Jump to content

"பாஸ்கரனின்" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner பகுதியில் திரையிடப்பட்டது .


Recommended Posts

படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது.

ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.

nathismall2ys1.jpgnathi2ho1.jpg

dsc00270tk6.jpg

dsc00321rn4.jpg

dsc00332ef9.jpg

dsc00374el6.jpg

dsc00375uk0.jpg

dsc00397hw7.jpg

dsc00443cj9.jpg

dsc00459th3.jpg

Link to comment
Share on other sites

நன்றி அனிதா...

இதனை முன்னரே இணைக்கவேண்டும் என்று நினைத்திருந்தபோதும், நேரப் பிரச்சனை காரணமாக என்னால் இணைக்க முடியவில்லை. அத்துடன் கான்ஸ் திரைப்படவிழாவின் shortfilm corner பற்றியும் ஒரு விளக்கம் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதுவும் சாத்தியப்படவில்லை. பாஸ்கரனின் நேர்காணல் ஒன்று ஈழமுரசில் வெளிவந்திருந்தது. அதனை இங்கு இணைக்கிறேன். பின்னர் நேரம் கிடைக்கிறபோது shortfilm corner பற்றிய விளக்கத்தையும், மேலதிக படங்கள் சிலவற்றையும் இணைக்கிறேன். நன்றி.

1. இந்த சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது?

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பிரெஞ்சு நடிகரின் ஆலோசனையின் மூலம் நான் எனது படத்தை கான் படவிழாவுக்கு அனுப்பியிருந்தேன். இன்று என்படம் அங்கு குறும்பட பிரிவில் தெரிவு செய்யப்பட்டு அங்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது.

2. எத்தனை பேர் சென்றீர்கள் யார்? யார்?

2 பேர் என் படத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து வருமாறு கேட்டிருந்தார்கள் அதில் அனைவரும் செல்வில்லை என் நண்பன் படத்தொகுப்பு செய்தவர் சங்கர் என்னுடன் வந்திருந்தார்.

3.உங்களுடைய படம் எங்கே திரையிடப்பட்டது?

கான் படவிழாவில் குறும்பட பிரிவில் எனது குறும்படம் திரையிடப்பட்டது.

4. யார் யார் பார்த்தார்கள்?

அனைத்து நாட்டவரும் பார்வையிட்டார்கள். எனது தனிப்பட்ட அழைப்பின் மூலமாக தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் உட்பட மும்பையில் இருந்து வந்தவர்களும் என் பத்தை பார்வையிட்டார்கள். மேலும் கனடாவில் இருந்த வந்த ஒரு நடிகர்: பார்வையிட்டார். அமெரிக்காவில் இருந்து ஒரு குறும்படம் கொண்டு வந்த பிரபல நடிகர் ஒருவரும் பார்த்து சென்றார். அனைவரும் எனது படத்தை பார்வையிட்டு பாராட்டியும் சென்றார்கள்.

5. எத்தனை பேர் பார்க்கக் கூடிய திரை அரங்கு.

இருவர் பார்க்கக் கூடிய அறை 1. இதற்கு அனைவரும் பார்வையிடலாம் எனது படத்தின் பெயரை அவர்கள் தங்களின் அடையாள இலக்கத்தை கொடுத்து பார்வையிட வேண்டும். அதை விட கான் படவிழாவில் வெளியில் நிற்கும் பார்வையாளர்களை அழைப்பிதழ் கொடுத்து பார்வையிட வைக்கலாம் அதுற்கு தனியாக 9 பேர் கொண்ட அரங்கு தருவார்கள். நாங்கள் நின்ற நாட்களில் பல தடவைகள் காண்பித்திருந்தோம்.

6. என்ன கருத்தினை முன்வைத்தார்கள்.

அதற்கு வந்தவர்கள் அனைவருமே வௌ;வேறு நாட்டவர்கள். அதிலும் அதிகமானோர் அகதி வாழ்க்கையின் இன்னல்கள் கஸ்டங்கள் அறிந்தவர்கள். அவர்கள:; அனைவருமே எனது படத்தின் கதையை வாசித்த பின்னர் படத்தை பார்க்க வந்தார்கள்.

அதன் பின்னர் அவர்கள் குறிப்பிட்டது ஆழமான அளவாள கருவைக் கொண்டு நீங்கள் படம் பண்ணியிருக்கிறீர்கள் என்று. உங்கள் கதையின் அமைப்பு எங்களுகு;கு பிடித்திருக்கிறது என்றும் கதையினி கருவும் பிடித்துள்ளது என்றும் கூறினார்கள். கதையின் திரைக்கதை நன்றாக உள்ளது என்றும் கூறினார்கள். மேலும் இதுபோன்று வளர வாழ்த்துகள் கூறினார்கள்.

7.எந்த மொழியில் திரையிடப்பட்டது.

நான் எனது படத்தை தமிழ் மொழியிலே எடுத்தேன் அங்கும் அதே மொழியில் தான்திரையிட்டேன் ஆங்கில சப் ரைற்றிலுடன் வெளியிட்டோம்.

8. இந்த திரைப்பட விழாவுக்கு என்று திரைப்படத்தில் மாற்றங்கள் செய்தீர்களா?

நான் எனது படத்தை கான் படவிழாவில் குடுப்பதற்கு முடிவு பண்ணிய நேரம் மேலும் சில வடிவங்களை மெருகூட்டி வழங்கினோம்.

9.இந்தத் திரைப்பட விழாவுக்குப் பின்னர் இந்தத் துறையில் ஏதும் சாதிக்க வழி பிறந்ததா?

நிச்சயமாக இதுவரைக்கும் நான் எடுத்த குறும்படங்களில் ஒரு சில படங்கள் என் எண்ணத்திற்கு ஏற்பது போல் சரியாக அமையவில்iலை அதில் என்ன பிழைகள் சரிகள் இருப்பதென்றும் நானாகவே அறிந்து இருந்தேன் ஆனாலும் இந்தத் திரைப்பட விழாவுக்கு சேர்ந்து வந்தோம் நானுமு; எனது நண்பன் சங்கரும். இருவருக்குமே அங்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. நாங்கள் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டோம் அதன் மூலமாக திரைப்படத்துறையில் எம்மால் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தோம். சாதிப்போம் என்ற நம்பிக்கையும் உண்டானது.

10. மொத்தமாக எத்தனை குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

எண்ண முடியாத அளவுக்கு குறுந்திரைப்படங்கள் வந்திருந்தன. 4036 படங்கள் மொத்தமாக

11. எந்த நாட்டு படங்கள் எந்த மொழியில்

அதிகமாக ஆங்கில மொழியில் தான் சில அந்நத்நத நாட்டு மொழிகளில் வந்திருந்தன.

அமெரிக்கா, இங்கிலாந்துஇ பிறேசில், பிரான்ஸ், கனடா, நோர்வே, நெதர்லாந்து, இந்தியா, சீனா, இத்தாலி, ஒஸ்ரேலியா, ஜப்பான், மெக்சிக்கோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, ருமேனியா, ரஸ்யா, செனகல், செர்பியா, சியாலியோன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, தென்னாபிரிககா, தென்கொரியா, ஸ்பெயின் இன்னும் பல

12. உங்களது அடுத்த கட்டம் என்ன?

கான் படவிழாவில் பங்குபற்றியதில் இருந்து நாம் பேசிக் கொண்டதே எமது அடுத்த கட்டம் பற்றித்தான் அதுவும் கான் படவிழாவில் கலந்து கொண்ட ஏனைய படங்களுக்கு இணையாக நாமும் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று. அது போல அடுத்த முயற்சியில் அதற்குரிய தொழில்நுட்பங்கள் எமக்கு சரிவருமாக இருந்தால் அவர்களைப் போன்று நாமும் ஈழத்து சினிமாவை வளர்க்க ஒரு உதாரணமான முயற்சியாளர்களாக இருப்போம். எல்லாவற்றுக்கும் எம்மவர்கள் எவ்வளவோ தமிழ்நாட்டு மிரைப்படங்களை யதாரிக்கின்றார்கள். அவர்கள் முன்வந்து எம்மையும் எம்மைப் போன்ற முயற்சியாள்களையும் வளர்த்து ஈழத்து சினிமாவை வளர்க்க தயாரிப்பில் எமக்கும் உதவிகளைச் செய்தால் கான் படவிழாவுக்கு வந்த ஏனைய படங்களாகட்டும், குறும்படங்களாகட்டும் எம்மாலும் எடுக்க முடியும் என்பதை நிருபிக்கலாம்.

Link to comment
Share on other sites

பாஸ்கரனின் நேர்காணலையும் இணைத்தமைக்கு நன்றி இளைஞன். மேலும் சில தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது....! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி. அஜித் கூடப் படம் எடுத்திருக்கின்றார். இதற்கு யாழ்களம் எத்தனை பக்கங்களை விலையாக்கப் போகின்றதோ? முன்னர் கடை திறப்புக்கு நடிகர் கூட எடுத்த படத்தால் சிந்திய பக்கங்களின் இரத்தம் காயவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஸ்கரன் ,

தகவலுக்கு நன்றி அனிதா ,இளைஞன்.

Link to comment
Share on other sites

அருமை... அருமை... :rolleyes:

எப்பவோ எடுத்த நம் படைப்புக்கள் எல்லாம் இப்ப இப்ப தான் நாங்கள் அங்கு இங்கு என(கனபேர்)பார்க்கிறோம் என்றால்.... படைத்தவர்கள் எவ்வளவு.... எதிபார்த்து ஏமாந்திருப்பர்... (அதுகூடஅவர்களுக்காக அல்ல... :wub: எமக்காக... எமது சூழலில் நின்று.... :) )

நம் விமர்சனம்கள் கட்டாயம் அவர்களை ஊக்குவிக்கும் (சாதகமானதோ... பாதகமானதோ... :) ) அதுதான் அவர்கள் கண்ட லாபம் கூட.... :) (நான் எல்லாவகை ஆக்கங்களுக்கும் பொதுவாக சொல்கிறேன் கதை. கட்டுரை.அரசியல். நாடகம். நடிப்பு.படிப்பு என...எல்லாம் எல்லாவற்றிற்கும்....) :)

Link to comment
Share on other sites

படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின்"நதி" குறும்படம் கான்ஸ்திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது.

அனிதா, இளைஞன் இணப்புகளுக்கு மிக்க நன்றி.

பாஸ்கரன் வாழ்த்துக்கள். மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.. உங்கள் வெற்றிப்பயணங்கள் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

dsc00459th3.jpg

வாழ்த்துகள் மன்மதன்...

உது யாருங்கோ நடுவில நிக்கிறபெடியன்? உவரும் விழாவுக்கு வந்து இருந்தவரோ? யாராக இருந்தாலென்ன.. நீங்கள் தொடர்ந்து கலக்குங்கோ. :(

ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இந்தாங்கோ எண்ட குறும்படம் இதில இருக்கிது. பல வெளிநாட்டு ஆக்களுக்கு இதப்பார்க்கிறதுக்கான வழிய ஏற்படுத்தி குடுங்கோ.. வேறையும் இருக்கிது. பிறகு தேடி எடுத்துதாறன். நன்றி! வணக்கம்! :icon_mrgreen:

av-4930.jpg

Link to comment
Share on other sites

நன்றி தகவலிற்கு அனி(தா) அக்கா..வாழ்த்துக்கள் அந்த இளம் கலைஞனுக்கு.. :lol:

அது சரி அனி(தா) அக்கா நானும் எங்கன்ட குருவை வைத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் எண்டு நினைத்திருக்கன் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ.. :o (யாரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்னை).. :(

அப்ப நான் வரட்டா!!

இந்தாங்கோ எண்ட குறும்படம் இதில இருக்கிது. பல வெளிநாட்டு ஆக்களுக்கு இதப்பார்க்கிறதுக்கான வழிய ஏற்படுத்தி குடுங்கோ.. வேறையும் இருக்கிது. பிறகு தேடி எடுத்துதாறன். நன்றி! வணக்கம்! :wub:

av-4930.jpg

ஓ...இதுவும் குறும்படமா குருவே.. :lol: (சும்மா சொல்ல கூடாது)..கொஞ்சநாளைக்கு அப்புறம் எல்லா பொலிஸ் நிலையத்திலையும் இந்த படம் தொங்கினாலும் தொங்கும் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி தகவலிற்கு அனி(தா) அக்கா..வாழ்த்துக்கள் அந்த இளம் கலைஞனுக்கு.. :D

அது சரி அனி(தா) அக்கா நானும் எங்கன்ட குருவை வைத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் எண்டு நினைத்திருக்கன் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ.. :lol: (யாரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்னை).. :o

அப்ப நான் வரட்டா!!

அனி அக்கா எண்டு கூப்பிடலாம். அனிதா அக்கா எண்டும் கூப்பிடலாம். இல்லாட்டிக்கு அனிதா எண்டே கூப்பிடலாம். அனி(தா) அக்கா எண்டால் என்ன குருவுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ. ஓ பேஷா படம் எடுக்கலாமே குருவவச்சு... ஆனா அது குறும்படமா எடுக்கிறது எண்டால் கஸ்டம் பாருங்கோ. ஏன் எண்டால் குருவிண்ட வாழ்க்கையில ரெண்டு வசனத்தில சொல்லி முடிக்கிறமாதிரி ஒரு சம்பவமும் நடக்க இல்ல. எல்லாம் இராமாயணம், மகாபாரதம் மாதிரி நீளமான தொடர்கதைகள். அப்பிடி எண்டால் குரு எண்டுற பெயரில ஒரு சீரியல் செய்வமோ?

ஓ...இதுவும் குறும்படமா குருவே.. :wub: (சும்மா சொல்ல கூடாது)..கொஞ்சநாளைக்கு அப்புறம் எல்லா பொலிஸ் நிலையத்திலையும் இந்த படம் தொங்கினாலும் தொங்கும் பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ. :lol:

Link to comment
Share on other sites

இலங்கை - இந்தியா மற்றும் சுவிஸில் நடைபெற உள்ள தமிழ் குறும்பட விழாவில் பங்கு கொள்ள உலகின் அனைத்து பகுதியிலிருந்தும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் கோரப்படுகின்றன. குறும்படங்களின் அல்லது ஆவணப்படங்களின் கதைக் கருக்கள் குறித்த கட்டுப்பாடுகள் இல்லை. இலங்கை - இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அனுப்பப்படும் குறும்படங்களை அந்தந்த நாடுகளிலேயே ஒப்படைக்கலாம். குறும்படங்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

உங்கள் குறும்படங்கள் குறித்த தகவல்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் : info@ajeevan.

குறும்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் 30 நிமிடத்துக்குள் இருத்தல் வேண்டும்.

http://www.ajeevan.ch/content/view/3170/1/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்குறும்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சிறியேனின் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றிகள் அனிதா, இளைஞன். படலைக்குப் படலை 'மன்மதன்' பாஸ்கரனுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

ஏன் எண்டால் குருவிண்ட வாழ்க்கையில ரெண்டு வசனத்தில சொல்லி முடிக்கிறமாதிரி ஒரு சம்பவமும் நடக்க இல்ல. எல்லாம் இராமாயணம், மகாபாரதம் மாதிரி நீளமான தொடர்கதைகள். அப்பிடி எண்டால் குரு எண்டுற பெயரில ஒரு சீரியல் செய்வமோ?

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ. :lol:

மருமேன்! இராமாயணம், மகாபாரதம் எண்டால் நீங்கள் கூனியோ இல்லாட்டி சகுனியோ? தப்பா நினைக்காதீங்க.. இவங்களாலதான் இராமாயணமும் மகாபாரதமும் இவ்வளவூ பெரிசா வந்ததுன்னு பேசிக்குறாங்க.. :wub:

Link to comment
Share on other sites

அப்பிடி இல்லப் பாருங்கோ சோழியன் மாமா... உண்மையில நான் மகாபாரதத்தில பகவான் கிருஷ்ணன் மாதிரியான வேசத்திலயும்... இராமாயணத்தில இராமர் மாதிரியான வேஷத்திலயும் வாறமாதிரியான பாத்திரம். ஆனா ஒரு கொஞ்சம் வித்தியாசம் என்ன எண்டால் இந்தக்கால நவீன உலகோட ஒத்துப்போறமாதிரியும் மற்றது.. கொஞ்சம் நல்ல பிள்ளையாட்டமாயும், குடும்பங்களின் காவலனாகவும் இதில வாறன்.. :wub:

Link to comment
Share on other sites

அனி அக்கா எண்டு கூப்பிடலாம். அனிதா அக்கா எண்டும் கூப்பிடலாம். இல்லாட்டிக்கு அனிதா எண்டே கூப்பிடலாம். அனி(தா) அக்கா எண்டால் என்ன குருவுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ. ஓ பேஷா படம் எடுக்கலாமே குருவவச்சு... ஆனா அது குறும்படமா எடுக்கிறது எண்டால் கஸ்டம் பாருங்கோ. ஏன் எண்டால் குருவிண்ட வாழ்க்கையில ரெண்டு வசனத்தில சொல்லி முடிக்கிறமாதிரி ஒரு சம்பவமும் நடக்க இல்ல. எல்லாம் இராமாயணம், மகாபாரதம் மாதிரி நீளமான தொடர்கதைகள். அப்பிடி எண்டால் குரு எண்டுற பெயரில ஒரு சீரியல் செய்வமோ?

என்ன குருவே இப்படி கேட்டு போட்டியள் :lol: ..சரி விளக்கம் தானே பேஷா தாறன் என்ன..அதுவென்னவெண்டா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் அனி(தா) அக்காவை எல்லாரும் கூப்பீடினம் தானே ஆனபடியா நான் வித்தியாசமா கூப்பிடுறன் அவ்வளவு தான் :wub: . முதலில அனிபாட்டி எண்டு கூப்பிட்டனான் அல்லோ..(பிறகு அவா பாவம் எண்டு போட்டு இப்ப உப்படி கூப்பிடுறேன்) :D ..ஏன் பிடிகலையா குருவே..??

உந்த விளக்கம் காணுமோ குருவே.. :lol:

மற்றது..குருவே பேஷா குரு எண்டு சீரியல் எடுக்கலாம் ஆனா என்ன நீங்க அதில பதினொரு அவதாரத்தில வரவேண்டும் சொல்லிட்டன் :D அப்ப தான் தசாவாதார படத்தை கூட நாம முறியடித்த மாதிரி இருக்கும் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் குருவே..ஆனா என்ன நானும் ஒரு காச்சியிலையாவது எண்ட முகத்தை காட்டுவன் சொல்லிட்டன்.... :o

அப்ப நான் வரட்டா!!

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ.

சும்மா அதிருதில்லலல குறும்படமே.. :unsure: (இதை பேசமா நாங்க அனுப்பினா என்னவாம்)..ஏன் சொல்லுறன் எண்டா அப்படி இப்படி கிறுக்கி போட்டு நவீன ஓவியம்(மொடர்ன் ஆர்ட்) எண்டு சொல்லீனம் அந்த கிறுக்கலிற்கு விளக்கமும் கொடுக்கீனம் அல்லோ நாங்களும் உதை அனுப்பி அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தா என்னவாம்.. :lol:

இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள் மற்றது நவீன ஓவியம் வரையிறவை எல்லாம் என்னோட கோவித்து போடாதையுங்கோ... :lol:

ஓ..அப்ப ஒரு முடிவோட தான் இருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ..பொலிஸ் நிலையதிற்கு 4500 பேர் எங்க வாறது சுத்தி பார்த்தா நீங்களே 1000 தடவை வரணும் என்ன குருவே.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன குருவே இப்படி கேட்டு போட்டியள் ..சரி விளக்கம் தானே பேஷா தாறன் என்ன..அதுவென்னவெண்டா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் அனி(தா) அக்காவை எல்லாரும் கூப்பீடினம் தானே ஆனபடியா நான் வித்தியாசமா கூப்பிடுறன் அவ்வளவு தான் . முதலில அனிபாட்டி எண்டு கூப்பிட்டனான் அல்லோ..(பிறகு அவா பாவம் எண்டு போட்டு இப்ப உப்படி கூப்பிடுறேன்) .ஏன் பிடிகலையா குருவே..??

உந்த விளக்கம் காணுமோ குருவே..

ஓ அப்பிடியோ..? :lol: நானும் உங்கள ஒரு மாற்றத்துக்கு பே(பி) இல்லாட்டிக்கு சீ(டன்) எண்டு கூப்பிடவோ? அதுக்காக நீங்களும் ஒரு மாற்றத்துக்கு என்னை கு(ரு) எண்டு கூப்பிடவோ எண்டு கேக்ககூடாது. பிறகு அது வேற அர்த்தத்தில வந்திடும். :D:lol::D

ஓ..அப்ப ஒரு முடிவோட தான் இருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ..பொலிஸ் நிலையதிற்கு 4500 பேர் எங்க வாறது சுத்தி பார்த்தா நீங்களே 1000 தடவை வரணும் என்ன குருவே..

அப்ப நான் வரட்டா!!

ஓம் அப்பிடி ஒரு பிரச்சனையும் இருக்கிது என. அத நான் நினைக்க இல்ல மறந்துபோனன். நான் யாழுல வச்சு இருக்கிற ஆயிரம் ஐடிக்காக ஒரு ஐடீக்கு ஒரு தடவை எண்டு பாத்தால் ஆயிரம் தடவை போலீசுகாரனிட்ட அடிவாங்க எண்ட உடம்பு தாங்காது. அப்ப எதிர்காலத்தில போலீசால ஏதாவது சிக்கல் வந்தால் இப்பிடி செய்வமோ? வலைஞன் மாமாதான் எங்கட தலைவர் - குரு - வழிகாட்டி எண்டு போலீசிட்ட போட்டுக்குடுப்பமோ? :rolleyes:

மற்றது... பாஸ்கரன் எண்டு சொல்லப்படுகிற, பிரான்சில இருக்கிற படலைக்கு படலை மன்மதன் (GATE TO GATE MANMATHAN) தான் இப்பிடி எல்லாம் ஆக்களுக்கு நக்கல் அடிக்கிறதுக்கு பழக்கிவிட்டது, எங்களுக்கு எழுதக்காட்டித் தந்தது எண்டு எல்லாம் போலிசிட்ட சொல்லி அவரையும் குழுவினரையும் போட்டுக்குடுப்பம் என. :lol::):lol:

Link to comment
Share on other sites

எனக்கு தனிமடலில் மன்மதன் இதை எழுதி அனுப்பியிருந்தார் , அவரின் கருத்தை இங்கு இணைக்கின்றேன்.

அனைவருக்கும் வணக்கம்,

நான் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றேன் என்பதில் சந்தோசமும் மகிழ்வும் கொள்கிறேன்.

ஈழத்திலிருந்து புலம்பெயர் வாழ்வியலில் நடக்கும் படைப்புகளை , நாங்கள் இது போன்ற விழாக்களுக்கு கொண்டு சென்று அங்கு அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்.

இருந்தாலும் எம்மவர்களைக் கண்டால் இந்தியர்கள் என்பதே பலரின் பார்வைகள் அதை நாம் அகற்ற வேண்டுமானால் இது போன்ற விழாக்களுக்கு செல்ல வேண்டும்.பங்கு கொள்ள வேண்டும், எமது படைப்புகளையும் ,எம் ஈழம் சார்ந்த பிரச்சனைகளையும் கொண்டு சென்று அங்கு காண்பிக்க வேண்டும். இதன் நோக்கமாகவே நான் சென்றேன்.

ஆனாலும் இந்தியர்களை நான் பிரித்துப்பார்க்கவில்லை. இருப்பினும் எமெக்கென்றொர் சினமா உருவாக வேண்டும் .அதற்காகவே உழைப்போம்.

அஜித்துடன் போட்டோ எடுத்ததைப் பற்றி இங்கு கேட்டிருந்தார்கள். அஜித் என்பவர் இந்தியா முழுவதும் தெரியக் கூடிய ஒரு நடிகர். கான்ஸ் திரைப்படவிழாவில் நாமும் அவரும் சமனே ஆனாலும் கூட அவரை விட ஒரு படி நாங்கள் மேல் என்று சொல்லலாம்.ஏன் என்றால் எனது குறும்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் தான் உள்ளே திரையிடப்பட்டது.அஜித் பில்லா அவர்களே ஒரு சினிமா தியட்டரை வாடகைக்கு எடுத்து அதற்கு வரும்படி ஒரு சில வேலைக்காரர்களையும் அங்கு வந்திருந்த ஹிந்தி ஆட்களையும் அழைத்து அந்த படத்தை போட்டுக் காட்டி உள்ளார்கள் .இதுதான் உண்மை இப்படி செய்து விட்டு அஜித் இன்று தான் கான்ஸ் திரைப்படவிழாவில் படத்தைக் காட்டியதாக சென்னையில் இருக்ககூடிய தொலைக்காட்சிகள் ,புத்தகங்களுக்கு பதில் கொடுத்திருக்கின்றார்.

இதற்கு உதாரணங்களாக நாங்களும் சளைத்தவர்களில்லை என்பதற்காகத்தான் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. அஜித்துடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசையில் எடுக்கவில்லை. :o

எனது கருத்தில் குற்றம் குறையிருப்பின் மன்னியுங்கள்.

நன்றி வணக்கம்!!

Link to comment
Share on other sites

இந்தாங்கோ எண்ட குறும்படம் இதில இருக்கிது. பல வெளிநாட்டு ஆக்களுக்கு இதப்பார்க்கிறதுக்கான வழிய ஏற்படுத்தி குடுங்கோ.. வேறையும் இருக்கிது. பிறகு தேடி எடுத்துதாறன். நன்றி! வணக்கம்! :o

av-4930.jpg

ஆ , இப்படியும் ஒரு குறும்படமோ ? இதுவரைக்கும் பார்த்ததேயில்லை ...... அருமை, மிக மிக அருமை...வெற்றி பெற வாழ்த்துக்கள்... :)

நன்றி தகவலிற்கு அனி(தா) அக்கா..வாழ்த்துக்கள் அந்த இளம் கலைஞனுக்கு.. :D

அது சரி அனி(தா) அக்கா நானும் எங்கன்ட குருவை வைத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் எண்டு நினைத்திருக்கன் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ.. :o (யாரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்னை).. :D

அப்ப நான் வரட்டா!!

அதுதான் உங்க குரு ஏற்கனவே ஒரு குறும்படத்தை எடுத்து வச்சிருக்காரே.... :lol: பத்தாதுக்கு உங்க படங்களுமெல்லோ இணைச்சிருக்கார் :D

அனி அக்கா எண்டு கூப்பிடலாம். அனிதா அக்கா எண்டும் கூப்பிடலாம். இல்லாட்டிக்கு அனிதா எண்டே கூப்பிடலாம். அனி(தா) அக்கா எண்டால் என்ன குருவுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ.

நல்ல கேள்வி , நானும் நினைச்சனான் கேட்கனும் எண்டு , யமுனா எல்லாரையும் விட வித்தியாசமா எண்ட பெயரைக் கூப்பிடுறாராம் :lol:

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ. :D

அப்படியே இந்தப்படததையும் சேர்த்துக் கொள்ளுங்க .... :D1690076442056055wd3.gif

( ஜமுனா கோவிக்கிறயில்லை , சும்மா பகுடிக்கு இந்தப்படம் செய்தனான் )

Link to comment
Share on other sites

ஓ அப்பிடியோ..? நானும் உங்கள ஒரு மாற்றத்துக்கு பே(பி) இல்லாட்டிக்கு சீ(டன்) எண்டு கூப்பிடவோ? அதுக்காக நீங்களும் ஒரு மாற்றத்துக்கு என்னை கு(ரு) எண்டு கூப்பிடவோ எண்டு கேக்ககூடாது. பிறகு அது வேற அர்த்தத்தில வந்திடும்.

ம்ம்..குருவே அதுவே தான்..நீங்க என்னை சீடன் எண்டு கூப்பிடுறதே ஒரு மாற்றமா தான் இருக்குது அல்லோ குருவே பிறகு ஏன் இன்னொரு மாற்றம்.. :o (அப்படி எண்டாலும் பரவால்ல)..பே(பி) எண்டு கூப்பிடுங்கோ ஆனா சீ(டன்) எண்டு மட்டும் கூப்பிட்டு போடாதையுங்கோ பிறகு எல்லாமே "டண்டணக்கா" ஆகிடும் ஏன் எண்டு விளங்குது தானே குருவிற்கு.. :lol:

சா..சா நான் உங்கள் குரு எண்டு மட்டும் கூப்பிடுவன் வேற மாதிரி எல்லாம் கூப்பிடமாட்டன் பயப்பிடாதையுங்கோ..ஏன் இப்ப அழுறியள் உதுகெல்லாம் போய்.. :o

"ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்

குருவ வாங்க முடியுமா...

நா..நா..நா.நா"

அப்ப நான் வரட்டா!!

ஓம் அப்பிடி ஒரு பிரச்சனையும் இருக்கிது என. அத நான் நினைக்க இல்ல மறந்துபோனன். நான் யாழுல வச்சு இருக்கிற ஆயிரம் ஐடிக்காக ஒரு ஐடீக்கு ஒரு தடவை எண்டு பாத்தால் ஆயிரம் தடவை போலீசுகாரனிட்ட அடிவாங்க எண்ட உடம்பு தாங்காது. அப்ப எதிர்காலத்தில போலீசால ஏதாவது சிக்கல் வந்தால் இப்பிடி செய்வமோ? வலைஞன் மாமாதான் எங்கட தலைவர் - குரு - வழிகாட்டி எண்டு போலீசிட்ட போட்டுக்குடுப்பமோ? :)

மற்றது... பாஸ்கரன் எண்டு சொல்லப்படுகிற, பிரான்சில இருக்கிற படலைக்கு படலை மன்மதன் (GATE TO GATE MANMATHAN) தான் இப்பிடி எல்லாம் ஆக்களுக்கு நக்கல் அடிக்கிறதுக்கு பழக்கிவிட்டது, எங்களுக்கு எழுதக்காட்டித் தந்தது எண்டு எல்லாம் போலிசிட்ட சொல்லி அவரையும் குழுவினரையும் போட்டுக்குடுப்பம் என. :

ம்ம்...நீங்க மறந்து போனாலும் நான் மறக்கமாட்டன் குருவே.. :D (நீங்களும் எத்தனை தரம் தான் அடி வாங்கிறது)..நீங்க ரொம்ப நல்லவர் :D ..நன்ன யோசனையா தான் இருக்கு அப்ப நீங்க சொன்ன மாதிரியே "வலைஞன் மாமா" எங்கன்ட தலைவரா இருந்திட்டு போகட்டும்..(ஆனா என்ன நீங்களே ஆயிரம் தடவை வாறியள் எண்டா அவர்)...நினைத்து கூட பார்க்க முடியல்ல..சரி நாங்க அத விடுவோம் என்ன.. :D

பேஷா..அந்த பாஸ்கரன் அண்ணாவையும் இழுத்திடுவோம் எப்பவுமே கூட்டமா சேர்ந்து அடி வாங்கிறது தனி சுகம் என்ன குருவே.. :D (குருவே நாங்க கதவிற்கு கதவு எண்டு ஒன்டை செய்தா எப்படி இருக்கு இத பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.