Jump to content

சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து ......

மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில்

அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன

.மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ...

ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது .

கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல

..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து

..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது .நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ...........

மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்தம் கேட்டு சென்று விட்டன்

என் வேலையில் மும்முரமாக இருந்ததில் மறந்து விட்டேன் ஒரு வாரம் சென்று விட்டது

.ஒரு நாள் குருவி நினைவு வர ...ஒரு ஏணி வைத்து எட்டி பார்த்தேன் சின்னஞ்சிறு ... மூன்று முட்டைகள் இருந்தன ..

.எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை சுற்றும் முற்றும் பார்த்து கையில் எடுத்து பார்த்து

விட்டு வைத்து விட்டேன் ...

ஆண் குருவி கண்டால் அவ்வளவு தான் கொத்தி.... குட்டி விடும் ... ...சில வாரங்கள் சென்று விட்டன.

நானும் எனது வேலையில் ......ஒரு நாள் மரத்தை பார்த்த பொது கீச் ...கீச் என்ற சத்தம் ..

தாய் குருவி குஞ்சு களுக்கு உணவு கொடுத்து கொண்டு இருந்தது ...எவ்வளவு இனிமையான வாழ்கை ...

..ஆண் பெண் குருவிகளிடியே.. உள்ள பாசம் ...ஒற்றுமை ...இரண்டும் சேர்ந்து பராமரிப்பு .

..இப்படி மனிதர்கள் வாழ்கிறார்களா/.....

சிட்டு குருவி முத்தம்கொடுத்து... சேர்ந்திடக் கண்டேனே .

.செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே ...

.மொட்டு விரிந்த மலர்களிலே வண்டு மோதிடக் கண்டேனே .......

Link to comment
Share on other sites

சிட்டு குருவியின் முத்தத்தை சிந்தமா சொல்லி சென்ற விதம் அழகு நிலாமதி அக்கா :o ..அது சரி நாங்கள் அந்த குருவியினை பார்த்து எவ்வளவு இனிமையாக இருக்கிறது எண்டு கற்பனை செய்து கொள்கிறோம்.. :wub:

ஆனால்..நாங்கல் குருவியா இருந்து பார்த்தால் :lol: ..சில நேரம் மனிதர்களை பார்த்து என்ன ஒரு அருமையான வாழ்க்கை எண்டு கற்பனை கூடு கட்டுவோமோ யாருக்கு தெரியும்.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜமுனா ...நான் நிலாமதி ,.

.இந்த ஜமுனா நதி எது வரை பாயும் . பரீட்சை எல்லாம் எப்படி ?

நன்றி ஜமுனா (ஜம்மு பேபி )....என் சிட்டு குருவி பார்த்து கருத்து சொன்னதற்கு .......

நன்றியுடன் கள உறவில் விடை பெறும் நிலாமதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.