Jump to content

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ .

.புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் ,

உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள்

நிலாமதி i

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய கனடா தின நல்வாழ்த்துகள்!

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழில் கண்டு வைப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

எம்நிலப் புகழைச் சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

O Canada!

Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide,

O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

Link to comment
Share on other sites

கனடா மண்ணில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கனடா தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நிம்மதியா வாழ கிடைத்த நாட்டுக்கு நன்றி சொல்லும் உங்களுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. <_<

Link to comment
Share on other sites

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? <_<

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? :wub:

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

கனடாவிலோ இல்ல மேற்குலகிலோ வசதிகள், சுதந்திரங்கள் எல்லாம் தமிழர் ஏற்படுத்திக் கொண்டவையல்ல முரளி. ஏலவே வெள்ளைக்காரன் அமைந்திருந்த அடித்தளத்தில் தான்... அவனுக்கு கூலி செய்து அனுபவிக்கப் போனவை இவை. இதற்காக அவர்கள் செய்த திருகுதாளங்கள் கனடா அறியுமோ தெரியாது நாங்கள் அறிவம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புரட்டிப் போட்டவையும்.. பாஸ்போட் தலை மாத்தினவையும்.. ஒன்றுக்கு நாலு மனிசி என்று பறந்தவையும்... இவர்களை எல்லாம் கனடா நாட்டுக் குடிமக்கள் என்பதா... கேவலமாக இருக்கிறது..! :wub:

கனடா உள்வாங்கிக் கொள்கிறது. திறமைசாலிகளை. அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுது. அவர்கள் கனடாவின் விருப்பில் அழைக்கப்படுகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக கள்ள மட்டை போடுறவனும் கனடாவுக்கு உதவுறானா.. அவனையும் கனடா விரும்பி அழைத்தா கொண்டது.. வந்த இடத்தில் துரத்த வழியில்லாமல் உள்வாங்கிக் கொண்டவை கனடா பெருமைப்படும் படியா நடக்கினம்..???! :wub:<_<

நான் எனது தாய் மண்ணின் விடுதலை வேட்கையை எனது வசதிக்காக காட்டி வாழ முனையல்ல. அடுத்தவன் கஸ்டப்பட்டு கட்டி எழுப்பின தேசத்தில நான் கூலியா வாழ்வன் என்ற நிலை தான்.. எம்மவருக்கு நாடற்ற நாதியற்ற நிலையை உருவாக்கக் காரணம்..!

இதைத்தான் அன்று பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றவர்கள் சிங்களவனோட சேர்ந்து சுதந்திரமா வாழுறம் எண்டவை. இன்று அவர்களின் சந்ததி எவனோ ஒருவன் போராடி உருவாக்கின சுதந்திரத்தின சேதத்தில அழையா விருந்தாளியா போய் நின்று கொண்டு விசிலடிச்சான் குஞ்சுகளா விசிலடிக்கிறது... கேவலமா இருக்குது..! அதுவும் அவையின்ர பூர்வீக நிலம் ஆக்கிரமிப்பாளனாலை விழுங்கப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்..!

நானும் கனடாவை வாழ்த்துவன்.. எப்ப கனடா என்ற தாய் மண்ணின் விடுதலையை அங்கீகரித்து நிற்கும் போது..! நானும் கனடாவுக்கு நிகரா தமிழீழத்தில இருந்து கொண்டு வாழ்த்துவன் கனடாவை. இப்ப அடிமையாக் கிடந்து கொண்டு வாழ்த்த நான் தயாரில்லை..! இப்ப இந்த வாழ்த்துகள் ஏற்கப்படுகுதோ உதாசீனப்படுகுதோ என்பதை வெள்ளைக்காரன் தான் தீர்மானிக்கப் போறான். :huh:

Link to comment
Share on other sites

சரி சரி உங்கட ஒப்பாரிகள் விளங்கிது. நான் இண்டைக்கு கனடா தின கொண்டாட்டத்துக்கு போன இடத்தில எண்ட கைத்தொலைபேசிக்கால எடுத்த பதிவு ஒண்டு இருக்கிது பாருங்கோ. :huh:

உங்களுக்கு தெரியுமோ தெரியாது.. இரண்டாம் உலகமகாயுத்தம் நடந்தாப்பிறகு ஜேர்மனியும் அதிண்ட கூட்டாளி நாடுகளும் தோல்வி அடைஞ்ச உடன அங்க இருந்த போர்க்குற்றம் செய்த மகா கொலையாளி -- பாதகர்களும் தஞ்சம் அடைஞ்ச நாடுகளில கனடாவும் ஒண்டு. <_<

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

ஏன் இல்ல. சிறீலங்காவில கொண்டாடல்லையா. பல்லின நிகழ்வுகள்..???!

கூலிகளாக இன்னொரு கூட்ட மக்களை வைச்சுப் பிழைக்கும் நாடுகள் எல்லாம் இதைக் கொண்டாடும். கூலிகளைத் திருப்திப்படுத்த..!

வெள்ளைக்காரன் கெட்டிக்காரன். ஆட்சி அதிகாரம் உள்ள தேசத்தை தன்ர கைக்குள்ள வைச்சுக் கொண்டு உங்களை கூலியா வைச்சுப் பிழைச்சுக் கொள்கிறான். கூலிகள் கூலி என்பதை உணர்ந்தால் வீண் சிரமம் என்பதைக் கருத்தில் கொண்டு இப்படியான நிகழ்வுகளை நடத்திக்கிறது. ஆனால் உண்மையில் தாயகம் பூர்வீகம் என்று வரும் போது வெள்ளைக்காரன் தன்னிலையை பாதுகாத்து தன் தேசத்தோடு நின்று கொள்ள.. கூட்டத்தோடு கூட்டமா நின்று கூப்பாடும் போடும் கூலிகள்.. தனிச்சு நிற்பினம்.

நன்றி. உங்கள் காணொளிப் பகிர்வுக்கு.

கனடா நாட்டு நிகழ்வுகளை.. மலரப் போகும் தமிழீழ தேசத்தின் குடிமகனாய், கனடாவுக்கான ஒரு விருந்தாளியாய் கண்டு மகிழ்கிறேன். <_<

Link to comment
Share on other sites

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? :huh::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? <_<:D

ஏன் தமிழீழம் மக்கள் அற்ற பாலைவனமாகவா காட்சியளிக்கிறது..??! உழைப்புக்கு வழியற்ற தேசமாவா இருக்கிறது. எத்தனையோ வெளிநாடுகளில் படிச்ச ஆக்கள் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளில தங்க முடிஞ்சும் ஊருக்குப் போய் பணியாற்றினம். அவைக்கு என்ன லூசா..??! அதுதான் தாயகப் பற்று. (உ+ம்: கனடா பல்கலைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியராகச் சம்பளம் வாங்கிக் கொண்டு தாயகத்தில் சைக்கிள் ஓடி.. தோட்டம் செய்து.. மக்களின் கல்வி வளர்ச்சிக்காய் உழைத்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் துரைஸ் தியறியின் சொந்தக்காரர் பேராசிரியர் துரைராஜா.. தமிழன் இல்லையா..???! வசதியை அவர் தான் மண்ணில் காணேல்லையா. எனது மூத்த நண்பர்களில் பலர் படித்துப் பட்டம் பெற்று வெளிநாடு வர வசதி இருந்தும், நிர்வாகத்துறைக்குள் இருந்து சிங்கள அரசின் பட்டதாரிகள் நிர்வாகிகளாகி எமது மண்ணுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகத்துறைப் பரீட்சை எழுதி.. இன்று உதவி அரச அதிபர்களாக, அதிகாரிகளாக வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர் அவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா..??! <_< )

தன் மண்ணை உலகத்தில உயர வைத்து அதில தான் வாழுறதை உலகம் மதிக்கனும் என்ற உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தான்.

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்.. உங்களைப் போன்றவர்கள்.. ஐயோ.. தமிழீழம் எங்கள் தாய் வீடு.. அதை மறக்கச் சொல்வது அநியாயம் என்று இதையே மாற்றிப் பாடுவீர்கள்... கனடா சுரண்டல் பொருளாதாரத்தால் செழிப்புற்று இருக்கிற படியால்.. பழந்தின்னி வெளவால்களாக நீங்கள் அதனை மொய்க்கிறீர்கள்.. அவ்வளவே. தமிழீழம் தரிசாகக் கிடப்பதால் அதனை விட்டு ஓடுகிறீர்கள். ஆனால் அந்தத் தரிசிலும் தோப்பை உருவாக்க முடியும் என்று செயற்படுறவங்களும் இருக்காங்க முரளி. அதுதான் தாய் நாட்டின் மீதான உண்மையான பற்று. அதைத்தான் நாட்டுப் பற்று என்பது. இது வேசம். அடுத்தவன் ஆடுறான்.. நானும் ஆடுவம் என்ற நிலை.

மாற்றான் தாய் நல்ல அழகா உடுத்தி இருக்கிறாள் என்பதற்காக அவள் ஒரு தடவை தூக்கி வைத்திருந்தாள் என்பதற்காக கந்தல் சேலையோடு இருக்கும் உண்மையைத் தாயை மறந்து பட்டுச் சேலையில் உள்ளவளே தாய் என்று சொல்வது தமிழர்களுக்கு கை வந்த கலை. இருந்தாலும் அதற்கு விதிவிலக்கான தமிழர்களும் உளர் முரளி. கந்தலோ காய்ந்தவளோ.. உயிர் கொடுத்தவளே தாய். மற்றவள் செவிலி. :D

எவர் குந்தி இருக்கிற நாட்டில வாழுறது வசதி என்று சொல்கிறார்.. ஈழத்தில் வசதியை இனங்காணாதவரே..!

ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்ட முடியாதவர்களுக்கு கனடா அரசின் வரிப்பணப் பிச்சையும் மக்டொன்ல்ட் வேலையும் நாகரிகமான வசதியான வாழ்வாகத் தெரியலாம். அதேவேளை ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்டக் கூடியவனுக்கு கனடாவில் வாழ்வு அவமானமாகத் தெரியலாம். :)

Link to comment
Share on other sites

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்..

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது...சிங்கப்பூர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது... சிங்கப்பூர் அரசு அடுத்த 100 ஆண்டுகளுக்கு என்ன செய்யவேண்டும் என்டு சொல்றதில்லை. சத்தம் போடாமல் செய்து முடிச்சிடும்.. <_<

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும். அப்போது அடுத்தவனின் வரிப்பணத்தில் வசதியா வாழலாம் என்று தாய் நாட்டை காட்டிக் கொடுத்து ஏதிலி என்று ஓடியவர்கள் வாய்பிளந்து நிற்பார்கள்.. ஏன் மீள ஓடியும் வருவார்கள்.

நான் காண்கிறேன் தானே.. ஓடி வந்தவை படுற பாடு. இப்போ இதே கருத்தை ஈழத்தில் இருப்பவனா நான் சொன்னால் எரிச்சலில சொல்லுறான் என்பீனம்.. தங்கட பலவீனங்களை மறைக்க. இங்க இருந்து பார்க்கிறம் தானே.. வெள்ளைக்காரனே தலைகுனியிற மாதிரிக்கு இவை நடந்து கொள்ளுற விசயங்களை. இதுவும் ஒரு வகையில ஈழத்துக்கு நல்லம் தான். இவர்கள் அங்க இருந்து வறுமையில் வாடி வறுமைக் கோட்டை நீட்டுவதிலும்.. இங்க வந்து இப்படியாவது கஸ்டப்பட்டு வாழலாம் என்று உணர்கிறார்கள் பாருங்கள்.. அது முக்கியமானது. <_<

ஊரில ஒரு றாத்தல் பாணுக்கு 5 சதம் வரி போட்டிட்டாங்கள்.. என்ற உடன "இவை நாடு பிடிக்க முதலே இவ்வளவு வரி போடினம்.. புடிச்சா" என்று கேள்வி கேட்ட கோடரிக்காம்புகள்.. இங்க இரவு பகலா நித்திரையின்றி உழைக்கிற காசில 20 - 25% வரியாக் கட்டேக்க எந்த மறு பேச்சும் இல்ல. குப்பை போடுறதுக்கும் தனிய வரி கட்டிட்டுத்தான் போடினம், றோட்டில வாகனம் ஓடவும் தனிய வரி கட்டினம்... ஊரில குப்பையை வீட்டுக்க புதை என்றாலும்.. வேலியால, மதிலால கொட்டிற காட்டுமிராண்டிக் கூட்டம் (நான் சாரணிய இயக்கம் சார்ந்து போய் நம்ம மக்களுக்கு இதைப் பல தடவை சொல்லி செய்தும் காட்டி இருக்கிறன்.. ஆனால் மறுநாள் வாழைத் தண்டுகள் வீதியில உருளும்.. அந்த வகையில சொல்லுறன்) வெள்ளைக்காரனின்ற வெள்ளைத் தோலுக்கு மரியாதை செய்ய இந்தளவுக்கு திருந்த முடிஞ்சிருக்கு என்றது ஒரு பக்கம் சந்தோசமா இருக்குது..! :)

Link to comment
Share on other sites

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும்.

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. <_<

Link to comment
Share on other sites

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

ஏன்...ஏன்..ஏன்..??..(நான் வரும் காலத்தில அவுஸ் பிரதமர் ஆக கூடாதே தாத்தா) :) ..ஒமோம் இப்ப நான் பேசுறது எல்லாம் அப்படி இப்படி தான் இருக்கும் நான் அவுஸ் பிரதமர் ஆகி அறிக்கை விடக்க தெரியும்.. <_< (அது தான் இப்ப உங்க அறிக்கை விட்டு பழகிறேன் எண்டா பாருங்கோவன்)..

எங்க நடக்கபோறியள்..கொஞ்சம் இருந்திட்டு போங்கோவேன் தாத்தா.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. :D

ஏன்..அப்படி சொல்லுறியள் தாத்தா.?? <_< ..இப்ப பாருங்கோ கடலில ஒரு கப்பல் பயணிக்கிறது நடுகடலில அது சேதமாகி விட்டா..(இன்னொரு கப்பல் அந்த பக்கம் வருது)..அதில எல்லாரும் ஏற ஏலாது கொஞ்ச பேர் ஏறி தப்பித்து கொள்ளீனம் எண்டு வையுங்கோவன்.. :)

அது பிழையா எண்டு உங்கட்ட கேட்டா உங்க பதில் என்ன..??

இல்ல அந்த கப்பலில இருந்திருக்க வேண்டும் எண்டு சொல்லுவியளோ..இல்லாட்டி மற்ற கப்பலில ஏறி தப்பி நடுகடலில இருக்கிற கப்பலை மறுபடி பழைய மாதிரி மீட்க பாடுபட வேண்டும் எண்டு சொல்லுவியளோ..!! <_<

அப்படி மற்ற கப்பலில பாய்ந்து வந்தவை நடுகடலில தத்தளிக்கிற கப்பலை மறந்து போனது வேற கதை சரியோ..அதுக்காக எங்கள காப்பத்தி கரை சேர்த்த கப்பலிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் அல்லவா.??

என்ன நான் சொல்லுறது சரி தானே தாத்தா..!! :D

நாளை மீட்ட இந்த கப்பலிற்கு இப்படியான பரிதாபமான நிலை உருவாகும் போது...(உந்த கப்பலில் உண்மையான மைந்தர்களும் இவ்வாறு தான் செய்ய எத்தணிப்பார்கள்) :( ..என்ன நான் சொல்லுறது சரியோ..அப்படியாயின் கரை ஒதுங்க வந்தவர்கள் என்ன நினைப்பார்கள்..

அவர்களின் நினைவில்..(சிலரின்) நடுகடலில் தத்தளிக்கும் தங்கள் கப்பலா?? அல்லது கரை ஒதுக்கிய இந்த கப்பலா எண்ட கேள்வி எழும் அல்லோ..அப்போது அவர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்தீர்களாயின்..(அவர்களும் பாவம் தானே)... <_<

ஆனபடியா தாத்தா...கரை ஒதுக்கிய கப்பலிற்கு நன்றி செலுத்துகிறார்கள் அவர்கள்..(அவர்களின் உள்ளெண்ணம் நமக்கு தேவையில்லை)..ஆனால் நன்றி செலுத்துவது அழகு தானே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் <_<

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :)

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் <_<

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

Link to comment
Share on other sites

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் :D

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :D

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் :D

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

ஓ..அப்படியே தாத்தா ஒரு வேளை எங்கன்ட குருவும் கப்பல் ஓட்டினவரோ யாருக்கு தெரியும்.. :) (நான் சொன்னது "பேப்பரில" செய்து கப்பல் விட்டது பத்தி).. :(

அது சரி ஏன் தாத்தா "கனடாவிற்கு" போன கப்பலில நீங்க போகல்ல..??..(போயிருந்தா இன்னைக்கு எங்கையோ போயிருப்பியள்)..சரி அதை விடுவோம்.. <_<

எங்கன்ட நாட்டில நாயிற்கு நல்ல மரியாதை கொடுக்கிறவை அல்லோ..ஆனபடியா நீங்க நாயை விட கேவலம் எண்டு எல்லாம் சொல்லபடாது..(நாய்கள் சார்பாக இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்).. :D

இருக்கிறதை வைத்து திருப்திபடுறதோ இது என்ன சின்னபிள்ளதனமா இருக்கு..(அவன் ஒரு மாடி வீடு கட்டினா நாங்க இரண்டு மாடி வீடு கட்டனும் என்ன தாத்தா)..இப்படி பாட்டி சொல்லுறதில்லையோ உங்களுக்கு.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்தாபாருங்கடா துவங்கீட்டாங்கள்..

அண்ணை... நெடுக்கு எழுதுறது எண்டால் சும்மா இப்பிடி அப்பிடி எழுதிக்கொண்டு போகலாம்... ஆனா நடைமுறை வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேணும்.

நமக்கு முதலில நம்மட வாழ்க்கை முன்னேற்றம்தான் முக்கியம். அதுக்குப்பிறகுதான் மிச்சம். தன்னை அறிந்து தானம் செய் எண்டு சொல்வார்கள்.

ஓமோம் நீங்கள் தாராளமா ஊரில போய் இருங்கோ. அதுக்காக வெளிநாட்டில இருக்கிறவன் எல்லாம் தாயகத்த மறந்தவங்கள் எண்டு இல்ல. மற்றது இந்த நவீன உலகில ஊருக்குப் போய்த்தான் சேவை செய்யவேணும் எண்டுற தேவை இல்லை. வெளியில இருந்துகொண்டே தாயகத்தத கட்டி எழுப்ப தாராளமாக உதவி செய்யமுடியும்.

ஊரில இருந்து கோவணத்தோட வந்தம் கனடாவுக்கு. இஞ்ச வந்தாப்பிறகுதான் வாழ்க்கை எண்டால்... சுதந்திரம் எண்டால்.. என்ன எண்டே நமக்கு விளங்கிச்சிது. அப்படியான ஒரு நாட்டுக்கு நன்றிகூறுவது தப்பு எண்டால் எங்க கொண்டுபோய் தலைய முட்டுறது எண்டு தெரிய இல்ல.

இஞ்ச எல்லாருமே கஸ்டப்பட்டு உழைப்பவர்கள்தான். பெரிய CEO கூட சின்னச் சின்ன சில்லறைத்தனமா வேலைகள் எல்லாம் செய்வாங்கள்.

உங்க இருந்து எழுத்தில வித்துவத்துவம் காட்டாமல் முதலில ஒருக்கால் கனடாவுக்கு வாங்கோ. கனடாவில வந்து கொஞ்சக்காலம் இருந்து பாருங்கோ. அதுக்கு பிறகு உங்கட விமர்சனங்கள கனடா எப்பிடி இருக்கிது எண்டு சொல்லுங்கோ. :wub:

Link to comment
Share on other sites

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. :wub:

்இது ஒன்றே போதும். நிச்சயம் எதிர்கால சிங்கப்பூர்தான். நீங்க எப்ப போறீங்க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.