Jump to content

மீன் சொதி


Recommended Posts

SOTHI.jpg

எங்க சொதி உலகத்தில் இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது.

சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில் அடங்கா...இதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..செய்முறைய படிச்சமா, பதில் போட்டமா என இருக்காமல் ஒரு தடவை சமைத்து உண்டு தான் பாருங்களேன். அதன் பின்னர் நீங்களும் "சொதி ஸ்பெஸலிஸ்ட்" (யாராவது தமிழ்படுத்தி தாருங்கள்) ஆகிடுவிங்க.

அசைவத்தில் முட்டை சொதி, மீன் சொதி, இறால் சொதி, இறைச்சி சொதி, கருவாட்டு சொதி என பல வகை உண்டு. அதில் மிகவும் முக்கியமானது மீன் சொதி தான். சாதம், இடியப்பம், பிட்டு என பலதிற்கும் ஜோடி போடும் தகுதி சொதிக்கு உண்டு. இத்தனை ஆர்ப்பாட்டம் இருந்தாலும், சொதி வைப்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. மிகவும் குறுகிய நேரத்தில் சமைக்கலாம்.

தேவையானவை:

மீன் 500கிராம்

பச்சைமிளகாய் 5

பெரியவெங்காயம் 1

கறிவேப்பிலை 1 கெட்டு

வெந்தயம் 1 மே.க

பெரும்சீரகம் 1 3/4 மே.க

மஞ்சள்தூள் 1 தே.க

தேங்காய்பால் 1 கப்

உப்பு தேவையான அளவு

செய்யவேண்டியது:

1. மீனை சுத்தம் செய்து கொள்ளுங்க. பெரிய மீன் என்றால் துண்டுகளாக்குங்க. சின்ன மீன் என்றால் அப்படியே போடலாம். தப்பில்லை.

2. பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்க. வெங்காயத்தை சுத்தம் செய்து, அதையும் நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்க.

3. ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, ம.தூள், வெந்தயம், சீரகத்துடன் 2 கப் நீரையும் சேர்த்து அடுப்பில் கொதிக்க வையுங்க.

4. பொதுவா 10 நிமிடம் வரை கொதிக்க விடலாம். நீர் அதிகம் தேவை எனில் சேர்க்கலாம்.

5. இப்போ மீனை சேர்த்து 5 நிமிடத்திற்கு அவியவிடணும். மீன் அவிந்து வரும் பதம் உங்களுக்கே தெரியும் தானே. சின்ன மீன் என்றால் அதிக நேரம் தேவையில்லை.

6. மீன் அவிந்ததும் இறுதியாக பாலை சேர்க்கணும். உப்பு போட்டு சரியான அளவு இருக்காண்ணு பார்த்துக்குங்க. பின்னாடி வருத்தப்படக்கூடாதில்லையா.

7. 3-4 நிமிடங்களுக்குள் அடுப்பில் இருந்து இறக்கணும். இப்போ சுவையான சொதி ஆயத்தமாகிவிட்டது.

sothi3.jpg

(மீன்சொதி என எழுதியிருக்கேன். சொதி மட்டும் இருக்கு. மீனை காணலை, நீந்தி போயிடிச்சா என உங்களில் சிலர் கேட்ப்பிங்க. அதனால சொதிய கொஞ்சம் எடுத்திட்டு மீனையும் படம் எடுத்திருக்கேன் (நாங்க யாரு ;)))

Link to comment
Share on other sites

ஆகா சொதிவாய்.......ஊறுது :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரம் சொதி.. நல்லா இருக்குது. மிணக்கட்டு இவ்வளவு சமையல் செய்யுறீங்களே.. கை கால் வலிக்காதா..??! இப்ப எல்லாம் பெண்களுக்கு சமையலறைப் பக்கம் போறது என்றாலே தலையிடி வந்து "ரேக் எவேக்கு" போகச் சொல்லுது.. அதுதான் கேட்டேன்..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் சொதி எல்லாச்சாப்பாட்டுக்கும் ஒத்துப்போகும்.அதுவும் இடியப்பத்துக்கு சொல்லி வேலையில்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா இறக்கும் பொழுது இந்த சொதிக்கு கொஞ்சம் தேசிக்காய் புளியும் சேர்த்தா சுவை சொல்லி வேலையில்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா இறக்கும் பொழுது இந்த சொதிக்கு கொஞ்சம் தேசிக்காய் புளியும் சேர்த்தா சுவை சொல்லி வேலையில்லை :)

வசனம் கொஞ்சம் சிக்குது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசனம் கொஞ்சம் சிக்குது :lol:

தாத்தா "இறக்கும் பொழுது" என்றால் அடுப்பிலிருந்து சொதியை இறக்கும் பொழுது அதாவது சொதி வைத்து முடிஞ்சா பிறகு அடுப்பிலிருந்து எடுப்பீர்கள் தானே அப்பொழுது. :)

இப்ப சரியா அல்லாது இன்னும் சிக்குதா??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச்சொதியும் இடியப்பமும் முட்டைப்பொரியலும்் அந்தமாதிரி இருக்கும்.

தாத்தா "இறக்கும் பொழுது" என்றால் அடுப்பிலிருந்து சொதியை இறக்கும் பொழுது அதாவது சொதி வைத்து முடிஞ்சா பிறகு அடுப்பிலிருந்து எடுப்பீர்கள் தானே அப்பொழுது. :)

இப்ப சரியா அல்லாது இன்னும் சிக்குதா??? :wub:

இப்ப வசனம் சிக்கவில்லையாம் தொன்டைக்குள்ள மீன் முள்ளுதான் சிக்குதாம் :wub:

Link to comment
Share on other sites

மீன் வாங்கினா தலையை சொதி வைப்பது வழக்கம் , அதுதான் சுவை கூட என்டு சொல்லுவினம்..! வீட்ட தலைக்கறிக்கு அடிபாடே நடக்கும். நாங்க சண்டை பிடிக்க எங்க வீட்டு பூனை குஷியாக தலையை எடுத்திட்டு போயிடுவார்)

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு உங்கட சொதி தூயா. ஆனா தேங்காய்ப்பால் பாவித்தா கொலஸ்ரோல் வந்துவிடுமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் இருக்கு உங்கட சொதி தூயா. ஆனா தேங்காய்ப்பால் பாவித்தா கொலஸ்ரோல் வந்துவிடுமே...

உப்புடி பாக்கப்போனால் நாங்கள் எல்லாரும் எப்பவோ கொலஸ்ரோல் வந்து அவதிப்பட்டிருக்கோணுமெல்லோ

ஊரிலை காலைச்சாப்பாடு தொடக்கம் இரவுச்சாப்பாடு வரைக்கும் தேங்காய்த்துருவல் இல்லாத சாப்பாடு என்ன இருக்கு?

உவங்கள் உந்த கள்ள பரியாரிமார் தங்கடை வருமானத்துக்கு இல்லாதபொல்லாத கதையெல்லாம் எடுத்து விடூறாங்கள்.

நல்லாய் சாப்பிலோணும் நல்லாய் வேர்க்க வேலை செய்யோணும் ஒரு வருத்தமும் மனுசரை அண்டாது

இது எங்கடையள் நாள் முழுக்க கணணிக்கு முன்னாலை இருந்துகொண்டு வாய்க்கு ருசியாய் ஊரிலை சாப்பிட்ட மாதிரி ரசிச்சு ருசிச்சு சாப்பிடோணும் ஆனால் வருத்தம் வரக்கூடாது :)

நமது முன்னோர்கள் நிறைய சாப்பிட்டார்கள். நிறைய வேலை செய்தார்கள்.நோய் நொடி குறைவாகவே இருந்தது :wub:

Link to comment
Share on other sites

ஆயிரத்தில் ஒரு வார்தை. அத்துடன் நம் நாட்டு காலனிலையும் கொஞ்சம் உதவியது. அதை விட, ஊரில் ஒழித்து குடித்த நாங்கள், இப்ப நாகரிகமாக, "ஸ்கோச் ஒன் த ரோக்ஸ்", நாளொரு வண்ணமும், போழுது ஒரு மெனியுமாக அடித்து, சாகும் நாளை, கிட்ட கொண்டு வரும் காலச்சாரமும் வளருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

co0924012.jpg

ஊரிலையும் சுழல்கதிரையிலை இருந்து வேலை செய்யுற ஆக்களுக்கு சாப்பாட்டிலை தேங்காய்ப்பால் சேர்க்கக்கூடாதெண்டு உந்த ஊசி போடுறவை புத்திமதி சொல்லீனமாம்.

Link to comment
Share on other sites

சகோதரம் சொதி.. நல்லா இருக்குது. மிணக்கட்டு இவ்வளவு சமையல் செய்யுறீங்களே.. கை கால் வலிக்காதா..??! இப்ப எல்லாம் பெண்களுக்கு சமையலறைப் பக்கம் போறது என்றாலே தலையிடி வந்து "ரேக் எவேக்கு" போகச் சொல்லுது.. அதுதான் கேட்டேன்..! :rolleyes::lol:

சமையல் செய்தால் ஏன் கை கால் வலிக்கும்?

நான் என்ன 100 பேருக்கா சமைக்கின்றேன்...:lol: எனக்கு இதனால் வலியோ..வெறுப்போ இல்லை..

சமைத்து சாப்பிட வைப்பதில் எனக்கு இஸ்டம்..

தூயா இறக்கும் பொழுது இந்த சொதிக்கு கொஞ்சம் தேசிக்காய் புளியும் சேர்த்தா சுவை சொல்லி வேலையில்லை :)

புளிச்சொதியா?

மீன் வாங்கினா தலையை சொதி வைப்பது வழக்கம் , அதுதான் சுவை கூட என்டு சொல்லுவினம்..! வீட்ட தலைக்கறிக்கு அடிபாடே நடக்கும். நாங்க சண்டை பிடிக்க எங்க வீட்டு பூனை குஷியாக தலையை எடுத்திட்டு போயிடுவார்)

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தான் சந்தோசம் போல..

நல்லாத்தான் இருக்கு உங்கட சொதி தூயா. ஆனா தேங்காய்ப்பால் பாவித்தா கொலஸ்ரோல் வந்துவிடுமே...

:rolleyes: சொதி என்ன தினமுமா சாப்பிட போறிங்க? ;)

Link to comment
Share on other sites

தூயா இறக்கும் பொழுது இந்த சொதிக்கு கொஞ்சம் தேசிக்காய் புளியும் சேர்த்தா சுவை சொல்லி வேலையில்லை :rolleyes:

இறக்கும் பொழுது பால் அல்லது தண்ணி தான்! தேசிக்காய் புளி சேர்த்து சொதி எல்லாம் விடமாட்டார்கள்! :lol:

பின் இன்னிசையோடு இனிய இறுதி பயணம் ! :lol::)

Link to comment
Share on other sites

அட...சோதியோ பார்க்கவே வாய் ஊறுது :D ..நேக்கு ரொம்ப நன்ன விருப்பம் அல்லோ..அட அம்மா நேக்கு வந்து சோச்சா செய்து பிறகு மீன் குழம்பு,மீன் சோதி வைத்து மீனும் பொறிப்பா சொல்லி வேளையிள்ள சாப்பிட நினைக்கவே பசிக்குது பாருங்கோ...

நேக்கு மீன் சொதியை விட "இறால் சொதி" தான் ரொம்ப நன்னா பிடிக்கும்..(அது தனி சுவை அல்லோ) :o ..மற்றது தங்கச்சி தக்காளி சொதியும் வைக்கிறவையள் நன்ன ருசி பாருங்கோ..(அதுகுள்ள வந்து உருளை கிழங்கு எல்லாம் வெட்டி போட்டு செய்வீனம்) :D ..நேக்கு எப்படி செய்யிறது எண்டு எல்லாம் தெரியா அம்மா செய்து தருவா நான் நன்னா சாப்பிடுவன் அது மட்டும் தான் தெரியும் பாருங்கோ.. :o

மற்றது உந்த சோதி சாப்பிடக்க அநேகமா நேக்கும் எண்ட அப்பாவிற்கும் பிரசினை வாறது அல்லோ :o ஏன் எண்டு சொன்னா சிரிக்க கூடாது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் என்னவெண்டா சாப்பிட்டு முடிய கடசியா "பிளேட்டில" இருக்கிற சோதியை உறிஞ்சு குடிப்பன்.. :D

அடடா "பிளேட்டில" கடசியா சொதியை உறிஞ்சி குடிக்கிற சுகமே தனி சுகம் பாருங்கோ..(ஆனா என்ன அப்பா கண்டா கத்துவார் உப்படி எல்லாம் செய்ய கூடாது எங்கையும் போனா உந்த பழக்கம் தான் வரும் எண்டு :D ஆனா நாம குடிக்கிறது தான்)..இப்ப உதை நினைத்து பார்க்க சிரிப்பா இருக்கு.. :D

நன்றி தங்கச்சி சொதி பற்றிய செய்முறையில் எனக்கு பழசை ஞாபகமூட்டியமைக்கு :( ..உந்த சிந்து உணவக சொதி இருக்கே அது வெறும் தண்ணி மாதிரி சகானா உணவக சொதி பரவால்ல.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆனா என்ன அப்பா கண்டா கத்துவார்

இது அநியாயம்...

Link to comment
Share on other sites

இது அநியாயம்...

ம்ம்..சரியா சொன்னீங்க.. :lol: (ஆனா அவர் ஏன் கத்துறவர் எண்டா எங்கையாச்சும் போனாலும்)..நான் உப்படி தான் சாப்பிட்டு முடிய சொதியை உறிஞ்சி குடிப்பன் எண்டு.. :lol: (தங்கச்சியும் இப்படி குடிக்கிறனியளோ).. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..சரியா சொன்னீங்க.. :lol: (ஆனா அவர் ஏன் கத்துறவர் எண்டா எங்கையாச்சும் போனாலும்)..நான் உப்படி தான் சாப்பிட்டு முடிய சொதியை உறிஞ்சி குடிப்பன் எண்டு.. :lol: (தங்கச்சியும் இப்படி குடிக்கிறனியளோ).. :)

அப்ப நான் வரட்டா!!

அண்ணன் எவ்வழியோ..தங்கையும் அவ்வழியே..;)

Link to comment
Share on other sites

அண்ணன் எவ்வழியோ..தங்கையும் அவ்வழியே..;)

ஆகா..புல்லரிக்குது அது சரி இன்னைக்கு என்ன சமைத்தினியள்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆகா..புல்லரிக்குது அது சரி இன்னைக்கு என்ன சமைத்தினியள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இட்லி :)

அங்கு?

Link to comment
Share on other sites

இட்லி :lol:

அங்கு?

இட்லியா அச்சோ எனக்கு பிடிக்காது தங்களுக்கு பிடிக்குமா :) இங்கு வந்து பிட்டும்,ஆட்டு இறைச்சியும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இட்லியா அச்சோ எனக்கு பிடிக்காது தங்களுக்கு பிடிக்குமா :) இங்கு வந்து பிட்டும்,ஆட்டு இறைச்சியும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

மாமாக்கு பிடிக்கும்...அவருக்காக செய்தது

எனக்கு அப்பம் பிடிக்கும்

இரவில் ஆட்டிறச்சியா???????????????

Link to comment
Share on other sites

மாமாக்கு பிடிக்கும்...அவருக்காக செய்தது

எனக்கு அப்பம் பிடிக்கும்

இரவில் ஆட்டிறச்சியா???????????????

அட..மாமாவிற்காக செய்ததோ..(இப்ப மாமா ஒழுங்கா தானே இருக்கிறார்) :lol: ..அச்சோ நான் பகிடிக்கு பிறகு ஏச கூடாது சொல்லிட்டன்..ம்ம்..நேக்கு முட்டை அப்பம் மட்டும் பிடிக்கும் இல்லாட்டி சரியா இனிக்கும் ஒரு அப்பம் நேக்கு பெயர் என்னவெண்டு தெரியாது.. :) (உங்களுக்கு தெரியுமோ).. :lol:

ம்ம்..இரவில ஆட்டு இறைச்சி சாப்பிட கூடாதா??..(நாம எப்பவும் சாப்பிடுவோமல) :lol: ..அது சரி தங்க ஊரில காலநிலை எப்படி இருக்கு குளிரா??.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அது பாலப்பம்

பயங்கர குளிர்..அங்கு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.