Jump to content

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயா!இப்போதுதான் இந்த மாலைக்கண்ணுக்கு உங்கள் ஆறாம் பகுதி தென்பட்டது.முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள்.

இருப்பினும் என்னைவிட எத்தனையோ திறமைசாலிகள் இருக்கின்றனர்.அவர்களை முதலில் முன்னிறுத்துங்கள். :wub:

எனக்கு அடிக்கடி இங்கே கவலை தரும் விடயம் என்னவெனில் பழைய பல கருத்தாடல் உறவுகளை அல்லது அவர்களின் கருத்துக்களை இங்கே காணக்கிடைப்பதில்லை . அவர்களும் இங்கே அடிக்கடி வந்து கருத்து தருவார்களாயிருந்தால் யாழ்களத்திற்கு மேன்மேலும் சிறப்பூட்டுமென நினைக்கின்றேன். :lol:

மீண்டுமொருமுறை நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 235
  • Created
  • Last Reply

நன்றி தூயா!இப்போதுதான் இந்த மாலைக்கண்ணுக்கு உங்கள் ஆறாம் பகுதி தென்பட்டது.

பின்ன அங்காலை நின்று பி(றா)ராக்குப் பார்த்தால், இங்காலை எப்படித் தெரியும். :lol::wub:

Link to comment
Share on other sites

நன்றி தூயா!இப்போதுதான் இந்த மாலைக்கண்ணுக்கு உங்கள் ஆறாம் பகுதி தென்பட்டது.முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள்.

இருப்பினும் என்னைவிட எத்தனையோ திறமைசாலிகள் இருக்கின்றனர்.அவர்களை முதலில் முன்னிறுத்துங்கள். :wub:

எனக்கு அடிக்கடி இங்கே கவலை தரும் விடயம் என்னவெனில் பழைய பல கருத்தாடல் உறவுகளை அல்லது அவர்களின் கருத்துக்களை இங்கே காணக்கிடைப்பதில்லை . அவர்களும் இங்கே அடிக்கடி வந்து கருத்து தருவார்களாயிருந்தால் யாழ்களத்திற்கு மேன்மேலும் சிறப்பூட்டுமென நினைக்கின்றேன். :lol:

மீண்டுமொருமுறை நன்றிகள் :lol:

யாரையும் தரப்படுத்த விரும்பவில்லை. அனைவரும் உறவுக்கள் தானே. அதனால் தான் குழுக்கலாக பிரித்து எழுதிவருகின்றேன். :lol:

மாலைக்கண்?? (இப்போ அங்க மாலையா?) ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா,

என்போன்ற புதிய யாழ் உறவுகளுக்கும் நன்கு புரியக்கூடியவாறு பல பழைய சம்பவங்களை மீட்டு மிகவும் விளக்கமாக நீங்கள் எழுதிவருவது மிகவும் பாராட்டுக்குரியது. இனிவரப்போகும் புதியவர்களும் இதைப்படிக்கும்போது பயனடைவார்கள் என்பது நிச்சயம். உங்களை எனக்கு அதிகம் அறிமுகமில்லை இருப்பினும் உங்கள் கருந்துக்களை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன். நீங்கள் இப்படியான ஒரு முயற்சியில் இறங்கியதும் யாழிலிருந்து நீங்கள் பிரியாவிடைபெறப்போகிறீர்களோ என்று எனக்கு உள்ளுர ஒரு அச்சம். உங்கள் முயற்சி புதியவர்களுக்கு குறிப்பாக களத்தில் இனி இணையப்போகும் பெண் உறவுகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

தூயா,

என்போன்ற புதிய யாழ் உறவுகளுக்கும் நன்கு புரியக்கூடியவாறு பல பழைய சம்பவங்களை மீட்டு மிகவும் விளக்கமாக நீங்கள் எழுதிவருவது மிகவும் பாராட்டுக்குரியது. இனிவரப்போகும் புதியவர்களும் இதைப்படிக்கும்போது பயனடைவார்கள் என்பது நிச்சயம். உங்களை எனக்கு அதிகம் அறிமுகமில்லை இருப்பினும் உங்கள் கருந்துக்களை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன். நீங்கள் இப்படியான ஒரு முயற்சியில் இறங்கியதும் யாழிலிருந்து நீங்கள் பிரியாவிடைபெறப்போகிறீர்களோ என்று எனக்கு உள்ளுர ஒரு அச்சம். உங்கள் முயற்சி புதியவர்களுக்கு குறிப்பாக களத்தில் இனி இணையப்போகும் பெண் உறவுகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

வணக்கம் வணங்காமுடி,

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் யாழை விட்டு போக மாட்டேன். அச்சம் வேண்டாம். :) தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்.

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியில் வண்ணத்திரை பதிவுகளை பார்த்தால், இவர் ஒரு சிம்ரன் ரசிகராக இருப்பாரோ என்ற சந்தேகம் யாழ்கள சிட்னி துப்பறிவாளர்களுக்கு எழுகின்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதை குமாரசாமி அவர்கள் உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமாவைப்பொறுத்தவரை நான் பிரத்தியேகமாக ஒருத்தரின் ரசிகனல்ல.சரோஜாதேவி தொடக்கம் பாவனா மட்டும் வந்து நிற்கின்றது :wub: நான் என் மனைவியின் ரசிகனாக்கும் :)

Link to comment
Share on other sites

நான் என் மனைவியின் ரசிகனாக்கும்

தப்பிச்சுக்கிறிங்க.. :):wub:

Link to comment
Share on other sites

புலத்தில் பிறந்த தூயா யாழுறுப்பினர்களை பற்றி எழுதுவது பாராட்டபட வேண்டிய விடயம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகலகலாவல்லி தூயா.நீங்கள் இணைந்த நாட்களிலேயே நானும் இணைந்திருந்தேன்.அப்போ உறவுகளுக்கிடையில் இருந்த நெருக்கம் இப்போ இல்லை.இப்போ வெள்ளை வான் சுற்றி திரிவது போல் ஒரு பிரமை.தொடருங்கள் ரசிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகலகலாவல்லி தூயா.நீங்கள் இணைந்த நாட்களிலேயே நானும் இணைந்திருந்தேன்.அப்போ உறவுகளுக்கிடையில் இருந்த நெருக்கம் இப்போ இல்லை.இப்போ வெள்ளை வான் சுற்றி திரிவது போல் ஒரு பிரமை.தொடருங்கள் ரசிப்போம்.

அட இங்கையாவது வானுக்கு கலரை மாத்துங்கோவன் :)

Link to comment
Share on other sites

அட இங்கையாவது வானுக்கு கலரை மாத்துங்கோவன் :wub:

\கிகிகிகிகி :wub::D:lol::D

சிரிப்பதை மட்டும் பதிவாக போடகூடாது என்பதால் இந்த விளக்கம் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,,

முன்னோரான யாழ்கள உறவுகளை அறிந்து கொள்ள ஒரு உன்னத வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கீ

Link to comment
Share on other sites

நன்றி தூயா அக்கா உங்கள் மூலம் யாழை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவுதானா உங்கள் மரியாதைக்குரியவர்கள்? அல்லது இன்னமும் இருக்கின்றார்களா? ஆவலாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மெதுவாக எழுதுகிறீர்கள்

Link to comment
Share on other sites

பகுதி 7

சென்ற பகுதியில் முகத்தாரை பற்றி எழுதுகின்றேன் என கூறியிருந்தேன். இதில் நான் புதிதாக கூற எழுதுவுமே இல்லை. உங்கள் அனைவருக்குமே முகத்தாரை பற்றி நன்றாக தெரிந்திருக்கும். இப்பகுதியில் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ள போகின்றேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகத்தார்

113514142343b76c46831d7.gif

யாழில் இணைந்தது: 16-March 05

மனைவி: பொன்னாம்மாக்கா

நண்பர்கள்: சின்னப்பு, சாத்திரி

பெயர்கள்: முகம்ஸ்

பிடித்தது: பாலைவனம், ஒட்டகப்பால்

அதிகம் எழுதியது: கள உறுப்பினர்களுக்கு மட்டும்

யாழில் சின்னப்புவின் வருகைக்கு பின்னர் நகைச்சுவை களத்தை பிரகாசமாக்கி கொண்டிருந்தது மறக்க முடியாத உண்மை. தொடர்ந்து வந்த முகத்தாரும் சின்னப்புவும் சேர்ந்த பின்னர் சொல்லவே தேவையில்லை. இருவரும் சேர்ந்த்து களத்தையே சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். தனியே ஒருவர் பேசுவதை விட, இருவருக்கும் இடையிலான உரையாடல்களை நான் தேடிப்போய் படிப்பதுண்டு.

முகத்தாரின் கலக்கலான அறிமுகமே யாழை அவர்பக்கம் இழுக்க வைத்தது. அதை இங்கு பார்க்கலாம் :முகத்தாரும் யாழ் வலையில் தன்னை பற்றி முகத்தார் தந்த விளக்கம் இது தான் "நான் வந்து கலியாண புரோக்கர்..சுன்னாகத்திலை வந்து "புரோக்கர் முகத்தார் " எண்டு கேட்டுப் பார் சின்ன பிள்ளைக்குக் கூடத் தெரியும்..."

அறிமுகத்தின் பின்னர் முகத்தார் எழுதிய முதல் பதிவு: விதவைகள் மறுமணம் புரியலாமா.............? நகைச்சுவையாக எழுதினாலும், முகத்தாரின் கருத்துக்கள் பெரும்பாலும் சமுதாயம் பற்றியதாக இருக்கும். இவர் ஆரம்பித்த பதிவுகளே இதற்கு சாட்சி.

முகத்தார் ஆரம்பித்த: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? பதிவு 13 பக்கங்களுக்கு விவாதங்களை கொண்டு போயிருக்கு. தொடர்ந்து எழுதிய விவாகரத்துக்கு காரணம் என்ன பதிவும் சிறந்த கருத்தாடல்களை உள்ளடக்கியுள்ளது.

நகைச்சுவையாக எழுதிய பதிவு: சின்னப்புவும் நானும் தண்ணியடிச்சா. இப்படி எழுதவும் ஒரு திறன் இருக்கணும். முகம்ஸின்: நண்பர்களுக்கிடையே பாவிக்கும் வித்தியாசாமான கருத்துள்ள சொற்கள் பதிவை நிச்சயம் படித்து பாருங்கள். இந்த பதிவு இங்கும் தொடரணும்.

சமையல்கட்டில் முகம்ஸ் எழுதிய முதல் பதிவு: கப்சா றைஸ். அவரின் முன்னுரை: இதெண்டா புதுப் பேராக் கிடக்கு எண்டு யோசிக்காதைங்கோ அரபு நாடுகளில் இருந்தவர்களுக்கு இந்தப் பேரை தெரியாமல் இருக்காது வெறும் தக்காளி சாதம் மாதிரித்தான் செய்முறையிலும் கொஞ்சம் வித்தியாசம் இது எங்கையும் சுட்டுப் போடேலை 5வருசமா செய்து சாப்பிட்டு வாறதாலை பயமில்லாமல் நீங்களும் இந்த செய்முறையைப் பயன் படுத்துங்கோ.

முகமின் ஒரு பதிவை பார்த்து நான் இரவு தூங்காமால் இருந்திருக்கேன். அது என்ன பதிவு என பார்க்கணும் என்றால் இங்கு போகத்தான் வேண்டும்: பயங்கர பதிவு

களத்தில் அப்புக்கள் ஒவ்வொருத்தரும் காதலை பற்றி ஒரு பதிவு போட தவறியதில்லை. அந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்த பெருமை முகம்ஸை தான் சேரும் என்பது என் கருத்து: காதல் அனுபவங்கள் பதிவுக்கு முதல் ஆளாக பதில் போட்ட சின்னப்புவின் லொள்ளை பாருங்கள்: அப்படிப்போடு போடு போடு அசத்திப்போடு முன்னாலை. எட முகத்தான் அந்தக்குறோஸ் ஐ ஏன் கேக்கிறாய்

நான் பாக்க அவள் பாக்க (அது தான் சின்னாச்சி :evil: ). விழுந்தனடாப்பா ஒரு விழுகை அப்பிடியே குத்தியன் குடும்பத்திக்கை இண்டைக்கு வரைக்கும் எழும்பேல்லை.

எனக்கு முகமின் பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவு என்றால்: யாழ் களத்தின் 2005 ஆண்டு ஒன்றுகூடல் தான். அதில் என்னை பற்றி எழுதியது: வாசலுக்கு வெளியே சுட்டிகளான தூயா வெண்ணிலா இருவரும் வெளியில் நிக்கும் ஒரு நாய்க்கு கல் எடுத்து எறிவதும் நாய் இவர்களைப் பாத்து உறுமுவதும் இவர்கள் ஓடி ஓளிவதுமாக இருக்கிறார்கள் களத்தில் செய்யும் அவர்களின் வேலை விழா மண்டபத்திலும் தொடர்கிறது.

அதே போல நான் விழுந்து விழுந்து சிரித்த இன்னொரு பதிவு: கடத்தல் மன்னர்கள். சி*5, சாத்திரி, முகத்தார் பங்குபற்றியிருப்பார்கள். முகத்தாரின் எழுத்து திறனை இதில் பாருங்கள். சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் இல்லையே.

முகத்தாரின் பதிவுகளுக்கு சிகரம் வைத்த பதிவென்றால் அது: முகத்தார் வீடு தான். அருமையான கற்பனை. நிறைவான எழுத்து என முகத்தார் கலக்கியிருப்பார். இத்தொடரை படிக்காதவரும் உண்டோ.

புதியகளத்திற்கு நாங்க வந்த பின்னர், முகத்தார் எழுதுவதை குறைத்துக்கொண்டார். காரணம் வெளிநாடிலிருந்து ஊருக்கு சென்றது தான் என களத்தில் பேசிக்கொண்டார்கள். ஊரிலிருந்தும் முகத்தார் சில தடவை யாழுக்கு வந்திருந்தார். தற்போது முகத்தார் எங்கே என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் என நினைக்கின்றேன். முகத்தாருடன் யாராவது தொடர்பில் இருந்தால், அவர் எப்படியிருக்கார் என சொல்லுங்கள். சின்னப்புவும், சாத்திரியும், முகத்தாரும் மறுபடி சேர்ந்து களத்தை கலக்கணும். முகத்தார் எங்கிருந்தாலும் யாழ் உறவுகள் அவரை வாழ்த்திகொண்டேயிருப்பார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு நன்றி தூயா. முகத்தாரின் நகைச்சுவையை மீட்டி பார்த்தபோது என் வயிறு வலியெடுக்கின்றது :rolleyes:

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு நன்றி தூயா. முகத்தாரின் நகைச்சுவையை மீட்டி பார்த்தபோது என் வயிறு வலியெடுக்கின்றது :rolleyes:

முகஸ் எழுதின காலத்தில நீங்களும் இருந்திங்க தானே..சின்னப்புவும் முகத்தாரும் சேர்ந்த்தால் எப்படி இருக்கும் என தெரியும் தானே;)

Link to comment
Share on other sites

நன்றி தூயா அக்கா உங்கள் மூலம் யாழை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவுதானா உங்கள் மரியாதைக்குரியவர்கள்? அல்லது இன்னமும் இருக்கின்றார்களா? ஆவலாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மெதுவாக எழுதுகிறீர்கள்

மேலும் சில தொடர்கள் எழுதுவதால் தான் தாமதம்..

இன்னும் நிறைய பேர் இருக்காங்க.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தூயா நினைவு மீட்டல் அருமை பலவிடயங்கள் முக்கியமாய் முகத்தாரின் பதிவுகளை மீட்டியது மகத்தார் இப்பொழுது எங்கே என்று தெரியவில்லை ஒரு வருடத்திற்கு முன்னர் கொழும்பு வந்திருந்த சமயம் தொடர்பு கொண்டேன். திருகோணமலையில் இருப்பதாக் சொன்னார் அவ்வளவுதான் எங்காவது வெளி நாடுகளில் இருந்தால் நிச்சயம் யாழிற்கு வருவார். ஊரில் இருந்தால் அவரது குடும்பத்துடன் நலமாக இருக்கவேண்டும். ஏதோ ஒரு காலம் யாழில் வரவேண்டும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தூயா நினைவு மீட்டல் அருமை பலவிடயங்கள் முக்கியமாய் முகத்தாரின் பதிவுகளை மீட்டியது மகத்தார் இப்பொழுது எங்கே என்று தெரியவில்லை ஒரு வருடத்திற்கு முன்னர் கொழும்பு வந்திருந்த சமயம் தொடர்பு கொண்டேன். திருகோணமலையில் இருப்பதாக் சொன்னார் அவ்வளவுதான் எங்காவது வெளி நாடுகளில் இருந்தால் நிச்சயம் யாழிற்கு வருவார். ஊரில் இருந்தால் அவரது குடும்பத்துடன் நலமாக இருக்கவேண்டும். ஏதோ ஒரு காலம் யாழில் வரவேண்டும். :)

வருவார் என நம்புவோம்..

இலங்கையில் இருக்கின்றார்....கவனமாக இருந்தால் சரி தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் பற்றிய இனிய நினைவு மீட்டலுக்கு நன்றிகள் தூயா. அரபு நாடுகளில் இருக்கும் போது யாழுக்கு வந்த முகத்தார், திருக்கோணமலைக்கு சென்றபின்பு யாழுக்கு வருவது குறைந்துவிட்டது. தமிழ்ச்செல்வன் வீரமரணத்தின் போது தாயகத்தில் இருந்து கருத்து எழுதினார். கடைசியாக மார்ச் மாதம் தான் யாழுக்கு வந்தார். பிரச்சனை உள்ள இடத்தில் வாழும் முகத்தார், நலமாக இருக்கவேண்டும். மீண்டும் யாழில் அவரைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Link to comment
Share on other sites

முகத்தார் பற்றிய இனிய நினைவு மீட்டலுக்கு நன்றிகள் தூயா. அரபு நாடுகளில் இருக்கும் போது யாழுக்கு வந்த முகத்தார்,

ம்ம் ஒட்டகத்தில் தானே வாருவார்...;) மறக்க முடியுமா?

Link to comment
Share on other sites

பகுதி 8

சென்ற பகுதியோடு யாழில் மரியாதைக்குரியவர்களை நிறைவு செய்தேன். இந்த பகுதியிலிருந்து புதிதாக "யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்" என்ற தலைப்போடு சில கள உறுப்பினர்களை பற்றி எழுத இருக்கின்றேன். யாழில் அனைவரும் ஒரு குடும்பமாக ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பதற்கும், கடந்த வருடங்களை நினைவூட்டவும் தான் இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன். நான் என்னோடு ஆரம்பித்த விடயம், இன்று களத்தில் பலரோடு போய் கொண்டிருக்கின்றது. உங்களில் பலர் எனக்கு உற்சாகம் தருகின்றீர்கள். இங்கு எழுதியும், தனிமடலில் எழுதியும் உற்சாகம் தருகின்றீர்கள். அதற்கு மிக்க நன்றி. தொடரை என்னால் முடிந்த வரை தொடர்வேன்.

யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்

நான் முன்னர் பல தடவை களத்தில் குறிப்பிட்டுள்ளேன், என் குடும்பத்தில் எனக்கு அண்ணன்கள் தான் அதிகம் என. அது போல யாழுக்கு வந்த போதும் எனக்கு சகோதரிகளை விட பல சகோதரர்கள் தான் கிடைத்தார்கள். இன்று வரை இவர்களுடன் எனக்கு ஒரு நல்ல சகோதர உறவு தொடர்கின்றது. உறவுகள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் எனக்கு களத்து உறவுகள் தான் நெருக்கமாகி போனார்கள். யாழ்களம் என்பது வெறும் ஒரு கருத்துக்களமாக நான் பார்த்து பல வருடங்கள் கடந்துவிட்டன. யாழ் குடும்பத்தில் ஏற்கனவே அப்புக்களை பற்றி எழுதிவிட்டேன். இனிமேல் அண்ணன்களை பார்க்கலாம்.

சியாம்

யாழ்களத்தில் அண்ணா என்றால் அதில் மிக முக்கியமானவர் சியாம் அண்ணா தான். இணையத்தில் என்னை பற்றி அதிகம் தெரிந்தவர்களை ஒரு கையில் உள்ள விரலால் எண்ணிவிடலாம். அதில் ஒருவர் சியாம் அண்ணா. களத்தில் இணைந்த நேரமாகட்டும், நான் எழுத ஆரம்பித்த நேரமாகட்டும் சியாம் அண்ணா இல்லை எனில் ஒரு வேளை எழுதாமலே இருந்திருப்பேன். நான் எழுத முதல் அடி எடுத்து வைக்க வைத்தவர் சியாம் அண்ணா தான். நான் களத்தில் இணைந்த நேரத்தில் சியாம்ஸ் அதிகம் எழுதிக்கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து எழுதி களத்தை களை கட்ட வைப்பது வசம்பு அண்ணா தான்.

சிறிது காலத்தின் பின்னர் சாத்திரி எனும் பெயரில் எழுத ஆரம்பித்தார். களத்தில் எத்தனை பேருக்கு அது தெரியும் என எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஆரம்பித்திலேயே சொல்லியிருந்தார். (அதனால தான் நான் சாத்திரிகிட்ட அத்தனை நக்கலா பேசுவது இல்லை) அவராக களத்தில் சொல்லும் வரை ரகசியத்தை நான் காப்பாற்றியிருக்கேன். அதனால் உடனே எனக்கு "ரகசியம் காப்பாள்" போன்றதொரு பட்டத்தை சாத்திரி வழங்குவார் என நினைக்கின்றேன்.

சாத்திரியா வந்ததில எனக்கு ஒரு நல்ல விசயம். சியாம்ஸ் என்றால் மரியாதை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பம்பலா எல்லாம் கதைக்க முடிவதில்லை. சாஸ்த் என்றால் கிகிகிகிகி சொல்லவே வேண்டாம். இதோடு சாத்திரியை விட்டுவிட்டு சியாம் அண்ணா பற்றி பேசலாம். (காரணம்: எனக்கு களத்தில் பலரின் போலி ஐடிகள் தெரியும். அதை பற்றி எழுதும் போது சாத்திரியை வம்புக்கிழுக்கலாம்)

யாழில் இணைந்தது: 1-July 04

வேறு ஐடி: சாத்திரி

மனைவி: சாத்திரிக்கு உண்டு, சியாமண்ணாக்கு இல்லை (என அவரே சொல்லிக்கிறார்)

நண்பர்கள்: வசம்பு

அதிகம் எழுதியது: கவிதை/பாடல்கள்

சியாம்ஸ் யாழில் இணைந்து 4 சரியாக நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.

சமையல்கட்டிலும் சியாம்ஸ் தனது திறமையை காட்டியுள்ளார். என்னுடைய பால்தேத்தண்ணி விகடன் வரை போனது. தேநீர் என்றாலே அப்படி ஒரு ஈர்ப்பு அனைவருக்கும். எங்க சியாம்ஸ் போட்ட தேநீரை பருகி பாருங்கள். தேநீர் தந்த தெம்பில் ஒடியல்கூழ் காய்ச்சியிருக்கார். அதில குளம்ஸ் கூழ் படம் கூட போட்டிருக்கார்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் ஒன்று: சியாம் அண்ணாவோடு கொஞ்சம் வித்தியாசமான கருத்துக்களை களத்தில் பலர் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது கருத்தாடல் மிகவும் மதிக்க கூடிய வகையில் இருக்கும். உதாரணத்திற்கு குருவிபபா, கிருபன் போன்றோரை சொல்லலாம். வேறு கருத்து கொண்டிருந்தாலும் மற்றவர்கள் ஆக்கங்கள் படைக்கும் போது முதலாவதாக போய் தம் கருத்துக்களை வைப்பார்கள். திருந்த வேண்டியவற்றை எடுத்து சொல்வார்கள். என்னை பொருத்தவரை இவை பாராட்ட பட வேண்டிய விடயங்கள்.

சியாம் அண்ணா பற்றிய கிசு கிசு: அவரே 2005 இல் சொல்லியிருக்கார். படியுங்கள் : "மற்றவை இந்த தினத்தை எப்பிடியெல்லாம் கொண்டாடினம் எண்டு எனக்கு தெரியாது என்ரை முஞ்சையை ஓரு பெண்பிடிச்சிருக்கெண்டு ஒருகடதாசியிலை எழுதி ஒரு ரோசா மலரையும் வீட்டு வாசல்லை கட்டிபோட்டு போயிருக்கு அவரிற்கு தனது விருப்பத்தை சொல்ல இந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தபடியால் எனக்கு காதலர் தினம் தேவை : biggrin.gif biggrin.gif மற்றபடி (halloowine )புனித ஆத்மாக்கள் தினத்தையும்தான் இப்ப இங்கு தண்ணியடிச்சு பேய்மாதிரி வேடம் போட்டு குடிச்சு கூத்தாடி கொண்டாடுறாங்கள்.இப்ப எல்லாமே வியாபாரம் தான்.கலை கலாச்சாரம் பாரம்பரியம் மனிதம் எல்லாம் இரண்டாம் பட்சம்"

ஆரம்பகாலத்தில் சியாம் அண்ணா கவிதை கூட எழுதி கொண்டிருந்தார். கவிதைகளை ரசித்து கொண்டிருந்தார். மிகவும் சாதாரணமாக படிக்கும் போது தோன்றும், ஆனால் அவர் சொல்ல வந்த கரு, நிச்சயம் படிப்பவரை எட்டிவிடும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. அது போல எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு படைப்பு "என்றென்றும் துரோகிக்கு". தன் நண்பன் ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றி எழுதிய கவிதையை குறிப்பிட்டு சொல்லலாம். "வெறுமை" என தலைப்பிடப்பட்டிருந்த கவிதை எங்களில் பலரை பாதித்தது. அவரின் "முதிர் கன்னி" ஒரு சிறந்த படைப்பு. அதன் பின்னர் சியாம் அண்ணாவின் கவனம் கதைகளில் பதிந்தது. அவரின் ஒரு கதையை வாசிக்காதவர் யாழில் உண்டா. இப்போதும் அவர் அதிகம் எழுதுவது கதைகள் தானே.

புலத்தில் உள்ள ஈழத்து பிள்ளைகள் எப்படி வாழ்கின்றனர், என்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர் போன்ற பல விடயங்களை சியாம் அண்ணாவிடமிருந்து அறிந்து கொள்ளலாம். புலத்திலே தமிழ் பிள்ளைகள் பதிவை இதற்கொரு உதாரணமாக எடுக்கலாம். சமுதாயம் சார்ந்த அவரது கவலைகளை பெரும்பாலும் அவருடைய முன்னய பதிவுகளில் பார்க்கலாம்.

இப்போது சாத்திரியானாலும், இனி பூசாரி ஆனாலும்....சியாம் அண்ணாவின் இடம் யாழில் அவரால் கூட நிரப்ப முடியாத விசயம். என்னை பொருத்த வரை, சியாம் அண்ணா போல் மற்றவர்களை ஊக்கப்படுத்துபவர்களை காண்பது அரிது. என்னுடை ஆக்கங்கள் யாழிலும், யாழை தாண்டியும் வரும் போது சியாம் அண்ணா நிச்சயம் என்னை பார்த்ஹ்து பெருமை கொள்வார் என நினைக்கின்றேன். எத்தனை தடை வந்தாலும், தன் வழியில் சென்றுகொண்டிருக்கும் சியாம்ஸிற்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியையும், அன்பையும் தெரிவித்து கொள்கின்றேன்.

அடுத்த பகுதியில் இன்னொரு சகோதரன் வீரநடை போடுவார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மதிப்புக்குரிய சியாம் அண்ணனைப்பற்றி அழகாக சொல்லியிருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

உங்கள் மதிப்புக்குரிய சியாம் அண்ணனைப்பற்றி அழகாக சொல்லியிருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் :lol:

:D உங்களுக்கும் அவரை தெரியும் தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: உங்களுக்கும் அவரை தெரியும் தானே??

என்ன கேள்வியிது?கொஞ்சக்காலம் ஒரு மூலயிலையிருந்து இஞ்சை நடந்த கூத்துக்களை கண்டுகளிச்சவனாச்சே :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.