Jump to content

யாழ் பே(பி) பிலிம்ஸ் தமிழ் மக்களுக்கு பெருமையுடன் வழங்கும் "கடலைக்கு கடலை!" (ஓர் காதல் காவியம்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இத விட யாழ் பல்கலைகழகத்துக்கு முன்னால அபிராமி என்ட ஒரு சாப்பாட்டு கடை இருக்கு தெரியுமோ? நல்லா இருக்கும் அங்க சாப்பாடு எல்லாம்...

அபிராமி கடையில் நானும் சாப்பிட்டுள்ளேன் சுண்டல் , நல்ல சாப்பாடு .

முன்பு யாழ் . பல்கலைகழ்கத்தில் உள்ள வேப்பமரத்தில் பூக்கும் வேப்பம்பூக்களை ஆய்ந்து வந்து வீட்டில் அப்பம்மாவிடம் வடகம் செய்யச்சொல்லி கொடுக்கின்றனான் .

பல்கலைகழகத்திற்கு முன்னால் உள்ள குமாரசாமி வீதியில் தான் நண்பர்கள் ஒன்று கூடி , மந்திர ஆலோசனை நடத்துவோம் .

பரமேஸ்வரா சந்தியில் இருக்கும் கடைதானே...? தோசை பிரபலம் என்று ஞாபகம்...

லீ , நீங்கள் சொன்னமாதிரி பரமேஸ்வரா சந்தி கடையில் மசால்தோசையும் , போளி என்ற சிற்றுண்டியும் பிரபலம் .

யாராவது ஐந்துலாம்படிக்கு கிட்ட உள்ள மொக்கன் கடையில் அசைவ உணவு சாப்பிட்டுள் ளீர்களா ?

அங்கு சிலவேளை சாப்பிட்டபின் காசைகொடுக்கும் போது , மீதி காசு தரும்போது கொடுத்தகாசை விட கூடுதலாக தருவார்.

ஆதலால் சாப்பாடும் சும்மா , வேறுசெலவுக்கு காசும்கிடைத்த மாதிரி .

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

யாழ்ப்பாணத்தில அந்த சென்ரல் நேர்சிங் ஹோம் இருக்கிதுதானே? அந்த ரோட்டையும் மறக்க ஏலாது. எனக்கு வைமன் ரோட்டில நண்பன் ஒருத்தன் இருந்தவன்... அப்ப ஸ்கூல் முடிஞ்சு வரேக்க கோயில்வீதியால வந்து பிறகு கைலாசபிள்ளையார் கோயிலில திரும்பி பிறகு வைமன் ரோட்டுக்கால வந்து பிறகு அந்த சந்தியில கோயில் வீதிக்கு சமாந்தரமா போற ஒழுங்கையுக்கால போய், பிறகு அந்த மற்ற கோயில்கள கண்டு சென்ரல் நேர்சிங் ஹோமடியால போய் அப்பிடியே பலாலி ரோட்டில ஏறி திருநெல்வேலிக்குபோய் கொக்குவிலுக்கு வீட்ட வாறது. சிலது சின்னச் சின்ன குச்சி ஒழுங்கைகளுக்காலையும் போய்வாறது. :icon_idea:

பல்கலைக்கழகத்துக்கு முன்னால இருக்கிற குமாரசாமி வீதியில ஒரு ஆச்சிரமம் இருக்கிது அல்லோ? பொழுதுபோகாட்டிக்கு முந்தி சிலது அங்க போய் வாறது.

கடலை போடுறதிலை தொடங்கி இப்ப உறவுகள் தேடும் பாலத்திலை வந்து நிக்குது

தம்பி மாப்பு! பேசாமல் "உறவுகள் தேடும் பாலம்" எண்டொரு பக்கத்தை திறந்தியளண்டால் உங்கை கனபேருக்கு வசதியாயிருக்குமெல்லே :icon_mrgreen:

பழசுகளும் அதுக்குள்ளை வந்து கடலை போடலாமெல்லே :rolleyes:

ஏற்கனவே இதுக்க எல்லாரும் கடலை போடத்துவங்கீட்டீனம் கு.சா அண்ணா. வேணுமெண்டால் இதுண்ட தலைப்ப "உறவுகள் தேடும் பாலம்" எண்டு மாத்திவிடவோ? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி ....

கு . தா . சொன்னது சரி ...அப்ப " கடலைக்கு கடலை ."

.உறவு தேடும் படலமாக மாறிவிட்டதோ ? அது எவ்வளவு காலம் ஓடும் .?

Link to comment
Share on other sites

பொற்பதி வீதி, கோணாவளை வீதியுக்கையும் இருந்து கன பேர் வந்திருக்கிறியள். நானும் கோணாவளை வீதி, பொற்பதி வீதி பகுதிகளிலை 4 வருசம் இருந்தனான். ஆனா நீங்கள் எல்லாம் நான் அந்த பகுதிக்கு இடம் பெயர முன்னமே அந்த பகுதிகளிலை இருந்து வெளியேறியிருப்பியள் எண்டு நினைக்கிறன் ^_^ .

அமைதியான தெருக்கள், பொற்பதி பிள்ளையார், கோணாவளை வைரவர், சாயி துர்க்கை இந்த கோயிலுகள் நான் இருந்த வீடுகளுக்கு மிக கிட்ட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தெஹிவலை சந்தியில அந்த மூலையுக்க இருக்கிற கடையுல மரவள்ளிக் கிழங்கு பொரியல் வாங்கி சாப்பிட்டு இருக்கிறீங்களோ? அந்தமாதிரி இருக்கும். அதில நிறைய விதம்விதமான பட்டாணிக் கடலைகள் விக்கிறவங்கள். நான் அதால போகேக்க வரேக்க வாங்கி சாப்பிடிறது..

நான் சில வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற போது , உறவினர் ஒருவர் கூறியதன்படி அங்கு போய் மரவள்ளிகிழங்கு பொரியலும் , பொரித்த பட்டாணி கடலையும் :o ( கடலைக்கு கடலை ) வாங்கினேன் . நன்றாக இருந்தது . திரும்ப இங்கு வரும் போது பொரித்த கடலை கிலோ கணக்கில் வாங்கியும் வந்தேன் . ^_^

யாழ்ப்பாணத்தில அந்த சென்ரல் நேர்சிங் ஹோம் இருக்கிதுதானே? அந்த ரோட்டையும் மறக்க ஏலாது. எனக்கு வைமன் ரோட்டில நண்பன் ஒருத்தன் இருந்தவன்... அப்ப ஸ்கூல் முடிஞ்சு வரேக்க கோயில்வீதியால வந்து பிறகு கைலாசபிள்ளையார் கோயிலில திரும்பி பிறகு வைமன் ரோட்டுக்கால வந்து பிறகு அந்த சந்தியில கோயில் வீதிக்கு சமாந்தரமா போற ஒழுங்கையுக்கால போய், பிறகு அந்த மற்ற கோயில்கள கண்டு சென்ரல் நேர்சிங் ஹோமடியால போய் அப்பிடியே பலாலி ரோட்டில ஏறி திருநெல்வேலிக்குபோய் கொக்குவிலுக்கு வீட்ட வாறது. சிலது சின்னச் சின்ன குச்சி ஒழுங்கைகளுக்காலையும் போய்வாறது.

பல்கலைக்கழகத்துக்கு முன்னால இருக்கிற குமாரசாமி வீதியில ஒரு ஆச்சிரமம் இருக்கிது அல்லோ? பொழுதுபோகாட்டிக்கு முந்தி சிலது அங்க போய் வாறது.

ஓம் முரளி , குமாரசாமி வீதியில் ஆச்சிரமம் ஒன்று உள்ளது . ஆனால் , அதற்குள்ளே ஒருநாளும் போய் பார்க்கவில்லை .

சென்ரல் நேர்சிங் ஹோம் உள்ள வீதியில் தான் திருநெல்வெலி சிவன் கோவில் உள்ளது , மற்ற பக்கம் ஒரு கோவில் உள்ளது அதன் பெயர் ஞாபகத்தில் இல்லை . அதற்கு முன் அழகிய தாமரைக்குளமும் ஒன்றும் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையேனு கவலையா இருக்கு. தெஹிவளை கச்சான் கடை சுப்பர் தான் மயுரி கொத்து ரொட்டி ரோயல் பேக்கரி ரொலெக்ஸ்

வெள்ளவத்தையில் இருக்கும் மயூரியை தானே சொல்கிறீர்கள் காசினி , அங்கும் நான் சாப்பிட்டுள்ளேன் . கொத்து ரொட்டி , கணவாய் , இறால் கறி போன்றவை பிரமாதமாக இருக்கும் .

வெளிநாட்டுக்கு கொண்டுபோவதற்கு என்று செய்து தரும்படி முதல் நாளே சொல்லி வைத்தால் கெடாதமுறையில் செய்து தருவார்கள் .

ரொலக்ஸ் மயூரிக்கு எதிர் பக்கம் உள்ளது அங்கும் சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் ஒருமுறை சாப்பிட்டுள்ளேன் .

ரோயல் பேக்கரி எங்கு உள்ளது என்று தெரியவில்லை , அங்கு என்ன சுவையாக கிடைக்கும் . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி நல்ல சாப்பாட்டு ராமன் போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையேனு கவலையா இருக்கு. தெஹிவளை கச்சான் கடை சுப்பர் தான் மயுரி கொத்து ரொட்டி ரோயல் பேக்கரி ரொலெக்ஸ்

வெள்ளவத்தையில் இருக்கும் ரொலெக்ஸ் கடையிலையும் மயுரி கடையிலையும்

சாப்பிட்டு இருக்கேன் . நானும் தெகிவளை சந்திக்கு அருகில் தான் இருந்தேன் ஹாஷினி நீங்கள் சொல்வதை பார்த்தல் உங்களையும் எங்காவது பார்த்து இருப்பேன் போல இருக்கு. மாலை நேரங்களில் தெகிவளை கடற்கரையில நண்பர்களோடு போய் இருப்பேன் கடற்கரை தான் நண்பர்கள் எல்லாம் சந்திக்கும் இடம். சிலவேளைகளில் எல்லோரும் கடற்கரையில் காற்பந்து விளையாடுவோம் அந்த மறக்கமுடியாத நினைவுகள் இப்பவும் மனசில இருக்கு :) . கடற்கரையில் இருந்து போலீஸ் பிடித்துக்கொண்டு போனதும் ஞாபகத்தில இருக்கு :(:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி நல்ல சாப்பாட்டு ராமன் போலை கிடக்கு :wub:

நான் சுற்றுலா போகும் போது அந்த ஒரு சாண் வயிற்றுக்கு குறை வைப்பதில்லை குமாரசாமியண்ணை .

மற்ற வேளைகளில் பத்தியம் தான் . :(

Link to comment
Share on other sites

என்டாலும் நாச்சிமார் கோயிலடில இருந்து கொண்டு நல்லூர் திருவிழாக்கு போனதுகள மறக்கேலா...அதுவும் பக்கத்தில பக்கதில எப்படியுமு; 5 ஜஸ்கறீம் கடையாவது இருக்கும்...அது ஒரு கனாகாலம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திக்கு சந்தி உள்ள தண்ணீர்பந்தல்களை மறக்கமுடியுமா ? சுண்டல் .

நான் நினைக்கின்றேன் கந்தர்மடசந்தியில் உள்ளது தான் பெரியபந்தல் என்று.

Link to comment
Share on other sites

மோர், சக்கரைத்தண்ணி எண்டு தெருத்தெருவா வச்சு ஊத்துவாங்கள். நாங்கள் கோயிலுக்கு நடந்துதானே போறது அப்ப சின்னனில. அப்ப ரோட்டு ரோட்ட உதுகள வாங்கி குடிச்சுக்கொண்டு போறது. தெல்லிபழை அம்மன், மாவிட்டபுரம், நல்லூர், செல்வசந்நிதி எண்டு மாறி மாறி கொடி ஏற எங்களுக்கு கொண்டாட்டடம்தான் சின்னனில. மற்றது, காவடிகள் போகும். அதுகளுக்கு பின்னாலையும் பராக்குப்பாத்துக்கொண்டு போறது. பிறகு வரேக்க கச்சான் வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வாறது. வீட்டில சண்டை பிடிச்சு காசு வாங்கிறது. அப்ப அஞ்சு ரூபா எண்டால் பெரிய காசு அல்லோ? அப்பா எனக்கும், அண்ணாவுக்கும் சேத்து அஞ்சு ரூவா தருவார். அத வச்சு கச்சான், ஐஸ்கிரீம் எண்டு சமாளிக்கிறது. பிறகு நாங்கள் திருவிழா வரப்போகிது என்ட உடன உண்டியலிலையும் காசு சேக்கிறது. அதவச்சு மிச்சம் விளையாட்டு சாமாங்கள் வாங்கிறது. எங்கட கூட்டாளி பெடியங்களின்ட பொக்கற்றுக்க அப்பவே அம்பது ரூவா, நூறு ரூவா எண்டு காசு புழங்கும். அவங்கள் எங்களுக்கு நல்லா ஐஸ்கிரிம் அது இது எண்டு தங்கட செலவில வேற வாங்கித் தருவாங்கள். காலம்பற போனால் பின்னேரம்தான் வாறது. முக்கியமா தேர், தீர்த்த திருவிழா அண்டைக்கு. :lol:

Link to comment
Share on other sites

கோயில் பந்தல்களில் கொடுக்கப்படும் சர்க்கரைத் தண்ணீர், மோர்களுக்கென தனிச்சுவை உண்டு. அச்சுவையை வாழ்நாளில் மறக்க முடியாது. நான் மற்றைய கோயில்களுக்கு அதிகம் போனதில்லை. செல்வச்சந்நிதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு ஓரி

ரு முறை போயிருக்கிறேன். அதைத்தவிர நான் அனுபவித்ததெல்லாம் எங்கள் ஊர்க் கோயில் திருவிழாவே. பதினெட்டு வருடங்களாக எமது ஊர் சிங்கள இனவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இங்குள்ளவைகளை வாசிக்கும்போது, எனக்கும் எங்கள் ஊர்க்கோயில் திருவிழா ஞாபகம் வந்து விட்டது. இப்போது என்னுள் தோன்றும் உணர்வுகளை இங்கு வடிக்கிறேன்.

எங்கள் ஊர் ஒரு சிறிய ஊர்தான். சிறிய ஊர் என்பதால் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். அதனால் எங்கள் கோயில் திருவிழா மிக அமர்க்களமாக இருக்கும். ஊரில் திருவிழா வந்தால் எங்களுக்கும் கொண்டாட்டம்தான். பள்ளிக்கூடம் போவதால் பகல் திருவிழாவிற்கு அதிகம் போவதில்லை. ஆனால், பின்னேரங்களில் கோயில் வளவைச் சுற்றிக் கூட்டித் தண்ணீர் தெளிப்பதற்காகப் போய்விடுவோம். அநேகமாக சிறுவர்களும், ஒருசில பெரியவர்களும்தான் இதனைச் செய்வார்கள். அதனால் எங்களுக்கு மிகவும் கொண்டாட்டம். எங்கள் வயதையொத்தவர்கள் பலர் சேர்ந்து கதைத்துக் கொண்டே எல்லாம் செய்வோம். அந்நேரங்களில் ஒலிபெருக்கியில் எங்களுக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை ஒலிபரப்ப வைப்போம். அநேகமாக எல்லோருமே எங்கள் உறவினர்களாக இருப்பதால், நாங்கள் நினைத்ததை சாதித்து விடுவோம். அதேபோல், நாதஸ்வரம் வாசிப்பவர்களும் வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தாலும் கோயில் மடத்திலேயே தங்கியிருப்பார்கள். அவர்களிடமும் எங்களுக்கு விருப்பமான பாடல்களைச் சொல்லி வைப்போம். சாமி வெளிவீதி வலம் வரும்போது, அவற்றை வாசிப்பார்கள். அதன் பின்னர், வீட்டிற்கு வந்து வெளிக்கொண்டு போவோம். எங்கள் வீட்டில், கோயில் திருவிழாக்களின்போது, முழுப் பாவாடை சட்டைதான் அணியவேண்டும். பஞ்சாபி அணிவதற்குக்கூட அனுமதியில்லை. தேருக்கு அநேகமாக புதுஉடைகள் தான் அணிவோம். முதல் பத்துநாட்களும் சாதாரண திருவிழாவாக இருக்கும். சப்பறத்திருவிழாவின்பின்தான

Link to comment
Share on other sites

ம்ம் நான் அளவெட்டியில இருந்த காலத்தில பிள்ளையார் கோயில் திருவழாக்களுக்கு போறது எங்கட ஊர சுத்தி கோயில தான் அப்புறம் நாச்சிமார் கோயிலுக்கு இடம்பெயர்ந்தா பிறகும் ஊரசுத்தி கோயில் தான் கலட்டி பிள்ளையர் கலட்டி அம்மன் நாச்சிமார் கோயில் திரவழாக்கள் அடுத்தடுத்து வரும் அப்புறம் நல்லூர் இப்படி செம ஜாலி தான்....

Link to comment
Share on other sites

ஓம் உந்த நாச்சிமார் கோயிலடி, பிறகு கலட்டி எல்லாம் முந்தி நாம ஓடித்திரிஞ்ச இடங்கள். கலட்டியுக்க ஆகவும் முந்தி நான் சின்னனா இருக்கேக்க, கிட்டு மாமாவிண்ட காம்ப் இருந்தது. அதுக்க இருந்து 50 கலிபரால வானூர்திகளுக்கு தாக்குதல் செய்யுறவேள். கலட்டியும் மிகவும் பிசியான ஒரு இடம். எனக்கு யாழ்ப்பாணத்தில (நகரப்பகுதி) எல்லா இடமும் அத்துப்படி. அதுக்க நாம கால் வைக்காத இடம் எண்டு ஒண்டும் இல்ல. :lol:

ஓஹோ அப்ப சுண்டல் அளவெட்டியோ? நானும் முந்தி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியுக்க கிரிக்கட் விளையாட வாறது. அப்ப எனக்கு சுண்டல ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும் போல. ஹாஹா :lol:

Link to comment
Share on other sites

ரோயல் பேக்கரி எங்கு உள்ளது என்று தெரியவில்லை , அங்கு என்ன சுவையாக கிடைக்கும் . :lol:

வெள்ளவத்தை மாகாசனங்களுக்கு காலை உணவான வெதுப்பி (அதாவது பாண்) விற்கும் பிரபலமான வெதுப்பகம் (பேக்கரி). அதோட ரோல்ஸ், போன்ற சிற்றூண்டிகளும் உண்டு. பக்கத்தில நிறைய தனியார் கல்வி நிலையங்களும் (சங்கம், சைவ மங்கையர் கழகம்) உண்டு என்பதால் இங்கே கடலை போட :lol: , காதல் வளர்க்க வருபவர்களும் :lol: அதிகம், இப்போது வெதுப்பகத்துடன் ஒரு உணவகமும் மேல்மாடியில் உண்டு என்று நினைக்கிறேன்

ஓ.. இப்ப ஊர்க்கதை போய் திருவிழா, தண்ணீர்ப்பந்தல் கதை தொடங்கிட்டோ.. நான் தவறாமல் போகும் திருவிழாக்கள், நந்தாவில் அம்மன், மற்றும் கொக்குவில் துர்க்கை அம்மன் (இரண்டு கோயிலிலும் எங்கள் வீட்டு உபயம் உண்டு) அதைவிட பொற்பதி பிள்ளையார், மஞ்சனப்பதி, முக்கியமா எல்லாரையும் போல நல்லூர், எப்படியும் முக்கியமான திருவிழாக்களுக்கெல்லாம் ஆஜராகிவிடுவேன்..நல்லூருக்கு எங்கள் வீட்டிலிருந்த்து நடந்து செல்வது மறக்க முடியாத அனுபவம் :D

Link to comment
Share on other sites

ம்ம் மருதனர் மடத்தில தான் மகாஜனா இயங்கியது நாங்கள் நாடகம் பழக இராமநாதனுக்கு வந்தனாங்கள்...

அப்பிடியே பாடசாலை முடிஞ்சு உடுவில் கேள்ஸ் பக்கமும் ஒருக்கா போயிட்டு வாறது...

முரளி யாழ் பாணத்தில கல்யாணி சுவையருவி சுவையாரு லிங்கம் எல்லாம் போய் இருக்கிங்களா?

Link to comment
Share on other sites

ஓம் பொண்ணுகள் படிக்கிற பள்ளிக்கூடம் எண்டால் சும்மா அதடியால ஒருக்கால் போயிட்டு வராட்டிக்கு உங்களுக்கு நித்தா வராதே.. என சுண்டல்.. மற்றது, நீங்கள் பெரியபுலம் மத்திய மகாவித்தியாலயம், வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி பக்கங்கள் போக இல்லையோ? நான் பாடசாலை பஸ்ஸிலையும் சிலது போய் வாறது. அதுக்க பெடிகள் செய்யுற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்ல. ஆனா.. எங்கும், எதிலும் நாம அச்சாப் பிள்ளைகளாக்கும். வேடிக்கைகள் பார்த்து ரசிக்கிறது ஒழிய, வேடிக்கை செய்ய போறது இல்ல.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி வாழ்த்துக்கள் என்னதான் இருந்தாலும் பாவம் வெண்ணிலா கவலப்படாதெயும் வெண்ணிலா உமக்கு நான் இருக்கிறேன் என்ர உயிரையும் கொடுப்பேன் (உயிரைக்கொடுப்பேன் என்டா என்ர உயிரையில்ல தனுஸ் திருவிளையாடல் படத்தில டிசொன்னத சொன்னத ஞாபகப்படுத்தவும நான் அத எழுதி யாழ் களத்திட்ட பேச்சு வாங்க ஏலாது )

Link to comment
Share on other sites

வெள்ளவத்தை மாகாசனங்களுக்கு காலை உணவான வெதுப்பி (அதாவது பாண்) விற்கும் பிரபலமான வெதுப்பகம் (பேக்கரி). அதோட ரோல்ஸ், போன்ற சிற்றூண்டிகளும் உண்டு. பக்கத்தில நிறைய தனியார் கல்வி நிலையங்களும் (சங்கம், சைவ மங்கையர் கழகம்) உண்டு என்பதால் இங்கே கடலை போட :lol: , காதல் வளர்க்க வருபவர்களும் :D அதிகம், இப்போது வெதுப்பகத்துடன் ஒரு உணவகமும் மேல்மாடியில் உண்டு என்று நினைக்கிறேன்

ஓ அப்ப கடலை போடுறதுக்குத்தான் ஒவ்வொருநாளும் அவ்வளவு சனம் நீளமான கியூவில நிக்கிறதுகளோ? நான் பஸ்ஸில போய்வரேக்க அந்த பேக்கரியிண்ட பாண்வாசனை முகர்ந்துகொள்ள நல்லா இருக்கும். அதில நிறைய நேரம் நிண்டு ஒருவரும் கடலை போட ஏலாது எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் பக்கத்தில வெள்ளவத்தை காவல் நிலையம் இருக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இப்ப ஊர்க்கதை போய் திருவிழா, தண்ணீர்ப்பந்தல் கதை தொடங்கிட்டோ.. நான் தவறாமல் போகும் திருவிழாக்கள், நந்தாவில் அம்மன், மற்றும் கொக்குவில் துர்க்கை அம்மன் (இரண்டு கோயிலிலும் எங்கள் வீட்டு உபயம் உண்டு) அதைவிட பொற்பதி பிள்ளையார், மஞ்சனப்பதி, முக்கியமா எல்லாரையும் போல நல்லூர், எப்படியும் முக்கியமான திருவிழாக்களுக்கெல்லாம் ஆஜராகிவிடுவேன்..நல்லூருக்கு எங்கள் வீட்டிலிருந்த்து நடந்து செல்வது மறக்க முடியாத அனுபவம் :lol:

லீ , நல்லூர் திருவிழா காலங்களில் வீதி ஒரங்களில் கரும்பு விற்பார்கள் , வாங்கியுள்ளீர்களா ?

மற்றும் அந்த காலங்களில் தான் வெள்ளரிபழம் , தாமரை கிழங்கு எல்லாம் கிடைக்கும் .

தாமரை கிழங்கு கறி எனக்கு மிகவும் பிடிக்கும் .

Link to comment
Share on other sites

ஓ அப்ப கடலை போடுறதுக்குத்தான் ஒவ்வொருநாளும் அவ்வளவு சனம் நீளமான கியூவில நிக்கிறதுகளோ? நான் பஸ்ஸில போய்வரேக்க அந்த பேக்கரியிண்ட பாண்வாசனை முகர்ந்துகொள்ள நல்லா இருக்கும். அதில நிறைய நேரம் நிண்டு ஒருவரும் கடலை போட ஏலாது எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் பக்கத்தில வெள்ளவத்தை காவல் நிலையம் இருக்கிது.

உண்மையில காவல்துறை இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. கைது செய்யிறதெண்டால் இரவு நேரம் தான் வருவாங்கள்.

லீ , நல்லூர் திருவிழா காலங்களில் வீதி ஒரங்களில் கரும்பு விற்பார்கள் , வாங்கியுள்ளீர்களா ?

மற்றும் அந்த காலங்களில் தான் வெள்ளரிபழம் , தாமரை கிழங்கு எல்லாம் கிடைக்கும் .

தாமரை கிழங்கு கறி எனக்கு மிகவும் பிடிக்கும் .

தாமரைக்கிழங்கு மற்ற காலங்களிலும் கிடைக்கும்தானே..? இல்லையா..? வடிவா தெரியாது..நல்லூர் திருவிழாக்காலங்களில் கரும்பு, மற்றும் பனை அபிவிருத்திசபையின் உணவுகள் (பனங்கிழங்கு, பலகாரங்கள்), பிறகு நல்லூர் அய்யர்மார் விற்கும் புளியோதரை, இடியப்ப புரியாணி, அங்கால சுவையருவி குளிர் களி, பிறகு பூபாலசிங்கம் கடையில் புத்தகங்கள், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தில் பதப்படுத்திய உணவுகள் எல்லாம் வாங்கிறது

Link to comment
Share on other sites

எல்லோரும் உங்களுடைய பழைய அனுபவங்களை கூறி என்னுடைய பழைய நினைவுகளை மீட்டிபார்க்க வைச்சிட்டிங்க. இரு வருடங்களுக்கு முன்பு சுற்றித்திரிந்த இடங்களை இப்படி நினைவுகள் மூலம் தான் மீட்டி பார்க்க முடியும் என நினைக்கும் போது ரொம்பவே கவலையா இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.