Jump to content

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்


Recommended Posts

காணாமல் போகடிக்கப்படுதல் சித்திரவதைக்குள்ளாக்கல் விசாரணையின்றி தடுத்த வைத்தல் இவையெல்லாம் சிறீலங்கா அரசு ஒரு இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களாகும்.இந்த மனித உரிமை மீறல்கள்பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் சாட்சி இன்றியே செய்யப்படுகின்றன.இவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அம்பலப்படுத்துவது என்பது மிகப் பெரிய பணியாகும். ஆனால் இதை செய்வதற்கு மிகப்பெரிய முன்னெச்சரிக்கை தேவை. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் சிறிலங்கா உளவுத் துறைக்கோ அல்லது அவற்றோடு இணைந்த நிறுவனங்களுக்கோ அல்லது ஒட்டுக் குழுக்களுக்கு எந்தவிதத்திலும் போய் சேராது என்பது உறிதிப்படுத்தப்பட வேண்டும்.கடந்த காலத்தில் இவ்வாறான முயற்சி ஒன்றை செய்வதாக சொல்லிக் கொண்டு ஒரு ஆசிய நாட்டில் தனதுகையாட்களை வைத்து காய் நகர்த்திய சிறீலங்கா புலனாய்வுத்துறை தாயக விடதலைக்கு தங்களால் முடிந்தளவுக்கு பங்காற்றிய சிலரை அந்த நாட்டு காவல் துறையினரின் உதவியோடு மிக இரகசியமான முறையில் கொழும்புக்கு கொண்டு சென்றிருக்கிறது.பாதிக்கபட்ட ஒருவர் தனது பாதிப்பை வெளிச் சொல்ல தாயாராக இருந்தால் அவருக்கான சட்ட மற்று சிவில் பாதுகாப்பு பற்றியும் அவர் வெளியிடும் தகவலால் அவருக்கு பிரச்சனை இல்லாவிட்டாலும் அவருடன்தொடர்பில் இருந்தவர்களுக்கு பிரச்சனை இல்லையா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டும். முக்கியமாக இந்த ஆவணப் படத்தின் வெளிப்பாட்டு முறையின் அமைப்பியல் கருத்தில் வடிவம் என்ன என்பது தெழிவு படுத்தப்பட வேண்டும்.யாழ் இணையம் இந்த அவணப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை எடுக்குமாக இருந்தால் அதற்கு நான் முழ ஒத்துழைப்ப வழங்கத் தயாராக இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

சுவீசில் தமிழ் தேசியத்தக்கான கட்டமைப்பு எப்படி வெலை செய்கிறது. சிறிலங்கா புலனாய்வுத்துறை கட்டமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதெல்லாம் எனக்கு மிக நன்றாகவே தெரியும் அண்ணா.

Link to comment
Share on other sites

திரு. வசம்பு,

நான் குறிப்பாக அஜீவனை குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி கூறவில்லை. பொதுவாக பங்களிப்பு செய்யாமல் விதண்டாவாதம் செய்யும் எல்லோரையும் குறிப்பிட்டே அக்கருத்தினை முன்வைத்தேன்.

"அம்சா" வைத் தெரியாதா? சென்னையில் துணைத்தூதரகம் அமைத்து அதன் தலையில் அமர்ந்திருக்கும் நபர். அதாவது உயர் ஸ்தானிகர். அந்நபர் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தமிழ் நாட்டிலிருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக எடுக்கும் வஞ்சக நடவடிக்கைகள் ஏராளம். இடையிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு விருந்தும் வைப்பாராம். இதன் மூலம் ஈழத்தமிழர் சார்புக் கருத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்வதுண்டாம். இத்தகவல்கள் அந்நபர் யாரென்பதை இனங்காட்டியிருக்கும்.

அண்மையில் கூட தமிழர் தரப்பே அதிக தவறிழைக்கிறதென மாயை ஏற்படுத்த பத்திரிகைகளில் வந்த செய்திகளை பிரித்தெடுத்து உயர்தரக் காகிதத்தில் அச்சிட்டு தமிழ் நாட்டில் விநியோகித்து தமிழின உணர்வுகளை மழுங்கடிக்க முயன்ற சம்பவம் ஒன்று அண்மையில் வெளியாகிய செய்தி யாழ் களத்திலும் இணைக்கப்பட்டது.

அவ்வாறான நபர் புலத்திலும் யாழ்களத்திலும் ஒன்றுபட்டு உழைக்க முற்படும்வேளையில் ஒற்றுமையைக் குலைக்க முற்படலாம்.

அதனைத்தான் சிலேடையாகக் குறிப்பிட்டேன்.

மேலும் அஜீவன் அவ்வாறு குறிப்பிட்டால் இவ்வாறான நபர்கள் மேலும் என்ன செய்ய முயலுவார்கள்? நீங்களே சொல்லுங்கள். மேலும் வாயைக் கிளற முயற்சிப்பார்களா இல்லையா?

இவை தனிநபர் தாக்குதல்களே வேறெதுவோ அல்ல என் ஆதங்கங்கள்

இது குறித்து தங்கள் கருத்தென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் ஒருவனிடம் இதை செய் அதை செய் என யாரும் உத்தரவிட முடியாது.

கலைஞன் சுதந்திரமானவன். விரும்பியதை செய்யும் உரித்துடையவன்.

படைப்பை புறக்கணிக்கும் ஒதுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை விடுத்து இதை செய் என உத்தரவிடுபவர்களுக்கு -

கலைஞன் பதில் சொல்லத் தேவையில்லை.

அறப்படிச்ச பல்லிகள் கூழ் பானையில் இருந்து குளறத் தான் செய்யும்.

செய்த படைப்பொன்று தரமற்றது என சொல்ல யாவர்க்கும் உரிமை உண்டு.

ஆனால் இதையே படையென்று சொல்பவர்களுக்கு பப்ளிசிட்டிதான் முக்கியம்.

நான் செய்யிறது உனக்கு பிடிக்கலையா... பிடிக்கவில்லை எனச் சொல்லிட்டு போயிட்டே இரு.. இதை செய் அதை செய் என ஆர்டர் போடா தே... என அறிஞர் ஒருவர் சொன்னவர். அவர் பெயர் மறந்து விட்டது.

இன்று தமிழ்த்தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துவதை குறியாகக் கொண்டவர்கள் மத்தியில் - அது குறித்து எதுவும் செய்யாத அஜீவன் - பாராட்டப் படவேண்டியவர் தான்.

Link to comment
Share on other sites

திரு. வசம்பு,

நான் குறிப்பாக அஜீவனை குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி கூறவில்லை. பொதுவாக பங்களிப்பு செய்யாமல் விதண்டாவாதம் செய்யும் எல்லோரையும் குறிப்பிட்டே அக்கருத்தினை முன்வைத்தேன்.

"அம்சா" வைத் தெரியாதா? சென்னையில் துணைத்தூதரகம் அமைத்து அதன் தலையில் அமர்ந்திருக்கும் நபர். அதாவது உயர் ஸ்தானிகர். அந்நபர் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தமிழ் நாட்டிலிருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக எடுக்கும் வஞ்சக நடவடிக்கைகள் ஏராளம். இடையிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு விருந்தும் வைப்பாராம். இதன் மூலம் ஈழத்தமிழர் சார்புக் கருத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்வதுண்டாம். இத்தகவல்கள் அந்நபர் யாரென்பதை இனங்காட்டியிருக்கும்.

அண்மையில் கூட தமிழர் தரப்பே அதிக தவறிழைக்கிறதென மாயை ஏற்படுத்த பத்திரிகைகளில் வந்த செய்திகளை பிரித்தெடுத்து உயர்தரக் காகிதத்தில் அச்சிட்டு தமிழ் நாட்டில் விநியோகித்து தமிழின உணர்வுகளை மழுங்கடிக்க முயன்ற சம்பவம் ஒன்று அண்மையில் வெளியாகிய செய்தி யாழ் களத்திலும் இணைக்கப்பட்டது.

அவ்வாறான நபர் புலத்திலும் யாழ்களத்திலும் ஒன்றுபட்டு உழைக்க முற்படும்வேளையில் ஒற்றுமையைக் குலைக்க முற்படலாம்.

அதனைத்தான் சிலேடையாகக் குறிப்பிட்டேன்.

மேலும் அஜீவன் அவ்வாறு குறிப்பிட்டால் இவ்வாறான நபர்கள் மேலும் என்ன செய்ய முயலுவார்கள்? நீங்களே சொல்லுங்கள். மேலும் வாயைக் கிளற முயற்சிப்பார்களா இல்லையா?

இவை தனிநபர் தாக்குதல்களே வேறெதுவோ அல்ல என் ஆதங்கங்கள்

இது குறித்து தங்கள் கருத்தென்ன?

ஒளவையார்

நன்றி உங்கள் பதில்க்கருத்திற்கு. முதலில் நானும் ஏதோ நீங்கள் :lol: மடிப்பு அம்சாவை :lol: குறிப்பிடுகின்றீர்களோ என்று பயந்துவிட்டேன். நீங்கள் குறிப்பிடுபவர். உயர் ஸ்தானிகர் அல்ல துணை ஸ்தானிகர். அவரைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர் வாங்கும் சம்பளத்திற்கு அரசுக்கு விசுவாசமாக ஏதாவது செய்கின்றார். அதை நாம் பெரிது பண்ணாமல் விடுவதே புத்திசாலித்தனம். காரணம் நாம் அவர் பற்றி விமர்சனம் செய்தால் அது அவருக்குத் தான் சாதகமாகிவிடும். தனது சேவை ஐரோப்பாவரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் புளங்காகிதம் அடைய வழி வகுத்துவிடும்.

ஆனால் இங்கு களத்தில் சிலர் ஏதோ தமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் அடுத்தவரை விமர்சனம் செய்வது தான் வேடிக்கை?? எல்லாம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் செய், இதைச் செய் என்று படம் காட்டுவதை விட்டுவிட்டு தாமே அதைச் செய்யலாமே?? சிலருக்கு தன்மையாக எதைச் சொன்னாலும் புரிவதில்லை, ஆனால் காவடி போல் நெத்தியடியாக நாகரீகமாக எவராவது சொன்னால்த் தான் புரியும் போல. சுவிசிலிருக்கும் எமக்கே இருக்குமிடம் தெரியாத ஒருவர் எம்மைவிட தனக்கு சுவிசைப் பற்றி அதிகம் தெரியும் எனப் படம் காட்டினால் எங்கு போய் முட்டுவது??

மொத்தத்தில் காவடி சொன்னமாதிரி

செய்த படைப்பொன்று தரமற்றது என சொல்ல யாவர்க்கும் உரிமை உண்டு.

ஆனால் இதையே படையென்று சொல்பவர்களுக்கு பப்ளிசிட்டிதான் முக்கியம்.

என்ன முரளி

:( உங்களுக்கு 6 பிடித்த இலக்கமோ?? 6 தரம் போட்டுத் தாக்கியுள்ளீர்கள். :lol:

Link to comment
Share on other sites

நான் முதலில் எழுதிய கருத்தைப் பொய்யாக்குவார்கள் என்று பார்த்தால் அது நடக்காது போல் உள்ளது.பத்துப் பக்கம் யாழில் எழுதி கண்ட மிச்சம் என்ன?

இது வெத்து வெட்டுக் கதை அரங்கம் அல்லாமால் வேறு என்ன?

யாழ் நூலகம் பற்றி சென்னையில் இருந்து ஆவணப்படம் எடுத்த சொமி தரனின் பேட்டியும் அது பற்றி பாலுமகேந்திராவின் கருத்தும்.

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

–இயக்குனர் பாலு மகேந்திரா –

ஒரு பேப்பரில் வெளியான சோமிதரனின் செவ்வி

Filed Under (அரசியல், ஈழம்) by கதிர் சயந்தன் on June-7-2008

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

–இயக்குனர் பாலு மகேந்திரா –

யாழ் நூலகம் -ஒரு பண்பாட்டுப் படுகொலை

யாழ்ப்பாண நூலகம் தொடர்பாக ஆணவப் படம் செய்ய வேண்டுமென ஆர்வம் எப்படி உருவானது?

என் தலைமுறைக்கு - எனக்கு - யாழ் நூல் நிலையத்தை காணும் வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைத்த போதெல்லாம் அது நூலகம் என்ற புரிதல் அற்று அது ஒரு போராளிகளின் நிலையாகவே அறிமுகமாகியது. பின்னர் கோட்டை கைப்பற்றப் பட்ட பின்னரே அது குறித்தும் அதன் அரசியல் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் தலைமுறை அந்த நூலகத்தின் சாம்பல்களில் தவழந்தது என்றும் சொல்லலாம். தமிழருக்கெதிரா மிகப் பெரும் வன்முறை நூலக எரிப்பு - அதன் சாம்பல்களில்தான் எம் தலைமுறை பிறந்தது.

நூலக எரிப்பென்பதை நான் ஒரு படுகொலையாகவே பார்க்கின்றேன். அதுவும் திட்டமிட்ட படுகொலை.

எனக்கு நூலகம் தொடர்பான நேரடிப் பரீச்சயம் இல்லை. அதனை பயன்படுத்தியதும் இல்லை. ஆனால் நான் இதனை எவ்வாறு உணர்கிறேன் என்றால் - யாழ் நூலகம் என்பது தமிழர்களின் ஒரு பண்பாட்டினதும் கல்விச் செறிவினதும் குறியீடாக இருந்தது. உண்மையில் யாழ் நூலகம் மட்டுமன்றி அனைத்து ஊர்களிலுமிருந்த நூல்நிலையங்கள் மற்றும் வாசிக சாலைகள் என்பவை யாழ்ப்பாணத்தின் குறியீடுகளாக இருந்தன. யாழ்ப்பாணத்தில் அவற்றிற்கு விசேட கவனம் இருந்தது. இவற்றின் மையப் புள்ளியாக பொது நூலகத்தைச் சொல்ல முடியும்.

உடனடிக் காரணம் எனச் சொல்ல வேண்டுமானால் நான் பிறந்த பத்தொன்பது நாட்களில் எரித்த நூலகம் தொடர்பாக நான் ஒரு ஆவணப் படத்தை எடுக்க வேண்டும் என ஏற்பட்ட ஆவல் தவிர பத்திரிகைச் சூழலுக்கு வந்தபின்னர் அறிந்து கொண்ட நூலகம் தொடர்பான செய்திகள் கல்வியாளர்களின் கருத்துக்கள் என்பவை ஏற்படுத்திய தாக்கம் இவற்றை சொல்ல முடியும்.

யாழ் நூலகத்தின் அரசியல் குறித்து சொல்லுங்கள் ?

நூலகம் எரிக்கப் பட்டதுதான் அரசியல் என பலர் நினைக்கிறார்கள். அது உண்மை. ஆனால் அதையும் தாண்டி நூலகமே ஒரு அரசியலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இவ் ஆவணப்படத்திற்காக தேடலை அதிகரித்த போது எனக்கு அது குறித்த நிறைய விடயங்கள் தெரிய வந்தன. நூலகம் ஆரம்பிக்கப் பட்ட போதே அரசியல் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பாதிரியார் லோங் அவர்களின் முயற்சியால் நூலகம் கட்டப்பட்ட 1960 களில் அல்பிரட் துரையப்பா திறந்து வைக்கின்றார். உண்மையில் அதனை அல்பிரட் துரையப்பா தனது தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம் இரண்டாவது தடவையாகவும் அவர் மேயர் ஆகின்றார்.

இதன் பிறகு 81 இல் நூலகம் எரிக்கப்படுகிறது. உண்மையில் தமிழ்தேசியத்திற்கெதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளில் - யாழ் நூலகம் தமிழ் தேசியத்தின் ஒரு வடிவமாக குறியீடாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம் தேசிய அரசியலிலும் தமிழர்களின் பிரதிநிதியாக நூலகம் உருவெடுத்தது.

இந்த இடத்தில் - கோட்டை முற்றுகைச் சமரின் போது - யாழ் நூலகம் - போராளிகளின் காப்பரணாக ஒரு போராளியாக கோட்டைச் சமரின் ஒரு குறியீடாக விளங்கியதையும் குறிப்பிட வேண்டும்.

ஆவணப்படம் எது குறித்து பேசுகிறது ?

இந்த ஆவணப்படம் முழுவதுமே ஒரு வரையறைக்கு உட்படாத ஒட்டுமொத்த தமிழர்களுக்கான வரலாற்று அழிவினைப் பற்றி பேசுகிறது. அதே நேரத்தில் இது தமிழர்களையும் தாண்டி சிங்களவர்களுக்கான இழப்பு என்பதையும் பதிவு செய்திருக்கிறோம். நூலக வரலாறு அதன் எரிப்பு தொடர்பான விபரங்கள் நேரடிச் சாட்சிகளின் தகவல்கள் என எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறோம். அதை தொடர்நது 84 இல் நூலகம் திருத்தப்பட்டமையும் மீளவும் 85 இல் இடிக்கப்பட்டதென - நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னான 27 வருட கால போரில் மக்களுக்கும் நூலகத்திற்கும் போருக்குமிடையிலான ஊடாட்டம் என பதிவு விரிகிறது.

நூலக மீள் புனரமைப்பு குறித்தும் ஆவணப்படம் சொல்கிறதா ?

ஆம் - ஆவணப்படத்தில் நூலக மீள் புனரமைப்புக் குறித்தும் பேசுகிறோம். அதாவது நூலகம் எரிக்கப்பட்டது ஒரு அரசியல் எனப் பார்த்தோம். பின்னர் அது புனரமைக்கப்பட்டதும் ஒரு அரசியல்தான் என்பதைச் சொல்கிறோம். யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் எல்லாமே அழிந்து போயின. சாவகச்சேரியை கிரோசிமா நாசகாகி போன்றவற்றுடன் ஒப்பிடக் கூடிய அளவில் அழிந்து போயிருந்தது. ஆனால் இந்தப் பிரதேசங்களை மீள் நிர்மாணம் செய்வது குறித்து யோசிக்காத சந்திரிகா உடனடியாக யாழ் நூல் நிலையத்தை புனரமைக்க திட்டமிடுகிறார். மிகப் பெரிய விளம்பரங்களோடு செங்கல்லும் புத்தகங்களும் என்ற திட்டத்தை அவர் ஆரம்பிக்கிறார். இத் திட்டத்தில அப்போது கல்வி அமைச்சராயிருந்த ரிச்சட் பத்திரணவும் ஒரு உறுப்பினராக இருந்தார். இந்த திட்டத்தில சேர்த்த புத்தகங்களும் செங்கல்லுகளும் காலியிலும் ஒரு நூலகமாக உருவெடுத்தது வேறு கதை.

சிங்கள தேசியம் ஒரு காலத்தில் செய்த கோரப் படுகொலையின் அடையாளத்தை இல்லாதொழிப்பது சந்திரிகாவிற்கு அவசியமாயிருந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக அப்போதைய தமிழ்க்கட்சிகள் இது குறித்து அலட்டிக்கொள்ளாத காரணத்தினாலும் இது குறித்து யாழ்ப்பாண மக்கள் தமது கருத்தை வெளிப்படையாக உணர்த்துவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்ததாலும் நூலகம் புனரமைக்கப்பட்டது.

மீள் புனரமைப்பில் அது மீளவும் திறக்கப் படக் கூடாதென்பதற்காக சாதி ஒரு காரணமாக இருந்தது என கூறப் படுகிறதே..

அதன் திறப்பு விழாவை கூட ஆனந்த சங்கரி அவர்கள் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அதில் செல்லன் கந்தையன் என்பவரை அவர் பகடை காயாக்கிக் கொண்டார். வெளிநாடுகளில் இப்போது இருக்கின்ற நமது முன்னாள்கள் அதற்கு சாதிய அடையாளம் பூசி தமது நிறுவல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக செல்லன் கந்தைரை திறக்க விடவில்லை. காரணம் சாதி என சொன்னாலும் - உண்மையில் - யாழ் நூலகத்தை திறக்க இருந்தவர் இன்னமும் யாழ்ப்பாண உட்ச பட்ச சாதியத்தின் மிச்ச சொச்சமாக இருக்கின்ற ஆனந்த சங்கரி ஐயா தான். (இந்த இடத்தில் யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என நான் சொல்ல வரவில்லை)

யாராவது ஒரு கல்லறைக்கு வெள்ளையடித்து திறப்பு விழா செய்வார்களா? மேள தாளங்களோடு அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி அதை கொண்டாடுவார்களா? யாழ் நூலகம் ஒரு கல்லறை - சமாதி - அது சாகடிக்கப்பட்டு விட்டது. நுகுமான் கவிதையில் சொல்கிறார். புத்தர் யாழ்ப்பாண நூலக வாயிலில் சுடப்பட்டு எரிக்கப்பட்டார். அந்த வலி நிறைந்த விடயத்தினை ஒரு விழாவாக செய்வது சரியில்லை என்பது அங்கிருந்தோரின் கருத்து. அதை நான் நேரடியாக ஒரு செய்தியாளனாக அறிந்து கொண்டேன்.

ஆவணப் பட உருவாக்கம் குறித்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?

2006 இன் மே யூன் மாதங்களில் இதற்கான படப்பிடிப்புகளைத் தொடங்கினேன். அப்போது மென் தீவிர யுத்தம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து விட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் காரணமாக பகிரங்கமாக பணியாற்ற முடியாதிருந்தது. பிஸ்கட் பெட்டிக்குள் கமெராவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சம்பவங்களும் உண்டு. கொழும்பிலிருந்து படப்பிடிப்பாளர் ஒருவரை அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்திருந்த போதும் இறுதி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போனதால் - படப்பிடிப்பினையும் நானே செய்து கொண்டேன்.

உங்களுக்குத் தெரியும் - யாழ் நூலகம் இராணுவ வலயமொன்றினில் அமைந்திருக்கின்றது. முட்கம்பி வேலிகளும் சோதனைச் சாவடிகளும் நிறைந்த பிரதேசம் அது.

தற்போதைய படப்பிடிப்பினை விட - ஆவணத்திற்குத் தேவையான பழைய காட்சிகளை பெறுவதில் சிரமமிருந்தது. அதற்காக நிறைய காலம் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இயல்பாகவே ஆவணப்படுத்தும் சிந்தனையற்ற யாழ்ப்பாணச் சூழலில் நூலகம் தொடர்பான தகவல்களைப் பெறுவது பெரும் சிரமமாயிருந்தது.

அடுத்தது ஆவணப் பட உருவாக்கலுக்கான பொருளாதாரம் குறித்துப் பேச வேண்டும். சரிநிகர் சிவகுமார் பெரும் அளவில் உதவினார். எங்கள் மத்தியில் சினிமா உருவாக்கும் ஆவல் பெருமளவில் உள்ள போதும் ஆவணப் படங்கள் குறித்த முயலுகைகள் இல்லை. இந்த நிலையில் யாழ் நூலகம் தொடர்பாக ஒரு ஆவணத்தை எடுப்பது என நானும் சரிநிகர் சிவகுமாரும் இணைந்தே திட்டமிட்டோம். ஆரம்பத்தில் நமது சொந்தப் பணத்திலேயே படப்பிடிப்புகளை மேற்கொண்டோம்.

கடந்த இரண்டு வருட முயற்சியில் - தகவல் சேகரிப்பும் - பொருளாதார சேகரிப்பும் கடுமையான முயற்சிகளாக எமக்கு இருந்தன. பின்னர் தயாரித்தல் வேலைகளுக்காக சென்னையில் அதற்குரிய கலையகங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆவணப்படங்களுக்கென தனியான கலையகம் ஏதுமில்லாத நிலையில் தமிழ்ச்சினிமா பயன்படுத்தும் கலையகங்களையே பயன்படுத்தியிருந்தோம். தமிழ் சினிமா இன்று கோடிகளில் புரண்டு கொண்டிருக்க - இத்தகைய கலையகங்களுக்கு ஏற்படும் செலவினை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

இத் தயாரித்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்த போது - புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சில நண்பர்கள் - என் முகம் தெரியாத நண்பர்கள் கூட - தாமாக முன்வந்து ஓரளவுக்கு பொருளாதார உதவி செய்திருந்தார்கள்.

இத்தகைய நிலைகளைத் தாண்டி இன்று இவ் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் திரையிடப் படுகிறது. ஆயினும் இந்த ஆவணப்படம் இவ்வாறு இருக்க வேண்டும் என நான் ஆரம்பத்தில் நினைத்திருந்த அளவிற்கு என்னளவில் இது வரவில்லையென உணர்கிறேன். இதற்கு தகவல்களைத் தேடுதலிலும் பொருளாதாரத்தை தேடுதலிலும் ஏற்பட்ட சிரமங்களே காரணமாயிருந்திருக்கின்றன. எனினும் இது ஒரு முதல் வரைபு - என்கின்ற வரையில் நான் திருப்தியுறுகிறேன்.

Tags: ஆவணம், எரியும் நினைவுகள், சோமி, நூலகம்

http://blog.sajeek.com/?p=328

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.