Jump to content

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது இந்த நவீன உலகில ஊருக்குப் போய்த்தான் சேவை செய்யவேணும் எண்டுற தேவை இல்லை. வெளியில இருந்துகொண்டே தாயகத்தை கட்டி எழுப்ப தாராளமாக உதவி செய்யமுடியும்.

நான் நிகழ்கால உதாரணங்களை வைத்தே கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கனடா உட்பட மேற்கு நாடுகளுக்கு நம்மபவர்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கி கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகின்றன. இந்த 25 வருடத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. இவை கட்டியெழுப்பிய அதி நவீன தாயகம் எங்கே..???!

தாயகத்தில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தைக் கூட சரியா கூர்மைப்படுத்தி அதி நவீனப்படுத்த முடியல்ல.. சும்மா தாங்களும் தங்கட வசதிக்கும் தாயக சோகங்களைப் பாவிச்சுக் கொண்டிருக்கினமே தவிர.. உண்மையாக தாயக வளர்ச்சியில் அக்கறை உள்ளவன்.. தாய் மண்ணில் மிதிக்கவே விரும்பி நிற்கிறான்..! அதுதான் பயன்.

அதிநவீன உலகைக் கொண்ட சிங்கப்பூரை அங்கு வாழும் மக்கள் தான் கட்டி வளர்க்கிறார்கள் இணையத்தின் வழியல்ல.. முரளி அவர்களே. அதி நவீன வசதிகளைக் கொண்டு கட்டியெழுப்ப முடியும் என்றால் இவ்வளவுக்கும் அமெரிக்காகாரன்.. விண்வெளியெங்கும் கட்டியெழுப்பி இருப்பான்..!

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு மனித வளமும் மூளை வளமும் அத்தியாவசியம். அதற்கு மேலால் உழைப்பு அவசியம். அதற்கு மேலால் தியாக சிந்தனை அவசியம். எவனொருவன்... தன்ர வாழ்க்கை முக்கியம் என்று கருதிறானோ அவனிடம் தியாகத்துக்கு இடமிருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்டவனால.. தாயகத்தை என்ன தன்னைச் சார்ந்த சமூகத்தையே உருப்படியாக் கட்டி எழுப்ப முடியாது..! :wub:

உங்க இருந்து எழுத்தில வித்துவத்துவம் காட்டாமல் முதலில ஒருக்கால் கனடாவுக்கு வாங்கோ. கனடாவில வந்து கொஞ்சக்காலம் இருந்து பாருங்கோ. அதுக்கு பிறகு உங்கட விமர்சனங்கள கனடா எப்பிடி இருக்கிது எண்டு சொல்லுங்கோ.

கனடாவைப் பார்க்கிறம் தானே. குப்பை அள்ளப்படாத ரொரண்டோவைப் பார்க்கிறம். ஏட்டிக்குப் போட்டி போட்டு தொலைக்காட்சி வானொலி நடத்திற 20 ஆண்டுகளுக்கு முந்திய மனநிலையிலேயே இருக்கிறதைப் பார்க்கிறம்.. என்ன புதிசா செய்திட்டினம்.. ஊரில யுனிக்குப் போறது வெட்டுப்புள்ளியால கஸ்டமா இருந்திச்சு.. உங்கினை.. எல்லாரும் போகலாம் என்பதைத் தவிர...????! அவை படிச்சதை வைச்சு.. சாதிச்சு... கட்டியெழுப்பிய.. தாயகத்தையும் காண முடியல்ல.. ரொரண்டோவையும் காண முடியல்ல.. இன்னும் வெள்ளைக்காரனின் கையில் தான்...!

எதுஎப்படியோ கனடாவின் ஊசியிலைக் காட்டுக்குள்ள உருவான ரொரண்டோவை தமிழர்கள் விருத்தியாக்கின கணக்கில்.... வன்னிக்காடுகளையும் அப்படி உருப்படியாக்கினா.. தேசம் உருப்படும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனபடியா தாத்தா...கரை ஒதுக்கிய கப்பலிற்கு நன்றி செலுத்துகிறார்கள் அவர்கள்..(அவர்களின் உள்ளெண்ணம் நமக்கு தேவையில்லை)..ஆனால் நன்றி செலுத்துவது அழகு தானே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

தன் சொந்தத் தாயை நேசிக்கத் தெரியாதவன்.. எப்படி செவிலித் தாயை நேர்மையாக நேசிப்பான். உள்ளெண்ணம் என்பதிலும்.. பிச்சை போட்ட இடத்தில் இன்னும் பொறுக்கலாம் என்ற நப்பாசையில் இப்படிச் செய்கிறார்கள்.. அவ்வளவே..! :D

Link to comment
Share on other sites

தன் சொந்தத் தாயை நேசிக்கத் தெரியாதவன்.. எப்படி செவிலித் தாயை நேர்மையாக நேசிப்பான். உள்ளெண்ணம் என்பதிலும்.. பிச்சை போட்ட இடத்தில் இன்னும் பொறுக்கலாம் என்ற நப்பாசையில் இப்படிச் செய்கிறார்கள்.. அவ்வளவே..! :D

ஓ..அப்படி வாறியளோ..சொந்த தாயை யாரும் நேசிக்காம இருக்க மாட்டீனம் அல்லோ தாத்தா..(ஆனால் சில காரணங்களுக்காக அந்த தாயை மறந்த மாதிரி இருப்பார்கள்).. :)

ஆனால் பாசம் இருக்கும் அல்லோ.. :D

அதை போல் செவிலி தாயின் அரவணைப்பில் இன்பம் கண்டுள்ளார்கள்..(நிம்மதியாக தூங்குகிறார்கள்)..தன் தாயையும் உய்வடைய செய்கிறார்கள் அல்லோ :wub: ..தம் சொந்த தாய் அல்லுறும் போது கூடவே இருந்து தான் கவனிக்க வேண்டும் எண்டு இல்ல தள்ளி இருந்தும் அந்த தாயை உயர்த்தலாம் பாருங்கோ.. :D

அதே போல் சொந்த தாயின் துயர் தீர்ந்த பிறகு..(செவிலி தாயிற்கு)..ஒரு வேளை துன்பம் வந்தால் நிச்சயமா உதவுவார்கள் எண்டு தான் நினைக்கிறன் :lol: ..செவிலி தாயை வாழ்த்தி தான் பிச்சை எடுக்க வேண்டும் எண்டு இல்லை ஏன் எண்டா வாழ்த்தாட்டியும் இன்று அந்த அன்னை பிச்சை போட்டு கொண்டு தானே இருக்கிறாள் தாத்தா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை போல் செவிலி தாயின் அரவணைப்பில் இன்பம் கண்டுள்ளார்கள்..(நிம்மதியாக தூங்குகிறார்கள்)..தன் தாயையும் உய்வடைய செய்கிறார்கள் அல்லோ :wub: ..தம் சொந்த தாய் அல்லுறும் போது கூடவே இருந்து தான் கவனிக்க வேண்டும் எண்டு இல்ல தள்ளி இருந்தும் அந்த தாயை உயர்த்தலாம் பாருங்கோ.. :lol:

அதே போல் சொந்த தாயின் துயர் தீர்ந்த பிறகு..(செவிலி தாயிற்கு)..ஒரு வேளை துன்பம் வந்தால் நிச்சயமா உதவுவார்கள் எண்டு தான் நினைக்கிறன் :D ..செவிலி தாயை வாழ்த்தி தான் பிச்சை எடுக்க வேண்டும் எண்டு இல்லை ஏன் எண்டா வாழ்த்தாட்டியும் இன்று அந்த அன்னை பிச்சை போட்டு கொண்டு தானே இருக்கிறாள் தாத்தா.. :)

அப்ப நான் வரட்டா!!

சொந்தத் தாயின் துயர் கண்டு ஓடியவர்கள்.. அவளின் துயர் தீர உதவுவினம்.. கிழிப்பினம்..! சொந்த தாயின் துயர் தீர்க்க விரும்பிறவன்.. தூர இருப்பினும் அவளின் காலடியில் போய் நின்றல்லோ அவளின் துயர் என்னென்று கண்டு தீர்க்க முயல வேண்டும். இது.........?????!

ஒன்று மட்டும் புலப்படுகிறது.. பொருளாதாரம் தேட "அகதி" என்ற முத்திரையைக் குத்த சொந்தத் தாயையே குத்திக் குதறக் கூடிய கொடிய தமிழர்கள் பலர் உளர்..! உண்மையை ஒத்துக் கொள்ள பல பேர் தயங்கினம். இதுதான் இவைட உண்மை மூஞ்சி..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச் செய்தியை சிலரின் பார்வைக்கு வைப்பது சாலப் பொருந்தும் என்று நினைக்கிறேன்...

"புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே இருக்கின்ற பிரிவினைகளை விட்டுவிட்டு தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை வன்பறித்து நிற்பவர்களை கலைப்பதற்கான பொருளாதார வளத்தையும், உணர்வு ரீதியான பலத்தையும் ஒன்றுபட்டு நின்று தருகின்றபோது நாங்கள் எழுந்து நிற்போம்."

பொங்கு தமிழ் நிகழ்வுகளை ஒட்டி யோகரட்ணம் யோகி அண்ணன் வழங்கிய செவ்வியில் இருந்து..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.