Jump to content

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)


Recommended Posts

  • Replies 293
  • Created
  • Last Reply

அட..உந்த சங்கம் எப்ப இருந்து ஆரம்பிக்கபட்டது.. :( (நானும் உதில உறுப்பினர் ஆக ஏலுமே). :( .நானும் அப்பப்ப தீவிரமா சிந்திப்பன் அல்லோ..ஏன் உதுக்கு கிளைகள் இல்ல நான் சிட்னியில ஒரு கிளையை தொடங்கிவிடுறன்..அட சிட்னியில விஜய் அண்ணாவிற்கே ரசிகர் மன்றம் இருக்குது அல்லோ பொன்னி தாத்தா.. :)

வேண்டும் எண்டா உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றத்த நான் வைக்கட்டோ..(ஆனா வாற "துட்டில" நேக்கு அரவாசி தரணும் சொல்லி போட்டன்).. :D

சரி எனி உந்த சங்கதிற்கு வாறன்..(உதில நேக்கு என்ன பதவியை தாறதா உத்தேசம் பாருங்கோ) :lol: ..அதுக்கு பிறகு தான் உந்த சங்கத்தில நான் இணையிறதா இல்லையா எண்டு அறிவிப்பன் பாருங்கோ :lol: ..இல்லாட்டி ஏட்டிக்கு போட்டிய இன்னொரு சங்கம் தொடங்குவன் சொல்லிட்டன்..(ஏனேன்டா நானும் தமிழன்)... :(

சரி நானும் ஒரு சிந்தனையை உதிர்ந்து போட்டு போறன் பாருங்கோ...

யோசிப்பவன் எல்லாம் அறிவாளியும் இல்ல

அறிவாளிகள் எல்லாம் யோசிப்பவர்களும் இல்ல.. ^_^

உது எப்படி இருக்கு பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

kaadal.jpg

கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்

களத்துமேடு கம்மாக்கரைன்னு

களம் கண்ட இடத்திலெல்லாம்

காதல் சாகுபடி செய்வது

நகரக்காதல் எனப்படுவது யாதெனில்

பிஸ்ஸா கார்னர்

தியேட்டரில் கார்னர்

எனக் கையாலும் காதல்

செய்வது

தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்

ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு

பக்திப்பழமா கதைவிட்டு

சூடக்காற்றில் காதல்

ஜோதி ஏற்றுவது

கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்

அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்

கோமியமா மழை கொட்டுனாலும்

எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி

துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது

இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்

தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்

லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற

ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு

காதல் வளர்ப்பது !

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து

கணவன்கள் (மனைவியர்)

எழுதுவது !

காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்

காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்

பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்

காதலி அப்பீட் ஆனால்

அவன் கொடுக்கும் பார்ட்டியில்

4 லார்ஜ் அடிப்பவன்

அமரக்காதல் எனப்படுவது யாதெனில்

இருவரும் திருணம் செய்துகொள்வது

வெவ்வேறு ஆட்களை!

காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்

காதலித்தவளை(ரை)யே

திருமணம் செய்து கொள்வது

காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது

அடுத்த அழகான பெண்ணைப்

பார்க்கும் வரை !

காதலில் Living together எனப்படுவது யாதெனில்

Make Love

Not Babies

என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா

முக்காலியில் உட்காரலாம்...

நாற்காலியில் உட்காரலாம்..

தக்காளியில் உட்காரமுடியுமா?

Link to comment
Share on other sites

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

Link to comment
Share on other sites

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

:D:D:D:D

Link to comment
Share on other sites

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

முடியவே முடியாது. கடலை போட தனிக்கலை வேண்டும். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் பொய் சொல்லாதே ஆனால்

அதற்காக நீ தேவையற்ற உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் பின் ஒரு பெண் இருப்பாள், சரி;

வெற்றி பெறாத ஆணுக்குப் பின்? ஏராளமான பெண்கள் இருப்பார்கள்.

- சுட்டது-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒரு கணக்குப் பரீட்சை.

ஆலமர இலை 10, அரச மர இலை 13, வேப்ப மர இலை 16, கூட்டினால் என்ன வரும்?

என்னங்க தெரியலையா?

அய்யோ.. அய்யோ... இதுகூட தெரியலையா? குப்பைதான் வரும். ஹா..ஹா..ஹா..

********************************************************************************

*************************************

உனக்கு மட்டுமே ஒரு கேள்வி.

நீ அதற்கு தெரியும் அல்லது தெரியாது

என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

இதுதான் கேள்வி:

நீ லூசுன்னு உன் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியுமா?

********************************************************************************

*********

பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வந்த போது எங்க வீட்டுக்கு ஏன் வரலை தெரியுமா?

ஏன்னா, நான் அமெரிக்கா போ னபோது அவன் வீட்டுக்குப் போகலை. ரோஷக்காரன்.

********************************************************************************

**********

உங்க கிட்னி பெயில் ஆகிடுசசு.

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்

அது எப்படி பெயில் ஆகும்

********************************************************************************

********

இன்னிக்கு 8மணிக்கு கடுமையான மழையும் காற்றும்

வரும்னு டீவீல‌சொன்னாங்க

நீங்க கேட்டீங்களா?

இல்லை அவங்களே சொன்னாங்க...

********************************************************************************

******************

என்னத்தான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு

விளக்கும் போது இளிச்சவாயன் தான்.

********************************************************************************

**********************

டாக்டர்: இந்த மாத்திரைய தினமும் ஒரு தடவ சாப்பிடுங்க... தூக்கம் வரும்....

நோயாளி: அப்ப தினமும் 10 மாத்திரை சாப்பிட்டா...???

டாக்டர்: தூக்க ஆள் வரும்!!!!!

********************************************************************************

**********************

வெளிநாட்டுக்குப் பறந்த முதல் இந்தியப் பெண் யார்?

இராவணனுடன் பறந்த சீதை.

தயவுசெஞ்சு பொது அறிவை வளர்த்துக்குங்க.

********************************************************************************

***********************

நிக்கிற டிரெயின் முன்னாடி ஓட முடியும்.... ஆனா

ஓடுற டிரெயின் முன்னாடி நிக்க முடியுமா?

********************************************************************************

************************

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2008 இலை அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாயிருக்கிறவர் பெயர் ஜார்ச் புஸ்சு,

அப்ப 1978 இலை அமெரிக்க ஜனாதிபதிக்கு என்ன பெயர்?

அப்பவும் அவருக்கு ஜார்ச் புஸ்சு தான் பெயர்.

ஏன்னா அவா பிறந்ததிலையிருந்து பெயரை மாத்தலையே.

Link to comment
Share on other sites

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,

டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீவிரமா யோசனை செய்துபார்க்கிறேன் புரிலையே:

பெப்ரவரி மாதத்திலை 28 நாட்கள் உண்டு ஒத்துக்கிறன்

சரி அப்படின்னா வேறை எந்தெந்த மாதங்களிலை 28 நாட்கள் இருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.

வருசத்திலை இருக்கிற எல்லா மாதங்களிலேயும் தான் அது இருக்குதே.

Link to comment
Share on other sites

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.

ஆனா

பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஸ்பீட் லிமிட்டை மிஞ்சி கார் ஓட்டினா போலிஸ்காரர் எங்களை பிடிச்சிடுவாரு அப்புறம் அவருக்கு அபராதமும் கட்டணும்.

ஆமா நாங்க ஸ்பீட் லிமிட்டுக்கு குறைவா ஓடினா நாங்க போலிஸ்காரரை பிடிக்க முடியுமா இல்லை அவர்தான் எங்களுக்கு அபராதம் கட்டிடுவாரா?

Link to comment
Share on other sites

அட..உந்த சங்கம் எப்ப இருந்து ஆரம்பிக்கபட்டது.. :lol: (நானும் உதில உறுப்பினர் ஆக ஏலுமே). :lol: .நானும் அப்பப்ப தீவிரமா சிந்திப்பன் அல்லோ..ஏன் உதுக்கு கிளைகள் இல்ல நான் சிட்னியில ஒரு கிளையை தொடங்கிவிடுறன்..அட சிட்னியில விஜய் அண்ணாவிற்கே ரசிகர் மன்றம் இருக்குது அல்லோ பொன்னி தாத்தா.. :lol:

கண்ணா, இது தீ யோ ச, தீ அ ச (தீவிரமாக அலட்டுவோர் சங்கம்) அல்ல. இங்கு அங்கவத்தம் யோசிப்பதால் மட்டுமே கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் ஒதுக்குங்கள்

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது இதயத்தின் இசை

சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது சக்தியின் பிறப்பிடம்

விளையாட நேரம் ஒதுக்குங்கள் - அது இளமையின் இரகசியம்

படிக்க நேரம் ஒதுக்குங்கள் - அது அறிவின் ஊற்று

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சியின் வழி

உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை

Link to comment
Share on other sites

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....

எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்குக்கு ஒன்று.

இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம்

மூக்கு பொடிய தொட்டு மூக்கை சாப்பிடலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சினேகிதம் வெங்காயம் மாதிரி.........

அதை வெட்டிப்பாருங்கள் கண்கலங்கும்.

Link to comment
Share on other sites

என்ன தான் பொண்ணுகள் ஸ்கூட்டர் ஓட்டினாலும்,

கீரோ கொண்டா, கீரோயின் கொண்டா ஆகிடாது.

Link to comment
Share on other sites

நாலு குதிர ஓடினா 40,000 பேர் நின்று பார்க்கிறாங்க

ஆனா அந்த 40,000 பேரும் ஓடினாலும்

ஒரு நொண்டி குதிரையாவது நின்று பார்க்குமா?!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா சாவைப் பற்றி நீ இப்ப கதைக்கலாம்.

ஆனால் அதை அடைஞ்ச பின்னர் அதைப்பற்றி கதைக்கவே முடியாது.

***************

காதலில தோல்வி இருக்கலாம்

ஆனால் காதில தோல் வியாதி இருக்கப்படாது. :)

***************

ஆத்தில மீன் இருக்கலாம்.

ஆனால் மீனில ஆறு இருக்க முடியுமா..??! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.