Jump to content

யாழ் பே(பி) பிலிம்ஸ் தமிழ் மக்களுக்கு பெருமையுடன் வழங்கும் "கடலைக்கு கடலை!" (ஓர் காதல் காவியம்)


Recommended Posts

கடலைக்கு கடலை

கதாநாயகன்: சுண்டல்

கதாநாயகிகள்: நிலாமதி, இன்னிசை, கறுப்பி, கவரிமான், தூயா, வெண்ணிலா

கெளரவ வேடம்: நெடுக்காலபோவான், ஜம்மு பே(பி)

பாடல்வரிகள்: தமிழ்தங்கை

பாடல்: யாழ் இசைக்குழு (முரளி, டங்குவார், கந்தப்பு, சினேகிதி, விகடகவி, சோழியன்)

ஒப்பனை: அனிதா

ஒழுங்கமைப்பு: குமாரசாமி, சாத்திரி

மக்கள் தொடர்பு: ஈழவன் (அவுஸ்திரேலியா), சாணக்கியன் (இலங்கை), சிவா (கனடா), சஜீவன் (சுவிஸ்), லீ (சிங்கப்பூர்), தமிழ்சிறி (லண்டன்), நுணாவிலான் (அமெரிக்கா)

கதை வசனம், இயக்கம்: முரளி

டிவீடி விநியோக உரிமை: அறுவான் வீடியோஸ் இண்டர்நாசனல்

******

காட்சி 01

(குசினுக்குள் உள்ள இருக்கையில் மேலே சீலிங்கை வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து அடுப்பில் உள்ள எண்ணைச் சட்டியினுள் எறிகின்றார். சுடுகின்ற எண்ணை தெறித்து முகத்தில் படுகின்றது. வாயில் பாடல் வருகின்றது..)

காதல் என்னும் அடுப்பில்வேகி

பூத்திருந்த சுண்டல் நான்!

தூயா என்னும் சமையல்காரிக்காய்

காத்திருந்த சுண்டல் நான்!

அவள் சுண்டல் சமைத்தபோது

ஏன் அன்பை ஊற்றவில்லை?

சுண்டல் சமைத்தபின்னர் - ஏன்

அதை தின்று பார்க்கவில்லை?

(சுண்டல் தனது பழைய காதலி தூயாவுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

தூயா: டியர் பிரண்ட் சுண்டல், நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் தூயா. கடைசியில என்ன ஆக வெறும் நண்பன் எண்டுமட்டும் சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

தூயா: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு நண்பனா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

தூயா: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

தூயா: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் டியர் பிரண்ட்? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் buddy. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு நண்பனிண்ட வாழ்த்துகள் தூயா! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 02

(கிரிக்கட் விளையாடும் மைதானத்தில் உள்ள ஒரு குந்தில் வானத்தை வெறித்துப்பார்த்தபடி படுத்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து எத்தி எத்தி எறிந்து வாயினுள் போடுகின்றார். அது இலக்குத்தவறி பக்கத்தில் உள்ள ஈரமான சேற்று நிலத்தில் விழுகின்றது. வாயில் பாடல் வருகின்றது..)

என்னடி இன்னிசை நீ

சொன்னது என்னாச்சு?

நேற்றோடு நீ திண்ட சுண்டல்

சேற்றோடு போயாச்சு!

(சுண்டல் தனது பழைய காதலி இன்னிசையுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

இன்னிசை: என்ன அண்ணா சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் இன்னிசை. கடைசியில என்ன அண்ணா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

இன்னிசை: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு அண்ணாவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

இன்னிசை: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

இன்னிசை: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் அண்ணா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் அண்ணா. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு அண்ணாவிண்ட வாழ்த்துகள் இன்னிசை! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 03

(லண்டனில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உள்ள ஒரு வாங்கில் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சாய்ந்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து மேசையில் உள்ள சாப்பாட்டு தட்டில் போடுகின்றார். சாப்பாட்டு தட்டின்மீது இலையான்கள் பல வந்து மொய்க்கின்றன. வாயில் பாடல் வருகின்றது..)

நன நன நன நன

நன நன நன நனா..!

நன நன நன நன

நன நன நன நனா..!

சுண்டலை விரும்பிய கறுப்பியின் உள்ளம்

சுண்டலை முழுதுமாய் உண்ணவில்லை!

சுண்டலை ஒருமுறை விழுங்கிய பின்னர்

சுண்டலை திரும்பதொடவும் இல்லை!

(சுண்டல் தனது பழைய காதலி கறுப்பியுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

கறுப்பி: என்ன தம்பி சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் கறுப்பி. கடைசியில என்ன தம்பி எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

கறுப்பி: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு தம்பியா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

கறுப்பி: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

கறுப்பி: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் தம்பி? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் தம்பி. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு தம்பியிண்ட வாழ்த்துகள் கறுப்பி! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 04

(கடற்கரை ஓரத்தில் உள்ள பாறையில் வானத்தை வெறித்துப்பார்த்தபடி படுத்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் இருக்கும் சுண்டலை கடலினுள் மெதுவாக ஒன்று ஒன்றாக தூக்கி எறிகின்றார்.. வாயில் பாடல் வருகின்றது..)

நல்லதோர் சுண்டல் சமைத்தே அதை

நலம்கெட கடலினுள் எறிவதுவோ?

சொல்லடி நிலாமதி - நீ இந்த

சுண்டலை ஏன் சுவைக்க இல்லை?

(சுண்டல் தனது பழைய காதலி நிலாமதியுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

நிலாமதி: என்ன மாமா சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் நிலாமதி. கடைசியில என்ன மாமா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

நிலாமதி: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு மாமாவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

நிலாமதி: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

நிலாமதி: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் மாமா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் மாமா. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு மாமாவின்ட வாழ்த்துகள் நிலாமதி! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள் போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்.)

******

காட்சி 05

(பறக்கும் விமானத்தில் உள்ள இருக்கையில் மேலே வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண்டல் அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து பக்கத்து இருக்கையில் உள்ள ஒர் வெள்ளைக்காரியின் வாயில் ஊட்டிவிடுகின்றார். வாயில் பாடல் வருகின்றது..)

ஓ மானே மானே மானே கவரிமானே - நீ

தின்பதற்கு சுண்டல் தந்தேன்

சின்னப் பெண்ணே!

(சுண்டல் தனது பழைய காதலி கவரிமானுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

கவரிமான்: என்ன அப்பா சொல்லுறீங்கள்?

சுண்டல்: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் கவரிமான். கடைசியில என்ன அப்பா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

கவரிமான்: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு அப்பாவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

சுண்டல்: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

கவரிமான்: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற பெண் ஒருத்தி கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பாள். அவளப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

சுண்டல்: (மெளனமாக இருக்கின்றார்)

கவரிமான்: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் அப்பா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் அப்பா. குட் லக், டேக் கெயார்.

சுண்டல்: (கண்கள் கலங்கியபடி) உமக்கு அப்பாவிண்ட வாழ்த்துகள் கவரிமான்! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள்: "போடி போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடி நாசமாப் போவாய்..." சுண்டலுக்கு இப்போது வாழ்க்கை வெறுக்கின்றது. தனது உண்மையான காதலை ஏற்றுக்கொள்ளாததோடு மட்டும் அல்லாது வெறும் நண்பன், அண்ணா, தம்பி, மாமா, அப்பா என்று எல்லாம் கூறி தன்னை பெண்கள் கிண்டலும் செய்து இருப்பது பற்றி மிகவும் கோபம் அடைகின்றார். சுண்டலுக்கு பெண்களை கண்டாலே இப்போது வெறுப்பு ஏற்படுகின்றது. பழிக்கு பழி வாங்கவேண்டும் என்று துடிக்கின்றார்.)

******

காட்சி 06

(வீட்டில் உள்ள கட்டிலில் மேலே கூரையை வெறித்துப்பார்த்தபடி படுத்து இருக்கும் வெண்ணிலா அவர்கள் பையினுள் உள்ள சுண்டலை ஒவ்வொன்றாக கையினால் எடுத்து அதன் அழகைப்பார்த்து ரசித்துவிட்டு அதை உண்ணாமல் யன்னலினூடாக வெளியில் எறிகின்றார். வாயில் பாடல் வருகின்றது..)

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன்

நீ வருவாயென...

பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன்

நீ வருவாயென..

சுண்டலாக நீ வருவாயா?

எண்ணையாகிறேன்...

கடலையாக நீ வருவாயா?

வெண்ணையாகிறேன்..

(வெண்ணிலா தனது பழைய காதலன் சுண்டலுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

சுண்டல்: என்ன வெண்ணிலா சொல்லுறீங்கள்?

வெண்ணிலா: நான் உம்மோட எவ்வளவு அன்பா பழகினன் சுண்டல். கடைசியில என்ன அக்கா எண்டு சொல்லிப்போட்டீரே? (அழுகின்றார்..)

சுண்டல்: இல்லையே (கோபம்..), ஆரம்பத்தில இருந்து நான் உங்கள நல்ல ஒரு அக்காவா நினைச்சுத்தான் பழகினன். நீங்கள்தான் தப்புத்தப்பான எண்ணங்கள மனதில வளர்த்துப்போட்டு கடைசியில என்னக் காதல் செய்யுறதா என்னமோ எல்லாம் சொல்லுறீங்கள்.

வெண்ணிலா: சரி இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லுறீர்?

சுண்டல்: என்னைவிடவும், அழகான, அறிவான, உங்களில மிகவும் அன்பு காட்டிற ஆண் ஒருத்தன் கட்டாயம் உங்களுக்காக இந்த உலகத்தில பிறந்து இருப்பான். அவனப்போய் கண்டுபிடிச்சு, காதலிச்சு, கைப்பிடிச்சு, சந்தோசமா வாழுங்கோ.

வெண்ணிலா: (மெளனமாக இருக்கின்றார்)

சுண்டல்: என்ன கடுமையா யோசிக்கிறீங்கள் அக்கா? நான் சொன்னது வடிவா விளங்கிச்சிது தானே? சரி நான் போட்டு வாறன் அக்கா. குட் லக், டேக் கெயார்.

வெண்ணிலா: (கண்கள் கலங்கியபடி) உமக்கு அக்காவிண்ட வாழ்த்துகள் சுண்டல்! எங்கிருந்தாலும் வாழ்க! (மனதினுள்: "போடா போ போ.. என்னை ஏமாத்தின நீ நல்லா இருக்கமாட்டாயடா நாசமாப் போவாய்.." வெண்ணிலாவுக்கு இப்போது வாழ்க்கை வெறுக்கின்றது. ஆண்களை கண்டாலே வெறுப்பு ஏற்படுகின்றது.)

******

காட்சி 07

(பொல்லை ஊன்றியபடி நெடுக்ஸ் தாத்தா அவர்கள் சுண்டலை நோக்கி வருகின்றார். சுண்டலின் தோள்களில் தட்டி பாராட்டு தெரிவிக்கின்றார். தலையைக் குனிஞ்சுகொண்டு நிற்கும் வெண்ணிலாவைப் பார்த்து இவ்வாறு பாடுகின்றார்..)

கடலைக்கு கடலை!

ஆஹா..

கடலைக்கு கடலை!

கடலைக்கு கடலை!

ஓஹோ..

கடலைக்கு கடலை!

கடலைக்கு கடலை!

ஹேஹே..

கடலைக்கு கடலை!

******

காட்சி 08

(ஜம்பு பே(பி) ஒரு கடதாசியை விரித்து அதில் எழுதப்பட்டுள்ள பஞ்சை வாசிக்கின்றது...)

கண்ணா, ஒழுங்காக கடலை போடுவதே உனக்கு எப்படி என்று தெரியவில்லை, இந்தக்கேவலத்தில நீயெல்லாம் எப்படி பிறவிப்பெருங்கடலை நீந்திக் கடக்கப்போகின்றாய்?

******

கடலைக்கு கடலை முற்றியது..

நன்றி! வணக்கம்!

:lol::):lol:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு தாங்க முடியல்ல. :lol:

இதுதான் இப்ப இணையத்தில நடக்கிற பிரபல்யமான விசயம்..!

காணாம கற்பனை பண்ணிக்கிறது.. கடலை போட்டுக்கிறது.. அப்புறம் கவுண்டு கிடக்கிறது..! :lol:

விளம்பர அனுசரணை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் கடலை போடுறதுக்கு ஆறு கதாநாயகிகளா ???????? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி,,

நீங்கள் இப்படிப் போட்டிருக்க வேணும்..

ஒரே கதை ஒரே வசனம்....***:lol:)))

சிரித்ததனால் வந்த வயிற்று வலி அதற்கான செலவு $250.90

விழுந்து விழுந்து சிரித்ததனால் மேனியில் பட்ட காயங்கள் மருந்துச்செலவு $150.90

வைத்தியரிடம் போன வாகனச் செலவு $ 75.90...

மொத்தச் செலவு $477.70

கடனட்டை மூலமாக தற்போதைய பிரச்சனை தீர்ந்தது கடனட்டையின் பணம் கட்டுவதற்கான முடிவுத் திகதி வர முன்னர் பணத்தை அனுப்பி வையுங்கோ முரளி :lol:))))))))))!!

ச்ச்ச்சும்மா சொல்லக் கூடாது..... அமர்க்களமா இருக்கு!! தலைப்புக்கேற்ற பாத்திரம்...

கடலைக்கு கடலை : சுண்டல்...

இப்படியெல்லாம் அறிவுபூர்வமா யதார்த்தமா எங்கள் கலைஞனால் தான் சிந்திக்க முடியும்..

வாழ்க! கலைஞா...:)

Link to comment
Share on other sites

குருவே.."கடலைக்கு கடலை"..எல்லாரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைகாவியம் பாருங்கோ.. :D (அந்த மாதிரி இருக்கு)..ஆனா நீங்களும் ஒருக்கா உதில வந்து முகத்தை காட்டி இருந்தா இன்னும் நன்னா இருந்திருக்கும் பரவால்ல நான் வந்தா என்ன நீங்க வந்தா என்ன எல்லாமே ஒன்னு தானே.. :lol:

மொத்தத்தில சுண்டல் அண்ணாவின்ட நடிப்பு அந்த மாதிரி அதோட எல்லா கதாநாயகிகளும் நன்னா நடித்து இருக்கீனம் பாருங்கோ எல்லாருக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் குருவே.. :)

அதோட குருவே எனக்கு ஒரு "பஞ்" மட்டும் வைக்காம பாவனா அக்கா கூட ஒரு பாட்டும் வைத்திருந்தா நன்னா இருந்திருக்கும் :) சரி..சரி பரவால்ல அடுத்த முறை கண்டிப்பா செய்யுங்கோ என்ன..எண்ட கன நாள் ஆசை அது எண்டு உங்களுக்கு தெரியும் தானே.. :)

அது சரி இந்த கதை உங்க மனதில தோன்ற ஏதாச்சும் காரணங்கள் இருக்கோ இல்லாட்டி இப்படி உங்களுக்கு நடந்ததோ குருவே எல்லாருக்கும் முன்னால சொல்ல ஏலாட்டி எனக்கு மட்டும் காதுகுள்ள சொல்லுங்கோ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் பாருங்கோ.. :D

மொத்தத்தில் "கடலைக்கு கடலை" காதலின் ஆழம் மற்றும் காதலின் சோகம். :lol: ..குருவே இப்ப எல்லாம் கடற்கரையில சுண்டல் சாப்பிட்டு முடியமட்டும் தானாம் காதலாம் அதை சரியா காட்டி இருக்கிறியள் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி .......

கடலைக்கு கடலை " நன்றாக் இருந்தது .. அழகு ..அறிவு...? எல்லாம் இருந்தால் அது

பெண்ணாக இருக்காது .பொம்மையாக........... தான் இருக்கும் ..

.தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வார்கள் ...எது ...

.... கிடைத்ததோ அது நன்றாகவே இருக்கிறது . எது கிடைக்க இருக்கிறதோ ...

அது நன்றாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் .

நிலாமதி

Link to comment
Share on other sites

அற்புதமான கற்பனை. சொன்ன மாதிரி கதையை எழுதிப்போட்டியள்..

அடுத்த படத்தில நீங்களும் நடியுங்கோ..(இயக்குனர் எல்லாரும் இப்ப நடிக்கினம் அல்லோ..) கூடவே ஜமுனாவும் சுண்டலும்..இதில கொஞ்சம் அதிரடி இருக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவளவுக்கும் எத்தினை கிலோ கடலை தேவைப்பட்டிருக்கும் :lol: மாப்பு கற்பனை பிரமாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிரித்து , சிரித்து வயிறு நோகுது ...........

அதோடை சுண்டல் கடலை போட ஆறு கதாநாயகிகளா என்று கேட்ட குமாரசாமியண்ணையின் ஏக்கம் வேதனையை தந்தது.

முரளி , உங்கள் " கடலைக்கு கடலை " நல்ல கற்பனை .

Link to comment
Share on other sites

அட நாசமசா போச்சு மனுசர் ஒரு ஒரமா எம் எஸ் என் ல இருந்து கடலைபோடுறம் அதை இப்படியா கிண்டல் பன்னிறது?

அது சரி பாப்ஸ் இப்ப செருப்போட வரபோறா நான் எஸ்கேப்...

மாப்ஸ் நன்னா இருக்கு வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

எல்லாருண்டயும் உற்சாகமான கருத்துக்களுக்கு முதற்கண் நன்றிகள்!

மற்றது.. இந்தப்படைப்பு யாருண்டையாவது மனதை புண்படுத்தி இருந்தால் அடியேனை மன்னிச்சுக் கொள்ளவும்.

---------------------------------------------------------------------

எனக்கு... இந்தக்கதையிண்ட கருபற்றி என்ன சொல்லுறது எண்டு தெரிய இல்ல. ஒவ்வொருவரிண்ட தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஏற்ப விசயங்கள் வேறுபடும். கிரீன்விச் சர்வதேச நேர அலகு மாதிரி காதலுக்கு ஒரு வரைவிலக்கணம் சொல்ல ஏலாது. இது தனித்தனி ஆக்களிண்ட தனித்தனி அனுபவங்கள்...

எண்டாலும் ஒரே ஒரு விசயத்த நான் சொல்ல விரும்புறன்...

நம்மில யாராச்சும் உண்மையான அன்பு வைச்சால்... உண்மையான காதல் வச்சால் நிச்சயமாக அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி... எம்மை ஏமாற்றமாட்டார்கள்.

நாம ஏமாற்றப்படுறம் எண்டால் அதிண்ட உண்மையான அர்த்தம் நாம விரும்பிய அந்த காதலி அல்லது காதலன் எமக்குரிய ஓர் உண்மையான அன்பு உள்ளம் அல்ல என்பது தான்.. எண்டபடியால் இப்படியான உண்மையான அன்பு அவர்களிண்ட உள்ளத்தில எமக்கு கிடைக்காத நிலையில அவர்கள் எமக்கு கிடைப்பதைவிட கிடைக்காமல் விடுவதே எமக்கு நல்லது. ஏன் எண்டால் பிறகு அப்படியானவர்கள் எமக்கு கிடைத்து நாம் அவர்களை பலவந்தம் செய்து கலியாணம் கட்டினால் கூட கலியாணத்தின் பின் அவர்களுடன் அமையும் வாழ்க்கை இனிமையானதாக அமையப்போவதில்லை.

எண்டபடியால.. ஏமாற்றம் என்பது எமது நன்மைக்கே என்பதை நாங்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.

அன்புடன்,

இயக்குனர்

கடலைக்கு கடலை

:):D:(

Link to comment
Share on other sites

நாம ஏமாற்றப்படுறம் எண்டால் அதிண்ட உண்மையான அர்த்தம் நாம விரும்பிய அந்த காதலி அல்லது காதலன் எமக்குரிய ஓர் உண்மையான அன்பு உள்ளம் அல்ல என்பது தான்.. எண்டபடியால் இப்படியான உண்மையான அன்பு அவர்களிண்ட உள்ளத்தில எமக்கு கிடைக்காத நிலையில அவர்கள் எமக்கு கிடைப்பதைவிட கிடைக்காமல் விடுவதே எமக்கு நல்லது. ஏன் எண்டால் பிறகு அப்படியானவர்கள் எமக்கு கிடைத்து நாம் அவர்களை பலவந்தம் செய்து கலியாணம் கட்டினால் கூட கலியாணத்தின் பின் அவர்களுடன் அமையும் வாழ்க்கை இனிமையானதாக அமையப்போவதில்லை.

நன்றாகச் சொன்னீர்கள்

சுண்டல் கடலை போடுறதுக்கு ஆறு கதாநாயகிகளா ????????

கு சா வை வைச்சு முதல் மரியாதை படம் எடுங்கோ

முரளி உங்களுக்கு 2 தனிமடல் அனுப்பியிருந்தேன் கிடைத்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு சந்தேகம் , அவை ஆறு பேரில் எத்தனை பேர் பெண்கள்.

ஆண்கள் , பெண்கள் பெயரில் உலாவும் காலம் இது .

Link to comment
Share on other sites

அப்பகதையை சுண்டல் சொன்ன மாதிரி.. தொலைபேசியில், குறுஞ்செய்தியில் உரையாடல் நடக்கிற மாதிரி எடுத்துக்கவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

நன்றி சிவா. ஓம் உங்கட மடலுகள் கிடைச்சிது. பிறகு பதில் போடுறன்.

ஹிஹி.. நேரம் கிடைக்கேக்க குமாரசாமி அண்ணவையும் கதாநாயகனா போட்டு ஒரு படம் எடுப்பம் என.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்குள்ள சுனாமி வந்துட்டுதோ எண்டு நினைச்சுட்டேன்.

நல்ல கற்பனை வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு பிரமாதம். ஆமா உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோன்றுது? :)

Link to comment
Share on other sites

வெண்ணிலா தனது பழைய காதலன் சுண்டலுடனான கடைசி சந்திப்பை மனதினுள் மீட்டுப்பார்க்கின்றார்...)

தேவையின்றி லூசுத்தனமாக என் பெயரை இபப்டியான சிற்சில பாத்திரங்களுக்கு பாவிப்பதை தவிர்ப்பது நல்லதென நினைக்கின்றேன். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையின்றி லூசுத்தனமாக என் பெயரை இபப்டியான சிற்சில பாத்திரங்களுக்கு பாவிப்பதை தவிர்ப்பது நல்லதென நினைக்கின்றேன். :):D

முரளி எதிர்காலத்தில் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். கள உறவுகள் விரும்பாத பாத்திரப்படைப்புக்களில் அவர்களின் பெயர்களை பாவிக்க வேண்டின் முன் அனுமதி பெற்றுப் பாவிப்பது அல்லது தவிர்ப்பத்தே அவர்களுக்கு மன உளைச்சல்கள்.. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தடுக்க உதவும். முன்னர் டன்னும் இப்படிப் பாவிக்கப் போய் சிலருடன் பிரச்சனைப்பட்டவர்..! அதன் பின் மோகன் அண்ணா அவர்கள் எதற்கும் முன் அனுமதி பெற்றுப் பாவிக்க அல்லது தவிர்க்க கேட்டுக் கொண்டதாக ஞாபகம். :(

எனக்குப் பிரச்சனை இல்ல நமக்குத்தான் கெளரவ வேடம் தந்திருக்கே..! :(:(

Link to comment
Share on other sites

நன்றாக எழுதுறீங்கள்.பாராட்டுகள் முரளி

Link to comment
Share on other sites

ஹிஹி மாப்பி வெண்ணிலா என்னடா யாழ் கள வெண்ணிலான்டு சொல்லலியே...

Link to comment
Share on other sites

இப்பிடி அடிக்கடி கிளுகிளுப்பா எழுதுங்கப்பா செம குஜாலா இருக்கு.......

Link to comment
Share on other sites

இப்பிடி அடிக்கடி கிளுகிளுப்பா எழுதுங்கப்பா செம குஜாலா இருக்கு.......

உங்களைத்தான் போட்டு தாக்கோ தாக்குன்னு தாக்கியிருக்கார். உங்களுக்கு குஜாலா இருக்கோ? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.