Jump to content

கருணை மனு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

lonely20birdbz1.jpg

கண்ணின் மணியாய்

கனிந்தவளே

கனக்குதடி இதயம்

காணத்துடிக்குதடி உன்னை..

கண்ணோடு கண் கொண்டு

கதைகள் பேசி

கணங்கள் மறந்து

களித்திருந்த நினைவுகள்..!

கனவுகள் கூட

கணமும் காட்டுதடி உன்னை

கனக்கும் பிரிவுக்குள்

கண்கள் சிவக்குதடி தினமும்.

கண்ணீரின் நிறையது

கடல் தாண்டிப் போனதடி

கனக்கும் சோகம்

கட்டிலில் நோயோடு

கட்டியதடி என்னை.

கனவாகிப் போனதுவே

காளையிவன் களிப்பு..!

கணமும் ஏங்குதடி

கண்ணில் உன் விம்பம் நாடி.

கதறுகிறேன் இன்று தனிமையில்..

கனிந்த உன் நினைவுகள்

கனக்குதடி மனசெங்கும்..

கழுத்தில் ஒரு சுருக்கு

களிப்புடன் தா

கனவில் உன்னைக் கண்டபடி

கழற்றி விட என் உயிரை

கழன்று விடுகிறேன் உலகை விட்டே

கண்களால் நீ என்றும் என்னைக்

காணாதிருக்க.

காத்திருந்த பொழுதுகள்

காட்சிகளாய் விரியுதடி

கண்கள் முன் ஓடி

கள்ளி நீ

கண்ணாமூஞ்சி ஆடுகிறாய்.

கரங்கள் தொட்ட நினைவுகள்

காய மறுக்கின்றன

காயப்பட்ட நினைவுகளால்

கறுக்குதடி என் இதயம்.

காட்டினாய் வீராப்பு

கனிந்தது சோகம்

கணமும் உன்னை

காண ஏங்குது என் நினைவு

கனவில் தானும்

கண்டிலையோ என் சோகம்..?!

கனவிலும் எனை வெறுத்தனையோ..??!

கன்றிழந்த தாயாகி

கண்ணீர் தான் மிஞ்சுகிறது

கவியின் வரிகள் கூட

கண்ணீரால் குளிக்கிறது.

காட்டிய கோபம் போதும்

கன்னியே தணிந்து வாராயோ..??!

களித்திருக்க

கருணை தான் காட்டாயோ..??!

கற்பனையில்..

கரங்கள் தன்னை பற்றி

சரணடைகிறேன் உன்னை

கருணை மனு சமர்பித்தே.

தனிமையே கதியென்று தனித்து விடப்பட்ட அந்தக் குருவியின் சோகத்துக்காய்.. இந்தக் குருவிகளின்.. குரல்.. சோகம் என்றால் எங்கும் ஒன்றுதானே.. மனிதனென்ன குருவியென்ன..!

- குருவிகள்.

சுட்ட இடம்: http://kuruvikal.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் ..அண்ணா ...

கருணை மனுவை சுவைத்து ......சுட்டு போட்ட..தங்களுக்கு நன்றிகள் பாராட்டுகள்

. சோகம் ..சுகமானது . கதாநாயகனுக்கு ...இந்த பாடல் ...பிடிக்குமா?

காதல் சிறகை காறினில்.... விரித்து வானவீதியில்... பறக்கவா...

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது.... அழுதால் கொஞ்சம் நிம்மதி ...

அன்புடன் நிலாமதி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் பிரிவு தாங்கமுடியாதது என்று நீங்கள் சுட்ட கவிதையின் மூலம் புரிந்து கொண்டேன் நெடுக்ஸ் ,

பாவம் அந்த குருவி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவியின் (படத்தில் உள்ளது) கருணை மனுவை வாசித்து சுவைத்து கருத்துரைத்த உறவுகளுக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகம் குருவியோடு போயிட்டுது. நல்லவேளை மனுஷாளின் சோகம் வரவில்லை.

உங்க க.......கவிதை அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகம் குருவியோடு போயிட்டுது. நல்லவேளை மனுஷாளின் சோகம் வரவில்லை.

உங்க க.......கவிதை அழகு

பிரிவுச் சோகத்தை குருவி மட்டுமல்ல.. மனிதர்களும் அனுபவிக்கின்றனர் என்பதை வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே.

நன்றி கறுப்பி நான் சுட்ட கவிக்கு கருத்துரைத்ததற்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"க" வில் கவிதையை வரைந்த கவிஞருக்கு பாராட்டுக்கள்.

குருவிக்கு கருணை காட்டக் "க" வில வேண்டி இருக்கிறார் போல.. கவி புனைஞ்சவர். :)

நன்றி நுணாவிலான் நான் சுட்டதை நீங்களும் ரசித்ததற்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவுச் சோகத்தை குருவி மட்டுமல்ல.. மனிதர்களும் அனுபவிக்கின்றனர் என்பதை வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே.

நன்றி கறுப்பி நான் சுட்ட கவிக்கு கருத்துரைத்ததற்கு. :wub:

ஆஆஆஆ.......இது உங்க கவிதை இல்லையா

ஒற்றைக்குருவி சோகத்தால் புலம்புதே.

அதுதான் நான் நினைச்சன் உங்க கவிதை எண்டு.

Link to comment
Share on other sites

குருவிக்கு கருணை காட்டக் "க" வில வேண்டி இருக்கிறார் போல.. கவி புனைஞ்சவர். :lol:நன்றி நுணாவிலான் நான் சுட்டதை நீங்களும் ரசித்ததற்கு. :D

ஆனாலும் என்னசெய்ய மலர்தான் மலர(மாட்ட) மாட்டன் எண்டிட்டுதே.. :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் என்னசெய்ய மலர்தான் மலர(மாட்ட) மாட்டன் எண்டிட்டுதே.. :wub::wub:

குருவி துணையப் பிரிந்த சோகத்தில பாடுது என்ற நாங்க இருக்கிறம்.. நீங்க புதிசா மலர் என்று சொல்லுறீங்க.. எல்லாம் பெரும் புதிரா இருக்குது. மலர் வண்டுகளுக்குத்தானே மலரும்.. ???! :D:lol:

ஆஆஆஆ.......இது உங்க கவிதை இல்லையா

ஒற்றைக்குருவி சோகத்தால் புலம்புதே.

அதுதான் நான் நினைச்சன் உங்க கவிதை எண்டு.

நான் "சப்போஸ்" தனிய இருந்தாலும் புலம்பமாட்டன்..! சந்தோசப்படுவன்..! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.