Jump to content

அமைதிக்கு பெயர் தான் சாந்தா...............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தா ............

அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான இரு குடும்பங்கள் .

.செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள் .ஆணும் பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் .

.குடும்பமும் குழந்தைகளுமாக iவாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர் பதவிஉம்

பெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா வங்கியில் பணியில் சேர்ந்தாள்.

தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான் ..

காலம் உருண்டு ஓடியது .சந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான்

.ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண் கேட்டு தியாகர் செல்லமனியிடம் வந்தார்

..தம்பி இதைஎல்லாம் நீ கேட்க வீண்டுமா? , பிறந்த பொழுதே நிச்சயமானது தானே

எதற்கும் ஒரு வார்த்தை பிள்ளைகளிடமும் கணவரிடமும் கேட்டு சொள்கிறான் .என்றாள்

.ஆரம்பம், ....ஆயத்தங்கள்............. எல்லாம் முடிந்தது. அமய்தியாக வாழும் காலத்தில் ,தாய் நாட்டின்

அவலம் அவர்களை புலம் பெயர வைத்து விட்டது

..மணம் முடித்து மூன்று மாதத்திலே பயணமாகவேண்டி வந்தது. வந்ததும்

ஆண்டு ஒன்று கழிந்ததும் அவர்களிடையே பிரச்சனை............., வீட்டுக்கு வராமை.....

...ஒன்றாக செல்லாமை ...,பெரிய பிரிவாகி விட்டது . ராகவனும் மனித பலவீனத்தில்

ஒரு வேறு இனத்தை சேர்ந்த பெண் துணைதேடி ஒரு மகனையும் பெற்றான்.

செய்தி ;தொலைபேசியில் நாளாந்தம் அலை அலையாக பறந்தது.

இரு வீடாரும் பெரும் பகை ... பகையை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்வு இப்படியா போக வேண்டும் ?......

. இது யார் செய்த தவறு?....... புலம் பெயர் தவறா?...சந்தாவின் விட்டுகொடாமையா?

ராகவனின் புரிந்து கொள்ளாமைய?...அவன் செய்த துரோகமா?..............

.சாந்தா இன்னும் காத்து இருக்கிறாள். ...எத்தனையோ திருமணம் பேசியும் ..மறுத்து விட்டாள்.

..வாழ்கை என்றால் ஒருவனுடன் தான்.................ஒருமுறைதான்...என்று .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தா.........

.பதில்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும் ..

.நன்றி வணகமுடன்......... விடைபெறும்

உங்களில் ஒருத்தி..........

................ நிலாமதி............

Link to comment
Share on other sites

ஒரு பெரிய நாவலை.. ஒரே மூச்சில ஒரு பக்கத்தில சொல்ல முயற்சி செய்திருக்கியள்...

இப்ப விசயம் எல்லாருக்கும் விளங்கிட்டுது...ஆனால் அவசரத்தில சுவாரசியத்தை சோகமாக்கிட்டியள்...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பந்தி...

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் உருவகிக்கணும்.. அப்பதான் படிக்கிறவையள் மனசில அவையள் பேரோட உருவம் வரும்..

இப்டி சில விடயங்கள் கவனித்தால் நல்லாயிருக்கும்..

நேரம் இல்லாவிட்டால்.. பகுதி பகுதியா இணையுங்கள் காத்திருந்து படிப்போம்...

சாந்தாக்கள்.. உருவாக பல காரணங்கள்...

பெற்றோர்கள் திருமணத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாடில் வைத்திருக்ககூடாது...

ஆணென்ன பெண்ணென்ன தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும்..

நன்றி நிலாமதி..

தொடர்ந்து எழுதுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தாவின் கதையை இப்படி கடுகதி வேகத்தில் மூச்சுவிடாமல் சொல்லி முடித்துவிட்டீர்களே.

கதையில் வந்தவர்கள் நிஜமான பாத்திரங்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்பட முடியாதவாறு

கவனமெடுத்து கதையை எழுதவேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் சற்று நினைவில் கொள்ளவும்.

உறவினர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தொழில் செய்தார்கள் என்பதை சித்தரிப்பதில் மை விரயமாவதைத்

தவிர்த்திருந்தால் நல்லது. அத்துடன் கதையின் மையக் கருவுக்கு வழங்கப்பட்ட வரிகள் மிகக் குறைவு என்பது எனது தாழ்மையான கருத்து. எனினும் நல்ல ஆரம்பம், தொடர வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி ..........தங்கள் கருத்து நன்றி .

எனிடம் கதைகள் .... எனும் மலர்களும் .....,கணணி எனும் ..நாரும்

உள்ளது. முயற்சீ செய்து யாழ் களத்தில் மாலை ஆக்க முனைகிறேன்

அதற்கு பயிற்சி எனும் வரைகலை வேண்டும். ஆரம்பமே இப்பொது தான்

.

முடியும் என்ற நம்பிக்கை உண்டு .முயற்சி திருவினை ஆக்கும்.

யாழ் களஉறவுடன் விடை பெறும்.

நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணங்காமுடி ..........

ஏனுங்க ...பெயரை சற்று மாற்றலாமே.........இருந்தாலும் உங்கள் விருப்பம் .

கருத்து கூறியமைக்கு நன்றிகள்.

என் கடுகதி..... யாழில் இருந்து .... ஆரம்பித்தது பாருங்க ...அது தான் ஆறு ...

.மலை... காடு ...வயல் ......வரப்பு என்று ...சுற்றி வர பிடிக்கலை ...

புலம் பெயர் எந்திர வேகம் பாருங்க ..........தப்புதான் ..இது கன்னி முயற்சி

.போக .... போக ...புரியும் ...இந்த பூவின் வாசம்....... புரியும்

. ஒரு நாள் மணம்.... பரப்பும். இன்னும் எனக்கு பயிற்சி வேண்ண்டும்

.அதற்கு யாழ் கள உறவுகள் கை கொடுக்கும் தானே ...

நம்பிக்கையுடன் விடைபெறும் நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பெயரை மாற்றவா?

நான் தான் முன்பே சொல்லியிருந்தேனே

என் பெயர் வணங்காமுடி "அன்றும்-இன்றும்-என்றும்" அப்படின்னு.

அதுசரி உங்க பேர் "நிலா மதியா" அல்லது "நில்லா மதியா"?

ஏன் கேக்கிறன்னா நீங்க NILLAMATHY என்றுதானே ஆங்கிலத்தில் உங்க பெயரை எழுதுகிறீங்க !

அப்புறம் கடுகதி விசயமும் சேர்ந்திடுச்சா,

ஏதோ கேக்கணும் எண்டு தோணிடுச்சு கேட்டுப்புட்டன்.

பிழையின்னா மன்னிச்சுடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dear vanankaamudi ,...........

I cannot write in tamil because tamil indi c translitrate is no t working .

now please help some other writing skills in tamil.thankyou I need help (urgent)

.thankyou .

nilamathy

Dear vanankaamudi ,......or any body in yal kalam .....

I cannot write in tamil because tamil indi c translitrate is no t working .

now please help some other writing skills in tamil.thankyou I need help (urgent)

.thankyou .

nilamathy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dear Nilamathy,

If you go around and search in Yarl forum you will hopefully find enough "How to" & "Do this"

stuffs to be able to guide yourself to configure your pc in order to write in Tamil.

Or in case of emergency please use this URL:

http://www.google.com/transliterate/indic/Tamil

Here you can write, copy & then paste to Yarl.

anbudan

Vanangaamudi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dear vanagkaamudy........

Thanks, this is the one today not working...

I am trying to look arountd Thanks for your message

.nilamathy .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி

மலரும் நாரும் மாலைகட்டும் திறமையும் உள்ள நீங்கள் ஒரு பூக்கடைக்கே உரிமையாளர். எந்த எந்த பூவை தரம் பிரித்து எப்படிக் கட்டினால் மாலை அழகுற அமையும் என்பதைப் போகப் போகப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் நிலாமதி

கீழே கொடுத்துள்ள இணைப்பில் உள்ள மொழிமாற்றியைப் பரசீலித் துப் பார்க்கவூம். ஒருசிறு ஆலோசனை உங்கள் நொடிக் கதைகள் நன்றாக உள்ளன. ஆனாலும் கட்டுரை எழுதமுன் தயாரிக்கும் சிறுகுறிப்புக்கள்போல எழுதாமல் விபரிக்கவேண்டிய இடத்தில் விபரிச்சு கதைமாந்தரையூம் கதைப்புலத்தையூம் மனதில் நிற்குமாறு எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/fe...?maps=t_b-u.xml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம் அம்பலத்தார் .........ணன்ரிகள் ..உது சரி வருகுது இல்லை ..........பின்பு எளுத்வென்

Link to comment
Share on other sites

சகோதரி...ஏதாவது யாழ் தலைப்பினுள் உட்புகவும்...

பின்னர் அந்த பக்கத்தின் அடிப்பகுதிக்கு செல்லவும்

இடது பக்க மூலையில் RSS.. english type என தெரிவு செய்யுங்கள்..

தற்போது நீங்கள் ஏதாவது தலைப்புக்கு பதில் எழுதும் போது.. ஆங்கில உச்சரிப்பில் தமிழ் கீழ் பெட்டியில் எழுதும்போது.. மேல் பெட்டியில் தமிழில் தானியாங்கியாக(automatic) வரும்..

eg:-

zLl ழ்ள்ல்

Ra ra றர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ்ணக்கம் ..உத்யம் ,வ்னங்கா முடி ...கிடைது விட்டத்...னிரைய பயிர்சி வென்டும் சிரிக்க வெண்டாம் நன்ரி.........

Link to comment
Share on other sites

வணக்கம் நிலாமதி கதையை கவிதை மாதிரி சுருக்கி தந்திருக்கிறீர்கள் எப்படிப் படித்தாலும் கரு புரிகிறது பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் விரிவாக எழுதினால்என்னை மாதிரி ஆக்களுக்கு விபரமாய் விளங்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி தொடருங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .. சாத்திரி ,சுவி .................

என் சிறு கதை படித்து கருத்து எழுதியமைக்கு நன்றிகள் .......

..முன்னேற நிறைய இடம் உண்டு .என் முயற்சியும் ...

நிச்சயம் உண்டு ....எனை வளர வைப்பது ...கள உறவுகளின் உரிமை ...

....நன்றி வணக்கம் மறு மடலில் சந்திக்கும் வரை விடை பெறும்....

உங்களில் ஒருத்தி ...நிலாமதி

Link to comment
Share on other sites

நல்ல ஆக்கம் நிலாமதி.

எம்மவர் பெண்களை சின்ன வட்டங்களில் இருந்து வெளிவரவைக்க வேண்டும். கணவனின் தவறுக்காக மனைவி காலம் முழுதும் கஷ்டப்படுவது தேவையில்லாத ஒன்று. பாவம் சாந்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எஅஸ் (..எஅஸ்)....(EAS)

தங்கள் கருத்துக்கு நன்றி ...புலம் பெயர் நாட்டில் ..பெண்கள் மாறிவிட்டார்கள் ...நாளுக்கு நாள் .

.நண்பர்களைமாறுபவர்கள் (காதலனை ) ...என்று கதைப்பவர்கள் மத்தியில் சாந்தாவும் ..

..வாழ்கிறாள் என காட்ட ..நினைத்தேன் .கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் ...

மீண்டும் சந்திப்போம் .

.. நிலாமதி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.