Jump to content

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்


Recommended Posts

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

நன்றி சோழியன் மாமா இணைப்புக்கு...

அஜீவன் அண்ணா நேர்முகம் அந்தமாதிரி இருக்கிது. பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது. குறிப்பாக நீங்கள் கடைசியில சொன்ன விசயம்: "நாங்கள் கார் ஓடுறது எண்டாலே ஒரு பயிற்சியாளரிட்ட, Driving School இல படிச்சுப்போட்டு, ரெண்டு வகுப்பு எடுத்துப்போட்டு ஓடுறம். ஆனால், குறும்படம் எடுக்கிறது எண்டால் ஒரு சாமத்தியவீடு, கலியாணவீட்டில படம் எடுத்த அனுபவத்தோட இறங்குறம். குறும்படங்கள் தோல்வியில முடியுறதுக்கு இது முக்கியமான ஒரு காரணம்" எண்டு சொல்லி இருந்தீங்கள். இது பலருக்கு நல்ல ஒரு அறிவுரையாக இருக்கும் எண்டு நினைக்கிறன். :lol::lol:

தொடர்ந்து ஜமாயுங்கோ. வாழ்த்துகள்! :)

ajeevanax0.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

ஓரளவு பழைய கால சிங்கள சினிமாக்காரர்களைப் பற்றி அறிய முடிஞ்சுது. புகலிடத்தில் திரையிடப்படும் சிங்களப் படங்கள் குறித்து அறிய முடிஞ்சுது.. நன்றிகள்.

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :):lol:

தீபம் சிறீலங்காவின் "மிதவாதிகளின்" பக்கம் சாய்ந்து விட்டதோ.. என்று ஒரு கட்டத்தில் எண்ணத் தோன்றியது.

அஜீவனின் ஆதங்கங்களில் ஒன்று உருப்படியான திரைப்படக் கல்லூரி அல்லது பாடநெறி தமிழர்கள் தாயகத்தில் இல்லை என்பது. அது வெளிப்படையாக உண்மை போலத் தோன்றினும்.. நான் நினைக்கிறேன் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் உருப்படியான திரைப்பட நெறிகளை கற்றுக் கொண்டவர்களூடு நல்ல பயிற்சிகளை கடந்த இரண்டு தசாப்தமாக வழங்கி வருவதை அவர் அறிந்திருக்கவில்லை என்று.

மற்றும்படி.. தாயகத்தில் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதங்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக புறநிலைப்படிப்புகள் அலகினூடு "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்படம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

அஜீவன் அதிகம் நாம் அறிந்திராத பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???! :lol::lol:

1990 களில் குறும்படங்கள் பல சிரமங்களின் மத்தியில் ஈழத்தில் இருந்து வந்திருக்கின்றனவே. பழைய சிங்கள சினிமாப் பற்றி பேசியது போன்று இவற்றைப் பற்றியும் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் ஒரு நாலு வார்த்தை பகர்ந்திருக்கலாமே..???! அப்போதுதான் அவற்றின் தரம்.. தொழில்நுட்ப கையாடல்கள் பற்றிய ஒரு பார்வை மக்களை, குறித்த திரைப்படங்களை தயாரித்த படைப்பாளிகளை சென்றடைய உதவி இருக்கும்... என்பது எனது ஆதங்கம்..!

அஜீவனின் சுவிஸ் திரைப்படச் சங்கத்துடனான கூட்டு முயற்சிகள் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

இச்செவ்வியை நாமெல்லாம் காண வகை செய்த தமிழமுதத்துக்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

இதில் என்ன சந்தேகம் :)

மற்றும்படி.. பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதக்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்பட்டம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்/

அஜீவன் அதிகம் பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???!

இதற்கு முக்கிய காரணங்கள் இதுவாக இருக்கலாம் அதாவது பேட்டி காண்பவர் பேட்டி கொடுப்பவர் இருவரும் சிறிலங்காவில் சிங்கள பகுதியில் தங்களது பதிவுகளை பிரபல்யபடுத்த தான், இவர்கள் நீங்கள் கூறிய பதிவுகளை பற்றி கூறி இருந்தால் சிங்கள பாதுகாப்பு படை இவர்களை "கொட்டி" என்று சிறையில் இடுமல்லவா அந்த நேரத்தில் யார் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்?அது போக இவர்கள் எல்லாம்...பலஸ்தீனர்களுக்காகவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ..... இந்த அஜீவன் சாரை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.

குறும்படம் பற்றிய விளக்கம் அழகு.

உங்கள் பேட்டி பலருக்கு குறும்படம் எடுக்கக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தியிருக்கும்.

பயிற்சிப் பட்டறைக்கு இலவசமாய் உதவி செய்ய நினைக்கும் பண்பும் சிறப்பு.

குறும்படம் பற்றிய பயிற்சிப் பட்டறையைத் தவிர வேறு ஏதேனும் தொடர்கள் இவை சம்பந்தமாய் வெளிவந்து கொண்டிருக்கிறதா அஜீவன்

நினைத்ததை சாதிக்கும் செயற்பாடுகளும் திறமையும் ஒருங்கே பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

இதை இன்னும் கொஞ்ச நேரத்தால வந்து சொல்லி இருக்கலாமே. இதுதான் சொல்லுறது நித்திரைத் தூக்கத்தோட கருத்தெழுதப்படாது என்று. (பகிடிக்கு அண்ணோய்) :lol::lol:

Link to comment
Share on other sites

இங்கே சிலர் குட்டையைக் குளப்பி மீன்பிடிப்பது போல்கருத்தெழுதுகின்றார்கள். ஒரு கலைஞனின் திறமையென்பது அவரது தேசியம் சார்ந்த படைப்புக்களால் மட்டும் நிரூபிக்கப்படுவதில்லை. ஒரு கலைஞன் தேசியம் சார்ந்த படைப்புக்களை உருவாக்க முனைந்தாலும் இங்கே தேசியம் பேசுபவர்களோ அல்லது அதற்காக பாடுபடுகின்றோம் என்பவர்களோ அதற்குரிய உதவிகளைச் செய்வதை விட உபத்திரவம் கொடுப்பதே அதிகம். அப்புறம் எப்படி ஒரு கலைஞனால் தன் தேசியம்சார்ந்த சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும்.

இதற்கொரு உதாரணம்:

சிலவருடங்களுக்கு முன் இங்கு தேசியம் சார்ந்தவர்கள் நடாத்தும் நாடகப் போட்டிக்காக எனக்குத் தெரிந்தவர் ஒருவர் தான் இயக்கவிருந்த நாடகம் சம்பந்தமான கதை வசனத்தை போட்டி நடாத்துவோருக்கு அனுப்பினார். போன வேகத்திலேயே ஏற்கமுடியாதென்ற பதிலுடன் திரும்பி வந்துவிட்டது. நாடகப் போட்டியில் பங்குபற்ற விரும்பியவரும் அதற்கான காரணத்தை அறிய பலமுறை முயற்சித்தார். ஆனால் காரணம் சொல்லப்படவில்லை மாறாக இன்னொரு நாடகத்தை அனுப்புங்கள் பரிசீலிக்கின்றோமென்றார்கள். அதையும் நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம், நீங்கள் எனது முதல் நாடகத்தை நிராகரித்ததற்கான காரணத்தைக் கூறினால்த் தானே உங்கள் இரசனைக்கேற்றவாறு எனது படைப்புக்களை அனுப்ப முடியுமென்று கூறினார். விரும்பினால் அனுப்புங்கள் வேறு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லி தொலைபேசியழைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. படைப்பாளிக்கோ மனம் வெறுத்துவிட்டது ஆனாலும் எப்படியாவது தனது நாடகம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. அதனால் அவர் போட்டி நடாத்துவோருடன் நெருங்கிப்பழகும் இன்னொரு நாடகசிரியரிடம் விடயத்தைச் சொல்லி எப்படியாவது நீங்கள் சும்மா விசாரிப்பது போல் விசாரித்து எனக்கு விடயத்தைக் கூறுங்கள் என்று கேட்டார். அவரும் நாடகப் போட்டிகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் ஏன் குறிப்பிட்ட நாடகம் நிராகரிக்கப்பட்டது என்பதை வினாவியபொழுது, அவர் அளித்த பதில் தான் உச்ச நகைச்சுவை. அவர் சொன்ன காரணம் நாடகத்தில் புத்த துறவி வருகின்றார் அதனால்த் தான் நிராகரித்தோம்.

சரி அப்படி அந்த நாடகாசிரியர் என்ன நாடகம் எழுதினார் தெரியுமா?? "நவீன அசோகன்" இதுதான் நாடகத்தின் தலைப்பு. இந்தியாவில் அசோக மன்னன் புத்த துறவியின் போதனைகளால் மனம் திருந்தி புத்தரின் தர்மசீலக் கொள்கைகளை ஏற்று நடந்ததாக வரலாறு கூறுகின்றன. ஆனால் இதையே புத்த துறவியைப் பார்த்து அசோகன் புத்தமதத்தை பின்பற்றுவோரே புத்தரின் தர்மசீலக் கொள்கைகளைப் பின்பற்றவில்லையே என்று கேள்வி கேட்டு புத்த துறவியைச் சிந்திக்க வைப்பதாக தனது நாடகத்தை அமைத்திருந்தார் நாடகாசிரியர்.

சில விபரமில்லாதவர்களால் ஒரு அருமையான நாடகம் மேடையேறுவது தடுக்கப்பட்டது. அதனால் அந்த நாடகாசிரியர் மனம்நொந்து, நாடகங்கள் எழுதி இயக்குவதையே கைவிட்டு விட்டார்.

Link to comment
Share on other sites

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

சுத்தம். இதை ஓடிப்போய் அவரிடமே கேளுங்கள், இல்லையேல் உங்கள் தலை வெடித்துச் சுக்குநூறாகச் சிதறிவிடும். :lol::lol:

Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

http://www.tamilamutham.net/home/index.php...tlink&id=18

(இப்ப நித்திரைத் கலக்கம் இல்லை. :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் குட்டையைக் குளப்பி மீன்பிடிப்பது போல்கருத்தெழுதுகின்றார்கள். ஒரு கலைஞனின் திறமையென்பது அவரது தேசியம் சார்ந்த படைப்புக்களால் மட்டும் நிரூபிக்கப்படுவதில்லை. ஒரு கலைஞன் தேசியம் சார்ந்த படைப்புக்களை உருவாக்க முனைந்தாலும் இங்கே தேசியம் பேசுபவர்களோ அல்லது அதற்காக பாடுபடுகின்றோம் என்பவர்களோ அதற்குரிய உதவிகளைச் செய்வதை விட உபத்திரவம் கொடுப்பதே அதிகம். அப்புறம் எப்படி ஒரு கலைஞனால் தன் தேசியம்சார்ந்த சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும்.

வசம்பு அண்ணன்.. நீங்கள் தமிழ் தேசியம் என்பதை அந்நியப்பட்ட ஒன்றாக.. சிங்கள இனத்துக்கு எதிரானதாக.. விடுதலைப்புலிகளின் சொத்தாக நினைக்கிறீங்கள் என்பது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தை உச்சரிப்பதால்.. புலி எதிர்ப்பாளர்களும்.. அதை எதிர்க்கின்றனர் என்பது.. வெளிப்படை உண்மை. அப்படி வெறுப்பது அவர்கள் சார்ந்த இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தமிழ் தேசியம்.. தமிழீழ விடுதலை என்பது தமிழ் மக்களினது அபிலாசை. அதை விட்டு விலகி ஒரு ஈழத்தமிழன் இருப்பது என்பது இனத்துவப்பற்றற்ற நிலை என்றே கொள்ள வேண்டும்.

படைப்புக்கள் மக்களின் மனவோட்டத்தோடு இயல்புறவில்லை என்றால் அந்தக் கலைஞன் அந்த மக்கள் கூட்டத்தால் நேசிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு அப்பாலாகி விடுகின்றான்.

சிங்கள சினிமாத்துறை எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்ததோ.. அதனால் சிங்கள சினிமாத்துறை தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டதோ.. அப்படியான ஒரு நிலையில் ஈழத் தமிழன் ஒருவன் இருப்பது தமிழர்கள் மன வருந்த வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் கூட சினிமாவில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்கள் இருந்துள்ளன. பல சினிமாக்கள் ஈழப்போராட்டத்தை பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைக் கொண்டு வந்துள்ளன.

அப்படி இருக்க.. மக்களின் அங்கீகாரத்தால் கலைஞன் என்றாபவன்.. மக்களின் உணர்வுகளோடு பற்றுதல் இன்றி இருப்பதால் அவனை கலைஞன் என்று இனகாட்டுவது சரியானதா..??! கமரா பிடிப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள் என்றாகிடார்கள்.

தமிழ் தேசியம் என்பது.. தமிழீழ விடுதலை என்பது தமிழர்களின் அபிலாசை. அதைவிட்டு தூர விலகி நின்று சிங்கள மொழியாழுகைக்குள் அடிமைப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியில் கலை வளர்ப்பது என்பது இனமானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்..! நிச்சயமாக என்னால் இப்படியான ஒதுங்கி நிற்க அல்லது ஒதுக்கி வைக்க முனையும் படைப்பாளிகளை தமிழன் என்ற வகைக்குள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என் நிலையில் தான் பல தமிழினப் பற்றாளர்கள் இருக்கின்றனர். அதைவிட எமது இன அடையாளமற்ற எத்தனையோ சிறந்த பிற இனக் கலைஞர்களை ஆதரித்துவிட்டு.. படைப்புக்களை ரசித்துவிட்டுப் போகலாம்..! :lol:

Link to comment
Share on other sites

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

ஜ.பி.சி தானே எஸ்.கே ராஜன்தான் நிங்கள் சொல்லுவரைர வைச்சு புத்தக நிகழ்வுகள் செய்யிறவர் அதாலை ராஜனை போனடிச்சு கேழுங்கோ சொல்லுவார். அதுசரி அதென்ன தமிழ்த்தேசிய வானொலி??? :lol::lol:

Link to comment
Share on other sites

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

சோழியன் மாமா... இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது... எண்டு சொல்லி எழுதி இருக்கிறீங்கள். ஏன் பழைய பேட்டி எண்டால் இஞ்ச இணைக்கிறது தவறோ? இல்லாட்டிக்கு சிலருக்கு தாக சாந்தி கொடுத்து ஆசுவாசப்படுத்துறதுக்கு இப்பிடி எழுதி இருக்கிறீங்களோ? வேடிக்கையா இருக்கிது.. :lol:

கலைஞன் என்பவன் 1998 சொன்னதை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா? 1950ம் ஆண்டு வந்த கலைப்படைப்புக்களை பார்த்து ரசிக்கிறீனம். மூன்றாம் நாலாம் நூற்றாண்டுகளில அதற்கு முன்னம் வந்த கலைப்படைப்புக்களை பார்த்து ரசிக்கிறீனம். அதற்கும் முற்பட்ட காலத்தில எடுக்கப்பட்ட கலைஞர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து வாசிச்சு எல்லாம் மகிழிறீனம். 1998ம் ஆண்டு.. அட ஒரு பத்து வருசம் சொச்சம் முன்னம் எடுத்த பேட்டி எண்டபடியால் உதில சொல்லப்படுறது பிழை அல்லாட்டிக்கு உதில சொல்லப்படுறத கேட்கக்கூடாது எண்டு இருக்கிதோ? :lol:

சோழியன் மாமாவின் பதற்றம் எனக்கு விளங்கவில்லை. இதைப்பார்த்தால் நித்திரைத் தூக்கம் மாதிரி தெரியவில்லை. பயப்பிராந்தி மாதிரி தெரியுது. :)

Link to comment
Share on other sites

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

தேசியம் சார்ந்து எழுதுறம் எண்டு சொல்லுறவங்களே செய்யுற அறுவை கொஞ்சம் நஞ்சம் இல்ல. தேசியத்தின் பெயரைச் சொல்லி குளிர்காய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சம் அல்ல. தமிழர் தேசியம் சார்பானது தேசியத்துக்கு எதிரானது எண்டு பிரிச்சுப் பிரிச்சுப் பார்த்தே தாங்கள் இப்ப பிரிஞ்சுபோய் நிக்கிறீனம். :)

யாரோ ஒருத்தன் ஒரு கலைஞரை பேட்டி கண்டி இருப்பது பாராட்டத்தக்கது. அதவிட்டுப்போட்டு பேட்டி கண்டவன் தேசியத்துக்கு ஆதரவானவனா இல்லாட்டிக்கு எதிரானவனா தேசிக்காயை கமக்கட்டுக்க வச்சு இருப்பவனா எண்டு எல்லாம் பூர்வீகம் பார்த்து வாழவெளிக்கிட்டால் பிரிவினை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. :lol:

ஏன் தேசியத்துகு எதிரானவன் என்றால் அவன் செய்யுறது எல்லாமே தவறானதா? தேசியத்துக்கு எதிரான ஒரு வைத்தியர் என்றால் அவர் நோயாளிக்கு ஊசிபோடேக்க நோயாளி மரணித்துவிடுவாரா?

இப்பிடியே பின்புலம் எல்லாம் பார்த்து புலனாய்வு செய்து.. கடைசியில எல்லாரிண்ட தலையிலயும் பித்தம் ஏறி வியாதிகள் வந்து மண்டைவீங்கி சாகவேண்டியதுதான். :lol:

நல்ல விசயங்களை அது எங்கிருந்து வந்தாலும் ஊக்குவிக்கவேண்டும். ஒருவன் பிழை செய்தாலும் நல்ல விசயங்களை அவன் செய்யும்போது அவனை ஊக்குவிக்கவேண்டும். :lol::lol:

Link to comment
Share on other sites

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :o:rolleyes:

இதை யாழ் இணையத்துக்க்காக ஒருக்கால் நெடுக்காலபோவானே அஜீவன் அண்ணாவிடம் இந்தக்கேள்வியை கேட்கலாமே..

கேள்வியை கேட்காமல் பிறகு ஏன் சேதாரம் ஆகிவிடும் எண்டபடியால அப்படிச் செய்யவில்லை என ஊகிப்பு.. :rolleyes:

தாயகம் பற்றிய பதிவுகளைச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு சோமியை உதாரணமாகச் சொல்லலாம். அதற்காக தாயகம் பற்றிய பதிவுகளை செய்யாதவர்கள் பாராட்டப்படக் கூடாதவர்கள் என்று இல்லை.

கலைஞன் என்பவனுக்கு சுதந்திரம் இல்லையா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் பற்றிய பதிவுகளைச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு சோமியை உதாரணமாகச் சொல்லலாம். அதற்காக தாயகம் பற்றிய பதிவுகளை செய்யாதவர்கள் பாராட்டப்படக் கூடாதவர்கள் என்று இல்லை.

கலைஞன் என்பவனுக்கு சுதந்திரம் இல்லையா? :rolleyes:

திரைப்படக் கல்லூரியில் பல பேர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கலைஞர்கள் ஆவதில்லை. கலைஞன் என்பவன் மக்கள் ரசனைக்கு படைப்பைத் தந்ததால் அப்படி அழைக்கப்படுகிறான்.

தான் சார்ந்த மக்கள் கூட்டத்தை மறந்தவன்.. அந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க மறந்தவன்.. அந்த மக்களிடம் தன்னைக் கலைஞன் என்று அடையாளம் காணச் சொல்ல முடியுமா என்பதுதான் எனது வினவல். படைப்புக்கள் இன்னொரு சமூகத்துக்காக வைக்கப்பட்டு அதைப் படைத்தவர் அந்த சமூகத்தால் கலைஞன் என்று அழைக்கப்படட்டும் அதை யாரும் தடுக்கவில்லை. எம்மையே எடுத்துக் கொள்வோமே சிறந்த ஆங்கிலப்படங்களை தருபவர்களை கலைஞர்களாக ஏற்றுக் கொள்கிறோம். அவர்களிடம் போய் எமது தாயகம் பற்றியும் படையுங்கள் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் விரும்பினால் எமது கோரிக்கைகளை ஏற்றுப் படைக்கலாம் அல்லது விடலாம்..

ஆனால் எம்மத்தியிலேயே வாழ்ந்து கொண்டு எம்முடனோயே உணர்வுகளை பகிர்ந்து கொண்டு எம்மைக் காட்டியே வாழ்ந்து கொண்டு.. எம்மை ஒதுக்கி வைக்கும் போது.. அப்படியானவர்களை எமது கலைஞர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது தானே..! :rolleyes:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்

உங்கள் கருத்துகள்

எழுத்தில் நன்றாகத்தான் இருக்கிறது.

நடைமுறையில்தான் அது முடியாதாகி இருக்கிறது.

அது குறித்து

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

அதை விரும்பினால் ஏற்றுக் கொள்ளுங்கள்

அல்லது விட்டு விடுங்கள்.............

நான் தேசியமோ என்னமோ என்று சொல்கிறீர்களே

அது பற்றி ஒன்றும் தெரியாதவன்

நீங்கள் செய்யும் செயல் அளவு

பெரிய செயல்களை என்னால் செய்ய முடியாது

அதற்காக மன்னிக்கவும்.

அண்மையில் கூட

தேசியம் பற்றி பேசும் ஒருவர்

தொலைபேசி வழி

கவனம் அண்ணா

உங்கள் பெயரில் இணையதளத்தில்

செய்திகள் போடுகிறீர்கள்

தமிழில் செய்தி வந்தாலே புலிகள் என்று அர்த்தம்

என்று எனக்கு ஒருவித மிரட்டலான அறிவுரை தந்தார்.

ஐரோப்பாவில் கடும் தண்டனை கிடைக்குமாம்? :rolleyes:

நான் சிரித்து விட்டு அவரோடு தனிப்பட்ட விடயங்களை பேசத் தொடங்கினேன்.

1973ல் கொழும்பு மேடைகளில்

என்னை யாரோ

தமிழீழம் குறித்து சிங்களத்தில் பேச வைத்ததாக நினைவு :rolleyes:

தமிழீழம் தொடர்பான தேர்தலாம்

தொண்டமான் செல்லச்சாமி போன்றவர்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணியாக இணைந்த போது

உணர்ச்சி வசப்பட்டு மேடையேற வேண்டி வந்தது?

தவறுதான்!

சிங்கப்பூரில் நல்ல வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்து விட்டு

1984ல் தமிழருக்கு விடிவு வேணுமென்று

கண்ணை மூடிக் கொண்டு வந்து விழுந்து

நம்பி வந்தவர்களாலேயே கொல்லப்பட இருந்ததும்

தெரியாமல் செய்த தவறுதான்!

தனிப்பட்ட ஒரு சிலரது எரிச்சல் காரணமாக

இவன் நமக்கு எதிரானவன் என

என்னால் வேலை கிடைக்க காரணமானவனே

சொல்லி இருப்பது தெரியாமல்

நேற்றுவரை அவனோடு சிரித்து பழகியதும்

தவறுதான்!

அதுபோல இங்கும் இருப்பது பெரியதல்லவே?

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு:

கடந்த ஜுன் முதலாம் திகதி

சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற

ஒரு விளையாட்டு போட்டியை படம் எடுத்து

செய்தியாக்கப் போனேன்.

இல்லை என்பதோடு ஏகப்பட்ட வாக்கு வாதங்களை

நடத்த வேண்டி வந்தது.

இறுதியில் உங்களுக்கு தெரிந்த யாரராவது பங்கு கொண்டால் எடுங்கள்

மற்றவர்களை எடுக்க வேண்டாம் என்று கட்டுப்பாடு...........

நான் படம் எடுக்கவே செய்தேன்.

படம் எடுக்கவா என்று கேட்டதால் வந்த வினை அது!

பக்கத்தில் நின்ற ஆதரவாளர் ஒருவர் சொன்னார்

விடுங்க அண்ணா என்று.............

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் எனக்கு புரியவில்லை என்றா நினைக்கிறீங்க?

அது குறித்து சற்று நேற்றைய எனது வானேலியிலும்

பேசியே இருக்கிறேன்.

அதை இங்கே கேளுங்கள்:

http://www.radio.ajeevan.com/

புனைப் பெயரில் வந்து தேசியம் பேசும் நீங்கள்

உங்கள் சொந்த பெயரில் வந்து பேசினால்

உங்களை உண்மையான தேசியவாதியாக மதிப்பேன்.

நீங்களும் என்னைப் போல் நிச்சயம் மதிக்கப்படுவீர்கள்!

அல்லல்படும் மக்களுக்கு விடிவு தேவையே தவிர

இப்படியான வசைவுகளை பாடுவோருக்காக

நடிக்க வேண்டிய தேவை யாருக்கும் வரக் கூடாது.

நடப்பது நல்லாய் நடக்கும்!

நம்மவர்களில்

தன்னை விட

ஊருக்கு உபதேசம் செய்பவர்களே மேல்!

எனக்கு இதெல்லாம் தெரியாது!

பிடிக்காது என்றால் தள்ளி நிற்பேன்!

யாருக்கு உதவ வேண்டுமோ

எப்படி உதவ வேண்டுமோ

அது எனக்கு தெரியும்

அது குறித்து நீங்கள் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டாம்.

நன்றி ஐயா!

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணன்.. நீங்கள் தமிழ் தேசியம் என்பதை அந்நியப்பட்ட ஒன்றாக.. சிங்கள இனத்துக்கு எதிரானதாக.. விடுதலைப்புலிகளின் சொத்தாக நினைக்கிறீங்கள் என்பது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தை உச்சரிப்பதால்.. புலி எதிர்ப்பாளர்களும்.. அதை எதிர்க்கின்றனர் என்பது.. வெளிப்படை உண்மை. அப்படி வெறுப்பது அவர்கள் சார்ந்த இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தமிழ் தேசியம்.. தமிழீழ விடுதலை என்பது தமிழ் மக்களினது அபிலாசை. அதை விட்டு விலகி ஒரு ஈழத்தமிழன் இருப்பது என்பது இனத்துவப்பற்றற்ற நிலை என்றே கொள்ள வேண்டும்.

படைப்புக்கள் மக்களின் மனவோட்டத்தோடு இயல்புறவில்லை என்றால் அந்தக் கலைஞன் அந்த மக்கள் கூட்டத்தால் நேசிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு அப்பாலாகி விடுகின்றான்.

சிங்கள சினிமாத்துறை எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்ததோ.. அதனால் சிங்கள சினிமாத்துறை தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டதோ.. அப்படியான ஒரு நிலையில் ஈழத் தமிழன் ஒருவன் இருப்பது தமிழர்கள் மன வருந்த வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் கூட சினிமாவில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்கள் இருந்துள்ளன. பல சினிமாக்கள் ஈழப்போராட்டத்தை பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைக் கொண்டு வந்துள்ளன.

அப்படி இருக்க.. மக்களின் அங்கீகாரத்தால் கலைஞன் என்றாபவன்.. மக்களின் உணர்வுகளோடு பற்றுதல் இன்றி இருப்பதால் அவனை கலைஞன் என்று இனகாட்டுவது சரியானதா..??! கமரா பிடிப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள் என்றாகிடார்கள்.

தமிழ் தேசியம் என்பது.. தமிழீழ விடுதலை என்பது தமிழர்களின் அபிலாசை. அதைவிட்டு தூர விலகி நின்று சிங்கள மொழியாழுகைக்குள் அடிமைப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியில் கலை வளர்ப்பது என்பது இனமானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்..! நிச்சயமாக என்னால் இப்படியான ஒதுங்கி நிற்க அல்லது ஒதுக்கி வைக்க முனையும் படைப்பாளிகளை தமிழன் என்ற வகைக்குள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என் நிலலயில் தான் பல தமிழினப் பற்றாளர்கள் இருக்கின்றனர். அதைவிட எமது இன அடையாளமற்ற எத்தனையோ சிறந்த பிற இனக் கலைஞர்களை ஆதரித்துவிட்டு.. படைப்புக்களை ரசித்துவிட்டுப் போகலாம்..! :rolleyes:

நெடுக்கு

முதலில் நான் எழுதியதை நன்றாக வாசியுங்கள் விளங்கா விட்டால் கேளுங்கள். இன்னும் விளங்க வைக்கலாம். சிறு பிள்ளையும் விளங்கக் கூடிய வகையிலேயே விளங்கமாக நான் எழுதியுள்ளேன். நான் நினைக்காதவையெல்லாம் உங்கள் கற்பனையில் எழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இங்கு தாயகப் போராட்டத்தை வைத்து சிலர் செய்யும் லொள்ளைத் தான் நான் எழுதியுள்ளேன். ஒரு கலைஞனின் படைப்பை மக்கள் பார்த்து நிராகரித்தால் அது வேறு விடயம். ஒரு படைப்பின் பொருளைக் கூட விளங்கிக் கொள்ளாது அதனை நிராகரித்தால், அது எவ்வாறு மக்களைச் சென்றடையும். அதனை மக்களைச் சென்றடைய முடியாது தடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. நான் மேலே குறிப்பிட்ட ஒரு நாடகாசிரியருக்கு நடந்ததை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா??

***

எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கே எனக்கு தேசியவாதி என்ற சான்றிதழ் எவரும் வழங்கத் தேவையுமில்லை. அதை வழங்கும் தகுதியும் எவருக்குமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணன்.. நீங்கள் எழுதிய ஒரு குறிப்பிட்ட விடயத்துக்குத்தான் எனது பதில். அதை நான் மேற்கோள் காட்டியுள்ளேன்.

உங்கள் உதாரணம்.. உண்மையோ பொய்யோ நானறியேன். இப்படி பல குற்றச்சாட்டுக்கள் போலியாகவும் தாங்கள் "பெரியவர்கள்" என்ற தோறணையை ஏற்படுத்தவும் என்று சிலரால் புனையப்பட்டும் இருக்கின்றன.

மக்கள் அங்கீகாரமுள்ள உண்மையான கலைஞன் மக்களால் புகழப்படுவானே தவிர.. தானாக தன்னைப் பற்றிப் புகழமாட்டான் அல்லது ஒரு சிலரின் புகழ்ச்சிக்காக படைப்புக்கள் செய்யமாட்டான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..!

என்னைப் பொறுத்தவரை எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றிய படைப்புக்களை செய்யாது ஒரு படைப்பாளி தமிழ் மக்களின் உண்மையான அங்கீகாரம் பெற்ற ஒருவனாக விளங்க முடியும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு எமது தாயக விடுதலைப் போராட்டம் எம் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு விடயம்.

நான் என்னைத் தேசியவாதியாக இனங்காட்டத் தேவையில்லை. நான் தமிழன்.. என் பிறப்பிலிருந்தே அது என்னோடு வருகிறது வசம்பண்ணன்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilamutham.net/home/index.php...tlink&id=18

(இப்ப நித்திரைத் கலக்கம் இல்லை. :rolleyes: )

சோழியண்ணன் இப்பதான் பாடலை ஆற அமர இருந்து பாடலைக் கேட்க முடிஞ்சுது. நன்றிகள்.

நேற்று இரவு 1 மணிக்கு இங்கிண உங்களைக் கண்டன் அதுதான். சரியான வெய்யிலா.. ஒரே புளுக்கம். fan போட்டும் வேர்க்குது. நித்திரை வருகுதில்ல.. அதாலதான் உங்களைக் காண வேண்டி வந்திட்டுது. :rolleyes:

Link to comment
Share on other sites

அஜிவன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்தேன் பதிக்க்கு மேல் ஏற்று கொண்டாலும் மறைமுகமாக நீங்கள் சில நல்ல விடயம் சொல்லி இருகலாம் ஏன் என்றால் உங்களை யாரும் தற்போது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கவில்லை சுயமாக செயற்படுகிறிங்கள், ஆகாவே உங்களால் மனதில் தோன்றியதை சொல்லலாம்.

சொந்த பெயரில் கருத்து எழுதுவதுக்கு என்ன தயக்கம் ? யாருக்குமே தயக்கம் இல்லை ஆனால் சொந்த பெயரில் எல்லத்தையும் எழுத சங்கடம் ஒன்று இருக்கும் அல்லவா?

அதே போல தமிழ் தேசியத்துக்காக ஒரு பெயர் கவிதை பகுதிக்கு ஒரு பெயர் என்று பாவிகலாமா?

அனாலும் உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும் அது ஒரு பக்காமக இருகாது 2 பக்கமுமே ...

Link to comment
Share on other sites

சோழியண்ணன் இப்பதான் பாடலை ஆற அமர இருந்து பாடலைக் கேட்க முடிஞ்சுது. நன்றிகள்.

நேற்று இரவு 1 மணிக்கு இங்கிண உங்களைக் கண்டன் அதுதான். சரியான வெய்யிலா.. ஒரே புளுக்கம். fan போட்டும் வேர்க்குது. நித்திரை வருகுதில்ல.. அதாலதான் உங்களைக் காண வேண்டி வந்திட்டுது. :rolleyes:

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க.. அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு படுத்து பழகி அதற்கு முதல் நித்திரையே வருதில்லை.. பிறகு காற்றாடிய சுழலவிட்டு படுத்தால்.. கொஞ்ச நேரத்தால வாற காத்து சுடுகுது.. அதோட போராடிக் கொண்டிருக்க.. யன்னலுக்கால வெளிச்சம் வந்து கண்ணைக் குத்துது.. மகா பெரிய சித்திரவதையை அனுபவிச்சுக் கொண்டிருக்கிறன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

அஜிவன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்தேன் பதிக்க்கு மேல் ஏற்று கொண்டாலும் மறைமுகமாக நீங்கள் சில நல்ல விடயம் சொல்லி இருகலாம் ஏன் என்றால் உங்களை யாரும் தற்போது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கவில்லை சுயமாக செயற்படுகிறிங்கள், ஆகாவே உங்களால் மனதில் தோன்றியதை சொல்லலாம்.

சொந்த பெயரில் கருத்து எழுதுவதுக்கு என்ன தயக்கம் ? யாருக்குமே தயக்கம் இல்லை ஆனால் சொந்த பெயரில் எல்லத்தையும் எழுத சங்கடம் ஒன்று இருக்கும் அல்லவா?

அதே போல தமிழ் தேசியத்துக்காக ஒரு பெயர் கவிதை பகுதிக்கு ஒரு பெயர் என்று பாவிகலாமா?

அனாலும் உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும் அது ஒரு பக்காமக இருகாது 2 பக்கமுமே ...

வினித்

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.

பல தேவைகளுக்காக

பல இடங்களுக்கு போய் வரும் தேவை உண்டு.

அதனால் இந்த இணைப்புடன் யாழில் இருந்து வெளியேறுகிறேன்.

இனி எந்தவொரு காரணம் கொண்டும் இங்கு வரமாட்டேன்.

எனக்கும்

விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு போதும் பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.

அதுபோல

இலங்கை அரசுடனோ அல்லது வேறு நாட்டு அரசுகளோடோ கூட

பிரச்சனை ஏற்பட்டது இல்லை.

ஒரு இயக்கத்தில் இருந்த காலத்தில்

முமுக்கியமான ஒருவரை கடத்திய காலத்தலேயே

எனது சகோதரி ஒருவர் மலேசியாவில் இருந்து அனுப்பிய

பார்சல் ஒன்றை பெற

அடையாறில் இருந்த புலிகளின் காரியாலயத்துக்கு சென்று வந்துள்ளேன்.

அது அப்போதைய தருணத்தில்

எம்மவரை வியக்க வைத்த நிகழ்ச்சி...... :unsure:

அப்போதும் எதுவித பிரச்சனையும் எனக்கு இருந்ததில்லை.

நான் இருந்த இடத்திலிருந்து வெளியேறிய போது

ஒரு சிலரால் மட்டும் எனக்கு தொடர் பிரச்சனைகள் இருந்தன.

அவர்கள் இப்போது உயிரோடு இல்லை.

அது சாதாரணமாக எவருக்கும் வரக் கூடியதே :lol:

அதனால் நான் இங்கு கூட

அந்த நட்புகளை தொடரவுமில்லை

அவர்களுக்கு எதிராக போகவுமில்லை.

வேறு எவருடனும் இணைய விரும்பவும் இல்லை.

இது நான் எடுத்த

சரியான முடிவு என்றே கருதுகிறேன்.

இதை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்ளப் போவதுமில்லை.

இங்கு சுவிஸ் வந்த பின்னர்

எனக்கு தெரிந்த நண்பர்களான

அரசியல் தெரியாதவர்களோடு

அரசியல் கதைக்கப் போய் ஏற்பட்ட பிரச்சனைகள்

தமிழருக்கு எதிரானவன் எனும் நிலைப்பாட்டை தோற்றுவித்தது.

கருத்துகளை கருத்துகளால் சந்திப்பதை விட

அவர்களது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத போது

ஒருவனை அழித்து விடுவதிலேயே

கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இது தொடர்ந்தும் இருக்கத்தான் போகிறது............... :lol:

தனிப்பட்ட வித்தில் ஏற்படும்

பிரச்சனைகளைக் கூட

தேசிய பிரச்சனையாக்கக் கூடிய

புத்திஜீவிகள் புனைப் பெயர்களில் வலம் வருகிறார்கள்.

இங்கும் இருக்கவே செய்கிறார்கள். :lol:

பல வேளைகளில்

எல்லா இடங்களிலும் பறைசாற்ற முடியாது?

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்

எனக்கும் யாழ்பாணத்துக்கும் என் தந்தை வழி தொடர்புகள் இருந்தாலும்

நான் அங்கு தொடர்ந்து வாழ்ந்ததில்லை.

பல முறை சென்று வந்திருக்கிறேன்.

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையில் மட்டும்

ஒரு சில மாதங்கள் என் பயிற்சி காலத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

அப்போது ஜெயமான்ன என்ற முகாமையாளருடன் சென்றுள்ளேன்.

(இவர் பின்னர் ஒரு காலத்தில் டெலோவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்)

பின்னர் சிங்கப்பூருக்கு போன பின்

எனக்கும் இலங்கைக்குமான தொடர்பு மிக குறைவானது.

1983ல் நடந்த இனக் கலவரம்

மனதை பாதித்தது.

அந்த உணர்வு தவறான முடிவுகளை எடுக்க வைத்ததாக

இப்போதும் உணர்கிறேன்.

இல்லாவிடில் இந்த பிரச்சனைகள் எழாது இல்லையா?

இவை இனி தேவையில்லை.

அமைதியாக யாழ் களத்தை விட்டு விடைபெறுகிறேன்.

இனி ஒரு போதும்

எந்த ஒரு பெயரிலும்

இங்கே வர மாட்டேன்.

இங்கு

இதுவரை என்னோடு

இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட

அல்லது

கருத்துகளை படித்த அனைவருக்கும்

நன்றி , வணக்கம்!

Link to comment
Share on other sites

1983ல் நடந்த இனக் கலவரம்

மனதை பாதித்தது.

அந்த உணர்வு தவறான முடிவுகளை எடுக்க வைத்ததாக

இப்போதும் உணர்கிறேன்.

இல்லாவிடில் இந்த பிரச்சனைகள் எழாது இல்லையா?

இது தவறன புரிதல் அஜிவன் அண்ணா

அது சரி விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையா? அல்லது இங்கு எழுதிய கருத்துகக்ள் விமர்ச்சனைத்தையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்படுகிறதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.