Jump to content

யாழ் இணையம் உருவாக்கிய ஓர் இனிய கலைஞனின் அறிமுகம்!


Recommended Posts

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!

இண்டைக்கு நான் ஒரு வித்தியாசமான கலைஞரை உங்கள் முன் அறிமுகம் செய்து வைக்கப்போறன். :D

உங்களுக்கு தெரியும் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!" எண்டு ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிது. அதாவது...

கலைஞர்கள் என்பவர்கள் மக்களை மகிழ்வித்து அவர்களை கொஞ்சநேரம் தமது பிரச்சனைகள, துயரங்கள மறந்து அமைதியாக, சந்தோசமாக இருப்பதற்கு உதவுகின்றார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேல்.. மற்றது சத்தியராஜ், கமல், ரஜனி, சூரியா, விஜய்... எண்டு சினிமாவில நடிக்கிற ஆக்கள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டு இல்ல. பாட்டு படிக்கிற ஆக்கள், வாத்தியங்கள் வாசிக்கிற ஆக்கள், நடனம் ஆடிற ஆக்கள் இவேள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டும் இல்ல. :D

ஊரில நான் இருக்கேக்க திருவிழாக்காலங்களில அடிக்கடி கோயிலுக்கு நாதஸ்வரம் தவில் கச்சேரிகள் பார்க்கப்போவன். அப்ப அங்க ஒருத்தர் வந்து கச்சேரி செய்யுற மேளகாரருக்கு பக்கத்தில இருந்து மேளம் அடிக்க அடிக்க தாளத்துக்கு ஏற்றபடி விரலயும், கையயும், தலையையும், உடம்பையும் ஆட்டி ஆட்டிக்கொண்டு இருப்பார். எனக்கு தவில் கச்சேரி பார்க்கிறதவிட இவர் என்ன அபிநயங்கள் செய்யுறார் எண்டு பார்க்கிறதில இன்னும் சரியான விருப்பமா இருக்கும். அவர் செய்யுற அபிநயங்கள பார்த்து ரசிச்சிக்கொண்டே இருக்கலாம். அப்பிடி...

மக்களை மகிழ்விப்பது என்பது ஒரு கலை. அதுக்கு ஒரு இசைக்கலைஞராகவோ இல்லாட்டி பாடகராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்ல. மற்றவர்களை சந்தோசப்படுத்துவது என்பது, மற்றவர்களை கலகலப்பாக வைத்து இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. இதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். :) இந்தவகையில...

நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு காரணமாக இருந்த ஒருவரை இன்றைக்கு கலைஞர்கள் பட்டியலில உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறன். அதாவது இந்தக்கலைஞர் படைக்கின்ற கலை என்பது..

யாழ் இணையத்தில கலகலப்பாக எழுதி சரவெடிகள் போட்டு... சிந்தனையத்தூண்டும் கேள்விகள் கேட்டு... இப்படி அரட்டை அடிக்கும் கலையில வல்லுனராக இருக்கும் ஒருவர். அரட்டை அடிக்கிறது ஒரு கலையோ எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. நிச்சயம் கருத்தாடல் தளம் ஒன்றில கலகலப்பான முறையில் கருத்து எழுதுவது என்பது ஒரு கலையே! இந்தக்கலையில் வல்லுனராக இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. பலரால் இங்கு எழுதக்கூடியதாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் மனங்களை நோகடிக்காது... சரவெடிகள் கொளுத்துவது என்பது எல்லாராலும் முடியாது :D .

இஞ்ச யாழ் இணையத்துக்கு வருகைதருகின்ற பலரும் பொழுதுபோக்கவே வருகின்றார்கள் என்பது மறுக்கப்படமுடியாத ஒரு உண்மை. இங்கு யாழில பலர் கலகலப்பாக அரட்டை அடிப்பதால் அவற்றை வாசிப்பதற்காகவே பல வாசகர்கள் வருகின்றார்கள் என்பதும் மறைக்கப்படமுடியாத உண்மை. யாழ் இணையம் எனக்கும்கூட இந்தவகையில்தான் அறிமுகமாகிக்கொண்டது.

யாழ் இணையம் உருவாக்கிய இந்த இனிய கலைஞரை பற்றி சொல்லது என்றால் சுருக்கமாக இரண்டு வரிகளில் இப்படி சொல்லலாம்:

நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு முன்னம் யாழ் வாசகனாக மட்டும் இருக்கேக்க இவர் எழுதுற கருத்துக்கள தேடித்தேடி வாசிப்பன். இவரிண்ட படம் உள்ள கருத்துக்கள் யாழில எங்கையாவது இருக்கிதோ எண்டு பார்த்து அதுகள முக்கியமா முதலில வாசிப்பன். நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு இவர் கொஞ்சம் பகிடியா எழுதி.. கலகலப்பாக இருந்தமையும் ஒரு காரணம். சிலர் இவரை சீண்டி விளையாடினாலும், சிலர் இவரை கிண்டல் செய்தாலும்... தான் சோர்ந்துபோகாது.. தொடர்ந்து கலகலப்பாக எழுதி எம்மை மகிழ்விப்பவர்.

எங்க சரியாக ஊகிக்ககூடியதா இருக்கிதோ யார் அவர் எண்டு?

சொல்லுங்கோ....

அவர் யார்?

..........???

அவர் வேறு யாருமல்ல....

சொல்லில் மட்டும் வாழாது செயலிலும் வாழும் உத்தமர்...

நான் குறிப்பிட்ட அந்தநாட்டுக்கு செல்லும்போது முதலாவதாக சந்திக்க விரும்புபவர்...

தனது சுவாரசியமான கருத்துக்கள் மூலம் அடிக்கடி எம்மை ஊருக்கு கூட்டிக்கொண்டு போபவர்...

நேசக்கரம் எண்டு யாழில பணஉதவிகேட்கப்பட்டபோது முதலாவதாக ஓடிவந்து உதவிசெய்தவர்...

தனிப்பட்ட வாழ்வில் இரண்டு வேலைகள் செய்து கடுமையாக உழைத்துக்கொண்டு அதேநேரம் நேரம்கிடைக்குபோது யாழிலும் எம்முடன் இணைந்து இருப்பவர்...

நான் யாழ் இணையத்தில் இருந்து விலகவேண்டுமென நினைத்தபோது எல்லாம் எனது மனக்கண்களில் தோன்றி இப்படியான இனிய ஒரு உறவை இழக்கக்கூடாது என்பதற்காக யாழில் தொடந்தும் என்னை மானசீகமாக நிலைத்து நிற்கச் செய்தவர்...

சரி இவ்வளவு பெருமைக்குரிய யாழ் கலைஞன் யார் எண்டு நினைக்கிறீங்கள்?

ஜொள்ளு மன்னர்...

அன்புக்குரிய எங்கள் அண்ணன்...

சொல்லுங்கோ....

அவர் யார்? ^_^

அவர்..

வேறு யாருமல்ல...

அன்புக்குரிய எங்கள் தாத்தா, பெரியப்பா, அண்ணா குமாரசாமி அவர்களே இந்தப்பெருமைக்குரிய கலைஞன்! :D

இன்றுபோல் என்றும் யாழில் நிலைத்து நின்று ஜொள்ளுகள் விட்டு மக்களை மகிழ்வித்து நீண்ட ஆயுளுடன் சுகதேகியாக வளமுடன் வாழ குமாரசாமி அண்ணாவை இதயபூர்வமாக நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். :D

உங்களால தமிழ் சினிமாவில வாற பகிடிகளபார்த்து ரசிக்கக்கூடியதாக இருக்கிது எண்டால்... தமிழ்சினிமாவில வருகின்ற ஆக்கள கலைஞர்கள் எண்டு நீங்கள் சொல்லுவீங்களாக இருந்தால் என்னால குமாரசாமி அண்ணாவின் அறுவைகளையும் வாசிச்சு மகிழ முடிகின்றது. யாழ் இணையத்தில் எழுதுகின்ற குமாரசாமி அண்ணாவையும் ஓர் சிறந்த கலைஞனாக என்னால் தரிசிக்க முடிகின்றது. :D

பந்தி பந்தியாக எழுதுபவர்கள்தான் படைப்பாளிகள் என்று சொல்வதற்கு இல்லை. இரண்டு வசனங்களில் துணுக்குகளாக எழுதி எம்மை இன்புறச்செய்யும் குமாரசாமி அண்ணா அவர்களும் எனது கண்களுக்கு ஒரு சிறந்த படைப்பாளியாகவே தெரிகின்றார். :)

**** **

**** **

**** **

**** **

**** **

**** **

அவையஞ்சாமை: குறள் - 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்

பொருள்: கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்

123623814843335f5304067.gif

நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மாப்பு.நானும் உங்களை மாதிரித்தான் இப்படியான எழுத்துக்களை விரும்பி ரசிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி:

மக்களை மகிழ்விப்பது என்பது ஒரு கலை. அதுக்கு ஒரு இசைக்கலைஞராகவோ இல்லாட்டி பாடகராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்ல. மற்றவர்களை சந்தோசப்படுத்துவது என்பது, மற்றவர்களை கலகலப்பாக வைத்து இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. இதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். இந்தவகையில...

யாழ் இணையத்தில கலகலப்பாக எழுதி சரவெடிகள் போட்டு... சிந்தனையத்தூண்டும் கேள்விகள் கேட்டு... இப்படி அரட்டை அடிக்கும் கலையில வல்லுனராக இருக்கும் ஒருவர். அரட்டை அடிக்கிறது ஒரு கலையோ எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. நிச்சயம் கருத்தாடல் தளம் ஒன்றில கலகலப்பான முறையில் கருத்து எழுதுவது என்பது ஒரு கலையே! இந்தக்கலையில் வல்லுனராக இருப்பது என்பது எல்லாராலும் ஏலாது. பலரால் இங்கு எழுதக்கூடியதாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் மனங்களை நோகடிக்காது... சரவெடிகள் கொளுத்துவது என்பது எல்லாராலும் முடியாது

நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு முன்னம் யாழ் வாசகனாக மட்டும் இருக்கேக்க இவர் எழுதுற கருத்துக்கள தேடித்தேடி வாசிப்பன். இவரிண்ட படம் உள்ள கருத்துக்கள் யாழில எங்கையாவது இருக்கிதோ எண்டு பார்த்து அதுகள முக்கியமா முதலில வாசிப்பன். நான் யாழ் இணையத்தில இணையுறதுக்கு இவர் கொஞ்சம் பகிடியா எழுதி.. கலகலப்பாக இருந்தமையும் ஒரு காரணம். சிலர் இவரை சீண்டி விளையாடினாலும், சிலர் இவரை கிண்டல் செய்தாலும்... தான் சோர்ந்துபோகாது.. தொடர்ந்து கலகலப்பாக எழுதி எம்மை மகிழ்விப்பவர்.

என்னுடைய மனதில் உள்ளதை அப்படியே எழுதியுள்ளீர்கள் முரளி .

குமாரசாமியண்ணை யாழிற்கு வராத நாட்களை ஏக்கத்துடன் பார்ப்பேன் . அவரது பணி தொடர வாழ்த்துக்கள் .

குமாரசாமியண்ணையின் கருத்துக்களை ஒன்றாக திரட்டி ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வந்த முரளிக்கும் எனது நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கலைஞன்,

இன்னொரு கலைஞனை அறிமுகப்படுத்தும் போது இளைய சமுதாயத்தின் விசாலமான மனசு தெரிகிறது.

யாழ்வாசகியாகமட்டுமே பலகாலம் இருந்தேன். நெடுக்ஸ் அண்ணை, மாப்பிள்ளையென்று உள்நுழைந்து கலைஞனாகி தற்போது இரண்டுமே நான் தான் என்கின்றமுரளி,ஜம்மு இவர்கள் கருத்தெல்லாம் தான் நான் யாழுக்கு உறுப்பினராக மிக முக்கிய காரணம். குமாரசாமி அண்ணையின் கருத்துக்களில் உள்ள தெளிவும் நகைச்சுவையும் கூட எனக்கும் மிகப் பிடிக்கும்.

நன்றி கலைஞா. எப்போதும் ஏதாவது வித்தியாசமாகப் படைத்துக் கொண்டிருப்பதால் "கலைஞன்" என்றபெயரே உங்களுக்கு வெகு பொருத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரட்டைகளின் தலைவன் என்ற பதத்தை வளங்கிக் கௌரவிக்கின்றேன்

Link to comment
Share on other sites

கு.மா அண்ணாவுக்கும், ஜம்மு பேபிக்கும் இடையிலான உரையாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

Link to comment
Share on other sites

கு..சா சுருங்கச் சொன்னாலும் உறைக்குமாறு சொல்வார்..! யாழின் மூத்த குடி அவர்தான்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி முரளி.

எங்களையும் பற்றி இப்படி ஏதும் எழுதமாட்டீர்களோ? எவ்வளவு செலவாகும்...

Link to comment
Share on other sites

:lol:முன்பு சின்னப்பு கலக்கிக் கொண்டிருந்தார். இப்போ கு.சா கலக்குகின்றார். என்றுமே கலக்கல் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.:lol:
Link to comment
Share on other sites

சின்னப்புவும் கால்பந்து போட்டியோடை யாழ் களத்தில் இறங்கியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

நுணாவிலான்

இப்ப சின்னப்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. மிகமிக அருமையாகவே வருகின்றார். முன்பு இராவணன் மட்டுறுத்தினராக இருந்த போது பார்க்க வேண்டுமே. இராவணன் எவரிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல் இராவணனின் கத்தி எவரையும் விட்டுவைத்ததுமில்லை. சின்னப்புவும் இராவணனைச் செய்யாத கேலியுமில்லை. நிர்வாகமும் கருத்தாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கலகலப்பிற்காக கிண்டல்கள் கேலிகளுடன் ஜாலியாக இருந்த அந்தக் காலம்,

<_< "அது ஒரு கனாக்காலம்" . :icon_idea:

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு.

கு.சா அண்ணா வந்து ஒரு வார்தை சொல்லமாட்டீங்களோ? :D உங்களுக்கு விருது எல்லாம் தந்து கெளரவிச்சு இருக்கிறம். வெளிநடப்பு செய்துகொண்டு இருக்கிறீங்கள். <_< இல்லாட்டிக்கு கு.சா அண்ணாக்கு வெக்கம் வந்துட்டுதோ? :icon_idea:

மணமகனே மணமகனே வா வா

உன் வலது கையை தூக்கி வச்சு வா வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி முரளி இவருடைய பெருமையை எழுதலாம்தானே

வல்லவர் வால்பிடிக்கிறதிலை.

ஜால்ரா போடுறதிலை உலகபிரசித்தம் பெற்றவர்

முக்கியமாக பல வயதுவந்தோர்க்கான இணையங்களுக்கு சொந்தக்காரர்

அப்பு முரளி மறந்துவிடாதையும் பெருமைகளை சொல்லும்

கான மயிலாட கண்டிருந்த .......................

கலக்கல் கு.சா வின் கருத்துக்களுக்கு நான் ரசிகன். குசா தொடருங்கள் உங்கள் பணியை சில வயித்தெரிச்சல்கள் புலம்பும் பெண்ணையர்கள் கதைகளை விட்டவுPடஞ்குளு;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சாவின் ஆக்கங்களை படித்து சிரிப்பவர்களிள் நானும் ஒருவன்.....அதுசரி முரளி நானும் ஒரு கலைஞன் பாருங்கோ.... காரணம் சிட்னி கோசிப் எழுதுவதால் கீ ..கீ...கீ....கீ

Link to comment
Share on other sites

நுணாவிலான்

இப்ப சின்னப்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. மிகமிக அருமையாகவே வருகின்றார். முன்பு இராவணன் மட்டுறுத்தினராக இருந்த போது பார்க்க வேண்டுமே. இராவணன் எவரிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல் இராவணனின் கத்தி எவரையும் விட்டுவைத்ததுமில்லை. சின்னப்புவும் இராவணனைச் செய்யாத கேலியுமில்லை. நிர்வாகமும் கருத்தாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கலகலப்பிற்காக கிண்டல்கள் கேலிகளுடன் ஜாலியாக இருந்த அந்தக் காலம்,

:lol: "அது ஒரு கனாக்காலம்" . :lol:

வசம்பண்ணா..இப்படியெல்லாம் எழுதாதிங்க...."அந்த காலம்" என எழுதி நான் பட்ட அனுபவம் அறிந்துமா இந்த விபரீத ஆசை..

Link to comment
Share on other sites

நுணாவிலான்

இப்ப சின்னப்பு வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. மிகமிக அருமையாகவே வருகின்றார். முன்பு இராவணன் மட்டுறுத்தினராக இருந்த போது பார்க்க வேண்டுமே. இராவணன் எவரிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. அதுபோல் இராவணனின் கத்தி எவரையும் விட்டுவைத்ததுமில்லை. சின்னப்புவும் இராவணனைச் செய்யாத கேலியுமில்லை. நிர்வாகமும் கருத்தாளர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கலகலப்பிற்காக கிண்டல்கள் கேலிகளுடன் ஜாலியாக இருந்த அந்தக் காலம்,

:lol: "அது ஒரு கனாக்காலம்" . :lol:

வசம்பு, மீண்டும் அக்காலம் வருமா? அவ்வினிய காலம் எனக்கு கிடைக்கவில்லை என்பதில் கவலை தான். பார்ப்போம்.யாழ் எனும் கப்பலை எவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் பாருங்கோ அப்செட்டா இருக்கும் போது வானொலியில ஒரு விளம்பரம் கேட்டேன் அமைதியை தேடுங்கள் என்று அதற்கு தான் வழிகாட்டுவதாகவும் நான் ஓடினன் அவருடைய சொற்பொழிவை கேட்பதிற்கு.

அவர் கூறினார் வாழ்க்கைபூரா கனாகாலமாக இருக்க வேண்டும் என்றால் இறந்தகாலம்,எதிர்காலம் எதையும் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் வாழ்ந்தால் வாழ்க்கை கனாகாலமாக இருக்கும் என்று.கள உறவுகளே நீங்களும் நிகழ்காலதிற்கேற்ற மாதிரி இருந்தீங்க என்றால் தற்பொழுதையா யாழும் கனகால யாழாகவே இருக்கும். :lol:

வசம்பு, மீண்டும் அக்காலம் வருமா? அவ்வினிய காலம் எனக்கு கிடைக்கவில்லை என்பதில் கவலை தான். பார்ப்போம்.யாழ் எனும் கப்பலை எவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம் என.

கடல் கன்னி வெடிகள் வெடிக்காமல் இருந்தால் கப்பல் கரையை அடையும் மாலுமியின்ட கெட்டிதனத்தில தான் எல்லாம் இருக்கு நானும் அட்லீஸ்ட் ஒரு உதவி மாலுமியாக இருக்க ஆசைபடுகிறேன். :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா யாழின் ஒரு அழகான கூசா. இது ஒரு தாஜா. :lol:

Link to comment
Share on other sites

அரட்டை அடிப்பவர்களுக்கு கிடைத்த காலம் குமார்சாமி ஜம்மு இருவருக்கும் கிடைத்த குருசந்திர ஜோகத்தை பாருங்கோ வசம்பர் சொன்ன கனாகாலத்தை தான் நானும் எதிர்பார்கிறேன் அது எப்பொழுது வரும் என்பது தான் என் கேள்வியும் தம்பி கவிதன் வாரும் மீண்டும்

Link to comment
Share on other sites

அரட்டை அடிப்பவர்களுக்கு கிடைத்த காலம் குமார்சாமி ஜம்மு இருவருக்கும் கிடைத்த குருசந்திர ஜோகத்தை பாருங்கோ வசம்பர் சொன்ன கனாகாலத்தை தான் நானும் எதிர்பார்கிறேன் அது எப்பொழுது வரும் என்பது தான் என் கேள்வியும் தம்பி கவிதன் வாரும் மீண்டும்

சமீபத்தில்த் தான் இணைந்திருந்தாலும், புதிய மொந்தையில்(பாத்திரத்தில்) பழைய கள் போல, பழைய நினைவுகளையும் உங்களால் அசைபோட முடிவது ஆச்சரியம் தான்!! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுனாவிலன் .................

தங்களிடம் ஒரு பணிவான கேள்வி ....................யாழ் களத்தில் ஏன்

"கருத்து படம்" இப் போதுவருவதில்லை ???????????

வணக்முடன் நிலாமதி.

Link to comment
Share on other sites

அனைவரினதும் கருத்துக்களிற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் குமாரசாமி அண்ணாவுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்று நினைக்கின்றேன்.

கு.சாவின் ஆக்கங்களை படித்து சிரிப்பவர்களிள் நானும் ஒருவன்.....அதுசரி முரளி நானும் ஒரு கலைஞன் பாருங்கோ.... காரணம் சிட்னி கோசிப் எழுதுவதால் கீ ..கீ...கீ....கீ

ஓம் புத்துமாமா. நிச்சயமாக. நான் உங்கட சிட்னி கோசிப்பை தொடர்ந்து ஆர்வத்துடன் வாசிச்சு வாறன். நீங்கள் சுயமாக ஏதோ சிந்திச்சு சொல்லவேணும் எண்டு நினைக்கிறீங்களே, அது பெரிய விசயம். நான் உங்களினதும் ரசிகன் தான். குறிப்பாக முந்தி நீங்கள் அரட்டை அடிக்கும்போது சின்னச் சின்ன துணுக்குகளாக எழுதிற பகிடிகள வாசிக்கிறனான். இப்ப என்னமோ நீங்கள் முந்தி மாதிரி பகிடியா எழுதுறது இல்லை. கொஞ்சம் கடுமையாகீட்டீங்கள் போல இருக்கிது. உங்களுக்க்கு வீட்டில ஏதும் பிரச்சனனயோ தெரியாது. நீங்கள் 100வது சிட்னி கோசிப்பை யாழில் எழுதிமுடிக்கும் போது - சதம் அடிக்கும்போது நிச்சயம் உங்களைப்பற்றி ஏதாவது ஒன்றை யாழில் செய்வேன். :rolleyes: மேலும் யாழில விருதுகள் தந்து கெளரவிக்கப்படுவீர்கள் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன். :rolleyes::unsure:

நன்றி!

Link to comment
Share on other sites

எல்லாருக்கு ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :D ..ஒ..ஒ அந்த கலைஞன் நம்ம கு.சா தாத்தாவோ அட அட...அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் முட்டுது..

நல்லவர்,

வல்லவர்,

பத்தும் தெரிந்தவர்,..(அட எல்லாரும் நாலும் தெரிந்தவர் எண்டு சொல்லுறவை அது தான் நான் கொஞ்சம் வித்தியாசமா :o )..

இப்படியே அவரின்ட பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம்.. :D (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..அட எண்ட தாத்தா என்று பொய் சொல்லல்ல நிசமா தான் சொல்லுறனப்பா..அப்படிபட்ட நம்ம கு.சா தாத்தாவை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன்..(ஒருக்கா போய் தேடிட்டு வரட்டோ)... :o

அச்சோ நான் சும்மா பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ என்ன தாத்தா..நம்ம குரு ஞானோதயம் வந்து யாராச்சையும் பாரட்டினா அது சரியா தான் இருக்கும்.. :D (அட குருவே கோவித்து போடாதையுங்கோ)..அந்த வகையில சரியான ஒரு ஆள தான் நம்ம குரு பாராட்டி இருக்கிறார்..

சொல்ல போனா யாழில ஒவ்வொருவரினது எழுத்துக்கள் ஒவ்வொரு வகையில் பிடிக்கும்..எண்டைக்கும் நகைசுவையாக யாழில் பிடித்த எழுத்து எண்டா கு.சா தாத்தா தான்..(அட எழுத வேண்டும் எண்டு போட்டு சொல்லல்ல நிசமாவே பிடிக்கும் அல்லோ).. :D

ம்ம்..காலையில் யாழை திறந்தவுடன் என்னை அறியாமலே என் கண்கள்..(கு.சா தாத்தாவின் எழுத்துகளை தேடும்)...அந்தளவு என்னை மிகவும் கொள்ளை கொண்ட ஒரு நல்ல மனிசன் :D ..முக்கியமா குரு குறிபிட்டது போல நாம் விடும் தவறுகளை கூட நகைசுவையுடன் மனதை புன்படுத்தாதவாறு பதில் அளிப்பார்...(அது அவரில் என்னை மிகவும் கொள்ளை கொண்ட விடயம்)..

அட இருந்து போட்டு நாம வம்புக்கு இழுக்கிறது ஆனா மனிசன் அசராம பதில் எழுதி போடும் பாருங்கோ :D ..நான் யாழில் இணைந்த காலத்தில் இருந்து இன்று வரை எல்லாரையும் உற்சாகபடுத்தி கொண்டிருக்கும் கு.சா தாத்தா நிஜமாகவே ஒர் உன்னத கலைஞன் தான்..

அவரின் இரு வரி கருத்தில் உள்ள ஆழமும்,அழகும்..(கள்ளு அருந்துவதால் தான் வந்ததோ எண்டு பல தடவை யோசித்திருக்கிறன்)..அப்படியா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.