Jump to content

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்


Recommended Posts

காணாமல் போகடிக்கப்படுதல் சித்திரவதைக்குள்ளாக்கல் விசாரணையின்றி தடுத்த வைத்தல் இவையெல்லாம் சிறீலங்கா அரசு ஒரு இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களாகும்.இந்த மனித உரிமை மீறல்கள்பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் சாட்சி இன்றியே செய்யப்படுகின்றன.இவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அம்பலப்படுத்துவது என்பது மிகப் பெரிய பணியாகும். ஆனால் இதை செய்வதற்கு மிகப்பெரிய முன்னெச்சரிக்கை தேவை. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் சிறிலங்கா உளவுத் துறைக்கோ அல்லது அவற்றோடு இணைந்த நிறுவனங்களுக்கோ அல்லது ஒட்டுக் குழுக்களுக்கு எந்தவிதத்திலும் போய் சேராது என்பது உறிதிப்படுத்தப்பட வேண்டும்.கடந்த காலத்தில் இவ்வாறான முயற்சி ஒன்றை செய்வதாக சொல்லிக் கொண்டு ஒரு ஆசிய நாட்டில் தனதுகையாட்களை வைத்து காய் நகர்த்திய சிறீலங்கா புலனாய்வுத்துறை தாயக விடதலைக்கு தங்களால் முடிந்தளவுக்கு பங்காற்றிய சிலரை அந்த நாட்டு காவல் துறையினரின் உதவியோடு மிக இரகசியமான முறையில் கொழும்புக்கு கொண்டு சென்றிருக்கிறது.பாதிக்கபட்ட ஒருவர் தனது பாதிப்பை வெளிச் சொல்ல தாயாராக இருந்தால் அவருக்கான சட்ட மற்று சிவில் பாதுகாப்பு பற்றியும் அவர் வெளியிடும் தகவலால் அவருக்கு பிரச்சனை இல்லாவிட்டாலும் அவருடன்தொடர்பில் இருந்தவர்களுக்கு பிரச்சனை இல்லையா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டும். முக்கியமாக இந்த ஆவணப் படத்தின் வெளிப்பாட்டு முறையின் அமைப்பியல் கருத்தில் வடிவம் என்ன என்பது தெழிவு படுத்தப்பட வேண்டும்.யாழ் இணையம் இந்த அவணப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை எடுக்குமாக இருந்தால் அதற்கு நான் முழ ஒத்துழைப்ப வழங்கத் தயாராக இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

சுவீசில் தமிழ் தேசியத்தக்கான கட்டமைப்பு எப்படி வெலை செய்கிறது. சிறிலங்கா புலனாய்வுத்துறை கட்டமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதெல்லாம் எனக்கு மிக நன்றாகவே தெரியும் அண்ணா.

Link to comment
Share on other sites

திரு. வசம்பு,

நான் குறிப்பாக அஜீவனை குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி கூறவில்லை. பொதுவாக பங்களிப்பு செய்யாமல் விதண்டாவாதம் செய்யும் எல்லோரையும் குறிப்பிட்டே அக்கருத்தினை முன்வைத்தேன்.

"அம்சா" வைத் தெரியாதா? சென்னையில் துணைத்தூதரகம் அமைத்து அதன் தலையில் அமர்ந்திருக்கும் நபர். அதாவது உயர் ஸ்தானிகர். அந்நபர் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தமிழ் நாட்டிலிருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக எடுக்கும் வஞ்சக நடவடிக்கைகள் ஏராளம். இடையிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு விருந்தும் வைப்பாராம். இதன் மூலம் ஈழத்தமிழர் சார்புக் கருத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்வதுண்டாம். இத்தகவல்கள் அந்நபர் யாரென்பதை இனங்காட்டியிருக்கும்.

அண்மையில் கூட தமிழர் தரப்பே அதிக தவறிழைக்கிறதென மாயை ஏற்படுத்த பத்திரிகைகளில் வந்த செய்திகளை பிரித்தெடுத்து உயர்தரக் காகிதத்தில் அச்சிட்டு தமிழ் நாட்டில் விநியோகித்து தமிழின உணர்வுகளை மழுங்கடிக்க முயன்ற சம்பவம் ஒன்று அண்மையில் வெளியாகிய செய்தி யாழ் களத்திலும் இணைக்கப்பட்டது.

அவ்வாறான நபர் புலத்திலும் யாழ்களத்திலும் ஒன்றுபட்டு உழைக்க முற்படும்வேளையில் ஒற்றுமையைக் குலைக்க முற்படலாம்.

அதனைத்தான் சிலேடையாகக் குறிப்பிட்டேன்.

மேலும் அஜீவன் அவ்வாறு குறிப்பிட்டால் இவ்வாறான நபர்கள் மேலும் என்ன செய்ய முயலுவார்கள்? நீங்களே சொல்லுங்கள். மேலும் வாயைக் கிளற முயற்சிப்பார்களா இல்லையா?

இவை தனிநபர் தாக்குதல்களே வேறெதுவோ அல்ல என் ஆதங்கங்கள்

இது குறித்து தங்கள் கருத்தென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் ஒருவனிடம் இதை செய் அதை செய் என யாரும் உத்தரவிட முடியாது.

கலைஞன் சுதந்திரமானவன். விரும்பியதை செய்யும் உரித்துடையவன்.

படைப்பை புறக்கணிக்கும் ஒதுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை விடுத்து இதை செய் என உத்தரவிடுபவர்களுக்கு -

கலைஞன் பதில் சொல்லத் தேவையில்லை.

அறப்படிச்ச பல்லிகள் கூழ் பானையில் இருந்து குளறத் தான் செய்யும்.

செய்த படைப்பொன்று தரமற்றது என சொல்ல யாவர்க்கும் உரிமை உண்டு.

ஆனால் இதையே படையென்று சொல்பவர்களுக்கு பப்ளிசிட்டிதான் முக்கியம்.

நான் செய்யிறது உனக்கு பிடிக்கலையா... பிடிக்கவில்லை எனச் சொல்லிட்டு போயிட்டே இரு.. இதை செய் அதை செய் என ஆர்டர் போடா தே... என அறிஞர் ஒருவர் சொன்னவர். அவர் பெயர் மறந்து விட்டது.

இன்று தமிழ்த்தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துவதை குறியாகக் கொண்டவர்கள் மத்தியில் - அது குறித்து எதுவும் செய்யாத அஜீவன் - பாராட்டப் படவேண்டியவர் தான்.

Link to comment
Share on other sites

திரு. வசம்பு,

நான் குறிப்பாக அஜீவனை குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி கூறவில்லை. பொதுவாக பங்களிப்பு செய்யாமல் விதண்டாவாதம் செய்யும் எல்லோரையும் குறிப்பிட்டே அக்கருத்தினை முன்வைத்தேன்.

"அம்சா" வைத் தெரியாதா? சென்னையில் துணைத்தூதரகம் அமைத்து அதன் தலையில் அமர்ந்திருக்கும் நபர். அதாவது உயர் ஸ்தானிகர். அந்நபர் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தமிழ் நாட்டிலிருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக எடுக்கும் வஞ்சக நடவடிக்கைகள் ஏராளம். இடையிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு விருந்தும் வைப்பாராம். இதன் மூலம் ஈழத்தமிழர் சார்புக் கருத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்வதுண்டாம். இத்தகவல்கள் அந்நபர் யாரென்பதை இனங்காட்டியிருக்கும்.

அண்மையில் கூட தமிழர் தரப்பே அதிக தவறிழைக்கிறதென மாயை ஏற்படுத்த பத்திரிகைகளில் வந்த செய்திகளை பிரித்தெடுத்து உயர்தரக் காகிதத்தில் அச்சிட்டு தமிழ் நாட்டில் விநியோகித்து தமிழின உணர்வுகளை மழுங்கடிக்க முயன்ற சம்பவம் ஒன்று அண்மையில் வெளியாகிய செய்தி யாழ் களத்திலும் இணைக்கப்பட்டது.

அவ்வாறான நபர் புலத்திலும் யாழ்களத்திலும் ஒன்றுபட்டு உழைக்க முற்படும்வேளையில் ஒற்றுமையைக் குலைக்க முற்படலாம்.

அதனைத்தான் சிலேடையாகக் குறிப்பிட்டேன்.

மேலும் அஜீவன் அவ்வாறு குறிப்பிட்டால் இவ்வாறான நபர்கள் மேலும் என்ன செய்ய முயலுவார்கள்? நீங்களே சொல்லுங்கள். மேலும் வாயைக் கிளற முயற்சிப்பார்களா இல்லையா?

இவை தனிநபர் தாக்குதல்களே வேறெதுவோ அல்ல என் ஆதங்கங்கள்

இது குறித்து தங்கள் கருத்தென்ன?

ஒளவையார்

நன்றி உங்கள் பதில்க்கருத்திற்கு. முதலில் நானும் ஏதோ நீங்கள் :lol: மடிப்பு அம்சாவை :lol: குறிப்பிடுகின்றீர்களோ என்று பயந்துவிட்டேன். நீங்கள் குறிப்பிடுபவர். உயர் ஸ்தானிகர் அல்ல துணை ஸ்தானிகர். அவரைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர் வாங்கும் சம்பளத்திற்கு அரசுக்கு விசுவாசமாக ஏதாவது செய்கின்றார். அதை நாம் பெரிது பண்ணாமல் விடுவதே புத்திசாலித்தனம். காரணம் நாம் அவர் பற்றி விமர்சனம் செய்தால் அது அவருக்குத் தான் சாதகமாகிவிடும். தனது சேவை ஐரோப்பாவரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் புளங்காகிதம் அடைய வழி வகுத்துவிடும்.

ஆனால் இங்கு களத்தில் சிலர் ஏதோ தமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் அடுத்தவரை விமர்சனம் செய்வது தான் வேடிக்கை?? எல்லாம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் செய், இதைச் செய் என்று படம் காட்டுவதை விட்டுவிட்டு தாமே அதைச் செய்யலாமே?? சிலருக்கு தன்மையாக எதைச் சொன்னாலும் புரிவதில்லை, ஆனால் காவடி போல் நெத்தியடியாக நாகரீகமாக எவராவது சொன்னால்த் தான் புரியும் போல. சுவிசிலிருக்கும் எமக்கே இருக்குமிடம் தெரியாத ஒருவர் எம்மைவிட தனக்கு சுவிசைப் பற்றி அதிகம் தெரியும் எனப் படம் காட்டினால் எங்கு போய் முட்டுவது??

மொத்தத்தில் காவடி சொன்னமாதிரி

செய்த படைப்பொன்று தரமற்றது என சொல்ல யாவர்க்கும் உரிமை உண்டு.

ஆனால் இதையே படையென்று சொல்பவர்களுக்கு பப்ளிசிட்டிதான் முக்கியம்.

என்ன முரளி

:( உங்களுக்கு 6 பிடித்த இலக்கமோ?? 6 தரம் போட்டுத் தாக்கியுள்ளீர்கள். :lol:

Link to comment
Share on other sites

நான் முதலில் எழுதிய கருத்தைப் பொய்யாக்குவார்கள் என்று பார்த்தால் அது நடக்காது போல் உள்ளது.பத்துப் பக்கம் யாழில் எழுதி கண்ட மிச்சம் என்ன?

இது வெத்து வெட்டுக் கதை அரங்கம் அல்லாமால் வேறு என்ன?

யாழ் நூலகம் பற்றி சென்னையில் இருந்து ஆவணப்படம் எடுத்த சொமி தரனின் பேட்டியும் அது பற்றி பாலுமகேந்திராவின் கருத்தும்.

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

–இயக்குனர் பாலு மகேந்திரா –

ஒரு பேப்பரில் வெளியான சோமிதரனின் செவ்வி

Filed Under (அரசியல், ஈழம்) by கதிர் சயந்தன் on June-7-2008

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

–இயக்குனர் பாலு மகேந்திரா –

யாழ் நூலகம் -ஒரு பண்பாட்டுப் படுகொலை

யாழ்ப்பாண நூலகம் தொடர்பாக ஆணவப் படம் செய்ய வேண்டுமென ஆர்வம் எப்படி உருவானது?

என் தலைமுறைக்கு - எனக்கு - யாழ் நூல் நிலையத்தை காணும் வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைத்த போதெல்லாம் அது நூலகம் என்ற புரிதல் அற்று அது ஒரு போராளிகளின் நிலையாகவே அறிமுகமாகியது. பின்னர் கோட்டை கைப்பற்றப் பட்ட பின்னரே அது குறித்தும் அதன் அரசியல் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் தலைமுறை அந்த நூலகத்தின் சாம்பல்களில் தவழந்தது என்றும் சொல்லலாம். தமிழருக்கெதிரா மிகப் பெரும் வன்முறை நூலக எரிப்பு - அதன் சாம்பல்களில்தான் எம் தலைமுறை பிறந்தது.

நூலக எரிப்பென்பதை நான் ஒரு படுகொலையாகவே பார்க்கின்றேன். அதுவும் திட்டமிட்ட படுகொலை.

எனக்கு நூலகம் தொடர்பான நேரடிப் பரீச்சயம் இல்லை. அதனை பயன்படுத்தியதும் இல்லை. ஆனால் நான் இதனை எவ்வாறு உணர்கிறேன் என்றால் - யாழ் நூலகம் என்பது தமிழர்களின் ஒரு பண்பாட்டினதும் கல்விச் செறிவினதும் குறியீடாக இருந்தது. உண்மையில் யாழ் நூலகம் மட்டுமன்றி அனைத்து ஊர்களிலுமிருந்த நூல்நிலையங்கள் மற்றும் வாசிக சாலைகள் என்பவை யாழ்ப்பாணத்தின் குறியீடுகளாக இருந்தன. யாழ்ப்பாணத்தில் அவற்றிற்கு விசேட கவனம் இருந்தது. இவற்றின் மையப் புள்ளியாக பொது நூலகத்தைச் சொல்ல முடியும்.

உடனடிக் காரணம் எனச் சொல்ல வேண்டுமானால் நான் பிறந்த பத்தொன்பது நாட்களில் எரித்த நூலகம் தொடர்பாக நான் ஒரு ஆவணப் படத்தை எடுக்க வேண்டும் என ஏற்பட்ட ஆவல் தவிர பத்திரிகைச் சூழலுக்கு வந்தபின்னர் அறிந்து கொண்ட நூலகம் தொடர்பான செய்திகள் கல்வியாளர்களின் கருத்துக்கள் என்பவை ஏற்படுத்திய தாக்கம் இவற்றை சொல்ல முடியும்.

யாழ் நூலகத்தின் அரசியல் குறித்து சொல்லுங்கள் ?

நூலகம் எரிக்கப் பட்டதுதான் அரசியல் என பலர் நினைக்கிறார்கள். அது உண்மை. ஆனால் அதையும் தாண்டி நூலகமே ஒரு அரசியலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இவ் ஆவணப்படத்திற்காக தேடலை அதிகரித்த போது எனக்கு அது குறித்த நிறைய விடயங்கள் தெரிய வந்தன. நூலகம் ஆரம்பிக்கப் பட்ட போதே அரசியல் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பாதிரியார் லோங் அவர்களின் முயற்சியால் நூலகம் கட்டப்பட்ட 1960 களில் அல்பிரட் துரையப்பா திறந்து வைக்கின்றார். உண்மையில் அதனை அல்பிரட் துரையப்பா தனது தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம் இரண்டாவது தடவையாகவும் அவர் மேயர் ஆகின்றார்.

இதன் பிறகு 81 இல் நூலகம் எரிக்கப்படுகிறது. உண்மையில் தமிழ்தேசியத்திற்கெதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளில் - யாழ் நூலகம் தமிழ் தேசியத்தின் ஒரு வடிவமாக குறியீடாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம் தேசிய அரசியலிலும் தமிழர்களின் பிரதிநிதியாக நூலகம் உருவெடுத்தது.

இந்த இடத்தில் - கோட்டை முற்றுகைச் சமரின் போது - யாழ் நூலகம் - போராளிகளின் காப்பரணாக ஒரு போராளியாக கோட்டைச் சமரின் ஒரு குறியீடாக விளங்கியதையும் குறிப்பிட வேண்டும்.

ஆவணப்படம் எது குறித்து பேசுகிறது ?

இந்த ஆவணப்படம் முழுவதுமே ஒரு வரையறைக்கு உட்படாத ஒட்டுமொத்த தமிழர்களுக்கான வரலாற்று அழிவினைப் பற்றி பேசுகிறது. அதே நேரத்தில் இது தமிழர்களையும் தாண்டி சிங்களவர்களுக்கான இழப்பு என்பதையும் பதிவு செய்திருக்கிறோம். நூலக வரலாறு அதன் எரிப்பு தொடர்பான விபரங்கள் நேரடிச் சாட்சிகளின் தகவல்கள் என எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறோம். அதை தொடர்நது 84 இல் நூலகம் திருத்தப்பட்டமையும் மீளவும் 85 இல் இடிக்கப்பட்டதென - நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னான 27 வருட கால போரில் மக்களுக்கும் நூலகத்திற்கும் போருக்குமிடையிலான ஊடாட்டம் என பதிவு விரிகிறது.

நூலக மீள் புனரமைப்பு குறித்தும் ஆவணப்படம் சொல்கிறதா ?

ஆம் - ஆவணப்படத்தில் நூலக மீள் புனரமைப்புக் குறித்தும் பேசுகிறோம். அதாவது நூலகம் எரிக்கப்பட்டது ஒரு அரசியல் எனப் பார்த்தோம். பின்னர் அது புனரமைக்கப்பட்டதும் ஒரு அரசியல்தான் என்பதைச் சொல்கிறோம். யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் எல்லாமே அழிந்து போயின. சாவகச்சேரியை கிரோசிமா நாசகாகி போன்றவற்றுடன் ஒப்பிடக் கூடிய அளவில் அழிந்து போயிருந்தது. ஆனால் இந்தப் பிரதேசங்களை மீள் நிர்மாணம் செய்வது குறித்து யோசிக்காத சந்திரிகா உடனடியாக யாழ் நூல் நிலையத்தை புனரமைக்க திட்டமிடுகிறார். மிகப் பெரிய விளம்பரங்களோடு செங்கல்லும் புத்தகங்களும் என்ற திட்டத்தை அவர் ஆரம்பிக்கிறார். இத் திட்டத்தில அப்போது கல்வி அமைச்சராயிருந்த ரிச்சட் பத்திரணவும் ஒரு உறுப்பினராக இருந்தார். இந்த திட்டத்தில சேர்த்த புத்தகங்களும் செங்கல்லுகளும் காலியிலும் ஒரு நூலகமாக உருவெடுத்தது வேறு கதை.

சிங்கள தேசியம் ஒரு காலத்தில் செய்த கோரப் படுகொலையின் அடையாளத்தை இல்லாதொழிப்பது சந்திரிகாவிற்கு அவசியமாயிருந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக அப்போதைய தமிழ்க்கட்சிகள் இது குறித்து அலட்டிக்கொள்ளாத காரணத்தினாலும் இது குறித்து யாழ்ப்பாண மக்கள் தமது கருத்தை வெளிப்படையாக உணர்த்துவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்ததாலும் நூலகம் புனரமைக்கப்பட்டது.

மீள் புனரமைப்பில் அது மீளவும் திறக்கப் படக் கூடாதென்பதற்காக சாதி ஒரு காரணமாக இருந்தது என கூறப் படுகிறதே..

அதன் திறப்பு விழாவை கூட ஆனந்த சங்கரி அவர்கள் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அதில் செல்லன் கந்தையன் என்பவரை அவர் பகடை காயாக்கிக் கொண்டார். வெளிநாடுகளில் இப்போது இருக்கின்ற நமது முன்னாள்கள் அதற்கு சாதிய அடையாளம் பூசி தமது நிறுவல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக செல்லன் கந்தைரை திறக்க விடவில்லை. காரணம் சாதி என சொன்னாலும் - உண்மையில் - யாழ் நூலகத்தை திறக்க இருந்தவர் இன்னமும் யாழ்ப்பாண உட்ச பட்ச சாதியத்தின் மிச்ச சொச்சமாக இருக்கின்ற ஆனந்த சங்கரி ஐயா தான். (இந்த இடத்தில் யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என நான் சொல்ல வரவில்லை)

யாராவது ஒரு கல்லறைக்கு வெள்ளையடித்து திறப்பு விழா செய்வார்களா? மேள தாளங்களோடு அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி அதை கொண்டாடுவார்களா? யாழ் நூலகம் ஒரு கல்லறை - சமாதி - அது சாகடிக்கப்பட்டு விட்டது. நுகுமான் கவிதையில் சொல்கிறார். புத்தர் யாழ்ப்பாண நூலக வாயிலில் சுடப்பட்டு எரிக்கப்பட்டார். அந்த வலி நிறைந்த விடயத்தினை ஒரு விழாவாக செய்வது சரியில்லை என்பது அங்கிருந்தோரின் கருத்து. அதை நான் நேரடியாக ஒரு செய்தியாளனாக அறிந்து கொண்டேன்.

ஆவணப் பட உருவாக்கம் குறித்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?

2006 இன் மே யூன் மாதங்களில் இதற்கான படப்பிடிப்புகளைத் தொடங்கினேன். அப்போது மென் தீவிர யுத்தம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து விட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் காரணமாக பகிரங்கமாக பணியாற்ற முடியாதிருந்தது. பிஸ்கட் பெட்டிக்குள் கமெராவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சம்பவங்களும் உண்டு. கொழும்பிலிருந்து படப்பிடிப்பாளர் ஒருவரை அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்திருந்த போதும் இறுதி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போனதால் - படப்பிடிப்பினையும் நானே செய்து கொண்டேன்.

உங்களுக்குத் தெரியும் - யாழ் நூலகம் இராணுவ வலயமொன்றினில் அமைந்திருக்கின்றது. முட்கம்பி வேலிகளும் சோதனைச் சாவடிகளும் நிறைந்த பிரதேசம் அது.

தற்போதைய படப்பிடிப்பினை விட - ஆவணத்திற்குத் தேவையான பழைய காட்சிகளை பெறுவதில் சிரமமிருந்தது. அதற்காக நிறைய காலம் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இயல்பாகவே ஆவணப்படுத்தும் சிந்தனையற்ற யாழ்ப்பாணச் சூழலில் நூலகம் தொடர்பான தகவல்களைப் பெறுவது பெரும் சிரமமாயிருந்தது.

அடுத்தது ஆவணப் பட உருவாக்கலுக்கான பொருளாதாரம் குறித்துப் பேச வேண்டும். சரிநிகர் சிவகுமார் பெரும் அளவில் உதவினார். எங்கள் மத்தியில் சினிமா உருவாக்கும் ஆவல் பெருமளவில் உள்ள போதும் ஆவணப் படங்கள் குறித்த முயலுகைகள் இல்லை. இந்த நிலையில் யாழ் நூலகம் தொடர்பாக ஒரு ஆவணத்தை எடுப்பது என நானும் சரிநிகர் சிவகுமாரும் இணைந்தே திட்டமிட்டோம். ஆரம்பத்தில் நமது சொந்தப் பணத்திலேயே படப்பிடிப்புகளை மேற்கொண்டோம்.

கடந்த இரண்டு வருட முயற்சியில் - தகவல் சேகரிப்பும் - பொருளாதார சேகரிப்பும் கடுமையான முயற்சிகளாக எமக்கு இருந்தன. பின்னர் தயாரித்தல் வேலைகளுக்காக சென்னையில் அதற்குரிய கலையகங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆவணப்படங்களுக்கென தனியான கலையகம் ஏதுமில்லாத நிலையில் தமிழ்ச்சினிமா பயன்படுத்தும் கலையகங்களையே பயன்படுத்தியிருந்தோம். தமிழ் சினிமா இன்று கோடிகளில் புரண்டு கொண்டிருக்க - இத்தகைய கலையகங்களுக்கு ஏற்படும் செலவினை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

இத் தயாரித்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்த போது - புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சில நண்பர்கள் - என் முகம் தெரியாத நண்பர்கள் கூட - தாமாக முன்வந்து ஓரளவுக்கு பொருளாதார உதவி செய்திருந்தார்கள்.

இத்தகைய நிலைகளைத் தாண்டி இன்று இவ் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் திரையிடப் படுகிறது. ஆயினும் இந்த ஆவணப்படம் இவ்வாறு இருக்க வேண்டும் என நான் ஆரம்பத்தில் நினைத்திருந்த அளவிற்கு என்னளவில் இது வரவில்லையென உணர்கிறேன். இதற்கு தகவல்களைத் தேடுதலிலும் பொருளாதாரத்தை தேடுதலிலும் ஏற்பட்ட சிரமங்களே காரணமாயிருந்திருக்கின்றன. எனினும் இது ஒரு முதல் வரைபு - என்கின்ற வரையில் நான் திருப்தியுறுகிறேன்.

Tags: ஆவணம், எரியும் நினைவுகள், சோமி, நூலகம்

http://blog.sajeek.com/?p=328

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.