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவமா? ஒவ்வொரு தமிழருக்கும் ஒவ்வொரு சோதனைகள்.. வேதனைகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணா ....

மலர் கொண்டு வருவேன் மண் மீது தூவ ..............என் சொந்தகதை

சில திருத்தங்கள் உடன் ......... நன்றி ...........தங்கள் பாராட்டுக்கு .....

யாழ் கள உறவுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

மண்மீதூ மலர் தூவவோ?

வாழ்க்கையிலை மண் அள்ளி போட்டதை ஏவ்வளவு இலகுவாய் சொல்லுகிறீர்கள்

Link to comment
Share on other sites

மண்மீதூ மலர் தூவவோ?

வாழ்க்கையிலை மண் அள்ளி போட்டதை ஏவ்வளவு இலகுவாய் சொல்லுகிறீர்கள்

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

இதுதான் அந்த வரி.. இதற்குள் உணர்வுடன் கூடிய அர்த்தங்கள் உள்ளன..!!

Link to comment
Share on other sites

மண் கொண்டு சென்றாலும் மலர் தூவ நான் வருவேன் ....

இதுதான் அந்த வரி.. இதற்குள் உணர்வுடன் கூடிய அர்த்தங்கள் உள்ளன..!!

இருக்கு ஆனா இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் poikai , சோழியன் .........

மலர் கொண்டு வருவேன் மண் மீது .............. தூவ .

தங்கள் தலைப்பு ...மண் கொண்டு சென்றாலும் ...மலர் தூவ நான் வருவேன்

மிகவும் சரியானதும் பொருத்தமானதும் . ஏற்று கொள்கிறேன் .......... .

மிக்க நன்றி . இந்த புதிய வரவை ..திருத்தியமைக்கு மிகவும் நன்றி..

.தங்களின் உதவி என்றும் தேவை என்று கூறி விடை பெறும்/.

நிலாமதி .

Link to comment
Share on other sites

நிலாமதி உங்கள் சொந்த அனுபவத்தை கருவாகக் கொண்டு கவி புனைந்தாலும். ஒவ்வொரு தமிழனின் நிலையும் இதைப் போல்தான் இருக்கிறது. உங்கள் கவிதை யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள். தொடர்ந்தும் நல்ல கவி படைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரசிகை ..............

தங்கள் தட்டிக் கொடுப்புகள் ,வாழ்த்துக்கள்

எனை மேலும் ஊக்குவிக்கும் ...

தோழமயுள்ள வணகமுடன் நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் கவிப்புலமை

Link to comment
Share on other sites

நிலா மதி அக்காவின் கவிதை கண்டு மனதில் மகிழ்ச்சி :o ஆனால் கவி வரிகளை வாசித்தில் மனதில் என்னை அறியாமல் ஒரு உறுத்தல் அக்கா..பல தமிழர்களின் சொந்த கதையையும் உங்கள் சொந்த கதையும் உட்புகுத்தி வரைந்த கவி வரிகள் ஆழம் அக்கா.. :D

மண் கொண்டு சென்றாலும்

மண்ணில் மலர் தூவி மீள

வந்தாலும்..

மனதில் என்றும் வாழ்வாள்

உங்கள் தாய்.. :o

அந்த தாய் வாழும் மனம்

கனக்கலாமா??..

உங்கள் பாரத்தை இறக்குங்கள்

சகோதரியே.. :o

உங்கள் கவிதை வரிகளை மீளவும் சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில் தற்போது விடைபெறுகிறேன்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.