Jump to content

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்


Recommended Posts

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

நன்றி சோழியன் மாமா இணைப்புக்கு...

அஜீவன் அண்ணா நேர்முகம் அந்தமாதிரி இருக்கிது. பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது. குறிப்பாக நீங்கள் கடைசியில சொன்ன விசயம்: "நாங்கள் கார் ஓடுறது எண்டாலே ஒரு பயிற்சியாளரிட்ட, Driving School இல படிச்சுப்போட்டு, ரெண்டு வகுப்பு எடுத்துப்போட்டு ஓடுறம். ஆனால், குறும்படம் எடுக்கிறது எண்டால் ஒரு சாமத்தியவீடு, கலியாணவீட்டில படம் எடுத்த அனுபவத்தோட இறங்குறம். குறும்படங்கள் தோல்வியில முடியுறதுக்கு இது முக்கியமான ஒரு காரணம்" எண்டு சொல்லி இருந்தீங்கள். இது பலருக்கு நல்ல ஒரு அறிவுரையாக இருக்கும் எண்டு நினைக்கிறன். :lol::lol:

தொடர்ந்து ஜமாயுங்கோ. வாழ்த்துகள்! :)

ajeevanax0.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

ஓரளவு பழைய கால சிங்கள சினிமாக்காரர்களைப் பற்றி அறிய முடிஞ்சுது. புகலிடத்தில் திரையிடப்படும் சிங்களப் படங்கள் குறித்து அறிய முடிஞ்சுது.. நன்றிகள்.

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :):lol:

தீபம் சிறீலங்காவின் "மிதவாதிகளின்" பக்கம் சாய்ந்து விட்டதோ.. என்று ஒரு கட்டத்தில் எண்ணத் தோன்றியது.

அஜீவனின் ஆதங்கங்களில் ஒன்று உருப்படியான திரைப்படக் கல்லூரி அல்லது பாடநெறி தமிழர்கள் தாயகத்தில் இல்லை என்பது. அது வெளிப்படையாக உண்மை போலத் தோன்றினும்.. நான் நினைக்கிறேன் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் உருப்படியான திரைப்பட நெறிகளை கற்றுக் கொண்டவர்களூடு நல்ல பயிற்சிகளை கடந்த இரண்டு தசாப்தமாக வழங்கி வருவதை அவர் அறிந்திருக்கவில்லை என்று.

மற்றும்படி.. தாயகத்தில் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதங்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக புறநிலைப்படிப்புகள் அலகினூடு "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்படம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

அஜீவன் அதிகம் நாம் அறிந்திராத பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???! :lol::lol:

1990 களில் குறும்படங்கள் பல சிரமங்களின் மத்தியில் ஈழத்தில் இருந்து வந்திருக்கின்றனவே. பழைய சிங்கள சினிமாப் பற்றி பேசியது போன்று இவற்றைப் பற்றியும் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் ஒரு நாலு வார்த்தை பகர்ந்திருக்கலாமே..???! அப்போதுதான் அவற்றின் தரம்.. தொழில்நுட்ப கையாடல்கள் பற்றிய ஒரு பார்வை மக்களை, குறித்த திரைப்படங்களை தயாரித்த படைப்பாளிகளை சென்றடைய உதவி இருக்கும்... என்பது எனது ஆதங்கம்..!

அஜீவனின் சுவிஸ் திரைப்படச் சங்கத்துடனான கூட்டு முயற்சிகள் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

இச்செவ்வியை நாமெல்லாம் காண வகை செய்த தமிழமுதத்துக்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

இதில் என்ன சந்தேகம் :)

மற்றும்படி.. பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதக்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்பட்டம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்/

அஜீவன் அதிகம் பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???!

இதற்கு முக்கிய காரணங்கள் இதுவாக இருக்கலாம் அதாவது பேட்டி காண்பவர் பேட்டி கொடுப்பவர் இருவரும் சிறிலங்காவில் சிங்கள பகுதியில் தங்களது பதிவுகளை பிரபல்யபடுத்த தான், இவர்கள் நீங்கள் கூறிய பதிவுகளை பற்றி கூறி இருந்தால் சிங்கள பாதுகாப்பு படை இவர்களை "கொட்டி" என்று சிறையில் இடுமல்லவா அந்த நேரத்தில் யார் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்?அது போக இவர்கள் எல்லாம்...பலஸ்தீனர்களுக்காகவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ..... இந்த அஜீவன் சாரை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.

குறும்படம் பற்றிய விளக்கம் அழகு.

உங்கள் பேட்டி பலருக்கு குறும்படம் எடுக்கக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தியிருக்கும்.

பயிற்சிப் பட்டறைக்கு இலவசமாய் உதவி செய்ய நினைக்கும் பண்பும் சிறப்பு.

குறும்படம் பற்றிய பயிற்சிப் பட்டறையைத் தவிர வேறு ஏதேனும் தொடர்கள் இவை சம்பந்தமாய் வெளிவந்து கொண்டிருக்கிறதா அஜீவன்

நினைத்ததை சாதிக்கும் செயற்பாடுகளும் திறமையும் ஒருங்கே பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

இதை இன்னும் கொஞ்ச நேரத்தால வந்து சொல்லி இருக்கலாமே. இதுதான் சொல்லுறது நித்திரைத் தூக்கத்தோட கருத்தெழுதப்படாது என்று. (பகிடிக்கு அண்ணோய்) :lol::lol:

Link to comment
Share on other sites

இங்கே சிலர் குட்டையைக் குளப்பி மீன்பிடிப்பது போல்கருத்தெழுதுகின்றார்கள். ஒரு கலைஞனின் திறமையென்பது அவரது தேசியம் சார்ந்த படைப்புக்களால் மட்டும் நிரூபிக்கப்படுவதில்லை. ஒரு கலைஞன் தேசியம் சார்ந்த படைப்புக்களை உருவாக்க முனைந்தாலும் இங்கே தேசியம் பேசுபவர்களோ அல்லது அதற்காக பாடுபடுகின்றோம் என்பவர்களோ அதற்குரிய உதவிகளைச் செய்வதை விட உபத்திரவம் கொடுப்பதே அதிகம். அப்புறம் எப்படி ஒரு கலைஞனால் தன் தேசியம்சார்ந்த சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும்.

இதற்கொரு உதாரணம்:

சிலவருடங்களுக்கு முன் இங்கு தேசியம் சார்ந்தவர்கள் நடாத்தும் நாடகப் போட்டிக்காக எனக்குத் தெரிந்தவர் ஒருவர் தான் இயக்கவிருந்த நாடகம் சம்பந்தமான கதை வசனத்தை போட்டி நடாத்துவோருக்கு அனுப்பினார். போன வேகத்திலேயே ஏற்கமுடியாதென்ற பதிலுடன் திரும்பி வந்துவிட்டது. நாடகப் போட்டியில் பங்குபற்ற விரும்பியவரும் அதற்கான காரணத்தை அறிய பலமுறை முயற்சித்தார். ஆனால் காரணம் சொல்லப்படவில்லை மாறாக இன்னொரு நாடகத்தை அனுப்புங்கள் பரிசீலிக்கின்றோமென்றார்கள். அதையும் நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம், நீங்கள் எனது முதல் நாடகத்தை நிராகரித்ததற்கான காரணத்தைக் கூறினால்த் தானே உங்கள் இரசனைக்கேற்றவாறு எனது படைப்புக்களை அனுப்ப முடியுமென்று கூறினார். விரும்பினால் அனுப்புங்கள் வேறு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லி தொலைபேசியழைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. படைப்பாளிக்கோ மனம் வெறுத்துவிட்டது ஆனாலும் எப்படியாவது தனது நாடகம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. அதனால் அவர் போட்டி நடாத்துவோருடன் நெருங்கிப்பழகும் இன்னொரு நாடகசிரியரிடம் விடயத்தைச் சொல்லி எப்படியாவது நீங்கள் சும்மா விசாரிப்பது போல் விசாரித்து எனக்கு விடயத்தைக் கூறுங்கள் என்று கேட்டார். அவரும் நாடகப் போட்டிகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் ஏன் குறிப்பிட்ட நாடகம் நிராகரிக்கப்பட்டது என்பதை வினாவியபொழுது, அவர் அளித்த பதில் தான் உச்ச நகைச்சுவை. அவர் சொன்ன காரணம் நாடகத்தில் புத்த துறவி வருகின்றார் அதனால்த் தான் நிராகரித்தோம்.

சரி அப்படி அந்த நாடகாசிரியர் என்ன நாடகம் எழுதினார் தெரியுமா?? "நவீன அசோகன்" இதுதான் நாடகத்தின் தலைப்பு. இந்தியாவில் அசோக மன்னன் புத்த துறவியின் போதனைகளால் மனம் திருந்தி புத்தரின் தர்மசீலக் கொள்கைகளை ஏற்று நடந்ததாக வரலாறு கூறுகின்றன. ஆனால் இதையே புத்த துறவியைப் பார்த்து அசோகன் புத்தமதத்தை பின்பற்றுவோரே புத்தரின் தர்மசீலக் கொள்கைகளைப் பின்பற்றவில்லையே என்று கேள்வி கேட்டு புத்த துறவியைச் சிந்திக்க வைப்பதாக தனது நாடகத்தை அமைத்திருந்தார் நாடகாசிரியர்.

சில விபரமில்லாதவர்களால் ஒரு அருமையான நாடகம் மேடையேறுவது தடுக்கப்பட்டது. அதனால் அந்த நாடகாசிரியர் மனம்நொந்து, நாடகங்கள் எழுதி இயக்குவதையே கைவிட்டு விட்டார்.

Link to comment
Share on other sites

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

சுத்தம். இதை ஓடிப்போய் அவரிடமே கேளுங்கள், இல்லையேல் உங்கள் தலை வெடித்துச் சுக்குநூறாகச் சிதறிவிடும். :lol::lol:

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

http://www.tamilamutham.net/home/index.php...tlink&id=18

(இப்ப நித்திரைத் கலக்கம் இல்லை. :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் குட்டையைக் குளப்பி மீன்பிடிப்பது போல்கருத்தெழுதுகின்றார்கள். ஒரு கலைஞனின் திறமையென்பது அவரது தேசியம் சார்ந்த படைப்புக்களால் மட்டும் நிரூபிக்கப்படுவதில்லை. ஒரு கலைஞன் தேசியம் சார்ந்த படைப்புக்களை உருவாக்க முனைந்தாலும் இங்கே தேசியம் பேசுபவர்களோ அல்லது அதற்காக பாடுபடுகின்றோம் என்பவர்களோ அதற்குரிய உதவிகளைச் செய்வதை விட உபத்திரவம் கொடுப்பதே அதிகம். அப்புறம் எப்படி ஒரு கலைஞனால் தன் தேசியம்சார்ந்த சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும்.

வசம்பு அண்ணன்.. நீங்கள் தமிழ் தேசியம் என்பதை அந்நியப்பட்ட ஒன்றாக.. சிங்கள இனத்துக்கு எதிரானதாக.. விடுதலைப்புலிகளின் சொத்தாக நினைக்கிறீங்கள் என்பது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தை உச்சரிப்பதால்.. புலி எதிர்ப்பாளர்களும்.. அதை எதிர்க்கின்றனர் என்பது.. வெளிப்படை உண்மை. அப்படி வெறுப்பது அவர்கள் சார்ந்த இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தமிழ் தேசியம்.. தமிழீழ விடுதலை என்பது தமிழ் மக்களினது அபிலாசை. அதை விட்டு விலகி ஒரு ஈழத்தமிழன் இருப்பது என்பது இனத்துவப்பற்றற்ற நிலை என்றே கொள்ள வேண்டும்.

படைப்புக்கள் மக்களின் மனவோட்டத்தோடு இயல்புறவில்லை என்றால் அந்தக் கலைஞன் அந்த மக்கள் கூட்டத்தால் நேசிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு அப்பாலாகி விடுகின்றான்.

சிங்கள சினிமாத்துறை எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்ததோ.. அதனால் சிங்கள சினிமாத்துறை தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டதோ.. அப்படியான ஒரு நிலையில் ஈழத் தமிழன் ஒருவன் இருப்பது தமிழர்கள் மன வருந்த வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் கூட சினிமாவில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்கள் இருந்துள்ளன. பல சினிமாக்கள் ஈழப்போராட்டத்தை பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைக் கொண்டு வந்துள்ளன.

அப்படி இருக்க.. மக்களின் அங்கீகாரத்தால் கலைஞன் என்றாபவன்.. மக்களின் உணர்வுகளோடு பற்றுதல் இன்றி இருப்பதால் அவனை கலைஞன் என்று இனகாட்டுவது சரியானதா..??! கமரா பிடிப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள் என்றாகிடார்கள்.

தமிழ் தேசியம் என்பது.. தமிழீழ விடுதலை என்பது தமிழர்களின் அபிலாசை. அதைவிட்டு தூர விலகி நின்று சிங்கள மொழியாழுகைக்குள் அடிமைப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியில் கலை வளர்ப்பது என்பது இனமானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்..! நிச்சயமாக என்னால் இப்படியான ஒதுங்கி நிற்க அல்லது ஒதுக்கி வைக்க முனையும் படைப்பாளிகளை தமிழன் என்ற வகைக்குள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என் நிலையில் தான் பல தமிழினப் பற்றாளர்கள் இருக்கின்றனர். அதைவிட எமது இன அடையாளமற்ற எத்தனையோ சிறந்த பிற இனக் கலைஞர்களை ஆதரித்துவிட்டு.. படைப்புக்களை ரசித்துவிட்டுப் போகலாம்..! :lol:

Link to comment
Share on other sites

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

ஜ.பி.சி தானே எஸ்.கே ராஜன்தான் நிங்கள் சொல்லுவரைர வைச்சு புத்தக நிகழ்வுகள் செய்யிறவர் அதாலை ராஜனை போனடிச்சு கேழுங்கோ சொல்லுவார். அதுசரி அதென்ன தமிழ்த்தேசிய வானொலி??? :lol::lol:

Link to comment
Share on other sites

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

சோழியன் மாமா... இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது... எண்டு சொல்லி எழுதி இருக்கிறீங்கள். ஏன் பழைய பேட்டி எண்டால் இஞ்ச இணைக்கிறது தவறோ? இல்லாட்டிக்கு சிலருக்கு தாக சாந்தி கொடுத்து ஆசுவாசப்படுத்துறதுக்கு இப்பிடி எழுதி இருக்கிறீங்களோ? வேடிக்கையா இருக்கிது.. :lol:

கலைஞன் என்பவன் 1998 சொன்னதை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா? 1950ம் ஆண்டு வந்த கலைப்படைப்புக்களை பார்த்து ரசிக்கிறீனம். மூன்றாம் நாலாம் நூற்றாண்டுகளில அதற்கு முன்னம் வந்த கலைப்படைப்புக்களை பார்த்து ரசிக்கிறீனம். அதற்கும் முற்பட்ட காலத்தில எடுக்கப்பட்ட கலைஞர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து வாசிச்சு எல்லாம் மகிழிறீனம். 1998ம் ஆண்டு.. அட ஒரு பத்து வருசம் சொச்சம் முன்னம் எடுத்த பேட்டி எண்டபடியால் உதில சொல்லப்படுறது பிழை அல்லாட்டிக்கு உதில சொல்லப்படுறத கேட்கக்கூடாது எண்டு இருக்கிதோ? :lol:

சோழியன் மாமாவின் பதற்றம் எனக்கு விளங்கவில்லை. இதைப்பார்த்தால் நித்திரைத் தூக்கம் மாதிரி தெரியவில்லை. பயப்பிராந்தி மாதிரி தெரியுது. :)

Link to comment
Share on other sites

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

தேசியம் சார்ந்து எழுதுறம் எண்டு சொல்லுறவங்களே செய்யுற அறுவை கொஞ்சம் நஞ்சம் இல்ல. தேசியத்தின் பெயரைச் சொல்லி குளிர்காய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சம் அல்ல. தமிழர் தேசியம் சார்பானது தேசியத்துக்கு எதிரானது எண்டு பிரிச்சுப் பிரிச்சுப் பார்த்தே தாங்கள் இப்ப பிரிஞ்சுபோய் நிக்கிறீனம். :)

யாரோ ஒருத்தன் ஒரு கலைஞரை பேட்டி கண்டி இருப்பது பாராட்டத்தக்கது. அதவிட்டுப்போட்டு பேட்டி கண்டவன் தேசியத்துக்கு ஆதரவானவனா இல்லாட்டிக்கு எதிரானவனா தேசிக்காயை கமக்கட்டுக்க வச்சு இருப்பவனா எண்டு எல்லாம் பூர்வீகம் பார்த்து வாழவெளிக்கிட்டால் பிரிவினை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. :lol:

ஏன் தேசியத்துகு எதிரானவன் என்றால் அவன் செய்யுறது எல்லாமே தவறானதா? தேசியத்துக்கு எதிரான ஒரு வைத்தியர் என்றால் அவர் நோயாளிக்கு ஊசிபோடேக்க நோயாளி மரணித்துவிடுவாரா?

இப்பிடியே பின்புலம் எல்லாம் பார்த்து புலனாய்வு செய்து.. கடைசியில எல்லாரிண்ட தலையிலயும் பித்தம் ஏறி வியாதிகள் வந்து மண்டைவீங்கி சாகவேண்டியதுதான். :lol:

நல்ல விசயங்களை அது எங்கிருந்து வந்தாலும் ஊக்குவிக்கவேண்டும். ஒருவன் பிழை செய்தாலும் நல்ல விசயங்களை அவன் செய்யும்போது அவனை ஊக்குவிக்கவேண்டும். :lol::lol:

Link to comment
Share on other sites

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :o:rolleyes:

இதை யாழ் இணையத்துக்க்காக ஒருக்கால் நெடுக்காலபோவானே அஜீவன் அண்ணாவிடம் இந்தக்கேள்வியை கேட்கலாமே..

கேள்வியை கேட்காமல் பிறகு ஏன் சேதாரம் ஆகிவிடும் எண்டபடியால அப்படிச் செய்யவில்லை என ஊகிப்பு.. :rolleyes:

தாயகம் பற்றிய பதிவுகளைச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு சோமியை உதாரணமாகச் சொல்லலாம். அதற்காக தாயகம் பற்றிய பதிவுகளை செய்யாதவர்கள் பாராட்டப்படக் கூடாதவர்கள் என்று இல்லை.

கலைஞன் என்பவனுக்கு சுதந்திரம் இல்லையா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் பற்றிய பதிவுகளைச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு சோமியை உதாரணமாகச் சொல்லலாம். அதற்காக தாயகம் பற்றிய பதிவுகளை செய்யாதவர்கள் பாராட்டப்படக் கூடாதவர்கள் என்று இல்லை.

கலைஞன் என்பவனுக்கு சுதந்திரம் இல்லையா? :rolleyes:

திரைப்படக் கல்லூரியில் பல பேர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கலைஞர்கள் ஆவதில்லை. கலைஞன் என்பவன் மக்கள் ரசனைக்கு படைப்பைத் தந்ததால் அப்படி அழைக்கப்படுகிறான்.

தான் சார்ந்த மக்கள் கூட்டத்தை மறந்தவன்.. அந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க மறந்தவன்.. அந்த மக்களிடம் தன்னைக் கலைஞன் என்று அடையாளம் காணச் சொல்ல முடியுமா என்பதுதான் எனது வினவல். படைப்புக்கள் இன்னொரு சமூகத்துக்காக வைக்கப்பட்டு அதைப் படைத்தவர் அந்த சமூகத்தால் கலைஞன் என்று அழைக்கப்படட்டும் அதை யாரும் தடுக்கவில்லை. எம்மையே எடுத்துக் கொள்வோமே சிறந்த ஆங்கிலப்படங்களை தருபவர்களை கலைஞர்களாக ஏற்றுக் கொள்கிறோம். அவர்களிடம் போய் எமது தாயகம் பற்றியும் படையுங்கள் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் விரும்பினால் எமது கோரிக்கைகளை ஏற்றுப் படைக்கலாம் அல்லது விடலாம்..

ஆனால் எம்மத்தியிலேயே வாழ்ந்து கொண்டு எம்முடனோயே உணர்வுகளை பகிர்ந்து கொண்டு எம்மைக் காட்டியே வாழ்ந்து கொண்டு.. எம்மை ஒதுக்கி வைக்கும் போது.. அப்படியானவர்களை எமது கலைஞர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது தானே..! :rolleyes:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்

உங்கள் கருத்துகள்

எழுத்தில் நன்றாகத்தான் இருக்கிறது.

நடைமுறையில்தான் அது முடியாதாகி இருக்கிறது.

அது குறித்து

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

அதை விரும்பினால் ஏற்றுக் கொள்ளுங்கள்

அல்லது விட்டு விடுங்கள்.............

நான் தேசியமோ என்னமோ என்று சொல்கிறீர்களே

அது பற்றி ஒன்றும் தெரியாதவன்

நீங்கள் செய்யும் செயல் அளவு

பெரிய செயல்களை என்னால் செய்ய முடியாது

அதற்காக மன்னிக்கவும்.

அண்மையில் கூட

தேசியம் பற்றி பேசும் ஒருவர்

தொலைபேசி வழி

கவனம் அண்ணா

உங்கள் பெயரில் இணையதளத்தில்

செய்திகள் போடுகிறீர்கள்

தமிழில் செய்தி வந்தாலே புலிகள் என்று அர்த்தம்

என்று எனக்கு ஒருவித மிரட்டலான அறிவுரை தந்தார்.

ஐரோப்பாவில் கடும் தண்டனை கிடைக்குமாம்? :rolleyes:

நான் சிரித்து விட்டு அவரோடு தனிப்பட்ட விடயங்களை பேசத் தொடங்கினேன்.

1973ல் கொழும்பு மேடைகளில்

என்னை யாரோ

தமிழீழம் குறித்து சிங்களத்தில் பேச வைத்ததாக நினைவு :rolleyes:

தமிழீழம் தொடர்பான தேர்தலாம்

தொண்டமான் செல்லச்சாமி போன்றவர்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணியாக இணைந்த போது

உணர்ச்சி வசப்பட்டு மேடையேற வேண்டி வந்தது?

தவறுதான்!

சிங்கப்பூரில் நல்ல வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்து விட்டு

1984ல் தமிழருக்கு விடிவு வேணுமென்று

கண்ணை மூடிக் கொண்டு வந்து விழுந்து

நம்பி வந்தவர்களாலேயே கொல்லப்பட இருந்ததும்

தெரியாமல் செய்த தவறுதான்!

தனிப்பட்ட ஒரு சிலரது எரிச்சல் காரணமாக

இவன் நமக்கு எதிரானவன் என

என்னால் வேலை கிடைக்க காரணமானவனே

சொல்லி இருப்பது தெரியாமல்

நேற்றுவரை அவனோடு சிரித்து பழகியதும்

தவறுதான்!

அதுபோல இங்கும் இருப்பது பெரியதல்லவே?

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு:

கடந்த ஜுன் முதலாம் திகதி

சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற

ஒரு விளையாட்டு போட்டியை படம் எடுத்து

செய்தியாக்கப் போனேன்.

இல்லை என்பதோடு ஏகப்பட்ட வாக்கு வாதங்களை

நடத்த வேண்டி வந்தது.

இறுதியில் உங்களுக்கு தெரிந்த யாரராவது பங்கு கொண்டால் எடுங்கள்

மற்றவர்களை எடுக்க வேண்டாம் என்று கட்டுப்பாடு...........

நான் படம் எடுக்கவே செய்தேன்.

படம் எடுக்கவா என்று கேட்டதால் வந்த வினை அது!

பக்கத்தில் நின்ற ஆதரவாளர் ஒருவர் சொன்னார்

விடுங்க அண்ணா என்று.............

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் எனக்கு புரியவில்லை என்றா நினைக்கிறீங்க?

அது குறித்து சற்று நேற்றைய எனது வானேலியிலும்

பேசியே இருக்கிறேன்.

அதை இங்கே கேளுங்கள்:

http://www.radio.ajeevan.com/

புனைப் பெயரில் வந்து தேசியம் பேசும் நீங்கள்

உங்கள் சொந்த பெயரில் வந்து பேசினால்

உங்களை உண்மையான தேசியவாதியாக மதிப்பேன்.

நீங்களும் என்னைப் போல் நிச்சயம் மதிக்கப்படுவீர்கள்!

அல்லல்படும் மக்களுக்கு விடிவு தேவையே தவிர

இப்படியான வசைவுகளை பாடுவோருக்காக

நடிக்க வேண்டிய தேவை யாருக்கும் வரக் கூடாது.

நடப்பது நல்லாய் நடக்கும்!

நம்மவர்களில்

தன்னை விட

ஊருக்கு உபதேசம் செய்பவர்களே மேல்!

எனக்கு இதெல்லாம் தெரியாது!

பிடிக்காது என்றால் தள்ளி நிற்பேன்!

யாருக்கு உதவ வேண்டுமோ

எப்படி உதவ வேண்டுமோ

அது எனக்கு தெரியும்

அது குறித்து நீங்கள் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டாம்.

நன்றி ஐயா!

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணன்.. நீங்கள் தமிழ் தேசியம் என்பதை அந்நியப்பட்ட ஒன்றாக.. சிங்கள இனத்துக்கு எதிரானதாக.. விடுதலைப்புலிகளின் சொத்தாக நினைக்கிறீங்கள் என்பது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தை உச்சரிப்பதால்.. புலி எதிர்ப்பாளர்களும்.. அதை எதிர்க்கின்றனர் என்பது.. வெளிப்படை உண்மை. அப்படி வெறுப்பது அவர்கள் சார்ந்த இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தமிழ் தேசியம்.. தமிழீழ விடுதலை என்பது தமிழ் மக்களினது அபிலாசை. அதை விட்டு விலகி ஒரு ஈழத்தமிழன் இருப்பது என்பது இனத்துவப்பற்றற்ற நிலை என்றே கொள்ள வேண்டும்.

படைப்புக்கள் மக்களின் மனவோட்டத்தோடு இயல்புறவில்லை என்றால் அந்தக் கலைஞன் அந்த மக்கள் கூட்டத்தால் நேசிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு அப்பாலாகி விடுகின்றான்.

சிங்கள சினிமாத்துறை எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்ததோ.. அதனால் சிங்கள சினிமாத்துறை தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டதோ.. அப்படியான ஒரு நிலையில் ஈழத் தமிழன் ஒருவன் இருப்பது தமிழர்கள் மன வருந்த வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் கூட சினிமாவில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்கள் இருந்துள்ளன. பல சினிமாக்கள் ஈழப்போராட்டத்தை பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைக் கொண்டு வந்துள்ளன.

அப்படி இருக்க.. மக்களின் அங்கீகாரத்தால் கலைஞன் என்றாபவன்.. மக்களின் உணர்வுகளோடு பற்றுதல் இன்றி இருப்பதால் அவனை கலைஞன் என்று இனகாட்டுவது சரியானதா..??! கமரா பிடிப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள் என்றாகிடார்கள்.

தமிழ் தேசியம் என்பது.. தமிழீழ விடுதலை என்பது தமிழர்களின் அபிலாசை. அதைவிட்டு தூர விலகி நின்று சிங்கள மொழியாழுகைக்குள் அடிமைப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியில் கலை வளர்ப்பது என்பது இனமானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்..! நிச்சயமாக என்னால் இப்படியான ஒதுங்கி நிற்க அல்லது ஒதுக்கி வைக்க முனையும் படைப்பாளிகளை தமிழன் என்ற வகைக்குள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என் நிலலயில் தான் பல தமிழினப் பற்றாளர்கள் இருக்கின்றனர். அதைவிட எமது இன அடையாளமற்ற எத்தனையோ சிறந்த பிற இனக் கலைஞர்களை ஆதரித்துவிட்டு.. படைப்புக்களை ரசித்துவிட்டுப் போகலாம்..! :rolleyes:

நெடுக்கு

முதலில் நான் எழுதியதை நன்றாக வாசியுங்கள் விளங்கா விட்டால் கேளுங்கள். இன்னும் விளங்க வைக்கலாம். சிறு பிள்ளையும் விளங்கக் கூடிய வகையிலேயே விளங்கமாக நான் எழுதியுள்ளேன். நான் நினைக்காதவையெல்லாம் உங்கள் கற்பனையில் எழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இங்கு தாயகப் போராட்டத்தை வைத்து சிலர் செய்யும் லொள்ளைத் தான் நான் எழுதியுள்ளேன். ஒரு கலைஞனின் படைப்பை மக்கள் பார்த்து நிராகரித்தால் அது வேறு விடயம். ஒரு படைப்பின் பொருளைக் கூட விளங்கிக் கொள்ளாது அதனை நிராகரித்தால், அது எவ்வாறு மக்களைச் சென்றடையும். அதனை மக்களைச் சென்றடைய முடியாது தடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. நான் மேலே குறிப்பிட்ட ஒரு நாடகாசிரியருக்கு நடந்ததை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா??

***

எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கே எனக்கு தேசியவாதி என்ற சான்றிதழ் எவரும் வழங்கத் தேவையுமில்லை. அதை வழங்கும் தகுதியும் எவருக்குமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணன்.. நீங்கள் எழுதிய ஒரு குறிப்பிட்ட விடயத்துக்குத்தான் எனது பதில். அதை நான் மேற்கோள் காட்டியுள்ளேன்.

உங்கள் உதாரணம்.. உண்மையோ பொய்யோ நானறியேன். இப்படி பல குற்றச்சாட்டுக்கள் போலியாகவும் தாங்கள் "பெரியவர்கள்" என்ற தோறணையை ஏற்படுத்தவும் என்று சிலரால் புனையப்பட்டும் இருக்கின்றன.

மக்கள் அங்கீகாரமுள்ள உண்மையான கலைஞன் மக்களால் புகழப்படுவானே தவிர.. தானாக தன்னைப் பற்றிப் புகழமாட்டான் அல்லது ஒரு சிலரின் புகழ்ச்சிக்காக படைப்புக்கள் செய்யமாட்டான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..!

என்னைப் பொறுத்தவரை எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றிய படைப்புக்களை செய்யாது ஒரு படைப்பாளி தமிழ் மக்களின் உண்மையான அங்கீகாரம் பெற்ற ஒருவனாக விளங்க முடியும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு எமது தாயக விடுதலைப் போராட்டம் எம் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு விடயம்.

நான் என்னைத் தேசியவாதியாக இனங்காட்டத் தேவையில்லை. நான் தமிழன்.. என் பிறப்பிலிருந்தே அது என்னோடு வருகிறது வசம்பண்ணன்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilamutham.net/home/index.php...tlink&id=18

(இப்ப நித்திரைத் கலக்கம் இல்லை. :rolleyes: )

சோழியண்ணன் இப்பதான் பாடலை ஆற அமர இருந்து பாடலைக் கேட்க முடிஞ்சுது. நன்றிகள்.

நேற்று இரவு 1 மணிக்கு இங்கிண உங்களைக் கண்டன் அதுதான். சரியான வெய்யிலா.. ஒரே புளுக்கம். fan போட்டும் வேர்க்குது. நித்திரை வருகுதில்ல.. அதாலதான் உங்களைக் காண வேண்டி வந்திட்டுது. :rolleyes:

Link to comment
Share on other sites

அஜிவன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்தேன் பதிக்க்கு மேல் ஏற்று கொண்டாலும் மறைமுகமாக நீங்கள் சில நல்ல விடயம் சொல்லி இருகலாம் ஏன் என்றால் உங்களை யாரும் தற்போது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கவில்லை சுயமாக செயற்படுகிறிங்கள், ஆகாவே உங்களால் மனதில் தோன்றியதை சொல்லலாம்.

சொந்த பெயரில் கருத்து எழுதுவதுக்கு என்ன தயக்கம் ? யாருக்குமே தயக்கம் இல்லை ஆனால் சொந்த பெயரில் எல்லத்தையும் எழுத சங்கடம் ஒன்று இருக்கும் அல்லவா?

அதே போல தமிழ் தேசியத்துக்காக ஒரு பெயர் கவிதை பகுதிக்கு ஒரு பெயர் என்று பாவிகலாமா?

அனாலும் உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும் அது ஒரு பக்காமக இருகாது 2 பக்கமுமே ...

Link to comment
Share on other sites

சோழியண்ணன் இப்பதான் பாடலை ஆற அமர இருந்து பாடலைக் கேட்க முடிஞ்சுது. நன்றிகள்.

நேற்று இரவு 1 மணிக்கு இங்கிண உங்களைக் கண்டன் அதுதான். சரியான வெய்யிலா.. ஒரே புளுக்கம். fan போட்டும் வேர்க்குது. நித்திரை வருகுதில்ல.. அதாலதான் உங்களைக் காண வேண்டி வந்திட்டுது. :rolleyes:

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க.. அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு படுத்து பழகி அதற்கு முதல் நித்திரையே வருதில்லை.. பிறகு காற்றாடிய சுழலவிட்டு படுத்தால்.. கொஞ்ச நேரத்தால வாற காத்து சுடுகுது.. அதோட போராடிக் கொண்டிருக்க.. யன்னலுக்கால வெளிச்சம் வந்து கண்ணைக் குத்துது.. மகா பெரிய சித்திரவதையை அனுபவிச்சுக் கொண்டிருக்கிறன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

அஜிவன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்தேன் பதிக்க்கு மேல் ஏற்று கொண்டாலும் மறைமுகமாக நீங்கள் சில நல்ல விடயம் சொல்லி இருகலாம் ஏன் என்றால் உங்களை யாரும் தற்போது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கவில்லை சுயமாக செயற்படுகிறிங்கள், ஆகாவே உங்களால் மனதில் தோன்றியதை சொல்லலாம்.

சொந்த பெயரில் கருத்து எழுதுவதுக்கு என்ன தயக்கம் ? யாருக்குமே தயக்கம் இல்லை ஆனால் சொந்த பெயரில் எல்லத்தையும் எழுத சங்கடம் ஒன்று இருக்கும் அல்லவா?

அதே போல தமிழ் தேசியத்துக்காக ஒரு பெயர் கவிதை பகுதிக்கு ஒரு பெயர் என்று பாவிகலாமா?

அனாலும் உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும் அது ஒரு பக்காமக இருகாது 2 பக்கமுமே ...

வினித்

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.

பல தேவைகளுக்காக

பல இடங்களுக்கு போய் வரும் தேவை உண்டு.

அதனால் இந்த இணைப்புடன் யாழில் இருந்து வெளியேறுகிறேன்.

இனி எந்தவொரு காரணம் கொண்டும் இங்கு வரமாட்டேன்.

எனக்கும்

விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு போதும் பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.

அதுபோல

இலங்கை அரசுடனோ அல்லது வேறு நாட்டு அரசுகளோடோ கூட

பிரச்சனை ஏற்பட்டது இல்லை.

ஒரு இயக்கத்தில் இருந்த காலத்தில்

முமுக்கியமான ஒருவரை கடத்திய காலத்தலேயே

எனது சகோதரி ஒருவர் மலேசியாவில் இருந்து அனுப்பிய

பார்சல் ஒன்றை பெற

அடையாறில் இருந்த புலிகளின் காரியாலயத்துக்கு சென்று வந்துள்ளேன்.

அது அப்போதைய தருணத்தில்

எம்மவரை வியக்க வைத்த நிகழ்ச்சி...... :unsure:

அப்போதும் எதுவித பிரச்சனையும் எனக்கு இருந்ததில்லை.

நான் இருந்த இடத்திலிருந்து வெளியேறிய போது

ஒரு சிலரால் மட்டும் எனக்கு தொடர் பிரச்சனைகள் இருந்தன.

அவர்கள் இப்போது உயிரோடு இல்லை.

அது சாதாரணமாக எவருக்கும் வரக் கூடியதே :lol:

அதனால் நான் இங்கு கூட

அந்த நட்புகளை தொடரவுமில்லை

அவர்களுக்கு எதிராக போகவுமில்லை.

வேறு எவருடனும் இணைய விரும்பவும் இல்லை.

இது நான் எடுத்த

சரியான முடிவு என்றே கருதுகிறேன்.

இதை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்ளப் போவதுமில்லை.

இங்கு சுவிஸ் வந்த பின்னர்

எனக்கு தெரிந்த நண்பர்களான

அரசியல் தெரியாதவர்களோடு

அரசியல் கதைக்கப் போய் ஏற்பட்ட பிரச்சனைகள்

தமிழருக்கு எதிரானவன் எனும் நிலைப்பாட்டை தோற்றுவித்தது.

கருத்துகளை கருத்துகளால் சந்திப்பதை விட

அவர்களது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத போது

ஒருவனை அழித்து விடுவதிலேயே

கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இது தொடர்ந்தும் இருக்கத்தான் போகிறது............... :lol:

தனிப்பட்ட வித்தில் ஏற்படும்

பிரச்சனைகளைக் கூட

தேசிய பிரச்சனையாக்கக் கூடிய

புத்திஜீவிகள் புனைப் பெயர்களில் வலம் வருகிறார்கள்.

இங்கும் இருக்கவே செய்கிறார்கள். :lol:

பல வேளைகளில்

எல்லா இடங்களிலும் பறைசாற்ற முடியாது?

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்

எனக்கும் யாழ்பாணத்துக்கும் என் தந்தை வழி தொடர்புகள் இருந்தாலும்

நான் அங்கு தொடர்ந்து வாழ்ந்ததில்லை.

பல முறை சென்று வந்திருக்கிறேன்.

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையில் மட்டும்

ஒரு சில மாதங்கள் என் பயிற்சி காலத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

அப்போது ஜெயமான்ன என்ற முகாமையாளருடன் சென்றுள்ளேன்.

(இவர் பின்னர் ஒரு காலத்தில் டெலோவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்)

பின்னர் சிங்கப்பூருக்கு போன பின்

எனக்கும் இலங்கைக்குமான தொடர்பு மிக குறைவானது.

1983ல் நடந்த இனக் கலவரம்

மனதை பாதித்தது.

அந்த உணர்வு தவறான முடிவுகளை எடுக்க வைத்ததாக

இப்போதும் உணர்கிறேன்.

இல்லாவிடில் இந்த பிரச்சனைகள் எழாது இல்லையா?

இவை இனி தேவையில்லை.

அமைதியாக யாழ் களத்தை விட்டு விடைபெறுகிறேன்.

இனி ஒரு போதும்

எந்த ஒரு பெயரிலும்

இங்கே வர மாட்டேன்.

இங்கு

இதுவரை என்னோடு

இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட

அல்லது

கருத்துகளை படித்த அனைவருக்கும்

நன்றி , வணக்கம்!

Link to comment
Share on other sites

1983ல் நடந்த இனக் கலவரம்

மனதை பாதித்தது.

அந்த உணர்வு தவறான முடிவுகளை எடுக்க வைத்ததாக

இப்போதும் உணர்கிறேன்.

இல்லாவிடில் இந்த பிரச்சனைகள் எழாது இல்லையா?

இது தவறன புரிதல் அஜிவன் அண்ணா

அது சரி விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையா? அல்லது இங்கு எழுதிய கருத்துகக்ள் விமர்ச்சனைத்தையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்படுகிறதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.